காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.
“அய்யா இருக்காங்களா?”
“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”
“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”
“ஓ. உள்ள வாங்க”
“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”
“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.
வாங்க ராஜன்.
அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.
அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?
இது ஒத்து வருமா பாருங்கய்யா.
(சிறிது நேர அமைதிக்குப் பின்)
இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.
ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.
அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.
முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.
நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.
அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.
இப்பதான் வர்றியா?
ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.
சாப்ட்டியா?
இல்ல.
தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.
அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?
இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?
ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.
வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.
“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”
“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.
“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”
“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”
“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”
“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”
அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.
“நீ உடனே கிளம்பி வா”
“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”
“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”
“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”
“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”
அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.
அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.
“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.”
“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”
“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”
“வாட்?”
“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”
“ஸ்டாப் ஜோக்கிங்.”
“Do u think i am? bloody hell"
"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”
“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.
நன்றி அதீதம்
Showing posts with label சிறுகதை. Show all posts
Showing posts with label சிறுகதை. Show all posts
September 15, 2011
January 19, 2011
ச ரி க ம படுத்தாத நீ
ஆனா ஆவண்ணா படிக்கத் தெரியாதவனிடம் பின்நவீனத்துவ கவிதை ஒன்றைக் கொடுத்து, படித்துப் பார்த்து சிலாகிக்க சொல்வது எவ்வளவு பெரிய கொடுமை? அதற்கொப்பான கொடுமை ஒன்று எனக்கு நேர்ந்தது. அதற்கு முழுமுதற்காரணம் என் அம்மாதான். ஏதோவொரு மார்கழி வெள்ளிக்கிழமையில் வீட்டுக் காலிங்பெல் அடிக்கவும் கதைவைத் திறந்தால் வாசல் முழுக்க மோகனா மாமி அடைத்திருந்தாள். மாமி உள்ளே வருவதைப் பார்க்கும் ஆவலில் தலையைத் திருப்பாமல் குரலை மட்டும் சமையல்கட்டிற்கு அனுப்பினேன். “அம்மா மோகனா மாமி வந்திருக்கா பாரு. என்ன மாமி பட்டுப் புடவை, வைரமூக்குத்தின்னு மின்றேள். ஏதாவது ரிசப்ஷனா?” என்றேன். ”என்னடி இப்படி எண்ணைய் வழிஞ்சிண்டு நிக்கற. கிளம்பலையா இன்னும்? நாழியாயிடுத்துல்ல?” என்றாள் மாமி. ஒன்றும் புரியாமல் விழித்துக்கொண்டிருக்க அம்மா வந்து “போரடிக்கறதுன்னு சொல்லிண்டிருந்தல்ல. அதான் மாமி உன்னை இன்னைக்கு மியூசிக் அகாடமிக்கு அழைச்சிண்டு போக வந்திருக்கா” என்றாள். இன்னும் ரெண்டு செகண்ட் அம்மாவை முறைத்திருந்தேனென்றால் அம்மா சாம்பாலாகியிருப்பால். போரடிக்குதுன்னு சொன்ன பொண்ணை ஒரு மிகப்பெரிய வைக்கப் போரோடு கோர்த்து விட்டு அக்கப் போர் பண்ணிட்டியேம்மா என மனதுக்குள் அழுதுக்கொண்டே கிளம்பினேன். போதாக்குறைக்கு மாமியை எதிர்த்துப் பேசக்கூடாது, கெக்கே பிக்கேன்னு கமெண்ட் அடிக்கக்கூடாதுன்னு ஏகப்பட்ட அட்வைஸ். இதுக்கெல்லாம் சேர்த்து வச்சு ஒரு நாள் வாங்கிக் கட்டிக்கப்போறே என நினைத்துக் கொண்டே மாமியோடு ஆட்டோவில் கிளம்பினேன்.
மியூசிக் அகாடமி போவதற்குள் மாமியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கை எனக்குமுண்டு. மாமிக்கு ஒன்னுமே தெரியாதென்பதில். இரண்டு பையன்களும் கல்யாணமாகி அமெரிக்காவிலிருக்கிறார்கள். மூத்த மாட்டுப்பெண் பிள்ளையாண்டிருப்பதால் இன்னும் ஆறு மாதங்களில் மாமி அமெரிக்காப் போகப் போவதாக அம்மா சொன்னாள்.
”அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போறது” என ஆரம்பித்தாள் மாமி.
”போறது மாமி. As usual"
"ஸ்விஸ்லன்னா வேலைப் பார்க்கிற?”
“ஆமா மாமி”
“ப்ராபர் ஸ்விஸா” என்றாளே பார்க்கனும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மாமி கத்துகிட்ட ஆங்கில வார்த்தைகளில் ப்ராபரும் உண்டு. கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ நாட்டுக்கும் ”ப்ராபர்” போட ஆரம்பித்துவிட்டாள். அடுத்த என்ன அபத்தமான கேள்வி வருமோ என பயந்துண்டுருக்கும்போது நல்லவேளையாக மியூசிக் அகாடமி வந்துவிட்டது. ஆட்டோவிற்கு காசைக் குடுத்துவிட்டு திரும்பிய எனக்கு பாட்டுப் ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா இல்லை பட்டுப் புடவை ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா என்ற பெரிய சந்தேகம் வந்தது. அந்தளவுக்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஆர்.எம்.கேவியில் கொள்ளை அடித்துவிட்டு வந்தாற்போலிருந்தது. இறங்கியவுடனே மாமி பட்டுப் பாட்டை ஆரம்பித்தாள். பார்க்கிற அத்தனை பேரிடமும் “ராமர் பச்சைதான் வேணும்ன்னு தேடித் தேடி வாங்கினதாக்கும். சுத்த ஜரி. எவ்ளோ கெணம்மா இருக்குப் பாருங்கோ” எனப் பாடிக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய அரை வட்ட மாநாடு நடந்துக்கொண்டிருக்க, வேண்டாவெறுப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர்ன்னு யாரோ என் காதைப் பிடித்து இழுக்கவும் பயந்துட்டேன். ஐந்துக்கு மூன்றில் ஒரு மாமி என் காதை ஸ்கேன் பண்ணிக்கொண்டிருந்தாள். பெரிய ப்ரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு என் காதை மாமியின் கையிலிருந்து விடுவித்துக்கொண்டேன். எத்தனை கேரட் என்று ஒலித்த மாமியின் குரல் வெண்கலப் பாத்திரக் கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது. தெரியாது மாமியென்றேன்.
”மோகனாக்கு என்ன வேணும்”
“தெரியலையே மாமி. அநேகமா கச்சேரி முடிச்சுட்டு தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன்”
“அசடே. மோகனாக்கு நீ என்ன உறவு வேணும்ன்னு கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிஞ்சிட்டா சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் ஊதி தள்ளிட மாட்டேனா என நினைத்துக்கொண்டேன். மோகனா மாமி எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அநேகமாக எனக்குத் தெரிந்த எல்லோருக்கும். அதற்குள் மாமியே வந்துவிட்டாள். நம்ம லெட்சுமி பொண்ணுடி எனச் சொல்லிக்கொண்டே என்னை அடுத்த மாநாடு நடக்குமிடத்திற்கு தள்ளிகொண்டு போனாள். நேற்றைக்கு நீ எஸ்.ஆர் கச்சேரி கேட்டிருக்கனுமே. என்னமா பாடினான் தெரியுமா என ஆரம்பித்து மாமிகளனைவரும் தத்தம் புலமைகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒரு மாமி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள். முடியாதவா போலிருக்கு, என்னமோ ஏதோ என பதறி மாமியைத் தாங்கிப் பிடிக்க ஓடுகையில் சட்டென ஓலம் நின்றது. போயேச் சேர்ந்துட்டாளா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே இதே ஆலாபனை கரகரப்பிரியாவில் எப்படியிருக்கும் என்றாள் என்னைப் பார்த்து. ”கண்றாவியா இருக்கும். ஸ்டெர்ப்சில்ஸ் சாப்பிட்டா சரியாப் போய்டுமென்றேன்” கடுப்பாய். கொல்லென்று சிரித்தது சுத்தி நின்றக் கூட்டம். மோகனா மாமிதான் என் சங்கீத ஞானத்தை எக்ஸ்ட்ரா பிட்டுகள் சேர்த்து படமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள். ”சின்ன வயசுலப் பாட்டுக் கத்துக்க போனா. கீர்த்தனை கத்துக்கிற நேரத்துல பாட்டு டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி