ராஜினாமா டிராமா முடிஞ்சுது. உண்ணாவிரதம் நல்லபடியா போச்சு. கடிதம் எழுதியாச்சு. அதவிட வேகமா போகனும்னு தந்தியும் அடிச்சாச்சு. பேரணி நடத்திக் காமிச்சாச்சு. இப்போ பொது வேலை நிறுத்தம்.அடுத்தது என்ன? சவ ஊர்வலம் தான? எது பண்றதாருந்தாலும் முன்னாடியே சொல்லிடுங்க. அடிக்கடி உங்களையெல்லாம் திட்டி திட்டி வாய் வலிக்கறது தான் மிச்சம். அதுசரி. மனுஷனா இருந்தா உரைக்கும். தெருத் தெருவா ஒட்டு பொறுக்குற நாய்ங்களுக்கு (நாய்கள் சங்கம் மன்னிக்கவும்) எப்படி உரைக்கும்?
அப்புறம். ஊர்வலத்தின் போது தாரை தப்பட்டைக்கு பதிலா ஜால்ரா அடிக்கனும்னா செலவே இல்லாம நிறைய பேர் வருவாங்க. தாரை தப்பட்டை செலவ மிச்சம் பிடிச்சு அதுல ஏதாவது புதுசா சேனல் ஆரம்பிச்சு உங்க மகத்தான சேவையை தொடருங்க.
கடைசியா வயித்தெரிச்சலுடன் ஒரு சாபம் - உங்க யாருக்கும் நல்ல சாவே வராது.
அளவில்லா எரிச்சலுடன்
தமிழன் என சொல்லிக்கொள்ள வெட்கப்படுபவன்.
Showing posts with label கண்டனம். Show all posts
Showing posts with label கண்டனம். Show all posts
April 23, 2009
February 25, 2009
சில்லறை பிரச்சனை
என்னையும் பதிவரா மதிச்சி பட்டாம்பூச்சி விருது தந்த அண்ணன் நாகை சிவா அவர்களுக்கு நன்றி.
இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.
பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.
இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"
"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"
"அவர் இங்க இல்ல மேடம்"
திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
இரண்டு மாதங்களுக்கு முன் பாண்டிச்சேரியில் நடந்த சம்பவம். ஏற்கனவே சூப்பர் மார்கெட்டில் ஏற்பட்ட அனுபவம் காரணமாக இந்த செயின் ரீடெய்ல் கடைகளை கூடுமானவரை தவிர்க்க முயற்சிக்கிறேன். ஆனாலும் மற்ற கடைகளை (மளிகை கடைகள்) ஒப்பிடும்போது இந்த இடங்களில் பொருட்களின் சுத்தம் மறுக்கமுடியாத ஒரு விஷயமாகிவிடுகிறது.
பாண்டிச்சேரியில் நிறைய cost price shop என்றழைக்கப்படும் நியாய விலை கடைகள் இருக்கு. இதில் முக்கால்வாசி கடைகளில் MRP-விட 2 அல்லது 3 ரூபாய் குறைவாக பொருட்களை கொடுக்கிறார்கள் (MRP என்பது பெயருக்கேற்றார்போல் அதிகபட்ச விலை தான். இந்த விலையிலிருந்து குறைத்து விற்றாலும் லாபம் கிடைக்கும்). ஒரு சில கடைகளில் பொருட்கள் ரொம்ப சுத்தமாக இருக்கும். அப்படிபட்ட ஒரு கடையில் நடந்தது தான் இது.
