Showing posts with label ஊர் பொறுக்கி. Show all posts
Showing posts with label ஊர் பொறுக்கி. Show all posts

February 5, 2010

செக்கர் வானம் இதுதானோ?

சென்ற பதிவின் தொடர்ச்சி.

ஜனவரி 26ஆம் தேதி சாயந்திரம் 4 மணிக்கு கன்யாகுமாரி சென்று இறங்கினோம். விவேகானந்தர் பாறை மற்றும் வள்ளுவரை கண்டுக்கினு வர போட் ஏறலாம் என்று போனால் அனுமர் வாலை விட நீண்டிருக்கிறது க்யூ. க்யூவில் நின்று பத்து நிமிடம் கழிச்சு நண்பன் சொன்னது "ஹே மறந்துட்டேன். 4.30 மணிக்கெல்லாம் ஃபெரி சர்வீஸ் க்ளோஸ் பண்ணிடுவாங்க". அப்புறம் அவன் ஏன் கொஞ்ச நேரம் நொண்டிக்கிட்டு இருந்தான் உங்களுக்கு புரிஞ்சிருக்கும். அங்கிருந்த நேரா மூக்குத்தியம்மன்/பகவதி அம்மன் கோவிலுக்கு போனோம். அங்க நடை திறப்பதற்கு முன்னமே 2 கி.மீ தொலைவிற்கு க்யூ. ஆணியே புடுங்க வேணாம். கடற்கரையில் காலை நனைச்சுட்டு அப்படியே சூர்ய அஸ்தமனத்தைப் பார்த்திடலாம்ன்னு கிளம்பினோம்.


கடற்கரையில் இருந்து சூர்ய அஸ்தமனத்தை பார்க்கும் வ்யூ பாய்ண்ட்
உருக்கிய வெள்ளி போன்ற கடலலை
இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்..
தகதகக்கும் தங்க தட்டாய் சூரியன்

நர்சிம் செக்கர் வானம் என்றொரு பதிவு எழுதியிருந்தார். அவர் விவரித்திருந்த செக்கர் வானம் இதுதானோ? நர்சிம் இதப் படிச்சீங்கன்னா நான் சொல்றது சரியான்னு சொல்லிட்டுப் போங்க.






அஸ்தமனத்த பார்த்த கையோட கொய்யா, அன்னாசி, கரும்பு ஜூஸ் எல்லாத்தையும் முழுங்கிட்டு ரூமுக்கு போய் ஒரு குட்டி தூக்கம் போட்டோம். திரும்பவும் டின்னரின் போது படம் போவது பற்றி பேச்சு வர நாணயம் பார்க்கலாமென்று முடிவாகி தியேட்டர் பற்றி விசாரிக்கையில் "அந்த தியேட்டர்ல ரொம்ப கொசு கடிக்கும். படமே பார்க்க முடியாது. ஆயிரத்தில் ஒருவன் படம் ஓடும் தியேட்டர் ஏசியோட நல்லா இருக்கும்" என்றார். விடு ஜூட். படம் பார்த்துவிட்டு வந்து தூங்க ஆரம்பிக்கும்போதே எழுப்பிட்டாங்க. கல்யாணத்த சிறப்பா நடத்தி வைச்சுட்டு???!!! மண்டபத்துலேயே டிஸ்கஷன் ஆரம்பிச்சாச்சு அடுத்து எங்கன்னு? சாயந்திரம் 5.30க்கு தான் ட்ரெய்ன். மணி 10.30 தான் ஆவுது. பேசாம திருநெல்வேலி போய்ட்டு வருவோமா என ஒரு ஐடியா. அல்வா வாங்க தான் முடியும். பேசாம கன்னியாகுமாரியே போவோம். வள்ளுவர் கிட்ட போய் "அய்யா பெரியவரே. நீர் பாட்டுக்கும் பொழுது போகாம எழுதி வச்சிட்டு போய்ட்டீரு. ஒவ்வொரு வருசமும் 30 குறள மனப்பாடம் பண்ணி மார்க் வாங்கறதுக்குள்ள தாவு தீந்துடுச்சு"ன்னு நியாயம் கேட்டுட்டு வரலாம்ன்னு ஏகமனதா முடிவு பண்ணி கிளம்பியாச்சு.




