இங்கு சிறந்த முறையில் ப்ரோகிதம் நடத்திதரப்படும் (திருமணங்களுக்கு மட்டும்)
-கலைஞர்
அறிவாலயம்
***************
இங்கு குறைந்த விலையில், 365 நாட்களும் ஓய்வுச் சுற்றுலா ஏற்பாடு செய்யப்படும்.
-செல்வி. ஜெயலலிதா
ஜெஜெ டூர்ஸ் அண்ட் ட்ராவல்ஸ்
போயஸ் கார்டன், கொடநாடு, சிறுதாவூர்
(எங்களுக்கு வேறெங்கும் கிளைகள் இல்லை)
***************
இங்கு சிறந்த முறையில் ஹை ஜம்ப், லாங் ஜம்ப் பயிற்சி அளிக்கப்படும். இருபது வருட அனுபவம் ஆய்ந்த ஆசிரியரின் மேற்பார்வையில் வகுப்புகள் எடுக்கப்படும்
-டாக்டர் இராமதாசு
தைலாபுரம் தோட்டம்
****************
ஆசைப்பட்ட பொருள் கிடைக்காமல் கை நழுவிப் போகும்போது ஏற்படும் ஏமாற்றத்தை தாங்கிக்கொள்ளும் மனப்பக்குவத்தை பெற இங்கு வகுப்புகள் எடுக்கப்படும். அதோடு அண்ணனை சமாளிப்பது எப்படி என்ற கோர்சும் இலவசமாக கற்றுத்தரப்படும்.
இலவுக் காத்த கிளி ஸ்டாலின்
முன்னாள் மேயர், எதிர்கால முதலமைச்சர்
ஆயிரம் விளக்கு
*****************
மீசையில் மண் ஓட்டினால் மீசைக்கு பாதிப்பு வராமல் துடைப்பது, மடக்கி முறுக்கு மீசை வளர்ப்பது முதல் மீசைக்கென்றே தனித்துவமாக ஆரம்பிக்கப்பட்ட பயிற்சி பட்டறை.
திருமாவளவன்
சிறுத்தைக்குட்டி பயிற்சி பட்டறை
கொழும்பு ஏர்போர்ட்
******************
இங்கு சுத்தமான, சுவையான கூட்டு வகைகள் சப்ளை செய்யப்படும்
கேப்டன் கேட்டரிங் சர்வீஸ்
******************
அமைதியான குளத்தில் குவா குவா எனக் கத்தியபடியே தவளைக்கல் எறிவது எப்படி, வாயாலேயே வடை சுடுவது எப்படி போன்ற பராம்பரியமிக்க விளையாட்டுகள் இங்கு பயிற்றுவிக்கப்படும்
-ஈ.வி.கேஸ் இளங்கோவன் & கோ
- யுவராஜா & கோ
பி.கு : மேற்குறிப்பிட்டுள்ள இரு கம்பேனிகளுக்கும் தலைவர் ஒருவர்தான். ஆனால் கம்பேனி வேற வேற.
***************
வெறிச்சோவென்றிருக்கும் ஆஃபிஸில், பயமில்லாமல் தைரியமாய் உட்கார்ந்து ஈ ஓட்டுவது எப்படி என்ற கலை இங்கு பயிற்றுவிக்கப்படும். பயிற்சிக்கு பணம் கட்டுபவர்களுக்கு கால் கிலோ விபூதியும், குங்குமமும் இனாமாக வழங்கப்படும்.
-கமலாலயம்
***************
எங்கள் கார்டனில் தோப்பைப் போல காட்சியளிக்கும் ஒத்தை மரம், ஒரு இலை கூட இல்லாத மரம், கண்ணீர் வடிக்கும் மரம், போன்ற அரிய வகை மரங்கள் விற்பனைக்கு
வைகோ
தாயகம்
***************
பிஸினசில் நன்றாக லாபம் பார்த்த பின்னர், குடைச்சல் கொடுத்து, பார்ட்னரே தங்களை வெளியே துரத்துவது எப்படி? தகுதிக்கு மீறி ஆசைப்படுவது எப்படி? போன்ற வாழ்க்கைக்கு உபயோகமான பயிற்சிகள் அளிக்கப்படும்.
-காங்கிரஸ் தலைமை
*****************
எல்லாவிதமான பக்கவாத்தியங்களும் இங்கு சிறந்த முறையில் பயிற்றுவிக்கப்படும். ஸ்ருதி சுத்தமாய் ஜால்ரா அடிப்பதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களால் நடத்தப்படும் வகுப்புகள்.
