Showing posts with label பாடல்கள். Show all posts
Showing posts with label பாடல்கள். Show all posts

December 9, 2010

ஈசன் - பாடல்கள்

ஈசன்...

டைரக்டர்/நடிகர்/தயாரிப்பாளர் சசிக்குமாரின் அடுத்தப் படம். சுப்ரமணியபுரம், நாடோடிகள், பசங்க என இயக்குனராய், நடிகராய், தயாரிப்பாளராய் நல்லப் படங்களைக் குடுத்த சசிகுமார் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ஈசன். விக்ரம் தயாரிப்பதாய் சொன்னப் படம் பின்னர் சசிக்குமாரே டேக் ஓவர் செய்துக்கொண்டார். சமுத்திரக்கனி, அபிநயா, வைபவ், தயாரிப்பாளர் ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் நடிக்கிறார்கள். ஒளிப்பதிவு கதிர். இசை ஜேம்ஸ் வசந்தன்.


மெய்யான இன்பம் இந்த போதையாலே..

பரபரப்பான சென்னை மெல்ல மெல்ல அடங்க ஆரம்பிக்கும் வேளையில் வெளியே சுற்றியிருக்கிறீர்களா? ஒரு பக்கம் பரபரப்பாய் இயங்கிக் கொண்டிருக்கும் கையேந்தி பவன்கள். இன்னொரு பக்கம் ஆயிராமாயிரம் மனிதர்களை விழுங்கியிருந்தாலும் சலனமே இல்லாமல் நின்றுக்கொண்டிருக்கும் நட்சத்திர விடுதிகள். பாதி ஷட்டரை கீழிறக்கிவிட்டு வரவை எண்ணிகொண்டிருக்கும் கடைக்காரர்கள், அங்குமிங்குமாய் ஒரு சில மனிதர்களே தென்படும் கடற்கரைகள் என சென்னை இரவு நேரத்தில் அழகாய் தெரியும். சில சமயம் ஆபத்தாகவும். சென்னையின் இரவு வாழ்க்கையை அனுபவிக்கும் நண்பர்கள் பாடும் பாடல். சுக்வீந்தர் சிங், பென்னி தயாள் மற்றும் சுனந்தன் (இவர் வேறெதாவது பாடல் பாடியிருக்கிறாரா? குரல் பிரேம்ஜியைப் போலவே இருக்கிறது) பாடியிருக்கும் பாடல். நல்ல பீட்களோடு முதல் முறை கேட்கும்போதே நல்லாருக்குல்ல என எண்ண வைக்கிறது.

என்றென்றும் பகலிலே ஏதேதோ வலியிலே
பொல்லாத ஞாபகத்தை துரத்தி துரத்தி
கொன்றுப் போடு இரவிலே


அழகான வரிகள். பகல் முழுவதும் இயல்பு தொலைத்து இயங்கிக்கொண்டிருக்கும் நாம் நம்மை மீட்டெடுப்பது இரவில்தானே.

சுகவாசி சுகவாசி...

சித்ராவும் மால்குடி சுபாவும் பாடியிருக்கும் இந்தப் பாடல் அநேகமாக க்ளப் பாடலாக வருமென நினைக்கிறேன். சுமார் ரகமாகத் தான் தெரிகிறது. வழக்கமான க்ளப்/ஐட்டம் நம்பர். வரிகளும் ஒன்றும் அவ்வளவு சுவாரசியமாகத் தெரியவில்லை. இந்த மாதிரிப் பாடல்களில் நேற்று என்பது இல்லை, நாளை இனிமே தான் வரும், வாழ்வை அனுபவி போன்ற ஒரே மாதிரியான வரிகள் கடுப்பைக் கிளப்புகிறது.

ஜில்லா விட்டு ஜில்லா வந்த

ஒரு பாலியல் தொழிலாளி தன் கதையை சொல்லும் பாடல். சோகத்தைச் சுமக்கும் நாட்டுபுறப்பாடல். தஞ்சை செல்வி என்பவர் பாடியிருக்கிறார். அருமையான குரல். சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க பாடலின் மூலம் வேல்முருகன் என்ற பாடகரை அறிமுகப்படுத்திய ஜேம்ஸ் வசந்தன் இந்தப் படத்தில் தஞ்சை செல்வியை அறிமுகப்படுத்தியிருக்கிறார்.

உசுரல்ல நானம் பெருசு புத்திக்குத்தான் தெரிஞ்சுச்சி
வயிறு எங்கே கேட்டிச்சி


என்ற வரிகள் மனதை தைய்க்கின்றன.

கண்ணில் அன்பைச் சொல்வாளே..

அழகான மெலடியாக வந்திருக்க வேண்டிய பாட்டு. காதலியைத் தாயாய் நினைத்து உருகும் பாட்டு. என்னவோ மிஸ்ஸிங் என்ற நினைப்பு இருந்துக்கொண்டே இருக்கிறது இந்தப் பாட்டில். என்ன எனக் கண்டுபிடிக்கமுடியவில்லை. சிலருக்குப் பிடிக்கலாம்;)

Get Ready to rock

சுப்ரமணியபுரத்தில் படத்தில் வராமல் ஒரு பாடலிருக்கும் “தேநீரில் சிநேகிதம்” என. கிட்டத்தட்ட அதே ஸ்டைலில் பென்னி தயாள் பாடியிருக்கும் பாடல். பெரிதாய் ஈர்க்கவில்லை. மோசமுமில்லை. ஒரு வேளை படத்துடன் பார்க்கும்போது பிடிக்குமோ என்னவோ.

ட்ரைலர்..

September 13, 2010

குயில் பாட்டு சென்றதென்ன...

தமிழ் திரையிசைப் பாடகர்களில் என்னை ரொம்பவே கவர்ந்தவர் ஸ்வர்ணலதா. பெயரைப் போலவே குரலும் தங்கம். Flawless voice. காதல், பிரிவு, ஏக்கம், துள்ளல் என எல்லா விதமான உணர்வுகளையும் இவர் பாடும்போது உணர முடியும். உச்சஸ்தாயில் பிசிறு தட்டாமல், அலட்டாமல் பாடுவதில் வல்லவர். எம்.எஸ்.வியால் அறிமுகப்படுத்தப்பட்டவர். இளையராஜா இசையிலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையிலும் 6000த்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியிருக்கிறார்.

முறையாக கர்நாடக சங்கீதம் கற்றவர். ஹார்மோனியமும் தெரியும். 1989ல் ஜேசுதாஸோடு டூயட் மூலமாக இசைப் பயணத்தை தொடங்கியவர். எவ்வளவு ஹிட்ஸ். நிறையப் புதையல்கள். ஆனால் இவரின் குரலிற்கு உரிய அங்கீகாரம் கிடைத்ததா என்பது சந்தேகமே. மலையாளத்தை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் சுத்தமான தமிழ் உச்சரிப்பைக் கொண்டிருந்தவர்.