இந்த தடவை பத்தே நிமிசத்துல ஃபெரில உட்கார்ந்துட்டோம் (ஃபெரியில் அனுமதிக்கும் முறையில் பல குறைகள். பெரிய தள்ளுமுள்ளு ஏற்படுகிறது). விவேகானந்தர் பாறைல ஒரு பத்து நிமிசம் சுத்திட்டு வள்ளுவரப் பார்க்கப் போகலாம்னா ஃபெரிக்கு வெயிட் பண்றதுக்கே ஒரு மணி நேரத்துக்கு மேல ஆயிடுச்சு. இனிமே வள்ளுவரப் பார்த்து நியாயம் கேட்டா, "நாங்க ஏறாம எப்படி ட்ரெய்ன் எடுக்கலாம்ன்னு?" மம்தா பானர்ஜியோடு வீணா சண்டை வருமேன்னு வள்ளுவர்கிட்ட போகாம ரூமுக்கு நடைய கட்டிட்டோம். மூட்டை முடிச்செல்லாம் எடுத்துகிட்டு வர்ற வழியில எஃக் பஃப்ஸ், க்ரீம் பன், கோக், முறுக்கு, தட்டை, பிஸ்கெட், வேர்கடலை பக்கோடா மட்டும் வாங்கிக்கொண்டோம்.

ட்ரெய்ன் ஏறினவுடனே சாப்பிட ஆரம்பித்தது. போரடிக்கும்போது மொக்கை போடுவதும் பின்பு சாப்பிடுவதுமாய் போனது. நடுவில் பாட்டுக்கு பாட்டு விளையாட ஆரம்பித்தோம். மொபைல் போனில் ஸ்டோர் பண்னி வைத்திருந்த பாட்டுகளை போட்டு விட்டு அலப்பறை பண்ணிக்கொண்டிருந்தான் நண்பன் ஒருவன். எவ்வளவு வயசானாலும், எங்க போனாலும் இந்த பிட் அடிக்கிற பழக்கம் போகவே போகாதா என அவனைக் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தோம். ஒரு கட்டத்தில் சைட் சீட்டில் உட்கார்ந்திருந்த ரயில்வே போலீசார் அடிக்கடி துப்பாக்கியை தொட்டுப் பார்த்துக்கொண்டதால், உசாராகி எங்கள் இசைப் பயணத்திற்கு தேசிய கீதம் வாசித்துவிட்டோம். ஏற்கனவே சொன்னா மாதிரி டாக்டருக்கு கதை மட்டும் சிக்கியது. சீன் எல்லாம் இனிமே தான் டெவலப் செய்யனும். 28 காலை வீடு வந்து சேரும் வரை மீண்டும் கல்லூரி சென்று வந்தது போலவே இருந்தது.

February 3, 2010

தமன்னாவா வடிவேலுவா??

ஜனவரி 25 மாலை நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்சில் டிக்கெட் புக் செய்திருந்தோம். 6.45க்கு ட்ரெய்ன் என தகவல் தரப்பட நான் 5.15 மணிக்கே ஜூனியர் பார்வையில் படாமல் வீட்டை விட்டு எஸ்கேப் ஆக பிளான் செய்திருந்தேன். MTC இணையதளத்தில் அண்ணா நகரிலிருந்து எக்மோர் போக 75 நிமிடங்கள் ஆகும் எனப் போட்டிருந்தது. கடைசி நேரத்தில் அப்பா "எனக்கு நுங்கம்பாக்கத்தில் தான் வேலை. நானே உன்னை ட்ராப் செய்துவிடுகிறேன்" என சொல்ல, 5.30 மணிக்கெல்லாம் புறப்பட்டாச்சு. சரியாய் 50.50க்கு எக்மோரில் வண்டியை நிறுத்தி இறங்கிக்கோ என்றார்.

"ஏன்ப்பா. வேலை வந்துடுச்சா? நான் ஆட்டோல போகவா?"

