Showing posts with label பதிவர் வட்டம். Show all posts
Showing posts with label பதிவர் வட்டம். Show all posts

May 7, 2009

யாவரும் வாழ்த்துவீர்

இந்த வார ஆனந்த விகடனை மேய்ந்து கொண்டிருந்தபோது கார்ப்பரேட் கம்பர் எழுதிய கதை வந்திருப்பதைக் கண்டேன்.

வாழ்த்துக்கள் நர்சிம்.

மக்களே நர்சிம்மிடம் ட்ரீட் - யாவரும் கேளிர்:)

அதிஷாவின் ஒரு பக்க கதையும் பிரசுரமாகியிருக்கிறது. வாழ்த்துகள் அதிஷா.

May 4, 2009

தீபா, அமித்து அம்மா, நர்சிம், SK மற்றும் நாம்

ஆறு வயது குழந்தை தன் தாயிடம் "அம்மா செக்ஸ்னா என்ன?" என கேட்கிறது. பதற்றமடையும் தாய் தன் கணவனிடம் கலந்து பேசி, இரண்டு மணி நேரம் பொறுமையாக செக்ஸைப் பற்றி விளக்குகிறாள். எல்லாவற்றையும் கேட்டு முடித்த குழந்தை "ஆனா அம்மா இவ்ளூண்டு இடத்துல நீ சொன்ன எல்லாத்தையும் எப்படிம்மா எழுதறது" என கேட்டுக்கொண்டே அப்ளிகேஷன் பார்மை காட்டுகிறது.
SEX : ------------

இது எப்போதோ ஏதோ ஒரு பத்திரிக்கையில் படித்தது. இன்று பெரும்பாலான பெற்றோரின் நிலை இதுதான். குழந்தையை ஆரோக்கியமான வளர்ச்சிப் பாதையில் தான் அழைத்துச் செல்கிறோமா? அவசியமானவற்றைப் பற்றிதான் அவர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறோமா? ஆயிரம் கேள்விகள். நம் மனதிற்க்கு சரியென படுபவையே சரியான விடையெனக் கருதப்படுகிறது. தீபாவின் குட் டச் பேட் டச் பற்றிய பதிவு சரியான நேரத்தில் எழுதப்பட்டது. சரி குழந்தைக்கு இதை எப்படி தெளிவுபடுத்துவது?

டாக்டர் ஷாலினி, டாக்டர் ருத்ரன் ஆகியோரோடு இதைப் பற்றி கலந்துரையாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே 10 மாலை நடைபெறவிருக்கிறது இந்த சந்திப்பு. தீபாவின் எழுத்துக்களுக்கு வடிவம் கொடுக்கலாமென முனைந்த அமித்து அம்மாவிற்க்கும், அதற்குரிய அனைத்து ஏற்பாடுகளையும் செய்த நர்சிம், SK ஆகியோருக்கும் அம்மாக்களின் சார்பாக நன்றிகள்.

மேலதிக தகவல்களுக்கு

நர்சிம்

லக்கி லுக்

கார்க்கி

கேபிள் சங்கர்

தங்கள் வருகையை உறுதி செய்ய weshoulddosomething@googlemail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பிவிடுங்கள்.