மற்றுமொரு விடுமுறை நாளாகவே கழிய இருந்தது இந்தாண்டு கிறுஸ்துமஸ். சென்றாண்டு ராஜாமணி அங்கிளின் வீட்டிலிருந்து ஸ்பெஷலாய் வந்த ரம் பிளம் கேக்கையும், டக்கரான பால் பாயாசத்தையும் இந்த தடவை ரொம்பவே மிஸ் பண்ணேன். ஜூனியருக்கு டிபன் ஊட்டிக்கொண்டிருக்கையில் அல்லது சிம்பிளாக போராடிக்கொண்டிருக்கையில் அண்ணாவிடமிருந்து போன்.
குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.
அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.
சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.
"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது"
பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.
அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு
"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ"
மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்
"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".
இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.
குட்டி, கலைஞர் டிவி பாரு. டொக்.
அப்பாவிடமிருந்து போராடி ரிமோட் பெற்று நியோவிலிருந்து கலைஞர் மாற்றினால் "பெண்ணல்ல வீணை நான் நீதான் மீட்டு" என சின்னக்குயில் இசைத்துக்கொண்டிருந்தது. பக்கத்தில் நம்ம ராஜாதி ராஜா பொட்டியோடு. அட்றா சக்கை என சோபாவில் சம்மணம் போட்டு உட்கார்ந்து ஒரு மணிநேரம் மயங்கிக் கிடந்தேன். கூடவே சுடச்சுட அம்மாவின் சுக்கு டீ. என்னையும் மறந்து வாய்விட்டு கூடவே பாடிக்கொண்டிருந்தேன். ஆயிரம் பேர் அட்வான்ஸ்டு டெக்னாலஜியோடு இசையமைக்க வந்துகொண்டேயிருந்தாலும் ராஜாவின் சில பொக்கிஷங்களுக்கு முன் தே ஆர் நத்திங். துபாயில் நடந்த இன்னிசை கச்சேரியின் ரீ டெலிகாஸ்ட் ப்ரோக்ராம். நான் பார்த்த வரையில் அத்தனையுமே சூப்பர் ஹிட் மற்றும் என்னோட பேவரிட் பாடல்கள்.
சின்னக்குயில் முடித்த கையோடு சாதனா சர்கத்தோடு டூயட் பாட ரெடியானார். ஹே தந்தன தந்தன தந்தன என ஆரம்பிக்கும்போதே விண்ணைமுட்டும் கரவொளி. ராஜா சார் முகத்திலும் பிரகாசமான புன்னகை. "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரப் போலாகுமா" என ஆரம்பித்தவர் சரணத்தில் விளையாட ஆரம்பித்துவிட்டார்.
"மல்லிகையப் போல பிச்சிப்பூவ போல எந்த ஊரு பூ மணக்குது
வள்ளுவரப் போல பாரதியபோல எந்த நாட்டு பாட்டினிக்குது"
பாலு சாரும் சித்ராவும் இணைந்து "சுந்தரி கண்ணால் ஒரு செய்தி" வாசித்தார்கள். பாலு சாரிடம் உள்ள கெட்ட பழக்கம் மேடையில் பாடும்போது சங்கதிகளை இழு இழுவென இழுப்பது. கமலின் 50 விழாவிலும் இதே மாதிரி பாடி கடுப்பேத்தினார். மேடைப் பாடல்களை ரசிப்பவர்களில் பலர் கர்நாடக சங்கீத அறிவை முழுமையாக பெற்றிராதவர்களாகவே இருப்பர் (என்னைப் போல). அப்படி கண்ணை மூடி இழுத்து இழுத்துப் பாட நிறைய சபாக்கள் இருக்கின்றன சார். உங்கள் கூடவே பாடிக்கொண்டு வரும்போது நீங்கள் இழுக்கையில் நாங்கள் டர்ராகிறோம் ஐயா.
அடுத்து ஆஆஆ வென எவர்க்ரீன் ஹிட்டான பாட்டு
"மங்கைக்குள் என்ன நிலவரமோ
மஞ்சத்தில் விழும் நிலை வருமோ"
மனோவின் "செண்பகமே செண்பகமே" மிஸ் செய்து விட்டேன் (கொஞ்சம் முன்னாடியே போன் பண்ணிருக்கக்கூடாதா அண்ணா). "அந்தி மழை பொழிகிறது" பாலு சார் அண்ட் சித்ரா. நடுவே மனோ ஆ போட வந்தார். மைக் தகராறு பண்ணவே போடாமலே சென்றார். நிகழ்ச்சியை ஜெயராமும் குஷ்பூவும் தொகுத்து வழங்கினர். ஜெயராம் வழக்கம்போல கலகலவென கலக்கினார். குஷ்பூ செண்டிமெண்ட்டாக (நினைத்துக்கொண்டு??) உங்க பாட்ட கேட்டுகிட்டே செத்துபோய்டனும்னு சொல்ல உடனே ராஜா அவ்ளோ கொடூரமா இருக்குன்னு சொல்ல வர்றீங்களா? என மடக்கினார். "தெண் பாண்டி வீதியிலே"ன்னு அழறா மாதிரி ஆரம்பிச்சு "நிலா அது வானத்து மேல"ன்னு குஷியானார். இந்த பாட்ட கேக்கும்போதெல்லாம் மாமா அடிக்கும் கமெண்ட் "ரமண பக்தன் பாடற பாட்ட பார்". நானும் அவருக்கு சளைக்காமல் தரும் பதில்
"ப்ரொபஷனையும் பர்சனல் லைஃபையும் கம்பேர் பண்ணி குழப்பிக்காதீங்க மாமா".
இது ராஜாவிற்கு மட்டுமில்ல எல்லா பிரஜைகளுக்கும் பொருந்தும் தானே.