அன்பின் கடவுளுக்கு,
என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.
1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.
2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?
3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?
4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.
இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?
Showing posts with label என்ன கொடுமை சார் இது. Show all posts
Showing posts with label என்ன கொடுமை சார் இது. Show all posts
January 24, 2012
November 7, 2011
இம்சை விளம்பரம்
டிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.
தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.
ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.
இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)
இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)
இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?
இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.
இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)
இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).
கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?
#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)
தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.
ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.
இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)
இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)
இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?
இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.
இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)
இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).
கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?
#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)
Labels:
என்ன கொடுமை சார் இது
October 28, 2010
மன்னிப்பு கேட்கிறார் ஆமிர்கான்
நல்ல வேளை தப்பிச்சேன். முச்சந்தில நிக்க வச்சு எந்திரன் பாருங்கன்னு பிட் நோட்டீஸ் விநியோகம் பண்ண சொல்லல.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.

சொன்னா புரிஞ்சிக்கோங்க ஒபாமாஜி. நீங்க என்னைப் பார்க்கலன்னா கூட பரவாயில்ல. கலைஞர் பார்க்காம மட்டும் போய்டாதீங்க.

சொன்னா கேளுங்க தலைவரே. நீங்க கதை வசனம் எதுவும் இப்போதைக்கு எழுத வேண்டாம். அப்புறம் அங்க வேடிக்கப் பார்க்க சேர்ந்த கூட்டம் வோட்டு போடற கூட்டமாயிடும்.

சரி சரி. ஜெயிச்சா தலைமைச்செயலகத்த கொடநாட்டுக்கு மாத்த மாட்டேன்.

அதோ அங்க ஒருத்தர் நிக்கறாரு பாருங்க. இப்போதைக்கு அவரும் நானும் தான் கட்சில இருக்கோம்.

நான் ஆட்சிக்கு வந்தால் என் படத்தைப் பார்க்க தியேட்டருக்கு வரும் அனைத்து மக்களுக்கும் இலவச ஆயூள் காப்பீடு வழங்குவேன்.

நிம்மதியா பாத்ரூம் கூட போக முடியல சார். எங்க, எப்ப எவன் கேமராவோட வருவான்னே தெரியமாட்டேங்குது.

யப்பா ஜெமினி சர்க்கஸ்ல அந்தரத்துல தாவறதுக்கு ஆள் குறையுது. நீங்க வர்றீங்களான்னு கேக்கறான்ப்பா

பாவம். அவங்களோட கவிதைகளை தெரியாத்தனமா படிச்சிட்டாங்களாம்.

நெஞ்சத் தொட்டு சொல்றேன். இப்படி ஒரு கொடுமை நடக்கும்ன்னு தெரிஞ்சிருந்தா கண்டிப்பா 3 இடியட்ஸ் படத்துல நடிச்சிருக்கவே மாட்டேன். தமிழ் மக்கள் என்னை மன்னிச்சிருங்க.
Labels:
என்ன கொடுமை சார் இது,
காமெடி மாதிரி,
போட்டோஸ்
September 15, 2010
எந்திரன் விமர்சனம் எழுதுவது எப்படி?
எந்திரன் ரிலீஸ் தேதி தெரிந்துவிட்டது. சன் டிவி ஒரு பக்கம் போட்டுத் தாக்கிக் கொண்டு இருக்கிறது. நம்மைப் போல சாதரணமான மக்களுக்கு டிக்கெட் கிடைக்க எப்படியும் 2 வாரத்திற்கு மேலாகிவிடும். அதுக்குள் எண்ணிலடங்கா விமர்சனப் பதிவு வந்துவிடும். இரண்டு வாரங்கள் கழித்து விமர்சனப் பதிவு போட்டால் “கல்யாணத்திற்கு வரச்சொன்னால் காது குத்திற்கு வர்றியே” என சகப் பதிவர்கள் எள்ளி நகையாடுவார்கள். பிறரின் சிரிப்புக்கு ஆளாகாமல் விமர்சனப் பதிவு எழுதுவது எப்படி? சில ஐடியாக்களை இங்கே குடுத்திருக்கிறேன்.

#முதலில் தியேட்டருக்கு சென்றதைப் பற்றி ஒரு பத்தி எழுதனும். ட்ராபிக்கில் மாட்டியதைப் பற்றி, கிளம்பும்போது காலில் இடித்துக்கொண்டதைப் பற்றி, சீட் சரியில்லாததைப் பற்றி என எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கண்டிப்பாக அது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்க வேண்டும்.
#ஹீரோவின் எண்ட்ரியை பாராட்டியோ, எதிர்த்தோ ஒரிரு வரிகள் எழுதலாம். என்ன எண்ட்ரி என்று சிலாகித்தோ, என்ன எண்ட்ரி இது (என்ன எழவு இது) என்ற பாணியிலோ எழுதலாம்.
#படம் ஆரம்பித்து முடியும் வரை வரும் சீன்களைத் தான் விமர்சிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதப் போவதால் கொஞ்சம் பின்நவீனத்துவ முயற்சியாக நடிகர்களையும், இசையையும், மற்றவற்றையும் விமர்சித்தே எழுதலாம். இங்கு பின்நவீனத்துவ முயற்சி என்பது யாருக்கும் புரியாத மாதிரியும், எழுதப்போகும் நமக்கு (மட்டுமே) எல்லாம் தெரியும் என்கிற மாதிரியுமான முயற்சி என்பதை நினைவில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.
#இந்தியர்களை திருடர்களாக சித்தரித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய பின் ரஹ்மான் இசையில் அதீத மேற்கத்திய பாணி தெரிகிறது (அ) ரஹ்மான் இந்தியர்களுக்காக குரிப்பாகத் தமிழர்களுக்காக இசையமைக்காமல் ஏகாதிபத்தியம் பக்கம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது. காதல் அணுக்கள் பாடலில் 3ஆவது நிமிடம் 45ஆவது நொடியில் வரும் அந்த கித்தார் ஒலிக்காகவே ரஹ்மானிற்கு ஆஸ்கார் குடுக்கலாம். பிண்ணனி இசை அருமை.
#காதல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது (அ) ரஜினி தாத்தாக்கு இதெல்லாம் தேவையா என ஆண் பதிவர்களும், ஐஸ் பாட்டியைப் பார்க்க சகிக்கவில்லை என பெண் பதிவர்களும் எழுதிக்கொள்ளலாம்.
#ரஜினியின் உதவியாளர்களாய் வரும் சந்தானமும் கருணாஸும் பட்டையைக் கிளப்புகிறார்கள். கதையோடு ஒன்றி வரும் காமெடி ட்ராக் படத்தின் மிகப்பெரிய பலம் (அ) ஒரு மெத்தப் படித்த சயிண்டிஸ்ட் இப்படிப்பட்ட உதவியாளர்களையா வைத்துக்கொள்வார். ரோபோ உதவியாளர்களை ஏய்க்கிறதாம். கருமம்.
#படத்தில் வரும் CG காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கிறது. பிரம்மாண்டம் படம் முழுவதும் மிரட்டுகிறது (அ) இத்தனைப் பொருட்செலவில் இப்படி ஒரு குப்பை தேவையா? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது நினைவுக்கு வருகிறது (காசும் செலவு செய்யக் கூடாது. படமும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிறது நியாயமா என கேள்விகள் யாரும் கேட்டால் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்).
#கூகிள் சர்ச்சில் ரோபாடிக்ஸ் எனத் தேடுங்கள். வந்து விழும் முதல் இரண்டு லிங்கைப் படிக்காதீர்கள். முதல் பக்கத்தில் தெரியும் கடைசி இரண்டு லிங்கைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் படிக்க முடியவில்லையெனில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சயிண்டிபிக் வார்த்தைகள் நான்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். CG பற்றி எழுதும்போது இந்த வார்த்தைகளைப் பரவலாக உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ரோபோடிக்ஸில் மிகப் பெரிய ஜாம்பவான் என அறியப்படுவீர்கள்.
#எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்
(அ)
எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு
பி.கு : ஆதரவாகவும், எதிர்த்து எழுதவும் சில குறிப்புகளும், இரண்டித்திற்குமே பொதுவாக சில குறிப்புகளும் இருக்கின்றன. உபயோகித்து பயன் பெறுக.