வேற எடத்துக்கு மாறிட்டா. பாட்டு டீச்சர்ன்னு இல்ல. இவ யார்ட்ட பாடம் கத்துக்கப் போனாலும் அவாளுக்கு கல்யாணமாயிடறது. ஹிந்தி, பரதம் என எல்லா டீச்சரும் கல்யாணமாகிப் போய்டவே குழந்தைக்கு கலை மேலிருந்து ஆர்வமே போய்டுத்து. ஆனாப் பாருங்கோ சினிமாப் பாட்டெல்லம் அட்சர சுத்தமா ஸ்ருதி பிசகாமல் பாடுவா.” என ஒரு ஃபில்டர் காஃபிக்கு மயங்கி என் அம்மா சொன்ன சங்கதிகளை மாமி வாசித்துக்கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் ஹால் கதவுகள் திறக்கப்பட்டது. நான்கு பேரின் காலை மிதித்து, நாற்பது சாரி சொல்லி மாமி அமர்ந்தாள். பக்கத்திலேயே நான். கச்சேரி பண்ண வேண்டிய ஆர்.எஸ்ஸும் பப்பளா பளபளாவென்றிருந்தாள். ஆர்.எஸ் பாடப் பாட எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிகொண்டு வந்தது. தலை தொங்கும் தருணத்தில் ஆர்.எஸ்ஸின் ஆஆஆஅ எழுப்பிவிட்டுவிடும். நடுவில் ஆர்வ மிகுதியில் மாமி ஓங்கி என் தொடையில் தட்டிவிட்டாள். ஊர்பக்கம் அள்ளி அள்ளி சாப்பாடு போடுபவர்களுக்கு பெரிய கை என்பார்கள். மாமியையும் அப்படித்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இன்றுதான் மாமிக்கு நிஜமாகவே பெரிய கை என்றுணர்ந்தேன். அவ்வப்போது மாமி பாஸ் பண்ணும் கமெண்ட்டுகளுக்கு பதில் வேறு சொல்லனும். அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது. உடனே எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அடுத்து ஆர்.எஸ் பாடிய பாடலை சிந்துபைரவி ராகம்தானே மாமி என்றதுக்கு, ஆர்.எஸ்ஸின் மீது வைத்தக் கண்ணை எடுக்காமலே “மத்யமாவதி” என்றாள். என் காதில் மத்யமாவது என விழுந்து தொலைக்கவே “நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி” என்றேன். மாமிக்கு ரொம்ப எரிச்சலாகிவிட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். இதைப் போல முழுக் கச்சேரியிலும் என் அறிவாளித்தனத்தை பறைசாற்றிக்கொண்டே இருந்தேன். இனி ஜென்மத்துக்கும் என்னை அழைத்துக்கொண்டு எந்தக் கச்சேரிக்கும் போகமாட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், ஊரெங்கும் என் பேரை ரிப்பேர் ஆக்கிடுவாளே என்ற கவலையும் குடிகொண்டது. இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாய் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சங்கீதம் கத்துக்கொடுக்க ஆளிருக்கா எனத் தேடனும் என்று நினைத்துக்கொண்டேன்.
தோழிகளிடம் என் முடிவை சொன்னதும் சிரித்தார்கள். ரெண்டே மாசத்தில் எப்படிடி என்று கிண்டலடித்தார்கள். ”கத்துண்டு நான் பாடப்போறது ஸ்விசிலாக்கும். அதனால நான் பாடறது தான் கர்நாடிக சங்கீதம்” என்றேன். பின்னர் அம்மா வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறார் எனக் கேள்விப்பட்டவுடனேயே அந்த அட்ரஸில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தேன். கதவைத் திறந்தவர் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தார். நான் தயங்கி பாட்டுக் கத்துக்கனும்ன்னு இழுத்ததும், உள்ளே அழைத்துக்கொண்டு போய் காஃபியெல்லாம் கொடுத்து உபசரித்தார். பின்னர் தனக்கு அடுத்த மாதம் டெலிவரியென்றும், வேண்டுமென்றால் தன் மாமியாரிடம் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்லி தன் மாமியாரின் அட்ரஸை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். எந்த ஏரியா என்று பார்க்க அந்தக் காகிதத்தைப் பிரித்த போது முதலில் பெயரைத் தான் பார்த்தேன். மிசஸ். மோகனா என்றிருந்தது. மேற்கொண்டு படிக்காமலேயே அந்தக் காகிதத்தை கசக்கி கீழேப் போட்டு வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தேன்.
