December 31, 2009

திரும்பி(யும்) பார்க்கிறேன்

பல காரணங்களால் 2009ஆம் வருடம் மறக்க முடியாத ஆண்டுகளில் ஒன்றாக அமைந்துவிட்டது. பொறுமை, மனிதர்களைப் புரிந்து கொள்ளும் திறன் என நிறைய நல்ல விஷயங்களை பழக ஆரம்பித்திருக்கிறேன். ஆகஸ்ட் மாதம் தொடங்கிய அலைச்சல் சென்ற மாதம் தான் ஒரு நிலைக்கு வந்தது. வீடு மாற்றல், மாமனாரின் ஆஸ்பத்திரி வாசம், ஜூனியர் உடல்நிலை, அம்மாவின் உடல்நிலை, அப்பப்போ எனக்கு என மருத்துவ ரீதியாக நிறைய அலைச்சல்கள். எல்லாவற்றிர்கும் பழகிவிட்டது. முக்கியமாக ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து இப்போது நிறைய வார்த்தைகள் பேசுவது மகிழ்ச்சியாக இருக்கிறது. கூட்டி கழித்து பார்த்தால் 2009 நிறைய மகிழ்வான விஷயங்களையும், பொறுப்புகளை நேர்த்தியாக கையாளும் திறனையும் கொடுத்திருக்கிறது.
*********

இந்த முறை நானும் தேர்தலில் போட்டியிடுகிறேன். நகைச்சுவை பிரிவில் கேப்டனின் காவியத்தை சேர்த்துவிட்டுள்ளேன். கொஞ்சம் பார்த்து பண்ணுங்க சாமீங்களா.
*********

நேற்றிலிருந்து 33வது புத்தக கண்காட்சி செயிண்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது. இந்த வாரயிறுதிக்குள் செல்லும் திட்டமிருக்கிறது. எல்லாம் நல்லபடியாக நடந்தால் சில புத்தகங்களை வாங்கும் அதிர்ஷ்டம் கிட்டும். ஆண்டவன் அருள் புரிவாராக. இது வாங்குங்கள் என பரிந்துரைக்கும் அளவிற்கு இல்லை என் வாசிப்பு. ஆனால் நிதானமாக புரட்டிப் பார்த்து, தேவையெனில் வாங்குக.
*********

2010 ஆம் ஆண்டில் ஜனவரி மாதத்திற்கான என் ஷெட்யூல் உறவுகளாலும், நண்பர்களாலும் வடிவமைக்கப்பட்டுவிட்டது. புத்தக கண்காட்சி, பொங்கல் கொண்டாட்டம், தோழியின் திருமணத்திற்காக வெளியூர் பயணம் என நான் ரொம்ப பிஸி:) ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறேன் அடுத்த ஆண்டை. புத்தாண்டு சபதம் எடுக்கும் பழக்கம் இல்லை. எடுத்தாலும் முழுசாக நிறைவேற்றுவேனா என தெரியாது. பேஸிக்கலி ஐ'ம் அ சோம்பேறி. ஆனால் சென்ற ஆண்டு சில இலக்குகளை இலக்குகள் என தெரியாமல் அடைந்தது ஆனந்தமாக இருந்தது. இந்தாண்டும் அதுவா அமையுதான்னு பார்ப்போம்.
***********

உங்களனைவருக்கும் என் மனமார்ந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள். கடந்த வருடத்தின் அழகான நினைவுகளை மட்டும் எடுத்துக்கொண்டு வலிகளை அங்கயே விட்டுவிட்டு, புது வருடத்தை புத்துணர்ச்சியுடன் ஆரம்பியுங்கள். வாழ்க்கை வாழ்வதற்கே. தொடர் ஆதரவிற்கு நன்றி.

December 28, 2009

ராஜா ராஜா தான்

மற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந்த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.

குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.

அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.

சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.





"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது
"

பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.

அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு






"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
"

மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்

"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.

December 23, 2009

எஸ்.டி.டீன்னா...

தோழி விக்னேஷ்வரி நம்மளையும் ரவுடியா மதிச்சு ஒரு தொடர்பதிவுக்கு கூப்டனுப்பிருக்காங்க. எவ்வளவோ பணிசுமைகளுக்கு மத்தியிலே (சரி சரி) கிடைச்ச நேரத்த பயன்படுத்தி நான் எப்படி எழுத வந்தேன் (ஏன் எழுத வந்தேன் நீங்க நறநறக்கறது கேக்குது) அப்படிங்கற எஸ்.டி.டீயை விளக்குறேன் (பாத்திரம் மாதிரி கடையையும் பளிச்சுன்னு காலியா வெச்சிருக்காதீங்கப்பா).

ஆக்சுவலா இந்த மேட்டர் தான் என்னோட முதல் பதிவா எழுதியிருந்தேன் (என்னா ஒரு தொலைநோக்கு பார்வை). டெலிவரிக்காக அம்மா வீட்டிற்கு வந்திருந்தபோது தம்பி அறிமுகப்படுத்தியது தான் இந்த பதிவுலகம். ரொம்ப நாளைக்கு சும்மா படிச்சிகிட்டேயிருந்த என்னை நீயும் ஒன்னு ஆரம்பிச்சு எழுதுன்னு சொன்னதே அவன் தான். பதிவு தொடங்கினவுடனே என்னையும் ஆட்டத்துல சேர்த்துக்கோங்கன்னு தமிழ்மணத்துல கேட்டேன். ச்சீப் போன்னு தொறத்திவிட்டுட்டாங்க. அப்புறம் கொஞ்ச நாள் கழிச்சு திரும்பவும் கேட்டபோது 25 பதிவு எழுதியிருந்தேன். தமிழ்மணத்துல சேர்ந்ததுக்கப்புறம், நம்மளையும் எழுத்தாளர்ன்னு (இதப் பார்றா) மதிச்சு கொஞ்சம் பேர் ரெகுலரா ஊக்கமளிக்கிறாங்க. இதுக்கு நடுவுல வரலாற்றுல பொன்னெழுத்தூகளால் பொறிக்கப்பட வேண்டிய சம்பவம் நடந்தது. என் தீவிர பற்றின் காரணமாய் சங்கத்தில் கொ.ப.செ பதவி கொடுத்து கவுரவித்தார்கள் போர்படை தளபதியும், பொருளாளரும். இந்த மூன்றரை வருஷத்துலா 113 followers (நான் கிழிக்கறதுக்கு இது பெரிய விஷயம்). அதே மாதிரி அதிகப்படியா ஒரு பதிவுக்கு 168 கமெண்ட் வந்தது (என்னாது கும்மியலாம் கணக்குல வராதா?). சக பதிவர்களான ச்சின்னப்பையன், நர்சிம் மற்றும் அ.மு.செய்யது ஆகியோரு என்னோட சில பதிவுகளை நல்லாருக்குன்னு சொல்லி வலைச்சரத்துல அறிமுகப்படுத்தியிருக்காங்க. ஓரே ஒரு பதிவு (எனக்குத் தெரிஞ்சு) யூத் விகடன்ல வந்திருக்கு. அப்புறம் மூணு பதிவு தமிழ்மணம் வாசகர் பரிந்துரைல வந்திருக்கு (ஸப்பா கேப்டன் ரேஞ்சுக்கு புள்ளிவிவரம் கொடுத்தாச்சு).

இதுவரைக்கும் உருப்படியா ஒன்னும் எழுதலன்னாலும் (அதுக்கு தான் நிறைய பேர் இருக்காங்களே. நானும் அப்படியே ஆரம்பிச்சுட்டா மொக்கை யார் போடறது) still i enjoy scribbling (அப்பாடி பிளாக் பேர் வர்ற மாதிரி பார்த்துகிட்டாச்சு). இது மட்டும் தான் எழுதனும்ன்னு ஒரு எல்லை இல்லாம, நான் கேட்ட, பார்த்த, என்னை பாதித்த, எனக்குப் பிடித்த, எனக்கு தோன்றிய அனைத்தையும் பகிர்ந்துகொள்ள நல்லதொரு இடமா இது இருக்கு. அடுத்த வருஷத்தோட நான்கு வருடங்களாகிறது பதிவெழுத வந்து. இன்னதான்னு இல்லாம எல்லா விஷயங்களையும் அலசி காயப்போடுகிற பதிவுலகம் நிறைய சுவாரசியங்களை எனக்கு கொடுத்துகிட்டே இருக்கு.

உங்களோடு ஆதரவும் தொடரும்கிற நம்பிக்கையோடு...

December 21, 2009

Avatar

நீண்ட நாட்களுக்குப் பிறகு முதல் முறையாக ரீலிசான இரண்டாவது நாளே ஒரு படத்தைப் பார்க்கிறேன். இரண்டாவது நீண்ண்ண்ட நாட்களுக்குப் பிறகு அண்ணாக்களுடன் பார்த்த படம். சரி சொந்த கதை போதும். படத்துக்குப் போவோம். பயங்கர எதிர்பார்ப்புடன் போன படம். கேமரூன் ஏமாற்றவில்லை. ஆவென வாய்பிளந்து பார்க்கும் வகையில் விஷுவலைஸ் பண்ணியிருக்கிறார். அல்டிமேட் கிராபிக்ஸ்.

கதை?? எனக்கென்னவோ கேமரூன் நிறைய தமிழ்படங்கள் பார்த்திருப்பார் எனத் தோன்றுகிறது. சத்தியமாக டெக்னிகல் மேட்டரும், பிரமாண்டமும், வசனங்களும் தான் (இதைக் கூட சேர்த்துக்க முடியாது. கௌதம் மேனன் படத்தில் கூட இங்கிலிபீஸ் டயலாக் ஜாஸ்தி)ஆங்கில படம் பார்க்கிறோம் என்ற உணர்வைத் தருகிறது. முழுக்க ழுழுக்க ஒரு பக்கா தமிழ் மசாலா படம். பண்டோரா என்ற ஒரு கிரகம்/நிலவில் இருக்கும் அபரிதமான வளத்தை எடுக்க போகிறது வில்லன் & கோ. அதில் போரில் இடுப்பின் கீழ் செயலிழந்த ஹீரோவும் அடக்கம். மேற்படி மேட்டரை எடுக்கத் தடையாக இருக்கிறார்கள் அந்தக் காட்டின் பூர்வகுடிகளான நவி பழங்குடியினர். நீல வண்ணத்தில் அண்ணாந்து பார்க்கும் உசரத்தில் கூர்மையான காதுகள், மின்னும் கண்கள், நீண்ட ஜடை (Bonding பண்ண என்ற லாஜிக்) என மனிதர்களும், டைனோசருடன் கிராஸ் செய்த மாதிரி இருக்கும் யானை (யானைதானே??), சிங்கம், பறவைகள் என சூப்பர் கிராபிக்ஸ். டி.என்.ஏ மாற்றம் & சயின்ஸ் தில்லாலங்கடி வேலைகள் மூலம் ஹீரோ நவியாக மாற்றப்பட்டு காட்டினுள் விடப்படுகிறார்.அவனுக்கு இடப்படும் கட்டளை உள்ளார புகுந்து ஊட்டை கலைக்க வேண்டிய வேலை. சிங்கம்/புலி/ஓநாய்/ ஏதோ ஒரு எழவு மிருகத்திடமிருந்து ஹீரோவை காப்பாற்றுகிறார் நாட்டாமையின் பெண். அப்பாலிக்கா ரெண்டு பேருக்கும் லவ்ஸ். ஹீரோ கொஞ்சம் கொஞ்சமா மனசு மாறி நவிக்களைக் காப்பாற்ற நினைக்க அதற்கு வில்லன் கும்பல் தடைபோட, சயிண்டிஸ்ட் மற்றும் நவிக்களின் உதவியுடன் ஹீரோ வில்லன்களை அழிக்கிறார். எப்படி? நீங்களே பார்த்துக்கங்ப்பா.



என் உச்சி மண்டைல கிர்ர்ருங்குது மாதிரி நாலு பாட்டு மட்டும் தான் சேர்க்கல. மத்தபடி ஒரு டிபிக்கல் விஜய் மூவி. இன்பாஃக்ட் விஜய் நடிச்சிருக்க வேண்டிய படம். ரணகளத்திலயும் கிஸ்ஸடிக்கிற கிளுகிளுப்பாகட்டும், மேலேஏஏருந்து அருவில ஜம்ப் செய்யறதாகட்டும், ப்ளேனிலிருந்து பறவை/டிராகன் மேல லேண்ட் ஆகறது (குருவில அந்த ட்ரெய்ன் ஜம்ப் சீன் இன்னும் என் கண்ணுலயே நிக்குது) என விஜய்க்கான அத்தனை அம்சங்களும் படத்தில். மேக்கப் செலவும் மிச்சமாயிருக்கும். ப்ச். டாக்டர். ஒண்டிப்புலி மிஸ் பண்ணிட்டார். கிளைமேக்ஸில் விலங்குகள் வந்து சண்டை போடும்போது கேமரூன் ராமநாராயணன் கிட்ட அசிஸ்டெண்ட வேலை பார்த்தாரோன்னு ஒரு சந்தேகம் வந்திடுச்சு. ஆனாலும் காட்டில் அந்த தாவரங்களும், அந்த சேக்ரட் மரமும் சிம்ப்ளி வாவ். இரண்டே முக்கால் மணிநேரம் அட்டகாசமான டெக்னிகல் விருந்து. கேமரூனின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலிம் தெரிகிறது.

அவதார் - டெக்னிகல் விஸ்வரூபம்

December 17, 2009

இயந்திரமாய் நட

இரண்டு இரண்டு படிக்கட்டுகளாக தாண்டி கீழே இறங்கும் உற்சாகம்
பால் போடும் பையனின் குட்மார்னிங்
மெல்லிய ஈரத்துடனான தார் ரோடுகள்
தலைக்கு மேலே தொட்டு விடும் தூரத்தில் மினி மேகக்கூட்டமாய் பனிமூட்டம்
மூக்கின் நுனியை அடிக்கடி நீவச் செய்யும் குளிர்
மூங்கில் கழிகளில் கட்டப்பட்ட தென்னந்துடப்பத்தின் இடுக்குகளில் சிக்கிய சருகுகளின் சங்கீதம்
பளிச்செனப் பெருக்கிய கான்க்ரீட் தரையில் வரையப்படும் மெருகு குறையா கோலங்கள்
இன்னமும் சர்வீசில் இருப்பதாய் நினைக்க வைக்கும் ரிடையர்ட் தாத்தாக்களின் கைவீச்சுகள்
காலை டிபன், மதிய லஞ்ச் மெனுக்களினூடே மாமியார் பாட்டு பாட்டும் ஆபிஸ் ஆண்டிகள்
காதிலும் கழுத்திலும் ஆப்பிள் தொங்கவிட்டுக்கொண்டும் ஓடும் யுவதிகள்
அவர்கள் பின்னே ஓட்டமும் நடையுமாக ஜிடிபி பேசும் அரை டிராயர் அங்கிள்கள்
கறிவேப்பிலை தோரணம் கட்டி,
உருளை மூட்டையில் ஊர்வலம் போகும் காய்கறி மாப்பிள்ளைகள்
மணக்க மணக்க சந்தனமும்
பட்டை பட்டையாய் விபூதியும் தீட்டி சவாரிக்கு தயாராகும் ஆட்டோக்காரர்கள்
ஆவி பறக்கும் டீயை சுழற்றி சுழற்றிக் குடிக்கும் தினக்கூலிகள்
ஆராவாரமில்லாத ரோட்டின் நடுவே தைரியமாய் வண்டி ஓட்டிப் பழகும் இளம்பெண்
மாடர்ன் ஆர்டாய் தோன்றும் வியர்வை நனைத்த சட்டை
இடமிருந்து வலமாக சரக்கென்று இழுத்து நெற்றி வியர்வையை உதறும் விரல்கள்
ஒவ்வொருவர் கடக்கும் போதும் கரையும் ஒற்றை வேப்பமரத்துக் காகம்
இவை யாவுமே காணக் கிடைப்பதில்லை
ஏசி அறையில் நின்ற இடத்திலிருந்தே
5 கி.மீ நடக்கும் இயந்திர மனிதர்களுக்கு...