"எக்மோர் ஸ்டேஷன் வந்துடுச்சு"

"யாரக் கேட்டு இவ்வளவு சீக்கிரம் வந்தது. MTC வெப்சைட்ல 75 நிமிஷம் ஆகும்ன்னு போட்ருந்தானே."

"அவன் ஊரெல்லாம் சுத்தி காமிச்சுட்டு வர அவ்வளவு நேரம் ஆகும்."

"கிர்ர்ர். நீயாவது சொல்லிருக்கலாம்ல. ஏன் இவ்வளவு சீக்கிரம் கிளம்புறன்னு?"

"எனக்கு என்னடி தெரியும். நீ உன் பிரெண்ட்ஸ் பார்க்க போறியோன்னு நினைச்சேன்"

ஆரம்பமே அசத்தலா இருக்கேன்னு நினைச்சுகிட்டே போனா நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் பத்தின டீடெய்ல்ஸ் எதுவுமே போடல. பக்கத்துலயே ரூம்ல இருந்த இரண்டு அங்கிள்ஸ்கிட்ட எவ்வளவு பவ்யமா கேக்க முடியுமோ அவ்வளவு மரியாதையோட

"நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் எப்ப சார் வரும்?"

"அது 5.30 மணிக்கே போய்டுச்சேமா"

நான் அப்படியே ஸாக் ஆயிட்டேன். அடக்கடவுளே. 5.45ன்னு சொல்றதுக்கு பதிலா 6.45ன்னு சொல்லிட்டானோ என நினைத்தபடியே "இல்ல 6.45க்குன்னு சொன்னாங்களே?"

"ஓ. டைம் சொல்லிக் கேளும்மா. அது ஸ்பெஷல் ட்ரெய்ன். இனிமேதான் வரும்."

அவரிடம் என்ன சொல்வது என யோசித்துக்கொண்டிருக்கும்போதே மக்களிடமிருந்து போன் வர எஸ்கேப்.

ரவானா ஹோகி என நான் ஸ்டாப்பை கதறிக்கொண்டிருந்த ஸ்பீக்கரைப் பார்த்து எரிச்சலுடன்

"இவங்களுக்கு வாயே வலிக்காதா?"

"ஹே அதுக்குதானடி சம்பளம் தர்றாங்க"

கிர்ர்ர்ர் என அவளை முறைக்க, அதற்குள் அங்கிள் ரொம்ப சீரியசாய்

"அது ரெக்கார்டட் வாய்ஸ்மா" என்றார். மற்ற நால்வரும் கோரசாய் "ஆணியே புடுங்க வேணாம் போ" என மனதிற்குள் சொல்லிக் கொண்டோம்.

ஒவ்வொருத்தராய் வந்து சேர 6.30 மணியாகிவிட்டது. ட்ரெய்ன் கிளம்பியும் கதவருகேயே நின்றுகொண்டிருந்த நண்பனை தமன்னாவுக்கு வெயிட்டிங்கா என கிண்டல் பண்ண, அதற்கு இன்னொரு தோழி, வழியனுப்ப வந்தவனை உள்ளாற ஏத்திவிட்ட வடிவேலு கதையாகப்போகுது என நக்கலடிக்க களைகட்ட ஆரம்பித்தது.

"கோவில்பட்டி எப்ப வரும்?"

"ஏன்?"

"இல்ல. என் கூட வேலை செய்றவருக்கு கோவில்பட்டி சொந்த ஊரு. லீவுல இப்ப அங்கதான் இருக்காரு. கோவில்பட்டி வந்ததும் கூப்பிட சொன்னாரு."