-அதீதம் (15-01-2011) இதழில் வெளியானது.
மியூசிக் அகாடமி போவதற்குள் மாமியைப் பற்றி எனக்குத் தெரிந்ததை சொல்லிவிடுகிறேன். மாமிக்கு கும்பகோணம் பக்கம். தனக்கு எல்லாம் தெரியுமென்பதில் மாமிக்கு அசைக்க முடியாத நம்பிக்கை. அதே நம்பிக்கை எனக்குமுண்டு. மாமிக்கு ஒன்னுமே தெரியாதென்பதில். இரண்டு பையன்களும் கல்யாணமாகி அமெரிக்காவிலிருக்கிறார்கள். மூத்த மாட்டுப்பெண் பிள்ளையாண்டிருப்பதால் இன்னும் ஆறு மாதங்களில் மாமி அமெரிக்காப் போகப் போவதாக அம்மா சொன்னாள்.
”அப்புறம் வேலையெல்லாம் எப்படிப் போறது” என ஆரம்பித்தாள் மாமி.
”போறது மாமி. As usual"
"ஸ்விஸ்லன்னா வேலைப் பார்க்கிற?”
“ஆமா மாமி”
“ப்ராபர் ஸ்விஸா” என்றாளே பார்க்கனும். எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. மாமி கத்துகிட்ட ஆங்கில வார்த்தைகளில் ப்ராபரும் உண்டு. கிராமம், டவுன், மாவட்டம், மாநிலம் தாண்டி இப்போ நாட்டுக்கும் ”ப்ராபர்” போட ஆரம்பித்துவிட்டாள். அடுத்த என்ன அபத்தமான கேள்வி வருமோ என பயந்துண்டுருக்கும்போது நல்லவேளையாக மியூசிக் அகாடமி வந்துவிட்டது. ஆட்டோவிற்கு காசைக் குடுத்துவிட்டு திரும்பிய எனக்கு பாட்டுப் ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா இல்லை பட்டுப் புடவை ப்ரோகிராமிற்கு வந்திருக்கோமா என்ற பெரிய சந்தேகம் வந்தது. அந்தளவுக்கு கூடியிருந்த மொத்த ஜனமும் ஆர்.எம்.கேவியில் கொள்ளை அடித்துவிட்டு வந்தாற்போலிருந்தது. இறங்கியவுடனே மாமி பட்டுப் பாட்டை ஆரம்பித்தாள். பார்க்கிற அத்தனை பேரிடமும் “ராமர் பச்சைதான் வேணும்ன்னு தேடித் தேடி வாங்கினதாக்கும். சுத்த ஜரி. எவ்ளோ கெணம்மா இருக்குப் பாருங்கோ” எனப் பாடிக்கொண்டிருந்தாள். ஒரு பெரிய அரை வட்ட மாநாடு நடந்துக்கொண்டிருக்க, வேண்டாவெறுப்பாய் பார்த்துக்கொண்டிருக்கும்போதே திடீர்ன்னு யாரோ என் காதைப் பிடித்து இழுக்கவும் பயந்துட்டேன். ஐந்துக்கு மூன்றில் ஒரு மாமி என் காதை ஸ்கேன் பண்ணிக்கொண்டிருந்தாள். பெரிய ப்ரம்மப்பிரயத்தனத்திற்குப் பிறகு என் காதை மாமியின் கையிலிருந்து விடுவித்துக்கொண்டேன். எத்தனை கேரட் என்று ஒலித்த மாமியின் குரல் வெண்கலப் பாத்திரக் கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது. தெரியாது மாமியென்றேன்.
