December 29, 2008

புத்தாண்டு வாழ்த்துக்கள்

கொஞ்ச நாள் என் இம்சையில்லாம சந்தோஷமா இருந்திருப்பீங்க. அது அப்படியே நீடிச்சு நிலைக்க விட்ருவேனா? அதான் வந்துட்டேன். இன்னைக்கு காலை தான் தாம்பரம் வந்தேன். மூன்று நாட்களும் சந்தோஷமாகவே சென்றன. So now back to the pavillion. நிறைய ஆணிகள் சேர்ந்துபோச்சு. எல்லா வேலையையும் முடிச்சுட்டு, புத்தாண்டையும் நல்லபடியா வரவேற்றுட்டு, பயணக்குறிப்புகளையும், பிற மொக்கைகளையும் அடுத்த ஆண்டிலிருந்து பதியறேன்.




எல்லோருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துக்கள்:)

December 19, 2008

ஷார்ட் பிரேக்

என் கிறுக்கல்களை (சகித்துக்)படித்துக்கொண்டிருக்கும் வலையுலக பெருமக்களே உங்களுக்கெல்லாம் ஒர் நற்செய்தி. ஆமா அதேதான்.

கொஞ்ச நாளைக்கு என் மொக்கைகளிலிருந்து உங்களுக்கு ஜாமீன் தரலாம்னு இருக்கேன். நோட் தி பாயிண்ட் கொஞ்ச நாள்தான். கொஞ்ச நாளாவே கொஞ்சம் depressed feel பண்றேன் (காரணத்தை அப்புறமா பதிவிடுறேன்). என்னை refresh பண்ணிக்கறதுக்காக ரகுவின் ஐடியாப்படி ஊட்டில ஒரு நாலு நாள் பொறுக்கலாம்னு இருக்கேன். அதுவுமில்லாம இப்பதான் பாண்டிச்சேரிலருந்து வந்ததால வீடு அலங்கோலமா (ரகுவின் உபயம்) இருக்கு. அத வேற சரி பண்ணனும். வர்ற புதன் இரவு பயணம் ஆரம்பமாகுது.

So கொஞ்ச நாள் மீ த எஸ்கேப் from பதிவுலகம். நடுவில் நேரம் இருந்தால் எல்லார் பதிவிலும் ஆஜராரேன். இப்போதைக்கு அவ்ளோதான்.

Will be back with a bang after 2 weeks:)

December 16, 2008

ஜூனியரின் க்ளிக் கலாட்டா

டிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.


கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??


எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?


நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)


முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?


என்னாது எங்கம்மா நல்லா எழுதுறாங்களா? ஜமால் அங்கிளும், ரம்யா ஆண்டியும் நல்லா காமெடி பண்றாங்கப்பா.


நிம்மதியா திங்க கூட விடமாட்டேங்கறாங்களே. நிலா அக்காவோட சேர்ந்து (குழந்தைகளை)போட்டோ எடுப்போரை எதிர்ப்போர் சங்கம் ஒன்னு ஆரம்பிக்கனும்.


அம்மாவ கொ.ப.செவா அப்பாயிண்ட் பண்ண அப்துல்லா அங்கிள் வாழ்க.


பாஸ் மொட்டை பாஸ். அருண் அங்கிள் நான் உங்களை விட பெரிய ரஜினி ஃபேன்.


ஜீவன் அங்கிள், அமித்து ஆண்ட்டி உங்க பொண்ணுகிட்ட போட்டோவ காட்டுங்க. மாமா ரோஜாப்பூவோட வந்துட்டேருக்கேன்னு சொல்லுங்க:)


கடைசியா எங்கம்மா இம்சையை படிக்கிற எல்லோருக்கும் ஒரு ஸ்பெஷல் ஸ்மைல்.


December 10, 2008

49ஓ

உங்கள் தொகுதியில் தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் யாருமே தகுதியற்றவர்கள் என்று நினைக்கிறீர்களா? நீங்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் அதே சமயம் உங்கள் வாக்கினையும் பதிவு செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அதற்கான வழி தான் இந்த 49ஓ.


49ஓ என்பது தேர்தல் விதிமுறைகளில் ஒன்று. ஓட்டுச் சீட்டு முறைப்படி வாக்களிக்கும்போது, யாருக்குமே வாக்களிக்க விருப்பம்யில்லையெனில், செல்லா வோட்டு போடுவார்கள். ஆனால் இய்ந்திரத்தின் மூலம் வாக்கைப் பதியும்போது அப்படி செய்ய முடியாது. கண்டிப்பாக யாருக்காவது வோட்டு போட்டுத்தான் ஆகவேண்டும். இந்த இடத்தில் தான் 49ஓ காட்சிக்கு வருது (வாக்குச்சீட்டு முறையின்போதும் இந்த விதி அமலில் இருந்தது). வோட்டுச்சாவடிக்கு சென்று உங்கள் identification சரிபார்த்த பின், அங்கு இருக்கும் ஆபிஸரிடம் (presiding) சென்று என் வாக்கினை 49ஓவாகப் பதிவு செய்ய விரும்புகிறேன் என்று சொன்னால் அவர் ஒரு படிவம் தருவார். அந்த படிவத்தை பூர்த்தி செய்து, உங்கள் பெருவிரல் ரேகையை அதில் இட்டு, ஆபிஸரும் கையெழுத்து போட்டால் முடிந்தது. நீங்கள் யாருக்கும் வாக்களிக்கவில்லை. அதே சமயம் உங்கள் வோட்டும் misuse செய்யப்படவில்லை என நீங்கள் உறுதிபடுத்திக்கொள்ளலாம்.


இதனால் என்ன பயன் என்கிறீர்களா? ஒன்றுமில்லை. உங்கள் வோட்டு கள்ளவோட்டாக மாறவில்லை. அவ்வளவே. நிறைய பேரிடம் ஒரு தப்பான தகவல் பரவி வருகிறது. அதென்னவென்றால் "ஒரு தொகுதியில் வெற்றி பெற்ற வாக்காளருக்கு கிடைத்த ஓட்டு எண்ணிக்கையைவிட அந்த தொகுதியில் பதிவான 49ஓ வாக்குகள் அதிகமாக இருக்கும்பட்சத்தில் அந்த தொகுதிக்கு மறுதேர்தல் அறிவக்கப்படும். ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர்கள் எவரும் மறுபடியும் களத்தில் இறங்கக்கூடாது. கட்சிகள் அனைத்தும் புது வேட்பாளர்களை அறிவிக்க வேண்டும்." ஆனால் இதுபோல் தேர்தல் கமிஷனின் விதியில் குறிப்பிடப்படவில்லை. ஹூம் இது மட்டும் நடைமுறைக்கு வருமேயானால், அரசியல்வாதிகளின் குடுமி மக்கள் கையில்.


நான் இரு முறை முயற்சி செய்து ஒரு முறை 49ஓ முறைப்படி என் வாக்கினைப் பதிந்தேன். முதல் தடவை காலேஜ் படிக்கும்போது பூத் ஆபிஸரிடம் சென்று படிவம் கேட்டதுக்கு என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார். form இல்லை போ என்றார். கொஞ்சம் நேரம் நின்றுவிட்டு, அப்புறம் போய் ஒரு சுயேச்சைக்கு வோட்டுப் போட்டுட்டு வந்தேன். அடுத்த தடவை விடக்கூடாது என்று, ஆபிசரை மிரட்டி (form தரலைன்னா chief election commissionerக்கு புகார் அனுப்புவேன் என்று) கடமையை நிறைவேத்தினேன்.