இவர் பாடியதில் நிறைய பாடல்கள் எனக்குப் பிடிக்கும். சிலவற்றை இங்கே பகிர்ந்துக்கொள்கிறேன்.

குயில் பாட்டு வந்ததென்ன இளமானே - என் ராசாவின் மனசிலே
மாலையில் யாரோ மனதோடு பேச - சத்ரியன்
என்னுள்ளே என்னுள்ளே பல மின்னல் எழும் நேரம் - வள்ளி
எவனோ ஒருவன் வாசிக்கிறான் - அலைபாயுதே
ஹாய் ராமா யே க்யா ஹுவா - ரங்கீலா
போறாளே பொன்னுத்தாயி - கருத்தம்மா
நீதானே நாள்தோறும் - பாட்டு வாத்தியார்

மேலே குறிப்பிட்டுள்ள பாடல்களில் தனியாக இருக்கும் பெண்ணின் ஏக்கம், சோகம், காதல், தாபம் என அத்தனையும் மிக அழகாக கேட்கும்போதே காட்சியாய் விரியும்.

ஆட்டமா தேரோட்டமா - கேப்டன் பிரபாகரன்
அக்கடான்னு நாங்க உடை போட்டா - இந்தியன்
முக்காலா முக்காபுலா - காதலன்
உசிலம்பட்டி பெண்குட்டி - ஜெண்டில்மேன்
மெட்ராஸ சுத்திக் காட்டப் போறேன் - மே மாதம்
மெர்க்குரி பூக்கள் - ரட்சகன்
ராக்கம்மா கையத் தட்டு - தளபதி
கும்மி அடி கும்மி அடி - சில்லுன்னு ஒரு காதல்
போவோமா ஊர்கோலம் - சின்ன தம்பி

இந்தப் பாடல்களைக் கேட்கும்போது அவர் குரலில் இருக்கும் துள்ளல் கேட்பவரையும் தொற்றிக்கொள்ளும். கால்கள் தாளம் போட ஆரம்பிக்கும்.

டூயட் பாடல்களில் இழையோடும் காதல் ஒரு சின்னப் புன்னகையை இதழோரம் தவழ விடும்.

கீரவாணி
மலைக் கோவில் வாசலிலே - வீரா
என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட - உன்னை நினைச்சேன் பாட்டு படிச்சேன்
மல்லிகை மொட்டு மனசத் தொட்டு
மாசி மாசம் ஆளான பொண்ணு - தர்மதுரை
அந்தியிலே வானம் - சின்னவர்
நான் ஏரிக்கரை மேலிருந்து
மெல் இசையே - மிஸ்டர் ரோமியோ
குச்சி குச்சி ராக்கம்மா - பாம்பே
மாயா மச்சீந்த்ரா - இந்தியன்
சித்திரையில் என்ன வரும் - சிவப்பதிகாரம்

இன்னும் அடுக்கிக் கொண்டே போகலாம். போறாளே பொன்னுத்தாயி பாட்டிற்காக தேசிய விருது கிடைத்தது. நுரையீரல் பிரச்சனைக் காரணமாக நேற்று (12-09-2010) இறைவனடி சேர்ந்தார்.

உங்கள் ஸ்வர்ண குரலுக்கு என்றுமே அழிவில்லை.

April 16, 2010

காதல் வைத்துக் காத்திருந்தேன்...

நூலைப் போல சேலை. தாயப் போல பிள்ளை என்ற மொழி உண்டு. அப்பாப் போல பிள்ளை என மாற்றியமைக்கலாம் என்ற யோசனையை தோற்றுவிப்பவர் இவர். விஜய் யேசுதாஸ். அப்படியே அப்பாவின் குரல். பல சமயங்களில் பாடுவது அப்பாவா பிள்ளையா என்ற குழப்பத்தை கூகிளாண்டவர் தான் தீர்த்து வைப்பார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பாடியிருக்கிறார். பயணத்தைத் தொடர்கிறார்.

தமிழில் இவர் அறிமுகமானது பிரண்ட்ஸ் படத்தின் மூலம். ஓரளவுக்கு ஹிட்டான பாடல் ஜெயம் படத்தில் வரும் 'கோடி கோடி வார்த்தைகள்' பாட்டு. என் அப்பாவோட பேவரைட். எங்கோ ஏதோவொரு தெலுங்கு சேனலில் இதன் ஒரிஜினல் வெர்ஷனை கேட்டுவிட்டு எந்துக்கு எந்துக்கு எந்துக்குன்னு கொஞ்ச நாள் படுத்திக்கொண்டிருந்தார்.

தமிழில் இவர் பாடியுள்ள பாடல்கள் கொஞ்சம் கம்மிதானென்றாலும், அத்தனையும் ஹிட் வகையறாக்கள். காதல் கொண்டேன் படத்தில் 'காதல் காதல் காதல் நெஞ்சில்' பாட்டு ரொம்பப் பிடிக்கும்.
'காதல் தந்த மூர்ச்சை நிலை
நான் கண்கள் திறந்தும் தெளியவில்லை'



சண்டக்கோழி படத்தில் 'தாவணி போட்ட தீபாவளி' பாட்டு சூப்பர் ஹிட்டாகியது. மீரா ஜாஸ்மினின் துறுதுறுப்பு கொஞ்சம், பாடல் படமாக்கப்பட்ட விதம் கொஞ்சம், இவர் குரலின் மேஜிக் நிறைய என சேர்ந்து எப்போது பார்த்தாலும் முழுவதுமாய் பார்க்கத் தூண்டும் பாடல்.



அடுத்து நமது சூப்பர் ஹீரோ கம் டைரக்டர் சுண்ணாம்பு காவா நடித்த படத்தில் ஒரு பாட்டு. 'தாஜ் மஹால் ஓவியக் காதல்' பாட்டு. கண்ண மூடிக்கிட்டு பாக்கனும். தைரியசாலிகள் கண்ண தொறந்துகிட்டும் பார்க்கலாம்;)



இவருடைய ஹிட் பாடல்கள் அனைத்துமே யுவன் இசையமைத்தது. புதுப்பேட்டை படத்தில் 'புல் பேசும் பூ பேசும்' பாட்டு. அட்டகாசமான நடனம் (சினேகா தவிர்த்து). அந்த கிதார் இசையோடு இவர் குரலும் பின்னி இழையும்.

மெலடி விரும்பாதவர்களுக்கும் பிடிக்கக்கூடிய பாட்டு தீபாவளி படத்தில் வரும் 'காதல் வைத்து காத்திருந்தேன்'. ஐயோ பாவனாவின் அழகோடு பாடல் அப்படித் தாலாட்டும். மனது லேசாக இருக்க நான் அடிக்கடி கேட்பது இந்தப் பாட்டு.

