February 11, 2010

இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்


18 comments:

Gokul R said...

ரொமான்சு மூடு சார்ட் ஆகுது போல ...

Rajalakshmi Pakkirisamy said...

aaha... saringa

Unknown said...

நல்ல பாட்டு... ஆனா உங்க கருத்து எதும் இல்லயே

pudugaithendral said...

காதலர் தின ஸ்பெஷல் பாட்டு ரசிச்சேன். அருமையான வரிகள் நிறைஞ்ச பாட்டு.

Anonymous said...

This is one of the best songs of Chitra and my favorite.

Chitra said...

very nice song.

ஹுஸைனம்மா said...

ஒரு தேன்கிண்ணம் எஃபெக்ட் பாட்டைக் கேட்டு!!

தாரணி பிரியா said...

என்னோட ரொம்ப பிடிச்ச‌ பாட்டு இது வித்யா.

//சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது//

இந்த வரிகளை முதல்ல எல்லாம் எப்ப பார்த்தாலும் எந்த பேப்பர் கிடைச்சாலும் எழுதிக்கிட்டே இருப்பேன் :)

Raghu said...

நீங்க‌ளும் ஆர‌ம்பிச்சிட்டிங்க‌ளா.......:))

Vijay said...

என் மனைவிக்கு மிகவும் பிடித்த பாடல்.

எறும்பு said...

//குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா//

எல்லாரும் காதல் பதிவு போடுறாங்க.. ஏன் குல தெய்வமே,
இப்படி சோதிக்கிறே

:)

Vidhya Chandrasekaran said...

நன்றி கோகுல்.
நன்றி ராஜி.

நன்றி பேநா மூடி (கருத்தா? ஹுக்கும்)

நன்றி கலா அக்கா.
நன்றி சின்ன அம்மிணி.
நன்றி சித்ரா.
நன்றி ஹுஸைனம்மா.
நன்றி தாரணி பிரியா.
நன்றி விஜய்.
நன்றி ரகு.
நன்றி எறும்பு.

அகநாழிகை said...

ம்ம்... சுகமான பாடல். மீள் நினைவு படுத்தியதற்கு நன்றி. நான் அதிகம் பார்த்த படம் புன்னகை மன்னன்.

CS. Mohan Kumar said...

//எது வந்த போதும்
இந்த அன்பு போதும்//

இந்த வரிகள் படிக்கும் போது அவ்ளோ effect இல்லை. ஆனால் சித்ரா குரலில் இதே வரிகள் கேட்கும் போது எவ்ளோ அருமையாக இருக்கிறது!! எனக்கு பிடிச்ச பாட்டு. நன்றி

அமுதா கிருஷ்ணா said...

இது, இது பாட்டு....

Vidhya Chandrasekaran said...

நன்றி வாசு சார்.
நன்றி மோகன்குமார்.
நன்ற்றி அமுதா கிருஷ்ணா.

R.Gopi said...

புன்னகை மன்னன் படத்தின் எல்லா பாடல்களும் நன்றாக இருக்கும்... இளையராஜாவின் இசை மழை படம் அது...

குறிப்பாக “ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்” பாடல், வைரமுத்துவின் வைர வரிகளும் இணைந்து படு கலக்கலாக இருக்கும்..

Thamira said...

ஹிஹி.. என்னாச்சு திடீர்னு?