மக்களுக்கு வோட்டு போடாமல் (எந்த வேட்பாளருக்கும்) இருக்கும் உரிமையை 49ஓ விதி வழங்குகிறது.


டிஸ்கி : என்னோட முந்தைய பதிவின் பின்னூட்டத்தில ஜீவன், ஜமால், அமித்து அம்மா, பூர்ணிமா போன்றோர் 49ஓவப் பத்தி கேட்ருந்தாங்க. அவங்க நிஜமாவே தெரியாமா கேட்ருந்தா இது விளக்கப் பதிவு. சும்மானாச்சுக்கும் விளையாட்டுக்கு கேட்ருந்தாலும், பதிவு எண்ணிக்கைல ஒன்னு கூடிடுச்சேன்னு நான் சந்தோஷப்படுவேன்:)

December 9, 2008

விழிப்பது எப்போது?

இன்னும் ஒரு மாதம்? அல்லது 3 மாதம்? இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா? நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.

சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.

1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி

பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).

December 5, 2008

கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்

டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.


அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.


சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.


அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.


எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.


எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(


என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).


ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).

December 2, 2008

ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008

இதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:


டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(


1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை


டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.


1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ

சில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.

இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)

November 28, 2008

நீங்களா பார்த்து எது செஞ்சாலும் சரிதான் எசமான்

அன்று
--------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக ஒரு நாள் தாமதமாக சம்பளம் கிரெடிட் செய்யப்படும்.


ரகு - What the hell? அவனவன் ஆயிரம் பிளான்ஸ் வச்சிருப்பான். கொஞ்சங்கூட பொறுப்பே இல்ல.


நேற்று
---------

கம்பெனியிலிருந்து இ-மெயில் : மும்பை அசம்பாவிதம் காரணமாக வங்கிகள் இயங்காததால் சம்பளம் திங்கள்கிழமை அன்று கிரெடிட் செய்யப்படும்.


ரகு - (பழைய சம்பவத்தை நினைத்து சிரித்தபடியே) சம்பளத்துக்காகவா வேல செய்றோம். நம்ம கம்பெனி. நம்ம பணம். நீங்க எப்ப வேணும்னாலும் குடுங்க. காசு உங்ககிட்ட இருந்தா என்ன எங்ககிட்ட இருந்தா என்ன:))

November 27, 2008

நல்லாருங்கப்பு

எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.

மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.

93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.

கண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.

செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.

எவன் செத்தா எனக்கென்ன? முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.

சம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(

November 26, 2008

கார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்

(தலைவர் மீது)அன்பேயில்லாத ராப் மற்றும் கார்க்கி,


உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப்?? தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா??


வீரத்தளப‌தியின் போர் படை தளப‌தி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய்? தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.


அகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,
மேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா? இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் "தளபதி".


ராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.


இப்படிக்கு,

வீரத்தளபதியின் தீவிர ரசிகை.

November 20, 2008

ம்மா

இரவு எட்டு மணி இருக்கும். ஜுனியரோடு விளையாடிக்கொண்டிருந்தேன். வாசல் கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், பாஸ் குடுகுடுவென வாசக்கதவருகே ஓடிப்போய் ப்பா என்றார். ரகுவைப் பார்த்ததும் கைகள் ரெண்டையும் விரித்து தூக்கிக்கோ என்பதுபோல் சைகை செய்தார். அப்பாவைப் பார்த்ததும் அப்படி ஒரு குஷி. "அடப்பாவி நாள் முழுக்கப் பார்த்துக்கறது நான். அப்பாவைப் பார்த்தவுடனே என்னை விட்டுட்டா ஓட்ற" என்று முதுகில் (செல்லமாக) ஒன்று வைத்தேன். அந்தத் தருணம் சட்டென்று அம்மா நினைவுக்கு வந்தாள்.


பொதுவாகவே பெண் குழந்தைகள் அப்பாவிடமும், ஆண் குழந்தைகள் அம்மாவிடமும் அட்டாச்டாக இருக்கும் என்று சொல்வார்கள். நானும் இந்த விதிக்கு விதிவிலக்கல்ல. அம்மாவை வைத்துக்கொண்டே நான் அப்பா செல்லம் என்று சொல்லிருக்கேன். கூடவே அம்மா தப்பா எடுத்துக்கமாட்டாங்க என்ற பிட்டையும் போட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தான் உரைத்தது நான் எவ்வளவு பெரிய தவறு செய்திருக்கிறேன் என்று. பிறந்து ஒன்றரை வருடமே ஆன என் பையன் அப்பாவைப் பார்த்து ஓடும்போதே எனக்கு என்னமோ மாதிரி இருக்கே. 24 வருஷமா நான் அப்பாவைப் பிடிக்கும் என்று சொல்லும்போது (அந்தத்தருணத்திலாவது) அம்மா எவ்வளவு ஃபீல் பண்ணியிருப்பாள். ஸாரிம்மா. இனிமே (நீ இருக்கும்போது) அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லவேமாட்டேன். உங்க ரெண்டு பேரையும் எனக்கு ரொம்ப பிடிக்கும். முதல்ல ஜூனியருக்கும் இதை சொல்லிக்கொடுக்கணும்.


டிஸ்கி : எழுதி முடிச்சதுக்கப்புறமா தான் கவனிச்சேன். இது என்னோட 25வது பதிவு. நானும் என் பதிவும் வெள்ளி விழா கொண்டாடுறோம். ஆகையால் அன்பு பெரியோர்களே அருமைத் தாய்மார்களே, இதுவரைக்கும் என் மொக்கைகளையெல்லாம் பொறுத்துக்கொண்டு எனக்கு ஆதரவளித்த உங்களுக்கு என் நன்றிகளை உரித்தாக்குகிறேன். உங்கள் ஆதரவுக்கு என் அன்பு பரிசாக 2011ல் சரத்குமார் அமைச்சரவையில் எல்லாருக்கும் மந்திரி சீட் உண்டுங்கோ:)

November 17, 2008

உஷார் மேன் ஹை

மளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில் உபயோகப்படுத்தப்படும் டிஷ்யூவும் அடக்கம். இதில் கொடுமை என்னன்னா என்கிட்டே காரே இல்லை. அப்புறம் கேஷ் திருப்பித்தரயிலாது. அந்தக் காசுக்கு ஈடா வேறெதாவது வாங்கிக்கோங்களேன் என்றார்கள். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிட்டேன். எனக்கு காச குடுங்க போதும் என்றேன். பெரிய வாக்குவாதத்திற்க்குப் பின் 150 ரூபாய் திருப்பித்தரப்பட்டது. எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கய்யா. ஆதலால் மக்களே என்னதான் தல போற காரியமாயிருந்தாலும் பில்லை செக் பண்ணுங்கோ.

November 15, 2008

வாரணம் ஆயிரம்

220 ரூபாய் கொடுத்து டிக்கெட் புக் பண்ணிட்டோமேங்கற குற்ற உணர்ச்சியும், பப்பு @ சஞ்சய் இல்லாம போறோமேங்கற பீலிங் ஒரு பக்கம். காலைல வேற அதிஷா பிளாக்ல நல்லால்லைன்னும், அருண் ஒகேங்கற மாதிரியும் எழுதிருந்தாங்க. எனக்கென்னவோ படம் நல்லாருக்குன்னு சொல்ல முடியல. ஆனா கண்டிப்பா நல்லாயில்லைன்னு சொல்லமாட்டேன். மூணே வார்த்தைக் கதையை (அப்பா மகன் உறவு) மூணு மணிநேரம் சொல்லியிருக்காங்க. சில இடங்களைத் தவிர படம் பார்க்குற மாதிரி தான் இருக்கு.




