ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”
ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.
#ஙே!!!
***********
திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”
#தேவைதான் எனக்கு
**************
திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:
”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”
அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்
“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.
”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.
”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************
ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************
எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது
“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”
“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”
“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”
#ஙே!!!
********************
”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”
#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))
Showing posts with label ஜூனியர். Show all posts
Showing posts with label ஜூனியர். Show all posts
February 13, 2012
December 13, 2011
கல்கியில் ஜூனியர் அப்டேட்ஸ்
நேற்றிரவு:
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
Labels:
பத்திரிக்கை,
பஸ்ஸ்,
ஜூனியர்
February 17, 2011
நல்லா கத வுடறான்யா
ஜூனியர் இரண்டாவது டெர்மில் எல்லாவற்றிலும் Outstanding மற்றும் Very Good (A) க்ரேட் வாங்கியிருக்கிறார். ஸ்டோரி டெல்லிஙில் மட்டும் B. சாயந்திரமானாலே அவனுடைய புத்தகங்களை தூக்கிக்கொண்டு வந்து சொல்லித் தர சொல்லிக் கேட்பான். ஆல்ஃபபெட்ஸ், நம்பர்ஸ், பிக்சர் கான்வர்சேஷன், ரைம்ஸ் என டெர்ம் போர்ஷன்ஸ் ஒவ்வொன்றாக முடித்து ஸ்டோரிக்கு வரும்போது சார் எண்ட் கார்ட் போட்றுவார். அதென்னவோ புக்கிலிருந்து கதைப் படிப்பது அவனுக்குப் பிடிக்கவில்லை. ராஜகுமாரி, நீதிக் கதைகள் என எதையாவது ஆரம்பித்தால் “இது வேணாம்மா. லயன் ஸ்டோரி சொல்லு” என்கிறான். அதுவும் எப்படியாப்பட்ட லயன் ஸ்டோரி? ஒரு முறை சொன்ன கதை இன்னொரு முறை ரிப்பீட் ஆகக் கூடாது. கண்டிப்பாக சிங்கம் யாரையாவது கடிக்கவோ/மிரட்டவோ செய்ய வேண்டும். இவர் வந்து சிங்கத்தை வீழ்த்தி அந்த யாரையோ காப்பாத்த வேண்டும். ஸப்ப்ப்பா..
சென்ற வருட துவக்கத்தில் அம்மாவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த ஒன்றரை மாதங்களும் அம்மாவுடன் தான் இருந்தான். நிறைய ஸ்லோகங்கள், பாடல்கள் கதைகள் ஆகியவை கற்றுக்கொண்டான். கடித்து துப்பி அவன் சொல்லும் கதைகளில் ஒன்று
வீடியோவிலிருப்பது
ஒரு ஊர்ல மைக் இருந்துச்சாம் (அம்மாவின் ஸ்டிக் மைக்காக மாறி, நரியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது). தொப்பை பசிச்சுச்சாம். காஆஆஆட்டுக்குப் போச்சாம். மேல பழம் இந்துச்சாம் (திராட்சை கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்ததால திராட்சை ஜெனரலைஸ்ட்டாக்கப் பட்டது). எட்டி எட்டி பாத்துச்சாம். எட்டவே முல்லையாம். உட்னே சீசீ இந்தப் பழம் புள்ள்க்கும் அப்படி சொல்லிட்டு குடுகுடு ஓடிப்போச்சாம். அவ்ளோதா கதை.
அவரின் லயன் ஸ்டோரி சாம்பிள் ஒன்று
ஒரு ஊர்ல லயன் இந்துச்சாம். தொப்பை பசிச்சுச்சாம். ராபிட் வந்துச்சாம். லயன் நான் உன்னை சாப்பிடப் போறேன்னு சொல்லிச்சாம். உடனே ராபிட் ஊஊஊ அழுதுச்சாம். லயன் ஆஆஆஆ சொல்லுச்சாம். உடனே ராபிட் சஞ்சு காப்பாத்து கத்திச்சாம். சஞ்சு ஓடிப்போய் லயன டிஷ்யூம் குத்தினானாம். ஏய் லயன் ஓடிப்போ இல்லன்னா டிஷ்ஷூம் அட்சிருவேன். நான் ஸ்ட்ராஆஆஆங்க் பாய் சொன்னானாம். லயன் பயந்து ஒடியேப்போச்சாம். அவ்ளோதான் கதை.
ஸ்கூலிலிருந்து கத்துக் கொண்டு வந்த இங்லீஷ் வெர்ஷன் ஒன்று
ஒன் டே லயன் வாஸ் ஸ்லீப்பிங் இண்டனன். மவுஸ் கேம் அண்ட் ப்ளேண்ட் ஆன் த லயன். லயன் காட் ஆஆங்கிரி (லொள்ளு சபா மனோகர் மாதிரி படிக்கவும்). லயன் செட் ஐ வில் ஈட் யூ. மவுஸ் செட் டோண்ட் ஈட் மீ. போதும்மா போரடிக்குது.
ஒரிஜினல் வெர்ஷன்
One day lion was sleeping in the den. A mouse came and played on the lion. Lion got angry. It said i will eat you. Mouse said "please dont eat me". இன்னும் கொஞ்சம் கதை பாக்கியிருக்கு. இந்த ரெண்டு லைனே அவனுக்கு போரடிக்குதாம். ஏன்னா ஆக்ஷன் இல்லைப் பாருங்க:)
வெரி இண்டலிஜண்ட் பாய். ஸ்டோரி தான் சொல்லவே மாட்டேங்கறான். நாங்க ”சொல்லிக்கொடுத்தாலும் நோன்னு சொல்றான். நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார் அவன் க்ளாஸ் டீச்சர். நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:)
சென்ற வருட துவக்கத்தில் அம்மாவிற்கு மூட்டு மாற்று அறுவை சிகிச்சை நடந்தது. அந்த ஒன்றரை மாதங்களும் அம்மாவுடன் தான் இருந்தான். நிறைய ஸ்லோகங்கள், பாடல்கள் கதைகள் ஆகியவை கற்றுக்கொண்டான். கடித்து துப்பி அவன் சொல்லும் கதைகளில் ஒன்று
வீடியோவிலிருப்பது
ஒரு ஊர்ல மைக் இருந்துச்சாம் (அம்மாவின் ஸ்டிக் மைக்காக மாறி, நரியின் இடத்தைப் பிடித்துக்கொண்டது). தொப்பை பசிச்சுச்சாம். காஆஆஆட்டுக்குப் போச்சாம். மேல பழம் இந்துச்சாம் (திராட்சை கொடுக்கக்கூடாதுன்னு டாக்டர் சொல்லிருந்ததால திராட்சை ஜெனரலைஸ்ட்டாக்கப் பட்டது). எட்டி எட்டி பாத்துச்சாம். எட்டவே முல்லையாம். உட்னே சீசீ இந்தப் பழம் புள்ள்க்கும் அப்படி சொல்லிட்டு குடுகுடு ஓடிப்போச்சாம். அவ்ளோதா கதை.
அவரின் லயன் ஸ்டோரி சாம்பிள் ஒன்று
ஒரு ஊர்ல லயன் இந்துச்சாம். தொப்பை பசிச்சுச்சாம். ராபிட் வந்துச்சாம். லயன் நான் உன்னை சாப்பிடப் போறேன்னு சொல்லிச்சாம். உடனே ராபிட் ஊஊஊ அழுதுச்சாம். லயன் ஆஆஆஆ சொல்லுச்சாம். உடனே ராபிட் சஞ்சு காப்பாத்து கத்திச்சாம். சஞ்சு ஓடிப்போய் லயன டிஷ்யூம் குத்தினானாம். ஏய் லயன் ஓடிப்போ இல்லன்னா டிஷ்ஷூம் அட்சிருவேன். நான் ஸ்ட்ராஆஆஆங்க் பாய் சொன்னானாம். லயன் பயந்து ஒடியேப்போச்சாம். அவ்ளோதான் கதை.
ஸ்கூலிலிருந்து கத்துக் கொண்டு வந்த இங்லீஷ் வெர்ஷன் ஒன்று
ஒன் டே லயன் வாஸ் ஸ்லீப்பிங் இண்டனன். மவுஸ் கேம் அண்ட் ப்ளேண்ட் ஆன் த லயன். லயன் காட் ஆஆங்கிரி (லொள்ளு சபா மனோகர் மாதிரி படிக்கவும்). லயன் செட் ஐ வில் ஈட் யூ. மவுஸ் செட் டோண்ட் ஈட் மீ. போதும்மா போரடிக்குது.
ஒரிஜினல் வெர்ஷன்
One day lion was sleeping in the den. A mouse came and played on the lion. Lion got angry. It said i will eat you. Mouse said "please dont eat me". இன்னும் கொஞ்சம் கதை பாக்கியிருக்கு. இந்த ரெண்டு லைனே அவனுக்கு போரடிக்குதாம். ஏன்னா ஆக்ஷன் இல்லைப் பாருங்க:)
வெரி இண்டலிஜண்ட் பாய். ஸ்டோரி தான் சொல்லவே மாட்டேங்கறான். நாங்க ”சொல்லிக்கொடுத்தாலும் நோன்னு சொல்றான். நீங்க கொஞ்சம் பாருங்க” என்றார் அவன் க்ளாஸ் டீச்சர். நீங்க ஏன் மேடம் மொக்கை கதையெல்லாம் போர்ஷன்ல சேத்தீங்க. ஆக்ஷன் ஓரியண்டட் கதைகளை சேர்த்துப் பாருங்க. எங்காளு கலக்குவாராக்கும் என சொல்ல நினைத்தேன். சொல்லவில்லை:)
Labels:
ஜூனியர்
November 19, 2010
பயணத் தேவைகளுக்கு...
தரை மற்றும் ஆகாய வழிப் பயணங்களை அடிக்கடி மேற்கொள்பவர்களுக்கு சிறப்பான வாய்ப்பு. நீங்கள் விரும்பும் மாடல் கார்/ஜீப்/பைக்குகள் குறைந்த விலைக்கு வாடகைக்குத் தரப்படும். பெட்ரோல் செலவில்லை. ட்ரைவருக்கு சம்பளம் தரத்தேவையில்லை. அதிவேகமான அதே சமயம் மிகப் பாதுகாப்பான பயணம் மேற்கொள்ளலாம்.
கார்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய பொருட்களை மிகக் குறைந்த செலவில் எங்கிருந்து எங்கு வேணுமானாலும் அனுப்பலாம். கண்டெய்னர் லாரிகள், ட்ரக்குகள், ஜேசிபி இயந்திரங்களும் கிடைக்கும்.
ஆடம்பரத்தை விரும்புவர்களுக்கு ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களும் கிடைக்கும். மேலே சொன்னது போல பைலட்டுக்கு சம்பளம் தேவையில்லை.
வாகனங்களின் அணிவகுப்பு உங்கள் பார்வைக்கு....




