March 7, 2012

நினைவெல்லாம் நிவேதா - 7

”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா?” என்றான் கணேஷ்.

“நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணிருக்காங்க.” என்றவாரே ஒரு ஃபைலை கணேஷிடம் நீட்டினான் வசந்த். ”ரிசப்ஷன்ல வழக்கம்போல் எந்த டீடெய்லும் கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. ஒரு வழியா என்னோட ஸ்டைல்ல. எல்லா தகவலையும் கறந்துட்டு வந்துட்டேன்.”

கணேஷ் மௌனமாக அந்த ஃபைலைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து “எப்படி வாங்கினேன் கேக்கமாட்டீங்களா பாஸ்?” என்றான் வசந்த்.

”இதுக்கூட தெரியாமலா வசந்த் இருப்பேன். ரிசப்ஷனிஸ்ட் பேர் என்ன?”.

“ப்ரியா பாஸ். நீங்க சொல்லாம நான் செஞ்ச இன்னொரு வேலையக் கேட்டீங்கன்னா அசந்துருவீங்க”.

“அப்படி என்னடா வேலை?”

“இந்த ஃபைல்ல இருக்கிறதெல்லாம் நிவேதாவிற்கு டிப்ரெஷெனுக்காக டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள். இதில் வேடிக்கை என்னன்னா, இந்த மருந்து எதுவுமே வியாதிய குணப்படுத்தாது." ஆச்சர்யமாய் நிமிர்ந்த கணேஷைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே “டாக்டர் பேர் ஸ்வாதி” என்றான் வசந்த்.

”ஓஹ். ஜெயராமன் நான் நினைச்சத விட பயங்கரமான வேலை பண்ணிருப்பார் போலயே? சரி நீ தெரிஞ்சுகிட்டு வந்ததையெல்லாம் ஒரேடியா கொட்டிடு பார்ப்போம்” என்றான் கணேஷ்.

“இல்ல பாஸ். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்.”

“ஆல்ரைட். முதல் நாளிலிருந்தே எனக்கு ஜெயராமனோட நடவடிக்கைகளில் சந்தேகம். அந்தாளு நம்மள தேடி வந்தது மொத தப்பு. நிவேதா நம்மகிட்ட என்ன சொல்லியிருந்தா, இவருக்கென்ன? நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே? ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்சு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார்?”

“டெலிஃபோன் பக்கத்துல, ஸ்க்ரிப்ளிங் பேட்ல நம்ம அட்ரெஸும் ஃபோன் நம்பரும் இருந்ததா சொன்னார்”.

“ம்ம்ம். அந்த பேப்பரை ஃபாரென்ஸிக் டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி செக் பண்ணதுல, அது நிவேதா கையெழுத்து இல்ல. ஜெயராமனோடதுன்னு கன்ஃபர்ம் ஆச்சு. ரெண்டாவது வேலைக்காரி தினம் பதினொரு மணிக்கு ஜெயராமன் நிவேதா வீட்டிற்கு வருவாரென்றும், கம்ப்யூட்டரில் டைம் ஸ்பெண்ட் செய்வார்ன்னும் சொன்னாளே ஞாபகமிருக்கா?”

“ஆமாம் பாஸ். பன்னெண்டு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டார்ன்னு சொல்லிச்சே”.

“அதான். அந்த சிஸ்டத்த நோண்டினதுல சில சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்பட்டது. மொதல்ல அந்த சிஸ்டத்துல நிவேதா தன் மெயில் அக்கவுண்ட்ல ஆட்டோ லாகின் செட் பண்ணி வச்சிருக்காங்க. நிவேதா அனுப்பினதா ஜெயராமன் நம்மிடம் காட்டிய நான்கு மெயில்களிலும் டைமை செக் பண்ணிப்பாரு. 11.15க்கு நிவேதாவின் அக்கவுண்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கு. இந்த சிஸ்டத்திலிருந்துதான். ரெண்டாவது ஹிஸ்டரிய தோண்டுனதுல, ஜெயராமன் யுஎஸ்லிருந்து கிரெடிட் கார்ட் மூலமா ஒரு கருவி ஆர்டர் பண்ணிருக்கார். அதன் மூலமா ஒருவருடைய ஆழ்மன சிந்தனைகளை சிதைக்க முடியுமாம். சைபர் க்ரைமிலிருந்து வந்த தகவல்கள் இவை. என் கணிப்பு படி, இவரே மெயில் அனுப்பிச்சுகிட்டு, நிவேதாவை சூசைட் அட்டெம்ப்ட்டிற்கு ட்ரிக்கர் பண்ணியிருக்கார். மனநல மருத்துவர் ஆலோசனைகளெல்லாம் தன் மேல் சந்தேகம் வராமலிருக்க செய்த செட்டப்.”

“கரெக்ட் பாஸ். நான் கொஞ்சம் துருவினதுல, நிவேதாவிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர், ஜெயராமனின் தோழி வசந்தாவோட பொண்ணு. நிவேதாவிற்கு ஏதாவது நேர்ந்தால், சொத்துப் போய் சேரும் ட்ரஸ்ட்டில் நிர்வாகிகளில் ஒருவரின் தங்கை தான் இந்த வசந்தா. பக்காவா ப்ளான் பண்ணிருக்கானுங்க பாஸ். திருட்டு பசங்க.”

“சோ, கேம் எண்ட்ஸ் ஹியர்.”

“இப்ப நம்ம என்ன பண்ணப்போறோம் பாஸ்?”

“அஷோக்கிற்கு விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, காதாம்பரி கேஸ்கட்ல தலையக் கொடுக்கப் போறோம்.”

“சரி பாஸ். ஒரு அவசர வேலையா நான் கிளம்பறேன்.”

“சரி.”

“எங்கன்னு கேக்க மாட்டீங்களா?”

“மச்ச சாஸ்திரம் புக் வாங்கத்தானே? உன்ன திருத்தவே முடியாதுடா.”

(முற்றும்)

March 5, 2012

வருது வருது...விருது விருது..

நித்திலம் சிப்பிக்குள் முத்து தளத்தில் எழுதி வரும் சங்கரி மேடம் ஏதோ பெரிய மனசு பண்ணி நம்மையும் ஒரு ஆளா மதிச்சுஎனக்கு Versatile Blogger விருது தந்திருக்காங்க. ரொம்ப நன்றி மேடம். சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுதானே முறை. அதன்படி இந்த விருதை நான் பகிர்ந்துக்கப்போற மக்கள் இதோ. (ஒரே ஒரு விருதுதாங்கறதால கொஞ்ச பேருக்கு தான் டிஸ்ட்ரிப்யூட் பண்ண முடியும்:))))

எப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)

சயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.

மனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)

நம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.

ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.

இப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.

1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))

2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.

3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.

4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.

5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு? இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)

6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)

7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))