#முதலில் தியேட்டருக்கு சென்றதைப் பற்றி ஒரு பத்தி எழுதனும். ட்ராபிக்கில் மாட்டியதைப் பற்றி, கிளம்பும்போது காலில் இடித்துக்கொண்டதைப் பற்றி, சீட் சரியில்லாததைப் பற்றி என எதைப் பற்றி வேண்டுமானாலும் எழுதலாம். முக்கியமாய் கவனிக்கப்பட வேண்டிய விஷயம் கண்டிப்பாக அது படத்துக்கு சம்பந்தமே இல்லாமல் இருக்க வேண்டும்.
#ஹீரோவின் எண்ட்ரியை பாராட்டியோ, எதிர்த்தோ ஒரிரு வரிகள் எழுதலாம். என்ன எண்ட்ரி என்று சிலாகித்தோ, என்ன எண்ட்ரி இது (என்ன எழவு இது) என்ற பாணியிலோ எழுதலாம்.
#படம் ஆரம்பித்து முடியும் வரை வரும் சீன்களைத் தான் விமர்சிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. நாம் படம் பார்க்காமல் விமர்சனம் எழுதப் போவதால் கொஞ்சம் பின்நவீனத்துவ முயற்சியாக நடிகர்களையும், இசையையும், மற்றவற்றையும் விமர்சித்தே எழுதலாம். இங்கு பின்நவீனத்துவ முயற்சி என்பது யாருக்கும் புரியாத மாதிரியும், எழுதப்போகும் நமக்கு (மட்டுமே) எல்லாம் தெரியும் என்கிற மாதிரியுமான முயற்சி என்பதை நினைவில் உட்கார வைத்துக்கொள்ளுங்கள்.
#இந்தியர்களை திருடர்களாக சித்தரித்த ஸ்லம்டாக் மில்லினியர் படத்திற்காக ஆஸ்கார் விருது வாங்கிய பின் ரஹ்மான் இசையில் அதீத மேற்கத்திய பாணி தெரிகிறது (அ) ரஹ்மான் இந்தியர்களுக்காக குரிப்பாகத் தமிழர்களுக்காக இசையமைக்காமல் ஏகாதிபத்தியம் பக்கம் சாய்ந்தது துரதிருஷ்டவசமானது. காதல் அணுக்கள் பாடலில் 3ஆவது நிமிடம் 45ஆவது நொடியில் வரும் அந்த கித்தார் ஒலிக்காகவே ரஹ்மானிற்கு ஆஸ்கார் குடுக்கலாம். பிண்ணனி இசை அருமை.
#காதல் காட்சிகளில் இளமை கொப்பளிக்கிறது (அ) ரஜினி தாத்தாக்கு இதெல்லாம் தேவையா என ஆண் பதிவர்களும், ஐஸ் பாட்டியைப் பார்க்க சகிக்கவில்லை என பெண் பதிவர்களும் எழுதிக்கொள்ளலாம்.
#ரஜினியின் உதவியாளர்களாய் வரும் சந்தானமும் கருணாஸும் பட்டையைக் கிளப்புகிறார்கள். கதையோடு ஒன்றி வரும் காமெடி ட்ராக் படத்தின் மிகப்பெரிய பலம் (அ) ஒரு மெத்தப் படித்த சயிண்டிஸ்ட் இப்படிப்பட்ட உதவியாளர்களையா வைத்துக்கொள்வார். ரோபோ உதவியாளர்களை ஏய்க்கிறதாம். கருமம்.
#படத்தில் வரும் CG காட்சிகள் ஹாலிவுட் தரத்திற்கு இணையாக இருக்கிறது. பிரம்மாண்டம் படம் முழுவதும் மிரட்டுகிறது (அ) இத்தனைப் பொருட்செலவில் இப்படி ஒரு குப்பை தேவையா? கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் காட்சிகளைப் பார்க்கும்போது புலியைப் பார்த்து பூனை சூடுபோட்டுக்கொண்டது நினைவுக்கு வருகிறது (காசும் செலவு செய்யக் கூடாது. படமும் ஹாலிவுட் தரத்திற்கு இருக்கனும்ன்னு எதிர்பார்க்கிறது நியாயமா என கேள்விகள் யாரும் கேட்டால் அவர்களைப் பின்னர் பார்த்துக்கொள்ளலாம்).
#கூகிள் சர்ச்சில் ரோபாடிக்ஸ் எனத் தேடுங்கள். வந்து விழும் முதல் இரண்டு லிங்கைப் படிக்காதீர்கள். முதல் பக்கத்தில் தெரியும் கடைசி இரண்டு லிங்கைப் படித்து வைத்துக்கொள்ளுங்கள். முழுவதும் படிக்க முடியவில்லையெனில் நீங்கள் இதுவரை கேள்விப்பட்டிராத சயிண்டிபிக் வார்த்தைகள் நான்கை குறித்து வைத்துக் கொள்ளுங்கள். CG பற்றி எழுதும்போது இந்த வார்த்தைகளைப் பரவலாக உபயோகிப்பதன் மூலம் நீங்கள் ரோபோடிக்ஸில் மிகப் பெரிய ஜாம்பவான் என அறியப்படுவீர்கள்.
#எந்திரன் - மந்திரன்
எந்திரன் - தந்திரன்
எந்திரன் - முழு சந்திரன்
(அ)
எந்திரன் - காயலான் கடைக்கு
எந்திரன் - உயிரில்லை
எந்திரன் - துருப்பிடித்த இரும்பு
பி.கு : ஆதரவாகவும், எதிர்த்து எழுதவும் சில குறிப்புகளும், இரண்டித்திற்குமே பொதுவாக சில குறிப்புகளும் இருக்கின்றன. உபயோகித்து பயன் பெறுக.
Labels:
என்ன கொடுமை சார் இது,
காமெடி மாதிரி,
மொக்கை
August 24, 2010
க.மு Vs க.பி - ஒரு ஆய்வு
ஆணோ பெண்ணோ கல்யாணமானதிலிருந்து நிறைய அல்லது கொஞ்சமே நிறைய விஷயங்களில் விட்டுக்கொடுத்தல்/அட்ஜெஸ்ட்/வேறுவழியில்லாமல்/தலையெழுத்தே என பல விஷயங்களை கடக்கவேண்டியிருக்கிறது. இருவருக்குமே காமனான டயலாக். அடிக்கடி கேட்கும் டயலாக். ”கல்யாணத்துக்கு முன்னால நான் எப்படியிருந்தேன் தெரியுமா?” கொஞ்சம் மாற்றி எள்ளலோடு மற்றவர்கள் முன் கலாய்க்க ”எப்படியிருந்த நான் இப்படியாயிட்டேன்”.
இந்த நொந்தல்ஸ் நூடுல்ஸை பெண்கள் வாய்விட்டு சொல்லிவிடுகிறார்கள். ரங்கமணிகள் வழக்கம்போல் ஊமைக்கோட்டான்களாய் கமுக்கமாய் மனதிற்குள்ளே கறுவிக்கொண்டிருந்து சமயம் பார்த்து எடுத்துவிட்டு அப்செட் ஆக்குவார்கள். என்னோட சில க.மு க.பி கம்பேரிஷன்கள்.
# மணி பத்தாகப்போதுடி. இன்னுமா தூங்கறே - அம்மா
விடியற்காலைல எழுப்பாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். சூரியன் உச்சிக்குப் போறதுக்குள்ள நான் எழுந்தா உலகத்துக்கு ஆகாதுன்னு உடுமலைபேட்டை உலகநாதன் சொன்னது மறந்திருச்சா??
@ மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
*******************
# குளிச்சிட்டு தான் சாப்பிடேண்டி - அம்மா
சட்னில இன்னும் கொஞ்சம் உப்பு போடுமா.
@ சூடா இருக்கும்போதே நீயும் சாப்பிடேன்மா - மாமியார்
ஒரே கசகசன்னு இருக்குமா. குளிச்சிட்டு சாப்பிடறேனே.
*********************
# வெள்ளிக்கிழமையதுவுமா நகம் வெட்டிக்கிறியேடி. கிளம்பு கோயிலுக்கு போய்ட்டு வரலாம் - அம்மா
நீ போய்ட்டு வா. பிள்ளையார் கோவிலுக்கு போம்மா. சுண்டல் கொடுப்பாங்க.
@ மணி ஆறாகப் போகுது விளக்கேத்திடவாம்மா
*********************
# இந்தக் கனகாம்பரத்த வச்சிக்கோயேண்டி - அம்மா
நானென்ன கரகாட்டமா ஆடப்போறேன். போய்டு.
@ கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(
******************
#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?
என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************
#சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவறியேடி. ஆம்பிள புள்ளமாதிரி வளத்திருக்கீங்க பொண்ண - அத்தை.
@என்னம்மா சாப்பிட்ட தட்ட கொண்டுபோய் சிங்க்ல போடற. எச்சத் தட்ட கழுவி கவுக்கனும். தெரியுதா??