வீரமணி, சுப.வீ, தங்கபாலு
********************
Showing posts with label அரசியல். Show all posts
Showing posts with label அரசியல். Show all posts
March 8, 2011
December 15, 2009
தெலுங்கானா... ஆனா??
தெலுங்கானா என தனி மாநிலம் அமைக்க மத்திய அரசு இசைந்தது என்ற செய்தி வெளியானவுடன், கூர்க்காலேண்ட் என ஒரு கோஷமும், காரைக்கால் என ஒரு கோஷமும், கூர்க் என கர்நாடகாவிலிருந்து குரல்களும் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதன் உச்சமாக உ.பி மாநிலத்தை மூன்றாக பிரிக்க வேண்டுமென அம்மாநில முதல்வர் மாயாவதி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். நேற்று வீட்டில் நடந்த விவாதங்களின் விளைவே இப்பதிவு.
ஆந்திராவை விட்டு தெலுங்கானாவை பிரிப்பது அவசியமா எனக் கேட்டால் இல்லை என்பதே என் கருத்தாகும். முதலில் இம்மாதிரி மாநிலங்களை பிரிப்பதால் நிர்வாக செலவு கூடுதலாகும். முதலமைச்சர் முதற்கொண்டு முனிசிபாலிட்டி ஆபிசர் வரை சம்பளம், இத்யாதி இத்யாதி. மத்திய அரசு துறைகளின் பணிச்சுமை கூடுதலாகும் (இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க). மாநில வாரியான இடஒதுக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் என பல பிரச்சனைகள் எழும். இதை விட அதிமுக்கியமானது. ஒரு பிள்ளை அழுதால் சுத்தியுள்ள அத்தனையும் அழும். அது மாதிரி ஆளாளுக்கு கூவினால்? தமிழ்நாடு தனி நாடாகலாம் (பெரிய குடும்பமெனில் கண்டிப்பாக ஜனாதிபதி பதவி உண்டு. பெரியவர் பதவியில்லாமல் கஷ்டப்படுவார்). வடக்கு தெற்கு என இரு மாநிலங்களாய் பிரிக்கப்படலாம். இரு பிள்ளைகளோ, உடன்பிறவா சகோதரிகளோ, தந்தையும் மகனுமோ ஆளுக்கொரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகலாம். நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. இப்படி மொழி/ஜாதி/ வாரியாக பிரிக்கும்போது, மக்களிடையே மேன்மேலும் துவேஷம் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மும்பை மராத்தியர்களுக்கே என்ற பிரச்சனைப் போல் தெலுங்கானாவில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றால்? (சந்திரசேகர் ராவ் இப்பொழுதே ஹைதராபாத்தை விட்டுத் தர மாட்டோம் என்கிறார். வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி மூக்கு விடைப்பா இருக்கறதால இப்படியெல்லாம் பண்றாரோ??!!). இம்மாதிரியே வெளியாட்களை தடுத்தால், பெருகிவரும் ஜனத்தொகையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறையாதா? எத்தனை நாளுக்குத் தான் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்?
சரி பிரிக்கவேயில்லையென்றாலும் அதே குண்டு சட்டி தானே? பீஹாரிலிருந்து 2000ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது ஜார்கண்ட். பிரிக்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பழங்குடி மக்களின் முன்னேற்றம். அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென்பதே. மற்றொன்று அபரிதமான கனிம வளங்களை (இந்தியாவில் கனிம வள உற்பத்தியில் முண்ணனி வகிக்கும் மாநிலமிது) பெற்ற இப்பகுதியை பிரிப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு அம்மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதாலும். அதற்கேற்றார் போல் 2000 ஆம் ஆண்டிலிருந்து அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது (தகவல் - http://www.ibef.org). ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அல்ல என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மதுகோடா (4000 கோடி. சொக்கா சொக்கா எத்தனி சைபர். ஹூம்ம்ம்ம்), சிபு சோரன் என மோசமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியும் ஒரளவுக்குத் தடுமாறி முன்னேறியிருப்பதற்கான ஒரே காரணம் இயற்கை வளங்கள். இந்த வளர்ச்சி தெலுங்கானாவில் சாத்தியப்படாதா எனக் கேட்டால் கஷ்டம் தான் என்பது என் எண்ணம். ஏற்கனவே ஓரளவுக்கு முன்னேறிய இடத்தில் இண்வெஸ்ட் பண்ணும்போது ரிடர்ன்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கும் தானே. நம் நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட இண்வெஸ்ட்மெண்டுகள் கொஞ்சம் தேவையில்லாதது தானே?