December 15, 2009

தெலுங்கானா... ஆனா??

தெலுங்கானா என தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு இசைந்தது என்ற செய்தி வெளியானவுடன், கூர்க்காலேண்ட் என ஒரு கோஷமும், காரைக்கால் என ஒரு கோஷமும், கூர்க் என கர்நாடகாவிலிருந்து குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் உச்சமாக உ.பி மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று வீட்டில் நடந்த விவாதங்களின் விளைவே இப்பதிவு.

ஆந்திராவை விட்டு தெலுங்கானாவை பிரிப்பது அவசியமா எனக் கேட்டால் இல்லை என்பதே என் கருத்தாகும். முதலில் இம்மாதிரி மாநிலங்களை பிரிப்பதால் நிர்வாக செலவு கூடுதலாகும். முதலமைச்சர் முதற்கொண்டு முனிசிபாலிட்டி ஆபிசர் வரை சம்பளம், இத்யாதி இத்யாதி. மத்திய அரசு துறைகளின் பணிச்சுமை கூடுதலாகும் (இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க). மாநில வாரியான இடஒதுக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் என பல பிரச்சனைகள் எழும். இதை விட அதிமுக்கியமானது. ஒரு பிள்ளை அழுதால் சுத்தியுள்ள அத்தனையும் அழும். அது மாதிரி ஆளாளுக்கு கூவினால்? தமிழ்நாடு தனி நாடாகலாம் (பெரிய குடும்பமெனில் கண்டிப்பாக ஜனாதிபதி பதவி உண்டு. பெரியவர் பதவியில்லாமல் கஷ்டப்படுவார்). வடக்கு தெற்கு என இரு மாநிலங்களாய் பிரிக்கப்படலாம். இரு பிள்ளைகளோ, உடன்பிறவா சகோதரிகளோ, தந்தையும் மகனுமோ ஆளுக்கொரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகலாம். நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. இப்படி மொழி/ஜாதி/ வாரியாக பிரிக்கும்போது, மக்களிடையே மேன்மேலும் துவேஷம் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மும்பை மராத்தியர்களுக்கே என்ற பிரச்சனைப் போல் தெலுங்கானாவில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றால்? (சந்திரசேகர் ராவ் இப்பொழுதே ஹைதராபாத்தை விட்டுத் தர மாட்டோம் என்கிறார். வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி மூக்கு விடைப்பா இருக்கறதால இப்படியெல்லாம் பண்றாரோ??!!). இம்மாதிரியே வெளியாட்களை தடுத்தால், பெருகிவரும் ஜனத்தொகையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறையாதா? எத்தனை நாளுக்குத் தான் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்?

சரி பிரிக்கவேயில்லையென்றாலும் அதே குண்டு சட்டி தானே? பீஹாரிலிருந்து 2000ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது ஜார்கண்ட். பிரிக்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பழங்குடி மக்களின் முன்னேற்றம். அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென்பதே. மற்றொன்று அபரிதமான கனிம வளங்களை (இந்தியாவில் கனிம வள உற்பத்தியில் முண்ணனி வகிக்கும் மாநிலமிது) பெற்ற இப்பகுதியை பிரிப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு அம்மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதாலும். அதற்கேற்றார் போல் 2000 ஆம் ஆண்டிலிருந்து அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது (தகவல் - http://www.ibef.org). ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அல்ல என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மதுகோடா (4000 கோடி. சொக்கா சொக்கா எத்தனி சைபர். ஹூம்ம்ம்ம்), சிபு சோரன் என மோசமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியும் ஒரளவுக்குத் தடுமாறி முன்னேறியிருப்பதற்கான ஒரே காரணம் இயற்கை வளங்கள். இந்த வளர்ச்சி தெலுங்கானாவில் சாத்தியப்படாதா எனக் கேட்டால் கஷ்டம் தான் என்பது என் எண்ணம். ஏற்கனவே ஓரளவுக்கு முன்னேறிய இடத்தில் இண்வெஸ்ட் பண்ணும்போது ரிடர்ன்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கும் தானே. நம் நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட இண்வெஸ்ட்மெண்டுகள் கொஞ்சம் தேவையில்லாதது தானே?

பிரிக்காமலே/கண்டுக்கொள்ளாமலே இருந்தால் வளர்ச்சி என்னாகும்? அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நாங்கள் சவலைப் பிள்ளை போலாகி வருகிறோம் என புலம்பல்கள். சவலைப் பிள்ளைகளை ஆரோக்கியமாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தங்கள். ஏன் என யாரேனும் யோசிக்கிறார்களா? திறமைசாலிகளை வெளியிலிருந்து வரவழைக்க காரணம் உள்ளூர்வாசிகளுக்கு மேல் மாடியில் சரக்கு பத்தவில்லை என்பது தானே. அனைவருக்கும் அடிப்படைத் தேவையான கல்வியை பாகுபாடில்லாமல் வழங்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முடியும். தனித் தெலுங்கானா கேட்டு போராடுபவர்கள் எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். புறக்கணிப்பிற்கு முக்கிய/அடிப்படை காரணமான போதிய கல்வி அறிவு இல்லாததற்கு என்ன செய்ய போகிறார்கள். போராடுபவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் பள்ளி/கல்லூரிகளில் எங்களுக்கு முன்னுரிமை (தகுதி அடிப்படையில் மட்டுமே) வழங்க வேண்டும் என போராடினால் ஒரு நியாயம் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை கல்வி கொடுப்பதில் காட்டத் தவறிவிட்டார்கள் (மிகச் சிலரே என்றாலும் தாக்கம் பெரிது). நாமும் அத்தவறை செய்யாமலிருப்போம். சரியான கல்வி மட்டுமே மக்களையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும்.

டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே.

December 10, 2009

ராமராஜனின் ஹிப் ஹாப்

டான் பிரவுனின் ஐந்தாவது படைப்பான தி லாஸ்ட் சிம்பலைப் பற்றி. முதல் நான்கு படைப்புகளும் சூப்பர் ஹிட். ட்ரெய்னிங் நாட்களில் கீபோர்ட் வைக்குமிடத்தில் டாவின்சி கோடை சிலாகித்துப் படித்த நாட்கள் நினைவிருக்கிறது. இப்போது இருக்கும் சூழ்நிலையில் I hardly find time to breath:( ஏழு பாகம் முடித்துவிட்டதாய் புக்மார்க் சொருகியிருந்த புத்தகத்தை அம்மா வீட்டில் பார்த்ததும் படிக்கணும்னு ஒரு ஆர்வம். ஆனால் மரண மொக்கை என்று நண்பர்கள் கூறியதால் படிக்கனும் என்ற ரிசர்வ்டு லிஸ்டில் இருந்து தூக்கிவிட்டேன். சென்ற மாதம் போயிருந்தபோது வேலை அதிகமாக இருப்பதால் படிக்க டைமில்லை. நீ வேணும்னா எடுத்துகிட்டுப் போ என தம்பி சொன்னதும் லவட்டிகிட்டு வந்துட்டேன்.

ஐந்து வருடத்தின் உழைப்பை ஒரே புத்தகத்தில், 500 பக்கங்களில் அடக்க முயன்றிருக்கிறார் பிரவுன். முடிவு எ லாங் ஹாவ்வ்வ்வ்வ்வ்வ். தன் மெண்டரான பீட்டர் சாலமனை கடத்திய நபர் மூலம் தந்திரமாக வாஷிங்டன் வரவழைக்கப்படுகிறார் ராபர்ட் லாங்டன். வில்லனின் கோரிக்கை என்ன? ராபர்ட்டிடம் என்ன எதிர்பார்க்கிறார்? ராபர்ட் பீட்டரை மீட்டாரா? இதுதான் கதை. ஒரு இரவில் நடக்கும் கதையை எவ்வளவு விறுவிறுப்பாக சொல்லிருக்கவேண்டும். ஊஹூம். லாங்டனின் தொழிலான டீச்சர் வேலையை ஆசிரியரும் செய்கிறார். புத்தகம் முழுவதும். மேசன்ஸ் ஆரம்பித்து, பழங்கால மேனுஸ்க்ரிப்ட்ஸ் வரை லெக்சர். செம போர். அதோடில்லாமல் ஒவ்வொரு கேரக்டரின் லென்த்தியான அறிமுகம் ரொம்பவே போரடிக்கிறது.

தமிழ் படங்களைப் போலவே ரெண்டு மூணு கிளைமேக்ஸ். எனக்கு ஏற்பட்ட ஒரே சுவாரசியம் மல்லாஹ் பற்றின திருப்பம் தான். அதே போல் கேத்தரினின் சில ஆய்வுகள் இண்டரெஸ்டிங். ஏஞ்சல்ஸ் & டீமன்ஸில் கோஹ்லரை வில்லன் போலவே காட்டுவது மாதிரியே இதில் CIA Head சாட்டோவை காட்டுகிறார். இந்த எக்ஸ்ட்ரா பில்டப்பே இவங்க அவுங்க இல்லன்னு கிளியரா சொல்லிடுது.

பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம் பிரவுன்.
*****

2 ஸ்டேட்ஸ். சேத்தன் பகத்தின் லேட்டஸ்ட் படைப்பு. பகத்துக்கு சிம்பிள் கதைகளை சுவாரசியமாய் சொல்லும் திறமை நன்றாகவே இருக்கிறது. பஞ்சாப் பையன். தமிழ் பெண். காதல். கல்யாணம் வரை கொண்டுபோக படும் பாடு. இதுதான் கதை. தமிழர்களை நன்றாக வாரியிருக்கிறார். ரொம்ப போரடிக்கும்போது படிக்கலாம். அங்கங்கே ஹார்ட்டி லாப்ஸ் உண்டு. முக்கியமாக கடைசி சில பக்கங்கள் சிரிப்பை வரவழைக்கின்றன. ஒரு தடவை ட்ரை பண்ணலாம்.
*********

ஜூனியருக்கு ப்ரீ.கேஜி அட்மிஷன் பார்ம் கொடுக்க சென்றிருந்தேன். அவனின் பிறப்புச் சான்றிதழை சரிப்பார்த்த அந்தம்மா "மேடம் உங்க பேர்ல இருக்கிற சந்திரசேகரனை அடிச்சிடுங்க" என்றார். ஞே என நான் முழிக்க குழந்தையின் பிறப்புச் சான்றிதழில் என் பெயர் வித்யா என்று இருக்காம். அதனால் வித்யா சந்திரசேகரன் என அப்பா பெயர் சேர்த்து எழுதக்கூடாதாம். வேற எந்த இடமாக இருந்தாலும் சொன்னவர்களை கொஞ்சம் காச்சியிருப்பேன். இங்கு குழந்தை என்றானதால் காம்ப்ரமைஸ் செய்யவேண்டியதை நினைத்து நொந்து போனேன். ஹூம். அதோடில்லாமல் "அட்மிஷன் கிடைக்கும் பட்சத்தில் பர்த் சர்ட்டிபிகேட்டை ஆங்கிலத்தில் மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தமிழில் இருப்பதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்" என்றார். தமிழுக்கும் அமுதென்று பேர்...
**********

ஐ - பாட்

கிராமத்து ராசா டக்கராக டான்ஸ் ஆடும் பாட்டு. இளையராஜாவின் வாய்சில் அந்த ட்ரம்சும் கீபோர்டும் போட்டி போட்டுக் கொண்டு பீட்ஸ் கொடுக்கும். காலேஜில் ஜூனியர்ஸ்க்கு பிரஷெர்ஸ் பார்ட்டி கொடுத்தபோது ஒரு ஜூனியர் (ஆந்திரா) பையனை இந்தப் பாட்டுக்கு ஹிப் ஹாப் ஆடச் சொன்னோம். சூப்பராக ஆடினான். அதோடில்லாமல் "அக்கா செம பீட்ஸ் அக்கா ஈ சாங்கு" என்றான். தமிழ் மக்கள் அனைவரும் மட்டும் அடக்க மாட்டாமல் சிரித்துக் கொண்டிருந்தோம். எங்கள் நண்பர்களுக்கும் நாங்கள் ஏன் சிரிக்கிறோம் என தெரியவில்லை. பின்னர் அனைவருக்கும் இந்த வீடியோவை காட்டியபின் புரிந்தது.

"ஹே அந்த ஜூனியருக்கும் இந்த வீடியோவை காட்டலாமா"
"வேண்டாம். கண்டிப்பா செத்துடுவான்".

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே




டிஸ்கி : வீடியோ பார்த்து கண்ணவிஞ்சா கம்பேனி பொறுப்பேற்காது
**********

வேட்டைக்காரன் ட்ரெய்லரை அடிக்கடி காட்டுகிறது சன் டிவி. எப்படியும் கதை பற்றியோ, நடிப்பு பற்றியோ விஜய் கவலைப்படபோவதில்லை. நம்மளும் அவரை குறை சொல்வதை நிறுத்தப் போவதில்லை. இப்போது விஜய்க்கு ரொம்ப முக்கியமாய் தேவைப்படுவது ஒரு நல்ல காஸ்ட்யூம் டிசைனர். திருமலை தொடங்கி வேட்டைக்காரன் வரை கட் பனியனும், பட்டன் போடாமல் திறந்த சட்டையுமாய் அலைகிறார். இல்லன்னா கண்றாவியாய் சூட். முடியலடா சாமீ. சார் அட்லீஸ்ட் இதையாவது கொஞ்சம் மாத்துங்க சார். பாட்டுகளை இப்பதான் கேட்கிறேன். டூ லேட் என்பது தெரியும். என்னோட பேவரைட் என் உச்சி மண்டைல, புலி உறுமுது, (இவை ரெண்டும் இப்போது ஜூனியரின் ஹிட் லிஸ்டில் டாப்) கரிகாலன் காலை. விஜய் ஆண்டனி கலக்கியிருக்கார். விஜய்யும் பிச்சி உதறுவார் என நம்புவோம்.
**************

டாமினோஸ் பிஸ்ஸாவில் புதியதாய் சாக்கோ லாவா கேக் என ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். டக்கராய் இருக்கிறது. சூடான சாக்லேட் கேக் உள்ளே லிக்விட் சாக்லேட் ஸ்டப்பிங். ஒவ்வொரு பைட்டும் டிவைன். ஆனால் பாதிக்கு மேல் சாப்பிட முடியவில்லை. திகட்டுகிறது. ஒன் பை டூவாக சாப்பிடலாம். 40 ரூபாய்க்கு வொர்த் எ ட்ரை:)

December 8, 2009

நான் மேகா...

அடையாறின் இருதயப் பகுதியில் ஒரு பிரம்மாண்டமான பங்களா, கம்பெனியின் 60% பங்குகள் என் பெயரில், எத்தனை கோடிகள் எனத் தெரியாத பேங்க் பேலன்ஸ், வைரம் பிரதானமாய் தங்கம் நிறைய என எக்கச்சக்கமான நகைகள், பொழுதுக்கு ஒரு கார், கட்டற்ற சுதந்திரம். இவையெல்லாம் வாய்க்கப்பெற்ற இருபத்தியோரு வயது பெண்ணுக்கு கவலை ஏதேனும் இருப்பது சாத்தியமா? என் விஷயத்தில் சாத்தியமாகிறது. மேற்கொண்டு என் கவலைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன் என்னைப் பற்றி கொஞ்சம் இல்லை கொஞ்சம் நிறைய தெரிந்துகொள்ளுங்கள்.

நான் மேகா...

இரண்டு வாரங்களுக்கு முன் நான் மேகா. என் பிறப்பைப் பற்றி அறிந்திடாத மேகா.

