அன்பின் கடவுளுக்கு,
என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.
1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.
2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?
3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?
4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.
இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?
Showing posts with label சொந்தக் கதை. Show all posts
Showing posts with label சொந்தக் கதை. Show all posts
January 24, 2012
September 27, 2010
சிவந்த கைகள்
ஒவ்வொரு விஷயத்தின் மீதான பற்றிற்கும் ஒரு குறிப்பிட்ட கால அளவு உண்டு. பொம்மைகள் என்றால் உயிராய் இருந்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாய் அவற்றின் மீதிருந்த காதல் காமிக்ஸ் புத்தகங்கள் மீது திரும்பியது. பின்னர் நண்பர்களுடன் நேரம் செலவிடுவதில் ஏற்பட்ட ஆர்வம். எதிர்காலம்/பொருளாதார பயங்கள் எழும்பி பொருளீட்டலில் பயணிக்க வைக்கும். குடும்பென்றானபின் குழந்தை மீது கவனம் திரும்பும். இப்படி நிறைய பட்டியலிடலாம். ஆனால் எல்லோருக்கும் சிறு வயது தொட்டு இன்று வரை ஏதேனும் ஒரு விஷயம் அல்லது சிலவற்றின் மீது தீராக் காதல் இருந்துக்கொண்டே இருக்கும். நான் ரொம்பவே காதலிக்கும் விஷயங்களில் மருதாணியும் ஒன்று.
பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.
மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).
சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.
அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.
இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.

சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))
முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
பள்ளி இறுதிக் காலத்திலிருந்தே நகைகளின் மீதான ஆர்வம் போய்விட்டது. இன்றுவரை மருதாணியின் மீதான் க்ரேஸ் குறையவேயில்லை. மெஹெந்தியை விட மருதாணியே அழகாக இருக்கிறதென்பது என் கருத்து. முழங்கை வரையிலும் முழங்கால் வரையிலும், லட்சக்கணக்கான டிசைன்களில் பலவித வண்ணங்களில் மெஹெந்தி போடப்பட்டாலும் விரல்களுக்கு தொப்பி போட்டது போல வைக்கப்படும் நம்மூர் ஸ்டைல் மட்டுமே எனக்குப் பிடித்திருக்கிறது.
மருதாணி வளர்ப்பது முதல் வைப்பது வரை பெரிய கலை. என் பாட்டிக்கு மருதாணி செடி வீட்டில் வைத்து வளர்த்தால் வீட்டிலிருப்பவர்களுக்கு நல்லதில்லையென்ற நினைப்புண்டு. எனக்கும் அம்மாவிற்கும் நினைத்த நேரத்திற்கு மருதாணி வைத்துக்கொள்ள வீட்டில் செடியில்லன்னா எப்படி என்று தோன்றும். காஞ்சிபுரத்தில் நல்ல அடர்த்தியான மருதாணிச்செடி வளர்த்தோம். இலைகள் ரொம்ப திக்காக இருக்கும். மருதாணி இலை பறிப்பது நேரம் முழுங்கும் வேலை. நண்பர்களோடு கதையடித்துக்கொண்டே ஒவ்வொரு இலைகளாக பொறுமையாக பறிக்கலாம். ரொம்ப அவசரமென்றால் அப்படியே நீட்டக் கிளைகளை ஒடித்துக்கொண்டு போய் இலைகளை மட்டும் பின்னர் உருவிக்கொள்ளலாம். எப்படிப் பறித்தாலும் மருதாணி சீக்கிரமே துளிர்த்துவிடும் (வளர்க்கும் மண்ணைப் பொறுத்து).
சிலச் செடிகள் இலையை உருவிப் பறிக்கும்போதே கைகளில் மெல்லிய ஆரஞ்சு வண்ணத்தை கொடுக்கும். சிலது பறித்து அரைக்கும்போது வண்ணம் கொடுக்கும். சில இலைகள் என்ன எக்ஸ்ட்ரா ஃபிட்டிங் சேர்த்தாலும் அசரவே அசராது. இரவு முழுவதும் வைத்திருந்தாலும் ஆரஞ்சிலே நின்று கடுப்பேற்றும். இன்று வரை எங்கள் வீட்டில் இரவு உணவு முடித்து, கிச்சன் சுத்தப்படுத்திய பின்னரே மருதாணி அரைப்பார்கள். காஞ்சிபுரம், வாலாஜா வீடுகளில் அம்மிக் கல் இருந்தது. கொஞ்சம் கொட்டைப் பாக்கு சேர்த்து அரைப்பார்கள். மருதாணி வைத்தால் சளி பிடிக்குமென்பவர்களுக்காக கொஞ்சம் யூக்லிப்டஸ் ஆயில் சேர்ப்பார்கள். மருதாணி கிடைக்காத இடங்களில்/அவசரத்திற்கு குங்குமம், மைதா இன்னும் ஏதோ வஸ்துவெல்லாம் சேர்த்து பசை மாதிரி ரெடி செய்வார்கள். ஆனால் அதுக்கு ஆயுசு ரொம்ப கம்மி. மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு வாரம் தாங்கும் அவ்வளவுதான். அதே மாதிரி பரதநாட்டிய ப்ரோகிராமின் போது அடர் சிவப்பில் ஒரு திரவத்தை பஞ்சில் நனைத்து வைத்துவிடுவார்கள். பெயர் ஆல்டா என நினைக்கிறேன். சரியாக நினைவில்லை. பெயிண்ட் வாசனைபோல் இருக்கும்.
அடுத்து மருதாணி வைக்கும் படலம் ஆரம்பமாகும். முதலில் வாண்டுகளுக்கு வைத்துவிட்டு பின்னர் பெரியவர்கள் வைத்துக்கொள்வார்கள். சின்ன மக்கில் தண்ணி எடுத்து வைச்சுப்பாங்க. முதலில் சுண்டு விரலிலிருந்து ஆரம்பித்து கட்டை விரலில் முடியும். சின்னதாய் உருண்டை உருட்டி கைகளில் வைத்து அழுத்தி அப்படியே முழு விரலையும் மூடிவிடுவார்கள். எனக்கு விரலின் கால் பாகம் வைப்பது புடிக்கும். அம்மா, பெரியம்மா, அக்காவிற்கெல்லாம், முக்கால்வாசி விரல்கள் மூடும்படி வைப்பார்கள். விரல்கள் முடித்த பின்னர் உள்ளங்கையில் ஒரு சிறிய வட்டம். காம்பஸ் வைத்து வரைந்தாற்போல் தத்ரூபமாக இருக்கும். பின்னர் அதைச் சுற்றி சின்ன பொட்டுகள் ஏழோ எட்டோ கைக்குத் தகுந்தாற்போல் முளைக்கும். அவ்வளவுதான்.
இனிமேதான் இருக்கு சாமர்த்தியமே. அதென்னவோ மருதாணி வச்சு முடிச்சப்புறம் தான் முதுகு அரிக்கும், மூக்கு அரிக்கும், தண்ணி தாகம் எடுக்கும், முடி கலைஞ்சு மூஞ்சில வந்து விழும், கண்ணுல தூசி விழும், இல்லாத இம்சையெல்லாம் க்யூ கட்டி நிற்கும். இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சாமல் மருதாணி கலையாமல் பாதுகாப்பாய் தூங்கி பாதி இரவில் எழுப்பி/தூக்கத்திலேயே கைகளில் எலுமிச்சை சாறு கொஞ்சம் தடவி, காலையில் எழுந்தவுடன் கைகளில் இருக்கும் காய்ந்த கலவையை சுரண்டி எடுக்கும்போதே தெரிந்துவிடும் பத்திருக்கா இல்லையான்னு.
சிலருக்கு ஆரஞ்சு கலரைத் தாண்டாது. சிலருக்கு அடர் சிவப்பில் பார்க்க கொள்ளை அழகாக இருக்கும். சிலருக்கு கருத்தே போய்விடும். என் அக்காக்கு கருப்பாகவே இருக்கும். பித்தம் ஜாஸ்தியாயிடுச்சுன்னு சொல்லி சொல்லியே நாலு நாளைக்கு காஃபியைக் கட் பண்ணிடுவாங்க பெரியம்மா. எனக்கு எப்பவுமே நல்ல சிவப்பாகவும் எப்போதாவது ஆரஞ்சு வண்ணத்திலும் இருக்கும். காலேஜ் படிக்கும்போதெல்லாம் மருதாணியின் நிறத்தைப் பார்த்து கிண்டலடிக்கும் பழக்கம் உண்டு. மருதாணி கலைச்சவுடனே கையக் கழுவக்கூடாதுன்னு சொல்லுவாங்க. ஒரு ஒரு மணிநேரத்துக்கு தண்ணி படாம பாதுகாத்தா இன்னும் கொஞ்சம் கலர் கூடும். அப்புறம் கையக் கழுவும்போது தான் ஒரிஜினல் கலர் என்னன்னு தெரியும். அன்னிக்கு முழுக்க மருதாணியோட வாசம் மூக்கச் சுத்திக்கிட்டேயிருக்கும். மருதாணி வச்சு எடுத்தன்னிக்கு ப்ரெஷ்ஷா உறையூத்துன கெட்டித் தயிர சாதத்துல பிசைஞ்சு சாப்பிட்டா. ம்ம்ம்ம். சொர்க்கம் தான் போங்க. நல்ல தரமான மருதாணியின் கலர் குறைய எப்படியும் மூணு வாரமாகும். அதுவரைக்கும் அநாட்டிய பேரெலிகள் கூட சும்மா சும்மா அபிநயம் பிடிச்சு பார்த்துப்பாங்க:))
முன்னமெல்லாம் எங்கவீட்ல எதாவது விசேஷம்னாலே மருதாணிச் செடிதான் முதல் வெட்டு. கல்யாணம், தீபாவளி, பொங்கல்ன்னு இப்படி எதுக்கெடுத்தாலும் மருதாணி வச்சுப்போம். அப்புறம் செடி இல்லை, இலை கிடைக்கலன்னு ஆரம்பிச்சு வெறும் கல்யாணத்துக்கு மட்டுமே மருதாணி வைக்கிற நிலைமை வந்திடுச்சு. இந்த மாதத் துவக்கத்தில் மாமா பெண்ணின் கல்யாணம் நடந்தது. கடைசியாக என் வளைகாப்பிற்கு மருதாணி வைத்துக்கொண்டது. அதற்குப் பிறகு இப்போதான் வைத்துக்கொண்டேன். ஆசையாசையாய் இரண்டு கைகளிலும் உள்ளங்காலிலும் வைத்துக் கொண்டேன். இப்போது தான் கலர் குறைய ஆரம்பித்திருக்கிறது. ஜூனியர் என் இரு கையையும் பிடித்துக்கொண்டு “அம்மாக்கு உவ்வா இக்கா. மந்து போடவா” எனக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்
July 15, 2010
தூக்கமும் கண்களை தழுவட்டுமே...