#டில்லியில் ஆங்கிலமும் ஹிந்தியும் பேசுவதை ஒற்றுக்கொள்ள முடிகிறது. ஆனால் தேவையில்லாத இடங்களிலும் ஆங்கில வசனங்கள். அப்பா சூர்யாவும் தங்கை கேரக்டரில் வருபவரும் பீட்டரில் புரள்கிறார்கள். அதுவும் தங்கச்சி ஓவர் டோஸ். நைனா செத்துட்டாருன்னு சொல்லாம "he is no more" ன்னு சொல்லும்போது செவில்ல அடிக்கனும் போல் இருந்தது.


#டில்லிக் காட்சிகள் சவசவன்னு இருக்கு.


#சூர்யா திவ்யா ரொமான்ஸ் காட்சிகளும் திராபை. கிளைமாக்ஸ்க்கு வாங்கடான்னு கத்தனும் போல இருந்தது.


முதல்பாதி சூப்பர். இரண்டாவது பாதியில் யானை அங்கங்கு நொண்டுகிறது.


சூர்யா, பாடல்கள் மற்றும் ஒளிப்பதிவு தான் பலம்.


மொத்தத்தில் வாரணம் ஆயிரம் - பலம் போதவில்லை.

November 14, 2008

நீ இல்லாம கஷ்டமா இருக்குடா

ஏதோ எழுதுனம்னு வந்து உட்கார்ந்துட்டேன். ஆனா கமல் சொல்ற மாதிரி வார்த்தையே வரலை. என்னத்த சொல்ல. கடந்த ஒன்றரை வருஷமா அவன பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. வீட்டுக்கு வந்து எங்க பார்த்தாலும் அவன்தான் தெரியுறான். நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தேன்னா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். கலைக்க நீயில்லாமல் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள், உன் உச்சாவின் ஈரம் படாமல் காய்ந்த தரைகள், நீ இல்லாத தைரியத்தில் தரையில் கிடக்கும் கேபிள் வயர்கள், உன்னால் கிழிக்கப்படாத நாளிதழ்கள், மேலேறி குதிக்க நீ இல்லாததால் தூசி படர்ந்திருக்கும் சோபா திண்டுக்கள் என வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் உன்னைத்தான் தேடுகின்றன.



எல்லாம் எங்கம்மாவால் வந்த வினை. குழந்தை நான் இல்லாமல் இருந்து பழகனுமாம். ரெண்டு நாள் என்கிட்டயே இருக்கட்டும்னு என்னை மட்டும் தாம்பரத்திற்கு துரத்திட்டாங்க. குழந்தை ஞாயிறு காலைதான் வருவான். அய்யோ ஒரு மணி நேரமே ஒரு யுகம் மாதிரி போச்சே. இன்னும் ஒரு முழுநாளை எப்படி ஓட்டப்போரேனோ?



நீ இல்லாம கஷ்டமா இருக்குடா:(

November 3, 2008

Cheers to Cedars

Last saturday ended up in home itself. Since Senior and Junior were a bit tired due to cold i surrendered my day in the kitchen. Sunday we planned for a good lunch. It was time since we tried a new cuisine and we wanted to do it now. We decided to check out Cedars in Kotturpuram.

When i called them up i was quite disappointed to know that they have only weekend Brunch Buffet(I'm a bit hesitant on buffet when it comes to an exclusive cuisine). But the food was excellent. Cedars is an exclusive middle eastern (Lebanese, more specifically) cuisine restaurant. They also serve french. The waiters are very friendly and they make sure that u r comfortable.


We started with fresh papaya juice and nut crusted cottage cheese. The starter was too good and i comitted sin by having a lot. Penne Basilico was just average. To my surprise they served a more dishes on the table. We had some excellent pancakes, french toasts. To mention in specific the Falafel served with pita breads were too good. Other than this the mix pepper bake, cream of garlic in olive oil and most importantly the hummus, corn and pepper salad were very delicious. The heavy meal ended up with a superb dessert named Mouhallabieh (errrr. how to call it??) made of milk and corn flour.


Location : Gandhi Mandapam Road, Kotturpuram (Opposite to Adayar Villa)

Cuisine : Flavours of mediterranenan

Note : Only brunch buffet during weekends

Cost : Brunch buffet costs Rs. 375 + taxes. I think the food makes u think that the prices are reasonable(Though, it wont hurt the customers if they reduce the prices:)).

November 1, 2008

வார்த்தை ஒன்னு வார்த்தை ஒன்னு

காலிங் பெல் சத்தம் கேட்டு கதவை திறந்தேன். இரண்டாவது மாடியில் தங்கியிருக்கும் பெண் நின்றுகொண்டிருந்தாள். அவளிடமோ அவள்கூட தங்கியிருக்கும் மற்ற பெண்களிடமோ இதுவரை பேசியதில்லை. என்ன வேண்டும் என்று கேட்பதற்க்கு முன் அவளே பேச ஆரம்பித்தாள். முதல் வார்த்தைக்குப்பிறகு எனக்கு எதுவுமே காதில் விழவில்லை. எதுவுமே சொல்லாமல் பேயறைந்தால்போல் நான் வாசலிலேயே நின்றுக் கொண்டிருந்தது அவளுக்குக் குழப்பத்தை தந்திருக்கக்கூடும். என்ன செய்வதென்று தெரியாமல் சிறிது நேரம் நின்றுவிட்டு அவள் மறைந்தாள்.



பொத்தென்று சோபாவில் அமர்ந்த போது லேப்டாப்பில் தலையை புதைத்து வைத்திருந்த லைசன்ஸ் ஹோல்டர் என்னாச்சுன்னு கேட்டார். பதில் வாராதிருக்கவே திரும்பவும் அதே கேள்வி. இம்முறையும் நோ ரெஸ்பான்ஸ் என்பதால் லேப்டாப் மடி சிறையிலிருந்து விடுதலை ஆனது. நேரே கண்ணாடி முன் சென்று நின்றேன். தலைமுடியை சரி செய்துக்கொண்டேன். எனது செய்கைகள் அவருக்கு கவலை அளித்திருக்கக்கூடும். என்னதான் ஆச்சு ஏன் இப்படி நடந்துக்குற எனக் கேட்டார். பதில் சொல்லவே பிடிக்கலை. இது வேலைக்கு ஆகாது என்று திரும்பவும் லேப்டாப் சிறை சென்றது. இதற்கு மேலும் ரெஸ்பான்ஸ் வரலைன்னா மனுசன் எஸ்ஸாயிடுவார்ங்கற பயத்துல வாயைத் தொறந்தேன்.



"கல்யாணம் ஆனபோது எப்படி இருந்தேனோ அப்படியே தானே இப்பவும் இருக்கேன்?"



"உம்"



"கேட்டதுக்கு பதில் சொல்லு"



"உம் உம்"



"என்னைப் பார்த்தா மிடில் ஏஜ்டு லேடி மாதிரி தெரியுதா?"



"என்னக் கேட்ட?"



"என்னப் பார்த்தா என்ன ஏஜ்னு சொல்லலாம்"



குழப்பமாய் "இப்போ எதுக்கு இந்த கேள்வி?"