பிரிக்காமலே/கண்டுக்கொள்ளாமலே இருந்தால் வளர்ச்சி என்னாகும்? அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நாங்கள் சவலைப் பிள்ளை போலாகி வருகிறோம் என புலம்பல்கள். சவலைப் பிள்ளைகளை ஆரோக்கியமாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தங்கள். ஏன் என யாரேனும் யோசிக்கிறார்களா? திறமைசாலிகளை வெளியிலிருந்து வரவழைக்க காரணம் உள்ளூர்வாசிகளுக்கு மேல் மாடியில் சரக்கு பத்தவில்லை என்பது தானே. அனைவருக்கும் அடிப்படைத் தேவையான கல்வியை பாகுபாடில்லாமல் வழங்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முடியும். தனித் தெலுங்கானா கேட்டு போராடுபவர்கள் எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். புறக்கணிப்பிற்கு முக்கிய/அடிப்படை காரணமான போதிய கல்வி அறிவு இல்லாததற்கு என்ன செய்ய போகிறார்கள். போராடுபவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் பள்ளி/கல்லூரிகளில் எங்களுக்கு முன்னுரிமை (தகுதி அடிப்படையில் மட்டுமே) வழங்க வேண்டும் என போராடினால் ஒரு நியாயம் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை கல்வி கொடுப்பதில் காட்டத் தவறிவிட்டார்கள் (மிகச் சிலரே என்றாலும் தாக்கம் பெரிது). நாமும் அத்தவறை செய்யாமலிருப்போம். சரியான கல்வி மட்டுமே மக்களையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும்.
டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே.
ஆந்திராவை விட்டு தெலுங்கானாவை பிரிப்பது அவசியமா எனக் கேட்டால் இல்லை என்பதே என் கருத்தாகும். முதலில் இம்மாதிரி மாநிலங்களை பிரிப்பதால் நிர்வாக செலவு கூடுதலாகும். முதலமைச்சர் முதற்கொண்டு முனிசிபாலிட்டி ஆபிசர் வரை சம்பளம், இத்யாதி இத்யாதி. மத்திய அரசு துறைகளின் பணிச்சுமை கூடுதலாகும் (இருக்குற வேலையையே எவனும் ஒழுங்கா பாக்க மாட்டேங்கறாங்க). மாநில வாரியான இடஒதுக்கீடுகள், நிதி ஒதுக்கீடுகள் என பல பிரச்சனைகள் எழும். இதை விட அதிமுக்கியமானது. ஒரு பிள்ளை அழுதால் சுத்தியுள்ள அத்தனையும் அழும். அது மாதிரி ஆளாளுக்கு கூவினால்? தமிழ்நாடு தனி நாடாகலாம் (பெரிய குடும்பமெனில் கண்டிப்பாக ஜனாதிபதி பதவி உண்டு. பெரியவர் பதவியில்லாமல் கஷ்டப்படுவார்). வடக்கு தெற்கு என இரு மாநிலங்களாய் பிரிக்கப்படலாம். இரு பிள்ளைகளோ, உடன்பிறவா சகோதரிகளோ, தந்தையும் மகனுமோ ஆளுக்கொரு மாநிலத்தின் முதலமைச்சர் ஆகலாம். நினைத்து பார்க்கவே பயமாய் இருக்கிறது. இப்படி மொழி/ஜாதி/ வாரியாக பிரிக்கும்போது, மக்களிடையே மேன்மேலும் துவேஷம் ஏற்படுவதற்கான அபாயமும் இருக்கிறது. ஏற்கனவே மும்பை மராத்தியர்களுக்கே என்ற பிரச்சனைப் போல் தெலுங்கானாவில் வேறு யாரும் இருக்கக்கூடாது என்றால்? (சந்திரசேகர் ராவ் இப்பொழுதே ஹைதராபாத்தை விட்டுத் தர மாட்டோம் என்கிறார். வடிவேலு ஒரு படத்துல சொல்ற மாதிரி மூக்கு விடைப்பா இருக்கறதால இப்படியெல்லாம் பண்றாரோ??!!). இம்மாதிரியே வெளியாட்களை தடுத்தால், பெருகிவரும் ஜனத்தொகையில் வேலைவாய்ப்புகள் பெருமளவில் குறையாதா? எத்தனை நாளுக்குத் தான் குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்ட முடியும்?