'உன்னைக் கண்ட நாள் ஒளிவட்டம் போல்
உள்ளுக்குள்ளே சுழலுதடி
உன்னிடத்தில் நான் பேசியதெல்லாம்
உயிருக்குள் ஒலிக்குதடி'



அடுத்த பிடித்த பாட்டைப் பார்க்கவும் தனி மனதைரியம் வேண்டும். எனக்கு அது இல்லாத காரணத்தால் டிவியில் பார்க்க நேரிட்டால் அலறியடித்துக்கொண்டு சேனலை மாற்றிவிடுகிறேன். ஹீரோ??!! ஹீரோயின் காஸ்ட்யூமும், ஹீரோவின் அதிஅற்புதமான முகபாவங்களும் ஊப்ஸ் முடியல. மாயக்கண்ணாடி படத்தில் வரும் 'உலகிலே அழகி நீதான்'. இதே கேட்டகிரியில் பொக்கிஷம் படத்தில் 'நிலா நீ வானம் காற்று' பாட்டும் சேரும்.

மலைக்கோட்டை படத்தில் 'தேவதையே வா வா', தாமிரபரணி படத்தில் 'கட்டபொம்மன் ஊரெனக்க்கு', பாடல்களில் விஷாலுக்கு இவர் குரல் பர்பெக்டாய் செட்டாகும். சர்வம் படத்தில் 'சுட்டா சூரியன' பாட்டில் வரும் மேகம் கருக்குது மழ வரப் பார்க்குது என இவர் பாடும்போது இசை மழையே வரும்.

ஆயிரத்தில் ஒருவன் படத்தில் 'தாய் தின்ற மண்ணே' பாட்டை பாடியது யேசுதாஸ் சார் என ரொம்ப நாள் நினைத்துக் கொண்ண்டிருந்தேன். பெப்பி நம்பர் மட்டுமல்ல கிளாசிக்கலிலும் கலக்குவார் என நிரூப்பித்த பாடல்.

புலிக்குப் பிறந்தது பூனையாகுமா என்ற மொழியை பொய்யாக்காமல் கலக்கிக்கொண்டிருக்கும் விஜய் மேன்மேலும் நல்ல பாடல்களை தர வேண்டும். வாழ்த்துகள் விஜய்.

February 26, 2010

வலையப்பட்டி தவிலே

ஸ்ப்ரிங் போன்ற முடியும், கொஞ்சம் வெட்கம் கலந்தப் புன்னகையுமாய் ஹிந்தி மியூசிக் சேனலான சேனல் V இல் இவர் பாடியபோது யாரும் ஏன் இவரே நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். குறுகிய காலத்தில் இந்த உயரத்தை அடைவோம் என. நரேஷ் ஐயர். 29 வயது இளைஞர். பார்த்தா பக்கத்து வீட்டு பையன் மாதிரி இருக்கிறார். நான் பார்த்து இவர் பங்கேடுத்த ஷோக்களில் அநாவசியமாகவோ, அதிர்ந்தோ பேசியதில்லை. கோணங்கி சேட்டைகளோ, வீணான அலட்டல்களோ கிடையாது. பாட்டைப் போல் பேச்சும் மென்மை. ஹைபிட்சில் பிசிறடிக்காமல் பாடுவது இவர் ஸ்பெஷாலிட்டி.



சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் இசைப்புயலின் பார்வை இவர் மீது பட, தொட்டதெல்லாம் சாரி.. பாடினதெல்லாம் ஹிட்டாகிறது. 2005ல் ஆரம்பித்தது இசைப் பயணம். அன்பே ஆருயிரே ஷார்ட்டாக அ.ஆ என்ற ஒரு அதிசிறந்தப் படத்தில் மயிலிறகே என வருடினார் (இப்பவும் அந்தப் பாட்ட நான் கண்ண மூடிட்டு பார்க்கிறேன். கண்ணத்தொறக்க பயம்ம்மா இருக்கு). 2006 ஆம் வருடம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் த்ரூ. Rang De Basanthi படத்தில் இவர் பாடிய 'ரூபரூ' பாட்டு 'பாட்ஷாலா' பாட்டும் வடக்கில் பட்டையைக் கிளப்பின. இவை இரண்டும் foot tappin ரகம். அதே படத்தில் அருமையான மெலடியாக 'து பின் பதாயே' பாடியிருக்கிறார். ரூபரூ பாட்டுக்கு தேசிய விருதும், ப்லிம்பேஃர் விருதும் கிடைத்தது. இசைப் பயணம் தொடங்கி ஒரு வருடத்துக்குள்ளவே இரண்டு பெரிய விருதுகள் பெற்ற பாடகர் என்ற பெருமை இவரைச் சேரும். 'பாட்ஷாலா'வின் ரீமிக்ஸ் வெர்ஷனில் பிளேஸூடன் பின்னியிருப்பார். அதே வருடம் இவர் வரலாறுப் படத்தில் பாடிய இரு பாடல்களும் ஹிட். 'இன்னிசை' பாட்டுக்கு தல ஆடிய பரதநாட்டியம் இன்னும் என் கண்ணுலயே நிக்குது:)



சில்லுன்னு ஒரு காதல் படத்தில் இவர் பாடிய 'முன்பே வா' பாட்டை இன்றளவும் நான்கு முறையாவது ஒளிபரப்பிவிடுகின்றன தமிழ் மியூசிக் சேனல்கள். ரிங் டோன், காலர் ட்யூன் என எங்கேத் திரும்பினாலும் இது தான். எனக்கு இந்தப் பாட்டை விட 'கும்மியடி' பாட்டு ரொம்ப பிடிக்கும்.



சிவாஜி படத்தில் 'வாடா வாடா வாங்கிக்கடா'ன்னு ஒரு தீம் சாங் வருமே. பிளேஸேவுடன் சேர்ந்து பாடியது.



டாக்டர் ஒண்டிப்புலியின் அழுகிய ச்சே அழகிய தமிழ்மகன் படத்தில் வரும் 'வலையப்பட்டித் தவிலே'. என் ஐபாடில் இருக்கும் ஒரே விஜய் பாட்டு. ரஹ்மானின் இசையும் இவர் குரலும் நடத்தும் ஜுகல்பந்தி அருமையாக இருக்கும்.



2008ஆம் ஆண்டு இரண்டு பாடல்கள் ஹிட்டடித்தன. ஒன்று வெள்ளித்திரை படத்தில் 'உயிரிலே என் உயிரிலே' என்ற மெலடி. இசையருவி இதற்கு சிறந்த மெலடி அவார்ட் கொடுத்தது.