எக்கச்சக்கமாய் வெளிநாட்டு நன்கொடைகளைப் பார்க்கும் ஒரு தொண்டு நிறுவனத்தில் தான் நான் வளர்ந்தேன். அல்லது வளர்க்கப்பட்டேன். நான் அங்கு எப்படி வந்தேன், யார் கொண்டு வந்து போட்டார்கள், என்ன வயதில் அங்கு சேர்ந்தேன் என எந்த ரெக்கார்டும் இல்லை. ஐந்து வயதிலேயே எனக்கு வாயும், அறிவும் ஜாஸ்தி என ஹோம் சிஸ்டர் திட்டுவதை கேட்டு வளர்ந்தேன். கைகளில் கிழிந்த பஃப் வைத்த சட்டை. என்னுடனே மேல்நோக்கி வளரும் பாவாடை, யாராவது பிறந்தநாள் என வந்தால் அவரை வாழ்த்திப் பாடிவிட்டு, அவர் போடப்போகும் சோற்றிற்காக கண் விரிந்து, வாய் பிளந்து காத்திருப்பது, தீபாவளியன்று அபூர்வமாய் கிடைக்கப் பெறும் மத்தாப்பு சீக்கிரமே எரிந்துவிடக் கூடாது என கவலைப்பட்டுக்கொண்டு வாழும் வாழ்க்கை எனக்கு அறவே பிடிக்கவில்லை.

நான் எதிர்பார்த்த மாதிரியே எனக்கு அந்த சிறையிலிருந்து விடுதலை கிருஷ்ணன்-ராதா தம்பதியினர் மூலம் கிடைத்தது. அதாவது நான் அப்பா அம்மா என அழைக்கவேண்டிய, அதற்கு அஃபிஷியலாய் தகுதிப் பெற்றவர்கள். சுருக்கமாய் என்னை தத்தெடுத்தவர்கள். மேகா என பெயர் சூட்டியவர்கள். அதுவரை குட்டியாக இருந்த நான் மேகாவாக அவதரித்தேன். அவர்களின் அதீத அன்பினால் நான் ஹோம் வாழ்க்கையை முற்றிலுமாக மறந்து தேவலோக வாழ்க்கையை வாழ ஆரம்பித்தேன். இருந்தாலும் ஒரு ஓரத்தில் இந்த வாழ்க்கை எப்போது வேண்டுமானாலும் கை நழுவலாம் என்பதால் படிப்பில் ரொம்பவே கான்சண்ட்ரேட் செய்தேன். இதோ பைனல் இயர் MBA. இன்னும் இரண்டு மாதங்களில் தலையில் வைத்திருக்கும் தொப்பியை தூக்கிப்போடுவது போல் போட்டோ எடுத்துக்கொள்ளலாம். முடிந்ததும் கம்பெனியில் ட்ரெய்னிங். பின்னர் போர்ட் கூடி முடிசூடல் என கிருஷ் சத்தியம் பண்ணிருக்கார்.

கிருஷ் அப்படித்தான் அப்பாவை கூப்பிடுகிறேன். இவர்களிடம் வந்து சேர்ந்த 13 வருடங்களில் என் வேர்களைத் தேடியலையும் வாய்ப்பை எனக்குத் தரவில்லை. என் பேச்சு தான் வேதம். என் விருப்பங்களை நிறைவேற்றுவதற்காகவே பிறவியெடுத்திருப்பதாய் நடந்துகொள்ளும் கிருஷ். மகள் என்றில்லாமல் ஒரு தோழியைப் போல நடத்துபவர். வெரி இண்டலிஜண்ட். வெரி வெரி பிராக்டிகல். அவரைப் பார்த்து வளர்ந்த நானும் அப்படியே. நான் செத்துப்போ என்றால் மறுகணம் செய்யத் தயாராய் இருக்கும் ராதா. இந்த அம்மாக்கள் அல்லது முக்கால்வாசி பெண்கள் ஏன் இப்படியிருக்கிறார்கள் என எனக்குப் பிடிபடவில்லை. முணுக்கென்றால் ஒப்பாரி. இன்னதுக்குத்தானென்றில்லை. ஆவுன்னா பெண்ணின் வலி என ஆரம்பித்து நீளும் சலிப்பேற்றும் ஓப்பாரி. வுமன்ஹுட்டை செலிபிரேட் செய்யத் தெரியாதவர்கள். ஆண்கள் நம் வலியை உணரவேண்டும் என எப்படி ஏதிர்பார்க்கிறார்கள் எனத் தெரியவில்லை. சயின்ஸ். ஆண்களால் பிள்ளைப் பெற முடியுமென்றால் பெற்றுவிட்டு போகிறார்கள். முடியாது. நம்மால் எப்படி ஆண்களின் பிரச்சனையை அணுக முடியாதோ அதேபோல் அவர்களால் பெண்களின் உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ளவும் முடியாது. இதனாலேயே நான் ராதாவிடம் அதிகம் பேசுவது கிடையாது. ராதாவோ பொம்பளப் பொண்ணு அப்பா மேல பாசமா இருக்குது என்ற அபத்தமான விதியை ஃபாலோ செய்கிறது.

சிறகடித்து வானத்தில் பறந்து கொண்டிருந்த என்னை இரண்டு வாரங்களுக்கு முன் தரையில் நடக்க வைத்த சம்பவம் அரங்கேறியது. ஈசிஆரில் ஒரு லேண்ட் டீலிங்கை முடித்துவிட்டு திருவான்மியூர் சிக்னலில் வெயிட் செய்துக்கொண்டிருந்தேன். எங்கிருந்து எப்படி வந்தான் எனத் தெரியாமல் ஒருவன் திடீரென காரின் ஜன்னலை படபடவென அடித்தான். ஒரு செகண்ட் திகைத்துவிட்டு மறுகணம் சுதாரித்துக் கொண்டேன். மாதங்களாய் பிளேடை பார்க்காத தாடி, எண்ணைய் காணாத கேசத்தைத் தவிர வேறெதுவும் அவனை பிச்சைக்காரனாய் எடை போடுவதை தடுத்தது. கொஞ்சம் தயக்கத்துடன் டாஷ்போர்டிலிருந்து சில நாணயங்களை எடுத்துக் கொடுக்க கொஞ்சமாய் கார் கண்ணாடியை இறக்கினேன். அதுவரை என்னையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தவன் "விஜயா விஜயா உன் அம்மாவ அப்படியே உரிச்சு வச்சிருக்க" என்றான். ஏதோ உளறுகிறான் என நினைத்து எஞ்ஜினை உயிர்ப்பித்தேன். "உன் அம்மா உன்னை ஹோம் வாசலில் போட்டபோது நானும் கூட இருந்தேன்" மூடிக்கொண்டிருந்த ஜன்னல் கண்ணாடி தாண்டி அவன் குரல் தேய்ந்து வந்து விழுந்தது. உடம்பில் சுர்ரென்று ஏதோ ஒரு உணர்வு பாய்ந்தது.

ஹன்னா மௌண்டானாவில் மனம் லயிக்கவில்லை. ராதா செய்த குணுக்கு தொண்டை தாண்டி கீழே இறங்கமாட்டேன் என ஸ்ட்ரைக் செய்தது. சுஜாதாவின் பெண் இயந்திரம் மக்கர் செய்தது. மீண்டும் அவனைப் பார்க்க வேண்டும்போல் இருந்தது. ஏதோ ஒரு பைத்தியக்காரன்/பிச்சைக்காரனைப் போய் சிக்னல் சிக்னலாய் தேடுவது ரொம்ப அப்ஸர்டாகப்பட்டது. ஆனாலும் ஒரு குறுகுறுப்பு, நிஜமாய் நான் யாரென்ற தேடல், என் வேர்களின் ரகசியமறியும் ஆசையும் கொஞ்சம் எழுந்தது. விஜயா என்றானே. என்னைப் பெற்றவள் வைத்த பெயராய் இருக்குமோ? ரொம்ப ஓல்ட் ஃபேஷன் பெயர். இந்த சம்பவத்தை மறக்கவும் முடியவில்லை.

கிருஷ் ரிலாக்ஸ்டாக இருந்த சாயந்திரம் அவர் முன் போய் அமர்ந்தேன். சுருக்கமாக நடந்தவற்றை சொல்லி முடித்தேன். சின்னதாக ஸ்மைல் பண்ணியவர் "லுக் மேகா. இது உன் லைஃப். இதில் டெசிஷன் எடுக்க எனக்கு உரிமையில்லை. Probably ஐ கேன் அட்வைஸ் யூ. அதை ஃபாலோ செய்வதும் உன் இஷ்டம். இத்தனை வருடம் கழித்து அந்த நபர் உன்னை ஏன் சந்திக்கனும்? உன்னிடமிருக்கும் பணத்திற்காக கூட இருக்கலாமல்லவா? ஸோ திங்க் அண்ட் ஆக்ட் வைஸ்லி. த பால் இஸ் இன் யுவர் கோர்ட்" என கன்னத்தைத் தட்டி விட்டு போனார். ஹி இஸ் ரைட். நான் ஏன் அலட்டிக்கொள்ள வேண்டும்? இத்தனை வருடமாய் இல்லாமல் போனவளை இனிமேல் பார்த்தால் என்ன? பார்க்காவிட்டால் என்ன?

ஒருவேளை அவன் சொல்வது நிஜமாக இருந்தாலும் கண்டிப்பாக நான் என்னைப் பெற்ற தாயை கொண்டாடப் போவதில்லை. என்னைத் தூக்கி போட எப்படி மனது வந்தது என நாடகத்தனமான கேள்விகளையும் கேக்கப்போவதில்லை. நோ யூஸ். லீவ் த கிராப் ஹியர் என முடிவெடுத்தேன். ஆனாலும் மனித மனம் குரங்கு என்பதை நிருபித்தது. அந்தாளைப் பார்ப்பதால் ஒரு பிரச்சனையும் வரப்போவதில்லை. என்னைப் பெற்றவள் எப்படி இருக்கிறாள் என்று பார்ப்பதிலும் நோ ஹார்ம். அவனைப் பார்த்துவிடுவது என முடிவு செய்தேன். சென்ற ஞாயிற்றுகிழமை திருவான்மியூர் சிக்னலுக்கு அருகே பாம்பே டயிங் ஷோரூம் அருகே வண்டியை நிறுத்திவிட்டு நடந்தேன். கொஞ்சம் ஜாக்கிரதையாகவே நடந்தேன். எங்கிருந்து எப்போது வேண்டுமென்றாலும் அவன் வரலாம் என்ற எண்ணத்தில். ஒருவேளை அவன் பணத்துக்காக என்னை கடத்திவிட்டால்? விளைவுகள் பக்கென்றிருந்தது. யோசனையில் நடந்துகொண்டே இடதுபக்கம் பார்த்தேன்.

வலது தோளை ஒரு கை அழுந்தப் பற்றியது.

திடுக்கிட்டு திரும்பினேன்.

பசிக்குது ஸ்வேதா என்றார். இன்னும் 10 பக்கம் தான் பாக்கி. ஹூம்ம்ம். புக்மார்க் சொருகிவிட்டு சமையல்கட்டில் நுழைந்தேன் என்னவரின் உணவிற்காக.

நான் ஸ்வேதா...

December 3, 2009

ரசம் - ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


ரொம்ப நாளாய் ஒரு authentic cuisine ட்ரை பண்ணனும் என்றிருந்தது. சைனீஸ் என்றால் ரகு அலறுகிறார். கேரளா என்றால் தம்பி முறுக்கிக் கொள்கிறான். இந்த நேரத்தில் ஒரு நாள் இடைவெளி விட்டு பெற்றோருடைய திருமணநாளும், என் திருமணநாளும் வந்தது. எங்கள் மணநாள் fell on a weekday. எங்கும் பிளான் பண்ணி போகமுடியவில்லை. பெற்றோரின் மணநாளன்று "எப்பப் பாரு கிச்சன்லயே தான இருக்க. இன்னிக்கு சமைக்க வேண்டாம். லஞ்சுக்கு வெளிலப் போகலாம்" என நாங்கள் எல்லாரும் அம்மாவை வற்புறுத்தி சம்மதிக்க வைத்தோம். அம்மாவிற்கு நான் - வெஜ் அலர்ஜி. சரவண பவன் மீது கடுங்கோபத்திலிருந்தார் அப்பா. இந்த தடவை சம்திங் நியூ என நினைத்து முடிவானது தான் புரசைவாக்கத்திலுள்ள ரசம் ரெஸ்டாரெண்ட். ஸ்ரீகிருஷ்ணா குழுமத்தின் authentic கொங்குநாட்டு உணவுகள் பரிமாறப்படும் சைவ உணவகம்.

கண்டிப்பாக டேபிள் ரிசர்வ் செய்யனும். புரசைவாக்கத்தில் அந்த கட்டிடம் குட்டி செட்டிநாட்டு அரண்மனை போலிருந்தது. கீழே ஸ்வீட்ஸ். முதல் மாடியில் ரெஸ்டாரெண்ட். அட்டகாசமான இண்டீரியர். மெனுவை அலசுவதற்கு முன் கொங்குநாடு பத்தின தம்மாத்தூண்டு டிடெய்ல்ஸ் நானறிந்தளவில். கொங்குநாடு என்பது கோயம்புத்தூரை தலைமையிடமாகக் கொண்டு காங்கேயம், திருப்பூர், ஈரோடு, கரூர், பொள்ளாச்சி, பழனி, சேலம், தாராபுரம் போன்ற கிட்டத்தட்ட 50 ஊர்களை உள்ளடக்கிய பிராந்தியம். ஏறத்தாழ தேங்காயோடு அளவான மசாலாக்களை சேர்த்து மிதமான காரத்திலேயே சமைக்கிறார்கள். இதெல்லாம் என் கோயம்புத்தூர் நண்பனின் அம்மா சொன்னது.



ஓவர் டு த ஃபுட். எங்களிருவரைத் தவிர மற்ற அனைவரும் கொங்குநாடு ஸ்பெஷல் thali ஆர்டர் செய்தார்கள். வெல்கம் ட்ரிங், சூப், சாலட் (2), வாழைப்பழ தோசை, கொங்கு மசால் தோசை, காய்கறி பரோட்டா, அரிசி பருப்பு சாதம் இவற்றோடு வழக்கமான சவுத் இண்டியன் ஐட்டம். வெல்கம் ட்ரிங்காக கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிய மோர். அதோடு சூப்பாக எதோவொரு ரசம். Weird combination. அந்த வாழைப்பழ தோசை அட்டகாசம். சாப்பாடு சூப்பர். ஆனா எதுவுமே சூடாக இல்லாதது ஒரு பெரிய குறை. சர்வீசும் வெரி ஸ்லோ:( இந்த சாப்பாட்டிற்கு 225 ரூபாய் ரொம்ப ஓவர்.



அடுத்தது ala carte வில் நாங்கள் ஆர்டர் செய்தது நெல்லிக்காய் ரசம், வாழைப்பூ வடை, மக்காச்சோள வடை. மூணுமே ஏ கிளாஸ். மெயின் கோர்ஸிர்கு நான் பொரிச்ச பரோட்டாவும் பொள்ளாச்சி தேங்காய் குழம்பும் ஆர்டர் செய்தேன். ரெண்டுமே தூள். ஆனால் அந்த பொரிச்ச பரோட்டாவை ஒரு பீஸ்க்கு மேல் உள்ளே தள்ள முடியவில்லை. திகட்டுகிறது. ரகு இட்லி உப்புமா ஆர்டர் பண்ணி கடுப்படித்தார். வீட்டில் செய்தால் சீண்டக்கூடமாட்டார். ஹூம்ம். வீட்டில் செய்தது போலவே இருந்தது. May be this is wat u call homely food:) Ala carte மெனு அட்டகாசமாக இருக்கிறது. குழிப்பணியாரம் மற்றும் இடியாப்பங்களில் நான்கைந்து வெரைட்டிகள்.



எங்களை ரொம்ப டிஸ்டர்ப் செய்தது டெசர்ட் மெனு தான். இளநீர் பாயாசம், கருப்பட்டி அல்வா, பருத்திப்பால் அல்வா. படிக்கும்போதே சாப்பிடனும் போலிருந்தது. மூன்றில் கருப்பட்டி அல்வா ரொம்ப சுமார் தான். மற்ற ரெண்டும் சூப்பரோ சூப்பர். அதுவும் அந்த பருத்திப்பால் அல்வா. சூடாக வாயில் போட்டதும் கரைந்து ம்ம்ம் டிவைன்.



இறுதி அத்யாயம் ரொம்பவே பயங்கரமானது. பர்ஸ் பழுத்தது என்பதெல்லாம் சும்மா. அதையும் தாண்டி வேறெதாவது டெர்ம் யோசிக்க வேண்டும். Too too costly.