ஒன்னு ரெண்டு வாங்கலாம். வாரத்திற்கு மூனு நாலு வாங்கறான். ஐ மீன் அப்பாவோ/மாமாவோ வாங்கிக் கொடுத்திடறாங்க. வீடு முழுக்க இறைஞ்சி கிடக்கு. இவன தூங்க வச்சிட்டு இதெல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்கவே ஒரு மணிநேரம் பிடிக்குது:(
எந்திரிக்கும்போதே பஸ்ஸு, ஆட்டோ, லாரி, ரெட் கலர் காரு எல்லாம் வாங்கித் தர்றீயா என்ற கண்டிஷனோடு தான் பல் தேய்க்கும் வைபவம் ஆரம்பிக்கும்.
காலையில வேன் ஏறினவுடனே டாட்டா காமிச்சிட்டு, ஃப்ளையிங் கிஸ் கொடுத்திட்டு சார் சொல்றது “அம்மா ரெட் கலர் ஸ்கூட்டர்ல வந்திடு”. ஸ்கூட்டர்ல வந்திடு மட்டும் அப்படியே இருக்கும். டெய்லி ஒரு கலர். அதே மாதிரி கருப்பு கலர் பல்ஸர எங்கப் பார்த்தாலும் “அம்மா அவா தினேஷ் மாமா வண்டிய எடுத்துட்டு போறாங்க. தர சொல்லு” என அழுகை ஆரம்பித்துவிடும். பஸ்ஸையோ காரையோ எடுத்து வைத்துக்கொண்டு ”அம்மா நீ என் பக்கத்துல உக்காச்சிக்கோ. அப்பா டிக்கெட் வாங்கு” என விளையாட ஆரம்பித்துவிடுவான்.
மாமன மாதிரியே மெக்கானிக்கல் எஞ்சினியரா வருவானோ?
இன்னும் நிறைய தூரமிருக்கு. இப்பதான வண்டில ஏறியிருக்கான்:)
கார்கள் மட்டுமில்லாமல், தங்களுடைய பொருட்களை மிகக் குறைந்த செலவில் எங்கிருந்து எங்கு வேணுமானாலும் அனுப்பலாம். கண்டெய்னர் லாரிகள், ட்ரக்குகள், ஜேசிபி இயந்திரங்களும் கிடைக்கும்.
ஆடம்பரத்தை விரும்புவர்களுக்கு ஜெட் விமானங்கள் மற்றும் ஹெலிக்காப்டர்களும் கிடைக்கும். மேலே சொன்னது போல பைலட்டுக்கு சம்பளம் தேவையில்லை.
வாகனங்களின் அணிவகுப்பு உங்கள் பார்வைக்கு....
ஒன்னு ரெண்டு வாங்கலாம். வாரத்திற்கு மூனு நாலு வாங்கறான். ஐ மீன் அப்பாவோ/மாமாவோ வாங்கிக் கொடுத்திடறாங்க. வீடு முழுக்க இறைஞ்சி கிடக்கு. இவன தூங்க வச்சிட்டு இதெல்லாத்தையும் ஒழுங்குப்படுத்தி வைக்கவே ஒரு மணிநேரம் பிடிக்குது:(
எந்திரிக்கும்போதே பஸ்ஸு, ஆட்டோ, லாரி, ரெட் கலர் காரு எல்லாம் வாங்கித் தர்றீயா என்ற கண்டிஷனோடு தான் பல் தேய்க்கும் வைபவம் ஆரம்பிக்கும்.
காலையில வேன் ஏறினவுடனே டாட்டா காமிச்சிட்டு, ஃப்ளையிங் கிஸ் கொடுத்திட்டு சார் சொல்றது “அம்மா ரெட் கலர் ஸ்கூட்டர்ல வந்திடு”. ஸ்கூட்டர்ல வந்திடு மட்டும் அப்படியே இருக்கும். டெய்லி ஒரு கலர். அதே மாதிரி கருப்பு கலர் பல்ஸர எங்கப் பார்த்தாலும் “அம்மா அவா தினேஷ் மாமா வண்டிய எடுத்துட்டு போறாங்க. தர சொல்லு” என அழுகை ஆரம்பித்துவிடும். பஸ்ஸையோ காரையோ எடுத்து வைத்துக்கொண்டு ”அம்மா நீ என் பக்கத்துல உக்காச்சிக்கோ. அப்பா டிக்கெட் வாங்கு” என விளையாட ஆரம்பித்துவிடுவான்.
மாமன மாதிரியே மெக்கானிக்கல் எஞ்சினியரா வருவானோ?
இன்னும் நிறைய தூரமிருக்கு. இப்பதான வண்டில ஏறியிருக்கான்:)
Labels:
ஜூனியர்
June 15, 2010
நொடியில் பறக்கும் வருடங்கள்
காலம் தான் எத்தனை வேகமாக சுழல்கிறது. நேற்று தான் நடந்தவை போலிருக்கிறது.
அண்ணாவின் கல்யாணத்தில் நாத்தனார் முடிச்சு போட்டுவிட்டு கீழே இறங்கும்போதே என்னவோ போலிருந்தது. அசதியாக இருக்குமென விட்டுவிட சிறுது நேரத்திற்கெல்லாம் இனம் புரியாத வலி. நர்ஸாக இருந்த அத்தையிடம் வலியைப் பற்றி சொல்ல லேபர் பெயின் என்றுவிட்டார்கள். கொடுத்திருந்த தேதியை விட ஒரு மாதம் முன்னராகவே. கண்டிப்பாக ட்ராவல் செய்யக்கூடாது என மதுராந்தகத்தில் பார்த்த டாக்டர் சொல்லியும் (அம்மா வீட்டில் பிரசவம்) அண்ணா கல்யாணத்திற்கு வந்ததை எல்லோரும் கண்டித்தார்கள். மடிப்பாக்கத்திலிருந்து அடையார். அவசர அவசரமாய் டாக்டரை வரவழைத்தார் ரகு. செக் செய்து பார்த்துவிட்டு அனிதா பார்த்தசாரதி சொன்னது ”போடி உனக்கு இப்பல்லாம் ஆகாது. சித்திரை தான ஆறது. வைகாசில தான் பொறக்கும்.”