இந்த தடவை மாமியார் வீட்டுக்கு சில மளிகை சாமான்கள் வாங்கவேண்டியிருந்தது. நாமளும் கொஞ்சம் சீன் போடலாமேன்னு "நான் வாங்கிட்டு வரேன்மா"ன்னு கிளம்பினேன். அவங்களும் ஒரு குறிப்பிட்ட கடைய சொல்லி அங்கயே வாங்க சொன்னாங்க. "மாமியார் சொல்மிக்க மந்திரமில்லை"ங்கற என்மொழிக்கேற்ப அங்கயே போய் சேர்ந்தேன். இரண்டு மாடிக் கட்டடத்தில் home needs அனைத்தையும் விற்கிறார்கள். எவ்வளவோ வெரைட்டி. Peak hour மாநகரப் பேருந்து மாதிரி அவ்வளவு கூட்டம். நான் வாங்க வேண்டிய சாமான்களை மட்டும் வாங்கிட்டு திருப்பதி தரிசன வரிசை மாதிரி இருந்த க்யூவில் போய் நின்னேன். எனக்கு முன்னாடி ஒரு வயசானவரும், பின்னால் ஒரு 30-35 வயதிருக்கும் முக்கா நிஜார் போட்ட ஆள் ஒருவரும் நின்றுகொண்டிருந்தார்கள். முன்னால் இருந்த தாத்தாவின் முறை. பில் 93 ரூபாய். பில்லோடு 5ரூபாய் மற்றும் 2 ரூபாய் munch chocolate கொடுத்தாங்க. கேட்டதுக்கு சில்லறையில்லைன்னு சொன்னாங்க. பெரியவர் ரொம்ப உறுதியா தனக்கு சில்லறைதான் வேண்டுமெனக் கூறிவிட்டார். இதற்கிடையில் க்யூ நகராததால் ஆளாளுக்கு பேச ஆரம்பித்துவிட்டார்கள். "ஏன் சார் அல்பத்தனமா சில்லறைக்காக சண்டை போட்றீங்க?" என்றார் ஒருவர். அதுக்கு என் பின்னாலிருந்தவர் "ஏன் கடைக்காரங்க பண்றது உங்களுக்கு அல்பத்தனமா தெரியலையா? 10 ரூபாய் பில்லூக்கு 500 ரூபாய் கொடுக்கும்போது சில்லறையில்லைன்னு சொன்னா ஒத்துக்கலாம். 7 ரூபாய் கூடவா தரமுடியாது? ஏன் வங்கில சில்லறை மாத்தி வெச்சுக்கலாமே?" என்றார். கடைசியில் அந்தப்பெரியவர் தான் வாங்கிய பொருட்களை திருப்பித்தந்துவிட்டார். எனக்கு பில் 151 ரூபாய் வந்தது. 150 ரூபாயோடு ஒரு eclairs சாக்லேட் கொடுத்தேன். முதலில் ஜெர்க்கான அந்த sales girl பின்னர் சிரித்துக்கொண்டே "இதெல்லாம் வாங்க மாட்டோம் மேடம்"
"ஏன் நீங்க கொடுக்கும்போது நாங்க வாங்கிகறோமில்ல?"
"இல்ல மேடம். மேனேஜர் சொல்றத தான் நான் செய்ய முடியும்"
"சரி உங்க மேனேஜர கூப்பிடுங்க"
"அவர் இங்க இல்ல மேடம்"
திரும்பவும் க்யூவில் இருந்த எல்லாரும் திட்ட ஆரம்பித்துவிட்டார்கள். அவர்களின் நேரம் வீணாகுதாம். அப்ப பேசறவனெல்லாம் வேலை வெட்டியில்லாதவனா? வேறுவழியில்லாம 1 ரூபாய கொடுத்துட்டு வந்தேன் (நான் கூட சாமான திருப்பிகொடுத்திருப்பேன். மாமியார் கேட்டா என்ன சொல்றது?). அட அறிவுகெட்ட ஜனங்களே. ஒருத்தன் நியாயத்துக்கு குரல் கொடுக்கும்போது (அது சில்லறை விஷயமாகட்டும் இல்லை கோடி மேட்டராகட்டும்) நீங்க அவன ஆதரிக்கலன்னாலும் பரவால்ல. கருத்து சொல்றேன்னு உங்க திருவாய தொறக்காம இருங்க போதும்.