மேலதிக தகவல்கள்

உணவகம் - ரசம்
இடம் - புரசைவாக்கத்திலுள்ள ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாடியில். மயிலாப்பூரிலும், அண்ணாநகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - ரொம்பவே அதிகம். Thali மீல்ஸ் 225 ரூபாய். Ala carte நினைவில்லை.

பரிந்துரை - Authentic கொங்கு ஃபுட் (5 வருடம் கோவையிலிருந்த என் தம்பியின் சர்ட்டிபிகேட்).யாராவது ட்ரீட் தர்றேன் என்றால் போகவும். இல்லை சம்பளம் வாங்கியவுடன் போகலாம். ஆனால் பில்லை பார்த்தவுடம் மயக்கம் ஏற்படுவது உறுதி. தயவு செய்து அண்ணா நகரிலுள்ள கிளைக்கு செல்வதை தவிர்க்கவும். சமீபத்தில் தான் திறந்ததால் that place literally has nothing (2 மாதங்களுக்கு முன்).

November 2, 2009

கண்டேன் காதலை

ஹிந்தியில் சூப்பர் டூப்பர் ஹிட்டான "Jab We Met" படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். பரத், தமன்னா லீட். முதல் காட்சியில் பரத் ஒரு மாதிரி நடந்து வருவார். சோர்வை காட்றாராமா? முடியலடா சாமி. "நல்லவேளை. சுமாரான சோகம் போல. ரொம்ப சோகமா இருந்தா தவழ்ந்து வந்திருப்பாரு" என தியேட்டரில் கமெண்ட் அடித்தார்கள். காதலில் தோல்வி, அம்மாவால் மனக்கசப்பு ஏற்படும் பரத் வாழ்க்கை வெறுத்து கால்போன போக்கில் மதுரை ட்ரெய்ன் ஏறுகிறார். அங்கு தமன்னாவை சந்திக்கிறார். பரத்தால் டிரெய்னை தவறவிட்டதாக சொல்லும் தமன்னாவை பரத் அவரின் சொந்த ஊரான தேனியில் கொண்டு சேர்க்கிறார். அங்கு தமன்னாவிற்கும் அவரின் தாய்மாமன் சந்தானத்திற்கும் கல்யாண ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஊட்டியில் ஒருவரை காதலிக்கும் தமன்னா வீட்டை விட்டு ஓடிப்போகிறார். ஊட்டியில் அவர் தன் காதலனை சந்தித்தாரா? பரத் என்ன ஆனார்? எல்லாம் வெள்ளித்திரையில் காண்க.

படத்தில் பாராட்டப்பட வேண்டியவர்கள் இரண்டு பேர். முதலில் சந்தானம். சான்ஸே இல்லை. தமன்னாவின் ஓவர் ஆக்டிங்கையும், பரத் நடிக்கிறேன் பேர்வழி என ஆளைக் கொல்லும்போதும் ஆபத்பாந்தவனாக காப்பாற்றுகிறார். கல்யாணத்தை நிறுத்த இவர் அடிக்கும் கூத்துகள் கொஞ்சம் சிரிப்பை வரவழைக்கினறது. அடுத்தது ஒளிப்பதிவாளர். படம் முழுக்க ஜில்லென்ற ஃபீலிங்கை கொடுக்கிறார். ஊட்டி காட்சிகள் அட்டகாசம்.



தமன்னா வழக்கமான தமிழ் ஹீரோயின்கள் செய்யும் லூசுப் பெண் கேரக்டர். ரொம்பவே ஓவர் டோஸாகியிருக்கிறது. சிக்கென்றிருக்கிறார். கொஞ்சம் அஷ்டகோணல்களை குறைத்து நடித்தாரென்றால் தூளாக இருக்கும். பரத். ஊஹும். அதுவும் ரெண்டாவது பாதியில் தான் ஈஸி கோ பெர்சனாக மாறிவிட்டதை இவர் பறைசாற்ற முயற்சிக்கும்போது (அந்த chill dude டயலாக்குகள்) "என்ன கொடுமை சார் இது" என தியேட்டரே குரல் கொடுத்தது.

மியூசிக். வித்யாசாகராமே. நம்பமுடியவில்லை. இல்லை. இல்லை. ஒரு பாட்டுக்கூட அவர் சாயல் இல்லை. "காற்று புதிதாய்" சாங் ஓகே. BGM மகா சொதப்பல். ஹிந்தியில் பாட்டுகள் எல்லாம் அட்டகாசமாய் இருக்கும்.

ஜெனரலாய் ஒரிஜினலோடு கம்பேர் செய்யக்கூடாது என்பது என் கருத்து. சீன், டயலாக் இவையெல்லாம் கூட ஒரிஜினலிலிருந்து எடுத்தாளலாம். ஆனால் காஸ்ட்யூம் கூடவா காப்பி அடிக்கனும். கொடுமையா இருக்கு. ஹிந்தியில் "நகாடா" பாட்டில் ஷாகித் கபூர் செய்த அத்தனையும் பரத் இதிலும். அந்த மெகா சைஸ் தவில் கூட அடிக்கனும்னு ரூல்ஸ் போல.

கண்டேன் காதலை - ஒரு தபா கண்டுக்கிடலாம்.

October 30, 2009

எண்ட குருவாயூரப்பா

ரிலையன்ஸ் நெட்வொர்க்கின் விளம்பரம் பார்த்தீர்களா? அட்டகாசமான இசை. பைபர் கான்செப்ட் என வித்தியாசமாய் யோசித்திருந்தாலும், ஹ்ரிதிக் ரோஷன் உடம்பை வளைத்து ஆடுவது ஹாவ்வ்வ்வ்வ்வ். போரிங் ரோஷன். போர்பான் பிஸ்கெட்டிற்கும் உங்க டான்ஸுக்கும் என்ன சம்பந்தம். வேற ஏதாவது ட்ரை பண்ணுங்க சார்.



*************

லண்டன் ட்ரீம்ஸ் படத்தில் வரும் "Khanabadosh" பாட்டைக் கேளுங்கள். சங்கர்- எஹ்சான் - லாய் பின்னியிருக்கிறார்கள். முதல் தடவை கேக்கும்போது ரஹ்மான் குரல் மாதிரியே இருந்தது. நெட்டில் தேடியதில் மோஹன் என போட்டிருக்கிறார்கள். லவ்லி வாய்ஸ். அசின் - வேண்டாம் அம்மணி. இந்த ப்ரீக்கி கெட்டப்பெல்லாம் உங்களுக்கு கண்றாவியாய் இருக்கிறது. அதுவும் இந்த பாட்டில் ஆடுகிறேன் பேர்வழி என அவர் பண்ற சேட்டை எண்ட குருவாயூரப்பா.
**************

NDTV Profitல் தொலைதொடர்புத் துறை அமைச்சர் ராஜா சாரி ராசாவின் பேட்டி ஒளிபரப்பிக்கொண்டிருந்தார்கள். ஆவுன்னா "In Rasa's period" ன்னு அவர் பண்ண அலம்பல் தாங்க முடியல. சார் நீங்க மத்திய அமைச்சர் தான். மொகலாய சக்ரவர்த்தி ரேஞ்சுக்கு "என் ஆட்சியில்.."ன்னு நீட்டி முழக்கிட்டிருந்தார்.
*****************

ஐ - பாட்

சர்வம் படத்தில் வரும் நீதானே பாட்டு. யுவன் வாய்ஸும் அந்த வரிகளும் க்ரியேட் பண்ணும் மேஜிக்.

நீ தேட தேட ஏன் தொலைகிறாய்?
என் வழியில் மறுபடி கிடைக்கிறாய்

இதயச் சதுக்கம் அதிருதே
உன் ஞாபகம் வந்தபின் அடங்குதே

ஒரு கணம் வாழ்கிறேன்
மறுகணம் சாகிறேன்
இரண்டுக்கும் நடுவில் நீதானே




******************

சுமார் எட்டு மாதங்களுக்கு முன் ஒரு புத்தகம் படிக்க ஆரம்பித்தேன். ஆரம்ப அத்தியாயங்களிலே அவ்வளவு அச்சுப் பிழை. எனக்கு நேரம் கிடைத்து புத்தகம் எடுப்பதே பெரிய விஷயமாக இருக்கிறது. இதில் இந்த அச்சுப் பிழைகளை பார்த்தவுடன் கடுப்பாகிவிட்டது. மூடி பீரோவில் வைத்துவிட்டேன். ஒரே ஒருவர் என்றாலும் கூட வாசகன் வாசகன் தானே. குவாலிட்டி ப்ரொடெக்ட் என்பது எல்லாத் துறைகளிலுமே அவசியமாகிறது. என்ன நான் சொல்றது? ஏனோ இரு நாட்களாக அந்தப் புத்தகத்தை முடிக்க வேண்டுமென்ற உந்துதல். முழு வீச்சில் முடித்தாகிவிட்டது.

October 27, 2009

காணி நிலம்

இன்னும் கொஞ்சம் சுள்ளுன்னு விழுந்தா தான் நமக்கு அழகு என நினைத்த சூரியனின் வெப்பம் கொஞ்சம் கொஞ்சமாய் ஏறிக் கொண்டிருந்தது. சளக் சளக்குகளும், சரக் சரக்குகளும் அவசரமாய் ஆரம்பித்து அழகிய கோலங்கலாய் முடிந்திருந்தன. நான்கு மழை கண்டு நமுத்துப் போய் மக்கிய வாசம் வீசும் கூரையின் வெளியிலிருந்து அகிலாண்டம் கத்திக் கொண்டிருந்தாள்.

"ஒரு பொட்டு சீமெண்ண கூட இல்லை. இன்னிக்கு கஞ்சிக்கு கையேந்தனும். போக்கத்தவன கட்டிக்கிட்டு நான் சீரழியனும்னு கருப்புசாமி எந்தலைல எழுதிருக்கு."

வழக்கம்போலவே இந்த பொழுதும் அகிலாண்டத்தின் இரைச்சலோடு தான் விடிந்தது மாரி என்கிற மாரியப்பனுக்கு. சலித்துக்கொள்ளக்கூட சலிப்பாக இருந்தது மாரிக்கு. மெல்ல பாயிலிருந்து எழுந்தவர் கண்கள் தேடியது தெய்வானையை. மூங்கில் தடியில் தொங்கவிடப்பட்டிருக்கும் பை இல்லாததால் கிளம்பிருக்கும் என்ற முடிவுக்கு வந்தவராய், எழுந்து, பழுப்பேறிய வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு கிளம்பினார். தெரு முக்கு வரை அகிலாண்டத்தின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. குரல் தேய தேய மாரியின் நடையின் வேகம் குறைந்து செட்டியார் கடை முன் நின்றது.

மாரிக்கு உத்தியோகம் என எதுவும் கிடையாது. இருந்த மூன்று செண்ட் நிலமும் மழை குறைந்ததால் விவசாயத்திற்கு லாயக்கற்ற தரிசு நிலமாகப் போனது. கூலி வேலை செய்ய மாரியின் உடல் ஒத்துழைக்கவில்லை. செட்டியார் கடையே கதி எனக்கிடந்து, பொட்டலம் மடிப்பது, பாக்கெட் போடுவது, பாட்டில் கழுவுவது என காலத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். ஒரே மகள் தெய்வானை பண்ணிரெண்டாம் வகுப்பு முடித்திருக்கிறாள். அவளுக்கு கல்யாணம் காட்சியென பண்ண என்ன செய்வதென்பது தெரியாமல் வருத்தப்பட்டுக்கொண்டிருந்தார். இவை எல்லாவற்றிர்கும் மேல் அகிலாண்டம். பொழுது போய் பொழுது விடிந்தால் பஞ்சப் பாட்டு தான். கவலையில் மூழ்கியிருந்தவரை செட்டியாரின் குரல் கலைத்தது.

"எல மாரி. யோசனையெல்லாம் பலமாருக்காப்புல இருக்கு?"

"என்னத்த சொல்றது செட்டி? பொழுது எப்படா விடியும், எப்படா வூட்ட வுட்டு கிளம்பலாம்ங்கற அளவுக்கு அவ கரசல் கூடிட்டே இருக்கு. ரவைக்கு வீட்டுக்கடையவே விசனமா இருக்கு."

"தெனம் நடக்கிற கூத்துதானே. இதுக்கேன் மூஞ்சிய ஆகாசத்துக்கு உசத்தி வச்சிருக்க?"

"தெய்வான பெரிய பள்ளிக்கோடம் போகனும்னு நச்சரிக்குது. ஏதோ ராங்காமே. அதெல்லாம் நிறைய வாங்கிருக்குதாம். அதுக்கு 15000 காசு கட்டனுமாம். எங்கிட்டு போறது?"

"மச்சு வூட்டு பெரியம்மாகிட்ட கேக்க சொல்லு. அவுகதான இவ்ளோ நாள் தெய்வான படிப்புக்கு காசு குடுத்தாங்க?"

"கேட்டுப் பார்த்துச்சாம். அந்தம்மா கையவிரிச்சுட்டாங்களாம். புள்ள ஆசப்படுது. நாந்தேன் படிக்கல. அதையாவது படிக்க வைக்கலாம்னு பார்த்தா காசுக்கு என்ன பண்றதுன்னு தெரியல."

"பேசாம நாஞ்சொல்றது கேளு. நம்மூருக்கு பைபாஸ் வருதுல்ல. ரோடு போற இடத்துல தான் உன் நிலமும் இருக்கு. பேசாம வித்துடு. வர்ற காசை புள்ள படிப்புக்கு எடுத்துக்கோ. நிறைய மிஞ்சும். அத வச்சு இதே போல ஒரு கடைய டவுன்ல போடு. சரக்கெல்லாம் நான் இறக்குறேன். கொஞ்சம் வருமானம் வரும். அகிலாண்டம் வாயையும் மூடலாம்ல. என்ன சொல்ற?"

"செட்டி அது எங்கப்பாரு கஷ்டப்பட்டு வாங்கினது. விக்க மனசு வரமாட்டேங்குது."

"போடா பொசக்கெட்டவனே. செத்துப்போன உன் அப்பனா வந்திப்ப கஞ்சியூத்த போறாரு? வித்துட்டு வேலையப் பாப்பியா? வெட்டிப்பேச்சு பேசிக்கிட்டு"

"ஹும்ம். நீ சொல்றது சரிதேன். பார்ப்போம். யாராச்சு வேணும்னு வந்தா சொல்லியனுப்பு செட்டி."
****************

மாலை பள்ளியிலிருந்து வந்த தெய்வானை, விறகு தேய்த்துக்கொண்டிருந்த அகிலாண்டத்திடம் மெதுவாக பேச்சை ஆரம்பித்தாள்.

"யம்மா. நான் கேட்ருந்தேனே? என்னம்மா பண்ணப் போற?"

"என்ன?"

"அதாம்மா காலேஜ் போக காசு.."

"காசுமில்ல ஒன்னுமில்ல. கஞ்சிக்கே வழியக்காணோம். காலேசூ போறாளாம்"

"அதில்லமா. மச்சூ வூட்டு பெரிம்மா ஒரு வழி சொன்னாங்கமா. நம்ம நிலத்த வித்து"

"எடு வெளக்கமாத்த. எப்படியாப்பட்ட குதிரையே எரவாணத்த புடுங்குதாம். நொல்ல குதிரைக்கு கொள்ளு கேக்குதாம்மா? நிலத்த விக்கதாண்டி போறேன். வர்ற காசுல வூட்டுக்கு ஒரு ஓடு காமிச்சிட்டு மிச்சத்துல உன்ன எவன் கையிலயாவது குடுத்துட்டு நான் நிம்மதியா இருப்பேன்"

"தாத்தா சம்பாரிச்சத என் சம்மதமில்லாம விக்க முடியாது தெரியுமா?"