சரி பிரிக்கவேயில்லையென்றாலும் அதே குண்டு சட்டி தானே? பீஹாரிலிருந்து 2000ஆம் ஆண்டு தனி மாநிலமாக பிரிக்கப்பட்டது ஜார்கண்ட். பிரிக்கப்பட்டதற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று பழங்குடி மக்களின் முன்னேற்றம். அவர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென்பதே. மற்றொன்று அபரிதமான கனிம வளங்களை (இந்தியாவில் கனிம வள உற்பத்தியில் முண்ணனி வகிக்கும் மாநிலமிது) பெற்ற இப்பகுதியை பிரிப்பதால் நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு பங்களிப்பதோடு அம்மக்களின் வாழ்விலும் மாற்றம் கொண்டுவரலாம் என்பதாலும். அதற்கேற்றார் போல் 2000 ஆம் ஆண்டிலிருந்து அம்மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி 14.6 சதவிகிதமாக உயர்ந்துள்ளது (தகவல் - http://www.ibef.org). ஆனாலும் இது எதிர்பார்க்கப்பட்ட வளர்ச்சி அல்ல என்பது பொருளாதார வல்லுநர்களின் கருத்து. மதுகோடா (4000 கோடி. சொக்கா சொக்கா எத்தனி சைபர். ஹூம்ம்ம்ம்), சிபு சோரன் என மோசமான அரசியல்வாதிகளின் பிடியில் சிக்கியும் ஒரளவுக்குத் தடுமாறி முன்னேறியிருப்பதற்கான ஒரே காரணம் இயற்கை வளங்கள். இந்த வளர்ச்சி தெலுங்கானாவில் சாத்தியப்படாதா எனக் கேட்டால் கஷ்டம் தான் என்பது என் எண்ணம். ஏற்கனவே ஓரளவுக்கு முன்னேறிய இடத்தில் இண்வெஸ்ட் பண்ணும்போது ரிடர்ன்ஸ் ரொம்ப ஸ்லோவாக இருக்கும் தானே. நம் நாடு இப்போது இருக்கும் நிலையில் இப்படிப்பட்ட இண்வெஸ்ட்மெண்டுகள் கொஞ்சம் தேவையில்லாதது தானே?
பிரிக்காமலே/கண்டுக்கொள்ளாமலே இருந்தால் வளர்ச்சி என்னாகும்? அது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயம். நாங்கள் சவலைப் பிள்ளை போலாகி வருகிறோம் என புலம்பல்கள். சவலைப் பிள்ளைகளை ஆரோக்கியமாக்குவதில் கவனம் செலுத்தப்பட வேண்டும். சொந்த மாநிலத்தில் வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை என்று வருத்தங்கள். ஏன் என யாரேனும் யோசிக்கிறார்களா? திறமைசாலிகளை வெளியிலிருந்து வரவழைக்க காரணம் உள்ளூர்வாசிகளுக்கு மேல் மாடியில் சரக்கு பத்தவில்லை என்பது தானே. அனைவருக்கும் அடிப்படைத் தேவையான கல்வியை பாகுபாடில்லாமல் வழங்குவதன் மூலம் மட்டுமே பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை சரி செய்ய முடியும். தனித் தெலுங்கானா கேட்டு போராடுபவர்கள் எங்கள் மக்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் என்கிறார்கள். புறக்கணிப்பிற்கு முக்கிய/அடிப்படை காரணமான போதிய கல்வி அறிவு இல்லாததற்கு என்ன செய்ய போகிறார்கள். போராடுபவர்கள் தெலுங்கானாவில் இருக்கும் பள்ளி/கல்லூரிகளில் எங்களுக்கு முன்னுரிமை (தகுதி அடிப்படையில் மட்டுமே) வழங்க வேண்டும் என போராடினால் ஒரு நியாயம் இருக்கிறது. நமக்கு முந்தைய தலைமுறைகள் சொத்து சேர்ப்பதில் காட்டிய ஆர்வத்தை கல்வி கொடுப்பதில் காட்டத் தவறிவிட்டார்கள் (மிகச் சிலரே என்றாலும் தாக்கம் பெரிது). நாமும் அத்தவறை செய்யாமலிருப்போம். சரியான கல்வி மட்டுமே மக்களையும் நாட்டையும் வளர்ச்சி பாதையில் அழைத்துச் செல்லும்.