இரண்டு நாள் கழித்து பஸ்சில் கண்டக்டர் ஒரு ரூபாய் change இல்ல. அப்புறமா தரேன் என்றார். "பிச்சை எடுத்துச்சாம் பெருமாளு. அத புடுங்கித் தின்னுச்சாம் அனுமாரு"
Labels:
என்ன கொடுமை சார் இது,
கண்டனம்,
சிந்தனை செய் மனமே,
பொதுவானவை
February 23, 2009
வாழ்த்தும் - கண்டனங்களும்
"எல்லா புகழும் இறைவனுக்கே". இரண்டு ஆஸ்கர் விருதுகள் வாங்கிய ரஹ்மானுக்கும், ரசூல் பூக்குட்டிக்கும் என் வாழ்த்துக்கள்.
ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடல்.
படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு பாடல்
சரி தலைப்பிலுள்ள கண்டனங்கள் யாருக்கு?
மூத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு. வக்கீல்கள் அமைதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாராம். ஒரு மாநிலத்தின் முதல்வர் மூத்த தலைவர் இப்படியா emotional blackmail செய்வது? ஏன் ஐயா உங்களால் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை இரண்டு தரப்பினர் மீது எடுக்கமுடியவில்லை? ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று பதறி அறிக்கை விடத் தெரிந்த உங்களுக்கு ஏன் இரண்டு தரப்பினரையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? வோட்டு போய்விடும் என வக்கீல்களுக்கா? இல்லை உங்கள் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எதிர்ப்பு கிளப்புவார்கள் என்றா? என்னவோ போங்கள். உங்களிடமும், உங்கள் சக அரசியல்வாதிகளிடமும் கொஞ்சமேனும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.
தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு - அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)
ஜெயலலிதா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. அடிவாங்கினவனே மறந்தாலும் இவங்க வுடமாட்டாங்க போல. நான், எனது அரசு என்ற சுயதம்பட்டம், ஆணவம் இவற்றை விட்டொழித்து என்னிக்கு மேடம் பொறுப்பானா எதிர்கட்சி தலைவரா செயல்படபோறீங்க? சட்டசபைக்கு வந்தாலும் 5 நிமிஷம் தான் இருக்கறீங்க. கேட்டா கருணாநிதியும் அப்படித்தானேன்னு அவர கை காட்றீங்க. அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. நேத்துக்கு கட்சி ஆரம்பிச்ச கேப்டன் கேட்கும் கேள்விகள் கூட நீங்க கேக்கமாட்டேங்கறீங்களே ஏன்?
வக்கீல் பெருமக்களே நீதிமன்ற வளாகத்தில் அடிதடி நடந்து நீதித்துறையே களங்கப்பட்டுடுச்சுன்னு கூவறீங்களே, சுப்ரமணிய சுவாமி மேல முட்டை அடிச்சீங்களே. எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?
காவல்துறை கனவான்களே அது சரி எவ்வளவு நாள் தான் நீங்களும் அடிவாங்க்கிட்டிருப்பீங்க. அதுக்கெதுக்குங்க வாகனங்களையெல்லாம் துவம்சம் பண்ணீங்க? வக்கீல்களை மட்டும் மொத்தியிருந்தா கொஞ்சமாவது உங்க பக்கம் நியாயம் இருந்திருக்கும் (அவங்க அடிச்சாங்க நாங்க அடிச்சோம்னு). இப்ப பாருங்க உங்களுக்கும் தான் கெட்ட பேரு.
சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".
ஆஸ்கர் விருது பெற்ற ஜெய் ஹோ பாடல்.
படத்தில் எனக்கு ரொம்ப பிடித்த இன்னொரு பாடல்
|
சரி தலைப்பிலுள்ள கண்டனங்கள் யாருக்கு?