முடிக்கும் முன்னரே விறகு கட்டையால் அடிவாங்கினாள் தெய்வானை. அழுதுக்கொண்டே குடிசை உள்ளே ஓடினாள்.
**************

"யோவ் குமாரசாமி. எத்தன நாளாய்யா அந்த ஜி.ஓவ ரெடி பண்ணுவ? பெரியவர் நாளைக்கு கையெழுத்துப் போட கேப்பாரு. அவர் முன்னாடி தலை சொறிய வச்சிடாத."

"அடிச்சாச்சுப்பா."

"எத்தனை ஏக்கர்ப்பா வருது"

"20 ஏக்கர். பைபாஸ் போடலாம்னு NH ல சொன்னாங்கள்ள. அதயும் சேர்த்து தான். பெரியவரு கையெழுத்து போட்டவுடனேயே ஓட்டிரவேண்டியதுதான். இந்ததபா அக்கொயரிங்ல எந்த வில்லங்கமும் இருக்கக்கூடாது. சட்டுபுட்டுன்னு முடிச்சிடனும்."
*************

"பல்கலைகழகம் கட்ட நிலம் கையகப்படுத்தபட உள்ளது."

தேர்தல் வாக்குறுதிப்படி தமிழகத்தில் புதிய பல்கலைக் கழகம் கட்ட மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. கட்டுமாணப் பணிகளை மேற்கொள்ள முதல் நடவடிக்கையாக நிலம் கையகப்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்கலைக் கழகம் அமையவிருக்குமிடத்தில் புறவழிச்சாலை அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது தெரிந்ததே. இப்போது அத்திட்டம் கைவிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

October 23, 2009

தப்பாத தாளங்கள்

தப்பின் தாளத்துக்கு தப்பாமல் ஆடுபவனுக்கு
தீச்சட்டி தூக்குபவனின் இழப்பு வலி தெரியுமா??



சாலை விபத்தில் இறந்தவனின்
சவ ஊர்வலத்தில்
வாரி இறைக்கப்பட்ட
பூக்களும்
செத்துக்கொண்டிருந்தன
அதே சாலை விபத்தில்..



டிஸ்கி 1: திட்றதுக்கு முன்னால லேபிள பார்த்துடுங்க.
டிஸ்கி 2: லேபிள பார்த்தப்புறமும் யாராச்சும் திட்டினீங்கன்னா அடுத்த இடுகையும் கவுஜயே எழுதுவேன். பீ கேர்புல்.

October 19, 2009

நொன் தூ தீ

ரொம்ப நாளாயிற்று ஜூனியர் அப்டேட்ஸ் எழுதி.எக்கச்சக்கமான விஷயங்கள் இருந்தாலும் ஏனோ எழுத விருப்பமில்லை. ஒன்னே ஒன்னு மட்டும். ஜூனியர் ப்ளே ஸ்கூல் போக ஆரம்பித்து 2 வாரங்கள் ஆகிறது. 7.30 மணிக்கெல்லாம் எழுந்து "அம்மா தூல்" என்று பையை மாட்டிக் கொள்பவன், கீழே இறங்கி ஆட்டோவைப் பார்த்தவுடன் காவிரியை ரிலீஸ் செய்கிறான். கொஞ்ச நாளில் சரியாகிவிடும் என நினைக்கிறேன்.
"சஞ்சு 1 2 3 சொல்லு"
நொன்
தூ
தீ
தோர்
"ம்ம்ம்ம் 5 6 சொல்லு"

தித்
ஆன்
ஆய்த்
நான்
தென்ன்ன்
"குட் பாய். ABCD..."
அம்மா நானாம்மா போஉம்
***************

ஐ - பாட்

சரியாக ஒரு வருடம் ஆகப்போகிறது என் கைக்கு வந்து. சில சமயம் இரண்டு நாட்களுக்கொருமுறை பாட்டு மாத்துவேன். சில சமயங்களில் மாதக்கணக்கில். ஒரு பாட்டு என முடிவு செய்துவிட்டால் திரும்ப திரும்ப அதையே கேட்பேன். கண்டிப்பாக அழுவாச்சி பாட்டுகள் நோ. என் ஐ பாடிலிருக்கும் பாட்டுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ள இந்த செக்ஷன்:)

To start with என்னோட ஆல் டைம் பேவரிட் பாட்டு & நடிகர்.
நல்ல மழை பெய்யும்போது, வீட்டில் யாருமில்லாதபோது, பால்கனியில் நின்று இந்தப் பாட்டைக் கேளுங்கள். கண்டிப்பாக ஆடத் தோன்றும். The most romantic piece from Raja sir (என்னைப் பொறுத்தமட்டில்). புன்னகை மன்னனில் வரும் மியூசிக். டான்ஸ் கமல் லெவலுக்கு கம்மிதான். நீங்களும் என்சாய் பண்ணுங்க.



************************

உறவினர் ஒருவருக்கு உடம்பு சரியில்லையென கேள்விப்பட்ட இன்னொரு உறவினர் போன் செய்து விசாரித்திருக்கிறார். உரையாடல்கள் கீழே.

"அம்மாக்கு தீடிர்ன்னு ஹார்ட் அட்டாக் வந்துடுச்சாமே"
"தீடிர்ன்னு தான் வரும். லலிதா உன்ன இன்னிக்கு நைட் அட்டாக் பண்ண போறேன்னு சொல்லிட்டா வரும்?"
"அதில்ல. 2 நாள் ஆஸ்பத்திரில வச்சிருந்தீங்களாமே?"
"ஹார்ட் அட்டாக்னா. ஆஸ்பத்திரில தான் வப்பாங்க. வீட்லயேவா வச்சிப்பாங்க?"
டொக்..

போன் பண்ணி விசாரித்த உறவினர் என்னிடம் ரொம்ப வருத்தப்பட்டார். ஒரு கர்டசிக்காக விசாரித்தால் இப்படி கடுப்படிக்கறாங்களே என்று. மற்றொருவரோ எல்லாரும் விசாரிப்புங்கற பேர்ல இன்னொரு தடவை ஹார்ட் அட்டாக் வரவழைச்சுடுவாங்க போலிருக்கு என சலித்துக்கொண்டார். அவரவர் நியாயம் அவரவருக்கு.
************************

இந்த தடவையும் தீபாவளி அன்று வேலை சுழற்றிவிட்டது. எரிச்சல் தரும் சில வழக்கங்களைப் பற்றி தனி பதிவே போடலாம். நானும் வெடிச்சேங்கற பேர்ல பேருக்கு நாலு கொளுத்திப் போட்டேன். வாழ்த்துகள் சொல்ல போன் செய்த அண்ணாவிடம்
"என்னண்ணா பட்டையக் கிளப்பறீங்களா அங்க"
"இல்லடி. நேத்து வந்ததே 9 மணிக்கு. எம்பொண்ணு (1 வயதாகிறது) வெடிச்சத்தம் கேட்டாலே அலர்றா. இனிமே தான் போய் கொஞ்சம் மத்தாப்பூ வாங்கிட்டு வரணும்"

அடடா ஒரு சிங்கம் இப்படி சீப்பட்டு போச்சே:(
*************************

அம்மா வீட்டிற்கு சென்றிருந்தபோது அம்மா சொன்னார். "வித்யா உனக்கு ஏழரை சனி விட்ருச்சுடி". கேட்டுக்கொண்டிருந்த என் தம்பி சொன்னது. "மாத்தி சொல்லுமா. அவ தான் சனிய விட்ருக்கா". அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

October 14, 2009

தித்தி(க்கும்)த்த தீபாவளி

அதோ இதோ என வந்துவிட்டது இந்த வருட தீபாவளி. டமால் டூமிலென எதிர்பாராத தருணங்களில் வெடிக்(கப்படு)கும் வெடிகளே சாட்சி. ஜூனியரின் இரண்டு மணி நேர தூக்கத்திற்கு ஒரு மணி நேரம் மெனக்கெடும் கஷ்டத்தை ஒரு நொடியில் வேட்டு வைத்துவிடுகிறார்கள்:( சார் இப்போது ஒரு துப்பாக்கியில் கேப் போட்டு என் கைபிடித்து வெடித்துக்கொண்டிருக்கிறார்.

வயது ஏற ஏற பண்டிகைகளிம் மீதான ஆர்வம் குறைவதுபோல் ஒரு மாயை ஏற்படுகிறது. சிறுவயது நினைவுகளெல்லாம் பசுமையாய் கண்முன். வீட்டில் புதுத்துணி எடுப்பது வருடத்திற்கு மூன்று முறை தான். பெற்றோர் திருமண நாள், தீபாவளி, பிறந்த நாள். பொங்கலுக்கு வீட்டுப்பொண்ணுக்கு என பெரியம்மாவிடமிருந்து வந்துவிடும்:)

Atleast ஒரு மாதத்திற்கு முன்னமே ஏற்பாடுகள் தொடங்கிவிடும். டிரெஸ் எடுத்து தைக்க கொடுக்கனும். அம்மா என்ன பலகாரம் என்பதை ஒரு வாரத்திற்கு முன்னர் தான் பைனலைஸ் பண்ணுவார். எல்லா தீபாவளிக்கும் ரவா லட்டு, தேங்காய் பர்பி, வெண்ணைய் முறுக்கு, தட்டை. மெஷினில் பலகாரத்திற்கு தேவையான மாவரைக்கும் போதே எச்சிலூற ஆரம்பித்துவிடும். அதுவும் ரவா லட்டு மாவை அப்படியே திங்கும்போது ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம். ஒரு நாள் முறுக்கு மற்றும் தட்டை, ஒரு நாள் ரவா லட்டு, ஒரு நாள் தேங்காய் பர்பி என பிளான் பண்ணி முடித்துவிடுவார் அம்மா. மெஷினுக்கு போய்வருவதோடு சரி. மற்றபடி பலகாரம் திங்கிற வேலை மட்டும் தான்.

ஒரு வாரத்துக்கு முன்னர் அப்பா கொஞ்சமாய் பட்டாசு வாங்கி தருவார். முன்னோட்டத்திற்கு. அதிலிருக்கும் கேப்பை மட்டுமே வெடிப்போம். மத்ததெல்லாம் தீபாவளியன்று கரியாக்க சேமித்துவைக்கப்படும். எனக்கு நினைவு தெரிந்து மூன்று தீபாவளிக்கு ஊருக்கு போயிருக்கிறேன். தீபாவளிக்கு ஒரு வாரம் முன்பு தாத்தா இறந்துவிட்டார். பண்டிகை கிடையாது. "சே. தாத்தா ஒரு வாரம் கழிச்சு செத்துப்போயிருக்கக்கூடாதா?" என இழப்பின் வலிதெரியாத பருவத்தில் சலித்துக்கொண்டோம். வெடிக்காத வெடிகளிலிருந்து மருந்தினை பிரித்துக்கொட்டி, கரும்புச்சக்கை போட்டு எரித்தபோது ஏற்பட்ட விபத்தில் ஊர்பையனின் காலில் பலத்த தீக்காயம். இன்னும் அவன் காலின் கருகிய தோலைப் பார்க்கும்போது அந்த சம்பவமே நினைவுக்கு வரும்.

என் பொன்னான தீபாவளி தருணங்கள் வாலாஜாவில் இருக்கும்போது தான். சரியான செட். நண்பர்களும் வீட்டுக்கு வந்துவிடுவார்கள். குளிச்சுட்டு ஊதுபத்தியோடு வெளியே வந்தால் தொடர்ந்து நான்கைந்து மணிநேரங்கள் வெடி போட்டுக்கொண்டேயிருப்போம். அதுவும் எல்லாரையும் கலங்கடிக்கும் விதமாக. கொட்டாங்க்குச்சியின் கண்களில் லக்ஷ்மி வெடி வைத்து சிதறடிப்பது, பிளாட்பார்ம் பொந்துகளை தகர்ப்பது, காய்ந்த சாணி உருண்டைகளில் வைப்பது, மரப்பொந்து என அநியாயத்துக்கு வெடிப்போம். தெருவில் யாராவது வரும்போதுதான் வேண்டுமென்றே வெடி வைப்போம். அடுத்தவர்களை வெறியேற்றுவதில் அப்படி ஒரு ஆனந்தம்.

தீபாவளியன்று மட்டும் நானும் தம்பியும் ரொம்ப ராசியாகிவிடுவோம். அப்போதானே நமக்கு வேண்டியது கிடைக்கும். இன்றுவரை எனக்கு சரங்களில் நாட்டமில்லை. என்னோட ஆல் டைம் பேவரிட் லக்ஷ்மி வெடியும், குருவி வெடியும் தான். இரண்டு மூன்று லக்ஷ்மி வெடிகளை ஒன்றாக இணைத்து வெடிக்கும்போது ஆட்டம் பாம் தோற்கும். ஒரு முறை லக்ஷ்மி வெடியை கையில் பிடித்து தூக்கிப் போடும்போது அத்தை பார்த்துவிட்டார். "பொம்பள புள்ளையா இது" என நாள் முழுவதும் அர்ச்சனை (ரவுடி). இரவு நேரங்களில் ஆறேழு புஸ்வாணங்களை ஒரே நேரத்தில் கொளுத்தும்போது அவ்வளவு ரம்மியமாக இருக்கும். பாவாடையை (டெண்த் வரை என்னோட தீபாவளி ட்ரெஸ் எதாவது ஒரு பாவாடை. அப்புறம் தான் போனபோகிறதென மாடர்ன் டிரெஸ் வாங்கித்தந்தார்கள். பெரியம்மா ரெகமண்டேஷன்) லுங்கி மடித்துக் கட்டுகிறார்போல் கட்டிவிடுவார் பெரியம்மா. வெடி வச்சிட்டு ஓடிவர வசதியாக இருக்கும்.

தீபாவளி கொண்டாட்டங்களில் எனக்கு பிடிக்காத விஷயம் அதிகாலை எழுந்து குளிப்பது, தீபாவளி மருந்து திம்பது. லீவு நாள் அதுவுமா 5 மணிக்கெல்லாம் எண்ணெய் தேய்த்து குளிக்க சொல்லுவார்கள். அவ்வ்வ்வ்வ். எனக்கு இன்னும் நள்ளிரவே ஆகலன்னு கதறுவேன். I hate it:(

தலை தீபாவளியின்போது மூன்று மாத கர்ப்பமாக இருந்ததால் நோ பட்டாசு. ஒரு துணுக்கு ஸ்வீட் சாப்பிட்டாலும் வயிற்றைப் பிரட்டி வாந்தி வந்துவிடும். அடுத்த தீபாவளிக்கு ஜூனியருக்கு ஆகாதென நோ வெடிச்சத்தம். போன தீபாவளி ஏதோ சுமாராய் வெடி வைத்து மிச்ச நேரம் அடுப்படியிலேயே கழிந்தது. இந்த முறை பட்டையக் கிளப்பனும்னு பிளான் பண்ணிருக்கேன். ஆண்டவன் சித்தம்:)

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் எனது தீபத்திருநாள் (அ) தீபாவளி நல்வாழ்த்துகள். Have a happy and safe diwali:)

October 7, 2009

விண்வெளியில் விசயகாந்த்

டிஸ்கி 1 : இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காக எழுதப்பட்டது. யார் மனது புண்படுமேயானால் கம்பேனி பொறுப்பேற்றுக்கொள்வதைப் பற்றி அப்பாலிக்கா யோசிக்கும்.

டிஸ்கி 2 : இந்தக் கதை நான் மூன்றாம் ஆண்டு பொறியியல் படிக்கும்போது சென்ற சுற்றுலாவின்போது உருவாக்கப்பட்டது. RT & SCR ராயல்டி என ஏதும் கிடைச்சால் ஷேர் பண்ணிக்கலாம். தர்ம அடின்னா அட்ரஸ் குடுங்க. அனுப்பி வைக்கிறேன்.

டிஸ்கி 3 : கதை எழுதும்போது??!! ரகுவரன் உயிருடன் இருந்ததால் அவரைத் தான் வில்லனாக்கினோம். இப்போது அந்த கேரக்டருக்கு மாற்றாக யாரையும் யோசிக்க முடியவில்லை:(

மஞ்சள் காமாலை புரொடெக்ஷ்ன்ஸ்
பெருமையுடன் வழங்கும்


CABTUN IN & AS

விண்ணரசு
- Saviour of earth.

