October 29, 2008

ஐஸ் பாய்

போன பதிவோடத் தொடர்ச்சி தான் இதுவும். ஆனா இந்த தடவ வேற ஒரு ஆட்டம். ஆட்டத்துக்கு பேரு ஐஸ் பாய் (அதென்ன பாய்?? வெரி பேட்). இத ஐஸ் பார்ன்னும் (அந்த பார் இல்ல) சொல்லுவாங்க. இந்த விளையாட்டை எனக்கு அறிமுகப்படுத்தியது என் அண்ணன்(பெரியம்மா பையன்). அப்பாவின் சொந்த ஊரில் போட்ட ஆட்டங்கள் இன்னும் நினைவில் இருக்கிறது. சரி lets play now:)


வழக்கம்போல் இந்த விளையாட்டையும் சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கணும். கேட்சர் கண்ணை மூடிக்கொண்டு 1,2,3 எண்ணனும். அதுக்குள்ள மத்தவங்க போய் ஒளிஞ்சிக்கனும். ஒளிந்துக்கொண்டிருக்கும் எல்லாரையும் ஐஸ் போடறது (கண்டுபிடிக்கறது) கேட்சரோட வேலை. அத்தனை பேரும் மாட்டினதுக்கு அப்புறம் முதல்ல அவுட் ஆனவன் கேட்சராகி கேமை கண்டினியூ செய்யனும். எல்லாரையும் அவுட் பண்றதுக்குள்ள யாராவது ஐஸ் போட்டுட்டாங்கன்னா அதே ஆள் திரும்பவும் கேமை பிரெஷ்ஷா ஆரம்பிக்கணும். இத ரெண்டு விதமா விளையாடலாம். ஒன்னு பொதுவா ஒரு இடத்தை தேர்ந்தெடுத்து ஐஸ் போடுறதையும், ஐஸ் அடிக்கறதையும் அங்கேயே வச்சிக்கிறது. இந்த typeல ஐஸ் அடிக்கறது ரொம்ப கஷ்டம். இலவு காத்த கிளியா கேட்சர் அங்கேயே சுத்திகிட்டு இருப்பான். ரெண்டாவது வகை ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடறது. அதாவது ஆள் சிக்கினவுடனே ஐஸ் நம்பர் 1 வித்யா அப்படின்னு உரக்க டிக்ளேர் பண்ணிடனும்(வரலாற்றுல நான் ஐஸ் நம்பர் 1 ஆனதா சுவடே இல்லை. ஹி ஹி ஹி). அதே மாதிரி ஐஸ் அடிக்கிர இடம் கேட்சரோட முதுகு தான். இருக்கிற கோபத்தையெல்லாம் சேர்த்து ஐஸ்ன்னு கத்திக்கிட்டே முதுகுல ஒன்னு வெச்சா கேட்சர் கேமை ரிப்பீட்டு பண்ணனும்.


நான் இந்த விளையாட்டை கத்துக்கிட்டதும், அதிகம் விளையாடினதும் என் அப்பாவின் சொந்த ஊரில் தான். என் அண்ணன்கள், அவர்களுடைய நண்பர்கள், அக்கம் பக்கத்தில் உள்ள பசங்கள் என மினிமம் 15 பேரோட தான் ஆட்டம் ஆரம்பமாகும். பெரியப்பாவின் வீடும் அதற்குப் பக்கத்தில் உள்ள வீட்டின் மாடியும் தான் எங்க பிளே ஏரியா. பெரியப்பா வீட்டு மாடி ஐஸ் பார் விளையாடுறதுக்குன்னே கட்டினா மாதிரி அவ்ளே அம்சமா இருக்கும். மாடியில் உள்ள இரண்டு ரூம்களுக்கும் பொதுவாக ஒரு சுவர் தான். ஒரு ரூமில் இருந்து மற்றொன்றுக்கு ஈசியாகப் போலாம்.