"அவ என்ன வாடி போடின்னு கூட சொல்லிருக்கலாம்."



"சரி விடு. இதெல்லாமா சீரியஸா எடுத்துப்பங்க??"



"அதெப்படி. எனக்கு இன்னும் 25 வயசுகூட ஆகல. ஒரு குழந்தை இருந்தா அப்படி சொல்லிடறதா?"



(இதுக்குமேல போச்சுன்னா நம்ம தலை உருள ஆரம்பிச்சிடும்னு ஆள் எஸ்கேப்).



சாயந்திரம் அவளைப் பார்த்தா தெளிவா சொல்லிடனும். இன்னொரு தடவை அப்படி சொல்லாதேன்னு. என் பேரை சொல்லியே கூப்பிடு. ஆண்ட்டின்னு கூப்பிடாத.



டிஸ்கி : சத்தியமா இது என்னோட சொந்த அனுபவம் இல்லைன்னு நான் சொன்னா நீங்க நம்பித்தான் ஆகனும்.

October 29, 2008

ஐஸ் பாய்

போன பதிவோடத் தொடர்ச்சி தான் இதுவும். ஆனா இந்த தடவ வேற ஒரு ஆட்டம். ஆட்டத்துக்கு பேரு ஐஸ் பாய் (அதென்ன பாய்?? வெரி பேட்). இத ஐஸ் பார்ன்னும் (அந்த பார் இல்ல) சொல்லுவாங்க. இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அண்ணன்(பெரியம்மா பையன்). அப்பாவின் சொந்த ஊரில் போட்ட ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரி lets play now:)


வழக்கம்போல் இந்த விளையாட்டையும் சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கணும். கேட்சர் கண்ணை மூடிக்கொண்டு 1,2,3 எண்ணனும். அதுக்குள்ள மத்தவங்க போய் ஒளிஞ்சிக்கனும். ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லாரையும் ஐஸ் போடறது (கண்டுபிடிக்கறது) கேட்சரோட வேலை. அத்தனை பேரும் மாட்டினதுக்கு அப்புறம் முதல்ல அவுட் ஆனவன் கேட்சராகி கேமை கண்டினியூ செய்யனும். எல்லாரையும் அவுட் பண்றதுக்குள்ள யாராவது ஐஸ் போட்டுட்டாங்கன்னா அதே ஆள் திரும்பவும் கேமை பிரெஷ்ஷா ஆரம்பிக்கணும். இத ரெண்டு விதமா விளையாடலாம். ஒன்னு பொதுவா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஐஸ் போடுறதையும், ஐஸ் அடிக்கறதையும் அங்கேயே வச்சிக்கிறது. இந்த typeல ஐஸ் அடிக்கறது ரொம்ப கஷ்டம். இலவு காத்த கிளியா கேட்சர் அங்கேயே சுத்திகிட்டு இருப்பான். ரெண்டாவது வகை ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடறது. அதாவது ஆள் சிக்கினவுடனே ஐஸ் நம்பர் 1 வித்யா அப்படின்னு உரக்க டிக்ளேர் பண்ணிடனும்(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி). அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா கேட்சர் கேமை ரிப்பீட்டு பண்ணனும்.


நான் இந்த விளையாட்டை கத்துக்கிட்டதும், அதிகம் விளையாடினதும் என் அப்பாவின் சொந்த ஊரில் தான். என் அண்ணன்கள், அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பசங்கள் என மினிமம் 15 பேரோட தான் ஆட்டம் ஆரம்பமாகும். பெரியப்பாவின் வீடும் அதற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியும் தான் எங்க பிளே ஏரியா. பெரியப்பா வீட்டு மாடி ஐஸ் பார் விளையாடுறதுக்குன்னே கட்டினா மாதிரி அவ்ளே அம்சமா இருக்கும். மாடியில் உள்ள இரண்டு ரூம்களுக்கும் பொதுவாக ஒரு சுவர் தான். ஒரு ரூமில் இருந்து மற்றொன்றுக்கு ஈசியாகப் போலாம்.

எனக்குத் தெரிந்து ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடும் வகையைத்தான் அதிகம் விளையாடிருக்கேன். இந்த ஆட்டத்தில் நிறைய கேப்மாரித்தனங்களை செய்யலாம். கேட்சரை நம்பர் எண்ண சொல்லிட்டு ஒளிந்து கொள்ளும்போது அண்ணன்கள் இருவரும் போட்டிருக்கும் சட்டையை மாற்றிக்கொள்வார்கள். கேட்சர் அறிவாளி மூஞ்சியப் பார்க்காம சட்டையைப் பார்த்து ஐஸ் போடுவான். அப்போ ராங் (wrong) ஐஸ் அடிச்சு அவனையே திரும்பவும் புடிக்கவைச்சது உண்டு. சிலசமயம் ஒரு குறிப்பிட்ட ஆளை கட்டம்கட்டிடுவாங்க. சாபூத்ரிலருந்து அவன் தப்பிச்சிட்டான்னா முதல்ல அவன கேட்சரா ஆக்கறதுக்கான பிளான் அரங்கேறும். அதுக்காக வேணும்னே அவன ஐஸ் போடறவரைக்கும் வேற யாரப் பார்த்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவன முதல் ஐஸா டிக்ளேர் பண்ணதுக்கப்புறம் மளமளன்னு மத்தவங்க எல்லாரும் வேணும்னே அவுட் ஆயிடுவாங்க. அதுக்குப்பறம் தான் கச்சேரியே. எதிரி?????!!!! கேட்சரானப்புறம் அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி, அழற வரைக்கும் ஐஸ் அடிச்சுகிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பார்ட்டி பாதி கேமிலேயே எஸ்ஸாகிடும். விளையாட ஆரம்பிச்சுட்டா சோறு தண்ணி திங்கலைங்கறதுக் கூட தெரியாம ஆட்டம் தொடரும். ஹூம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.

சரி பதிவோட முக்கிய கட்டத்துக்கு வருவோம். எனக்கு இத ஒரு தொடர் பதிவா மாத்தனும்னு ஆசை. அதனால சில பேரை விளையாட கூப்பிடலாம்னு இருக்கேன். ஆடறதும் ஆடாததும் உங்க இஷ்டம். ரூல்ஸ் ரொம்ப சிம்பிள்.

1. சிறு வயதில் நீங்கள் விரும்பி ஆடின விளையாட்டு (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).
2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.

இவங்களையெல்லாம் ஆடறதுக்கு கூப்பிட்டுருக்கேன்.

1. அருண் அண்ணாத்தே
2. ஆபிசர் அக்கா
3. குசும்பரை

October 23, 2008

கல்லா மண்ணா

திருவான்மியூரில் இருந்து தாம்பரம் வந்து ஆறு மாசம் ஆக போகுது. வந்த புதிதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இப்போது தான் தாம்பரம் பழகியிருக்கிறது. இரண்டு இடங்களுக்கும் நிறையவே வித்தியாசம். திருவான்மியூரில் நான் இருந்த ஏரியா(காமராஜ் நகர்) மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கொஞ்சம் அரிது. இங்கு தாம்பரத்தில் நேரெதிர். எப்போதும் கலகல என்று தான் இருக்கும். வாண்டூஸ் ஸ்கூல் இருக்கும்போதே பட்டையக் கிளப்புவாங்க. லீவு நாள்ல கேக்கவே வேணாம். சாயங்கலாம் இவர்களின் ஆட்டத்தை பார்ப்பது ஜூனியரின் ரெகுலர் வேலைகளில் ஒன்று. இவர்களைப் பார்க்கும்போது என் சிறு வயது நினைவுக்கு வரும்.