”மோகனாக்கு என்ன வேணும்”
“தெரியலையே மாமி. அநேகமா கச்சேரி முடிச்சுட்டு தான் சாப்பிடுவான்னு நினைக்கிறேன்”
“அசடே. மோகனாக்கு நீ என்ன உறவு வேணும்ன்னு கேட்டேன்” என்றாள். அந்தக் கேள்விக்கு மட்டும் எனக்கு பதில் தெரிஞ்சிட்டா சிவில் சர்வீஸ் எக்ஸாமெல்லாம் ஊதி தள்ளிட மாட்டேனா என நினைத்துக்கொண்டேன். மோகனா மாமி எங்களுக்குத் தூரத்துச் சொந்தம். அநேகமாக எனக்குத் தெரிந்த எல்லோருக்கும். அதற்குள் மாமியே வந்துவிட்டாள். நம்ம லெட்சுமி பொண்ணுடி எனச் சொல்லிக்கொண்டே என்னை அடுத்த மாநாடு நடக்குமிடத்திற்கு தள்ளிகொண்டு போனாள். நேற்றைக்கு நீ எஸ்.ஆர் கச்சேரி கேட்டிருக்கனுமே. என்னமா பாடினான் தெரியுமா என ஆரம்பித்து மாமிகளனைவரும் தத்தம் புலமைகளைக் காட்டிக்கொண்டிருந்தனர். தீடிரென ஒரு மாமி பெருங்குரலெடுத்து கத்த ஆரம்பித்தாள். முடியாதவா போலிருக்கு, என்னமோ ஏதோ என பதறி மாமியைத் தாங்கிப் பிடிக்க ஓடுகையில் சட்டென ஓலம் நின்றது. போயேச் சேர்ந்துட்டாளா என யோசித்துக்கொண்டிருக்கும்போதே இதே ஆலாபனை கரகரப்பிரியாவில் எப்படியிருக்கும் என்றாள் என்னைப் பார்த்து. ”கண்றாவியா இருக்கும். ஸ்டெர்ப்சில்ஸ் சாப்பிட்டா சரியாப் போய்டுமென்றேன்” கடுப்பாய். கொல்லென்று சிரித்தது சுத்தி நின்றக் கூட்டம். மோகனா மாமிதான் என் சங்கீத ஞானத்தை எக்ஸ்ட்ரா பிட்டுகள் சேர்த்து படமாய் ஓட்டிக்கொண்டிருந்தாள். ”சின்ன வயசுலப் பாட்டுக் கத்துக்க போனா. கீர்த்தனை கத்துக்கிற நேரத்துல பாட்டு டீச்சருக்கு கல்யாணம் நிச்சயமாகி வேற எடத்துக்கு மாறிட்டா. பாட்டு டீச்சர்ன்னு இல்ல. இவ யார்ட்ட பாடம் கத்துக்கப் போனாலும் அவாளுக்கு கல்யாணமாயிடறது. ஹிந்தி, பரதம் என எல்லா டீச்சரும் கல்யாணமாகிப் போய்டவே குழந்தைக்கு கலை மேலிருந்து ஆர்வமே போய்டுத்து. ஆனாப் பாருங்கோ சினிமாப் பாட்டெல்லம் அட்சர சுத்தமா ஸ்ருதி பிசகாமல் பாடுவா.” என ஒரு ஃபில்டர் காஃபிக்கு மயங்கி என் அம்மா சொன்ன சங்கதிகளை மாமி வாசித்துக்கொண்டிருந்தாள்.
இதற்கிடையில் ஹால் கதவுகள் திறக்கப்பட்டது. நான்கு பேரின் காலை மிதித்து, நாற்பது சாரி சொல்லி மாமி அமர்ந்தாள். பக்கத்திலேயே நான். கச்சேரி பண்ண வேண்டிய ஆர்.எஸ்ஸும் பப்பளா பளபளாவென்றிருந்தாள். ஆர்.எஸ் பாடப் பாட எனக்குத் தூக்கம் கண்ணைச் சுழற்றிகொண்டு வந்தது. தலை தொங்கும் தருணத்தில் ஆர்.