(கோவில்பட்டி விடியற்காலை 3மணிக்கு வரும்போல)

"எதுக்கு? ஸ்டேஷனுக்கு வந்து டாட்டா சொல்லுவாரா. ஆண்டவா என்னை ஏன் இந்த மாதிரி லூசுங்களோட ட்ராவல் பண்ண வைக்கற"

கிட்டத்தட்ட பத்தரை மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். சக பயணிகளின் வற்புறுத்தலால் தூங்கப்போனோம் (இந்த பெருசுங்க தொல்லை தாங்கமுடியலடா சாமீ). காலையில் ஐந்தரை மணிக்கு சூடா பஜ்ஜி, வடை சமோசா விற்றுக்கொண்டிருந்தார்கள். இந்த நேரத்துக்கு யார்ரா சாப்பிடுவா என்று யோசித்த எங்களுக்கு கொஞ்ச நேரத்திற்கு பிறகு புரிந்தது. 7 மணிக்கு போக வேண்டிய ட்ரெய்ன் 9 ஆகியும் முக்கிக்கொண்டிருந்தது. மிகப்பெரிய சோகம் ட்ரெய்னில் பாண்ட்ரி இல்லை. தண்ணி காலி. திங்க ஏதுவுமில்லை. 5 மணிக்கே பல்லை விளக்கினது எவ்வளவு பெரிய தவறு எனப் புரிந்தது. அதைவிட மாபெரும் தவறு பஜ்ஜி வாங்கி வைக்காமல் விட்டது. ரிடர்ன் ட்ரிப்பின் போது ஒரு மினி பேக்கரியே ஸ்டாக் வைத்தக் கதை அடுத்த பதிவில். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் வள்ளியூரில் ட்ரெய்ன் நின்றுகொண்டிருந்தது. அப்போ எடுத்த புகைப்படங்கள் இவை. எங்க பார்த்தாலும் பச்சைப் பசேல்ன்னு ஊரே ஏசி போட்டுவிட்டால் போல் இருந்தது.



ஸ்டேஷனில் இறங்கி அங்கிள் வீட்டில் கொட்டிகிட்டு ஏசி ரூம் வந்தால் கண்ண கட்டுது. இருந்தும் ஊர் சுத்தனும்ங்கற உயர்ந்த லட்சியத்தோட, கடமையுணர்ச்சியோட கிளம்பி எங்களுக்குன்னு ஏற்பாடு பண்ணியிருந்த ட்ரைவரிடம் மத்தூர் தொட்டிப்பாலம் பார்க்கனும் என்றோம். அதெல்லாம் நல்லாருக்காது. திற்பரப்பு அருவி போய்ட்டு அப்படியே பத்மநாபபுரம் அரண்மனை பார்க்கலாம்ன்னாரு. நாங்கதான் அறிவாளி ஆச்சே. இன்னிக்கு ஜனவரி 26. அரண்மனை மூடியிருப்பாங்க என்ற இணையத்தகவலை சொன்னதும் அப்படியான்னாரு. அப்பவே உசாராயிருக்கனும். நாகர்கோவிலிலிருந்து ஒரு மணி நேர பயணம். திற்பரப்பு அருவி அன்புடன் (ஹுக்கும்) வரவேற்றது.

போட்டோவுல என்னாமா தண்ணி கொட்டுதுன்னு பார்த்தீங்கல்ல. இப்ப நிஜ அருவியப் பாருங்க.


அருவியப் பார்த்து காண்டாகி கிளம்பிவிட்டோம். அருவிக்கு வந்து சும்மா போனா நல்லாருக்குதுன்னு ஆளுக்கொரு வாழைக்காய் பஜ்ஜியும், பழம்பூரியும் (நேந்திரம் பழ பஜ்ஜியாம். டக்கரா இருந்தது) அமுக்கிவிட்டு கிளம்பினோம். அங்கிருந்து பிற்பகல் ஒரு மணிக்கு கிளம்பினோம். ட்ரைவர் :"இங்கன" என ஆரம்பித்தார். நேரா பொண்ணு வீட்டுக்கு வண்டிய விடுங்க சாமின்னு ஒருசேர பெரிய கும்பிடு போட்டோம். அங்க போய் மதியம் செம லஞ்ச் சாப்பிட்டோம் (வடை, பாயாசம், அப்பளம், 3 பொரியல், அவியல், எரிசேரி, பருப்பு, சாம்பார், ரசம், மோர்ங்கற மெனுவ சொன்னா நீங்க வயித்தெரிச்சல் படமாட்டீங்க தானே). தூக்கம் கண்ண சுழுட்ட அடுத்த நாங்க கிளம்பின இடம் கன்னியாகுமாரி. சூர்ய அஸ்தமனம் அடுத்த பதிவில்...