டிஸ்கி : இந்த இடுகை முழுவதும் என் சொந்தக் கருத்து மட்டுமே.
Labels:
அரசியல்
April 23, 2009
அடுத்தது என்ன?
ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?
அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.
கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.
அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.
அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.
கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.
அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.
April 15, 2009
ஈழமும் ஓட்டு வங்கியும்
எவ்வளவோ போராட்டங்கள். எவ்வளவோ பேரணிகள். எவ்வளவோ தீக்குளிப்புகள். தீர்வே இல்லையா என கதறும் சொந்தங்கள். நம் சொந்தங்கள். ஆனால் அதிகாரவர்க்கம் அழுத்தமாய் மௌனம் காக்கின்றது. இல்லையேல் அவ்வப்போது கொஞ்சம் கண்துடைப்புகள். சீக்கியர்களின் போராட்டத்தை கருத்தில் கொண்டு டைட்டலருக்கும், சஜ்ஜானுக்கும் போட்டியிட வாய்ப்பளிப்பதைப் பற்றி மறுபரிசீலனை செய்யப்படும் என அறிவிக்கும் காங்கிரஸ் கட்சிக்கு நிதம் போராட்டம் என சொந்தங்களைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழர்களின் குரல் காதில் விழவில்லையா? இல்லை கேட்காததுபோல் நடிக்கிறார்களா? இன்றைக்கு ஈழத்தில் நடக்கும் கொடுமைகள் நாளைக்கு நமக்கும் நடக்கும். நடக்காதென்பதிற்க்கு யார் உத்திரவாதம்?
பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.
நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
Make a wise decision. Vote for YOUR future.
பதவியை துறந்தால் தீர்வு வந்துவிடுமா? சிலர் பேசும் பேச்சுக்கு நான் பதவியில் இருப்பதால் தான் தப்பித்துக்கொண்டிருக்கிறார்கள் என்கிறார் முதல்வர். தமிழ் உணர்வாளர்களென தங்களை அடையாளப்படுத்திக்கொள்ளும் திருமாவுக்கோ, வைகோவுக்கோ இப்போது எம்.பி சீட் தான் முக்கிய பிரச்சனையாக தெரிகிறது. இலங்கைப் பிரச்சனையில் இந்தியா தலையிட்டு தீர்வு காணாதபட்சத்தில் தமிழகத்திலுள்ள அனைத்து கட்சிகளும் தேர்தலை புறக்கணிப்போமென கூறினால் மத்திய அரசி பணியாதா? கண்டிப்பாக நம் அரசியல்வாதிகள் இதை செய்யமாட்டார்கள். தன் வீட்டில் இழவு கொட்டாத வரை அவர்களுக்கு கவலையில்லை.
நம்மால் ஏதும் செய்ய இயலுமா? நாம் ஏன் இந்த சுயநல அரசியல்வாதிகளைப் புறக்கணிக்கக் கூடாது? ஓட்டு வங்கிகளாக இருந்தது போதும். இந்த தேர்தலில் சிந்தித்து வாக்களியுங்கள். ஒட்டு மொத்த அரசியல்வாதிகளுக்கும் கொஞ்சமேனும் பயத்தை ஏற்படுத்த வேண்டுமெனில் நம் கையிலிருக்கும் ஆயுதம் 49O. ஏற்கனவே இம்முறையினில் வாக்களிப்பதைப் பற்றி பதிவிட்டிருக்கிறேன். குமுதத்தில் ஞானி "வேட்பாளர்கள் பெற்றிருக்கும் வாக்குகளை விட 49O முறையில் அளிக்கப்பட்ட வாக்குகள் அதிகமிருக்குமேயானால் நீதிமன்றத்தில் வாக்காளர் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கு தொடரலாம்" என தெரிவித்துள்ளார். இது சாத்தியமா என தெரியவில்லை. நடைமுறைப் படுத்தலாம் என்றால் நாம் ஏன் 49Oவை ஆயுதமாக உபயோகிக்கக்கூடாது? அவ்வாறு செய்து மறுபடியும் தமிழகத்துக்கு தேர்தல் நடக்குமேயானால் ஈழப்பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வரும் கட்சிக்கே ஓட்டு என அறிவித்தால் நான் நீயென போட்டி போட்டுக் கொண்டு தீர்வுகாணமாட்டார்களா? இதுவும் நடைமுறைக்கு ஒத்துவருமா என தெரியவில்லை.