பத்து நாள் கழித்து ரெகுலர் செக்கப்பிற்கு போனபோது குழந்தை பொசிஷன் பார்க்க ஸ்கேன் எடுக்க சொன்னார் டாக்டர். ஸ்கேன் பண்ண மற்றொரு டாக்டர் தலைய சைடுவாக்கில் ஆட்ட அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை உள்ளவே தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் உடனே எடுத்துவிடுவது நல்லது எனவும் சொன்னார்கள். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டு தியேட்டருக்குப் போனதும், முதுகில் ஊசி போட்டு, சரியாய் 5.08க்கு ”பையன்ம்மா”, “4 கிலோ இருக்கான்”, “எப்படிம்மா தூக்கிட்டு நடந்த” இவற்றை தொடர்ந்து தொம் என்ற சத்தமும் வீல் என அவனின் முதல் குரலும் கேட்டது. I still dont know how i felt. வலியிலும் மயக்கத்திலும் அவனைப் பார்க்க முடியவில்லை. செக்கச் செவேல்ன்னு இருக்காண்டி என்ற அம்மாவின் வர்ணனை மட்டும் அடிக்கடி கேட்டு்க்கொண்டிருந்தது. ஒரளவுக்கு நினைவு வந்து பார்க்கையில் பச்சை நிற காட்டன் புடவையில் சுற்றப்பட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்று தொட்டு இன்று வரை மூன்று வருடங்களும் என் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிக் கொண்டிருக்கிறது குட்டிப் பிசாசு ஒன்று. முதல் சிரிப்பு, முதன் முதலில் கவிழ்ந்துப் படுத்தது, முட்டிப் போட்டது, உட்கார்ந்தது, தவழ்ந்தது, நின்றது, நடந்தது, அத்தை, மாமா, தாத்தா, ம்மா, தாட்டி (பாட்டி) ஆரம்பித்து அடடா மழடா, சிங்கம் சிங்கம் வரை ஒவ்வொரு நிகழ்வையும் கூடவே இருந்து பார்க்கும், பரவசப்படும் வாய்ப்பு கிடைத்தது/ஏற்படுத்திக்கொண்டது வரமே. நான்கு மாதக் குழந்தையை காப்பாற்றுவது கடினம், இருந்தும் முயற்ச்சிக்கிறோம் எனக் கூறியபோது கண்டிப்பாக என்னை விட்டுப் போகமாட்டான் என்று நினைத்தேன். எல்லாமே நேற்று நடந்தவை போல் கண் முன்னே ஓடுகிறது. மூன்று வருடங்கள் பறந்தேப் போய்விட்டன. 17ஆம் தேதியிலிருந்து பள்ளி செல்லவிருக்கிறான். ஏற்கனவே 8 மாதங்கள் ப்ளே ஸ்கூல் சென்றிருந்தாலும் ஏப்ரல் முதற்கொண்டு லாங் லீவில் இருக்கும் சார் எப்படி செட்டிலாவார் என்ற கவலை நிறையவே இருக்கிறது. டோரா பேக், டோரா லஞ்ச் பேக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (இதை எடுக்க அந்த போட்டோகிராபர் உயிர் போய் வந்த கதை தனியாக), என எல்லாம் ரெடி செய்தாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பேக்கை மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போய்ட்டு வந்துரேன் என டாட்டா காட்டுபவன் 17ஆம் தேதியிலிருந்து என்ன செய்யப் போகிறானோ என்று பயம்ம்ம்மாக இருக்கிறது.
ஆல் த பெஸ்ட் ச்சின்னு. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
அண்ணாவின் கல்யாணத்தில் நாத்தனார் முடிச்சு போட்டுவிட்டு கீழே இறங்கும்போதே என்னவோ போலிருந்தது. அசதியாக இருக்குமென விட்டுவிட சிறுது நேரத்திற்கெல்லாம் இனம் புரியாத வலி. நர்ஸாக இருந்த அத்தையிடம் வலியைப் பற்றி சொல்ல லேபர் பெயின் என்றுவிட்டார்கள். கொடுத்திருந்த தேதியை விட ஒரு மாதம் முன்னராகவே. கண்டிப்பாக ட்ராவல் செய்யக்கூடாது என மதுராந்தகத்தில் பார்த்த டாக்டர் சொல்லியும் (அம்மா வீட்டில் பிரசவம்) அண்ணா கல்யாணத்திற்கு வந்ததை எல்லோரும் கண்டித்தார்கள். மடிப்பாக்கத்திலிருந்து அடையார். அவசர அவசரமாய் டாக்டரை வரவழைத்தார் ரகு. செக் செய்து பார்த்துவிட்டு அனிதா பார்த்தசாரதி சொன்னது ”போடி உனக்கு இப்பல்லாம் ஆகாது. சித்திரை தான ஆறது. வைகாசில தான் பொறக்கும்.”
பத்து நாள் கழித்து ரெகுலர் செக்கப்பிற்கு போனபோது குழந்தை பொசிஷன் பார்க்க ஸ்கேன் எடுக்க சொன்னார் டாக்டர். ஸ்கேன் பண்ண மற்றொரு டாக்டர் தலைய சைடுவாக்கில் ஆட்ட அம்மா அழ ஆரம்பித்துவிட்டார்கள். குழந்தை உள்ளவே தண்ணி குடிக்க ஆரம்பித்துவிட்டதாகவும் உடனே எடுத்துவிடுவது நல்லது எனவும் சொன்னார்கள். மறுநாள் அதிகாலை 5 மணிக்கு எல்லோருக்கும் டாட்டா காட்டிவிட்டு தியேட்டருக்குப் போனதும், முதுகில் ஊசி போட்டு, சரியாய் 5.08க்கு ”பையன்ம்மா”, “4 கிலோ இருக்கான்”, “எப்படிம்மா தூக்கிட்டு நடந்த” இவற்றை தொடர்ந்து தொம் என்ற சத்தமும் வீல் என அவனின் முதல் குரலும் கேட்டது. I still dont know how i felt. வலியிலும் மயக்கத்திலும் அவனைப் பார்க்க முடியவில்லை. செக்கச் செவேல்ன்னு இருக்காண்டி என்ற அம்மாவின் வர்ணனை மட்டும் அடிக்கடி கேட்டு்க்கொண்டிருந்தது. ஒரளவுக்கு நினைவு வந்து பார்க்கையில் பச்சை நிற காட்டன் புடவையில் சுற்றப்பட்டு தூங்கிக்கொண்டிருந்தான்.