அடுத்து வாரணம் ஆயிரம் படத்தில் வரும் 'முன் தினம் பார்த்தனே' பாட்டு. இந்தப் பாட்டிற்காக பிலிம்பேஃர் அவார்ட் கிடைத்தது. பின்னர் பசங்க படத்தில் பாடிய 'ஒரு வெட்கம் வருதே' பாட்டு. இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் ஏதோவொரு நிகழ்ச்சியில் சுப்ரமணியபுரம் படத்தில் ஹிட்டடித்த 'கண்கள் இரண்டால்' பாட்டை பாட முதலில் இவரைத்தான் அனுகினாராம். லோ பிட்சில் பாடுவது வசதியாக இல்லாததால் பெள்ளி ராஜை பாட வைத்ததாகக் கூறினார். திரும்பவும் தலக்கு வருவோம். ஏகன் படத்தில் வரும் 'ஏ சாலா' பாட்டும் இவர் பாடியது தான். ஜூனியருக்கு பிடித்த பாட்டு. கந்தக்கோட்டை படத்தில் வரும் 'உன்னை காதலி என்று ச்ச்சொல்வா' பாட்டு நன்றாக இருக்கும் (ஆனால் ஏன் ச்சொல்லவான்னு பாடறாங்கன்னு தெரியல. லேடி வாய்ஸ் இன்னும் மோசம். அவுங்க ஜொள்ளவாம்பாங்க. கொடுமை).

விண்ணைத்தாண்டி வருவாயா வரைக்கும் வந்த இவர் விண்ணைத் தாண்டியும் சாதிப்பதற்கான தகுதிகள் கொண்டவர். மேலும் பல ஹிட்கள் கொடுத்து இசைப் பிரியர்களை மகிழச் செய்ய வாழ்த்துகள் நரேஷ்.

February 11, 2010

இந்த அன்பு போதும்

ஏதேதோ எண்ணம் வளர்த்தேன்
உன் கையில் என்னை கொடுத்தேன்
நீ தானே புன்னகை மன்னன்
உன் ராணி நானே
பண் பாடும் பாடகன் நீயே
உன் ராகம் நானே

சில காலமாய் நானும் சிறை வாழ்கிறேன்
உனை பார்த்ததால் தானே உயிர் வாழ்கிறேன்
தூக்கம் விழிக்கிறேன்
பூக்கள் வளர்க்கிறேன்
சில பூக்கள் தானே மலர்கின்றது
பல பூக்கள் ஏனோ உதிர்கின்றது
பதில் என்ன கூறு
பூவும் நானும் வேறு

குலதெய்வமே எந்தன் குறை தீர்க்க வா
கை நீட்டினேன் என்னை கரை சேர்க்க வா
நீயே அணைக்கவா
தீயை அணைக்கவா
நீ பார்க்கும் போது பனி ஆகிறேன்
உன் மார்பில் சாய்ந்து குளிர் காய்கிறேன்
எது வந்த போதும்
இந்த அன்பு போதும்


December 28, 2009

ராஜா ராஜா தான்

மற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந்த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.

குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.

அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.

சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.





"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது
"

பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.

அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு






"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ
"

மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்

"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".

இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.

August 26, 2009

அஞ்சலையும் அஞ்சனாவும்

ரம்மியம், துள்ளல் என கலந்து கட்டி அடிக்கும் குரலுக்கு சொந்தக்காரர். எந்த கடவுளுக்கு நேந்துகிட்டு பாட ஆரம்பிச்சாரோ தெரியல. ஹிட்ஸ் மேல ஹிட்ஸா கொடுத்துகிட்டே இருக்கார். ஆங் பாடகர் யாருன்னு தலைப்பை வெச்சே கெஸ் பண்ணிருப்பீங்கன்னு நினைக்கிறேன். இப்போதான் அஞ்சலைய வச்சு ஆட வைச்சார். இப்போ அஞ்சனான்னு உருகிட்டிருக்கார். கார்த்திக். இப்போதிருக்கும் இளம் தலைமுறைப் பாடகர்களில் தி மோஸ்ட் வெர்சடைல். அழகானவரும் கூட;)

ரஹ்மானால அறிமுகப்படுத்தப்பட்டு ஹாரிஸ் ஜெயராஜ் மூலமாக லைம் லைட்டிலேயே இருப்பவர். சீசனுக்கு ஒரு ஹிட் கொடுத்திடறார். 2001ல் வெளிவந்த ஸ்டார் படத்தில் official ப்ளேபேக் சிங்கராக அறிமுகமானார். நேந்துகிட்டேன் பாடல் சூப்பர் ஹிட்.






பிறகு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் வெளியான மின்னலே படத்தில் இரண்டு தீம் மியுசிக்கில் இவர் குரல் எட்டிப்பார்க்கும். "பூப் போல் பூப்போல் என் நெஞ்சை கொய்தவள்"






2002ல் வெளிவந்த சூர மொக்கைப் படமான கண்களால் கைது செய் படத்தில் வரும் அனார்களி பாட்டு அட்டகாசம் (பாட்டுக்காகவே மாஸ் பங்க் செய்துவிட்டு படத்துக்குப் போய் நொந்து நூடுல்ஸ் ஆனது தனிக்கதை).






பின்னர் அழகியில் வரும் "ஒளியிலே தெரிவது தேவதையா" மூலம் பைத்தியம் பிடிக்க வைத்தார். நான் காலேஜ் படிக்கும்போது இவரோட பெஸ்ட் ஹிட்ஸ் நிறைய வந்தது. என் தோழி ஒருத்தி இவரின் கல்யாணத்தன்று நாள் முழுவதும் அழுது புலம்பிக் கொண்டிருந்தாள். பாபாவில் "சக்தி கொடு" மற்றும் "மாயா மாயா" பாடல்கள் இவருக்கு நல்ல தீனியாக அமைந்தன. லேசா லேசா படத்தில் வரும் "அவள் உலக அழகியே" என்ற பாட்டு என் ஆல் டைம் பேவரிட்.

வித்யாசாகர் இசையமைப்பில் ரன் படத்தில் "தேரடி வீதியில் தேவதை வந்தா", யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில் ஏப்ரல் மாதத்தில் "சைட் அடிப்போம்" பாடல்கள் 2002ஆம் ஆண்டில் யூத்களின் தேசிய கீதமாய் இருந்தது.பாய்ஸ் படத்தின் மூலம் இவருக்கு ஒரு பெரிய ப்ரேக் கிடைத்தது. "எனக்கொரு கேர்ள் பிரண்ட்" தான் மாசிவ் ஹிட் என்றாலும் எனக்குப் பிடித்ததென்னவோ "எகிறி குதித்தேன்" பாடல் தான்.

இதற்க்குப் பிறகு கஜினியில் இவர் பாடிய "ஒரு மாலை இளவெயில் நேரம்" பாட்டிற்கு பிலிம்பேஃர் விருது கிடைத்தது. உன்னாலே உன்னாலே "உன்னாலே உன்னாலே", வாரணம் ஆயிரம் "அஞ்சலை", அயனில் "விழி மூடி யோசித்தால்", லேட்டஸ்டாக ஆதவன் "ஹசிலி பிசிலி" என பாடுவதெல்லாம் ஹிட்.

தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் என ஹிட்டடித்துக்கொண்டிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் கஜினியில் "பேக்கா", யுவராஜில் "ஷனோ ஷனோ" ரெண்டும் சூப்பர் ஹிட். தெலுங்கில் ஹேப்பி டேஸ் படத்தில் வரும் "அரே ரே" அவ்வளவு ரம்மியமாக இருக்கும்.