டிஸ்கி : இந்தப் பதிவை ஹஸ்பெண்டாலஜி ப்ரொபசர் டாக்டர் புதுகை தென்றலக்காவுக்கும், எப்படியெல்லாம் சந்தேகப்படனும்னு பதிவு போட்டு சொல்லிக் கொடுக்கும் விதூஷக்காவுக்கும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.
மு. டிஸ்கி : எதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும், ஏன் ஆக்டிங் விடனும்ன்னு அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை கேக்கற கல்யாணமானவங்களுக்கு பூரிக்கட்டை/அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் சரி மொத்து வாங்குவீர்கள் என்றும், கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.
இந்த நொந்தல்ஸ் நூடுல்ஸை பெண்கள் வாய்விட்டு சொல்லிவிடுகிறார்கள். ரங்கமணிகள் வழக்கம்போல் ஊமைக்கோட்டான்களாய் கமுக்கமாய் மனதிற்குள்ளே கறுவிக்கொண்டிருந்து சமயம் பார்த்து எடுத்துவிட்டு அப்செட் ஆக்குவார்கள். என்னோட சில க.மு க.பி கம்பேரிஷன்கள்.
# மணி பத்தாகப்போதுடி. இன்னுமா தூங்கறே - அம்மா
விடியற்காலைல எழுப்பாதேன்னு எத்தனை தடவ சொல்லிருக்கேன். சூரியன் உச்சிக்குப் போறதுக்குள்ள நான் எழுந்தா உலகத்துக்கு ஆகாதுன்னு உடுமலைபேட்டை உலகநாதன் சொன்னது மறந்திருச்சா??
@ மணி 6.30 தானேம்மா ஆறது. இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கேம்மா - மாமியார்
தூக்கம் வரலம்மா. சீக்கிரம் எழுந்து பழக்கமாயிடுச்சு (டமார். எங்கோ ட்ரான்ஸ்பார்மர் வெடித்துச் சிதறும் சத்தம். என் மனசாட்சியாகவும் இருக்கலாம்).
*******************
# குளிச்சிட்டு தான் சாப்பிடேண்டி - அம்மா
சட்னில இன்னும் கொஞ்சம் உப்பு போடுமா.
@ சூடா இருக்கும்போதே நீயும் சாப்பிடேன்மா - மாமியார்
ஒரே கசகசன்னு இருக்குமா. குளிச்சிட்டு சாப்பிடறேனே.
*********************
# வெள்ளிக்கிழமையதுவுமா நகம் வெட்டிக்கிறியேடி. கிளம்பு கோயிலுக்கு போய்ட்டு வரலாம் - அம்மா
நீ போய்ட்டு வா. பிள்ளையார் கோவிலுக்கு போம்மா. சுண்டல் கொடுப்பாங்க.
@ மணி ஆறாகப் போகுது விளக்கேத்திடவாம்மா
*********************
# இந்தக் கனகாம்பரத்த வச்சிக்கோயேண்டி - அம்மா
நானென்ன கரகாட்டமா ஆடப்போறேன். போய்டு.
@ கதம்பம் வச்சுக்கோம்மா - மாமியார்
(மனதுக்குள்) பச்சை மஞ்ச சிவப்பு தமிழன் நான்:(
******************
#ஏண்டி சுரேஷ் கல்யாணத்துக்கு பட்டுப் புடவை கட்டிக்கோயேண்டி.
ஏன் சல்வார் போட்டுகிட்டு வந்தா உன் அக்கா பையன் பொண்ணுக்கு தாலி கட்டமாட்டானா?
என் நாத்தனாரின் மாமியாரின் தங்கை பேரன் காதுகுத்துக்கு அகல பார்டர் வச்ச பட்டுப் புடவையை ஆறுமணிநேரம் கட்டிக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தேன்.
******************
#சாப்பிட்ட தட்டிலேயே கைகழுவறியேடி. ஆம்பிள புள்ளமாதிரி வளத்திருக்கீங்க பொண்ண - அத்தை.
@என்னம்மா சாப்பிட்ட தட்ட கொண்டுபோய் சிங்க்ல போடற. எச்சத் தட்ட கழுவி கவுக்கனும். தெரியுதா??