அப்பா வேலை காரணமாக நிறைய ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எங்கள் படிப்பு வீணாகக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். என் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் காஞ்சிபுரத்திலும் (UKG - 6), வாலாஜாப்பேட்டையிலுமே (6 - 12) முடித்தேன். காஞ்சியில் இருந்த நாட்களே பொன்னாட்கள் என்பேன். கலெக்டர் ஆபிஸ் பின்புறம் இருந்த ஹவுஸிங் போர்டில் தான் ஜாகை. என் வகுப்பு நண்பர்கள் வீடும் அங்கேயே தான். ஸ்கூல் விட்டு வந்ததும் எதையாவது சாப்பிட்டு விட்டு கிளம்பினால் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆட்டம் போட்டுவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்போதே கேர்ள்ஸ் கேங்க் பாய்ஸ் கேங்க் என்று இருந்தது. ஆனாலும் கொஞ்ச நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.


ஸ்க்கிப்பிங், நொண்டி என நிறைய விளையாடினாலும் என் ஆல் டைம் பேவரிட்களில் ஒன்று கல்லா மண்ணா தான். இந்த விளையாட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் இருந்த தெரு இந்த விளையாட்டுக்கு அவ்வளவு அமைப்பாக இருக்காது என்றாலும் லோக்கல் ரூல்ஸ் வைத்து விளையாடுவோம். தெரு மண் ஏரியாவாகவும், அதன் இருபுறங்களும் கல் ஏரியாவாகவும் கருதப்படும். இந்த விளையாட்டு சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கப்படும். மோஸ்ட்லி முதலில் புடிக்க ஆரம்பிப்பவர் ஒரு வழியாகிவிடுவார். எல்லோரையும் அவுட் செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பிடிப்பவர் பெரும்பாலும் மண் ஏரியாவை தான் தேர்ந்தெடுப்பர். அதான் புத்திசாலித்தனமும். ரூல்ஸ் படி கல் ஏரியாவில் நிற்ப்பவர்கள் மண்ணைக் கடந்து எதிர்புறம் செல்ல வேண்டும். அப்படி மண்ணில் போகும்போது அவுட் ஆகிவிட்டால் அவர் தான் கேமை கண்டினியூ செய்ய வேண்டும். கேட்சரை வெறுப்பேத்த ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பதும் நடக்கும். எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் ஆச்சரியமான விஷயம் நான் ஒரே ஒருமுறை தான் கேட்சர் ஆகியிருக்கிறேன். அதுவும் மழை வந்ததால் ஆட்டம் பாதியிலே க்ளோஸ். மற்றபடி கேட்சருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகும்போது கிடைக்கும் சுகமே தனி:)


இந்த கேம் ஏரியாவுக்கு ஏரியா வேறுபடும். காஞ்சி ஹவுஸிங் போர்டில் பின்பற்றிய சில ரூல்ஸ் இதோ.


1. பிளேயர்ஸ் யாரும் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரே ஏரியாவில் நிற்கக்கூடாது. அப்படி நின்றது நிரூபிக்கப்பட்டால்???!! அவர் தான் கேட்சராக வேண்டும்.
2. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஆப்சனை இருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது.
3. கேம் தொடங்கும்போது இருக்கும் தலை கணக்கை வைத்து மேக்ஸிமம் இத்தனை பேரை அவுட் செய்தால் போதும் என்று சிலசமயம் ரூல்ஸ் போடப்படும். (வானிலையைக் கருத்தில் கொண்டு)
4. அதே போல் ஆட்டம் தடைப்பட்டால் (மழையைத் தவிர்த்து) மறுநாளும் அதே நபர் தான் கேட்சராக கண்டினியூ பண்ணவேண்டும்.


அடுத்த பதிவும் விளையாட்டைப் பத்தி தான்.

October 16, 2008

கால் கிலோ தக்காளி

நேற்று சாயந்திரம் மார்கெட் போயிருந்தேன். எல்லா காய்களுமே பயங்கர விலை. ஒரு கிலோ கேரட் 48 ரூபாய். விலையைவிட இன்னொரு பெரிய ஷாக் யாருமே கால் கிலோ போட மறுத்தது தான். மினிமம் அரை கிலோ தான் கொடுப்பார்களாம். வீட்டில் இருப்பது ரெண்டு பேர் தான். ஜுனியரை இன்னும் தனி டிக்கெட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கூறு கட்டி வைத்திருக்கும் காய்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஓரு சின்ன எவர்சில்வர் தட்டில் அவர்கள் வைத்திருக்கும் காய்களில் பாதிக்கு மேல் அழுகல். தக்காளி கிலோ 32 ரூபாய். கால் கிலோ கேட்டதுக்கு முதலில் மறுத்த அவர் பின்னர் எண்ணி 5 பச்சை காய்களை நிறுத்தினார். நானே எடுத்துக்குறேன் என்ற போது வாங்கறது கால் கிலோ இதுல நீயே(ஒருமையில் தான் அழைத்தார்) எடுக்கனுமா. சரிதான் போ என்றார். எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தேன். கறிவேப்பிலை கூட 2 ரூபாய்க்கு குறைஞ்சு கிடையாது. நேரே ஹெரிடேஜ் குரூப்பின் fresh @ ஸ்டோர்க்கு போய்விட்டேன். அங்கு வெறும் நூறு கிராம் கேரட் கூட எடை போட்டுக் கொடுத்தார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி இல்லை. 30 பைசா தான் அதிகம்.

மார்க்கெட்டில் மலிவாக இருக்கும் என்றுதான் அங்கு செல்கிறோம். ஆனால் நான் தருவதைத்தான் வாங்க வேண்டும் என்று அடாவடி பண்ணுவது எந்த விதத்தில் நியாயம். தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்து மின்சாரமும் இல்லாமல் குப்பையிலா கொட்டுவது. இப்படி கஸ்டமரை நடத்த வேண்டியது அப்புறம் ரிலையன்ஸ்காரன் வயிற்றில் அடிக்கிறான் என புலம்பி என்ன பிரயோஜனம். பூனைக்கு மணி கட்டப் போவது யார்?

October 13, 2008

என்ன கொடுமை சார் இது - II

ஜுனியர்க்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன். மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் சேலையூர் போகணும்.

டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!

October 7, 2008

Annapoorani - Banglore

Last week I went to Banglore. This is my third visit to Banglore. First time during college period for an industrial visit. Second visit happened last year during the christmas holidays. My sister-in-law is there in C.V.Raman Nagar.

We went to the Annapoorani restaurant in Ulsoor. This is a restaurant run by the Mouli's group. They serve pure authentic south indian vegetarian food. The food was awesome. They serve karnataka rotis like akki roti, jolwar roti. Adais like thanjavur adai, thanjavur onion adai, murungai keerai(drumstick leaves) adai are simply delicious. You also get yummy bisibelabath, lemon and coconut sevais. The morekali and rice uppma are the must try ones. The morekali was too good. I had akki roti with brinjal pulikootu. They also have special weekend lunches with exotic menu. In weekend u have to wait for a long time to find a table. Still the food makes u to do that.

Location : Cambridge Road, Ulsoor (Near Sai Baba Temple)

Type : Authentic South Indian - Vegetarian

Cost : Meal for two will cost around 200.