எனக்குத் தெரிந்து ஆன் தி ஸ்பாட் ஐஸ் போடும் வகையைத்தான் அதிகம் விளையாடிருக்கேன். இந்த ஆட்டத்தில் நிறைய கேப்மாரித்தனங்களை செய்யலாம். கேட்சரை நம்பர் எண்ண சொல்லிட்டு ஒளிந்து கொள்ளும்போது அண்ணன்கள் இருவரும் போட்டிருக்கும் சட்டையை மாற்றிக்கொள்வார்கள். கேட்சர் அறிவாளி மூஞ்சியப் பார்க்காம சட்டையைப் பார்த்து ஐஸ் போடுவான். அப்போ ராங் (wrong) ஐஸ் அடிச்சு அவனையே திரும்பவும் புடிக்கவைச்சது உண்டு. சிலசமயம் ஒரு குறிப்பிட்ட ஆளை கட்டம்கட்டிடுவாங்க. சாபூத்ரிலருந்து அவன் தப்பிச்சிட்டான்னா முதல்ல அவன கேட்சரா ஆக்கறதுக்கான பிளான் அரங்கேறும். அதுக்காக வேணும்னே அவன ஐஸ் போடறவரைக்கும் வேற யாரப் பார்த்தாலும் கண்டுக்கமாட்டாங்க. அவன முதல் ஐஸா டிக்ளேர் பண்ணதுக்கப்புறம் மளமளன்னு மத்தவங்க எல்லாரும் வேணும்னே அவுட் ஆயிடுவாங்க. அதுக்குப்பறம் தான் கச்சேரியே. எதிரி?????!!!! கேட்சரானப்புறம் அவன் நொந்து நூடுல்ஸ் ஆகி, அழற வரைக்கும் ஐஸ் அடிச்சுகிட்டே இருப்போம். ஒரு ஸ்டேஜ்க்கு மேல தாக்குப்பிடிக்க முடியாம பார்ட்டி பாதி கேமிலேயே எஸ்ஸாகிடும். விளையாட ஆரம்பிச்சுட்டா சோறு தண்ணி திங்கலைங்கறதுக் கூட தெரியாம ஆட்டம் தொடரும். ஹூம். அதெல்லாம் ஒரு காலம். இப்போ நான் பார்த்தவரைக்கும் வாண்டூஸ் யாரும் இத விளையாடற மாதிரி தெரியல.

சரி பதிவோட முக்கிய கட்டத்துக்கு வருவோம். எனக்கு இத ஒரு தொடர் பதிவா மாத்தனும்னு ஆசை. அதனால சில பேரை விளையாட கூப்பிடலாம்னு இருக்கேன். ஆடறதும் ஆடாததும் உங்க இஷ்டம். ரூல்ஸ் ரொம்ப சிம்பிள்.

1. சிறு வயதில் நீங்கள் விரும்பி ஆடின விளையாட்டு (ஏடாகூடமான ஆட்டம் எதையாவது எழுதிடாதீங்க).
2. தயவு செய்து கிரிக்கெட், செஸ் மட்டும் வேண்டாம்.

இவங்களையெல்லாம் ஆடறதுக்கு கூப்பிட்டுருக்கேன்.

1. அருண் அண்ணாத்தே
2. ஆபிசர் அக்கா
3. குசும்பரை

October 23, 2008

கல்லா மண்ணா

திருவான்மியூரில் இருந்து தாம்பரம் வந்து ஆறு மாசம் ஆக போகுது. வந்த புதிதில் கண்ணைக் கட்டி காட்டில் விட்டது போல் இருந்தது. இப்போது தான் தாம்பரம் பழகியிருக்கிறது. இரண்டு இடங்களுக்கும் நிறையவே வித்தியாசம். திருவான்மியூரில் நான் இருந்த ஏரியா(காமராஜ் நகர்) மிகவும் அமைதியாக இருக்கும். குழந்தைகள் விளையாடுவதை பார்ப்பது கொஞ்சம் அரிது. இங்கு தாம்பரத்தில் நேரெதிர். எப்போதும் கலகல என்று தான் இருக்கும். வாண்டூஸ் ஸ்கூல் இருக்கும்போதே பட்டையக் கிளப்புவாங்க. லீவு நாள்ல கேக்கவே வேணாம். சாயங்கலாம் இவர்களின் ஆட்டத்தை பார்ப்பது ஜூனியரின் ரெகுலர் வேலைகளில் ஒன்று. இவர்களைப் பார்க்கும்போது என் சிறு வயது நினைவுக்கு வரும்.