டிஸ்கி : இந்தப் பதிவை ஹஸ்பெண்டாலஜி ப்ரொபசர் டாக்டர் புதுகை தென்றலக்காவுக்கும், எப்படியெல்லாம் சந்தேகப்படனும்னு பதிவு போட்டு சொல்லிக் கொடுக்கும் விதூஷக்காவுக்கும் டெடிகேட் பண்ணிக்கிறேன்.
மு. டிஸ்கி : எதுக்கு காம்ப்ரமைஸ் பண்ணிக்கனும், ஏன் ஆக்டிங் விடனும்ன்னு அதிபுத்திசாலித்தனமான கேள்விகளை கேக்கற கல்யாணமானவங்களுக்கு பூரிக்கட்டை/அதிகம் சேதம் விளைவிக்கக்கூடிய ஆயுதத்தால் சரி மொத்து வாங்குவீர்கள் என்றும், கல்யாணம் ஆகாதவர்கள் சீக்கிரமே கல்யாணம் ஆகி மேற்கூறிய வரத்தை அனுபவிக்கப் பெறுவார்கள் என பணிவுடன் எச்சரிக்கப்படுகிறார்கள்.
July 21, 2010
மதராசபட்டிணம் - மாறுபட்ட கோணத்தில்..
டிஸ்கி : மதராசபட்டிணம் படத்தின் க்ளைமேக்ஸ் நெருங்குகையில் டைரக்டர் தமிழ் சினிமாக்களின் இலக்கணங்களை மீறாமல் கொஞ்சம் ரொம்பவே இழுத்துவிட்டார். துரையம்மாள் ட்ரஸ்டை தேடிப் போகும்போதே இந்தக் கதையை இன்ன டைரக்டர் எடுத்திருந்தால் எப்படியிருந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். வீட்டிற்கு வந்து டெவலப் செய்தது. நகைச்சுவைக்காகவே தவிர யார் மனதையும் புண்படுத்த அல்ல.
என் இனிய தமிழ் மக்களே...
பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.
எந்த சாரே...
ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".
தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...
செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.
லாலாலா லல லாலா...
ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.
அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..
சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.
ஏமியின் கையெழுத்து...
”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.
ரீ-மேக்...
தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.
என் இனிய தமிழ் மக்களே...
பூக்கள் பூக்கும் தருணம் பாடலின் போது ஆர்யா-ஏமி அமர்ந்திருக்கும் போட்டை சுற்றி பத்து படகுகளில் வெள்ளை உடையில் தேவதைகள் (என்ற பெயரில்) சிலர் ஆடுவார்கள். அந்த மணிக்கூண்டில் நடக்கும் சண்டையின்போது ஆர்யா அடிபட்டு மயங்கிவிடுவார். ஏமி தன் மானத்தை காப்பாற்றிக்கொள்ள வில்லனை மேலிருந்து கீழே தள்ளி கொன்றுவிடுவார். கடமை தவறாத கவர்னர், மகள் என்றும் பாராமல் அவரை அரெஸ்ட் செய்து லண்டன் ஜெயிலில் அடைத்துவிடுவார் (அதான் இந்தியாவுக்கு சுதந்திரம் குடுத்துட்டாங்களே. Moreover ஏமி லண்டன் சிட்டிசனாச்சே. லாஜிக். லாஜிக்). ஆயுள் தண்டனை முடிந்து ஏமி இந்தியாவுக்கு வருவார். அவர் ஏர்போர்டில் இறங்கியதும் இழுத்துக்கொண்டிருக்கும் ஆர்யா இன்னும் ஆஸ்மா ட்ரபிள் வந்தவர் மாதிரி இன்னும் இழுத்து இழுத்து மூச்சுவிடுவார். அப்படியே பாட்டியக் காமிக்கிறோம். நவரசத்தையும் மூஞ்சில காமிப்பாங்க. கண்டிப்பா கண்ணு துடிக்கும். ஆர்யா இருக்கிற இடத்துக்கு வந்து பார்த்து அவர தொடுவாங்க. அத்தனை காலமா கோத்ரேஜ் பீரோல் பூட்டி வச்சிருந்த ஆர்யாவோட உசிர் படக்குன்னு போய்டும் (இதயா டாவடிச்சோம் என்ற அதிர்ச்சி தான் உண்மையான காரணமாயிருக்கும்). ஆர்யாவோட கால்மாட்டுல உக்காந்திருக்கிற பாட்டியோட தலை தொபுக்கட்டீர்ன்னு தொங்கிரும்.
எந்த சாரே...
ஆர்யாவை தண்ணியில் தள்ளி்விட்டுவிட்டு போகும் ஏமிக்கு லண்டனில் வேறொருவோடு கல்யாணமாகிறது. ஏமியின் காதல் கதையை தெரிந்து கொள்ளும் அந்த வெள்ளக்கார துரை ஏமியை அழைத்துக்கொண்டு இந்தியா வருகிறார். படாதபாடுபட்டு ஆர்யாவை கண்டுபிடித்து ஏமியை ஏற்றுக்கொள்ள சொல்கிறார். அதற்கு ஆர்யா “என்னுடைய காதலி உங்கள் மனைவி ஆகலாம். ஆனால் உங்க மனைவி என்னுடையா காதலி ஆக முடியாது துரை. எங்க நீங்க போட்ட அந்த மோதிரத்த கழட்ட சொல்லுங்க பார்ப்போம்”. ஏமி கூலாக மோதிரத்த கழட்டிக்கொடுத்துவிட்டு “நீ சொன்ன டயலாக் எல்லாம் தமிழ்நாட்டு கல்ச்சருக்கு தான் பொருந்தும். ஐ’ம் ஃப்ரம் லண்டன். Not applicable to me".
தங்கச்ச்ச்ச்ச்சீஈஈஈஈஈஈ...
செல்வி பிறந்தவுடனேயே அவர் அம்மா இறந்துவிட, தாய்க்கு தாயாக இருந்து செல்வியை கண்ணும் கருத்துமாய் வளர்க்கிறார் ஆர்யா (உங்களுக்கு அபாரமான மனதைரியம் இருந்தால் ஆர்யாவை நீக்கிவிட்டு அவரை கற்பனை செய்து கொள்ளவும்). அண்ணனுக்கு பயந்த, அண்ணன் மீது அளவில்லா பாசம் கொண்ட தங்கையாக வலம் வருகிறார் செல்வி. அதே நேரம் அவருக்கு ஒரு (நல்ல) வெள்ளைக்கார துரையுடன் காதல் வளர்கிறது. இது தெரியாமல் அண்ணன் வேறொருவருக்கு தங்கையை கல்யாணம் செய்து தருவதாக வாக்கு கொடுத்துவிடுகிறார். இதுல சைட் ட்ராக்கா அவரை ஒருதலையாக காதலிக்கிறார் ஏமி. அவர் காலடி மண்ணை விபூதியாக பூசிக்கொள்கிறார். அவருக்காக தோபிகானாவில் வந்து துணி தோய்க்கிறார். கழுதை மேய்க்கிறார். அவரின் பார்வை கூட ஏமி மீது படாது. அப்படிப்பட்ட பண்பாளர் அவர். தங்கையின் காதல் விஷயம் தெரிந்ததும் ஒரு நீண்ண்ண்ண்ண்ட (டயலாக்) போராட்டமே நடக்கிறது வீட்டில். கடைசியில் தங்கையின் ஆசைதான் பெரிது என நினைத்து காதலுக்கு பச்சை கொடி காட்டுகிறார். ஏமியை இழுத்துக்கொண்டு போகவரும் வில்லனை (பேசியே) கொல்கிறார். இவர் ஏற்கனவே பேசிவைத்திருந்த பையன் வீட்டார் நிச்சயம் பண்ண வர இவர் மறுத்து நிலைமையை விளக்க, அவர்கள் வாக்கு தவறிட்டியே என சொல்ல, அந்த வார்த்தையை கேட்ட அடுத்த நொடி சலவைக்கல் மீது விழுந்து உயிர்விடுகிறார் நம்ம கவரிமான் பரம்பரை ஹீரோ.
லாலாலா லல லாலா...
ஆர்யா-ஏமி காதல் விவகாரம் கவர்னருக்கு தெரிய வருகிறது. ஆர்யாவிடம் கவர்னர் ஸ்டேட்டசை சுட்டிக் காட்டி பெண் தர மறுக்கிறார். வெகுண்டெழும் ஆர்யா வொர்க் பெர்மிட்டில் லண்டன் சென்று தினக்கூலியாக வேலைக்கு சேர்கிறார். ஒரே பாட்டில் பெரிய பணக்காரராகி ஈஸ்ட் இந்தியா கம்பெனியின் பார்ட்னராக முன்னேறுகிறார். யூகே குடியுரிமைப் பெற்று தாயகம் திரும்பி ஏமியை கரம்பிடிக்கிறார்.
அழுக்க அடிச்சி பாத்திருக்கியா..
சட்டைய சர்ஃப் எக்ஸல்ல தோச்சிருப்ப. ரின் மேட்டிக்ல தோச்சிருப்ப. ஏன் அரசன் சோப்ல கூட தோச்சிருப்ப. ஆனா சலவக்கல்ல தோச்சிருக்கியா. சோப்பே இல்லாம தோச்சிருக்கியா. ஓங்கி அடிச்சா நாலு மூட்டை துணியோட அழுக்கும் அடையாளமில்லாம போய்டும்டா பார்க்கிறியா. பார்க்கிறியா. பார்றா. தொம். தொம். தொம் என ஆர்யா அடிக்க பின்னாடி ட்ராம் ஒன்று வெடித்து பனை மர அளவு பறக்கிறது. ஏமிக்கு புடைவக்கு பதிலாக பாவாடை தாவணி குடுத்து ஊட்டி மலையில் ஒரு டூயட் உண்டு.
ஏமியின் கையெழுத்து...
”I've some unfinished business in India" என சொல்லிவிட்டு ஒரு தோள்பையோடு ஏர்போர்டில் இறங்குகிறார் ஏமி (பாட்டி). விமானத்திலிருந்து இறங்கி இமி்க்ரேஷனைக் கடக்கும்போது “memories coming" பாட்டு. செக்யூரிட்டு கார்டுடனான காதலுக்கு சாட்சியா அவரிடமிருந்து அடித்த மெட்டல் டிடெக்டரை (1947 மாடல்) தொட்டுப் பார்த்துக்கொண்டே வெளியே வருகி்றார். ட்ராமிலேறியவுடன் மீண்டும் அதே பாடல். ட்ராமில் சுட்ட மணியை எடுத்துப் பார்த்துக்கொள்கிறார். இப்போது கண்டக்டராய் இருக்கும் ஆளின் பெயர் துரை என்பதை அறிந்தவுடன் பஸ் கம்பியில் சாய்ந்துக் கொண்டு குலுங்கி குலுங்கி அழுகிறார். ரெஸ்ட் ஆஃப் த ஸ்டோரி ஆர்யாவை தேடுவது.
ரீ-மேக்...
தமிழ்ல ஆர்யா-ஏமி நடிச்சு சூப்பர் ஹிட்டான கதைய மட்டும் எடுத்துகிட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி மாத்தியிருக்கோம். நடிகர் நடிகைகள் எல்லாரும் தமிழ்ப்படத்துல
நடிச்சவங்கதான். காஸ்ட்யூம், வசனங்கள், லொகேஷன் எல்லாம் தமிழ்படத்துல வந்த மாதிரிதான். இல்ல இல்ல. அப்படியே காப்பியெல்லாம் அடிக்கல. ரொம்பக் கஷ்டப்பட்டு தெலுங்கு ரசிகர்களுக்கு பிடிச்ச மாதிரி படத்தின் தலைப்பை “மதராசபட்டிணம்லு” என மாத்திருக்கோம். இதுக்காக ஆறு மாசமா உழைச்சோம்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
காமெடி மாதிரி,
மொக்கை
July 15, 2010
தூக்கமும் கண்களை தழுவட்டுமே...
வாழ்க்கைல நிம்மதி தரக்கூடிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு தூக்கத்துல கூட நிம்மதி இருக்காது. எதுனா டெரரான கனா வந்து எழுப்பிவிட்டுடும். சிலரோ அவங்க நல்லா தூங்கினாலும் பெரிசா கச்சேரி பண்ணி பக்கத்துல படுத்துருக்கவங்கள தூங்க விடாம பண்ணிடுவாங்க. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள். நானும் அந்த வரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ஒரு காலத்தில். ஹும்ம். அது ஒரு அழகிய நிலாக் காலம்.
பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.
சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.
கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.
ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.
ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.
பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.
சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.
கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.
ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.
ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
சொந்தக் கதை,
மொக்கை
May 5, 2010
கடையடைப்பு
பதிவுலக மக்களுக்கு மீண்டும் ஓர் நற்செய்தி. ஆமா. ஆமா. அதேதான். கொஞ்ச நாளைக்கு கடைய சாத்தலாம்னு பார்க்கிறேன். இடமாற்றம், காதுகுத்து, கிடாவெட்டுன்னு எக்கச்சக்கமான விழாக்களுக்கு தலைமை தாங்க வேண்டி கட்டாயம் என வேலைகள் க்யூ கட்டி நிற்கிறது. எல்லா விழாக்களையும் சிறப்பா நடத்திக் கொடுத்துட்டு, வீட்ட மாத்திட்டு, அங்கன செட்டிலானதுக்கு அப்பாலிக்கா எல்லாரையும் மீட் பண்றேன். அதுவரைக்கும் கட காத்தாடுமே பேசாம மீள் பதிவு போடலாமான்னு யோசிச்சேன். நீங்க கொஞ்ச நாள் நிம்மதியா இருக்கலாமேன்னு பாவப்பட்டு யோசனைய கீழ கடாசிட்டேன். திரும்பி வரும்போது இன்னும் நிறைய மொக்கைகள், ஊர் சுற்றிய அனுபவங்கள் எக்ஜட்ரா எக்ஜட்ரா ஆகியவற்றை அள்ளிக்கிட்டு வர்றேன்.

கடய சாக்கிரதையாப் பார்த்துக்குங்க. முன்ன பின்ன ஆகும் வர. ஆனா வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்.
உயிரோடிருக்கும் பிரபலமாகத பதிவரின் ஆத்மா....