May 18, 2009

ஆலம்பறை கோட்டை

பொங்கல் விடுமுறையின் போது குடும்பமாய் சின்ன ட்ரிப் அடித்தால் நன்றாக இருக்குமென தோன்றியது. வழக்கம்போல் அப்பா வேலையிருக்கென ஜகா வாங்கிவிட்டார். அம்மாவும் வரவில்லையென கூறிவிட (இந்த அம்மாக்களே இப்படித்தான்) ரகு, நான், என் தம்பி மூவரும் மட்டும் கிளம்பினோம். மகாபலிபுரம் பார்த்தாச்சு. எத்தனை தடவை தான் தூங்கிட்டிருக்கிற முதலையையே பார்க்கிறது. அப்பா கடப்பாக்கம் போய்ட்டு வாங்களேன்னு சொல்ல விடு ஜூட்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக பாண்டிச்சேரி செல்லும் வழியில் கடப்பாக்கம் என்ற இடத்திலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது ஆலம்பறை கோட்டை. கோட்டைன்னவுடனே ரொம்ப பெருசா எதிர்பார்த்தீங்கன்னா என்னை மாதிரி ஏமாந்து தான் போவீங்க. நுழையும்போதே தென்படும் தமிழ்நாடு தொல்பொருள் துறையின் அறிவிப்பு பலகையை பார்க்கும்போதே கோட்டையின் பராமரிப்பு லட்சணம் தெரிந்துவிடுகிறது. அந்த இத்துப்போன பலகையில கோட்டையின் (ஆக்சுவலா அப்படி சொல்றதே ரொம்ப தப்பு. குட்டி சுவர்ன்னு வேணா சொல்லலாம்) வரலாறு போட்டிருந்தாங்க. கி.பி 1735 ஆம் ஆண்டு, நவாப் தோஸ்த் அலிகான் இந்த கோட்டையை ஆண்டு கொண்டிருந்தார்! கி.பி 1750 இல் ஆங்கிலேயர்களை எதிர்க்க உதவிய ஃபிரெஞ்சு தளபதி ட்யூப்ளக்ஸுக்கு இந்த கோட்டையை அப்போதைய நவாப் சுபேதார் முசாஃபர்ஜங் பரிசளித்தார்! பின்னர் கி.பி. 1760 ஆம் ஆண்டு இக்கோட்டையை கைப்பற்றிய ஆங்கிலேயர் அதை சேதப்படுத்தினர். வெள்ளைக்காரன் விட்டுட்டுப் போன கொஞ்ச நஞ்ச சுவத்தையும் 2004 வருடம் வந்த சுனாமி வழிச்சிட்டு போயிடுச்சு.

மேல படத்துல இருக்கிற மாதிரி அங்கங்க நீளமான சுவர்களே எஞ்சியிருக்கின்றன.



இந்த இடிபாடிகளின் மேலேறி பார்க்கும்போது தெரியும் கடல். வாவ். சிம்ப்ளி சூப்பர். மொட்டை வெயிலையும் மீறி கடலின் அழகு கண்களுக்கு குளிர்ச்சியாய் இருக்கிறது.

கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம் கடலின் அழகை ரசித்து முடித்துவிட்டு உள்ளூர் மீனவர்கள் உடன்வர மோட்டார் படகில் பயணம் ஆரம்பம். ஆர்பரிக்கும் அலையை எதிர்த்து படகு போகும்போது வரும் ஃபீலிங் ரொம்பவே த்ரில்லிங்காய் இருந்தது. எங்கள் மூவரையும் சேர்த்து 7 பேர் இருந்தோம் படகில். ரொம்ப நன்றாகப் பேசினார்கள். எல்லாத்துக்குமே நகைச்சுவை தான். சோகத்தைக் கூட சிரிப்போடு தான் பகிர்ந்தார்கள். அவர்களின் வாழ்க்கை முறை, தொழில் பற்றியெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம். சுனாமி பற்றிய பேச்செடுத்தவுடன் அனைவருமே அமைதியாகிவிட்டார்கள். யாருக்கும் அந்நிகழ்வினைப் பற்றி பேசக்கூட விருப்பமில்லை. ஒரு ஐந்து நிமிட பயணத்திற்க்குப் பின் கரைக்கு திரும்ப யத்தனித்தவர்களை "இன்னும் கொஞ்சம் தூரம் போலாம்ணா" என்றேன். சிரித்துக்கொண்டே "கரை தெரியுற வரைக்கும் தான்மா உங்களுக்கெல்லாம் சேஃப்டி. கரை மறைஞ்சுதுன்னா தலை சுத்தலும் வாந்தியும் வரும்" என்றார். "பரவால்லணே. கஷ்டமா இருந்ததுன்னா உடனே திரும்பிடலாம்" என்றேன். அரை மனதோடு மிக மெதுவாகத் தான் படகை செலுத்தினார். கொஞ்சம் தூரம் தான் போயிருப்போம். பெரிய அலையை எதிர்த்து படகு போனபோது மேட்ரிக்ஸ் படத்துல அப்படியே அந்தரத்துல ஃபீரிஸாகி நிப்பாங்களே அந்த மாதிரி படகு ஏர்லயே இருந்த மாதிரி ஒரு உணர்வு. அலையைப் பார்த்தவுடனே குலதெய்வம் பேரு கூட மறந்துபோச்சு. இன்னும் ஒரு செகண்ட் விட்டிருந்தா ரகுவுக்கு மொட்டை அடிச்சு அலகு குத்துற அளவுக்குப் போயிருக்கும் என் வேண்டுதல்.

இயல்பு நிலைக்குத் திரும்ப கொஞ்ச நேரம் பிடித்தது. பேஸ்தடித்திருந்த எங்கள் மூஞ்சிகளைப் பார்த்து "என்ன இன்னும் கொஞ்சம் தூரம் போலாமா?" என நக்கலாக கேட்டவரிடம் காலில் விழாத குறையாக கரைக்கு திருப்ப சொன்னேன். ரெண்டு நிமிஷத்துல செத்துப் போன தாத்தா, பெரியப்பா, சித்தப்பா எல்லாம் வந்து வா வான்னு கூப்பிட்ட மாதிரியே இருந்தது. அங்கிருந்து கரையில் தெரிந்த கோட்டையை??!! கொஞ்சம் போட்டோ எடுத்துகிட்டு கரைக்கு வந்ததும் அவர்கள் குடுத்த இளநீர், நுங்கு எல்லாத்தையும் முழுங்கிட்டு தக்ஷின்சித்ரா நோக்கி பயணப்பட்டோம். தக்ஷின்சித்ராவில் அதிகம் நேரம் இருக்கமுடியவில்லை. அரை மணி நேரத்திலேயே கிளம்பியாச்சு.




மேலதிக தகவல்கள்

இடம் - ஆலம்பறை கோட்டை
எங்கிருக்கிறது - மகாபலிபுரத்திலிருந்து 50 கி.மீ தொலைவில் கடப்பாக்கம் என்ற ஊரிலிருந்து 5 கி.மீ.
போக்குவரத்து வசதி - சென்னையிலிருந்து ECR வழியாக பாண்டிச்சேரி செல்லும் அனைத்து பேருந்துகளும் கடப்பாக்கத்தில் நிற்கும். அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலமாக ஆலம்பறை செல்லலாம்.

குறைந்த செலவில் (போக்குவரத்து மற்றும் கொரிக்க தான் செலவு) நல்ல ஆட்டம் போடலாம். அதுவும் குழுவாக சென்றால் நல்ல ஜாலியாக இருக்கும். தனிமையில் செல்வதை தவிர்ப்பது நலம் (மீனவர்கள் சொன்னதுங்கோ.)