மூத்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர் டாக்டர் கருணாநிதி அவர்களுக்கு. வக்கீல்கள் அமைதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லையென்றால் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பாராம். ஒரு மாநிலத்தின் முதல்வர் மூத்த தலைவர் இப்படியா emotional blackmail செய்வது? ஏன் ஐயா உங்களால் ஒரு ஸ்திரமான நடவடிக்கையை இரண்டு தரப்பினர் மீது எடுக்கமுடியவில்லை? ஆட்சியை கலைக்க சதி நடக்கிறது என்று பதறி அறிக்கை விடத் தெரிந்த உங்களுக்கு ஏன் இரண்டு தரப்பினரையும் கண்டித்து அறிக்கை வெளியிடவில்லை. நீங்கள் யாருக்கு பயப்படுகிறீர்கள்? வோட்டு போய்விடும் என வக்கீல்களுக்கா? இல்லை உங்கள் பொறுப்பிலிருக்கும் காவல்துறை எதிர்ப்பு கிளப்புவார்கள் என்றா? என்னவோ போங்கள். உங்களிடமும், உங்கள் சக அரசியல்வாதிகளிடமும் கொஞ்சமேனும் நாகரிகத்தை எதிர்பார்ப்பது என் தவறுதான்.
தி.மு.க தலைவரின் தொண்டரடிப்படைகளுக்கு - அவரே முடியாம போய் ஆஸ்பத்திரியில படுத்துருக்காரு. அவருக்கு தேவையானது நல்ல ஓய்வுங்கறது உங்களுக்கு தெரியாதா? அவர நிம்மதியா இருக்கவிடாம அந்த பாலத்த தொற, இந்த திட்டத்த தொறன்னு ஏன் ரப்சர் பண்றீங்க. தலைவரும் ஏன் இதுக்கெல்லாம் ஒத்துக்கிறாரு? யாமறியோம் பராபரமே:)
ஜெயலலிதா உட்பட அனைத்து எதிர்கட்சிகளும் இந்த பிரச்சனையை ஊதி பெருசாக்குவதில் வரிந்து கட்டிக்கொண்டு வேலை பார்க்கின்றன. அடிவாங்கினவனே மறந்தாலும் இவங்க வுடமாட்டாங்க போல. நான், எனது அரசு என்ற சுயதம்பட்டம், ஆணவம் இவற்றை விட்டொழித்து என்னிக்கு மேடம் பொறுப்பானா எதிர்கட்சி தலைவரா செயல்படபோறீங்க? சட்டசபைக்கு வந்தாலும் 5 நிமிஷம் தான் இருக்கறீங்க. கேட்டா கருணாநிதியும் அப்படித்தானேன்னு அவர கை காட்றீங்க. அப்ப உங்களுக்குன்னு தனி அடையாளம் ஏதும் கிடையாது. நேத்துக்கு கட்சி ஆரம்பிச்ச கேப்டன் கேட்கும் கேள்விகள் கூட நீங்க கேக்கமாட்டேங்கறீங்களே ஏன்?
வக்கீல் பெருமக்களே நீதிமன்ற வளாகத்தில் அடிதடி நடந்து நீதித்துறையே களங்கப்பட்டுடுச்சுன்னு கூவறீங்களே, சுப்ரமணிய சுவாமி மேல முட்டை அடிச்சீங்களே. எங்க வைச்சு அடிச்சீங்க புரோட்டா கடையிலயா? இந்த செயல் அநாகரிகம் இல்லையா?
காவல்துறை கனவான்களே அது சரி எவ்வளவு நாள் தான் நீங்களும் அடிவாங்க்கிட்டிருப்பீங்க. அதுக்கெதுக்குங்க வாகனங்களையெல்லாம் துவம்சம் பண்ணீங்க? வக்கீல்களை மட்டும் மொத்தியிருந்தா கொஞ்சமாவது உங்க பக்கம் நியாயம் இருந்திருக்கும் (அவங்க அடிச்சாங்க நாங்க அடிச்சோம்னு). இப்ப பாருங்க உங்களுக்கும் தான் கெட்ட பேரு.
சுப்ரமணியபுரம் படத்துல கஞ்சா கருப்பு ஒரு டயலாக் சொல்லுவார்
"இவைங்களுக்கு மத்தில வாழறதே பெரிய பொழப்புதாண்டா".