இவர் குரலில் எனக்குப் பிடித்த முக்கியமான பாடல்கள் சில

யாவரும் நலம் - சின்னக் குயில் கூவும்.
யாரடி நீ மோகினி - ஒரு நாளைக்குள் எத்தனை கனவு
சிவப்பதிகாரம் - சித்திரையில் என்ன வரும்
உனக்கும் எனக்கும் - உன் பார்வையில் பைத்தியமானேன்
பொல்லாதவன் - மின்னல்கள் கூத்தாடும்
மருதமலை - ஹே என் மாமா
மொழி - என் ஜன்னலில் தெரிவது
காக்க காக்க - ஒரு ஊரில் அழகாய்
சித்திரம் பேசுதடி - இடம் பொருள் பார்த்து
7G ரெயின்போ காலனி - கண் பேசும் வார்த்தைகள் புரிவதில்லை
வெயில் - காதல் நெருப்பின் நடனம்
ஓரம் போ - இதென்ன மாயம்
பிரிவோம் சந்திப்போம் - கண்டேன் கண்டேன்
வெண்ணிலா கபடி குழு - லேசா பறக்குது மனசு
அ ஆ இ ஈ - நட்ட நடு ராத்திரியை
நாளை - ஒரு மாற்றம்

பாடுவதோடு மட்டுமில்லாமல் ஜிங்கிள்ஸ் எனப்படும் விளம்பரங்களுக்கு இசையமைக்கத் தொடங்கியுள்ளார். விஜய்யின் லேட்டஸ்ட் கோக் விளம்பரம் இவர் பாடி இசையமைத்தது.






கூடிய சீக்கிரம் ஒரு நல்ல மியூசில் ஆல்பத்தை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம் கார்த்திக்.

June 23, 2009

ஷங்கர் - எஹ்ஸான் - லாய்

டிஸ்கி : இந்தப் பதிவின் டிஸ்கிய முதலில் படிச்சிடுங்க:)

அதிர வைக்கும் கிதாரிஸ்ட், டெக்னிக்கலி ஸ்ட்ராங் கீபோர்ட் ப்ளேயர், வசீகரிக்கும் குரலுடைய ஒருவர். மூவரும் ஒன்று சேர்ந்தால் - Breathless. இந்த ட்ரையோ தான் ஷங்கர் மகாதேவன் - எஹ்ஸான் நுரானி - லாய் மெண்டோன்ஸா.
இப்போது ஹிந்தி திரையுலகில் சூப்பர் ஹிட் மியூசிக் டைரக்டர்ஸ். லாய் ஏ.ஆர். ரஹ்மானிடம் கீ-போர்ட் பிளேயராக இருந்தபோது ஷங்கர் மகாதேவனோடு பழக்கமேற்பட்டது. பின்னர் விளம்பரப் படங்களுக்கு இசையமைத்துக் கொண்டிருந்த எஹ்ஸானோடு சேர "தொட்டதெல்லாம் துலங்கும்" என்ற வகையில் வெற்றிப் படிக்கட்டில் சர்ரென ஏறிக்கொண்டிருக்கிறார்கள்.

ஷங்கர் மகாதேவன் பெரியளவில் பேசப்பட்டது 1998 வெளிவந்த Breathless என்ற அவர் ஆல்பத்தின் பின் தான்.
ஜாவேத் அக்தரின் வரியில் அவர் பாடிய டைட்டில் சாங் சூப்பர் ஹிட். மூச்சு விடாமல் பாடப்பட்ட பாடல் எனக்கூறப்பட்டாலும் வேகமாக, சுத்தமான உச்சரிப்பில் பாடியதால் அப்படியிருந்தது என ஜாவேத் அக்தர் ஒரு பேட்டியில் குறிப்பிட்டிருந்தார்.

1998 Dus என்ற படத்திற்க்கு சந்தீப் சௌதாவுடன் சேர்ந்து இசையமத்தார்கள். "ஹிந்துஸ்தானி" என்ற அந்த பாடல் 1999 கிரிக்கெட் உலகக் கோப்பையின் போது இந்தியாவை உற்சாகப்படுத்த யூஸ் ஆனது. 1999ஆம் ஆண்டு கே.கே என்ற பாடகருடன் இணைந்து Rockford என்ற படத்திற்கு இசையமைத்தார்கள்.

மில்லினியம் ஆண்டில் இவர்களின் தனிப் பயணம் ஆரம்பமானது. "Mission Kashmir" வியாபார ரீதியில் பெரிய வெற்றியில்லையென்றாலும் பாடல்கள் சூப்பர் ஹிட். அதுவும் சுனிதி சௌஹான் வாய்ஸில் பும்பரோ பாட்டு சூப்பர் ஹிட்.
சுப் கே சே சுன்
பாடலும், இவர்கள் மூவரும் தோன்றிய ரிந்த் போஷ் மால் பாடலும் நன்றாக இருக்கும்.

2001ல் "Dil Chahta hai" படம் இவர்களுக்கு பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது. எல்லா பாடல்களும் பெரியளவில் ரீச்சானது. இந்தப் படத்திற்காக இவர்களுக்கு RD Burman அவார்டும், Star Screen அவார்டும் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடித்த பாடல்கள்
ஜானே க்யோன்

டைட்டில் பாடலான தில் சாக்தா ஹை


2003ஆம் ஆண்டு வெளியான Kal Ho Na Ho, Kuch Na Kaho ரெண்டும் பெரிய ஹிட். Kal Ho Na Ho படத்திற்காக தேசிய விருது கிடைத்தது. Its the time to disco பெரிய டான்ஸ் பீவரை உருவாக்கியது.

அதேபோல் Kuch Na Kaho படத்தில் வரும் இந்தப் பாட்டு சூப்பர் ஹிட்.


அதற்க்குப் பின் அவர்கள் இசையமைத்த Bunty Aur Babli (அப்பா, பையன், மருமகள் மூவரும் கெட்ட ஆட்டம் போட்ட பாட்டு சூப்பர் ஹிட்), Kabhi Alvida Na Kehna, Don, Saalam-e-ishq, Jhoom Barabar Jhoom, Johny Gaddar, Tare Zameen Par, Rock on என வரிசையாக ஹிட்கள்.

தமிழில் இவர்கள் முதலில் இசையமைத்த படம் ஆளவந்தான். லேட்டஸ்டாக யாவரும் நலம்.

இப்போது ஷாருக் நடித்துக்கொண்டிருக்கும் My Name is Khan படத்துக்கும் இவர்கள் தான் இசையமைத்துக் கொண்டிருக்கிறார்கள். எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாய் எகிறியிருக்கிறது. தமிழில் இவர்கள் மேலும் நிறைய படங்கள் இசையமைக்கவேண்டும் என்பது என் எதிர்பார்ப்பு. கண்டிப்பாக ரசிக்கத்தக்க இசையைத் தருவார்கள் என்ற நம்பிக்கையிருக்கிறது. பார்ப்போம்.