Must try : Morekali, akki roti, rice uppma and adais.

September 20, 2008

அதிக அறிவால் வந்த வினை

நான் சின்ன வயசிலிருந்தே ரொம்ப அறிவாளின்னு எங்கம்மா சொல்லுவாங்க. (பத்து மாசக் குழந்தையா இருக்கும்போதே பேச ஆரம்பிச்சுட்டேனாம்). படிக்கும்போது ரெண்டு board exam-லயும் ஸ்கூல் ப்ர்ஸ்ட். காலேஜ்ல என்னைவிட பெரிய ஞான பழங்கள் நிறைய பேர் இருந்தாலும் ஏதோ சுமாரா வண்டி ஒடிக்கிட்டிருந்தது. சரி சரி என் அருமை பெருமையெல்லாம் வேறொரு பதிவுல வெச்சிக்கிறேன். இப்போ மேட்டர் என்னன்னா இப்படியெல்லாம் நாலு பேர் என்னை பாராட்ட வெச்ச அறிவால தான் நான் இப்போ ஒரு பேரிம்சையை அனுபவிச்சிட்டிருக்கேன். நாலு மாசத்துக்கு முன்னால பல் வலின்னு டாக்டர்கிட்ட போனேன். டெஸ்ட் பண்ணி பார்த்த அவரு ஒரு பல்லு சொத்தை (ஒரு காலத்துல வண்டி வண்டியா தின்ன சாக்லெட்டுகளின் வேலை). Root canal பண்ணா போதும். ஆனா உங்களுக்கு நாலு அறிவுப் பல் இருக்கு (அறிவாளிகளுக்கு அறிவு பல் இருக்கறதுல பெரிய ஆச்சர்யம் இல்ல) அத எடுத்துடனும். பின்னால பிரச்சனை வரும்னு சொன்னார். ஆனா குழந்தைக்கு ஒரு வயசு ஆகாததால இரண்டு மாசம் கழிச்சு எடுத்துடலாம்னு சொன்னார். போன மாசம் நாலு பல்லையும் ஒரே நாள்ல புடுங்கிடலாம்னு வந்து அட்மிட் ஆயிடுங்கன்னு சொன்னார். நான் வேணாம் அது பாட்டுக்கு இருந்துட்டு போகுது. பிரச்சனை பண்ணும்போது பார்த்துக்கலாம்ன்னு பிடிவாதமா மறுத்துட்டேன்.

போன வாரம் தீடிர்ன்னு வலது பக்க கீழ் தாடையில் இருக்க எல்லா பல்லுமே வலிக்கற மாதிரி இருந்தது. எந்த பல்லுன்னும் சரியா தெரியல. காதும், கழுத்தும் சேர்ந்து வலிக்க ஆரம்பிச்சிடிச்சு. மறுநாள் டாக்டர்கிட்ட போய் x-ray எடுத்துப் பார்த்தா ஒரு அறிவுப் பல்லுல இன்பெக்ஷன் ஆகிருந்தது. வேற வழியே இல்லை பல்ல புடுங்கியே ஆகனும்னு சொல்லிட்டார். பல்லு புடுங்கினதுக்கப்புறமா ஒரு வாரம் ரெஸ்ட் எடுக்கனும்னு சொல்லிட்டார். நானும் குஷியா மேட்டரை அம்மாகிட்ட சொல்லி கிளம்பி வர சொல்லிட்டேன். பல்ல புடுங்கிட்டு அம்மா வீட்டுக்கு போய் ஒரு வாரம் நல்லா சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கனும்னு பிளான் எல்லாம் பண்ணி வெச்சேன். மறுநாள் சாயந்திரம் போனா local anaesthesia கொடுத்து போராடி ஒருவழியா பதினஞ்சு நிமிஷத்துல கீழ் பல்ல புடுங்கிட்டார். திரும்பவும் injection போட வந்தார். எதுக்குன்னு கேட்டா மேல இருக்க அறிவுப் பல்லையும் கையோடு எடுத்துடலாம்னார். வேணாம்னு சொல்றதுக்குள்ள ஊசியைப் போட்டு மேல் பல்லையும் புடுங்கிட்டார் மனுசன். ஆனா இந்தப் பல்லு ஒரே நிமிஷத்துல வந்துடுச்சு.



ஒரு வாரத்துக்கு மருந்து எழுதிக்கொடுத்துட்டு அவர் சொன்ன ஒவ்வொரு வார்த்தையும் என் காதுல இடி மாதிரி கேட்டுச்சு. அவர் சொன்னது இதுதான். "ஒரு வாரத்துக்கு சூடாகவோ, காரமாகவோ, கடினமாகவோ எதையும் சாப்பிடக்கூடாது. நொறுங்க பிசைந்த தயிர் சாதம், காரமேயில்லாம ரசம் சாதம், நிறைய ஜுஸ், ஐஸ்கிரீம் சாப்பிடனும்". அம்மா வீட்டுக்கு போய் நல்லா ஒரு பிடி பிடிக்கலாம்ங்கற என் ஆசையில மண்ண வாரிப்போட்டுட்டாரேன்னு நினைச்சுக்கிட்டே அம்மா வீட்டுக்கு பொட்டிய கட்டினேன். ஹும். அந்த ஏழு நாட்களும் ஒரே அவஸ்தை. எனக்கும் என் பதினாறு மாதக் குழந்தைக்கும் ஒரே சாப்பாடு. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா குளிர்ச்சியா சாப்பிட்டு தொண்டை வேற கட்டிடுச்சு. ஒரு வழியா ஏழு நாள் கழிச்சு தையல் பிரிச்சதுக்கப்புறம் சாப்பிட்ட தேங்காய் சட்னியே எனக்கு தேவாம்ரிதமாய் இருந்தது. இன்னும் ரெண்டு மாசம் கழிச்சு பாக்கி இருக்க ரெண்டு பல்லையும் புடுங்கனும். ஆக இந்தப்பதிவோட மெஸேஜ் என்னன்னா "அதிக அறிவும் ஆப்பு வைக்கும்".

September 16, 2008

Women and Financial Insecurities

A few days back my servant maid told me that she will not come for a day or two as her niece committed suicide. Further she told that the girl burnt herself leaving behind two kids of age 3 years and 6 months because her husband left her and married someone else. I thought that the girl did so as she was afraid of running the family and raising the children etc...

One more incident flashed in my mind was the unexpected death of my uncle in a road accident. His wife does not know anything about the cash flow that my uncle made. What she knew was how much he earned. That's it. We came to know that he had an insurance policy and a claim was made for that. She doesn't know his husband's account pin number and other details. People r fighting to recover the money my uncle had given to others.

This incidents bought in a series of thoughts in me and the result is this blog.

Generally women are comfortable in paying bills, shopping and taking care of their kids. They just manage the house with whatever their husbands give. Working women also fall in the same category. only difference is that they earn some money. But that also disappears in the list above or it goes for paying some EMI's. Most of the indian women get shattered both financially and mentally after the death of their husband or when they leave them for some damn reasons. There are women who handle the situation neatly but the percentage is reasonably low.

What i personally feel is that women should be aware of the cash flow happening around the family. Instead of getting satisfied in vital tasks like running the family it's better to have a separate investment for them. The small amount of money u save in ur day to day life, if invested carefully can fetch u a huge amount later. Because anything can happen at anytime.

Men should also take the responsibility of making their wife aware about the cash flows they make, investments, bank account details and other money related matters.