வாழ்க்கைல நிம்மதி தரக்கூடிய விஷயங்களில் தூக்கமும் ஒன்று. சிலருக்கு தூக்கத்துல கூட நிம்மதி இருக்காது. எதுனா டெரரான கனா வந்து எழுப்பிவிட்டுடும். சிலரோ அவங்க நல்லா தூங்கினாலும் பெரிசா கச்சேரி பண்ணி பக்கத்துல படுத்துருக்கவங்கள தூங்க விடாம பண்ணிடுவாங்க. எந்த பிக்கல் பிடுங்கல் இல்லாம நிம்மதியான ஆழ்ந்த உறக்கம் வாய்க்கப்பெற்றவர்கள் வரம் வாங்கி வந்தவர்கள். நானும் அந்த வரத்தால் ஆசிர்வதிக்கப்பட்டிருந்தேன். ஒரு காலத்தில். ஹும்ம். அது ஒரு அழகிய நிலாக் காலம்.
பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.
சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.
கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.
ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.
ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.
பள்ளி படிக்கும்போதெல்லாம் இரவு ஏழரைக்கே சாமியாட ஆரம்பித்துவிடுவேன். எட்டும் மணிக்கெல்லாம் தூங்கி விடியற்காலை 5.30 அல்லது 6 மணிக்கு முழிப்பது வழக்கமாகவே இருந்தது. பரீட்சை நேரங்களில் மட்டும் 4.30 மணிக்கு எழுந்து ரிவைஸ் செய்வது வழக்கம். என்றைக்குமே அதிகம் படிச்சதில்லை. ப்ளஸ் டூவில் கணக்கிற்கு மட்டும் ட்யூஷன் போனேன். ட்யூஷன் முடியவே 7.30 ஆகிவிடும். அப்போ படுக்க செல்வது 9 அல்லது 9.30 என ஷிப்ட் ஆனது. காலேஜ் அட்மிஷன் ஸ்காலர்ஷிப்போடு கிடைத்த சந்தோஷத்தை கொண்டாட முடியாதபடி பேரிடியாக இருந்தது காலேஜ் டைமிங். 7.30 மணி முதல் 3.30 வரை காலேஜ். 7.30 மணி காலேஜுக்கு 6 மணிக்கு பஸ் வரும். அப்படியென்றால் நான் தினமும் 5 மணிக்கே எழ வேண்டும். சாயந்திரம் 3.30 மணிக்கு காலேஜ் விட்டாலும் வீடு வந்து சேர ஆறு மணிக்கு மேலாகிவிடும். நண்பர்களோடு விளையாட/ஊர்சுற்ற, ரெக்கார்ட், அசைன்மெண்ட் என முடித்து, கொட்டிக்கொண்டு படுக்க எப்படியும் பத்தாகிவிடும். எட்டு மணி நேர தூக்கத்துக்கு ஒரு மணி நேரம் குறைகிறதே என அம்மாவிடம் செமத்தியாக ஃபீல் பண்ணி அதை விட செமத்தியாக வாங்கிக் கட்டிக்கொள்வேன். பள்ளி முதற்கொண்டு அம்மா எங்களுடனே எழுந்துவிடுவார். டீ போட்டு கொடுத்து தூங்காமல் படிக்கும்படி பார்த்துக்கொள்வார். அதுவும் 2000த்தில் நானும் தம்பியும் முறையே ப்ளஸ் டூ, டெண்த் என இரண்டு பேருமே போர்ட் எக்ஸாம்க்கு அப்பியர் ஆனோம். அதனால் ஒருநாள் என்னுடனும் ஒரு நாள் அவனுடனும் உட்கார்ந்து காவல் காப்பார்கள். ஆ.வி/கு.மு/மங்.மலர் என ஏதாவது ஒன்றை அம்மாவும் புரட்டிக்கொண்டிருப்பார்கள்.

காலேஜ் படிக்கும்போது சனி ஞாயிறுகளில் மற்ற ஐந்து நாட்களுக்கும் சேர்த்து வைத்து தூங்குவேன். காலையில் பத்து வரை தூக்கம். பின்னர் அருமையான டிபன். பதினொன்றை வாக்கில் டீ. எண்ணைய் குளியல். மதியம் சாப்பாடு. ஒரு பெரிய குட்டித்தூக்கம். விளையாட/நண்பர்கள் வீட்டிற்கு/ அரிதாய் அம்மாவிற்கு ஏதேனும் உதவி. நைட் நோ டின்னர். டிவியில் ஏதாவது படம் பார்த்துவிட்டு மறுபடியும் தூக்கம். காலேஜ் முடியும் வரை இந்த ரொட்டீன் தொடர்ந்தது. பின்னர் வேலையில் சேர்ந்து ட்ரெயினிங் பீரியடில் கூட ஒன்னும் பெரிய டிஃபரென்ஸ் தெரியவில்லை. அரட்டை எல்லாம் க்ளாஸிலேயே முடிந்துவிடும்:) அதனால் பத்தரை பதினொன்றுகெல்லாம் தூங்கிவிடுவோம். என்ன காலை மட்டும் கொஞ்சம் அரக்க பரக்க எழுந்து கிளம்பனும். ப்ரொஜெக்ட் அலாகேட் ஆகி இரண்டாவது ஆபிஸ் மாற்றம் வந்த பிறகு தான் எல்லாம் தலைகீழாக ஆரம்பித்தன.
சில சமயங்களில் வீட்டுக்கு வரவே ஒரு மணியாகிவிடும். காலையில் லேட்டாய் போகலாமென்றால் ஆபிஸ் கேப் கிடையாது. MTCயில் நசுங்கி செத்துடுவோம் என்ற பயத்தில் மறுபடியும் காலையில் 8.30 மணிக்கெல்லாம் கேப் பிடிக்க ஓட வேண்டி வரும். வெள்ளிக்கிழமை நைட் ட்ரெய்ன் பிடித்து வீடு போய் சேர்ந்து தூங்க ஆரம்பித்தால் தூங்கிக்கொண்டே இருப்பேன். ஒரு முறை அம்மா நான் எவ்ளோ நேரம் தான் தூங்கறேன்னு பார்க்க காலை எழுப்பாமலேயே விட்டுவிட்டார்கள். அசராமல் தூங்கிக்கொண்டிருந்தவளை மதியம் சாப்பாட்டிற்கு எழுப்பியபோது மணி 2. எந்த விஷயத்திலும் என்னை கண்டிக்காத அப்பா இந்த விஷய்த்தில் மட்டும் லேசாக தட்டுவார். “பொம்பிள பிள்ளை காலைல இவ்ளோ நேரமா தூங்குவா?”. தூக்கத்துக்கு என்ன ஆம்பிளை/பொம்பிளை வேண்டியிருக்கு என்பேன். கல்யாணத்துக்கப்புறம் எப்படி இப்படி தூங்கறேன்னு பார்க்கிறேன் என்பார்.
கல்யாணம் ஆன பின்பு கொஞ்சம் பம்ம ஆரம்பித்தேன். வழக்கமான க.பி பம்மல்கள். சனி ஞாயிறுகளில் பாண்டியோ அல்லது அம்மா வீட்டிற்கோ பயணம் இருக்கும். அதற்கு விடியற்காலை எழுந்து பஸ் பிடிக்க வேண்டும். பின்னர் ஜூனியரை சுமந்திருந்தபோது அசுர தூக்கம் வரும். காலையில் 8.30 வரைக்குமாவது தூங்குவேன். என்னை எழுப்ப ரகு போராடுவார். அஞ்சு நிமிஷம் அஞ்சு நிமிஷம் என அரை மணி நேரம் தூங்குவேன். டாக்டரிடம் ரகு சொன்னது இன்னும் நினைவிருக்கிறது. “அநியாயத்துக்கு தூங்கறா டாக்டர். Is it normal?". Absolutely yes. அவங்களை தூங்க விட்டுடுங்க என்று டாக்டர் பாலை வார்த்தார்.