June 3, 2009

கைலாஷ் கேர்

டிஸ்கி 1: நான் ஏக் காவ் மே ஏக் கிஸான் வகையறா. எனக்கு ஹிந்தி லோடா லோடா ச்சே தோடா தோடா தான் வரும்.

டிஸ்கி 2: இந்தப் பதிவு முழுக்க முழுக்க மீஜிக் ஓரியண்டட். பாடல்களின் முழு அர்த்தம் மாலும் நஹி ஹை:)

கல்லூரியின் மூன்றாம் ஆண்டில் ECE டிபார்ட்மெண்டில் நடந்த கான்பரென்ஸ் முடிவில் கல்ச்சுரல்ஸ்க்கு அரேஞ்ச் செய்திருந்தார்கள். என் தோழி ECE டிபார்ட்மெண்ட் என்பதால் அவள் வற்புறுத்தலுக்கிணங்க அந்த ப்ரோக்ராமைப் பார்க்க சென்றிருந்தேன். ஜூனியர் பையன் ஒருவன் கிட்டாரோடு வந்து உட்கார்ந்து "அல்லா கே பந்தே ஹஸ் தே" என்று கர்ணக் கொடூரமாய் பாட ஆரம்பித்தான். "ஏண்டி செமினார்க்கு ஸ்பான்சர் பத்தலைன்னு இவன விட்டு பிச்சை எடுக்கறீங்களா?" என அவளை கலாய்த்துக் கொண்டிருந்தபோது என் வகுப்பு நண்பன் ஒருவன் "வித்யா அந்தப் பாட்டு ரொம்ப நல்லாருக்கும். பாடறவன் சொதப்பிட்டான். Will try to get u the audio soon." என்றான். சொன்ன மாதிரியே இரண்டு நாட்களில் இந்தப் பாடலை மட்டும் சிடியில் பதிந்து கொடுத்தான். கேட்டவுடன் அசந்து போனேன். மனசை அறுக்கும் அமானுஷ்யமான அதே சமயம் ரொம்ப மெஜெஸ்டிக் வாய்ஸ். கைலாஷ் கேர். 2003ல் வெளிவந்த "Waisa be hota hai II" படத்தில் அவர் பாடிய இந்தப் பாட்டு அவருக்கு ஒரு வெளிச்சத்தைத் தேடி தந்தது.
அர்த்தம் புரியவில்லையென்றாலும் அந்தக் குரலும் இசையும் ரொம்பவே பிடித்திருந்தது. கைலாஷ் கேர் சுஃபி (sufi) பாடகர் என்று நண்பன் கூறினான். (Sufism பற்றி விரிவாகத் தெரிந்து கொள்ள ஏதேனும் லிங்க் கிடைக்குமா?)

அதற்குப் பிறகு ஏ.ஆர்.ரகுமான் இசையில் ஸ்வதேஸ் படத்தில் உதித் நாரயணனோடு "யூஹி சல்லா சல்லா ஹி" பாட்டு.

2005ஆம் ஆண்டு "Mangal Pandey" படத்தில் டைட்டில் "சாங்கான மங்கள மங்கள ஹோ" பாட்டை "மங்கள்" "அக்னி" "ஆத்மா" என மூன்று வெர்ஷனில் பாடியிருப்பார். அவருடைய rustic வாய்ஸ் நன்றாக செட்டாகியிருக்கும். இசை ஏ.ஆர்.ரகுமான்.

தமிழ் படத்தில் அவர் முதன்முதலில் பாடியது மஜா படத்தில் வரும் "போதுமடா சாமி" என்ற பாட்டு. தமிழ் உச்சரிப்பு ரொம்ப சுமார் என்றாலும், பர்ருவாயில்லே பாடகர்களோடு ஒப்பிடும்போது மன்னிச்சு விட்டுடலாம்.

2006ஆம் ஆண்டு Kailasa என்ற அவருடைய முதல் ஆல்பம் வெளிவந்தது. ஆல்பம் சூப்பர் ஹிட். 9 பாடல்கள்.

Sufi ஸ்டைலில் Teri deewani



Peppy நம்பரான tauba tauba



Kaise mein kahoon ஆகியவை எனக்கு மிகவும் பிடித்தவை.

2007ஆம் ஆண்டு Kailasa Jhoomo re என்று பெயரிடப்பட்ட அடுத்த ஆல்பம்.
இதில் babam bam
Get this widget
Track details eSnips Social DNA

saiyyan, jhoomo re மூன்றும் கிளாசாக இருக்கும்.

Delhi - 6 படத்தில் Arziyan பாடலும், தாம் தூம் படத்தில் உய்யாலாலோ (திரைப்படத்தில் இடம்பெறவில்லை) பாட்டும் பாடியிருக்கிறார்.

May 5, 2009

ஒரு பாட்டு பாட்றீ

ஒரு பாட்டு பாட்றீ
என்ன பாட்டய்யா?
நம்ம பாட்டுத்தேன்

இது தேவர் மகனில் வரும் டயலாக்.

உன் இசையென்னும் இன்ப வெள்ளத்தில் மூழ்க ஓடோடி வந்த என்னை ஏமாற்றாதே. பாடு சாந்தா. பாடு.

இது எந்த படம்ன்னு தெரியல.

நான் காலேஜ் படிக்கும்போது ரொம்ப பேமஸ் டயலாக் இதுரெண்டும். என் வகுப்பில் சுமாராக பாடக்கூடியவர்களில் நிறைய பேர். (நானும் ஒருத்தின்னு சொன்னா நம்பவா போறீங்க). ஸ்கூல் choir (தமிழ்ல என்ன?) டீமில் பெரிய மனசு பண்ணி எனக்கு ஒரு இடம் கொடுத்தாங்க. பாரதியாரின் "பூட்டைத் திறப்பது" பாட்டுக்கு இசையமைத்து பாடியதில் எங்களுக்கு நி்றைய பாராட்டுக்கள். சிறு வயதில் விடியற்காலையில் தலையில் ஸ்கார்ஃப் கட்டி கதறக் கதற பாட்டு கிளாசுக்கு துரத்தப்பட்ட சிறுமிகளில் நானும் ஒருத்தி. நல்லவேளையாக பாட்டு டீச்சர் கல்யாணமாகி வேறு ஊருக்கு சென்றுவிட்டதால் நானும் தப்பித்தேன். என் இசைப் பயணம் "ராரா வேணு கோபாலா"வோடு நின்றுவிட்டது. தொடர்ந்திருக்குமேயானால் நானும் இன்னிக்கு ஏதாவது ஒரு சேனலில் யாரோட அபஸ்வரத்திற்க்காவது மார்க் போட்டுக்கொண்டிருப்பேன். ஆனாலும் என் திறமையை???!! வளர்க்க முயற்சி செய்தது பள்ளி நிர்வாகம். கர்நாடிக் கத்துக்க சொன்ன மியுசிக் டீச்சரிடம் "நீங்க போதும் மிஸ். நான் வேறயா?"ன்னு கேட்டு அவங்க கொஞ்சம் லேட்டா புரிஞ்சுகிட்டு நான் ரொம்ப லேட்டா சாரி சொன்னது தனிக்கதை.