அன்று தொட்டு இன்று வரை மூன்று வருடங்களும் என் ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நிமிடத்தையும், ஒவ்வொரு நொடியையும் அழகாக்கிக் கொண்டிருக்கிறது குட்டிப் பிசாசு ஒன்று. முதல் சிரிப்பு, முதன் முதலில் கவிழ்ந்துப் படுத்தது, முட்டிப் போட்டது, உட்கார்ந்தது, தவழ்ந்தது, நின்றது, நடந்தது, அத்தை, மாமா, தாத்தா, ம்மா, தாட்டி (பாட்டி) ஆரம்பித்து அடடா மழடா, சிங்கம் சிங்கம் வரை ஒவ்வொரு நிகழ்வையும் கூடவே இருந்து பார்க்கும், பரவசப்படும் வாய்ப்பு கிடைத்தது/ஏற்படுத்திக்கொண்டது வரமே. நான்கு மாதக் குழந்தையை காப்பாற்றுவது கடினம், இருந்தும் முயற்ச்சிக்கிறோம் எனக் கூறியபோது கண்டிப்பாக என்னை விட்டுப் போகமாட்டான் என்று நினைத்தேன். எல்லாமே நேற்று நடந்தவை போல் கண் முன்னே ஓடுகிறது. மூன்று வருடங்கள் பறந்தேப் போய்விட்டன. 17ஆம் தேதியிலிருந்து பள்ளி செல்லவிருக்கிறான். ஏற்கனவே 8 மாதங்கள் ப்ளே ஸ்கூல் சென்றிருந்தாலும் ஏப்ரல் முதற்கொண்டு லாங் லீவில் இருக்கும் சார் எப்படி செட்டிலாவார் என்ற கவலை நிறையவே இருக்கிறது. டோரா பேக், டோரா லஞ்ச் பேக், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ (இதை எடுக்க அந்த போட்டோகிராபர் உயிர் போய் வந்த கதை தனியாக), என எல்லாம் ரெடி செய்தாகிவிட்டது. காலையில் எழுந்ததும் பேக்கை மாட்டிக்கொண்டு ஸ்கூலுக்கு போய்ட்டு வந்துரேன் என டாட்டா காட்டுபவன் 17ஆம் தேதியிலிருந்து என்ன செய்யப் போகிறானோ என்று பயம்ம்ம்மாக இருக்கிறது.
ஆல் த பெஸ்ட் ச்சின்னு. வேறெதுவும் சொல்லத் தோன்றவில்லை.
Labels:
ஜூனியர்
March 29, 2010
பல்பு வாங்கலயோ பல்பு
சஞ்சு பாட்டிலோட தண்ணி குடிக்காத. தொப்பைல உவ்வா வரும். டம்ளர்ல ஊத்திக்குடி.
(நான் பாட்டிலை வாயில் கவிழ்க்கும்போது) வித்யாம்மா. இந்தா தம்ளர். தொப்பைல உவ்வா வரும்.
பளிச். பளிச்
*****
சின்னு தாத்தாவ கடிக்கக்கூடாது. தாத்தா பாவம். தாத்தாக்கு வலிக்கும்.
சின்னு அப்படியே முழுங்காத. கடிச்சு சாப்பிடு.
ஆணாம். அசம் மம்மு பாவம். அசம் மம்முக்கு அலிக்கும்.
பளிச். பளிச்
*****
தூங்கும்போது பேசக்கூடாது பட்டு. கம்முன்னு தூங்கு.
(படுத்துக்கொண்டு போன் பேசும் என்னருகில் வந்து) ம்மா. கம்முன்னு தூங்கு.
பளிச். பளிச்.
******
ம்மா ச்சிங்க கத.
ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பட்டு சொல்லுவா. அடிக்கடி சொன்னா வாய் வலிக்கும்.
பட்டு நீ தாத்தாக்கு நரி கத சொல்லேன்.
ஆணாம். ஒன்னுதான். அலிக்கும்.
பளிச். பளிச்
*********
சஞ்சு ஐஸ் வாட்டர் குடிச்சா டாக்டர் நெபுலைசர் வச்சிடுவா.
அப்பா. தண்ணி பாட்டில் எடுத்துக் கொடேன்.
(பிரிட்ஜை திறக்கும் தாத்தாவின் காலை கட்டிக்கொண்டு)
ஆனா தாத்தா. வித்யாம்மா பாவும். தாத்தர் நெபூசர் அச்சுவா.
பளிச். பளிச்.
**********
வாக்கிங் கிளம்பும் தாத்தாவுடன் தானும் செல்வதாக ஒரே அடம்.
சின்னு பெரியவங்கதான் வாக்கிங் போகனும். நீ போனா உனக்கு கால் வலிக்கும்.
சின்னு இறங்கி நடந்து வா. அம்மாக்கு கை வலிக்குது.
ஆணாம். சஞ்சு கால் அலிக்கும். சஞ்சு பாவும்.
பளிச் பளிச்..
***********
வீசிங் வருவதால் சிட்ரஸ் பழங்களை தரவேண்டாமென டாக்டர் கூறியிருக்கிறார். அம்மாவிற்கு சாத்துக்குடி ஜூஸ் குடுத்ததை பார்த்துட்டான். எனக்கு என அழுகை.
பாட்டிக்கு உவ்வா இருக்குல்ல. அதான் மருந்து குடிக்கிறா. ஒகே.
சிறுது நேரம் கழித்து வந்து
ம்மா. சஞ்சுக்கு கால்ல உவ்வா. உவ்வா மருந்து குடு.
பளிச் பளிச்..
***********
ப்ர்ர்ர் என வாயால் வண்டி ஓட்டுவதும், எச்சிலைக்கொண்டு முட்டை விடுவதும் சில நாட்கள் பழக்கத்திலிருந்தன. தப்பு பட்டு. துப்பக்கூடாது ஒகே.
காலையில் பல் தேய்த்ததும் துப்பு என கூற
த்த்துப்ப்பக்கூடாது. த்தப்ப்பு.
பளிச். பளிச்.
***********
(நான் பாட்டிலை வாயில் கவிழ்க்கும்போது) வித்யாம்மா. இந்தா தம்ளர். தொப்பைல உவ்வா வரும்.
பளிச். பளிச்
*****
சின்னு தாத்தாவ கடிக்கக்கூடாது. தாத்தா பாவம். தாத்தாக்கு வலிக்கும்.
சின்னு அப்படியே முழுங்காத. கடிச்சு சாப்பிடு.
ஆணாம். அசம் மம்மு பாவம். அசம் மம்முக்கு அலிக்கும்.
பளிச். பளிச்
*****
தூங்கும்போது பேசக்கூடாது பட்டு. கம்முன்னு தூங்கு.
(படுத்துக்கொண்டு போன் பேசும் என்னருகில் வந்து) ம்மா. கம்முன்னு தூங்கு.
பளிச். பளிச்.
******
ம்மா ச்சிங்க கத.
ஒரு நாளைக்கு ஒரு தடவை தான் பட்டு சொல்லுவா. அடிக்கடி சொன்னா வாய் வலிக்கும்.
பட்டு நீ தாத்தாக்கு நரி கத சொல்லேன்.
ஆணாம். ஒன்னுதான். அலிக்கும்.
பளிச். பளிச்
*********
சஞ்சு ஐஸ் வாட்டர் குடிச்சா டாக்டர் நெபுலைசர் வச்சிடுவா.
அப்பா. தண்ணி பாட்டில் எடுத்துக் கொடேன்.
(பிரிட்ஜை திறக்கும் தாத்தாவின் காலை கட்டிக்கொண்டு)
ஆனா தாத்தா. வித்யாம்மா பாவும். தாத்தர் நெபூசர் அச்சுவா.
பளிச். பளிச்.
**********
வாக்கிங் கிளம்பும் தாத்தாவுடன் தானும் செல்வதாக ஒரே அடம்.
சின்னு பெரியவங்கதான் வாக்கிங் போகனும். நீ போனா உனக்கு கால் வலிக்கும்.
சின்னு இறங்கி நடந்து வா. அம்மாக்கு கை வலிக்குது.
ஆணாம். சஞ்சு கால் அலிக்கும். சஞ்சு பாவும்.
பளிச் பளிச்..
***********
வீசிங் வருவதால் சிட்ரஸ் பழங்களை தரவேண்டாமென டாக்டர் கூறியிருக்கிறார். அம்மாவிற்கு சாத்துக்குடி ஜூஸ் குடுத்ததை பார்த்துட்டான். எனக்கு என அழுகை.
பாட்டிக்கு உவ்வா இருக்குல்ல. அதான் மருந்து குடிக்கிறா. ஒகே.
சிறுது நேரம் கழித்து வந்து
ம்மா. சஞ்சுக்கு கால்ல உவ்வா. உவ்வா மருந்து குடு.
பளிச் பளிச்..
***********
ப்ர்ர்ர் என வாயால் வண்டி ஓட்டுவதும், எச்சிலைக்கொண்டு முட்டை விடுவதும் சில நாட்கள் பழக்கத்திலிருந்தன. தப்பு பட்டு. துப்பக்கூடாது ஒகே.
காலையில் பல் தேய்த்ததும் துப்பு என கூற
த்த்துப்ப்பக்கூடாது. த்தப்ப்பு.
பளிச். பளிச்.
***********
Labels:
ஜூனியர்
April 16, 2009
ஹேர் ஸ்டைல் - ஜூனியர் டைம்ஸ்
ஜூனியர் பிறந்தபோது தலை நிறைய முடி. ஆனால் சைடில் மட்டும் ஒன்னுமே இருக்காது. வீட்டிலிருப்பவர்களுக்கு அப்பவே கவலை. விளக்கெண்ணைய் தடவு அது இதுன்னு ஆயிரம் டிப்ஸ்.
ஒன்பது மாசத்துல எடுத்தது இது.
இது பெரியம்மா பண்ண வேலை
மொட்டை அடிக்கிறதுக்கு பத்து நாளுக்கு முன்னால எடுத்த போட்டோ இது. அம்மா வீட்ல வேலை செஞ்சவங்களோட கைங்கர்யம்.
அவனுக்கு காது குத்தினதுக்கப்புறம் எல்லாம் ரொம்ப பயந்தது மொட்டை அடிக்கதான். குலதெய்வம் கோயிலுக்கு மொட்டை அடிக்க போனபோது எக்ஸ்ட்ரா ஒரு வேண்டுதல வேற வெச்சிருந்தாங்க அம்மாவும் மாமியாரும். அது என்னன்னா மொட்டை அடிக்கும்போது குழந்தைக்கு ரத்த காயம் ஆகக்கூடாதுன்னு. எங்க வேண்டுதல்களுக்கெல்லாம் வேலையே வைக்காம ஜூனியர் நடந்துகிட்டார். போட்டோவ பாருங்க.