P.S: Men do make sure that the awareness u create is not misused:)

September 10, 2008

GIORGIO

My hunger for treating my taste buds had led me to try out different cuisines @ various restaurants. And the hunt continues. I just wanted to share my experiences.


And here i go.....




Last sunday after a long discussion me and my husband decided to step into Giorgio in besant Nagar for dinner. (Usually my kitchen mostly remains closed on weekends). I've been to this place already (Thanks to Vivek, my ex-colleague. He was the one who introduced this place to me). It was almost 9 p.m when we entered there. We started with Tortilla soup which was tangy and yummy. For starter we went for a plate of mixed veg kebabs and veg momos.
It was also too good. Hubby chose chimi changas - mexican for his main course. This one used to be better in Don Pepe. My choice was paneer veg shashilk which belongs to turkey. It was ok but not so good. We were so filled that we were not able to have any desserts. The bill was around 800 (a bit costly, but the food makes u forget that).




Location : Besant Nagar (opp to nilgiris)


Type : Multi Cuisine - Continental


Buffet : Available for lunch. Didnt try yet.


Choice of Veg : High


Cost : Meal for two will cost around 900.


Note : All the reviews are only on vegetarian platters:)

August 16, 2008

சத்யம்


சத்யம்(மா) சோதனை:(

August 14, 2008

என்ன கொடுமை சார் இது - I

விஜய் டிவியில் சுதந்திர தின சிறப்புத் திரைப்படம்.

August 7, 2008

சுப்ரமணியபுரம் - இரண்டு முறை பார்த்ததற்க்கான காரணம்

இந்த படத்தின் பாடல்கள் கேட்டதிலிருந்து படத்தை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் ஜாஸ்தியாகவே இருந்தது. டைரக்டர் ஏமாற்றாமல் தரமான படத்தை பார்த்த திருப்தியை ஏற்படுத்திவிட்டார். படம் எனக்கு பிடித்தற்கான காரணங்கள் இதோ.

1. First scene கஞ்சா கருப்பு வருவதிலிருந்தே படம் top gearல travel பண்ண ஆரம்பிக்குது. ஒரு சின்ன இடத்தில் கூட தொய்வு ஏற்படுத்தாத டைரக்டர் சசிகுமார்க்கு முதல் ஜே.

2. ஹீரோயின் selectionக்காக ரெண்டாவது ஜே. பேசும் கண்களும், கொள்ளை கொள்ளும் சிரிப்பும், chance இல்ல. ஜெய் கூட romance பண்ணும் போது பார்க்கும் கள்ளப்பார்வை இருக்கே absolutely no words to describe.

3. ஜேம்ஸ் வசந்தனை music directora தேர்வு செய்ததற்கு மூன்றாவது ஜே. Coffee with Anu programla music director choice பத்தி அவர் சொன்னது அட போட வைத்தது. "சிறு பொண்மனி" பாட்டு வரும்போதெல்லாம் தியெட்டரில் விசில் சத்தம் காதை கிழிக்குது. Nice choice.

4. படத்தில் வரும் எந்த கேரக்டரும் வேஸ்ட் என்று சொல்லவே முடியாதபடி அமைந்த screenplay. Lead characters முதல் பரமனின் அண்ணியாக நடித்தவர் வரை அத்தனை பேரும் பட்டையைக் கிளப்பியிருக்கிறார்கள்.

5. இயல்பான வசனங்கள். மதுரை தமிழும், நகைச்சுவையும் நல்ல கூட்டணி. உதாரணத்திற்கு
கஞ்சா கருப்பு : "நம்ம பொழப்புக்கு இதெல்லாம் நல்லாவா இருக்கு?"
ஜெய் : "நமக்கு ஏதுடா பொழைப்பு??"
க கருப்பு : "இவைங்களுக்கு மத்தில வாழ்றதே பெரிய பொழப்பு தான்டா..."

6. Thrills and twists of second half. அதுவும் கடைசி 45 நிமிடங்கள் அதிர வைக்கும் சரவெடி.

ரொம்ப நாள் கழிச்சு நான் பார்த்த நல்ல படம். இன்னொரு தடவை பார்க்க chance கிடைக்குதான்னு பார்க்கலாம்.

June 22, 2008

விஜயின் தசாவதாரம்

கமல் மட்டும் தான் பத்து கெட்டப் போடனுமா?? நானும் போடுவேன்லனு அண்ணன் இளைய தளபதி விஜய் கிளம்பினா ரிசல்ட் இப்படிதான் இருக்கும்.

1. கில்லி


2. ஷாஜகான்

3. திருமலை

4. ஆதி

5. சச்சின்

6. மதுர

7. பகவதி

8. திருப்பாச்சி

9. சிவகாசி

10. குருவி


யப்பா என்னமா வெரைட்டி காமிக்கிறார் மனுசன்? கமல் இவர்ட்ட பிச்சை எடுக்கனும். என்ன நான் சொல்றது??!!!

March 30, 2008

V I N N A R A S U

Manjal Kamalai Productions perumayudan vazhangum
CABTUN in & as

V I N N A R A S U
-Savior of Earth

Starring Cabtun as father & son.
First time in the history of Indian cinema Battany Squares as heroine.
Kedhuvaran as (crooked) head of MASA.

Now for the story….

Scene 1:
A group of scientists are having a serious discussion in the conference room of MASA. The discussion is about the threat posed to mother earth by the aliens from Mars. Yes, MASA came to know it by taping the conversation between the head of the aliens & an allakai alien. Now everyone is worried about how to save mother earth? At this point tea is supplied to everyone in the room. The tea boy says “hmmm idhukka ivlo periya discussion. There is only one person who can save the earth. He is Mannarasu (CABTUN in appa role)”. Everybody unanimously cheers and decides to send Mannarasu to fight the aliens.

Scene 2:
Appa CABTUN intro. A group of good hearted scientist approaches Kedhuvaran (who is one of the Villains) and asks him to send Mannarusu to mars to destroy the alien forces. They justify there choice by explaining him the good deeds of Mannarasu. Inga than cabtunukku intro song vekkirom. The song will be penned by the great???!!!! Lyricists Borerarasu and meejik by the great graveyard music director SK Deva. And without fail we r showing the colourful flag of cabtun throughout the song. Mannarasu has a beautiful family. His wife Laxmi is a homely lady. Their 10 years old son, Vinnarasu is a very good boy who excels in studies & exceeds in size.

Scene 3:
Mannarasu, Kedhuvaran & a group of other scientists come to a decision that Mannarasu himself will go to mars in a rocket and destroy the aliens using a electronically programmed special machine gun. Namma cabtun avaroda zippu vecha shoevayum, torch vacha thoppium (need this very much as space will be dark. Yaarum padathula logic illanu solla koodadhu parunga) pottukittu rocketla kelambararu. The day he started his journey was diwali. So he gets loads n loads of crackers to his son. Ellarukkum tata kaatitu he started his journey. He lands in Mars and to his shock he finds that the special gun is programmed wrongly. Being unarmed he kills 100 aliens by the reverse kick, 100 by showing his face in close up and another 100 by giving a patriotic speech. But alas while cabtun was giving speech a group of aliens hit him @ his pinmandai and captures him. He is put in a jail which has no doors. Yes it’s a jail that has dangerous infra rays as its walls(technology has improved so much you know).