சரி மேட்டருக்கு வருவோம். என்னை மாதிரி சரி சரி காண்டாவதீங்க. பொதுவா பாத்ரூம் சிங்கர் என்றழைக்கப்படும் கர்னாடக சங்கீதத்தை முறைப்படி பயிலாதவர்கள் நிறையப் பேருக்கு குரல் வளம் ரொம்ப நல்லாருக்கும். கல்லூரியில் விரிவுரையாளர் வராத சமயங்களிலோ, டூர் போகும்போதோ அந்தாக்ஷ்ரி எனப்படும் பாட்டுக்கு பாட்டு விளையாடுவது வழக்கம். செம ஜாலியா இருக்கும். மொழி வரைமுறை இல்லாமல் ஒரே பாட்டு தமிழ், தெலுங்கு, ஹிந்தி என ரீப்பிட்டடிக்கப்படும். சில சமயம் ஸோலோ பெர்பாமன்சும் நடத்தப்படும். அம்மாதிரியான சமயங்களில் அடிக்கடிப் பாடப்படும் (கணக்கிலடங்கா) பாடல்களில் சிலவற்றை, எனக்குப் பிடித்தவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

1. கண்மனி அன்போடு காதலன் - குணா
2. நறுமுகையே நறுமுகையே - இருவர்
3. மனம் விரும்புதே - நேருக்கு நேர்
4. நேற்று இல்லாத மாற்றம் - புதிய முகம்
5. யமுனை ஆற்றிலே - தளபதி (நூத்துல 90 பேரோட சாய்ஸ் இதுதான்)
6. மின்னல் ஒரு கோடி - வி.ஐ.பி
7. ராசாத்தி உன்னை காணாத - வைதேகி காத்திருந்தாள்.
8. கண்ணன் வந்து பாடுகின்றான் - ரெட்டைவால் குருவி
9. கண்ணுக்கு மை அழகு - புதியமுகம்

ஸோலோ பெர்மான்ஸ் மாதிரியே குழுவாய் கும்மியடிக்கவும் சில ரெடிமேட் பாடல்கள் இருக்கும். நாலு வரிக்கு மேல் யாருக்குமே தெரியாது. அப்படியே தெரிந்தாலும் ஆரம்பிக்கும்போது இருக்கும் டெம்போ கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்து ஸ்ருதி சேராமல் ஒருத்தர் மட்டும் மெய்மறந்து??!! பாடிக்கொண்டிருக்க மற்றவர்கள் கிண்டல் பண்ண என முடியும். கண்டிப்பாக யாராவது ஒருத்தர் டேபிள், நோட் புக் என எதிலாவது தாளம் போடுவார். சில இடங்களில் கோரஸ் சப்தம் காதைக் கிழிக்கும். எவ்வளவு சோகமாக இருந்தாலும் இப்படி குழுவாகப் பாடும்போது தொற்றிக்கொள்ளும் உற்சாகம் அலாதியானது. அதில் சில

1. செந்தமிழ் தேன்மொழியாள்
2. காட்டுக்குயிலே - தளபதி
3. முஸ்தபா முஸ்தபா - காதல் தேசம்
4. தண்ணீ குடம் எடுத்து - வைகாசி பொறந்தாச்சு
5. மாங்குயிலே பூங்குயிலே - கரகாட்டக்காரன்

இது வெறும் உதாரணம் தான். இந்த மாதிரி நிறைய பாட்டு இருக்கு. இப்போதைக்கு இந்த பாட்டெல்லாம் அசைப் போட்டு ஜாலியா இருங்க.

அப்புறம் முக்கியமான விஷயம் மறந்துட்டனே. பாடகர் அவதாரம்??!! எடுத்திருக்கும் அப்துல் அண்ணாவுக்கு வாழ்த்துக்கள். அப்படியே இந்த பதிவு அவருக்கு டெடிகேட் செஞ்சுக்கறேன் (ஏண்டா பாடினோம்ன்னு பீல் பண்றீங்களாண்ணே).

March 13, 2009

கீதம் சங்கீதம்

இப்போதெல்லாம் டிவியில் எந்த சேனலைத் திருப்பினாலும் ரியாலிட்டி ஷோ என்கிற பெயரில் சூப்பர் சிங்கர், ஸ்டார் சிங்கர் என ஒரே பாட்டு போட்டிதான். ரொம்பவே திகட்டுகிறது. நான் இந்த மாதிரியான ரியாலிட்டி ஷோக்களைப் பார்ப்பதேயில்லை. ஒரே டிராமா. கண்ணீர்விட்டு அழுவது, நடுவர்கள் போட்டியாளர்களை திட்டுவது, பின்னர் அது ச்சும்மா லுலுலாயிக்குன்னு சொல்லி பிறந்தநாள் வாழ்த்து சொல்வது போங்டாங்க நீங்களும் உங்க (ட)ரியாலிட்டி ஷோவும் என கத்தனும் போல தோணுது. இப்பல்லாம் வீட்டில டி.வி பார்க்குற நேரம் தடாலடியா குறைஞ்சுடுச்சு. முழுநேரமும் பாட்டு இல்லன்னா ஜூனியருக்காக ரைம்ஸ்ன்னு mp3 ப்ளேயர் தான் ஓடிக்கிட்டிருக்கு:)

போன வாரம் மாமியார் வீட்டுக்கு வந்திருந்தபோது விஜய் டிவியில் வரும் சூப்பர் சிங்கர் பற்றி ரொம்பவே சிலாகித்துப் பேசினார். அந்த 4 நாட்கள் அவர்கள் அடித்த கூத்தைக் காண கண்கோடி வேண்டும். நான் பார்த்த மட்டில் என் சங்கீத சிற்றறிவிற்க்கு (இது பத்தி தனி பதிவு அப்புறமா) எட்டிய வகையில் நடுவர்கள் பாராட்டும் அளவிற்க்கு இவர்களுக்கு தகுதியிருக்கிறதா என்பதென் கேள்வி. ஒரே ஒரு போட்டியாளர் பட்டையைக் கிளப்பினார். இத்தனைக்கும் அவர் கர்நாடக சங்கீதம் கற்றிருக்கவில்லை. எனக்குத் தெரிந்து கர்நாடக சங்கீதம் கற்றுத்தேர்ந்தவர்களுக்கு/ ரசிக்கத் தெரிந்தவர்களுக்கு செகண்ட் கிரேட் பாடல்கள் பிடிப்பதேயில்லை. அதேபோல் குரலும் ரொம்பவே இனிமையாக இருக்கவேண்டும் என எதிர்பார்ப்பார்கள். ஆனால் இப்போதிருக்கும் இசைக் கலைஞர்கள் / பாடகர்கள் நிறைய பேருக்கு செகண்ட் கிரேட் பாடலகளும், குத்துப்பாட்டுகளும் தியாகராஜ கீர்த்தனைகளை விட நன்றாக சூட் ஆகின்றன. நிறைய பேர் குத்துப்பாட்டுகளை உள்ளுக்குள் ரசித்தாலும் அதை வெளிப்படையாக ஒத்துக்கொள்வதில் தயக்கம் காட்டுகிறார்கள். SPB, ஜேசுதாஸ் இன்னும் பலருக்கு அப்பால் சில வித்தியாசமான குரல்களும் இருக்கின்றன. பாடகிகளில் சித்ராவிற்குப் பிறகு எனக்கு ரொம்பவும் பிடித்தவர் ஸ்வர்ணலதா. ஹை பிட்சில் அலட்டாமல் பாடுவார்.