துளிகூட அசையல. ஒருவேளை அவர் எடுத்தது துரைக்கு சுகமா இருந்ததா தெரியல.


கரெக்டா முடிஞ்சவுடனே எழுந்துட்டான்.


அப்புறம் கோவில் குருக்கள் வீட்டிலேயே குளிப்பாட்டி சந்தனம் தடவியாச்சு.

இது மொட்டை அடிச்சு ரெண்டு மாசம் கழிச்சு எடுத்தது. ஸ்பைக்ஸ் ட்ரை பண்ணினேன்:)

அதுக்கப்புறம் ரகுவோட தாத்தா தவறிட்டதால பாக்கி இருக்கும் ரெண்டு மொட்டைகள் தள்ளி போச்சு. நிறைய முடி வளர்ந்துடவே வியர்வை சேர்ந்து ரொம்ப கஷ்டமா இருந்தது. அடிக்கடி சளி வேற. டாக்டர் கூட ஹேர் கட் பண்ண சொன்னார். சரி சிகை அலங்கார நிபுணரை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து ஹேர் கட் பண்ணிடலாம்னு முடிவு பண்ணோம். காலைல 7 மணிக்கு வந்தவர் ஒரு மணிநேரம் கழிச்சு "நானும் எவ்வளவோ குழந்தைகளுக்கு முடி வெட்டிருக்கேன். இந்தளவுக்கு கஷ்டப்பட்டதே இல்லை". பேசாம ஒரு ட்ரிம்மர் வாங்கி நீங்களே கட் பண்ணிடுங்கன்னுட்டு போய்ட்டார்.
அதுக்கப்புறம் ரெண்டு தடவை அவனுக்கு ஹேர்கட் பண்ணியாச்சு. எலக்ட்ரிகல் ட்ரிம்மர் வாங்கிட்டு வந்து துரை நல்லா தூங்கும்போது நான் பிடிச்சுக்க ரகுவே வேலையே முடிச்சிட்டார். மொட்டை அடிக்காதது தான் குறை. நல்லா ஒட்ட வெட்டியாச்சு. சம்மருக்கு ஜூனியருக்கும் வசதியா இருக்கு. அநேகமா இந்த ஜூன் மாதம் அவனுக்கு ரெண்டாவது மொட்டை போடுவாங்கன்னு நினைக்கிறேன். போடறபட்சத்தில் பயணக்குறிப்புகளோட போட்டோ செஷன் ஒன்னு வெச்சிடலாம்.
ஒன்பது மாசத்துல எடுத்தது இது.
கரெக்டா முடிஞ்சவுடனே எழுந்துட்டான்.
அப்புறம் கோவில் குருக்கள் வீட்டிலேயே குளிப்பாட்டி சந்தனம் தடவியாச்சு.
இது மொட்டை அடிச்சு ரெண்டு மாசம் கழிச்சு எடுத்தது. ஸ்பைக்ஸ் ட்ரை பண்ணினேன்:)
அதுக்கப்புறம் ரகுவோட தாத்தா தவறிட்டதால பாக்கி இருக்கும் ரெண்டு மொட்டைகள் தள்ளி போச்சு. நிறைய முடி வளர்ந்துடவே வியர்வை சேர்ந்து ரொம்ப கஷ்டமா இருந்தது. அடிக்கடி சளி வேற. டாக்டர் கூட ஹேர் கட் பண்ண சொன்னார். சரி சிகை அலங்கார நிபுணரை வீட்டுக்கே கூட்டிட்டு வந்து ஹேர் கட் பண்ணிடலாம்னு முடிவு பண்ணோம். காலைல 7 மணிக்கு வந்தவர் ஒரு மணிநேரம் கழிச்சு "நானும் எவ்வளவோ குழந்தைகளுக்கு முடி வெட்டிருக்கேன். இந்தளவுக்கு கஷ்டப்பட்டதே இல்லை". பேசாம ஒரு ட்ரிம்மர் வாங்கி நீங்களே கட் பண்ணிடுங்கன்னுட்டு போய்ட்டார்.
அதுக்கப்புறம் ரெண்டு தடவை அவனுக்கு ஹேர்கட் பண்ணியாச்சு. எலக்ட்ரிகல் ட்ரிம்மர் வாங்கிட்டு வந்து துரை நல்லா தூங்கும்போது நான் பிடிச்சுக்க ரகுவே வேலையே முடிச்சிட்டார். மொட்டை அடிக்காதது தான் குறை. நல்லா ஒட்ட வெட்டியாச்சு. சம்மருக்கு ஜூனியருக்கும் வசதியா இருக்கு. அநேகமா இந்த ஜூன் மாதம் அவனுக்கு ரெண்டாவது மொட்டை போடுவாங்கன்னு நினைக்கிறேன். போடறபட்சத்தில் பயணக்குறிப்புகளோட போட்டோ செஷன் ஒன்னு வெச்சிடலாம்.
March 18, 2009
வ்ரூம் வ்ர்ரூம் - ஜூனியர் டைம்ஸ்
தென்றலக்காவின் ஆஷிஷ் பற்றிய இந்தப் பதிவை படித்ததிலிருந்து எனக்கும் ஜூனியரின் வண்டிகள் மீதான காதலை வலையேற்றனும்னு ஆசை. அம்மா வீட்டுக்கு போகும்போதெல்லாம் இஸ்மாயில் அங்கிளோ ராஜாமணி அங்கிளோ வந்து ஜூனியரை தூக்கிக்கொண்டு போய் ஜீப்பில் உட்காரவைத்துவிடுவார்கள். ஸ்டியரிங்கை திருப்புவதும் கியர் மாற்றுவதுமாக அவன் செய்கைகள் கொள்ளை அழகு. வீடியோகூட எடுத்தேன். ஜூனியர் பிற்காலத்தில் embarass ஆகக்கூடாதுன்னு அதப் போடல:)
அப்புறமா சிட்டி செண்டர் போகும்போது அங்கிருக்கும் ப்ளே ஏரியாவில் வைக்கப்பட்டிருக்கும் கார், ட்ரைன், போன்றவற்றில் ஏறினால் கீழே இறங்கவே மாட்டான்.

அவனுக்கு வாங்கின விளையாட்டுப் பொருட்களில் அவன் உபயோகிப்பது இவற்றை மட்டும்தான். மத்தபடி அவனுக்குன்னு வாங்கின விளையாட்டு பொம்மைகள் எல்லாம் சீந்த ஆளில்லாமல் தான் இருக்கின்றன. இவை போரடித்தால் ரிமோட், செல்போன் என எலக்ட்ரானிக் சாதனங்கள் மாட்டிக்கொண்டு அல்லல்படும்.

போன முறை சிட்டி செண்டர் போயிருந்தபோது அந்த காரை விட்டு கீழே இறங்கமாட்டேன்னு ஒரே அழுகை. கீழே விழுந்து புரண்டு தேம்பி தேம்பி அழுகை. பையன் அழுததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. ரிமோட்டில் இயங்கக்கூடிய கார் வாங்கலாமென்றார்ர். மார்க்கெட்டில் விலை விசாரித்தபோது 5000 என்றார்கள். நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு. "இப்ப அவனுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்குறது வேஸ்ட் ரகு" என்றதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் "அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது. போதாக்குறைக்கு மாமன் வேற மருமகனுக்கு கண்டிப்பா வாங்கனும்னு சப்போர்ட்.
வண்டில உக்காந்தவுடனே ஒரே சந்தோசம்தான்.
Ready for a ride.