கடய சாக்கிரதையாப் பார்த்துக்குங்க. முன்ன பின்ன ஆகும் வர. ஆனா வருவேன் வருவேன் கட்டாயம் வருவேன்.
உயிரோடிருக்கும் பிரபலமாகத பதிவரின் ஆத்மா....
Labels:
அறிவிப்பு,
என்ன கொடுமை சார் இது
March 2, 2010
150ஆவது பதிவு - ஏட்டிக்கு பேட்டி
'மேடம் 149 இடுகை போட்டுட்டீங்க. 150பதிவை கொஞ்சம் ஸ்பெஷலா பண்ணுங்க. நான் வேணா உங்கள ஒரு பேட்டி எடுக்கவா?' எனக் கேட்டார் ஒரு பதிவர்.
'இல்லீங்க எனக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுங்க. நான் ரொம்ப சாதாரண ஆளுங்க' என மறுத்தும் பிடிவாதமாய் நிற்கவே சரியென ஒத்துக்கொண்டேன். நான் அவருக்கு அளித்த பேட்டி கீழே. அந்தப் பதிவர் யாரென்ற விவரம் பதிவின் இறுதியில்.
வணக்கம் மேடம்.
மேடமெல்லாம் வேணாமே. வித்யான்னே கூப்பிடுங்க.
சரிங்க வித்யான்னே.
ஆரம்பமே அசத்தலா இருக்கே. என் பேரு வித்யா. பேர் சொல்லியே கூப்பிடுங்க.
நீங்க பதிவுலகத்துக்கு எப்படி வந்தீங்க?
நடந்துதான்.
அது இல்லீங்க. நீங்க பதிவெழுத வந்த கதைய கொஞ்சம் சொல்லுங்க.
அத ஏற்கனவே ரெண்டு தடவ எழுதியாச்சு. திரும்ப திரும்ப ஒரு துக்க சம்பவத்தை மக்களை நினைக்க வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.
பதிவெத வந்து மூணு வருஷம் ஆகுது. இப்போதான் 150ஆவது பதிவு போடறீங்க. ஏன் இந்த நிதானம்?
நான் என்ன எழுதமாட்டேன்னு அடமா பிடிக்கிறேன்? மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. என்ன பண்ணச் சொல்றீங்க?
அடிக்கடி ப்ரேக் எடுக்கறீங்களே ஏன்?
பதிவுகளைத் தாண்டி என் உலகம் ரொம்ப பெரிசுங்க. இது மட்டுமே வாழ்க்கையில்லயே.
149 பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?
அத்தனையுமே நான் பிடிச்சு எழுதினது தான். நம்ம குழந்தைகள்கிட்ட நாம வித்தியாசம் காட்ட முடியுமா?
எப்பவாச்சும் அரசியல்வாதிகளை கிண்டல் பண்றீங்களே? பயம்மா இல்லயா?
பயம்மா? எனக்கா? ஹே ஹே. அதுக்கெல்லாம் பயந்தா உயிர் வாழ முடியுமா?
நீங்க அதிகமா உங்களின் நினைவுகளைப் பற்றியும், மொக்கைகளையுமே எழுதறீங்களே ஏன்?
பதிவுங்கறத நான் ஒரு சேமிப்பு கிடங்காதான் பார்க்கிறேன். என் நினைவுகளை சேமிச்சு வைக்கிறேன். மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது.
இல்லயே நீங்க சில சீரியஸ் பதிவுகளையும் நல்லா எழுதியிருக்கீங்களே?
அப்படியா சொல்லவே இல்ல. அது எப்பவாச்சும் வரும்ங்க. அமாவாசை சோறுக்கு தினம் ஆசைப்பட முடியுமா? Moreover நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். முடியலன்னு தான் மொக்கைப் போடறேன்.
சரி. பெண்ணியம், சுதந்திரம், பற்றி எழுதுவீங்களா?
எந்த ஈயம் பித்தாளைப் பத்தியும் எழுதற ஐடியா இல்லைங்க. சும்மா கூவறதால ஒன்னும் ஆகிடாது.
அப்ப பதிவு எழுதற மாதிரியே எல்லாரும் இல்லைன்னு சொல்றீங்களா?
உங்க கேள்வி எனக்குப் புரியலை.
இல்லைங்க. பதிவுல சண்முகத்தை சாரி சமூகத்தை திருத்தனும்ங்கிற மாதிரி எழுதறவங்கெல்லாம் நிஜமாவே அப்படி இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?
இதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
சரி வேணாம் விடுங்க. முன்னாடி அடிக்கடி ஜுனியர் அப்டேட்ஸ் கொடுத்திட்டிருந்தீங்க. சமீப காலமா அது இல்லயே ஏன்?
கொடுக்கக்கூடாதுன்னு எதுவுமில்ல. அவர் சேட்டைய பதியறதுக்கு நான் தனியா பிளாக் ஆரம்பிக்கனும். கூடிய சீக்கிரம் பதிவிடறேன்.
அதே போல முன்னெல்லாம் நிறைய பட விமர்சனம் எழுதீனிங்க. ஒரே நாள்ல ரெண்டு விமர்சனப் பதிவு போட்டீங்க. இப்போ அவ்வளவா வர்றதில்லயே ஏன்?
முன்னாடி நிறைய படம் பார்க்க முடிஞ்சுது. இப்போ ஜூனியருக்கு டிமிக்கி கொடுத்துட்டு போக முடியறதில்ல:( அதில்லாம நான் தோணித் துலங்கி படம் பார்க்கறதுக்குள்ள ஒரு படத்துக்கு நூறு விமர்சனம் எழுதிடறாங்க. என் பங்குக்கு கிழிக்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது. ஹும்ம்ம்.
உங்கப் பதிவு எதுவும் தமிழ்மண பரிந்துரைக்கு வருவதில்லயே ஏன்?
பரிந்துரைக்கு வர நான் என்ன...
நீங்க என்ன?
இருங்க. ஏன் அவசரப்படறீங்க? நான் என்ன சிறப்பாவா எழுதறேன்னு சொல்ல வந்தேன். எழுதறது மொக்கை. மொக்கையையும் மொக்கையா எழுதறேன். பரிந்துரைக்கெல்லாம் வரணும்ன்னு ஆசைப்பட முடியுமா?
ம்ம்ம்
ஷப்பாடி எதுவும் புரியல இல்ல?
உங்க எதிர்கால திட்டமென்ன வித்யா?
பேட்டின்ன உடனே புத்திய காமிக்கறீங்க பார்த்தீங்களா. திட்டம் பட்டமெல்லாம் வெச்சுக்க நானென்ன அரசியல்வாதியா?
நான் கேக்க வந்தது என்னன்னா ஏதாவது புதுமையா பண்ற எண்ணம் இருக்கா?
புதுமையா? வேணாம் போய்டு.
பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?
ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்.
ஒரு பதிவரா சக பதிவர்களுக்கு என்ன கருத்து சொல்ல விரும்பறீங்க?
என்னை சக பதிவரா அவங்க மதிக்கறதே பெரிய விஷயம் தான்.
பேட்டிய முடிச்சுக்கலாம். ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் என் மொக்கைகள் தொடரும்..
அந்த பிரபல பதிவர் இவர்தான்
'இல்லீங்க எனக்கு இந்த விளம்பரமெல்லாம் பிடிக்காதுங்க. நான் ரொம்ப சாதாரண ஆளுங்க' என மறுத்தும் பிடிவாதமாய் நிற்கவே சரியென ஒத்துக்கொண்டேன். நான் அவருக்கு அளித்த பேட்டி கீழே. அந்தப் பதிவர் யாரென்ற விவரம் பதிவின் இறுதியில்.
வணக்கம் மேடம்.
மேடமெல்லாம் வேணாமே. வித்யான்னே கூப்பிடுங்க.
சரிங்க வித்யான்னே.
ஆரம்பமே அசத்தலா இருக்கே. என் பேரு வித்யா. பேர் சொல்லியே கூப்பிடுங்க.
நீங்க பதிவுலகத்துக்கு எப்படி வந்தீங்க?
நடந்துதான்.
அது இல்லீங்க. நீங்க பதிவெழுத வந்த கதைய கொஞ்சம் சொல்லுங்க.
அத ஏற்கனவே ரெண்டு தடவ எழுதியாச்சு. திரும்ப திரும்ப ஒரு துக்க சம்பவத்தை மக்களை நினைக்க வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன்.
பதிவெத வந்து மூணு வருஷம் ஆகுது. இப்போதான் 150ஆவது பதிவு போடறீங்க. ஏன் இந்த நிதானம்?
நான் என்ன எழுதமாட்டேன்னு அடமா பிடிக்கிறேன்? மேட்டர் கிடைக்க மாட்டேங்குது. என்ன பண்ணச் சொல்றீங்க?
அடிக்கடி ப்ரேக் எடுக்கறீங்களே ஏன்?
பதிவுகளைத் தாண்டி என் உலகம் ரொம்ப பெரிசுங்க. இது மட்டுமே வாழ்க்கையில்லயே.
149 பதிவுல உங்களுக்கு ரொம்ப பிடிச்ச பதிவு எது?
அத்தனையுமே நான் பிடிச்சு எழுதினது தான். நம்ம குழந்தைகள்கிட்ட நாம வித்தியாசம் காட்ட முடியுமா?
எப்பவாச்சும் அரசியல்வாதிகளை கிண்டல் பண்றீங்களே? பயம்மா இல்லயா?
பயம்மா? எனக்கா? ஹே ஹே. அதுக்கெல்லாம் பயந்தா உயிர் வாழ முடியுமா?
நீங்க அதிகமா உங்களின் நினைவுகளைப் பற்றியும், மொக்கைகளையுமே எழுதறீங்களே ஏன்?
பதிவுங்கறத நான் ஒரு சேமிப்பு கிடங்காதான் பார்க்கிறேன். என் நினைவுகளை சேமிச்சு வைக்கிறேன். மொக்கை எழுதறதுங்கறது என்னோட விருப்பம். இன்னும் கொஞ்சம் பெட்டரா சொல்லனும்னா அதான் வருது.
இல்லயே நீங்க சில சீரியஸ் பதிவுகளையும் நல்லா எழுதியிருக்கீங்களே?
அப்படியா சொல்லவே இல்ல. அது எப்பவாச்சும் வரும்ங்க. அமாவாசை சோறுக்கு தினம் ஆசைப்பட முடியுமா? Moreover நான் என்ன வச்சிக்கிட்டா வஞ்சனை பண்றேன். முடியலன்னு தான் மொக்கைப் போடறேன்.
சரி. பெண்ணியம், சுதந்திரம், பற்றி எழுதுவீங்களா?