எஸ்ஸின் ஆஆஆஅ எழுப்பிவிட்டுவிடும். நடுவில் ஆர்வ மிகுதியில் மாமி ஓங்கி என் தொடையில் தட்டிவிட்டாள். ஊர்பக்கம் அள்ளி அள்ளி சாப்பாடு போடுபவர்களுக்கு பெரிய கை என்பார்கள். மாமியையும் அப்படித்தான் சுட்டிக்காட்டுவார்கள். ஆனால் இன்றுதான் மாமிக்கு நிஜமாகவே பெரிய கை என்றுணர்ந்தேன். அவ்வப்போது மாமி பாஸ் பண்ணும் கமெண்ட்டுகளுக்கு பதில் வேறு சொல்லனும். அப்படித்தான் தீடிரென ”சுத்ததன்யாசி ஜோரா இருக்குல்ல” என்றாள். நானும் தூக்கக் கலக்கத்தில் “எங்க மாமி இப்பல்லாம் உண்மையான சந்நியாசிகளைப் பார்க்க முடிகிறது. அதெல்லாம் மகாப் பெரியவரோட காலத்தோட சரி” என்று உளறிவைத்தேன். “கடவுளே இப்படி ஒரு ஞான சூன்யத்தோட என்னை கச்சேரி பார்க்க வச்சிட்டியே” என மாமி புலம்புவது போல் எனக்கு கேட்டது. உடனே எனக்கு ரோஷம் வந்துவிட்டது. அடுத்து ஆர்.எஸ் பாடிய பாடலை சிந்துபைரவி ராகம்தானே மாமி என்றதுக்கு, ஆர்.எஸ்ஸின் மீது வைத்தக் கண்ணை எடுக்காமலே “மத்யமாவதி” என்றாள். என் காதில் மத்யமாவது என விழுந்து தொலைக்கவே “நன்னா இருட்டிடுத்து. இப்பப் போய் மதியமாறதுங்றேளே மாமி” என்றேன். மாமிக்கு ரொம்ப எரிச்சலாகிவிட்டது. இதெல்லாம் வெறும் சாம்பிள் தான். இதைப் போல முழுக் கச்சேரியிலும் என் அறிவாளித்தனத்தை பறைசாற்றிக்கொண்டே இருந்தேன். இனி ஜென்மத்துக்கும் என்னை அழைத்துக்கொண்டு எந்தக் கச்சேரிக்கும் போகமாட்டாள் என்ற சந்தோஷம் ஒருபுறமிருந்தாலும், ஊரெங்கும் என் பேரை ரிப்பேர் ஆக்கிடுவாளே என்ற கவலையும் குடிகொண்டது. இந்த இரண்டு மாத விடுப்பில் சங்கீதம் கத்துக்கொண்டு, அடுத்த ஆண்டு ஸ்விஸ்ஸில் ஒரு கச்சேரிப் பண்ணாலென்ன எனத் தோன்றியது. வீட்டிற்கு சென்றதும் முதல் வேலையாய் எக்ஸ்பிரஸ் வேகத்தில் சங்கீதம் கத்துக்கொடுக்க ஆளிருக்கா எனத் தேடனும் என்று நினைத்துக்கொண்டேன்.
தோழிகளிடம் என் முடிவை சொன்னதும் சிரித்தார்கள். ரெண்டே மாசத்தில் எப்படிடி என்று கிண்டலடித்தார்கள். ”கத்துண்டு நான் பாடப்போறது ஸ்விசிலாக்கும். அதனால நான் பாடறது தான் கர்நாடிக சங்கீதம்” என்றேன். பின்னர் அம்மா வீடு இருக்கும் ஏரியாவிலேயே ஒருத்தர் சொல்லிக்கொடுக்கிறார் எனக் கேள்விப்பட்டவுடனேயே அந்த அட்ரஸில் இருந்த வீட்டின் காலிங் பெல்லை அழுத்திக்கொண்டிருந்தேன். கதவைத் திறந்தவர் நிறை மாத கர்ப்பிணியாய் இருந்தார். நான் தயங்கி பாட்டுக் கத்துக்கனும்ன்னு இழுத்ததும், உள்ளே அழைத்துக்கொண்டு போய் காஃபியெல்லாம் கொடுத்து உபசரித்தார். பின்னர் தனக்கு அடுத்த மாதம் டெலிவரியென்றும், வேண்டுமென்றால் தன் மாமியாரிடம் கற்றுக்கொள்ளலாமென்றும் சொல்லி தன் மாமியாரின் அட்ரஸை ஒரு காகிதத்தில் எழுதிக் கொடுத்தார். அவரிடம் விடைப்பெற்றுக்கொண்டு வெளியே வந்தேன். எந்த ஏரியா என்று பார்க்க அந்தக் காகிதத்தைப் பிரித்த போது முதலில் பெயரைத் தான் பார்த்தேன். மிசஸ். மோகனா என்றிருந்தது. மேற்கொண்டு படிக்காமலேயே அந்தக் காகிதத்தை கசக்கி கீழேப் போட்டு வீட்டை நோக்கி விறுவிறுவென நடந்தேன்.
-அதீதம் (15-01-2011) இதழில் வெளியானது.
Subscribe to:
Posts (Atom)