டிஸ்கி 1 : இது 2008 பொங்கல் விடுமுறையின்போது சென்றது. இப்போ அதே நிலைமையான்னு தெரியல.
டிஸ்கி 2 : நானும் போட்டோ எடுக்கிறேன் பேர்வழின்னு நான் பண்ண ரப்சர காமிரா காதலர் ஆதி (தாமிரான்னு வந்திருந்தா ரைமிங்கா இருந்திருக்கும்) மன்னித்தருள்வாராக.

February 12, 2009

பறவைகள் பலவிதம்.....

ஸ்கூல் படிக்கும்போது சுற்றுலான்னு கூட்டிக்கிட்டு போற இடம் ஒன்னு மகாபலிபுரம் இல்லைன்னா வேடந்தாங்கல். வரிசைல நின்னுகிட்டு டவர்ல ஏறி பார்த்தா அங்கொண்ணும் இங்கொண்ணுமா பறவைங்க உக்காந்திருக்கும். "ஏய் எவ்ளோ நேரம் பார்ப்ப"ன்னு டீச்சர் கத்தினதுக்கப்புறம் தான் நகருவோம். கொசுவத்தி சுத்தியபடியே வேடந்தாங்கலில் இறங்கினோம்.

முருகன் என்பவர் உடன் வந்தார். 15 வருடங்களாக இத்துறையில் உள்ள இவர் பொறுமையாக ஒவ்வொரு பறவையின் பெயர், பழக்கம், வாழ்விடம் பற்றிக்கூறினார். வேடந்தாங்கல் தான் இந்தியாவிலேயே மிகப் பழமையான பறவைகள் சரணாலயம். இச்சரணாலயத்தின் மொத்த பரப்பளவே 73.06 ஏக்கர் தான். 1958ஆம் வருடம்தான் இந்த சரணாலயத்தை அரசு தன் வசம் கொண்டுவந்தது. அதற்கு முந்தைய 300 வருடங்களாக ஊர் மக்களே பராமரித்து வந்ததாகக் கூறினார். கனடா, சைபீரியா, ஆஸ்திரேலியா, பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளிலிருந்து 26 வகையான பறவைகள் இங்கு வருகின்றனவாம். இதில் கனடா நாட்டிலிருந்து வரும் வெள்ளை அரிவாள் மூக்கன் (பேரு எப்படி யோசிக்கிறாங்கப்பா) என்ற பறவை தான் அதிக தூரத்திலிருந்து வருகிறதாம். கனடாவில் இப்போது கடும்குளிர் நிலவுவதால் இப்பறவைகள் இங்கே வருவதாகக் கூறினார். அதேபோல் கனடாவிலிருந்து வரும் ஊசிவால் வாத்தும் இதே காரணத்திற்காகத் தான் இங்கு வருகின்றன. மற்ற பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வேடந்தாங்கல் வருகின்றன. இவ்விரு பறவைகள் மட்டும் சம்மர் ஹாலிடேசுக்கு வருகின்றன.


சைபீரியாவிலிருந்து வரும் வர்ண நாரை/Painted Stroke Open bill Stroke/நத்தைக் குத்தி நாரை Spot bill pelican/பெரியதாரா என்றழைக்கப்படும் இப்பறவையின் அலகின் கீழ் பை போலொரு அமைப்புள்ளது. இதன் மூலம் கலங்கிய குட்டைகளில் இரை தேடும்போது சேறு மற்றும் குப்பைகளை வடிகட்டிவிடுமாம்.
Snake Bird என்ற இந்தப்பறவையின் கழுத்து நீண்டு பாம்பைப் போல் ('S' shape) இருப்பதால் இந்தப்பெயர்.
Spoon bill pelican/கரண்டிவாயன்??!!