ஜூனியர் பிறந்து என் தூக்கத்திற்கு பெரிய ஆப்படித்தான். முதல் ஆறு மாதங்களுக்கு இரவில் ஒரு நிமிடம் கூட தூங்க மாட்டான். ஷிப்ட் போட்டுக்க்கொண்டு நான், அம்மா, அப்பா ஆகியோர் பார்த்துக்கொள்வோம். இரவு 6.30 மணிவாக்கில் விளையாட ஆரம்பித்து, துரை டயர்டாகி மறுநாள் காலை 5.30 அல்லது 6 மணிவாக்கில் தான் தூங்குவார். நைட் 12 வரை நான் பார்த்துக்கொள்வேன். பின்னர் 3 மணி வரை அம்மா. மீண்டும் அவன் தூங்கும் வரை நான். ஆறு மாதத்திற்கு பிறகு அவன் நைட் தூங்க ஆரம்பித்தாலும் டைமிங் பிரச்சனை. 11 மணிக்கு மேல் தான் தூங்கப்போவான். 2 வயது வரை நடு ராத்திரியில் பால் கரைத்துக் கொடுக்க எழுந்திருக்கனும். நிம்மதியான, தொடர்ச்சியான தூக்கமில்லாமல் போனது. எப்படா சனி ஞாயிறு எப்படா வரும் என இருக்கும். இருக்கிறது. வாரநாட்களில் 8.30 வரைக்கும் தூங்கும் ஜூனியர் சனி ஞாயிறுகளில் டாணென்று 6 மணிக்கு எழுந்து விடுவான்:( திரும்பவும் அவனை தூங்க வைப்பதற்குள் என் தூக்கம் பறந்திருக்கும்.
ஜூனியருக்கு ஸ்கூல் வேன் காலை 7.30க்கெல்லாம் வந்துவிடுகிறது. நான் 5.30க்கே எழவேண்டியிருக்கிறது. நைட் படுக்க 12 மணியாகிவிடுகிறது. வளைச்சு வளைச்சு தூங்கினல்ல அனுபவின்னு அப்பா கிண்டல் பண்றார். அதவிட கொடுமையா இந்த வாரத்துல மட்டும் ஸ்லீப்பிங் பொசிஷன் பத்தின அரதப் பழசான மெயில் பத்து தடவ ஃபார்வர்ட் பண்ணிட்டாங்க மக்கள். ஸ்பெஷலா எனக்காகவாம். அவ்வ்வ்வ்வ். இப்ப எதுக்கு இந்த சோகக் கதைன்னு கேக்கறவங்களுக்கு. என் சோகத்தை வேற எங்க சொல்லுவேன்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
சொந்தக் கதை,
மொக்கை
April 21, 2010
சென்னையின் மழைக்காலங்களில்...
கிட்டத்தட்ட 12 வருடங்களை வேலூர் வெயிலில் கரைத்த எனக்கு சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. வேலூரில் என்ன தான் கொளுத்தியெடுத்தாலும் கசகசப்பு இருக்காது. சென்னை நேரெதிர். கொஞ்சமே வெயிலடித்தாலும் கசகசவென எரிச்சல் படுத்திவிடும். என்றைக்குமே மழையில் நனைவதென்பது எனக்கு அறவே பிடிக்காது. டிரெஸ் நனைந்து, முடியெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு i hate it. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic).
இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.

அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.
ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.
பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)
இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.

அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.
ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.
பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்,
மழை
February 18, 2010
தீரா அவப்பெயர்
ஒவ்வொரு முறை நான் மறுக்கும்போதெல்லாம் நான் செய்த அந்த வரலாற்றுப் பிழையை சுட்டிக்காட்டி அவமானப்படுத்தப்படுகின்றேன். அப்படி என்ன பிழைன்னு கேக்கறீங்களா? இருங்க சொல்றேன். அது தெரிஞ்சுக்க நீங்க கொஞ்சம் என்னோட கால இயந்திரத்தில் ஏறி பின்னோக்கி ட்ராவல் பண்ணனும். சுமார் 8 வருடங்களுக்கு முன் நிகழ்ந்த "துயர" சம்பவம்.
2001ஆம் ஆண்டு (வரலாறு மிக முக்கியம்) பிளஸ் டூ முடித்து ரிசல்ட் பற்றிய கவலையில்லாமல் எண்டரன்ஸ் எக்ஸாம் தலைவலிகளுடன் போராடிக்கொண்டிருந்தோம். வாரம் மூன்று நாட்கள் குரூப் ஸ்டடி. அப்புறம் ஒரு நாள் முழுவதுமாய் ரிலாக்சேஷன் (அபிஷியலாய்). இந்த ரிலாக்சேஷன் நாளன்று யாராவது ஒரு நண்பர் வீட்டில் கூடி கும்மியடிப்போம். மோஸ்ட்லி ஒரு படம் பார்த்துவிடுவோம். சிடியோ இல்லை டிவியோ. அப்படி ஒரு முறை நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது (அல்லது பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தபோது) கவிதா அந்த யோசனையை சொன்னாள் (நாங்கள் என்பது நான், கவிதா, ஜெயா, பவி, பிரபா). வரலாற்றுப் பிழைக்கான முதல் விதை. என்ன யோசனையென்றால் அப்போது ரிலிசாகி ஒ(ட்)டிக்கொண்டிருந்த அந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதென்று. சாம்பிள் பேப்பருள் புதையுண்டிருந்த நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். Movie in theatre. That too with friends. Sounded great. ஆனால் வீட்டில் பர்மிஷன் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாய் தோன்றியது. யார் யார் பெற்றோரிடம் பரிந்து பேசி ஓகே பெறுவது என சார்ட் போடப்பட்டது. பிரபா வீட்டில் அவள் கசின் கல்யாணத்தை காரணம் காட்டி கறாராய் அனுமதி மறுக்கப்பட்டது (தப்பித்துவிட்டாள்).
அப்பவே அண்ணா அந்தப் படமா என இழுத்தார்கள். எனக்கு அந்த நடிகர் மீது பெரிய அபிமானம் ஏதுமில்லை. எனக்கு எப்பவுமே கமல்ஹாசன் தான். எப்பவாவது ஆமிர்கான். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் ரிவ்யூக்களை பெரிதாய் மதிப்பதில்லை/படிப்பதில்லை. அந்த கறுப்பு ஞாயிறு இன்னும் நினைவில். தனித்தனியாய் போனால் வெயிட்டிங் பிராப்ளம் வருமென்பதாலும், தியேட்டரில் மற்றவர்களின் பார்வையை சமாளிக்க வேண்டியும் நால்வரும் முத்துக்கடையில் சந்தித்துவிட்டு சேர்ந்தே தியேட்டருக்கு போவதென்றும் முடிவாகியது. பஸ்சில் கண்டக்டர் சில்லறை இல்லைன்னா இறங்கிடுங்க என்று முதல் பிரச்சனையை துவக்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என புரிந்து அப்போதே அப்பீட் ஆகியிருக்கனும். விதி யாரைவிட்டது. வாங்கடி வாங்க என வலைவிரித்தது தெரியாமல் போய்விட்டது.
சில்லறை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ் பிடித்து தியேட்டருக்குள் நுழைவதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யார் க்யூவில் நின்று டிக்கெட் வாங்குவதென்ற பெருங்குழப்பத்தை நொடியில் தீர்த்து பவி டிக்கெட் வாங்கினாள். இரண்டாவது பல்பாக வந்திருந்த கொஞ்ச நஞ்ச பெண்களில் தனியாக வந்தது நாங்கள் நால்வர் தான். மொத்த தியேட்டரில் பெண்கள் எண்ணிக்கை ஆறோ ஏழோ தான். We didnt bother though. உள்ளே சென்று வரிசை தொடக்கத்திலிருந்து அமர்ந்தோம். ஜெயாவின் பக்கத்தில் ஒரு சீட் காலியாகவே இருந்தது. ஜெயா என்னை என்ன என்பது போல் பார்த்தாள். நான் ரியாக்ட் செய்வதற்குள் படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு படத்தை சென்சார் சர்ட்டிபிகேட்டிலிருந்து பார்த்தால் தான் திருப்தியாகிறது.
ஆரம்பமே திகிலாயிருந்தது. படத்தின் முதல் நொடியிலிருந்து ஆரம்பித்த அதிர்ச்சி படம் முடியுறவரைக்கும் தொடருமாறு டைரக்டர் பார்த்துக்கொண்டார். ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள். இண்டர்வெலில் போய்விடலாம் என்ற என் கோரிக்கை டிக்கெட் விலையையும், மற்ற நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு (குறிப்பாய் பசங்க. கலாட்டா பண்ணிவிடுவார்கள்) ஆளாவோம் என்ற அபத்த காரணத்தையும் காட்டி ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஹீரோவின் மீதான கோவத்தை பாப்கார்ன், குட்டி சமோசா, வீல் சிப்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டு தீர்த்தோம். செகண்ட் ஹாஃப்பில் அப்பா கேரக்டர் சூப்பராய் எழவைக் கூட்டினார். அதைவிட அவர் ஜோடி. மேக்கப் போட்டாலே அவிங்க ஆண்ட்டி மாதிரி தான் இருப்பாங்க. இதில மேக்கப் இல்லாம வேற க்ளோசப்லலாம் வந்து கலங்கடிச்சாங்க. ஒவ்வொரு பாடலின்போது பேய் படம் பார்ப்பது மாதிரி கையால் முகத்தை மூடி விரலிடுக்கு வழியாகவே பார்த்தேன்(தோம்). க்ளைமேக்ஸ் வந்தப்புறமும் ஒரு டூயட் பாட்டு. எக்ஸ்ட்ரா லார்ஜ் வயிறோடு ஹீரோ ஹீரோயின் ஆடியபோது அழுவதா சிரிப்பதா எனத் தெரியாத பரவச நிலையில் இருந்தோம். கோர்ட்டில் ஹீரோ பேசும் வசனங்கள். முடியலடா சாமீ.