கேப்டனுக்கு அப்பா மகன் என இரட்டை வேடம். இந்திய சினிமா வரலாற்றில் முதல் முறையாக ஜெனிபர் லோபஸ் ஹீரோயினாக நடிக்கிறார். மேற்கொண்டு கதைக்கு போவோம்.

நாசாவில் வேலை பார்க்கும் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் எல்லாம் கான்பரன்ஸ் ஹாலில் குழுமியிருக்கிறார்கள். எல்லோர் முகத்திலும் பதற்றம். பிரச்சனை இதுதான். செவ்வாய் கிரகத்திலிருக்கும் இரு வேற்றுகிரகவாசிகளின் சம்பாஷணையை ஒட்டுக் கேட்டபோது, அவர்கள் பூமியை அழிக்க திட்டமிட்டிருப்பது தெரிய வருகிறது. என்ன செய்வது என எல்லாரும் மண்டையப் பிச்சிக்கும்போது டீ சப்ளை பண்ற பையன் சொல்றான் "ஹ்ம்ம்ம்ம். இந்த உலகத்தை காப்பாத்த ஒருத்தரால தான் முடியும். அவர்தான் மண்ணரசு" (அப்பா கேப்டன்). எல்லாரும் ஏகமனதாக மண்ணரசுவை செவ்வாய்க்கு அனுப்ப முடிவு செய்து நாசா தலைம விஞ்ஞானி ரகுவரனை அணுகுகிறார்கள் (ரகுவரன் வில்லன் என சொல்லத் தேவையில்லை). ரகுவரனிடம் மண்ணரசுவின் வீர தீர பராக்கிரம செயல்களை சொல்லி சம்மதமும் வாங்குகிறார்கள்.

இப்போதான் அப்பா கேப்டனின் இண்ட்ரோ.

பேரரசுவின் பொன்னான வரிகளில், கண்ணம்மாபேட்டையில் ரிகார்டிங் செய்யும் ஸ்ரீகாந் தேவாவின் காதுக்கினிய இசையில் அட்டகாசமான இண்ட்ரோ சாங் வைக்கிறோம். மறக்காம கேப்டனின் கட்சி கொடியை க்ளோஸப்பில் காட்டுறோம். பாட்டு முடிஞ்சவுடனே பேமிலி செண்டிமெண்ட். மண்ணரசுக்கு ஏற்ற ஜோடியா அம்பிகா (முந்தைய படத்தில் இவங்க ஜோடிப் பொருத்தம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது). இவர்களின் மகனாக விண்ணரசு. வாரணம் ஆயிரம் சூர்யா மாதிரி உடம்பெல்லாம் இளைக்க முடியாததனால வேற பையன நடிக்க வைக்கிறோம். இங்க ஒரு பேமிலி சாங். ஒரே இளநீர்ல ஸ்ட்ரா போட்டு குடிக்கறது மாதிரியான புதுமையான நிறைய காட்சிகள் இருக்கு.

இப்போ கதைய அடுத்த கட்டதுக்கு கிரேன் வச்சு தூக்குறோம் (கதையும் வெயிட்டு, கேப்டனும் வெயிட்டு. அடுத்த கட்டதுக்கு நகர்த்த முடியாதுல்ல. லாஜிக்! லாஜிக்!)

மண்ணரசு, ரகுவரன் மற்ற விஞ்ஞானிகளெல்லாம் கூடி கும்மியடிச்சு ஒரு முடிவுக்கு வர்றாங்க. மண்ணரசுவே செவ்வாய் கிரகத்துக்கு போய், ஸ்பெஷலா ப்ரோகிராம் செய்யப்பட்ட லேசர் கன்னை வச்சு ஏலியன்ஸை அழிக்கறதுன்னு முடிவு செய்யறாங்க. உடனே நம்ம கேப்டன் ஜிப் வச்ச ஷூவும், டார்ச் வச்ச தொப்பியும்(ஸ்பேஸ் டார்க்கா இருக்கும்ல. லாஜிக் இல்லன்னு யாரும் சொல்லிடக்கூடாது பாருங்க) போட்டுகிட்டு கிளம்புறாரு. போறதுக்கு முன்னாடி தாய்மார்களை கவரும் விதமா செண்டிமெண்ட் காட்சி. பொண்டாட்டியா பார்த்து இவர் கண் கலங்க அவிங்க அழ, படம் பார்க்குறவங்களும் கண்டிப்பா அழுவாங்க. இவர் கிளம்புறது தீபாவளி சீசன். அதனால புள்ளையாண்டானுக்கு லாரி லாரியா வெடி வாங்கிக் கொடுக்கிறாரு. அப்படியே ஷட்டில்ல கிளம்புறாரு. அங்க போய் லேண்ட் ஆனவுடனே அந்த லேசர் கன் தப்பா ப்ரோகிராம் பண்ணிருக்கறத நினைச்சு அதிர்ச்சியானலும், மேற்கொண்டு மெர்சிலாவாம அவருடைய ரிவர்ஸ் கிக்கினால் ஒரு 100 ஏலியன்ஸையும், மூஞ்சிய க்ளோஸப்ல காமிச்சு ஒரு 1000 ஏலியன்ஸையும், தேசபக்தி உபதேசத்தால ஒரு 10,000 ஏலியன்ஸையும் சாவடிக்கிறாரு. அவர் பேசிக்கிட்டிருக்கும்போது இரண்டு ஏலியன்ஸ் அவர பின்மண்டைல அடிச்சு ஒரு ஜெயில்ல அடைச்சு வக்கிறாங்க. அந்த ஜெயிலுக்கு கதவு கிடையாது. ஆனா வெளியே போகவோ, உள்ளே வரவோ முயற்சி செஞ்சா ஷாக்கடிச்சு சாவாங்க (Technology has improved so much u know).

அம்பிகா மண்ணரசு திரும்பி வருவாருன்னு காத்துக்கிட்டிருக்காங்க. வருஷங்கள் உருண்டோடுகின்றன. விண்ணரசு பெரிய்ய்ய்ய ஆளாகிறார். "அப்பா எங்கம்மா?" என அவரின் கேள்விக்கு அம்பிகா நடந்தவற்றை கூற தன் தந்தையை தேடி நாஸா செல்கிறார் (குருவில விஜய் மலேஷியா போவாரே. அது மாதிரி). ரகுவரனிடம் சென்று தந்தையை மீட்டு வர தன்னை செவ்வாய்க்கு அனுப்புமாறு கேட்க ரகுவரன் மறுத்துவிடுகிறார். ரகுவரனின் புது செகரட்ரியான ஜெ.லோ விண்ணரசுவின் அழகில் மயங்கி (வடிவேலு ஸ்டைலில் அல்ல), தன் பாஸ் தான் வில்லன் என்ற உண்மையை அவரிடம் சொல்கிறார். சினங்கொண்ட விண்ணரசு கண்கள் சிவக்க, கன்னத்து சதை துடிக்க தாயிடன் தானே செவ்வாய் கிரகத்துக்கு சென்று அப்பாவை கூட்டிவருகிறேன் என சபதம் செய்கிறார். செவ்வாய் கிரகத்துக்கு போவதற்கான ஏற்பாடுகளை செய்ய ஆரம்பிக்கிறார். ஹெல்ப் பண்ண ஜெ.லோவும் வர்றாங்க. இப்ப ஒரு டூயட் சாங். "காதல் ஆராரோ"ன்னு நரசிம்மா படத்துல ரொமான்ஸ் பண்ணுவாரே அந்த மாதிரி ஒரு பாட்டு. கண்டிப்பா நாக்க மடிச்சு ஆடற சீன் உண்டு. பாட்டு முடிஞ்சவுடனே ஒரு ராக்கெட்ட காட்றோம். கேப்டன் அத எப்படி செஞ்சாருங்கறதையும் காட்றோம். அவங்க அப்பா தீபாவளிக்கு வாங்கிக் கொடுத்த பட்டாசில் இருக்கும் வெடி மருந்தெல்லாம் சேர்த்து வச்சு ராக்கெட் பண்றாரு (எப்பூடி).

விண்ணரசு ஜெ.லோவுடன் செவ்வாய் கிரகத்துக்கு போறாரு. அங்க இறங்கி யார் கண்ணுலயும் படாம ராக்கெட்ட ஒளிச்சு வெக்கிறாரு. அப்படியே ஒரு ஏலியன ஃபாலோ பண்ணி அப்பாவை அடைச்சு வச்சிருக்க ஜெயில கண்டுபிடிக்கிறாரு. மண்ணரசு ஜெயில் கதவ பத்தின மேட்டர சொன்னதும் விண்ணரசு அலட்டிக்காம அந்த ஜெயில் சுவற்றை ரெண்டு கையாலையும் பிடிச்சு உடம்ப ஷேக் பண்றாரு. கேப்டன் உடம்புல பாயற மின்சாரம் ஷார்ட் சர்க்யூட் ஆகி, மண்ணரசு தப்பிச்சிடறாரு. ரெண்டு பேரும் சேர்ந்து செவ்வாய் கிரகத்துல எல்லா இடத்திலயும் பாம் வைக்கிறாங்க. அது வரைக்கும் ஏலியன்ஸ் என்ன பண்ணாங்கன்னு யாரும் கேக்கக்கூடாதுல்ல. அதனால அப்ப ஜெ.லோவோட அயிட்டம் நம்பர் ஒன்னு இருக்கு (லாஜிக் மிக முக்கியம் அமைச்சரே). ஏலியன்ஸ் தாங்கள் முட்டாளக்கப்பட்டதை உணருவதற்குள் மூவரும் ராக்கெட் ஏறி தப்பிக்கிறாங்க. செவ்வாய் கிரகமும் வெடித்து சிதறுகிறது.

மண்ணரசு நேரா யு.எஸ் பிரசிடெண்ட் கிட்ட ரகுவரனப் பத்தி சொல்லி அவருக்கு தண்டனை வாங்கி கொடுக்கிறாரு. விண்ணரசு நாசாவோட புது தலைவராகறாரு. And they lived happily forever:)

October 1, 2009

நளா'ஸ்

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


CTSல் வேலை செய்தபோதே இந்த ரெஸ்டாரெண்டைப் பார்த்திருக்கிறேன். சரியான செட் அமையாததால் போகவில்லை. தாம்பரத்திலிருந்தபோது குரோம்பேட்டையில் உள்ள கிளைக்குப் போகணும்னு நானும் ரகுவும் நிறைய தடவை ட்ரை பண்ணி தள்ளிப் போச்சு. இந்த முறை வேளச்சேரியில் இதைப் பார்த்தவுடன் முதல்ல இங்கதான் போகனும்ன்னு முடிவு செய்தோம்.

இரவு உணவுக்கு சென்றோம். கூட்டம் அம்முகிறது. இத்தனைக்கும் வார நாட்களில். ஒரு பத்து நிமிட காத்திருப்பிற்கு பின் டேபிள் கிடைத்தது. Ambience ஒன்றும் ஆஹா ஒஹோ இல்லை. சமையல்கட்டும், டைனிங் ஒரே இடத்தில். காமா சோமாவென ஒரே சத்தம். சரி மெயின் மேட்டருக்கு வருவோம். அளவான அடக்கமான மெனு. முருங்கைக்காய் சூப்பும், வெண்டைக்காய் பக்கோடாவும், சைனீஸ் பொட்டேட்டோவும் ஆர்டர் செய்தோம். சூப்பும் வெண்டைக்காய் ப்ரையும் அட்டகாசம். சைனீஸ் ஐட்டம் ரொம்பக் கேவலமாய் இருந்தது.


பத்து பதினைந்து வெரைட்டி ஆப்பங்கள் இருக்கு. பிளையின் ஆரம்பித்து மட்டன் ஆப்பம் வரை. நாங்கள் பனீர் சீஸ் ஆப்பம், Gingely ஆப்பம், முட்டை மசாலா ஆப்பம் ஆகியவை ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பர்ப். சைட் டிஷ்ஷாக ஆர்டர் செய்த கடலைக் கறி ஓகேவாக இருந்தது (நான் செய்வதை விட சுமார் தான் என ரகு சொன்னது இங்கு அநாவசியம்:)).


ஸ்வீட் மெனுவிலிருந்து நான் அடைபிரதமனும், அவர் கேரட் அல்வாவும் சாப்பிட்டார். ரெண்டுமே சூப்பர். Authentic கேரள உணவகத்தின் அடைபிரதமனை விட இங்கு டக்கராக இருந்தது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - நளாஸ் ஆப்பக்கடை
இடம் - வேளச்சேரி விஜய நகர் பேருந்து நிலையம் அருகில். சதர்லேண்ட் எதிர்புறம். குரோம்பேட்டையிலும் ஒரு கிளை இருக்கிறது.
டப்பு - இரண்டு மாதங்கள் ஆனதால் சரியாக நினைவில்லை. ஆனால் பர்ஸை பதம் பார்க்கவில்லை.

பரிந்துரை - தாரளமாக போகலாம். Worth a try:)

September 24, 2009

காதல் தவம்

வீடு மாற்றியபோது எடுத்து வைத்த புத்தகங்களை அடுக்கிவைத்துக்கொண்டிருந்தேன். கண்ணில் பட்டது தேவதைகளின் தேவதை. தபூ சங்கரின் உரைநடை மற்றும் கவிதை வடிவக் காதல். மீள் வாசிப்பு செய்ய நினைத்து தனியே எடுத்து வைத்தேன். வேலையெல்லாம் முடித்துவிட்டு கையிலெடுத்து காதலில் மூழ்கினேன். அவர் எழுதியிருப்பதெல்லாம் காதல். காதலைத் தவிர வேறொன்றுமில்லை. எனக்குப் பிடித்த சில கவிதைகள் இதோ.

உன்னைக் காதலித்துக்கொண்டு இருக்கும்போது
நான் இறந்துபோவேனோ
என்பது எனக்குத் தெரியாது.
ஆனால் நான் இறக்கும்போதும்
உன்னைக் காதலித்துக்கொண்டு
இருப்பேன்
என்பது மட்டும் தெரியும்.
*****

'இன்று நீ
என்ன ராகத்தில் சிரிப்பாயோ' என்றேன்.
நீ மெல்லிய
புன்னகை செய்தாய்.
இன்று மௌன ராகம்தானோ
*****

அற்புதமான காதலை மட்டுமல்ல
அதௌ உன்னிடம் சொல்ல முடியாத
அதி அற்புதமான மௌனத்தையும்
நீதான் எனக்குத் தந்தாய்.
*****

தினம் தினம்
ஒரு காக்கையைப்போல்
கரைந்து கொண்டிருக்கிறது
என் காதல்
உன் வருகைக்காக.
******

நீ ஊதித் தந்த
பலூன் நான்.
எனக்குள் உன் காற்று
இருக்கும் வரை
காதல்
என்னை விளையாடிக்
கொண்டிருக்கும்.
******

நான் வழிபட
இந்த உலகத்தில்
எத்தனையோ கடவுள்கள்
இருக்கிறார்கள்.

நான் பின்பற்ற
இந்த உலகத்தில்
எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.

ஆனால்,
நான் காதலிக்க
இந்த உலகத்தில்
நீ மட்டும்தான் இருக்கிறாய்!
*******




இதைப் படித்துவிட்டு நானும் காதல் பற்றி எழுதினால் என்ன எனத் தோன்றியது (அடுத்த ஏழரை உங்களுக்கு). அதற்கு முன்னாள் சும்மானாச்சுக்கும் ட்ரை பண்ண கவுஜ ஒன்னு.

என்
தனிமை எரித்து
உன்
காதல் குழைத்து
கண் மையிட வா.
கண்ணில் மையிட்டு
கன்னத்தில் முத்தமுமிட்டு போ.

September 22, 2009

படம் பேர் என்ன?

சில வாரங்களுக்கு முன் டிவியில் சிவகிரி என்ற அற்புதமான(அபத்தமான அல்ல) படத்தின் ட்ரெய்லரை (மட்டுமே) காணும் பெரும்பாக்கியம் கிடைத்தது. ஒரு வித பயபக்தியுடன் (பயம் மட்டுமில்ல) பார்த்து முடித்தபோது இப்படி டைட்டில் போட்டார்கள்.