Labels:
கண்டனம்,
சிந்தனை செய் மனமே,
பொதுவானவை,
வாழ்த்துக்கள்
December 9, 2008
விழிப்பது எப்போது?
இன்னும் ஒரு மாதம்? அல்லது 3 மாதம்? இல்லை அடுத்த குண்டுவெடிப்பு நிகழும் வரை தான் இந்த சம்பவம் பேசப்படும் என்று ஒரு பதிவர் இன்னொருவரின் பதிவுக்கு பின்னூட்டமிட்டிருந்தார். என் பிரார்த்தனை அது பொய்யாக்கப்பட வேண்டும் என்பதுதான். ஒரு சாமானியனாக நான் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்வி என்னில் அடிக்கடி தோன்றுகிறது. என்னால் முடிந்தவரை என் வாக்கை கண்டனமாகப் பதிவு செய்யலாம். அரசியல்வாதிகளின் அலட்சியம் போல் நமக்கும் பன்மடங்கு இருக்கிறது. நான் வோட்டுப் போட்டால் எல்லாம் மாறிடுமான்னு கேக்கறவங்க நிறைய பேர். கண்டிப்பா மாறாதுதான். ஆனால் நம் பக்கத்தில் இருந்து ஒரு சிறிய முயற்சியாக வோட்டுப் போடுவது இருக்காலமில்லையா? நம்மில சில பேருக்கு 49ஓ என்ற ஆப்ஷன் இருப்பதே தெரியவில்லை. நான் கடந்த இரண்டு முறையாக என் வோட்டை 49ஓவாகத்தான் பதிந்திருக்கிறேன் (இதற்கு நான் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியது இருந்தது). முதல்ல நம்ம கிட்ட இருக்கற குறைகளைக் குறைத்துக்கொள்வோம். அப்போ தான் அடுத்தவன தைரியமாய் கேள்வி கேக்கலாம்.
சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.
1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி
பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).
சந்தனமுல்லை என்ன கோத்துவிட்ருக்காங்க. நான் இவங்களையெல்லாம் கோத்துவிடறேன்.
1. அருண்
2. தாரணி பிரியா
3. புதுகை அப்துல்லா
4. கார்க்கி
பி.கு : பாண்டியில் மாமியார் வீட்டில் இருப்பதால் பின்னூட்டங்களுக்கு உடனடி பதில் தர இயலாது (கொஞ்சமாவது அவங்களுக்கு ஹெல்ப் பண்ணனும்ல). சென்னை வந்து இதே விஷயத்தை கொஞ்சம் விரிவா பதியறேன் (ஆக உயிரெடுக்காம விடமாட்டன்னு நீங்க புலம்பறது கேக்குது).
Labels:
கண்டனம்,
சங்கிலிப் பதிவுகள்,
சிந்தனை செய் மனமே
November 27, 2008
நல்லாருங்கப்பு
எழுத வேணாம்னு தான் நினைச்சேன். ஆனா தினகரன்ல அடிப்பட்ட அந்த குழந்தையின் போட்டோவ பார்க்கும்போது ஆத்திரமா வருது. யார் மேலயா. எல்லாம் என் மேல தான்பா. என் இயலாமையை நினைத்து.
மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.
93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.
கண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.
செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.
எவன் செத்தா எனக்கென்ன? முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.
சம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(
மாலேகான் தீவிரவாத பிரச்சனையின் மூலம் நாட்டை துண்டாட பார்க்கிறது பா.ஜ.க என்று சோனியாவும், தீவிரவாதத்தை ஒடுக்க தவறிவிட்டது மன்மோகன் சிங் அரசு என்று பா.ஜ.கவும் ஒருத்தரை ஒருத்தர் வாழ்த்திக்கிறாங்க. நல்லாருங்கப்பு.
93ல நடந்த சம்பவத்துக்கே விசாரணை இன்னும் நடக்குது. இப்ப நடந்ததுக்கு நீங்க காரணகர்த்தாக்களை கண்டுபிடிச்சு, விசாரிச்சு...........நல்லாருங்கப்பு.