மூன்று விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. ஒன்று தலைவலிக்கு குறைந்தது 2 சாரிடானாவது வேண்டும். ரெண்டு தெரிஞ்சவங்க எல்லாம் கிண்டல் பண்ணியே சாவடிக்கப்போறாங்க. மூன்றாவது இந்தப் படம் என சஜெஸ்ட் செய்த கவிதா மரண அடி வாங்கப்போவது. மூன்றுமே கனஜோராய் நடந்தது. "வெற்றிப் படம் பார்த்த வீராங்கனைகள் பராக் பராக் பராக்" என கோச்சிங் கிளாசில் நுழைந்தபோது கத்தி கலாட்டா பண்ணார்கள். படம் பார்த்த எஃபெக்ட் மூன்று நாள் குரூப் ஸ்டடியைத் தவிர்த்தோம். உறவுகள் நட்புகள் என அனைவரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானோம். என்னை கிண்டல் செய்தவர்கள் எல்லாரும் அந்தப் படத்தை ட்ரேய்லரோடு நிறுத்திவிட்டார்கள் என்பது கூடுதல் செய்தி.
அதற்கு அப்புறம் எவ்வளவோ சூரை மொக்கைப் படங்களை (இந்த லிஸ்டில் ஒண்டிப்புலியின் ஆதி. ஷப்பா. ஜுரமே வந்திருச்சு) நண்பர்களுடன் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது கூட அந்தப் படத்தின் காட்சியோ, பாடலோ டிவியில் பார்க்க நேரிட்டால் ரூமிற்கு சென்று ஒளிந்துகொள்கிறேன். ஹைலைட்டாக சென்ற வாரம் "The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. "சுத்த போர்ண்ணா. நான் தூங்கப் போறேன்" என்றவளைப் பார்த்து கோரசாக அண்ணாவும் தம்பியும் "சிட்டிசன் படத்தையே தியேட்டர்ல பார்த்தவ நீ. இது போரடிக்குதா" என்றார்கள்.
ஹூம். என்று தான் நீங்குமோ இந்த அவப்பெயர்:(
2001ஆம் ஆண்டு (வரலாறு மிக முக்கியம்) பிளஸ் டூ முடித்து ரிசல்ட் பற்றிய கவலையில்லாமல் எண்டரன்ஸ் எக்ஸாம் தலைவலிகளுடன் போராடிக்கொண்டிருந்தோம். வாரம் மூன்று நாட்கள் குரூப் ஸ்டடி. அப்புறம் ஒரு நாள் முழுவதுமாய் ரிலாக்சேஷன் (அபிஷியலாய்). இந்த ரிலாக்சேஷன் நாளன்று யாராவது ஒரு நண்பர் வீட்டில் கூடி கும்மியடிப்போம். மோஸ்ட்லி ஒரு படம் பார்த்துவிடுவோம். சிடியோ இல்லை டிவியோ. அப்படி ஒரு முறை நாங்கள் படித்துக்கொண்டிருந்தபோது (அல்லது பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தபோது) கவிதா அந்த யோசனையை சொன்னாள் (நாங்கள் என்பது நான், கவிதா, ஜெயா, பவி, பிரபா). வரலாற்றுப் பிழைக்கான முதல் விதை. என்ன யோசனையென்றால் அப்போது ரிலிசாகி ஒ(ட்)டிக்கொண்டிருந்த அந்த படத்தை தியேட்டரில் போய் பார்ப்பதென்று. சாம்பிள் பேப்பருள் புதையுண்டிருந்த நாங்கள் கொஞ்சம் நிமிர்ந்து உட்கார்ந்தோம். Movie in theatre. That too with friends. Sounded great. ஆனால் வீட்டில் பர்மிஷன் வாங்குவது கொஞ்சம் கஷ்டமாய் தோன்றியது. யார் யார் பெற்றோரிடம் பரிந்து பேசி ஓகே பெறுவது என சார்ட் போடப்பட்டது. பிரபா வீட்டில் அவள் கசின் கல்யாணத்தை காரணம் காட்டி கறாராய் அனுமதி மறுக்கப்பட்டது (தப்பித்துவிட்டாள்).
அப்பவே அண்ணா அந்தப் படமா என இழுத்தார்கள். எனக்கு அந்த நடிகர் மீது பெரிய அபிமானம் ஏதுமில்லை. எனக்கு எப்பவுமே கமல்ஹாசன் தான். எப்பவாவது ஆமிர்கான். அப்போதெல்லாம் பத்திரிகைகளில் வரும் ரிவ்யூக்களை பெரிதாய் மதிப்பதில்லை/படிப்பதில்லை. அந்த கறுப்பு ஞாயிறு இன்னும் நினைவில். தனித்தனியாய் போனால் வெயிட்டிங் பிராப்ளம் வருமென்பதாலும், தியேட்டரில் மற்றவர்களின் பார்வையை சமாளிக்க வேண்டியும் நால்வரும் முத்துக்கடையில் சந்தித்துவிட்டு சேர்ந்தே தியேட்டருக்கு போவதென்றும் முடிவாகியது. பஸ்சில் கண்டக்டர் சில்லறை இல்லைன்னா இறங்கிடுங்க என்று முதல் பிரச்சனையை துவக்கினார். முதல் கோணல் முற்றிலும் கோணல் என புரிந்து அப்போதே அப்பீட் ஆகியிருக்கனும். விதி யாரைவிட்டது. வாங்கடி வாங்க என வலைவிரித்தது தெரியாமல் போய்விட்டது.
சில்லறை மாற்றிக்கொண்டு அடுத்த பஸ் பிடித்து தியேட்டருக்குள் நுழைவதற்குள் டிக்கெட் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். யார் க்யூவில் நின்று டிக்கெட் வாங்குவதென்ற பெருங்குழப்பத்தை நொடியில் தீர்த்து பவி டிக்கெட் வாங்கினாள். இரண்டாவது பல்பாக வந்திருந்த கொஞ்ச நஞ்ச பெண்களில் தனியாக வந்தது நாங்கள் நால்வர் தான். மொத்த தியேட்டரில் பெண்கள் எண்ணிக்கை ஆறோ ஏழோ தான். We didnt bother though. உள்ளே சென்று வரிசை தொடக்கத்திலிருந்து அமர்ந்தோம். ஜெயாவின் பக்கத்தில் ஒரு சீட் காலியாகவே இருந்தது. ஜெயா என்னை என்ன என்பது போல் பார்த்தாள். நான் ரியாக்ட் செய்வதற்குள் படம் போட ஆரம்பித்துவிட்டார்கள். எனக்கு படத்தை சென்சார் சர்ட்டிபிகேட்டிலிருந்து பார்த்தால் தான் திருப்தியாகிறது.
ஆரம்பமே திகிலாயிருந்தது. படத்தின் முதல் நொடியிலிருந்து ஆரம்பித்த அதிர்ச்சி படம் முடியுறவரைக்கும் தொடருமாறு டைரக்டர் பார்த்துக்கொண்டார். ஹீரோவுக்கு அப்பா மகன் (மாக்கான்) என இரட்டை வேடங்கள். இண்டர்வெலில் போய்விடலாம் என்ற என் கோரிக்கை டிக்கெட் விலையையும், மற்ற நண்பர்களின் கேலிப்பேச்சுக்கு (குறிப்பாய் பசங்க. கலாட்டா பண்ணிவிடுவார்கள்) ஆளாவோம் என்ற அபத்த காரணத்தையும் காட்டி ரிஜெக்ட் செய்யப்பட்டது. ஹீரோவின் மீதான கோவத்தை பாப்கார்ன், குட்டி சமோசா, வீல் சிப்ஸ் மற்றும் கோக் சாப்பிட்டு தீர்த்தோம். செகண்ட் ஹாஃப்பில் அப்பா கேரக்டர் சூப்பராய் எழவைக் கூட்டினார். அதைவிட அவர் ஜோடி. மேக்கப் போட்டாலே அவிங்க ஆண்ட்டி மாதிரி தான் இருப்பாங்க. இதில மேக்கப் இல்லாம வேற க்ளோசப்லலாம் வந்து கலங்கடிச்சாங்க. ஒவ்வொரு பாடலின்போது பேய் படம் பார்ப்பது மாதிரி கையால் முகத்தை மூடி விரலிடுக்கு வழியாகவே பார்த்தேன்(தோம்). க்ளைமேக்ஸ் வந்தப்புறமும் ஒரு டூயட் பாட்டு. எக்ஸ்ட்ரா லார்ஜ் வயிறோடு ஹீரோ ஹீரோயின் ஆடியபோது அழுவதா சிரிப்பதா எனத் தெரியாத பரவச நிலையில் இருந்தோம். கோர்ட்டில் ஹீரோ பேசும் வசனங்கள். முடியலடா சாமீ.