அப்பா வேலை காரணமாக நிறைய ஊர்களுக்கு சென்றிருந்தாலும் எங்கள் படிப்பு வீணாகக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருந்தார். என் பள்ளிப்படிப்பை பெரும்பாலும் காஞ்சிபுரத்திலும் (UKG - 6), வாலாஜாப்பேட்டையிலுமே (6 - 12) முடித்தேன். காஞ்சியில் இருந்த நாட்களே பொன்னாட்கள் என்பேன். கலெக்டர் ஆபிஸ் பின்புறம் இருந்த ஹவுஸிங் போர்டில் தான் ஜாகை. என் வகுப்பு நண்பர்கள் வீடும் அங்கேயே தான். ஸ்கூல் விட்டு வந்ததும் எதையாவது சாப்பிட்டு விட்டு கிளம்பினால் குறைந்தது இரண்டு மணிநேரம் ஆட்டம் போட்டுவிட்டு தான் வீட்டுக்கு வருவேன். அப்போதே கேர்ள்ஸ் கேங்க் பாய்ஸ் கேங்க் என்று இருந்தது. ஆனாலும் கொஞ்ச நேரம் எல்லோரும் சேர்ந்து விளையாடுவதும் உண்டு.


ஸ்க்கிப்பிங், நொண்டி என நிறைய விளையாடினாலும் என் ஆல் டைம் பேவரிட்களில் ஒன்று கல்லா மண்ணா தான். இந்த விளையாட்டைப் பற்றி எல்லோருக்கும் தெரிந்திருக்கும். நான் இருந்த தெரு இந்த விளையாட்டுக்கு அவ்வளவு அமைப்பாக இருக்காது என்றாலும் லோக்கல் ரூல்ஸ் வைத்து விளையாடுவோம். தெரு மண் ஏரியாவாகவும், அதன் இருபுறங்களும் கல் ஏரியாவாகவும் கருதப்படும். இந்த விளையாட்டு சாபூத்திரி போட்டே ஆரம்பிக்கப்படும். மோஸ்ட்லி முதலில் புடிக்க ஆரம்பிப்பவர் ஒரு வழியாகிவிடுவார். எல்லோரையும் அவுட் செய்வது என்பது ரொம்ப கஷ்டமான விஷயம். பிடிப்பவர் பெரும்பாலும் மண் ஏரியாவை தான் தேர்ந்தெடுப்பர். அதான் புத்திசாலித்தனமும். ரூல்ஸ் படி கல் ஏரியாவில் நிற்ப்பவர்கள் மண்ணைக் கடந்து எதிர்புறம் செல்ல வேண்டும். அப்படி மண்ணில் போகும்போது அவுட் ஆகிவிட்டால் அவர் தான் கேமை கண்டினியூ செய்ய வேண்டும். கேட்சரை வெறுப்பேத்த ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் வைப்பதும் நடக்கும். எனக்கு இன்னும் நினைவில் இருக்கும் ஆச்சரியமான விஷயம் நான் ஒரே ஒருமுறை தான் கேட்சர் ஆகியிருக்கிறேன். அதுவும் மழை வந்ததால் ஆட்டம் பாதியிலே க்ளோஸ். மற்றபடி கேட்சருக்கு தண்ணி காட்டிவிட்டு எஸ்கேப் ஆகும்போது கிடைக்கும் சுகமே தனி:)


இந்த கேம் ஏரியாவுக்கு ஏரியா வேறுபடும். காஞ்சி ஹவுஸிங் போர்டில் பின்பற்றிய சில ரூல்ஸ் இதோ.


1. பிளேயர்ஸ் யாரும் 5 நிமிடங்களுக்கு மேல் ஒரே ஏரியாவில் நிற்கக்கூடாது. அப்படி நின்றது நிரூபிக்கப்பட்டால்???!! அவர் தான் கேட்சராக வேண்டும்.
2. ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால் ஆப்சனை இருமுறைக்குமேல் பயன்படுத்தக்கூடாது.
3. கேம் தொடங்கும்போது இருக்கும் தலை கணக்கை வைத்து மேக்ஸிமம் இத்தனை பேரை அவுட் செய்தால் போதும் என்று சிலசமயம் ரூல்ஸ் போடப்படும். (வானிலையைக் கருத்தில் கொண்டு)
4. அதே போல் ஆட்டம் தடைப்பட்டால் (மழையைத் தவிர்த்து) மறுநாளும் அதே நபர் தான் கேட்சராக கண்டினியூ பண்ணவேண்டும்.