கண்டிக்கிறேன். வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன். மிக மிக மிக வன்மையாகக் கண்டிக்கிறேன்னு ஒவ்வொரு சம்பவத்தின் போதும் தன் கடமையை சரியாக செய்துகொண்டிருக்கும் உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஸார் நீங்க மட்டும் ரொம்ப ரொம்ப நல்லாருங்கப்பு.
செத்தவன் மனுசன் இல்ல, சாவடிக்கிறவந்தான் மனுசன்னு தீவிரவாதிகளுக்கு சப்போர்ட் பண்ற மனித (??????) உரிமை கமிசன் மெம்பர்களே நீங்களும் நல்லாருங்கப்பு.
எவன் செத்தா எனக்கென்ன? முதல்ல கட்சி அமைச்சர்கள காப்பாத்தனும்னு நினைக்கிற அரசியல்வாதிகளே நீங்களும் நல்லாருங்கப்பு. உங்க போதைக்கு அப்பாவி ஜனங்க சைடு டிஷ்ஷாயிட்டுரூக்காங்க.
சம்பவத்தைப் பார்த்து என்ன செய்யறதுன்னு புரியாம பதிவு எழுதி புலம்பிட்ருக்கற நான் ரொம்பவே நல்லாருப்பேன்:(
November 26, 2008
கார்க்கிக்கும் ராப்புக்கும் கண்டனக் கடிதம்
(தலைவர் மீது)அன்பேயில்லாத ராப் மற்றும் கார்க்கி,
உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப்?? தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா??

வீரத்தளபதியின் போர் படை தளபதி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய்? தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.
அகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,
மேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா? இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் "தளபதி".
ராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.
இப்படிக்கு,
வீரத்தளபதியின் தீவிர ரசிகை.
உங்களுக்கு எல்லாம் வெக்கமா இல்ல? அகிலாண்ட நாயகனின் ரசிகர் மன்ற தலைவிங்கர பேர்ல நீங்க என்ன செஞ்சிருக்கீங்க ராப்?? தலைவரின் ஒவ்வொரு மூவ்மெண்ட்டையும் அவர்களுடைய டை ஹார்ட் ஃபேன்ஸ்க்கு சொல்வது உங்கள் தலையாய கடமையல்லவா??
வீரத்தளபதியின் போர் படை தளபதி என தன்னைத்தானே கூறிக்கொள்ளும் கார்க்கியே நீயுமா அசட்டையாக இருந்துவிட்டாய்? தலைவிதான் அயல்நாட்டில் இருக்கிறார். நீ உள்ளூரில் தானேய்யா இருக்க. நீயாவது சொல்லிருக்கக்கூடாது. மன்றத்தை முந்திக்கொண்டு ஒரு பத்திரிக்கைக்காரன் செய்தி வெளியிடுகிறான். அந்த செய்தியை நீங்கள் உறுதிப்படுத்தவில்லை.
அகிலாண்ட நாயகனின் ரசிகப் பெருமக்களே,
மேட்டர் என்னன்னா தலைவர் அடுத்த படத்துக்கு கதை கேட்டு கன்பர்ம் பண்ணிருக்காருங்கோ. டைரக்டர் யார் தெரியுமா? இயக்கத்தின் திலகம் சுனாமி பேரரசுவின் தம்பி முத்துவடுகுதான். படத்துக்கு டைட்டில் "தளபதி".
ராப் & கார்க்கி ஒழுங்கா நீயுஸ கன்பர்ம் பண்ணி சொல்லுங்க. இல்ல மன்ற பொறுப்பிலிருந்து விலகிடுங்க. நாங்க பார்த்துக்கறோம்.
இப்படிக்கு,
வீரத்தளபதியின் தீவிர ரசிகை.
Labels:
கண்டனம்,
வீரத்தளபதி
Subscribe to:
Posts (Atom)