மூன்று விஷயங்கள் தெளிவாய்த் தெரிந்தன. ஒன்று தலைவலிக்கு குறைந்தது 2 சாரிடானாவது வேண்டும். ரெண்டு தெரிஞ்சவங்க எல்லாம் கிண்டல் பண்ணியே சாவடிக்கப்போறாங்க. மூன்றாவது இந்தப் படம் என சஜெஸ்ட் செய்த கவிதா மரண அடி வாங்கப்போவது. மூன்றுமே கனஜோராய் நடந்தது. "வெற்றிப் படம் பார்த்த வீராங்கனைகள் பராக் பராக் பராக்" என கோச்சிங் கிளாசில் நுழைந்தபோது கத்தி கலாட்டா பண்ணார்கள். படம் பார்த்த எஃபெக்ட் மூன்று நாள் குரூப் ஸ்டடியைத் தவிர்த்தோம். உறவுகள் நட்புகள் என அனைவரின் கேலிப்பேச்சுக்கும் ஆளானோம். என்னை கிண்டல் செய்தவர்கள் எல்லாரும் அந்தப் படத்தை ட்ரேய்லரோடு நிறுத்திவிட்டார்கள் என்பது கூடுதல் செய்தி.
அதற்கு அப்புறம் எவ்வளவோ சூரை மொக்கைப் படங்களை (இந்த லிஸ்டில் ஒண்டிப்புலியின் ஆதி. ஷப்பா. ஜுரமே வந்திருச்சு) நண்பர்களுடன் பார்த்துவிட்டேன். ஆனால் இந்தப் படத்தினால் ஏற்பட்ட தாக்கம் இன்றளவும் நீடிக்கிறது. இப்போது கூட அந்தப் படத்தின் காட்சியோ, பாடலோ டிவியில் பார்க்க நேரிட்டால் ரூமிற்கு சென்று ஒளிந்துகொள்கிறேன். ஹைலைட்டாக சென்ற வாரம் "The Curious Case of Benjamin Button" பார்க்க அமர்ந்தோம். அரைமணிநேரத்திற்கு மேல் முடியவில்லை. "சுத்த போர்ண்ணா. நான் தூங்கப் போறேன்" என்றவளைப் பார்த்து கோரசாக அண்ணாவும் தம்பியும் "சிட்டிசன் படத்தையே தியேட்டர்ல பார்த்தவ நீ. இது போரடிக்குதா" என்றார்கள்.
ஹூம். என்று தான் நீங்குமோ இந்த அவப்பெயர்:(
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்,
மொக்கை
January 18, 2010
காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்
பொங்கல் பொங்கித் தின்னு, கட்டு கட்டா கரும்பு கடிச்சு (விக்னேஷ்வரி அழாதீங்க) டயர்டா படுத்தா, மறுநாள் அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுப்பி காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்க சொல்லி ஒரே அடம். காலம் காலமா தொடர்ந்து செய்யற இந்த சேவையை??!! இந்த வருடமும் பண்ணியாச்சு. தீபாவளில காசு கரியாகற மாதிரி இல்லாம பொங்கல் போது வசூல் சூப்பரா இருக்கும். அதுவும் காணும் பொங்கல் அன்னிக்கு கால்ல விழுந்தா காசு. ஸ்ட்ரிக்ட்லி ஃபார் லேடீஸ்:)
எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.
காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.
பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.
க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)
எல்லா பண்டிகையும் க.மு க.பின்னு ரெண்டு வகைப்படும். கல்யாணத்துக்கு முன்னால குளிச்சோமா, போட்டத தின்னோமான்னு ஜம்முன்னு போச்சு. கல்யாணத்துக்கப்புறம் ஏதோ பொறுப்பு வந்துட்டாப்புல (நெஜமாவே பொறுப்பா இல்ல ஸீனாங்கறத மூணு வருஷமாகியும் கண்டுபிடிக்க முடியாம கஷ்டப்படுறேன்) பாதி வேலைய பண்றது (அ) ஒத்தாசை பண்றது. மூணு வருஷமா கத்துக்கறேன்னு சொல்லியே காய்கறி நறுக்கறது, தேங்காய் கீறறதுன்னு எடுபுடி வேலைலயே ஓட்டிக்கிட்டிருக்கேன். க.முல பொங்கலன்னிக்கு தலைவாழை இலைல சர்க்கரைப் பொங்கல், தயிர் பச்சடி, வடை, சர்க்கரைவள்ளிக் கிழங்கு பொரியல், பரங்கிக்காய் பொரியல், சௌசௌ கூட்டு, முருங்கைக்காய் சாம்பார், பருப்பு ரசம், தாளிச்ச மோர் மெனுவப் போட்டுடுவாங்க (வாழை இலைல ரசம் சாதம் சாப்பிடற கலைய இன்னும் கத்துக்காம கஷ்டப்படறது வேற விஷயம்). க.பில கிடைக்கிற காயெல்லாம் போட்டு கூட்டுக்கு ஏதோ ஒரு உறவுபோல சாம்பார், சர்க்கரைப் பொங்கல், பச்சடி, ரசம், வடை. மூணு வருஷமா மாமியாரும் உங்கம்மா வீட்டு வழக்கமென்னன்னு கேட்டுட்டே இருக்காங்க. நானும் சொல்லிட்டே இருக்கேன். மறைமுகமா அதெல்லாம் மறந்துரு. இனி இதான் பொங்கல் மெனுன்னு சொல்றா மாதிரியே இருக்கு.
காலைல 4 மணிக்கே எந்திரிச்சு காலைக்குள்ள சமையல முடிச்சு, பொங்கப் பானைல பாலோடு அரிசி, பருப்பு, வெல்லம் போட்டு பொங்கும்போது குடும்பத்தோடு பொங்கலோ பொங்கல்ன்னு சவுண்டு விடறது வழக்கம். திண்ணை/வராண்டா சேர்ல ஒரு காலை கீழே தொங்கவிட்டு, இன்னொரு காலை மடிச்சு வச்சு உட்கார்ந்து கரும்ப மெல்ற சொகமே தனி. கீழே ஒரு நியூஸ்பேப்பர பரத்தி வச்சு அதுல சக்கைய சேமிச்சு??!! பின்னால கொளுத்தி அதுல பிஞ்சு மக்காச்சோளத்த வாட்டி திம்பது வழக்கம். இது க.முல. க.பில பேருக்கு கொஞ்சம் சாப்பிட்டு அதை குப்பைத்தொட்டியில போடும்போது, இப்படி நடந்துகொள்வது, நம்ம மரியாதைய காப்பாத்திக்கவா? இல்ல அவங்களுக்கு தர்ற மரியாதையா? இல்ல நல்ல பொண்ணு இமேஜான்னு தெரியல. என் இயல்பு தொலைவதெதனால்ன்னும் தெரியல. இந்த தடவை தை மாசம் மதியம் தான் பொறந்ததால ஆற அமர மாமியாரோட அரட்டை அடிச்சுகிட்டே பொறுமையா சமையல் முடிச்சு பொங்கல் பொங்கி சாப்பிட்டப்போது மனி சாயந்திரம் 4.30. எல்லா பண்டிகையும் சாயந்திரமே கொண்டாடினால் எவ்ளோ ரிலாக்ஸ்டா சமைக்கலாம்ங்கறது ரெண்டு பேரோட பேராசையாவே இருந்தது. மறுநாள் காணும் பொங்கல்.
பொங்கலன்று பண்ண சர்க்கரைப் பொங்கல், சாம்பார், பொரியல், கூட்டு, சாதம் எல்லாத்தையும் கொஞ்சம் கொஞ்சம் சாம்பிளுக்கு எடுத்து தனியா வச்சிருவாங்க. இதுல சாம்பார், பொரியல், கூட்டு எல்லாத்தையும் போட்டு ஒன்னா கொதிக்க வெச்சு எரிச்ச கூட்டு ஆக்கிடுவாங்க (சாம்பார மட்டும் ரிப்பேர் பண்னி நைட் சாப்பிடற மேட்டர் ஒன்னு இருக்கு. அப்புறமா வேற பதிவுல அதப் பத்தின ரெசிபி தர்றேன்). அப்புறம் வெறும் சாதத்தில மஞ்சள் தூள், குங்குமம் போட்டு பிசைஞ்சு கலர் கலரா சாதம் பண்ணிப்பாங்க. அர்த்த ராத்திரி ஆறு மணிக்கெல்லாம் எழுந்து கணு வைக்கப் போகனும். க.முல காஞ்சிபுரம், மதுராந்தகம், வாலாஜாவில் வசித்த வீடுகளில் தோட்டமிருந்தது. அதனால தோட்டதிலேயே கோலம் போட்டு (நான் இப்பவும் வேடிக்கப் பார்த்து) மஞ்சள் கொத்தின் இலைய பரப்பி வச்சு கணு வைக்கனும். முதல்ல சர்க்கரைப் பொங்கல். அப்புறம் மஞ்சள் சாதம். அப்புறம் சிகப்பு சாதம். எரிச்ச கூட்டு. இப்படி எல்லாத்தையும் வரிசையா, அழகா "காக்கா பிடி வெச்சேன். கணுப் பிடி வெச்சேன். காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம்"ன்னு சொல்லிக்கிட்டே வைக்கனும் (சத்தியமா ஏன்னு தெரியாது). அப்புறம் தேங்காய் உடைச்சு, கற்பூரம் காமிச்சுட்டா முடிஞ்சுது. இந்த தடவை மாமியார் "தம்பி நல்லாருக்கனும்னு வேண்டிக்கிட்டு சாமியக் கும்பிடும்மா"ன்னு சப் டைட்டில் ஓட்டினாங்க (உடன்பிறப்பு நல்லாருந்தா தான் சீர் நல்லா வரும்லன்னு கிரிமினலா யோசிச்சோம்ல). முந்தின நாள் வாங்கின மஞ்சள் கிழங்கை பெரியவங்க கிட்ட (இதுவும் லேடிஸ் ஒன்லி. கல்யாணமானவங்கன்னா வூட்டுக்காரர் செய்யலாம்) கொடுத்து நெத்தில, கன்னத்துல எல்லாம் தேய்க்க சொல்லி கால்ல விழுனும் (நோ. காசு இப்ப தரமாட்டாங்க). அப்பால குளிச்சிட்டு வந்து மறுபடியும் கால்ல விழுந்தா துட்டு மாமே. துட்டு. "என்னா மாமா. ஒரு ஸ்கூல் ஹெட்மாஸ்டர் வெறும் 100 ரூபாயா தர்றது"ன்னு உசுப்பேத்தி உசுப்பேத்தியே உண்டியல ரொப்பிடுவோம். ஏற்கனவே சொன்னா மாதிரி இந்த வருஷம் கலெக்ஷன் செம டல். 3000 ரூபாய், ஒரு டிசைனர் சல்வாரோட நின்னுடிச்சு. க.பில இந்த டெக்னிக் வொர்க் அவுட் பண்றதுக்கு ரொம்ப தயக்கமா இருக்கு. ஏதோ அவங்களா பார்த்து கொடுத்து தான் உண்டு.