அடுத்த பதிவும் விளையாட்டைப் பத்தி தான்.

October 16, 2008

கால் கிலோ தக்காளி

நேற்று சாயந்திரம் மார்கெட் போயிருந்தேன். எல்லா காய்களுமே பயங்கர விலை. ஒரு கிலோ கேரட் 48 ரூபாய். விலையைவிட இன்னொரு பெரிய ஷாக் யாருமே கால் கிலோ போட மறுத்தது தான். மினிமம் அரை கிலோ தான் கொடுப்பார்களாம். வீட்டில் இருப்பது ரெண்டு பேர் தான். ஜுனியரை இன்னும் தனி டிக்கெட்டாக கணக்கில் எடுத்துக்கொள்ளவில்லை. அவர்கள் கூறு கட்டி வைத்திருக்கும் காய்களைத்தான் எடுத்துக்கொள்ள வேண்டுமாம். ஓரு சின்ன எவர்சில்வர் தட்டில் அவர்கள் வைத்திருக்கும் காய்களில் பாதிக்கு மேல் அழுகல். தக்காளி கிலோ 32 ரூபாய். கால் கிலோ கேட்டதுக்கு முதலில் மறுத்த அவர் பின்னர் எண்ணி 5 பச்சை காய்களை நிறுத்தினார். நானே எடுத்துக்குறேன் என்ற போது வாங்கறது கால் கிலோ இதுல நீயே(ஒருமையில் தான் அழைத்தார்) எடுக்கனுமா. சரிதான் போ என்றார். எரிச்சலுடன் அங்கிருந்து நகர்ந்தேன். கறிவேப்பிலை கூட 2 ரூபாய்க்கு குறைஞ்சு கிடையாது. நேரே ஹெரிடேஜ் குரூப்பின் fresh @ ஸ்டோர்க்கு போய்விட்டேன். அங்கு வெறும் நூறு கிராம் கேரட் கூட எடை போட்டுக் கொடுத்தார்கள். விலையும் ரொம்ப ஜாஸ்தி இல்லை. 30 பைசா தான் அதிகம்.

மார்க்கெட்டில் மலிவாக இருக்கும் என்றுதான் அங்கு செல்கிறோம். ஆனால் நான் தருவதைத்தான் வாங்க வேண்டும் என்று அடாவடி பண்ணுவது எந்த விதத்தில் நியாயம். தேவைக்கு அதிகமாக வாங்கி வைத்து மின்சாரமும் இல்லாமல் குப்பையிலா கொட்டுவது. இப்படி கஸ்டமரை நடத்த வேண்டியது அப்புறம் ரிலையன்ஸ்காரன் வயிற்றில் அடிக்கிறான் என புலம்பி என்ன பிரயோஜனம். பூனைக்கு மணி கட்டப் போவது யார்?

October 13, 2008

என்ன கொடுமை சார் இது - II

ஜுனியர்க்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன். மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் சேலையூர் போகணும்.

டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!

October 7, 2008

Annapoorani - Banglore

Last week I went to Banglore. This is my third visit to Banglore. First time during college period for an industrial visit. Second visit happened last year during the christmas holidays. My sister-in-law is there in C.V.Raman Nagar.

We went to the Annapoorani restaurant in Ulsoor. This is a restaurant run by the Mouli's group. They serve pure authentic south indian vegetarian food. The food was awesome. They serve karnataka rotis like akki roti, jolwar roti. Adais like thanjavur adai, thanjavur onion adai, murungai keerai(drumstick leaves) adai are simply delicious. You also get yummy bisibelabath, lemon and coconut sevais. The morekali and rice uppma are the must try ones. The morekali was too good. I had akki roti with brinjal pulikootu. They also have special weekend lunches with exotic menu. In weekend u have to wait for a long time to find a table. Still the food makes u to do that.

Location : Cambridge Road, Ulsoor (Near Sai Baba Temple)

Type : Authentic South Indian - Vegetarian

Cost : Meal for two will cost around 200.

Must try : Morekali, akki roti, rice uppma and adais.