எது எப்படி இருந்தாலும் உங்கள் ஜனநாயக கடமையை நிறைவேற்றுங்கள்.
Make a wise decision. Vote for YOUR future.
Labels:
49O,
அரசியல்,
ஈழம்,
சிந்தனை செய் மனமே
April 9, 2009
காலாண்டு முடிவுகள் - அதிக வருமானம் ஈட்டிய துறை
எல்லாரும் இன்போசிஸ் நிறுவனத்தின் காலாண்டு அறிக்கையை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில் அரசுத் துறை ஒன்று எப்போழுதும் இல்லாத அளவுக்கு பெரும் லாபம் ஈட்டி சாதனைப் படைத்துள்ளது. இன்போசிஸ் நிறுவனத்தின் நிதி நிலை அறிக்கையே பங்கு சந்தையின் போக்கை தீர்மானிக்குமென பொருளாதார நிபுணர்கள் கூறிவந்த நிலையில் இந்தச்செய்தி எல்லாரையும் அதிர்ச்சியிலும்/ஆச்சர்யத்திலும் ஆழ்த்தியுள்ளது.
தீவிரமான அலசலுக்கு பின் தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வகையில் இன்ன்னொரு தகவலும் வெளியாகிவுள்ளது. அத்துறையின் இந்த மெகா லாபத்துக்கு முக்கியமான காரணம் தமிழகம் தானாம். சரி அது எந்த துறை என்று தானே யோசிக்கிறீர்கள்?
*******************
*******
**********
***********
*************
*************
**************
************
*****************
*****************

முக்கிய காரணகர்த்தவான கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி தந்தி தலை வெளியிடுவதென்றும், சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை அனைத்து தபால் துறை ஊழியர்களும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இயற்றப்போவதாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
தீவிரமான அலசலுக்கு பின் தமிழர்கள் எல்லோரும் பெருமை கொள்ளும் வகையில் இன்ன்னொரு தகவலும் வெளியாகிவுள்ளது. அத்துறையின் இந்த மெகா லாபத்துக்கு முக்கியமான காரணம் தமிழகம் தானாம். சரி அது எந்த துறை என்று தானே யோசிக்கிறீர்கள்?
*******************
*******
**********
***********
*************
*************
**************
************
*****************
*****************

முக்கிய காரணகர்த்தவான கலைஞர் கருணாநிதியைப் பாராட்டி தந்தி தலை வெளியிடுவதென்றும், சைடு காரணமான இளையத் தளபதியை பாராட்டி அவரின் சமீப படத்தை அனைத்து தபால் துறை ஊழியர்களும் கட்டாயம் பார்த்தே ஆகவேண்டும் என்ற சட்டம் இயற்றப்போவதாகவும் ஆ.ராசா தெரிவித்துள்ளார்.
Labels:
அரசியல்,
காமெடி மாதிரி
April 6, 2009
அல்லோவ் மைக் டெஸ்டிங்
ம்ம்ம். நாலு தெரு கூடுற இடத்திலெல்லாம் இனிமே காதைப் பொத்திக்கிட்டு தான் போகனும். அரசியல் கட்சிக்காரங்க அளப்பறைய ஆரம்பிச்சாச்சு. இனிமே நம்ம சொல்ல வேண்டிய டயலாக் இதுதான் "நாராயணா இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா நாரயணா." நானும் என் பங்குக்கு கொஞ்சம் தோரணம் கட்டலாம்ன்னு தான் இந்த பதிவு.
**************
3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்
அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************
சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************
"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************
அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************
பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************
தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.
பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************
கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.
திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.
அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.
இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.
**************
3 சீட்டுக்கும் 4 சீட்டுக்கும் நான் கட்சி ஆரம்பிக்கல. மக்களுடனும் கடவுளுடனும் தான் கூட்டணி - கேப்டன் விஜயகாந்த்
அப்புறம் எதுக்கு உங்க மச்சான் சுதிஷும் பண்ரூட்டி ராமச்சந்திரனும் டெல்லிக்கு போய் தொன்னை சே அன்னை சோனியாவை சந்திச்சாங்களாம். ஒருவேளை உங்க அடுத்த படத்துல அம்மா வேஷம் கட்ட கால்ஷீட் கேட்டுப் போனாங்களோ?