க.மு பொங்கலுக்கும் க.பி பொங்கலுக்கும் நிறைய வித்தியாசம் இருந்தாலும் காக்காக்கும் குருவிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறது மட்டும் மாறாம நடந்துக்கிட்டே இருக்கு. அடுத்த பொங்கலுக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி வச்ச காக்கா குருவியெல்லாம் எப்படி இருக்குன்னு பார்க்கனும்:)
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்,
பொங்கல்
September 17, 2009
ஓரம் போ..
நடை வண்டி, மூன்று சக்கர சைக்கிள், உயரம் கம்மியான இரண்டு சக்கர சைக்கிள், லெக் ஸ்கூட்டர் என ஜூனியரின் வாகனங்கள் வேகமாக மாறிக்கொண்டேயிருக்கின்றன அவன் வளர்ச்சியை போல். எனக்கு நடைவண்டி ஓட்டிய ஞாபகம் இல்லை. தம்பியைப் பின்னாடி உட்காரவைத்துக்கொண்டு மூன்று சக்கர சைக்கிள் ஓட்டியது நினைவிருக்கிறது. அப்புறம் கொஞ்சம் உயரம் கம்மியான, இரண்டு பக்கமும் பேலன்ஸுக்கு வீல் இருக்கும் வாடகை சைக்கிள் ஓட்டியதும் நினைவிருக்கிறது. நான் முதன் முதல் சைக்கிள் கற்றுக்கொண்டது காஞ்சிபுரத்தில் இருந்தபோது. "எப்பதான் பெரிய சைக்கிள் கத்துக்க போற?" என மாமா பெண், மாடி வீட்டு ஷீலாவின் சைக்கிளை கடன் வாங்கி ஒட்டக் கற்றுத்தருகிறேன் என முதுகில் மாத்திக்கொண்டிருந்தாள். ஹூம் அவளுக்கு என்ன கோவமோ? அது வரை குரங்குப் பெடல் அடித்துக்கொண்டிருந்த நான் ஓரளவுக்கு ஓட்டக் கற்றுகொண்டேன். ஒட்டமட்டும்தான் கத்துக்கொடுத்தாளே தவிர ஏறவோ இறங்கவோ கற்றுக்கொடுக்கவில்லை. பிளாட்பார்மில் சைக்கிளை சாய்த்து நானே ஏறக்கற்றுக்கொண்டேன். இறங்குவது பெரும்பாடாக இருந்தது. நல்ல மொட்டை வெயிலில், புதிதாகப் போட்ட தார் ரோட்டில், வண்டியோடு விழுந்து, கை முட்டி கால் முட்டி எல்லாம் பேந்து, ஆயுதப் படை காவலர் உதவியுடன் வீடு வந்து சேர்ந்தேன். அதுக்கப்புறம் பிராக்டீஸ்??!! பண்ணி பிரேக் போட்டவுடன் தொபுக் என கீழே குதிக்கும் அளவிற்கு வந்தேன்.
வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.
பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.
எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.
பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.
வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)
வாலாஜாவிற்கு குடிவந்தபிறகு சைக்கிள் உபயோகிக்கும் வாய்ப்பே கிட்டவில்லை. எட்டாவது லீவில் அப்பா ஒரு லேடி பேர்ட் வாங்கித் தந்தார். அதுகூட ஹவுசிங் போர்டில் ஓட்ட மட்டுமே வாய்ப்பு. கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து NHஇல் ஓட்ட வேண்டியதிருந்தது. அதுவும் ரொம்ப விபத்துகள் நடக்கும் இடம் என்பதால் அம்மாக்கு சுத்தமாய் இஷ்டம் இல்லை. மேத்ஸ் ட்யூஷன் முடித்து வர 8 மணி ஆகிவிடும். நண்பர்களோடு அரட்டை அடித்துக்கொண்டே மெதுவாக ஓட்டிக் கொண்டு வருவோம். ஒரு நாள் முதல் முறையாக லாரியை ஒவர்டேக் பண்ணேன் (ஹி ஹி நின்றுக்கொண்டிருந்த லாரி என நான் சொல்லாமலே உங்களுக்கு புரிந்திருக்கும்). அதைக்கூட லெப்ட் சைடில் பண்ணியதை KB கிளாஸ்மேட்ஸிடம் சொல்லி அவர்கள் கிண்டல் பண்ண ஒரே ரகளை. கொஞ்ச நாளிலேயே பெரிய ப்ரொபெஷனலாகி விட்டேன்.
பத்தாவது படிக்கும்போது ஸ்கூட்டர் பழக வேண்டுமென்ற ஆசை வந்தது. அப்பாவிடம் இருந்தது ராயல் என்பீஃல்ட். அதை தாங்கிப் பிடிப்பதை யோசிக்கும் தெம்புக்கூட இல்லை. அந்த வருடம் ஊருக்கு போனபோது பெரியம்மாவிடம் கெஞ்சி அண்ணாவை வண்டி ஓட்டக் கத்துகொடுக்க சம்மதம் வாங்கினேன். பெரியம்மாவோட கண்டிஷன் "குழந்தையை அடிக்காம, திட்டாம ஓட்ட சொல்லிக்கொடு. துளி கீறல் விழுந்தாலும் தொலைச்சுடுவேன்" என அண்ணாவை மிரட்டி அனுப்பிவைத்தார். தெருவிலிருந்த நாய், கோழியையெல்லாம் தெறிக்கவிட்டு, மெயின் ரோட்டிற்கு வருவதற்க்கு எனக்கு ஒரு வருடம் ஆயிற்று. அடுத்த லீவு எப்படா வரும் என காத்துக்கிடப்பேன். கள்ளக்குறிச்சி - சேலம் மெயின் ரோடில் பயிற்சி. ஒரு தடவை அண்ணாவிடம் கெஞ்சியே ஆத்தூர் வரை போனேன். சரியான கைவலி. ரிடர்ன் அண்ணா ஓட்டிக்கொண்டு வந்தார்.
எவ்வளவு நாள் தான் அண்ணாவை வைத்துக்கொண்டே ஓட்டிப் பழகுவது? தனியே ஓட்டத்தீர்மானித்து வண்டியை எடுத்தேன். எல்லாருக்கும் சிங்கிள்ஸ் ஈசியா பழகிரும். லோடு வச்சு ஓட்றது கஷ்டமா இருக்கும். என் நிலைமை டாப்ஸி டர்வி. தனியே ஓட்டுவது பிரம்மபிரயத்தனமாய் இருந்தது. இங்கேயும் சட்டென்று பிரேக் அடித்து பேலன்ஸ் செய்வது பெரும்பாடாய் இருந்தது. எலக்ட்ரிக் கம்பம், குப்பைத் தொட்டி இவையெல்லாம் தான் என் பார்க்கிங் ஸ்பாட். வண்டியைப் போட்டுவிட்டு சாவியை மட்டும் எடுத்துக்கொண்டு வந்துவிடுவேன். திட்டிக்கொண்டே அண்ணா போய் வண்டியை எடுத்துவருவார். ஒரு முறை வேகமாக வருகையில் குறுக்கே பாய்ந்த கோழியைக் காப்பாற்ற திருப்பியதில் வண்டி பார்க் ஆன இடம் மழைநீர் குட்டை. அப்படியே வீட்டுக்குப் போக மனமில்லாமல், பக்கத்திலிருந்த கல்லின் மேல் உட்கார்ந்துவிட்டேன். ரொம்ப நேரமாய் ஆளே காணோமே எனத் தேடிக்கொண்டு வந்த அண்ணாவைப் பார்த்ததும் ஒரே அழுகை.
"அழாதடா குட்டி. கீழே விழுந்தியா? ரொம்ப அடியா?"
"ம்ம்ம்ம்"
"சரி வா. வண்டி எங்க?"
"ம்ம்ம்ம். இங்கதான்"
"இங்க எங்கடி? காணோமே?"
"இந்தா இந்தக் குட்டைக்குள்ள"
"அறிவிருக்காடி உனக்கு. குட்டி சாத்தான். இவ்ளோ நேரமாய் வண்டி உள்ளாற கிடக்குதே. விழுந்தபோதே வந்து சொல்லித்தொலைய வேண்டியதுதானே?"