Scene 4:
In earth Mannarasu’s family is worried as there is no news from him. Years pass by. Now Mannarasu’s son Vinnarasu has grown up. Laxmi now tells the flashback to his son. After hearing the story Vinnarasu decides to save his father. He approaches MASA to send him to Mars. The board refuses to do so. Kedhuvaran’s secretary Battany Squares gets mayangified in Vinnarasu’s beauty???!!! He approaches Vinnarasu and says that her boss is the villain. Vinnarasu workouts a plan to go to Mars (Indha scenku munadi oru duet song kattayam undu). Vinnarasu now builds rocket???!!! by using the crackers tat his father gave for diwali. He promises his mom that he’ll bring back father and starts his journey to Mars with Battany Squares.

Scene 5:
Vinnarasu lands on MARS and parks his rocket in a secret place. He starts searching his father. He follows an alien and finds the secret prison and his father. Inga than appavum paiyyanum maari maari pasatha piliyuranga (Padathula sentiment illanu yaarum sollidakoodadhula). Vinnarasu is thinking of how to break the walls of the prison, as if he touches it he’ll get killed by the current. Suddenly an idea gets flashed to his mind. He lits his beedi and oodhifies the smoke towards his father. Voila the infra rays gets disappeared and Mannarasu is freed. Father and son together sets bombs all over Mars. Adhu varaikkum aliens enna panranganu yaarum kekka koodadhulla. Adhukku than we have a item number by Battany Squares. Before the aliens realize that they’ve been fooled, the awesome threesome escapes in the rocket and the evil planet explodes.

Climax:
Mannarasu informs US president about Kedhuvaran. Kedhuvaran is arrested and sentenced to death. Mannarasu becomes the new head of MASA. Vinnarasu becomes the president of US

P.S: If anyone comes forward to produce this film, I’m ready to direct it without getting a penny

February 9, 2008

Agent Blue

The agents in Blue have certain things in common…
They clean the places which look centuries old.
They kill little Micro-organisms which discuss strategies to spread deadly diseases.
All these agents appear on the so called idiot box during the prime time when we sit in front of the box with a plate of delicious food.
Still couldn’t identify the agent???
Yes it’s nothing but a Toilet cleaner.
These advertisements show you toilets cleaned long ago say during the bagavadhar period which will make you puke the moment u see it. Idhula koduma ennana they’ll zoom in the toilet to show the microorganisms. Avlo closeupla parka adhu enna Aishwarya Rai facea? And the animation used here voila. U would never imagine a germ like that (room pottu design pannuvangalo). After pouring this cleaning agent all the germs die which is shown again by zooming in (ada kadavule). In addition they’ll bring in a TV celebrity to challenge for a clean & sparkling toilet.
This is how the ad actually goes . . .

Indhamma : Hai! Neengala. Vaanga. Want to have something to eat?
Andhalu : Show me the toilet!
(Me : En anga than sappida poriya??)


Indhamma : Oh you've come for the clean toilet challenge is it?
Andhalu : Yes, what do you think about this toilet?
(Me : Katti mudicha naalla irundhu clean pannalunnu nallave theriyudhu!!)


Indhamma : Konjam stains irukku.
(Me : Konjama..adipavi??!!!!)
Andhalu : Do you think that these stains would go?

Indhamma : Definitely not. I've tried various methods, no use.
Andhalu : Ok, lets go to the challenge. Pour our liquid and wait for 15 mins. Now pour water and here you go!

Indhamma : Wow, evalo azhaga aagiduchu en toilet! Nalla vasana kooda varudhu.
(Me : Karumam. Toilet-la enna yezhavu azhagu vaendi kadakku?? Vasana varudhunnu adha living rooma matha mudiyuma???)


So if you are kinda busy with work, use the celebrity to get ur toilet cleaned. Toiletum clean aagum, neengalum tv-la vandha madhiri irukkum:)

February 4, 2008

இந்திரலோகத்தில் நா.அழகப்பன் - விமர்சனம்.


ஒரு பெரிய்ய்ய்ய்ய்ய பாடலுடன் தொடங்குகிறது படம் (அப்பவே உஷாரா ஆயிருக்கனும்). பூலோகத்தில் நாடக கம்பெனி நடத்தும் அழகப்பன், இந்திரன், எமதர்மன் என்று வடிவேலுக்கு மூன்று கெட்டப்புகள். வடிவேலுவின் அழகில்???!!! மயங்கி இந்திரலோகம் திரும்ப மறந்து, சாபத்தால் கற்சிலையாகி நிற்கும் ரம்பையின் கழுத்தில் சந்தர்ப்ப சூழ்நிலையால் மாலையிடுகிறார் அழகப்பன். மாலையிட்டவனையே மணாளனாகக் கருதி, அழகப்பனை இந்திரலோகத்திற்கு வரவழைக்கிறார் ரம்பை. பகலை பூலோகத்திலும், இரவை இந்திரலோகத்திலும் கழிக்கிறார் அழகப்பன். சொர்க்கம், நரகம் என்று tour அடிக்கும் அழகப்பன், ஒரு கட்டத்தில் எமன் செய்யும் அட்டகாசங்களுக்கு முடிவு கட்ட முயற்சிப்பதும் அதனால் ஏற்படும் விளைவுகளும் தான் கதை.


அழகப்பனாக வடிவேலு நிறைவாக நடித்திருக்கிறார். ஆனால் அவர் செய்யும் அட்வைஸ்கள் ரொம்ப ஓவர். படத்தில் பிரசார நெடி தூக்கலாக இருக்கிறது. இந்திரன் கேரக்டர் கிச்சு கிச்சு மூட்டுகிறது. அதுவும் நாரதராக வரும் நாசரிடம் அவர் மாட்டிக்கொண்டு படும் பாடு காமெடி கலகல. "ஆண்களை கண்டாலே ஒவ்வாமை" என்று கூறும்போது தியேட்டரே அதிர்கிறது. எமதர்மன் வேஷம் வடிவேலிற்கு நன்றாக பொருந்தினாலும் ஓவர் ஆக்டிங்கை கொஞ்சம் தவிர்த்திருக்கலாம். நாரதராக நாசர் perfect. ஒவ்வொரு sceneலும் சிக்ஸர் அடிக்கிறார். சுமித்ரா முதல் ஸ்ரேயா வரை படத்தில் வீணடிக்கப்பட்டவர்கள் நிறைய பேர். எல்லார் பத்தியும் சொல்லிட்டு ஹீரோயின் பத்தி சொல்லலனா ரசிகர்கள் சாபம் என்னை சும்மா விடாது. தீத்தா சர்மா அழகாயிருக்கிறார், நன்றாக ஆடுகிறார். வேறொன்ரும் சொல்வதற்கில்லை.


நானொரு தேவதை பாடல் தாளம் போட வைக்கிறது. மற்ற பாடல்கள் தேறுவதுபோலில்லை. படத்திற்கு மிகப் பெரிய பலம் art direction தான். சொர்கத்தையும், நரகத்தையும் நம் கண் முன் நிறுத்த ரொம்பவே மெனக்கெட்டிருக்கிறார்கள். படத்தின் மிகப் பெரிய பலவீனம் நீண்டுக்கொண்டே போகும் கிளைமேக்ஸ் தான். அதிலும் இந்திரனிடம் சாபம் பெற்ற பிறகு வரும் காட்சிகள் இழுவையோ இழுவை. படத்தை முடிக்க டைரகர் ரொம்பவே திணறியிருக்கிறார்.


முடிவாக படம் ஆஹா ஓஹோன்னு இல்லன்னாலும் ஒரு தடவை பார்க்கலாம்கிற மாதிரி இருக்கு.