August 16, 2008

சத்யம்


சத்யம்(மா) சோதனை:(

August 14, 2008

என்ன கொடுமை சார் இது - I

விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்.

August 7, 2008

சுப்ரமணியபுரம் - இரண்டு முறை பார்த்ததற்க்கான காரணம்

இந்த படத்தின் பாடல்கள் கேட்டதிலிருந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜாஸ்தியாகவே இருந்தது. டைரக்டர் ஏமாற்றாமல் தரமான படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிட்டார். படம் எனக்கு பிடித்தற்கான காரணங்கள் இதோ.

1. First scene கஞ்சா கருப்பு வருவதிலிருந்தே படம் top gearல travel பண்ண ஆரம்பிக்குது. ஒரு சின்ன இடத்தில் கூட தொய்வு ஏற்படுத்தாத டைரக்டர் சசிகுமார்க்கு முதல் ஜே.

2. ஹீரோயின் selectionக்காக ரெண்டாவது ஜே. பேசும் கண்களும், கொள்ளை கொள்ளும் சிரிப்பும், chance இல்ல. ஜெய் கூட romance பண்ணும் போது பார்க்கும் கள்ளப்பார்வை இருக்கே absolutely no words to describe.

3. ஜேம்ஸ் வசந்தனை music directora தேர்வு செய்ததற்கு மூன்றாவது ஜே. Coffee with Anu programla music director choice பத்தி அவர் சொன்னது அட போட வைத்தது. "சிறு பொண்மனி" பாட்டு வரும்போதெல்லாம் தியெட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்குது. Nice choice.

4. படத்தில் வரும் எந்த கேரக்டரும் வேஸ்ட் என்று சொல்லவே முடியாதபடி அமைந்த screenplay. Lead characters முதல் பரமனின் அண்ணியாக நடித்தவர் வரை அத்தனை பேரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

5. இயல்பான வசனங்கள். மதுரை தமிழும், நகைச்சுவையும் நல்ல கூட்டணி. உதாரணத்திற்கு
கஞ்சா கருப்பு : "நம்ம பொழப்புக்கு இதெல்லாம் நல்லாவா இருக்கு?"
ஜெய் : "நமக்கு ஏதுடா பொழைப்பு??"
க கருப்பு : "இவைங்களுக்கு மத்தில வாழ்றதே பெரிய பொழப்பு தான்டா..."

6. Thrills and twists of second half. அதுவும் கடைசி 45 நிமிடங்கள் அதிர வைக்கும் சரவெடி.

ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல படம். இன்னொரு தடவை பார்க்க chance கிடைக்குதான்னு பார்க்கலாம்.