Get this widget Track details eSnips Social DNA

இளா அருணின் இந்தப் பாட்டு தூளாக இருக்கும்.
Get this widget Track details eSnips Social DNA

அதே போல் வித்தியாசமான குரல் கொண்ட சாகுல் ஹமீதின் பாடல்கள் எல்லாமே சூப்பராக இருக்கும். ப்ச்ச் உயிரோடு இருந்திருந்தால் சிகரம் தொட்டிருப்பார்.
Get this widget Track details eSnips Social DNA

இப்போதெல்லாம் குத்துப்பாட்டு/fast numbers என்றால் அனுராதா ஸ்ரீராமைத்தான் கூப்பிடுகிறார்கள். ஒரே மாதிரியான டோனில் அவர் பாடுவது ரொம்ப போர். எனக்கு அனுராதா ஸ்ரீராமை பிடிக்காதென்பது வேறு விஷயம்:)
ஆகக்கூடி நான் என்ன சொல்றேன்னா கர்நாடக சங்கீதம் மட்டுமே நல்ல இசையென்று கிடையாது. இசை அவரவர் ரசனைக்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். குத்துப்பாட்டு (சிலவற்றைத் தவிர) கேட்பதெல்லாம் கேவலமில்லை.

December 2, 2008

ஜூனியரின் பேவரைட் பாடல்கள் 2008

இதோ வந்தேன் வந்தேன் என்று 2009 வந்துகொண்டிருக்கிறது. ஜூனியரின் பேவரைட் பாடல்களை(2008) பட்டியலெடுத்தேன். லிஸ்ட் இதோ:


டான்ஸ் நம்பர்ஸ்:
*********************
இந்த லிஸ்டில் வரும் பாடல்களைப் பார்த்தால் துரை எங்கிருந்தாலும் ஆட ஆரம்பித்துவிடுவார். ஒவ்வொரு முறையும் அவர் ஆடுவதை ரெக்கார்ட் பண்ணலாம்னு ட்ரை பண்ணுவேன். ஆனா கேமராவப் பார்த்தா ஆட்டம் நின்னுடும். சேட்டை ஆரம்பிச்சிடும். சமீபத்துல வாரணம் ஆயிரம் பாட்டுக்கு அவர் ஆடும்போது ரெக்கார்ட் பண்ணேன். ஆனா quality of the video zero:(


1. கத்தாழ கண்ணால - அஞ்சாதே (இது அவன் ஆல்டைம் பேவரிட். சில நாட்களுக்கு இந்த பாட்டை கேட்டால் தான் தூங்குவான் என்கிற நிலை இருந்தது.)
2. பலானது - குருவி (அது என்னமோ தெரியல குழந்தைகளுக்கு விஜய் பாட்டு ரொம்ப புடிக்குது.)
3. ஹாப்பி நீயு இயர் - குருவி
4. டாக்ஸி டாக்ஸி - சக்கரக்கட்டி
5. அடியே கொல்லுதே - வாரணம் ஆயிரம் (சாரோட லேட்டஸ்ட் ஹிட். பாட்டை கேட்டவுடனே செம உற்சாகத்துல ஆட்டம் போடுவார் - கேமராவப் பார்த்தா மட்டும் அடங்கிடுவாரு)
6. நாக்க முக்க - காதலில் விழுந்தேன்
7. மதுர குலுங்க - சுப்ரமணியபுரம்
8. குட்டிப் பிசாசே - காளை


டான்ஸ் நம்பர் அல்லாதவை
**********************************
இவ்வகை பாட்டுக்களில் எது அவனை கவர்கிறது என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் இந்தப் பாட்டுக்கள் டிவியில் வந்தால் அசையாமல், கண்ணிமைக்காமல் முழுப்பாட்டையும் பார்த்துவிட்டுதான் மறுவேலை.


1. கண்கள் இரண்டால் - சுப்ரமணியபுரம் (இதுவும் ஆல்டைம் பேவரிட்களில் ஒன்று)
2. ஹர ஹர சம்போ - அலிபாபா
3. முகுந்தா முகுந்தா - தசாவதாரம்
4. கல்லை மட்டும் கண்டால் - தசாவதாரம்
5. அன்பே என் அன்பே - தாம் தூம்
6. தாம் தூம் - தாம் தூம்
7. யாரோ மனதிலே - தாம் தூம்
8. தேன் தேன் - குருவி
9. சின்னம்மா - சக்கரக்கட்டி
10. தோஸ்த் படா தோஸ்த் - சரோஜா
11. அடடா அடடா - சந்தோஷ் சுப்ரமணியம்
12. நெஞ்சுக்குள் பெய்திடும் மாமழை - வாரணம் ஆயிரம்
13. ஏத்தி ஏத்தி - வாரணம் ஆயிரம்
14. அஞ்சலை - வாரணம் ஆயிரம்
15. எல்லாருக்கும் பிரெண்ட் - ஏகன்
16. டோனா - சத்யம்
17. வெண்மேகம் - யாரடி நீ மோகினி
18. ஒரு நாளைக்குள் - யாரடி நீ மோகினி
19. ச்சூ ச்சூ மாரி - பூ

சில சமயம் இந்த பாடல்களுக்குக்கூட டான்ஸ் ஆடுவான். எல்லாம் அவன் மூடை பொறுத்தது.

இந்த பாடல்களை ஒரு நாளைக்கு குறைந்தது இருபது தடவையாவது ஒளிபரப்பும் மியுசிக் சேனல்களை பாராட்டியே தீரணும். இவங்க மட்டும் இல்லன்னா ஜூனியருக்கு சாப்பாடு ஊட்றது ரொம்பக் கஷ்டம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா, இந்த லிஸ்டில் இருக்கும் பாடல்களைப் பார்த்து பார்த்து (ஜூனியருக்காக) நானும் இவற்றையெல்லாம் முனுமுனுக்கிறேன்:)