டிஸ்கி : இன்னும் இரண்டு பதிவு ஜூனியரைப் பற்றி. விரைவில் எதிர்பாருங்கள்:)
போன முறை சிட்டி செண்டர் போயிருந்தபோது அந்த காரை விட்டு கீழே இறங்கமாட்டேன்னு ஒரே அழுகை. கீழே விழுந்து புரண்டு தேம்பி தேம்பி அழுகை. பையன் அழுததும் ரகுவுக்கு என்னவோ போலாகிவிட்டது. ரிமோட்டில் இயங்கக்கூடிய கார் வாங்கலாமென்றார்ர். மார்க்கெட்டில் விலை விசாரித்தபோது 5000 என்றார்கள். நான் வேண்டவே வேண்டாமென்றேன். ரொம்ப நாளாக மைக்ரோவேவ் ஓவன் வாங்கலாமென்ற பிளானை காருக்கு மாற்றியாச்சு. "இப்ப அவனுக்கு இவ்வளவு காஸ்ட்லியா வாங்குறது வேஸ்ட் ரகு" என்றதுக்கு கொஞ்சமும் யோசிக்காமல் "அவனுக்கு கார் வாங்குவதும், உனக்கு ஓவன் வாங்குவதும் ஒன்னுதான். அவனாவது futureல யூஸ் பண்ணுவான்" என சொல்லி என் வாயை அடைத்தாகிவிட்டது. போதாக்குறைக்கு மாமன் வேற மருமகனுக்கு கண்டிப்பா வாங்கனும்னு சப்போர்ட்.
டிஸ்கி : இன்னும் இரண்டு பதிவு ஜூனியரைப் பற்றி. விரைவில் எதிர்பாருங்கள்:)
Labels:
ஜூனியர்
March 9, 2009
ஜூனியருக்கு பிடித்தமானவர்கள்
ஜூனியருக்கு பிடித்தமானவர்களின் லிஸ்ட் பற்றி எழுத சொல்லியிருந்தார் சந்தனமுல்லை. ஜூனியரின் லிஸ்ட் ரெம்ம்ம்ம்ப பெருசு என்பதால் யோசித்து சிலரைப் பற்றி மட்டும் எழுதுகிறேன். வழக்கம்போல் தாத்தா'ஸ், பாட்டி, மாமாக்கு அப்புறம் அவன் ரொம்ப க்ளோசாக இருப்பது இவர்களிடம் தான்.
வசந்தி - அம்மா வீட்டில் வீட்டு வேலை செய்பவர். இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும். குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை அவன் வளர்ச்சியைப் பார்த்து பரவசப்படுபவர். சம்பளத்துக்காகத் தானே வேலை செய்கிறோமென்றில்லாமல் ஆதமார்த்தமான அன்பு கொண்டவர். அம்மா வீட்டுக்கு போனவுடன் ஜூனியர் முதலில் தேடுவது இவரைத்தான். தோட்டத்தில் தான் போய் பார்ப்பான். சாப்பாட்டு கிண்ணத்தை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஜூனியரையும் தூக்கிக்கொண்டு வேடிக்கைக் காட்டியே சாப்பிட வைத்துவிடுவார். மொட்டை அடிக்க கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அவரால் வர முடியாத நிலையில் தயங்கியபடியே வந்து 100 ரூபாயை கையில் கொடுத்து குழந்தைக்கு எதுனா வாங்கிக்கொடு என்றார். எதுக்கு இதெல்லாம் வசந்தி. நீங்க இதெல்லாம் செஞ்சு தான் ஆகனுமா என்றதுக்கு கிட்டத்தட்ட அழுதேவிட்டார். தொடர்ந்து 2 வாரம் ஊருக்கு போகவில்லையென்றால் அம்மாவிடம் சொல்லி போன் செய்து கடிந்துகொள்வார் ஏன் இன்னும் வரவில்லையென்று. அப்புனு என்றவர் குரலைக் கேட்டவுடனே ஜூனியரின் முகத்தில் தோன்றும் பிரகாசமே போதும் இவர்களின் உறவினை விளக்க:)
இஸ்மாயில் அங்கிள் - அப்பாவின் ட்ரைவர். அங்கிள் தான் ஜூனியருக்கு கார்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது. வேண்டாமென்றாலும் ஜுனியரை மடியில் வைத்துக்கொண்டு சின்னதாய் ரவுண்ட் அடிப்பார் ஜீப்பில். இப்போதும் இவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்புகையில் அழுது அடம்பிடிப்பார் ஜூனியர்.
ராஜாமணி அங்கிள் - என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர். ஜூனியரை நாங்கள் இழக்காமல் இருப்பதிற்க்கு முக்கியமானவர்களில் ஒருவர். 4 மாதக் குழந்தையாக இருந்தபோது கடும் வயிற்றுப்போக்கோடு ஜூரமும் சேர்ந்துக்கொள்ள இரவு 3 மணிக்கு மருத்தவரின் வீட்டு வாசலில் நின்றோம். அவர் ரொம்ப சீரியசாக இருக்கிறான். உடனடியாக நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் டெம்பரேச்சர் ஏறினால் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். செங்கல்பட்டிலிருந்து 25 நிமிடங்களில் நுங்கம்பாக்கம் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு சென்று அட்மிட் செய்தபோது மருத்துவர் சொன்னது "Heavy dehydration. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது" என்றார். அங்கிள் அந்த வேகத்தில் வந்திருக்காவிட்டால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்குப் போகும்போது ஜூனியரை தூக்கிக்கொண்டு போய்டுவார். நாங்கள் அங்குபோய் இறங்கும்போது அவனுக்கெண்று மலை வாழைப்பழம் ரெடியாக வாங்கிவைத்திருப்பார்.
சரவணன் அங்கிள் - சமீபத்தில் தான் இவர் ஜூனியருக்கு அறிமுகமானார் என்றாலும் அவனுக்கு சமமாக உட்கார்ந்து விளையாடுவார். அவனோடு கண்ணாமூச்சி ஆடுவது, சாரின் விஷமங்களை பொறுத்தாள்வது என அங்கிள் ரொம்ப ஸ்போர்டிவ்.
இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. அப்பாவுக்கு இப்போ மாற்றலாகிவிட்டதால் மேற்சொன்ன நால்வரும் ஜூனியரை ரொம்பவே மிஸ் பண்ணப்போகிறார்கள். இல்லை ஜூனியர் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போகிறான் இவர்களை.
டிஸ்கி : ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)