சிவகிரி
He is different


இதைப் பார்த்துட்டு அப்பா "இதுல ஒரு மிஸ்டேக் இருக்குடி" என்றார். என் மூளைக்கு எட்டியவரை எதுவும் தோணவில்லை. என்னப்பா என கேட்டதுக்கு "Its different"னு வந்திருக்கனும் என்றார். ஹீரோ - முடியலடா சாமீ.
************

ரோஜாவுக்கு நல்ல ராசி. சந்திரபாபு நாயுடு கட்சில சேர்ந்ததுமே அவருக்கு இருந்த பேர் டேமேஜ் ஆச்சு. ரெட்டிய பூச்செண்ட்டோட போய் பார்த்தாங்க. மலர் வளையம் வைக்க வேண்டியதாய் போச்சு. இது ஆந்திராவில் இருக்கும் என் உறவினரின் கமெண்ட். எப்படியெல்லாம் யோசிக்கறாங்க?
*************

"கூலிக்காரன்"
இல்ல
"தொழிலாளி"
ப்ச்
"வேலைக்காரன்"
ஹே அது அமலாவோட நடிச்சது
"கூலி"
உஹூம்
"உழைக்கிறவன்"
கிர்ர்ர்ர்ர்
"சுமை தூக்கி"
அடிங்க..
ஆங் "உழைப்பாளி"

புரியலையா?

ரஜினி ரோஜாவோட ஜோடியா நடிச்ச படம் பேர் என்ன? கூலியா வருவாரே.

இப்ப முதல்ல இருந்து படிங்க. திடீர்ன்னு படம் பேரு மறந்து போய் அதைக் கண்டுபிடிக்கறதுக்குள்ள நூறு படத்துக்கு பேர் கிடைச்சிடும் போல. இந்தக் கூத்து எங்க வீட்டில் அடிக்கடி நடக்கும்.
*****************

ரொம்ப நாள் கழிச்சு தமிழ்மணம் பார்த்தா ஒரே உ.போ.ஒ விமர்சனம். கிர்ர்ர். அயன் படத்துக்கப்புறம் குவிக் கன் முருகன் பார்த்தோம். கொஞ்சம் ஸ்லோ மூவிங் என்றாலும் அங்கங்கே ஹார்ட்டி லாப்ஃஸ். "Situation urgent sir", "Next time put more elaichi in payasam" போது தியேட்டரே அதிர்ந்தது. நாசர் கொஞ்சம் ஓவர் ஆக்டிங். ராஜூ சுந்தரமும் வழக்கம்போல். அடுத்த வாரமாவது உ.போ.ஒ பார்க்கனும். பார்க்கலாம்.
***************

ரெஸ்டாரெண்ட் போய் கிட்டத்தட்ட ஒரு மாதமாகிறது. வீட்டுக்கும் ஹாஸ்பிட்டலுக்குமான அலைச்சலில் இரண்டு முறை BBQ Nation மிஸ்ஸாகிவிட்டது. ஏற்கனவே போன உணவகங்களைப் பற்றி தான் எழுதலாம்னு இருக்கேன். அடுத்த இடுகையில் எல்லார் வயித்தெரிச்சலையும் கொட்டிகலாம்னு பார்க்கிறேன். அதுக்கு முன்னாடி ஒரு துணுக் சாய்ஸ். அம்ரிதா ஐஸ்கீரீமின் நேச்சுரல்ச் அவுட்லெட்கள் ரொம்ப நன்றாக இருக்கிறது. Wide options. 100கிராம் ஐஸ்க்ரீம் 30 ரூபாய் + டேக்ஸ். பேஸ் தேர்ந்தெடுத்து டாப்பிங்கையும் நாமளே சூஸ் பண்ணலாம். ஒரு முறை போய் கற்பனை குதிரையை தட்டி விடுங்கள். யம்மி:)
************

September 17, 2009

ஓரம் போ..

நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள், உயரம் கம்மியான இரண்டு சக்கர சைக்கிள், லெக் ஸ்கூட்டர் என ஜூனியரின் வாகனங்கள் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன அவன் வளர்ச்சியை போல். எனக்கு நடைவண்டி ஓட்டிய ஞாபகம் இல்லை. தம்பியைப் பின்னாடி உட்காரவைத்துக்கொண்டு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவிருக்கிறது. அப்புறம் கொஞ்சம் உயரம் கம்மியான, இரண்டு பக்கமும் பேலன்ஸுக்கு வீல் இருக்கும் வாடகை சைக்கிள் ஓட்டியதும் நினைவிருக்கிறது. நான் முதன் முதல் சைக்கிள் கற்றுக்கொண்டது காஞ்சிபுரத்தில் இருந்தபோது. "எப்பதான் பெரிய சைக்கிள் கத்துக்க போற?" என மாமா பெண், மாடி வீட்டு ஷீலாவின் சைக்கிளை கடன் வாங்கி ஒட்டக் கற்றுத்தருகிறேன் என முதுகில் மாத்திக்கொண்டிருந்தாள். ஹூம் அவளுக்கு என்ன கோவமோ? அது வரை குரங்குப் பெடல் அடித்துக்கொண்டிருந்த நான் ஓரளவுக்கு ஓட்டக் கற்றுகொண்டேன். ஒட்டமட்டும்தான் கத்துக்கொடுத்தாளே தவிர ஏறவோ இறங்கவோ கற்றுக்கொடுக்கவில்லை. பிளாட்பார்மில் சைக்கிளை சாய்த்து நானே ஏறக்கற்றுக்கொண்டேன். இறங்குவது பெரும்பாடாக இருந்தது. நல்ல மொட்டை வெயிலில், புதிதாகப் போட்ட தார் ரோட்டில், வண்டியோடு விழுந்து, கை முட்டி கால் முட்டி எல்லாம் பேந்து, ஆயுதப் படை காவலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கப்புறம் பிராக்டீஸ்??!! பண்ணி பிரேக் போட்டவுடன் தொபுக் என கீழே குதிக்கும் அளவிற்கு வந்தேன்.

வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.

பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.

எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.

பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.

வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)

September 7, 2009

நினைவோ ஒரு...

வானம் இருட்டிக்கொண்டு வந்தது. மழை வருவதற்குள் வீடு போய் சேர வேண்டும் என கடவுளை வேண்டிக்கொண்டே ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தேன். எப்படியும் இந்த டிராஃபிக்கில் வீடு போய் சேர ஒரு மணி நேரமாவது ஆகும். உட்கார்ந்தவுடனே செல்போன் ட்ர்ர்ரியது. லேண்ட் லைனிலிருந்து வந்த நம்பர். மதியமே மீட்டிங்கில் இருக்கும்போது இதே நம்பரிலிருந்து வந்தது. பொதுவாக தெரியாத நம்பர்களில் இருந்து வரும் அழைப்புகளுக்கு அலட்டிக்கொள்வதில்லையென்றாலும் இரண்டு தடவை யார் செய்வார்கள் என்று யோசித்துக்கொண்டே எடுத்தேன்.

"ஸ்வேதா இருக்காங்களா" என்ற பெண் குரல் கேட்டது.

சட்டென்று குரலை அடையாளம் கண்டுக்கொள்ள முடியாததால் மறுபடியும் ஹலோ என்றேன். இந்த முறை

"ஸ்வேதா இருக்காங்களா நான் செல்வி பேசறேன்".

செல்வி பேரைக் கேட்டவுடன் ஏற்பட்ட ஆச்சர்யத்தை மறைத்துக்கொண்டு "ஹே செல்வி எப்படியிருக்க?" என்றேன். பத்து நிமிடம் பேசியபிறகு செல்வி தயங்கியவாறே "சித்தி உன்னை பார்க்கனும்னு சொல்லுது ஸ்வேதா" என்றாள். என் மௌனத்தின் அர்த்தம் புரிந்தவளாய் "ஒரே ஒரு தடவை வா ஸ்வேதா. எனக்காக. நம் பிரெண்ட்ஷிப்பிற்காக. ப்ளீஸ்". முயற்சி செய்கிறேன் என போனை வைத்தேன்.

போனை வைத்ததும் தூறல் போட ஆரம்பித்தது. தூறலுக்கு கிளம்பும் மண்வாசனைப்போல் செல்வியின் போன் அவள் நினைவுகளை என்னுள் கிளறிச் சென்றது.


செல்வியும், அம்மி ஆண்ட்டியும் என் நினைவில் சிரித்துக்கொண்டேயிருந்தார்கள்.

தீபாவளிக்கு நான்கு நாட்களுக்கு முன் தான் அந்த காலனிக்கு குடிவந்தோம். வந்தன்னிக்கே அம்மாக்கு மெட்ராஸ் ஐ. தீபாவளியன்று பலகாரம் வினியோகிக்கும் வேலை என்னிடம் தரப்பட்டது. எங்கள் வீட்டுக்கு பக்கத்து வீட்டில் இருந்தவர்கள் அம்மி ஆண்ட்டி. எல்லாரும் அவங்களை அப்படிதான் கூப்பிடுவாங்க. அம்மி ஆண்ட்டிக்கு இரண்டு குழந்தைகள். அங்கிள் மேத்ஸ் லெக்சரர். மாநிறம் தான் என்றாலும் மாசில்லாத முகத்தில் எப்போதுமே படர்ந்திருக்கும் ஒரு சினேகப் புன்னகை. அம்மி ஆண்ட்டியின் சிரிப்பை ஆயுசுக்கும் மறக்கமுடியாது. செய்யும் எல்லா வேலைகளையும் ரசனையோடு செய்வார். ஸ்வேதாக்குட்டி என்றவர் அழைக்கும்போது பாசமும், அன்பும் தெரிக்கும். முக்கால்வாசி நேரம் ஆண்ட்டி வீட்டிலேயே தான் இருப்பேன். என்ன செய்தாலும் ஸ்வேதாக்கு பிடிக்கும் என்று குடுத்தனுப்புவார். ஸ்வேதா தான் என் மூத்தப்பொண்ணு என எல்லாரிடம் சொல்லுவார்.

அம்மா என்னை திட்டினால் அம்மாவிடம் சண்டைக்கு வருவார். ஆண்ட்டியின் அக்கா பொண்ணு செல்வி. லீவுக்கு இங்கு வரும். எனக்கும் செல்விக்கும் நிறை விஷயங்களில் ஒத்துப்போகும். பாட்டு, படிப்பு, புத்தகங்கள் என நிறைய விஷயங்களில் எங்கள் ரசனையை பகிர்ந்து கொண்டோம். செல்வி என்னை விட ஓரு வருடம் தான் பெரியவள். என் பிறந்தநாளுக்கு தவறாமல் வாழ்த்து மடல் அனுப்புவாள். அந்த காலனிக்கு சென்றதிலிருந்து காலாண்டு, அரையாண்டு லீவுக்கு ஊருக்குப்போவதில்லை. செல்வியும் நானும் ஜோடிப் போட்டுக்கொண்டு ஊர் சுற்றினோம்.

நான் ப்ளஸ்டூ படித்துக்கொண்டிருந்தபோது செல்விக்கு எங்கள் ஊரில் உள்ள பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தது. செல்வி அம்மி ஆண்ட்டி வீட்டிலேயே தங்கி படிப்பதென முடிவானது. எனக்கு ரொம்ப சந்தோஷம். என் வயசையொத்த தோழி அருகிலேயே இருப்பது மகிழ்வாய் இருந்தது. செல்வி என்னை காலேஜூக்கு கூட்டிப் போய் தன் நண்பர்களிடம் அறிமுகம் செய்தது. ப்ளஸ்டூ முடித்ததும் எனக்கும் அதே காலேஜில் வேறு துறையில் இடம் கிடைத்தது. ராகிங் பண்ண முயன்ற சீனியர்களிடம் என் சொந்தக்கார பொண்ணு என சொல்லி காப்பாற்றிவிட்டது. ஒன்றாக காலேஜ் போகவர ஆரம்பித்த வேளையில் அப்பாவிற்கு மாற்றலாகி ஐந்து கி.மீ தொலைவிலுள்ள வேறு ஊருக்கு சென்றோம்.

வீட்டை காலி செய்த அன்று நானும் ஆண்ட்டியும் அழுத அழுகையை இன்று நினைத்தால் சிரிப்பு வரும். அவ்வளவு எமோஷனல் சீன். இதற்கிடையில் காலேஜில் செல்வியை ஒரு பையனோடு அடிக்கடி பார்க்க நேரிட்டது. ஒரே வகுப்பு என்பதால் எனக்கு எதுவும் தவறாக தெரியவில்லை. அம்மி ஆண்ட்டியுடன் போனில் அடிக்கடியும் நேரில் எப்பவாவதும் பேசிக்கொண்டிருந்தேன். காலேஜ் போக வரவே நேரம் சரியாக இருந்தது. அதோடில்லாமல் காலேஜில் விரிந்த நட்புவட்டம் மெல்ல ஆண்ட்டி வீட்டிற்க்கு செல்வதைக் குறைத்தது. பலத்த மழை மெல்ல அடங்குவது போல் அடர்ந்த உறவு மெல்ல மெல்ல விட்டுக்கொண்டிருந்தது.

செல்வி பைனல் இயர் முடித்து இண்டர்வ்யூகளை அட்டெண்ட் செய்துகொண்டிருந்தது. அந்த வேளையில் செல்விக்கு வீட்டில் பையன் பார்க்கத் தொடங்கினார்கள். வந்த இரண்டு மூன்று வரன்கள் முதலில் சரியென்று சொல்லிவிட்டு பின்னர் போன் பண்னி வேண்டாமென்றார்கள். ஆண்ட்டி அம்மாவிடம் ரொம்ப வருத்தப்பட்டார்கள்.

பின்னர் ஒருநாள் வீட்டிற்கு வந்த ஆண்ட்டி ஆவேசமாக

"உன்னை என் பொண்ணு மாதிரி பார்த்தேனே. இப்படி பண்ணிட்டியே. நீ நல்லாருப்பியா? நாசமாபோய்டுவ. உனக்கு கல்யாணம் ஆவாம உங்கம்மா கஷ்டப்படப்போறாங்க"

என மண்ணை தூற்றி வாரி சாபமிட்டார். வீட்டில் யாருக்கும் ஒன்றுமே புரியவில்லை. எனக்கும்தான். ஆனால் எல்லாருக்கும் ரொம்ப கோவம். முக்கியமாய் எனக்கு. என்ன ஏது என்று தெரியாமலேயே ரொம்ப பாசமாய் இருந்தவரிடமிருந்து இப்படிபட்ட வார்த்தைகளை நான் சுத்தமாக எதிர்பார்க்கவில்லை. அந்த சம்பவத்திற்க்குப் பிறகு அம்மி ஆண்ட்டியுடனான தொடர்பு சுத்தமாய் விட்டுப்போனது. காலேஜ் முடிக்கும்தருவாயில் அப்பாவிற்கு மறுபடியும் மாற்றலாகி சென்னை வந்துவிட்டோம். பின்னர் பவுனம்மாவின் மூலமாக செல்வி தன் கூடப் படித்த பையனை காதலித்ததாகவும், அவன் தான் பையன் வீட்டாரிடம் இல்லாததும் பொல்லாததும் சொல்லி எல்லா வரனையும் கெடுத்ததாகவும், ரொம்ப வருஷம் கழித்து சொந்த அத்தைப் பையனுக்கே செல்வியை ரெண்டாம் தாரமாக கல்யாணம் செய்துவைத்துவிட்டதாகவும் தெரியவந்தது. எனக்கு இந்த காதல் விவகாரம் முன்னமே தெரியுமென்றும், நாந்தான் வேண்டுமென்றே மறைத்துவிட்டதாகவும் அம்மி ஆண்ட்டி நினைத்தார் எனவும் சொன்னார். ரொம்பவே எரிச்சலாகிப் போனதெனக்கு. ஆண்ட்டி “இதெல்லாம் உண்மையாடி” என என்னை ஒரு வார்த்தை கேட்டிருக்கலாமே எனத் தோன்றியது. சிறிது நாட்களில் எல்லாம் மறந்து என் வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருந்தேன்.