எந்த ஈயம் பித்தாளைப் பத்தியும் எழுதற ஐடியா இல்லைங்க. சும்மா கூவறதால ஒன்னும் ஆகிடாது.
அப்ப பதிவு எழுதற மாதிரியே எல்லாரும் இல்லைன்னு சொல்றீங்களா?
உங்க கேள்வி எனக்குப் புரியலை.
இல்லைங்க. பதிவுல சண்முகத்தை சாரி சமூகத்தை திருத்தனும்ங்கிற மாதிரி எழுதறவங்கெல்லாம் நிஜமாவே அப்படி இல்லைன்னு சொல்ல வர்றீங்களா?
இதைப் பற்றி நான் கருத்து கூற விரும்பவில்லை.
சரி வேணாம் விடுங்க. முன்னாடி அடிக்கடி ஜுனியர் அப்டேட்ஸ் கொடுத்திட்டிருந்தீங்க. சமீப காலமா அது இல்லயே ஏன்?
கொடுக்கக்கூடாதுன்னு எதுவுமில்ல. அவர் சேட்டைய பதியறதுக்கு நான் தனியா பிளாக் ஆரம்பிக்கனும். கூடிய சீக்கிரம் பதிவிடறேன்.
அதே போல முன்னெல்லாம் நிறைய பட விமர்சனம் எழுதீனிங்க. ஒரே நாள்ல ரெண்டு விமர்சனப் பதிவு போட்டீங்க. இப்போ அவ்வளவா வர்றதில்லயே ஏன்?
முன்னாடி நிறைய படம் பார்க்க முடிஞ்சுது. இப்போ ஜூனியருக்கு டிமிக்கி கொடுத்துட்டு போக முடியறதில்ல:( அதில்லாம நான் தோணித் துலங்கி படம் பார்க்கறதுக்குள்ள ஒரு படத்துக்கு நூறு விமர்சனம் எழுதிடறாங்க. என் பங்குக்கு கிழிக்க வாய்ப்பே கிடைக்க மாட்டேங்குது. ஹும்ம்ம்.
உங்கப் பதிவு எதுவும் தமிழ்மண பரிந்துரைக்கு வருவதில்லயே ஏன்?
பரிந்துரைக்கு வர நான் என்ன...
நீங்க என்ன?
இருங்க. ஏன் அவசரப்படறீங்க? நான் என்ன சிறப்பாவா எழுதறேன்னு சொல்ல வந்தேன். எழுதறது மொக்கை. மொக்கையையும் மொக்கையா எழுதறேன். பரிந்துரைக்கெல்லாம் வரணும்ன்னு ஆசைப்பட முடியுமா?
ம்ம்ம்
ஷப்பாடி எதுவும் புரியல இல்ல?
உங்க எதிர்கால திட்டமென்ன வித்யா?
பேட்டின்ன உடனே புத்திய காமிக்கறீங்க பார்த்தீங்களா. திட்டம் பட்டமெல்லாம் வெச்சுக்க நானென்ன அரசியல்வாதியா?
நான் கேக்க வந்தது என்னன்னா ஏதாவது புதுமையா பண்ற எண்ணம் இருக்கா?
புதுமையா? வேணாம் போய்டு.
பதிவுலகத்துல உங்களுக்கு பிடிச்ச விஷயம் பிடிக்காத விஷயம் எது?
ரெண்டுமே கருத்து சுதந்திரம் தான்.
ஒரு பதிவரா சக பதிவர்களுக்கு என்ன கருத்து சொல்ல விரும்பறீங்க?
என்னை சக பதிவரா அவங்க மதிக்கறதே பெரிய விஷயம் தான்.
பேட்டிய முடிச்சுக்கலாம். ஏதாவது சொல்ல விரும்பறீங்களா?
தொடர்ந்து உற்சாகமும் ஊக்கமும் அளித்து வரும் அனைவருக்கும் நன்றி. உங்கள் ஆதரவு என்றும் உண்டு என்ற நம்பிக்கையில் என் மொக்கைகள் தொடரும்..
அந்த பிரபல பதிவர் இவர்தான்
Labels:
150ஆவது பதிவு,
என்ன கொடுமை சார் இது,
மொக்கை
January 20, 2010
அளவுக்கு மீறினால்...
இப்போதைய பரபரப்பான காலத்தில் குண்டூசி விற்கக்கூட அட்ராக்டிவான விளம்பரம் தேவைப்படுகிறது. டிவி, பத்திரிக்கை, ஹோர்டிங் போர்டுகள், ஆஃபர், ஸ்டால்கள், ஸ்பான்சர் என பல வகையில் விளம்பரங்கள் செய்யப்படுகின்றன. இது நுகர்வோர் பொருட்களுக்கு மட்டும்தான் என்ற நிலை மாறி அனைத்து துறைகளும் தத்தம் இருப்பைக் காட்டிக்கொள்ள விளம்பரம் தர ஆரம்பித்துவிட்டன.
தினசரிகளிலும் டிவி சேனல்களிலும் இப்போது நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சினிமா படங்களுக்கான விளம்பரங்கள் தான் ஜாஸ்தி. விளம்பரங்கள் மட்டுமில்லாமல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை க்ரியேட் பண்ண/கூடச் செய்ய டாக் ஷோ, கெஸ்ட் ஷோ என நிறைய ப்ரோமோ நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த ப்ரோமோ நிகழ்ச்சிகளின் நோக்கமான க்ரியேட்டிங்க் எக்ஸ்பெக்டேஷன் சில/பல சமயங்களில் எதிர்மறையாய் போய்விடுகிறது.
முதலில் டிவி விளம்பரங்களுக்கு வருவோம். சன் டிவியை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்க வேண்டாம். சன் குழும சேனல்களில் சோப் விளம்பரத்தைவிட அதிக தடவை விஜய் தான் வருகிறார். திரும்ப திரும்ப காட்டும்போது அடப்போங்கடா என்ற ஃபீலிங் வருகிறது. இது இல்லாமல் கலைஞர், விஜய், ஜெயா போன்ற சேனல்களில் ஒளிபரப்பப்படும் ட்ரெய்லர்கள் அடுத்த ரகம். இதில் சில ட்ரெய்லர்களைப் பார்த்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படும். சில சமயங்களில் ட்ரெய்லரே இப்படின்னா படம் எப்புடி இருக்கும் என்ற பீதி ஏற்படும்.
அடுத்து ரிலீசான படங்களிலிருந்து சில சுவாரஸ்யமான சீன்கள் போடுவார்கள். சில சீன்கள் நிஜமாவே சூப்பராக இருக்கும். சில சீன்களை பார்த்தால் அஞ்சு நிமிஷ சீனையே பார்க்க முடியலயே. இரண்டரை மணி நேரம் படம் எப்படி பார்ப்பது என்ற பயம் ஏற்படும். பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான்.
இப்போ தான் இருக்கு பாடாவதி பிரச்சனை. ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அத்தனை பேரையும் சோபாவில் உட்கார வைத்தோ அல்லது முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. அந்த மாதிரி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை இந்தப் படத்துக்காக உசிர கொடுத்து நடிச்சோம். எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள். பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். முக்கியமா ஹீரோக்கோ இல்ல ஹீரோயினுக்கோ ஏதாவது டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்.
அடுத்ததா நம்ம கிரியேட்டிவ் மண்டை வருவாரு. பேட்டி எடுக்கறவங்க தன் இண்டலிஜன்ஸ் காமிக்க இது அந்தப் படத்தோட காப்பியாம்பாங்க. இவரும் சிரிச்சுக்கிட்டே அப்படி ஒரு படம் வந்துதாம்பாரு (முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). அதெப்பெடி எல்லா டைரக்டர்களும் சொல்லி வச்சா மாதிரி "வித்யாசமான சப்ஜெக்ட்"ன்னு சொல்றாங்கன்னு தெரியல. ஹீரோ செட்டுல காமன் மேன் மாதிரி நடந்துகிட்டார். டீ தான் சாப்பிட்டார். ரிக்ஷாவுல தான் வந்தார்ன்னு ஹீரோக்கு ஜைன் ஜக் போடுவாங்க (அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு). இதெல்லாம் செஞ்சாரே கொஞ்சமாச்சும் நடிச்சாரான்னு கேளுங்க. ம்ஹூம். ஏதாவது எக்குத்தப்பா சொன்னா அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காதுல்ல.
படத்திற்கு பிரமாண்டம் அவசியம் தான். சில சமயங்களில் மட்டும். பெரிய மாளிகை போன்ற செட்டோ, வெளிநாட்டு பாடலோ பார்க்கும்போது மக்கள் தங்கள் ஏக்கங்களை தீர்த்துக் கொள்வார்கள். அதுவும் அவசியமென்றால் செய்யலாம். அதை விடுத்து ஹீரோ போட்ட கண்ணாடி 4 கோடி, ஷூவுக்கு 3 கோடி என்றெல்லாம் செலவு செய்வது எதற்கு (செல்வா ஆயிரத்தில் ஒருவன் ஆப்பு வச்சிருச்சு. அடுத்த படத்துலயாவது பார்த்து பண்ணுங்க)? சன் ரைஸ் காமிக்கிறதுக்கு ரொம்ப மெனெக்கெட்டோம். அதுக்கே ஒரு 4 கோடி போச்சும்பார்கள். எவன் அப்பன் வூட்டு காசோதானே?
இந்த அலப்பறை பண்றானுவளேன்னு தியேட்டர் போனா கிர்ர்ர்ர்ர். ஹீரோ சுழட்டி சுழட்டி அடிக்கும்போதே நமக்கும் தலைவலி வந்துருது. இவ்ளோ கோவம் ஏன்னு யோசிப்பீங்கதானே. போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். இத்தனைக்கும் பாதி படம் கூட பார்க்கல. ரெண்டு வருஷம் எடுக்க இந்தப் படத்துல என்ன இருக்கு (சீயான் இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? ஹீரோயின் ஒரு பாட்டுல போட்ட செருப்பு 3 கோடியாமாம். படதுவக்க விழா அழைப்பிதழ் 15,000 ரூபாய். படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்.