**************
சீரஞ்சீவி பற்றி சிலாகித்துப் பேசியிருக்கார் சரத்குமார். அவர் தான் தன் ரோல் மாடல்ங்கற மாதிரி சொல்லிருக்கார். ஏதேது விட்டா புயல் ஆந்திராவில் மையம் கொண்டு அங்கே ஆட்சிய கைப்பற்றிடும் போலிருக்கே. போங்கய்யா போய் புள்ளய படிக்க வைங்க.
**************
"தன் மகனின் பதவிக்காக முடிவை மாற்றினார் ராமதாஸ்". கலைஞர் குற்றச்சாட்டு. தோடா பதவியப் பத்தி யார் பேசறது. ஆஸ்பத்திரில படுத்துக் கிடந்தாலும் பரவால்ல. ஆனா நான் தான் முதலமைச்சரா இருப்பேன் அடம்பிடிச்ச நீங்க இந்த ஸ்டேட்மெண்ட் வுடக்கூடாதய்யா.
**************
அம்மாவின் கணக்கே வேற. அவங்களுக்கு இந்த சப்ப முதலைமைச்சர் பதவி மேலெல்லாம் துளிகூட ஆசை கிடையாது. இப்போ அவங்க டார்கெட் எல்லாம் பிரதமர் போஸ்ட் மேலதான். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானமேறி வைகுண்டம் போறானாம்".
**************
பா.ம.க அண்புமணியிடம் கேக்கக் கூடாத கேள்வி - "சார் ஜெயிச்சு கப் வாங்கறதுன்னா என்னா சார்?"
************
தேவைப்பட்டால் ஆட்சி அமைக்க காங்கிரசின் ஆதரவை கேட்போம் - பிரகாஷ் காரத்.
காங்கிரசுடன் இனிமேல் எப்போதுமே கூட்டணியில்லை - சீதாராம் யெச்சூரி.
பொலிட் பீரோவை கூட்டி பொளிச்சுன்னு ஒன்னு வைச்சா தான் சரிவரும் போல. பொறந்ததிலிருந்தே நீங்க இப்படித்தானா? அரசியல்ல காமெடி பண்ணலாம். ஆனா அரசியலையே காமெடியா பண்ணா?
************
கூட்டணியில் சிறுத்தைகளை சேர்க்கக்கூடாது - காங்கிரஸ்.
தி.மு.க கூட்டணியில் தான் இருப்போம் - தொல்.திருமாவளவன்.
திருமா சார் போடா நீங்களும் உங்க தொகுதி ஒதுக்கீடும்ன்னு தூக்கிப்போட்டுட்டு வரவேண்டியதுதானே. சோக்கா உண்ணாவிரதமெல்லாம் இருந்தீங்க. இப்போ எங்க போச்சு ஈழ பேச்சு. தேர்தல் தேதி அறிவிச்சதிலிருந்து ஈழத்துக்கு ஸ்பெல்லிங்கூட மறந்துபோயிருச்சு உங்களுக்கு. நீங்கன்னுல்ல எல்லா அரசியல்வாதிகளுக்கும் ஈழம்ங்கறது தோள்ல போடுற துண்டு மாதிரி தான். இதப் புரிஞ்சுக்காம ஏதாவது நல்லது நடந்துடும்ன்னு ப்ச்ச் விடுங்க. மானங்கெட்ட அரசியல்வாதிகள்ன்னு திட்ட எனக்கு அவமானமா இருக்கு.
அப்புறம் இந்த பா.ஜ.க, மதிமுக போன்ற கட்சிகளை துவைக்கறதுக்கு மனசு வரல. செத்த பாம்ப அடிக்கிற கோழையில்ல நான். பாவம் அவுங்களும் எவ்வளவு அடிதான் தாங்குவாங்க.
இந்த தடவையும் 49O போடலாமா இல்ல சுயச்சை யாருக்காவது குத்தலாமான்னு யோசிக்கிறேன். வாழ்க பணநாயகம். சே ஜனநாயகம்.
Labels:
அரசியல்,
என்ன கொடுமை சார் இது
Subscribe to:
Posts (Atom)