கிட்டத்தட்ட ஏழு வருடங்கள் கழித்து செல்வியிடமிருந்து போன். அவள் குரலில் இருந்த கெஞ்சல் ஏனோ எனக்கு ஆண்ட்டியை உடனே பார்க்கவேண்டும் போலிருந்தது. அம்மாவிற்கு போன் செய்தேன். உன் இஷ்டம்மா என்றார். வரும் ஞாயிறு அவரையும் அழைத்துக்கொண்டு போய் பார்த்துவிட்டு வரவேண்டும் என நினைத்துக்கொண்டேன். அவரிடம் கன்பஃர்ம் செய்துவிட்டு செல்வியை அழைத்து, வருவதை உறுதிப்படுத்தவேண்டும் என யோசித்துக் கொண்டிருக்கையில் ஸ்டாப்பிங் வந்தது.

மழையின்றி வீடு வந்து சேர்ந்ததுக்கு கடவுளுக்கு நன்றி சொல்லிக்கொண்டேன். மழையின்போது ஆண்ட்டி போடும் இஞ்சி டீ நினைவுக்கு வந்தது. அன்று முழுவதும் ஆண்ட்டியே நினைவிலிருந்தார். மெல்ல ஆண்ட்டி செய்தது தவறில்லையோ எனக்கூட தோன்றியது.

நான்கு நாட்கள் கழித்து மதியம் மூன்று மணியளவில் செல்வியிடமிருந்து அழைப்பு வந்தது. அவளுக்கு போன் செய்ய மறந்தவிட்டதை நினைத்து வருந்திக்கொண்டே காலை அட்டெண்ட் செய்தேன்.

அழுதுக்கொண்டே செல்வி அம்மி ஆண்ட்டி கேன்சரால் இறந்ததைச் சொன்னாள். என்னையும் மீறி வெடித்து அழ தொடங்கியிருந்தேன்.இஞ்சி டீயின் வாசம் அறையெங்கும்.

..

September 2, 2009

காத்திருந்து காத்திருந்து

காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இந்த வரிகளை நம் வாழ்க்கையில் ஏதாவதொரு தருணத்தில் பாட வேண்டியதாயிருக்கிறது. சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது. வர வர என் நிலைமை இந்த மூன்றாவது கேட்டகிரியில் வந்து தொலைகிறது.

எங்கும் காத்திருத்தல் எதிலும் காத்திருத்தல் என்று வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் மட்டும் ஏன் இப்படி? என கேட்குமளவிற்கு கடுப்பாய் இருக்கிறது. மாமனாரை மருத்துவமனைக்கு செக்கப்புக்கு அழைத்துச் செல்ல பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். கரெக்டாக பத்தேமுக்காலுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்தோம் (என் மாமனார் என்னை விட பங்க்சுவல்).எல்லாரையும் பார்த்து முடித்துவிட்டு டாக்டர் மாமனாரை செக்கப் செய்தபோது மணி 1.30. நடுவே இரண்டு முறை ரிசப்ஷனில் போய் கேட்டுவிட்டு வந்ததுக்கு "இல்ல மேடம். டிரசிங் கேசெல்லாம் டாக்டர் கடைசியா தான் பார்ப்பார்" என்றார்கள். அத அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போதே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே என கேட்டுவிட்டு வந்தேன். எரியும் கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் விதமாக மாமனார் "போன தடவை வந்தபோது அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ணலம்மா. இந்த தடவை இப்படி ஆயிடுச்சே" என்றார்.

அடுத்தும் ஹாஸ்ப்பிட்டல் தவம் தான். டோக்கன் வாங்கிக் கொண்டு மடியில் உட்கார்ந்துருவேனா என ரகளைப் பண்ணும் ஜூனியரின் பின்னால் இன்னும் மூணு பேர்தான் என்ற கவுண்டிங்கோட காத்திருந்து, என் நம்பரைக் கூப்பிடும்போது அரக்க பரக்க ஒரு அம்மா ஓடிவருவார். "புள்ளைக்கு இழுக்குது. நான் கொஞ்சம் பார்த்துடறேனே". மனிதாபிமானம் இன்னும் மரிக்காத நிலையில் சரி என்று அவரை அனுப்பிவிட்டு இன்னொரு பதினைந்து நிமிடம் ஜூனியர் பின்னால் ஓடிக்கொண்டிருக்க நேரிடும். ஆனால் இன்றுவரை நான் அவசரமாய் பார்க்கவேண்டிருக்கும் நிலையிலும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது:(

கடைல பில்லு போடற எடத்துல கூட தொல்லை பண்ணுவாங்க. ஒன்னு ஸ்கேனிங் மெஷின் வொர்க் பண்ணாது. இல்ல அந்த கம்ப்யூட்டர் ஹேங்காகி தொலைக்கும். மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் என்பார்கள். இல்லன்னா யாராவது ரெண்டே ரெண்டு ஐயிட்டம் தான் ப்ளீஸ் என சொல்லி நாம் தலையசைப்பதற்க்கு முன் பொருளை கவுண்டரில் வைத்துவிடுவார்கள். அந்த ரெண்டு அயிட்டத்தை பில் பண்ணுவதற்குள் இன்னும் நான்கு பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு "மறந்துட்டேன்" என இளிப்பார்கள். வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்.

இதெல்லாத்தையும் விட மரணக் கொடுமை இந்த பஸ்ஸுக்கு காத்துகிட்டிருக்கிறது. கரெக்டா நாம போகவேண்டிய டைரக்ஷன்ல வரவே வராது. "மேரா நம்பர் கப் ஆயேகா" என வர்ற பஸ்களின் நம்பரைப் பார்த்துப் பார்த்தே கண்ணு பூத்துப் போய்டும். இது நடுவுல ஏதாவது ஒரு பிரஹஸ்பதி வந்து "ரொம்ப நேரமா நிக்கறியேம்மா. எங்க போகனும்"ன்னு கேக்கும். உனக்கெதுக்கு அந்த டிடெய்லுன்னு நம்ம பார்த்தா "எந்த பஸ்சுன்னு தெரியாம நிக்கறியோன்னு கேட்டேன்" என வெறுப்பேத்துவார்கள். உங்க பொது சேவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுன்னு நொந்துகிட்டு காத்திருத்தலை தொடர வேண்டியது தான்.

இதோட நெட் கனெக்ஷனுக்கு வெயிட்டிங், நண்பர்களுக்காக வெயிட்டிங் (ஒருத்தரும் பங்சுவல் கிடையாது), ஹோட்டல்ல வெயிட்டிங், பின்னூட்டத்துக்கு வெயிட்டிங்ன்னு அப்பப்பா. வாழ்க்கைல எவ்வளவு நேரம் காத்திருக்கறதுல வீணாப் போகுது. ஆனாலும் சில சமயங்களில் காத்திருப்பது சுகத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது:)

இந்தப் பாட்டு தான் நான் முதன் முதலில் பாடிய (இரண்டே வரி) பாடலாம். ரெக்கார்ட் செய்த கேஸட் இன்னும் என் பெரியம்மாவிடம் இருக்கிறது. ஊருக்குப் போகும்போதெல்லாம் இழுத்து இழுத்து பாடின பொண்ணு இப்ப என்னம்மா பேசுது என சொல்லி கிண்டல் செய்வார்கள். Nostalgia:)

August 26, 2009

அஞ்சலையும் அஞ்சனாவும்

ரம்மியம், துள்ளல் என கலந்து கட்டி அடிக்கும் குரலுக்கு சொந்தக்காரர். எந்த கடவுளுக்கு நேந்துகிட்டு பாட ஆரம்பிச்சாரோ தெரியல. ஹிட்ஸ் மேல ஹிட்ஸா கொடுத்துகிட்டே இருக்கார். ஆங் பாடகர் யாருன்னு தலைப்பை வெச்சே கெஸ் பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போதான் அஞ்சலைய வச்சு ஆட வைச்சார். இப்போ அஞ்சனான்னு உருகிட்டிருக்கார். கார்த்திக். இப்போதிருக்கும் இளம் தலைமுறைப் பாடகர்களில் தி மோஸ்ட் வெர்சடைல். அழகானவரும் கூட;)

ரஹ்மானால அறிமுகப்படுத்தப்பட்டு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாக லைம் லைட்டிலேயே இருப்பவர். சீசனுக்கு ஒரு ஹிட் கொடுத்திடறார். 2001ல் வெளிவந்த ஸ்டார் படத்தில் official ப்ளேபேக் சிங்கராக அறிமுகமானார். நேந்துகிட்டேன் பாடல் சூப்பர் ஹிட்.






பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான மின்னலே படத்தில் இரண்டு தீம் மியுசிக்கில் இவர் குரல் எட்டிப்பார்க்கும். "பூப் போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்"






2002ல் வெளிவந்த சூர மொக்கைப் படமான கண்களால் கைது செய் படத்தில் வரும் அனார்களி பாட்டு அட்டகாசம் (பாட்டுக்காகவே மாஸ் பங்க் செய்துவிட்டு படத்துக்குப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனது தனிக்கதை).






பின்னர் அழகியில் வரும் "ஒளியிலே தெரிவது தேவதையா" மூலம் பைத்தியம் பிடிக்க வைத்தார். நான் காலேஜ் படிக்கும்போது இவரோட பெஸ்ட் ஹிட்ஸ் நிறைய வந்தது. என் தோழி ஒருத்தி இவரின் கல்யாணத்தன்று நாள் முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாபாவில் "சக்தி கொடு" மற்றும் "மாயா மாயா" பாடல்கள் இவருக்கு நல்ல தீனியாக அமைந்தன. லேசா லேசா படத்தில் வரும் "அவள் உலக அழகியே" என்ற பாட்டு என் ஆல் டைம் பேவரிட்.

வித்யாசாகர் இசையமைப்பில் ரன் படத்தில் "தேரடி வீதியில் தேவதை வந்தா", யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏப்ரல் மாதத்தில் "சைட் அடிப்போம்" பாடல்கள் 2002ஆம் ஆண்டில் யூத்களின் தேசிய கீதமாய் இருந்தது.பாய்ஸ் படத்தின் மூலம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. "எனக்கொரு கேர்ள் பிரண்ட்" தான் மாசிவ் ஹிட் என்றாலும் எனக்குப் பிடித்ததென்னவோ "எகிறி குதித்தேன்" பாடல் தான்.

இதற்க்குப் பிறகு கஜினியில் இவர் பாடிய "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டிற்கு பிலிம்பேஃர் விருது கிடைத்தது. உன்னாலே உன்னாலே "உன்னாலே உன்னாலே", வாரணம் ஆயிரம் "அஞ்சலை", அயனில் "விழி மூடி யோசித்தால்", லேட்டஸ்டாக ஆதவன் "ஹசிலி பிசிலி" என பாடுவதெல்லாம் ஹிட்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கஜினியில் "பேக்கா", யுவராஜில் "ஷனோ ஷனோ" ரெண்டும் சூப்பர் ஹிட். தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் வரும் "அரே ரே" அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.






இவர் குரலில் எனக்குப் பிடித்த முக்கியமான பாடல்கள் சில

யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்.
யாரடி நீ மோகினி - ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
சிவப்பதிகாரம் - சித்திரையில் என்ன வரும்
உனக்கும் எனக்கும் - உன் பார்வையில் பைத்தியமானேன்
பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்
மருதமலை - ஹே என் மாமா
மொழி - என் ஜன்னலில் தெரிவது
காக்க காக்க - ஒரு ஊரில் அழகாய்
சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து
7G ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
வெயில் - காதல் நெருப்பின் நடனம்
ஓரம் போ - இதென்ன மாயம்
பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன்
வெண்ணிலா கபடி குழு - லேசா பறக்குது மனசு
அ ஆ இ ஈ - நட்ட நடு ராத்திரியை
நாளை - ஒரு மாற்றம்

பாடுவதோடு மட்டுமில்லாமல் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். விஜய்யின் லேட்டஸ்ட் கோக் விளம்பரம் இவர் பாடி இசையமைத்தது.






கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மியூசில் ஆல்பத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கார்த்திக்.

August 24, 2009

Cascade

டிஸ்கி 1 : பசி நேரத்தில் பதிவைப் படித்து வயிற்றெரிச்சல் பட்டால் கம்பேனி பொறுப்பாகாது.
டிஸ்கி 2 : இடுகை முழுக்க முழுக்க பெர்சனல் எக்ஸ்பீரியன்ஸை பேஸ் பண்ணி எழுதப்பட்டது. உங்களுக்கு மாற்று அனுபவம் ஏற்படுமெனில் அதற்கும் கம்பேனி பொறுப்பாகாது:)


முதல் முறை அலுவலக நண்பர்களுடன் பெசண்ட் நகரில் இருக்கும் கிளைக்கு சென்றேன். 12 பேர். இருவருடைய பர்த்டே ட்ரீட். சாப்பாடு, கிண்டல் கேலியென ரொம்ப சந்தோஷமாய் இருந்தது. நீண்ட இடைவேளைக்குப் பிறகு நான், ரகு, தம்பி, அண்ணா நால்வரும் நுங்கம்பாக்கம் கிளைக்கு சென்றோம்.

சப்பை மூக்கர்கள் திண்பதில் ஜப்பானீஸ் தவிர்த்து, சைனீஸ், தாய்லாந்து ஆகிய நாடுகளின் உணவுகள் (Not sure about the authenticity) கிடைக்கின்றன. அசைவத்திற்க்கு இணையாக சைவமும் மெனுவில் இருப்பது கூடுதல் சிறப்பு. நால்வரில் இருவர் சைவம், இருவர் அசைவம். Hunai Soup என்ற சைனீஸ் பார்ஸ்லி பிளேவர்ட் வெஜிடபிள் சூப்,
ஸ்பைசி சிக்கன் சூப்போடு, ப்ரைட் வெஜ் வாங்டான்ஸ்,
பெப்பர் சிக்கன்,
வெஜ் மோமோஸ்,

சிக்கன் திம்சும்ஸ் என ஆரம்பித்தோம்.
சூப் மிகவும் அருமையாக இருந்தது. அளவும் அதிகம். துளியூண்டு பெப்பர் சிக்கன் சாப்பிட்டேன். சிம்ப்ளி சூப்பர்ப். திம்சும் சுட சுட அட்டகாசமான சுவை. வாங்டன்சுடன் பரிமாறப்பட்ட Schezwan Sauce ரொம்ப அருமையாக இருந்தது.

மெயின் கோர்ஸிர்க்கு Spicy Thai rice, Schezwan ஸ்பைசி சிக்கன் ப்ரைட் ரைசோடு, டோஃபு தாய் கறி ஆர்டர் செய்தோம். எல்லாமே சூப்பராய் இருந்தது.
டெசர்ட்ஸ்க்கு ப்ரைட் ஐஸ்க்ரீம் (the best in town), லிட்சி கூலர், டேட்ஸ் பான் கேக் ஆகியவை ஆர்டர் செய்தோம். ப்ரைட் ஐஸ்க்ரீம் மிகவும் நன்றாக இருந்தது. மற்ற இரண்டும் ஓகே ரகங்கள்.


இந்த உணவகத்தின் மிகப் பெரிய அட்வாண்டேஜாக நான் கருதுவது உணவின் அளவு மற்றும் சர்வீஸ் தான். ஒரு ப்ளேட் ரைஸை இருவர் தாரளமாக சாப்பிடலாம். அதே போல் நீட்டாக பரிமாறுகிறார்கள். Sea food அதிகளவில் இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - Cascade
இடம் - காக்கனி டவர்ஸ், நுங்கம்பாக்கம் (United colours of Benetton மாடியில்). பெசண்ட் நகர் மற்றும் அண்ணா நகரிலும் கிளைகள் உண்டு.
டப்பு - நால்வருக்கான கம்ப்ளீட் மீல் 1400 ரூபாய் (இரண்டு பேர் அசைவம்)

பரிந்துரை - தாரளமாக போகலாம். ரிசர்வ் செய்யும் வசதியில்லை. வாரயிறுதியில் கூட்டம் கொஞ்சம் ஜாஸ்தி. மறக்காமல் ப்ரைட் ஐஸ்க்ரீமை ட்ரை பண்ணுங்கள்.