வசந்தி - அம்மா வீட்டில் வீட்டு வேலை செய்பவர். இவருக்கு இருக்கும் சுறுசுறுப்பு என்னை இன்றும் ஆச்சரியப்படுத்தும். குழந்தை பிறந்ததிலிருந்து இன்றுவரை அவன் வளர்ச்சியைப் பார்த்து பரவசப்படுபவர். சம்பளத்துக்காகத் தானே வேலை செய்கிறோமென்றில்லாமல் ஆதமார்த்தமான அன்பு கொண்டவர். அம்மா வீட்டுக்கு போனவுடன் ஜூனியர் முதலில் தேடுவது இவரைத்தான். தோட்டத்தில் தான் போய் பார்ப்பான். சாப்பாட்டு கிண்ணத்தை என்னிடமிருந்து பிடுங்கிக்கொண்டு ஜூனியரையும் தூக்கிக்கொண்டு வேடிக்கைக் காட்டியே சாப்பிட வைத்துவிடுவார். மொட்டை அடிக்க கோயிலுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்துகொண்டிருந்தோம். அவரால் வர முடியாத நிலையில் தயங்கியபடியே வந்து 100 ரூபாயை கையில் கொடுத்து குழந்தைக்கு எதுனா வாங்கிக்கொடு என்றார். எதுக்கு இதெல்லாம் வசந்தி. நீங்க இதெல்லாம் செஞ்சு தான் ஆகனுமா என்றதுக்கு கிட்டத்தட்ட அழுதேவிட்டார். தொடர்ந்து 2 வாரம் ஊருக்கு போகவில்லையென்றால் அம்மாவிடம் சொல்லி போன் செய்து கடிந்துகொள்வார் ஏன் இன்னும் வரவில்லையென்று. அப்புனு என்றவர் குரலைக் கேட்டவுடனே ஜூனியரின் முகத்தில் தோன்றும் பிரகாசமே போதும் இவர்களின் உறவினை விளக்க:)
இஸ்மாயில் அங்கிள் - அப்பாவின் ட்ரைவர். அங்கிள் தான் ஜூனியருக்கு கார்களின் மீதான ஆர்வத்தை தூண்டியது. வேண்டாமென்றாலும் ஜுனியரை மடியில் வைத்துக்கொண்டு சின்னதாய் ரவுண்ட் அடிப்பார் ஜீப்பில். இப்போதும் இவர் எங்கள் வீட்டுக்கு வந்துவிட்டு கிளம்புகையில் அழுது அடம்பிடிப்பார் ஜூனியர்.
ராஜாமணி அங்கிள் - என் வாழ்நாளில் மறக்கமுடியாத மனிதர். ஜூனியரை நாங்கள் இழக்காமல் இருப்பதிற்க்கு முக்கியமானவர்களில் ஒருவர். 4 மாதக் குழந்தையாக இருந்தபோது கடும் வயிற்றுப்போக்கோடு ஜூரமும் சேர்ந்துக்கொள்ள இரவு 3 மணிக்கு மருத்தவரின் வீட்டு வாசலில் நின்றோம். அவர் ரொம்ப சீரியசாக இருக்கிறான். உடனடியாக நுங்கம்பாக்கம் சைல்ட் ட்ரஸ்ட்டில் அனுமதிக்க வேண்டும். இதற்கு மேல் டெம்பரேச்சர் ஏறினால் குழந்தைக்கு ஃபிட்ஸ் வந்து உயிருக்கு ஆபத்தாக முடியும் என எச்சரித்தார். செங்கல்பட்டிலிருந்து 25 நிமிடங்களில் நுங்கம்பாக்கம் கொண்டு வந்து சேர்த்தார். பின்னர் அங்கிருந்து சேத்துப்பட்டு சென்று அட்மிட் செய்தபோது மருத்துவர் சொன்னது "Heavy dehydration. கொஞ்சம் டிலே ஆகியிருந்தாலும் குழந்தையை காப்பாற்றியிருக்க முடியாது" என்றார். அங்கிள் அந்த வேகத்தில் வந்திருக்காவிட்டால் நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. ஒவ்வொரு முறை அம்மா வீட்டுக்குப் போகும்போது ஜூனியரை தூக்கிக்கொண்டு போய்டுவார். நாங்கள் அங்குபோய் இறங்கும்போது அவனுக்கெண்று மலை வாழைப்பழம் ரெடியாக வாங்கிவைத்திருப்பார்.
சரவணன் அங்கிள் - சமீபத்தில் தான் இவர் ஜூனியருக்கு அறிமுகமானார் என்றாலும் அவனுக்கு சமமாக உட்கார்ந்து விளையாடுவார். அவனோடு கண்ணாமூச்சி ஆடுவது, சாரின் விஷமங்களை பொறுத்தாள்வது என அங்கிள் ரொம்ப ஸ்போர்டிவ்.
இன்னும் எத்தனையோ பேரை ஜூனியருக்கு ரொம்ப பிடிக்கும். Infact அவனுக்கு பிடிக்காதுன்னு நான் ஒருத்தரைக் கூட கைகாட்ட முடியாது. அப்பாவுக்கு இப்போ மாற்றலாகிவிட்டதால் மேற்சொன்ன நால்வரும் ஜூனியரை ரொம்பவே மிஸ் பண்ணப்போகிறார்கள். இல்லை ஜூனியர் தான் ரொம்ப மிஸ் பண்ணப்போகிறான் இவர்களை.
டிஸ்கி : ஜூனியரைப் பற்றிய பதிவொன்று அரைகுறையாய் draft-ல் இருக்கிறது. விரைவில் போட்டோ செஷனோடு ஜூனியரின் தரிசனம் கிடைக்கப்பெறும். அதுவரை போன ஜூன் மாதம் எடுத்தது:)
Labels:
ஜூனியர்
March 6, 2009
பூகம்பமும் சுனாமியும்
பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? நீங்கள் அத்தருணத்தில் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? நான் அனுபவித்தேன். பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் ஏற்படும் பிரளயம் நான் baby sitter வைத்துக்கொள்ளப் போகிறேன் என சொன்னவுடன் எங்கள் வீட்டில் ஏற்பட்டது. இத்தனைக்கும் மாலை இரண்டு மணிநேரம் தான் குழந்தையப் பார்த்துக்கொள்ள ஆள் வைக்கலாமென எண்ணினோம். ஐடியா குடுத்ததே ரகு தான். இரண்டு பேர் வீட்டில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். இருப்பவர்களோடு அபத்தமான ஒப்பிடு. அவளும் தான் குழந்தை வளர்க்கிறாள். அவளென்ன ஆளா வைத்துக்கொண்டாள்? ஏகப்பட்ட கம்பேரிசன்கள். மறுப்புகள். என்(ங்கள்) பக்க வாதங்களைக் கேக்ககூட தயாராக இல்லை.
குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.
காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(
குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.
அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)
டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.
குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.
காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(
குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.
அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)
டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.
Labels:
சொந்தக் கதை,
பொதுவானவை,
ஜூனியர்
December 16, 2008
ஜூனியரின் க்ளிக் கலாட்டா
டிஸ்கி : எப்பவோ எடுத்த ஜூனியரின் போட்டோஸையும் சில பதிவர்களையும் கோர்த்து விட்டுருக்கேன். யார் மனசாவாது கஷ்டப்படறமாதிரி இருந்தா சொல்லுங்க டெலீட்டிட்றேன்.

கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??

எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?

நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)

முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?
கார்க்கி அங்கிள் ஏழுமலை அங்கிள் இப்படிதான் சரக்கடிப்பாரா??
எங்க அந்த SK அங்கிளும், கார்க்கி அங்கிளும்? எங்கம்மாவ ஆண்ட்டின்னு சொன்னீங்களாமே? ஒத்தைக்கு ஒத்தை வர்றீங்களா?
நோ நோ. இது தாரணி ஆண்ட்டி பண்ண கேக் சாப்பிட்டதால வந்த ரியாக்ஷ்ன் இல்ல:)

முல்லை ஆண்ட்டி நெக்ஸ்ட் டைம் பப்புக்கா பாடும் போது நான் தான் bgm பண்ணுவேன் ஓகேவா?
December 2, 2008
ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008
இதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:
டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(
1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை
டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.
1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ
டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(
1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை
டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.
1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ
சில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.
இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)
November 14, 2008
நீ இல்லாம கஷ்டமா இருக்குடா
ஏதோ எழுதுனம்னு வந்து உட்கார்ந்துட்டேன். ஆனா கமல் சொல்ற மாதிரி வார்த்தையே வரலை. என்னத்த சொல்ல. கடந்த ஒன்றரை வருஷமா அவன பிரிஞ்சு ஒரு நாள் கூட இருந்ததே இல்லை. வீட்டுக்கு வந்து எங்க பார்த்தாலும் அவன்தான் தெரியுறான். நீ இல்லாம வீடே வெறிச்சுன்னு இருக்குடா செல்லம். இன்னும் கொஞ்ச நேரம் இப்படியே இருந்தேன்னா அழுதுடுவேன்னு நினைக்கிறேன். கலைக்க நீயில்லாமல் மூலையில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பொம்மைகள், உன் உச்சாவின் ஈரம் படாமல் காய்ந்த தரைகள், நீ இல்லாத தைரியத்தில் தரையில் கிடக்கும் கேபிள் வயர்கள், உன்னால் கிழிக்கப்படாத நாளிதழ்கள், மேலேறி குதிக்க நீ இல்லாததால் தூசி படர்ந்திருக்கும் சோபா திண்டுக்கள் என வீட்டிலுள்ள ஒவ்வொரு பொருளும் உன்னைத்தான் தேடுகின்றன.

எல்லாம் எங்கம்மாவால் வந்த வினை. குழந்தை நான் இல்லாமல் இருந்து பழகனுமாம். ரெண்டு நாள் என்கிட்டயே இருக்கட்டும்னு என்னை மட்டும் தாம்பரத்திற்கு துரத்திட்டாங்க. குழந்தை ஞாயிறு காலைதான் வருவான். அய்யோ ஒரு மணி நேரமே ஒரு யுகம் மாதிரி போச்சே. இன்னும் ஒரு முழுநாளை எப்படி ஓட்டப்போரேனோ?
நீ இல்லாம கஷ்டமா இருக்குடா:(
எல்லாம் எங்கம்மாவால் வந்த வினை. குழந்தை நான் இல்லாமல் இருந்து பழகனுமாம். ரெண்டு நாள் என்கிட்டயே இருக்கட்டும்னு என்னை மட்டும் தாம்பரத்திற்கு துரத்திட்டாங்க. குழந்தை ஞாயிறு காலைதான் வருவான். அய்யோ ஒரு மணி நேரமே ஒரு யுகம் மாதிரி போச்சே. இன்னும் ஒரு முழுநாளை எப்படி ஓட்டப்போரேனோ?
நீ இல்லாம கஷ்டமா இருக்குடா:(
Subscribe to:
Posts (Atom)