அவ என்னடா பண்ணுவா பாவம். நீ ஒழுங்கா இறங்க சொல்லிக்கொடுக்கலை என்ற பாட்டோடு என்னை அழவைத்ததற்காக எக்ஸ்ட்ராவாக திட்டுக் கிடைத்தது. ப்ளஸ் டூவில் நல்ல மார்க் எடுத்தால் ஸ்கூட்டி வாங்கித் தருகிறேன் என்றார் அப்பா. நண்பனின் டிவிஎஸ் 50 ஓட்டி மணலில் ஸ்கிட்டாகி கீழே விழுந்து முதுகில் அடி. லிகமண்ட் டேர் என ஒரு மாசம் வீட்டில் படுக்க வைத்து விட்டார்கள். அதுக்கப்புறம் வண்டி என்றாலே துரத்தி துரத்தி அடிதான்.
பல வருடங்கள் கழித்து டூ வீலர் நமக்கு ராசியில்லை என என் பார்வையை கார் பக்கம் திருப்பினேன். அப்பாவிடம் கேட்டதுக்கு எரித்து விடுவது போல் பார்த்தார். ஒருவழியாய் அப்பாவை சம்மதிக்க வைத்து நான் கார் டிரைவிங் கற்றுக்கொண்டபோது ஜூனியர் பிறந்து இரண்டு மாதம் ஆகியிருந்தது. இஸ்மாயில் அங்கிள் காலில் விழாத குறையாக கெஞ்சி கூத்தாடி வண்டியைக் கரெக்ட் பண்ணி கற்றுக்கொண்டேன். "60க்கு மேல போகாத பாப்பா. அப்பாக்கு தெரிஞ்சா திட்டுவாரு." என அங்கிள் அடிக்கடி கூறுவார். கற்றுக்கொள்ள ஆரம்பித்த புதிதில் "பிரேக் போடு பாப்பா" என அவர் கத்திக்கொண்டிருந்த போது "இருங்க அங்கிள் அதைத்தான் தேடிக்கிட்டிருக்கேன்" என அங்கிளை டெரராக்கியிருக்கேன். இது வேலைக்காவது என நினைத்தவர், ட்ரைவிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார். அங்கே என்னை விட டெரராய் நிறைய பேர். "ஹால்ஃப் கிளட்ச் கொடுப்பா" என இண்ஸ்டரக்டர் சொன்னால் "அது எங்க சார் இருக்கு" என்றான் இன்னொருவன். ஒரு வழியாய் நானும் லைசென்ஸ் எடுத்துட்டேன்.
வண்டி இல்லை. ஆனால் LMV லைசென்ஸ் வைத்துக்கொண்டு நான் விடும் அலப்பறை தாங்காமல் ரகு வண்டி வாங்கித் தர சம்மதித்துள்ளார். ஸ்கூட்டி ஸ்ட்ரீக் என் சாய்ஸ். அவர் கைனடிக் ஹோண்டாவில் நிற்கிறார். இன்னும் பைனலைஸ் பண்ணவில்லை. எதுவானாலும் டூ வீலரில் "L" போர்ட் மாட்டினால் எப்படியிருக்கும் என யோசித்துக்கொண்டிருக்கிறேன்:)
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்
September 2, 2009
காத்திருந்து காத்திருந்து
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போனதடி...
இந்த வரிகளை நம் வாழ்க்கையில் ஏதாவதொரு தருணத்தில் பாட வேண்டியதாயிருக்கிறது. சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது. வர வர என் நிலைமை இந்த மூன்றாவது கேட்டகிரியில் வந்து தொலைகிறது.
எங்கும் காத்திருத்தல் எதிலும் காத்திருத்தல் என்று வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் மட்டும் ஏன் இப்படி? என கேட்குமளவிற்கு கடுப்பாய் இருக்கிறது. மாமனாரை மருத்துவமனைக்கு செக்கப்புக்கு அழைத்துச் செல்ல பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். கரெக்டாக பத்தேமுக்காலுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்தோம் (என் மாமனார் என்னை விட பங்க்சுவல்).எல்லாரையும் பார்த்து முடித்துவிட்டு டாக்டர் மாமனாரை செக்கப் செய்தபோது மணி 1.30. நடுவே இரண்டு முறை ரிசப்ஷனில் போய் கேட்டுவிட்டு வந்ததுக்கு "இல்ல மேடம். டிரசிங் கேசெல்லாம் டாக்டர் கடைசியா தான் பார்ப்பார்" என்றார்கள். அத அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போதே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே என கேட்டுவிட்டு வந்தேன். எரியும் கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் விதமாக மாமனார் "போன தடவை வந்தபோது அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ணலம்மா. இந்த தடவை இப்படி ஆயிடுச்சே" என்றார்.
அடுத்தும் ஹாஸ்ப்பிட்டல் தவம் தான். டோக்கன் வாங்கிக் கொண்டு மடியில் உட்கார்ந்துருவேனா என ரகளைப் பண்ணும் ஜூனியரின் பின்னால் இன்னும் மூணு பேர்தான் என்ற கவுண்டிங்கோட காத்திருந்து, என் நம்பரைக் கூப்பிடும்போது அரக்க பரக்க ஒரு அம்மா ஓடிவருவார். "புள்ளைக்கு இழுக்குது. நான் கொஞ்சம் பார்த்துடறேனே". மனிதாபிமானம் இன்னும் மரிக்காத நிலையில் சரி என்று அவரை அனுப்பிவிட்டு இன்னொரு பதினைந்து நிமிடம் ஜூனியர் பின்னால் ஓடிக்கொண்டிருக்க நேரிடும். ஆனால் இன்றுவரை நான் அவசரமாய் பார்க்கவேண்டிருக்கும் நிலையிலும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது:(
கடைல பில்லு போடற எடத்துல கூட தொல்லை பண்ணுவாங்க. ஒன்னு ஸ்கேனிங் மெஷின் வொர்க் பண்ணாது. இல்ல அந்த கம்ப்யூட்டர் ஹேங்காகி தொலைக்கும். மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் என்பார்கள். இல்லன்னா யாராவது ரெண்டே ரெண்டு ஐயிட்டம் தான் ப்ளீஸ் என சொல்லி நாம் தலையசைப்பதற்க்கு முன் பொருளை கவுண்டரில் வைத்துவிடுவார்கள். அந்த ரெண்டு அயிட்டத்தை பில் பண்ணுவதற்குள் இன்னும் நான்கு பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு "மறந்துட்டேன்" என இளிப்பார்கள். வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்.
இதெல்லாத்தையும் விட மரணக் கொடுமை இந்த பஸ்ஸுக்கு காத்துகிட்டிருக்கிறது. கரெக்டா நாம போகவேண்டிய டைரக்ஷன்ல வரவே வராது. "மேரா நம்பர் கப் ஆயேகா" என வர்ற பஸ்களின் நம்பரைப் பார்த்துப் பார்த்தே கண்ணு பூத்துப் போய்டும். இது நடுவுல ஏதாவது ஒரு பிரஹஸ்பதி வந்து "ரொம்ப நேரமா நிக்கறியேம்மா. எங்க போகனும்"ன்னு கேக்கும். உனக்கெதுக்கு அந்த டிடெய்லுன்னு நம்ம பார்த்தா "எந்த பஸ்சுன்னு தெரியாம நிக்கறியோன்னு கேட்டேன்" என வெறுப்பேத்துவார்கள். உங்க பொது சேவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுன்னு நொந்துகிட்டு காத்திருத்தலை தொடர வேண்டியது தான்.
இதோட நெட் கனெக்ஷனுக்கு வெயிட்டிங், நண்பர்களுக்காக வெயிட்டிங் (ஒருத்தரும் பங்சுவல் கிடையாது), ஹோட்டல்ல வெயிட்டிங், பின்னூட்டத்துக்கு வெயிட்டிங்ன்னு அப்பப்பா. வாழ்க்கைல எவ்வளவு நேரம் காத்திருக்கறதுல வீணாப் போகுது. ஆனாலும் சில சமயங்களில் காத்திருப்பது சுகத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது:)
இந்தப் பாட்டு தான் நான் முதன் முதலில் பாடிய (இரண்டே வரி) பாடலாம். ரெக்கார்ட் செய்த கேஸட் இன்னும் என் பெரியம்மாவிடம் இருக்கிறது. ஊருக்குப் போகும்போதெல்லாம் இழுத்து இழுத்து பாடின பொண்ணு இப்ப என்னம்மா பேசுது என சொல்லி கிண்டல் செய்வார்கள். Nostalgia:)
இந்த வரிகளை நம் வாழ்க்கையில் ஏதாவதொரு தருணத்தில் பாட வேண்டியதாயிருக்கிறது. சிலருக்கு எப்போவாவது. சிலருக்கு அடிக்கடி. சிலருக்கு அடிக்கடி எப்போவாவது. வர வர என் நிலைமை இந்த மூன்றாவது கேட்டகிரியில் வந்து தொலைகிறது.