எல்லா பறவைகளும் முட்டையிட்டு குஞ்சு பொறிக்க ஏறத்தாழ 15 முதல் 20 நாட்கள் எடுத்துக்கொள்கின்றன. சின்னப் பறவைகள் பறக்க தயாராக 70 நாட்கள் வரை ஆகுமாம். பின்னர் இரைத்தேடும் பயிற்சிக்குப்பிறகு தத்தம் நாட்டுக்கு திரும்பிவிடுமாம்.
வேடந்தாங்கல் ஏரி அதிகப்பட்சமாக 20 அடி ஆழத்தைக்கொண்டுள்ளது. வியூ பாயிண்டில் இருந்து பார்க்கும்போது புதர் போல் காட்சி அளிப்பவை நீர்க்கடப்பை மரங்கள்.
பறவைகள் கூடு கட்ட ஏதுவாய் நிறைய கிளைகளோடு வளரும். இம்மரத்தின் 90% சதவிகிதம் நீருக்குள் மூழ்கியுள்ளன.

இருட்ட ஆரம்பித்துவிடவே இரை தேடி சென்ற பறவைகள் எல்லாம் கூடு திரும்பிக்கொண்டிருந்தன. சில பறவைகள் இரவில் இரை தேடும் பழக்கமுடையவையாம்(வவ்வாலோ ஆந்தையோ அல்ல). இருட்டின் காரணமாக எல்லாப் பறவைகளையும் படமெடுக்கமுடியவில்லை(அப்படியே எடுத்துட்டாலும்ன்னு நீங்க சொல்றது கேக்குது).

சீஸன் - நவம்பர் மாதத்திலிருந்து ஏப்ரல் மாதம் வரை. நீரின் அளவைப் பொறுத்து ஜூலை வரைக்கூட நீடிக்கும்.

பார்க்க ஏதுவான நேரம் - காலை 6 முதல் 7 மணி வரை. மாலை 5 மணி முதல் 6 மணி வரை. இந்நேரங்க்களில் தான் பறவைகள் அதிகமாக இருக்கும். மற்ற நேரங்களில் இரை தேட போவதால் எண்ணிக்கை ரொம்ப குறைவாகவே இருக்கும். சென்னை, செங்கல்பட்டிலிருந்து பேருந்து வசதியிருக்கிறது.

முடிந்தால் சென்று வாருங்கள். வித்தியாசமான அனுபவமாய் இருக்கும்.

January 1, 2009

ஊட்டி

குமரகத்தில் ஆரம்பித்து மூணாறுக்கு ட்ரை பண்ணி கடைசியாக ஊட்டில லேண்ட் ஆனோம். ஏற்கனவே நான் ஊட்டிக்கு மூணு தடவை போயிருக்கேன். கடைசியா இரண்டு வருஷத்துக்கு முன்னாடி ஆபிஸ்ல இருந்து 12 பேர் ஊட்டிக்கு போனோம். ஊட்டில இப்போ சரியான குளிர். எனக்கு ஜீனியர் எப்படி அடாப்ட் பண்ணிப்பானோன்னு தான் கவலை. ஆனா நானும் ரகுவும் தான் ரொம்ப கஷ்டப்பட்டோம். ஜூனியர் அவர் பாட்டுக்கு சரியான ஆட்டம். 3 நாள் எந்த கவலையும் இல்லாம நல்லா எண்ஜாய் பண்ணோம். அப்புறம் ஊட்டி பத்தி நான் சொல்ல புதுசா எதுவும் இல்ல. As usual எங்கப் பார்த்தாலும் கூட்டம் தான். அதுவும் வட இந்தியர்கள் ரொம்ப ஜாஸ்தி. பகலெல்லாம் நல்ல வெயில் அடித்தாலும் மாலை 6 மணிக்கு மேல் சரியான குளிர். பைக்காரா, குன்னூர், ஊட்டி, முதுமலை ஆகிய இடங்களை தான் மூன்று நாட்களில் கவர் செய்தோம். முதுமலையில் மட்டும் சபாரிக்கு டிக்கெட் கிடைக்காததால் ரிட்டர்ன் ஆகிட்டோம். என் ரேடியோவ இத்தோட ஆஃப் பண்ணிட்டு அங்க நான் எடுத்த போட்டோஸ பாருங்க (சுமாரா தான் இருக்கும்).















மேல இருக்கிற படத்துல ஒரு குகை மாதிரி தெரியுதே அங்கதான் உயிரே படத்துல வர தைய தையா பாட்டு எடுத்தாங்கலாம்.