தினசரிகளிலும் டிவி சேனல்களிலும் இப்போது நுகர்வோர் பொருட்களுக்கான விளம்பரங்களை விட சினிமா படங்களுக்கான விளம்பரங்கள் தான் ஜாஸ்தி. விளம்பரங்கள் மட்டுமில்லாமல் படத்தின் மீதான் எதிர்பார்ப்பை க்ரியேட் பண்ண/கூடச் செய்ய டாக் ஷோ, கெஸ்ட் ஷோ என நிறைய ப்ரோமோ நிகழ்ச்சிகள் நடத்துகிறார்கள். இந்த ப்ரோமோ நிகழ்ச்சிகளின் நோக்கமான க்ரியேட்டிங்க் எக்ஸ்பெக்டேஷன் சில/பல சமயங்களில் எதிர்மறையாய் போய்விடுகிறது.
முதலில் டிவி விளம்பரங்களுக்கு வருவோம். சன் டிவியை இந்த ஆட்டத்தில் சேர்த்துக்க வேண்டாம். சன் குழும சேனல்களில் சோப் விளம்பரத்தைவிட அதிக தடவை விஜய் தான் வருகிறார். திரும்ப திரும்ப காட்டும்போது அடப்போங்கடா என்ற ஃபீலிங் வருகிறது. இது இல்லாமல் கலைஞர், விஜய், ஜெயா போன்ற சேனல்களில் ஒளிபரப்பப்படும் ட்ரெய்லர்கள் அடுத்த ரகம். இதில் சில ட்ரெய்லர்களைப் பார்த்தாலே படத்தை பார்க்கும் ஆர்வம் ஏற்படும். சில சமயங்களில் ட்ரெய்லரே இப்படின்னா படம் எப்புடி இருக்கும் என்ற பீதி ஏற்படும்.
அடுத்து ரிலீசான படங்களிலிருந்து சில சுவாரஸ்யமான சீன்கள் போடுவார்கள். சில சீன்கள் நிஜமாவே சூப்பராக இருக்கும். சில சீன்களை பார்த்தால் அஞ்சு நிமிஷ சீனையே பார்க்க முடியலயே. இரண்டரை மணி நேரம் படம் எப்படி பார்ப்பது என்ற பயம் ஏற்படும். பாடல்கள் ஒளிபரப்பப்படுவது இன்னொரு வகையான விளம்பரம். இது ஒரு பெரிய ப்ளஸ் பாயிண்ட். இன்பாஃக்ட் விஜய் படங்கள் கொஞ்சம் ஓடுவது இதனால்தான்.
இப்போ தான் இருக்கு பாடாவதி பிரச்சனை. ஒரு படம் ரிலீசாவதற்கு முன்னால் அதில் நடித்த நடிகர்கள், இயக்குனர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் என அத்தனை பேரையும் சோபாவில் உட்கார வைத்தோ அல்லது முளைப்பாரி சுற்றி கும்மியடிப்பதுபோல் செமி சர்க்கிளாக நிற்க வைத்தோ பேட்டி/கல்ந்துரையாடல் என்ற பெயரில் உளறவிடுவது. அந்த மாதிரி நிகழ்ச்சியில் சம்பந்தப்பட்ட நடிகர்/நடிகை இந்தப் படத்துக்காக உசிர கொடுத்து நடிச்சோம். எட்டாவது வார்டுல ஷூட்டிங் நடந்தபோது ஒரு பெரிய கொசு கடிச்சுது. அந்தளவுக்கு கஷ்டப்பட்டோம் என்பார்கள். பேட்டி எடுக்குற பிரகஸ்பதி கண்ண சிமிட்டிக்கிட்டே ஹீரோயின் கிட்ட ஹீரோவப் பத்தியும், ஹீரோகிட்ட ஹீரோயினோட பெர்பாஃமன்ஸ் பத்தியும் கேணத்தனமா ஏதாவது கேட்டு வைக்கும். முக்கியமா ஹீரோக்கோ இல்ல ஹீரோயினுக்கோ ஏதாவது டான்ஸ் சீக்வென்ஸ் ஷூட் பண்னும்போது கண்டிப்பா 108 டிகிரி ஜுரம் இருந்திருக்கும். அதையும் தாண்டி ஆடிருப்பாங்க. கேக்கறவனெல்லாரும் கேணைங்க தான்.
அடுத்ததா நம்ம கிரியேட்டிவ் மண்டை வருவாரு. பேட்டி எடுக்கறவங்க தன் இண்டலிஜன்ஸ் காமிக்க இது அந்தப் படத்தோட காப்பியாம்பாங்க. இவரும் சிரிச்சுக்கிட்டே அப்படி ஒரு படம் வந்துதாம்பாரு (முடிஞ்சா இந்த சுஹாசினிய நாடு கடத்த முடியுமான்னு பாருங்கப்பா. அவங்களும் அவிங்க டிரெஸ்சும்). அதெப்பெடி எல்லா டைரக்டர்களும் சொல்லி வச்சா மாதிரி "வித்யாசமான சப்ஜெக்ட்"ன்னு சொல்றாங்கன்னு தெரியல. ஹீரோ செட்டுல காமன் மேன் மாதிரி நடந்துகிட்டார். டீ தான் சாப்பிட்டார். ரிக்ஷாவுல தான் வந்தார்ன்னு ஹீரோக்கு ஜைன் ஜக் போடுவாங்க (அசல் வரட்டும். சரணுக்கு இருக்கு). இதெல்லாம் செஞ்சாரே கொஞ்சமாச்சும் நடிச்சாரான்னு கேளுங்க. ம்ஹூம். ஏதாவது எக்குத்தப்பா சொன்னா அடுத்த படத்துக்கு கால்ஷீட் கிடைக்காதுல்ல.
படத்திற்கு பிரமாண்டம் அவசியம் தான். சில சமயங்களில் மட்டும். பெரிய மாளிகை போன்ற செட்டோ, வெளிநாட்டு பாடலோ பார்க்கும்போது மக்கள் தங்கள் ஏக்கங்களை தீர்த்துக் கொள்வார்கள். அதுவும் அவசியமென்றால் செய்யலாம். அதை விடுத்து ஹீரோ போட்ட கண்ணாடி 4 கோடி, ஷூவுக்கு 3 கோடி என்றெல்லாம் செலவு செய்வது எதற்கு (செல்வா ஆயிரத்தில் ஒருவன் ஆப்பு வச்சிருச்சு. அடுத்த படத்துலயாவது பார்த்து பண்ணுங்க)? சன் ரைஸ் காமிக்கிறதுக்கு ரொம்ப மெனெக்கெட்டோம். அதுக்கே ஒரு 4 கோடி போச்சும்பார்கள். எவன் அப்பன் வூட்டு காசோதானே?
இந்த அலப்பறை பண்றானுவளேன்னு தியேட்டர் போனா கிர்ர்ர்ர்ர். ஹீரோ சுழட்டி சுழட்டி அடிக்கும்போதே நமக்கும் தலைவலி வந்துருது. இவ்ளோ கோவம் ஏன்னு யோசிப்பீங்கதானே. போன வாரம் ஒரு கருமத்த பார்த்து தொலச்சேன். இத்தனைக்கும் பாதி படம் கூட பார்க்கல. ரெண்டு வருஷம் எடுக்க இந்தப் படத்துல என்ன இருக்கு (சீயான் இப்படியே தேடிப்போய் மாட்டுங்க. விளங்கிரும்)? ஹீரோயின் ஒரு பாட்டுல போட்ட செருப்பு 3 கோடியாமாம். படதுவக்க விழா அழைப்பிதழ் 15,000 ரூபாய். படத்த ஒழுங்கா எடுங்கப்பு. கிராமத்தயெல்லாம் அப்புறம் தத்து எடுக்கலாம்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
பொதுவானவை,
விமர்சனம்
April 6, 2009
அல்லோவ் மைக் டெஸ்டிங்
ம்ம்ம். நாலு தெரு கூடுற இடத்திலெல்லாம் இனிமே காதைப் பொத்திக்கிட்டு தான் போகனும். அரசியல் கட்சிக்காரங்க அளப்பறைய ஆரம்பிச்சாச்சு. இனிமே நம்ம சொல்ல வேண்டிய டயலாக் இதுதான் "நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாரயணா." நானும் என் பங்குக்கு கொஞ்சம் தோரணம் கட்டலாம்ன்னு தான் இந்த பதிவு.
**************
3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்
அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************
சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************
"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************
அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************
பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************
தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.
பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************
கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.
திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.
அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.
இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.
**************
3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்
அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************
சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************
"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************
அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************
பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************
தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.
பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************
கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.
திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.
அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.
இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.
Labels:
அரசியல்,
என்ன கொடுமை சார் இது
March 30, 2009
I'm Back
சரியா பத்து நாள் கழிச்சு பதிவு போடறேன். போன வாரம் இணையத்தின் பக்கமே வரமுடியாதபடி இருந்தது. பத்து நாளும் சரியான அலைச்சல்:(
ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். ஆணிகளையெல்லாம் புடுங்கிட்டு நேரம் கிடைக்கும்போது விட்டுப்போன பதிவுகளையெல்லாம் படிக்கனும்.
எனக்கும் டிவிடி பேருந்துகளுக்கும் ராசியே இல்லை போல. இந்த தடவை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினவுடனேவே படம் போட்டான். என்ன படம் தெரியுமா? நம்ம கேப்டன் நடிச்ச அரசாங்கம். முடியல. ஐ.பாட் எடுத்து மாட்டினவ அந்த படம் முடிஞ்சுதான் இயர்போனை கழட்டினேன். உடனே அடுத்த படம் போட்டான்.அதுக்கு அரசாங்கமே பரவாயில்ல. பரத் படுத்திய நேபாளி. திரும்பவும் ஐ-பாட். ஊர் வரப்போகுதுன்னு அப்பா சொன்னபிந்தான் நிம்மதியா இருந்தது. ஐ-பாட் மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்:(
இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க. என்ன உணவகமாயிருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. சீக்கிரமா வலையேத்துறேன்:)
ஒரு வாரம் நல்லா ரெஸ்ட் எடுக்கனும். ஆணிகளையெல்லாம் புடுங்கிட்டு நேரம் கிடைக்கும்போது விட்டுப்போன பதிவுகளையெல்லாம் படிக்கனும்.
எனக்கும் டிவிடி பேருந்துகளுக்கும் ராசியே இல்லை போல. இந்த தடவை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பினவுடனேவே படம் போட்டான். என்ன படம் தெரியுமா? நம்ம கேப்டன் நடிச்ச அரசாங்கம். முடியல. ஐ.பாட் எடுத்து மாட்டினவ அந்த படம் முடிஞ்சுதான் இயர்போனை கழட்டினேன். உடனே அடுத்த படம் போட்டான்.அதுக்கு அரசாங்கமே பரவாயில்ல. பரத் படுத்திய நேபாளி. திரும்பவும் ஐ-பாட். ஊர் வரப்போகுதுன்னு அப்பா சொன்னபிந்தான் நிம்மதியா இருந்தது. ஐ-பாட் மட்டும் இல்லைன்னா நான் இந்நேரம் ஏதாவது மெண்டல் ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகிருப்பேன்:(
இனிமே தொடர் தாக்குதல்களுக்கு ரெடியா இருங்கப்பு. அடுத்த பதிவு என்னோட பேவரிட் செக்ஷன் கொட்டிக்கலாம் வாங்க. என்ன உணவகமாயிருக்கும்ன்னு யோசிச்சுக்கிட்டே இருங்க. சீக்கிரமா வலையேத்துறேன்:)
Labels:
அறிவிப்பு,
என்ன கொடுமை சார் இது,
பொதுவானவை
February 25, 2009
சில்லறை பிரச்சனை
என்னையும் பதிவரா மதிச்சி பட்டாம்பூச்சி விருது தந்த அண்ணன் நாகை சிவா அவர்களுக்கு நன்றி.
இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.
பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.
இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"
"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"
"அவர் இங்க இல்ல மேடம்"
திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.
பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.
இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"
"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"
"அவர் இங்க இல்ல மேடம்"
திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
Labels:
என்ன கொடுமை சார் இது,
கண்டனம்,
சிந்தனை செய் மனமே,
பொதுவானவை
January 5, 2009
உன்னையெல்லாம் படிக்க வெச்சது வேஸ்ட்
பி.டெக் மூன்றாம் ஆண்டு இறுதியில் என்னோட மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள். CTS-ல் ஆணி புடுங்கறதுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்கள். பரம்பரையில் முதல் engineer என்பதோடு இல்லாமல், அவ்ளோ சம்பளத்தில் வேலை கிடைத்தது எனக்குத்தான். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப பெருமை. என் தம்பிக்கு அப்போதே அட்வைஸ் இம்சைகள் ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்து நான் ஆணி புடுங்கின அழகே தனி. வேலைல சேர்ந்து ரெண்டே அ(ஆ)ப்ரைசலிலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பிச்சாச்சு. எவ்வளவோ கெஞ்சினேன். இன்னும் ஒரு வருஷம் கல்யாணம் வேண்டாம்னு. எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கா போச்சு. அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ரகு பலிஆடா ஆனார்:)
நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)
குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.
"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"
குழந்தைய பார்த்துக்கணும்.
"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"
அவங்களால வர முடியாது.
"அப்ப என்னதான் பண்ணப்போற?"
-----
"கேக்கறேன்ல சொல்லு"
(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?
"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.
எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.
டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.
நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)
குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.
"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"
குழந்தைய பார்த்துக்கணும்.
"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"
அவங்களால வர முடியாது.
"அப்ப என்னதான் பண்ணப்போற?"
-----
"கேக்கறேன்ல சொல்லு"
(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?
"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.
எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.
டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
சொந்தக் கதை,
பொதுவானவை
November 17, 2008
உஷார் மேன் ஹை
மளிகைப் பொருட்கள் வாங்க சூப்பர் மார்க்கெட் சென்றிருந்தேன். பாதி நாள் ஊரிலிருக்கப்போவதில்லை என்பதால் கொஞ்சம் குறைவாகவே வாங்கினேன். ஆனாலும் பில் கூட வந்திருப்பதாக சின்ன உறுத்தல். செக் பண்ணிப்பார்க்கையில் கிட்டத்தட்ட 150 ரூபாய்க்கு நான் வாங்காத பொருட்களையும் சேர்த்திருந்தார்கள். நான் சுட்டிக்காட்டியபோது அசடு வழிந்துக்கொண்டே ஸாரி என்றார்கள். இதில் காரில் உபயோகப்படுத்தப்படும் டிஷ்யூவும் அடக்கம். இதில் கொடுமை என்னன்னா என்கிட்டே காரே இல்லை. அப்புறம் கேஷ் திருப்பித்தரயிலாது. அந்தக் காசுக்கு ஈடா வேறெதாவது வாங்கிக்கோங்களேன் என்றார்கள். எனக்குத் தேவையானவை எல்லாவற்றையும் வாங்கிட்டேன். எனக்கு காச குடுங்க போதும் என்றேன். பெரிய வாக்குவாதத்திற்க்குப் பின் 150 ரூபாய் திருப்பித்தரப்பட்டது. எப்படியெல்லாம் பிளான் பண்றாங்கய்யா. ஆதலால் மக்களே என்னதான் தல போற காரியமாயிருந்தாலும் பில்லை செக் பண்ணுங்கோ.
Labels:
என்ன கொடுமை சார் இது
October 13, 2008
என்ன கொடுமை சார் இது - II
ஜுனியர்க்கு உடம்பு சரியில்லைன்னு டாக்டர் கிட்ட கூட்டிட்டுப் போனேன். மேற்கு தாம்பரத்தில் இருந்து கிழக்கு தாம்பரம் சேலையூர் போகணும்.
டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!
டாக்டர் பீஸ் - 50 ரூபாய்
மருந்து செலவு - 27 ரூபாய்
ஆட்டோ சார்ஜ் - 140 ரூபாய் (போக 70 , வர 70)???????????!!!!!!!!!!!!!!!
Labels:
என்ன கொடுமை சார் இது
August 14, 2008
Subscribe to:
Posts (Atom)