எங்கும் காத்திருத்தல் எதிலும் காத்திருத்தல் என்று வாழ்க்கைப் போய்க்கொண்டிருக்கிறது. எனக்கும் மட்டும் ஏன் இப்படி? என கேட்குமளவிற்கு கடுப்பாய் இருக்கிறது. மாமனாரை மருத்துவமனைக்கு செக்கப்புக்கு அழைத்துச் செல்ல பதினோரு மணிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்கியிருந்தேன். கரெக்டாக பத்தேமுக்காலுக்கு ஹாஸ்பிட்டலில் இருந்தோம் (என் மாமனார் என்னை விட பங்க்சுவல்).எல்லாரையும் பார்த்து முடித்துவிட்டு டாக்டர் மாமனாரை செக்கப் செய்தபோது மணி 1.30. நடுவே இரண்டு முறை ரிசப்ஷனில் போய் கேட்டுவிட்டு வந்ததுக்கு "இல்ல மேடம். டிரசிங் கேசெல்லாம் டாக்டர் கடைசியா தான் பார்ப்பார்" என்றார்கள். அத அப்பாயிண்ட்மெண்ட் வாங்கும்போதே சொல்லித் தொலைக்க வேண்டியதுதானே என கேட்டுவிட்டு வந்தேன். எரியும் கொள்ளியில் எண்ணைய் ஊற்றும் விதமாக மாமனார் "போன தடவை வந்தபோது அஞ்சு நிமிஷம் கூட வெயிட் பண்ணலம்மா. இந்த தடவை இப்படி ஆயிடுச்சே" என்றார்.
அடுத்தும் ஹாஸ்ப்பிட்டல் தவம் தான். டோக்கன் வாங்கிக் கொண்டு மடியில் உட்கார்ந்துருவேனா என ரகளைப் பண்ணும் ஜூனியரின் பின்னால் இன்னும் மூணு பேர்தான் என்ற கவுண்டிங்கோட காத்திருந்து, என் நம்பரைக் கூப்பிடும்போது அரக்க பரக்க ஒரு அம்மா ஓடிவருவார். "புள்ளைக்கு இழுக்குது. நான் கொஞ்சம் பார்த்துடறேனே". மனிதாபிமானம் இன்னும் மரிக்காத நிலையில் சரி என்று அவரை அனுப்பிவிட்டு இன்னொரு பதினைந்து நிமிடம் ஜூனியர் பின்னால் ஓடிக்கொண்டிருக்க நேரிடும். ஆனால் இன்றுவரை நான் அவசரமாய் பார்க்கவேண்டிருக்கும் நிலையிலும் காத்துக்கிடக்க வேண்டியிருக்கிறது:(
கடைல பில்லு போடற எடத்துல கூட தொல்லை பண்ணுவாங்க. ஒன்னு ஸ்கேனிங் மெஷின் வொர்க் பண்ணாது. இல்ல அந்த கம்ப்யூட்டர் ஹேங்காகி தொலைக்கும். மேடம் ஒரு அஞ்சு நிமிஷம் என்பார்கள். இல்லன்னா யாராவது ரெண்டே ரெண்டு ஐயிட்டம் தான் ப்ளீஸ் என சொல்லி நாம் தலையசைப்பதற்க்கு முன் பொருளை கவுண்டரில் வைத்துவிடுவார்கள். அந்த ரெண்டு அயிட்டத்தை பில் பண்ணுவதற்குள் இன்னும் நான்கு பொருட்களை கொண்டு வந்து வைத்துவிட்டு "மறந்துட்டேன்" என இளிப்பார்கள். வர்ற கோவத்துக்கு ஸ்கேனர் மிஷினைக் கொண்டு மண்டையில் நச்சு நச்சுன்னு அடிக்கனும் போலிருக்கும்.
இதெல்லாத்தையும் விட மரணக் கொடுமை இந்த பஸ்ஸுக்கு காத்துகிட்டிருக்கிறது. கரெக்டா நாம போகவேண்டிய டைரக்ஷன்ல வரவே வராது. "மேரா நம்பர் கப் ஆயேகா" என வர்ற பஸ்களின் நம்பரைப் பார்த்துப் பார்த்தே கண்ணு பூத்துப் போய்டும். இது நடுவுல ஏதாவது ஒரு பிரஹஸ்பதி வந்து "ரொம்ப நேரமா நிக்கறியேம்மா. எங்க போகனும்"ன்னு கேக்கும். உனக்கெதுக்கு அந்த டிடெய்லுன்னு நம்ம பார்த்தா "எந்த பஸ்சுன்னு தெரியாம நிக்கறியோன்னு கேட்டேன்" என வெறுப்பேத்துவார்கள். உங்க பொது சேவைக்கு ஒரு அளவே இல்லாம போச்சுன்னு நொந்துகிட்டு காத்திருத்தலை தொடர வேண்டியது தான்.
இதோட நெட் கனெக்ஷனுக்கு வெயிட்டிங், நண்பர்களுக்காக வெயிட்டிங் (ஒருத்தரும் பங்சுவல் கிடையாது), ஹோட்டல்ல வெயிட்டிங், பின்னூட்டத்துக்கு வெயிட்டிங்ன்னு அப்பப்பா. வாழ்க்கைல எவ்வளவு நேரம் காத்திருக்கறதுல வீணாப் போகுது. ஆனாலும் சில சமயங்களில் காத்திருப்பது சுகத்தையும் சுவாரசியத்தையும் தருகிறது:)
இந்தப் பாட்டு தான் நான் முதன் முதலில் பாடிய (இரண்டே வரி) பாடலாம். ரெக்கார்ட் செய்த கேஸட் இன்னும் என் பெரியம்மாவிடம் இருக்கிறது. ஊருக்குப் போகும்போதெல்லாம் இழுத்து இழுத்து பாடின பொண்ணு இப்ப என்னம்மா பேசுது என சொல்லி கிண்டல் செய்வார்கள். Nostalgia:)
Labels:
சொந்தக் கதை
July 9, 2009
வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு
ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.
வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."
சார் முதல்ல வீட்டை காட்டுங்க.
வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)
ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.
"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..
ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.
வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.
"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"
2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.
வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."
சார் முதல்ல வீட்டை காட்டுங்க.
வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)
ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.
"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..
ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.
வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.
"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"
2 வாரம் அலைந்து, திரிந்து, சலித்துப் போன நிலையில் ரகுவின் கம்பெனியே வீடு பார்த்து தரும் பொறுப்பை எடுத்துக்கொண்டதால் நிம்மதியாய் இருக்கிறது. எங்கு அமைகிறதென பொறுத்திருந்து தான் பார்க்கனும்.
Labels:
காமெடி மாதிரி,
சொந்தக் கதை
March 6, 2009
பூகம்பமும் சுனாமியும்
பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் எப்படியிருக்கும்? அதனால் ஏற்படும் தாக்கங்கள் என்னவாக இருக்கும்? நீங்கள் அத்தருணத்தில் என்ன மனநிலையில் இருப்பீர்கள் என்று உங்களால் யோசிக்க முடிகிறதா? நான் அனுபவித்தேன். பூகம்பமும் சுனாமியும் ஒருசேர வந்தால் ஏற்படும் பிரளயம் நான் baby sitter வைத்துக்கொள்ளப் போகிறேன் என சொன்னவுடன் எங்கள் வீட்டில் ஏற்பட்டது. இத்தனைக்கும் மாலை இரண்டு மணிநேரம் தான் குழந்தையப் பார்த்துக்கொள்ள ஆள் வைக்கலாமென எண்ணினோம். ஐடியா குடுத்ததே ரகு தான். இரண்டு பேர் வீட்டில் வானத்துக்கும் பூமிக்குமாய் குதித்தார்கள். இருப்பவர்களோடு அபத்தமான ஒப்பிடு. அவளும் தான் குழந்தை வளர்க்கிறாள். அவளென்ன ஆளா வைத்துக்கொண்டாள்? ஏகப்பட்ட கம்பேரிசன்கள். மறுப்புகள். என்(ங்கள்) பக்க வாதங்களைக் கேக்ககூட தயாராக இல்லை.
குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.
காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(
குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.
அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)
டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.
குழந்தைய பார்த்துக்கணும்னு தான் வேலைய விட்ட. இப்ப அதுக்கு ஆள் வைக்கிறன்னு சொல்றீயே? அதே கேள்விய நான் திருப்பி கேக்கறேன். குழந்தைக்காக வேலைய விட்ட நானே ரெண்டு மணி நேரத்துக்கு ஆள் வைச்சுக்குறேன்னு சொல்றன்னா அப்ப என் நிலைமைய யோசிச்சு பாருங்க. குழந்தை பிறக்கும் வரை நானேதான் எல்லா வீட்டு வேலையும் செய்தேன். வளைகாப்புக்கு பாண்டி போற வரைக்கும் வீடு பெருக்கி துடைச்சு, பாத்திரம் தேய்கிற வரைக்கும் (ஆபிஸும் போய்கொண்டு). ஆனால் குழந்தையோடு வீட்டுக்கு வந்தப்புறம் ஒருவேளைக்கூட செய்யமுடியவில்லை. பாத்திரம் தேய்க்க, வீடு பெருக்க வேலைக்கு ஆள் வைத்துக்கொண்டேன். 24 மணி நேரமும் குழந்தைதான் உலகமாகிப் போனதெனக்கு.
காலையில் 9 அல்லது பத்து மணிக்கு அலுவலகம் செல்வதற்க்கு முன் அவசியமோ இல்லையோ இயற்கை உபாதைகளை முடித்துக்கொள்ள வேண்டும். அதற்க்கப்புறம் ரகு வீடு திரும்பும் வரை அங்கிங்கு அசைய முடியாது. ஜூனியருக்கு நான் அவனோடவே இருக்கவேண்டும். தலை மறைந்தால் கூட வீறிட்டு அழுவான். ஒரே ஆறுதல் எப்பொழுதும் தூக்கியே வைத்துக்கொள் என்ற அழுகை கிடையாது. மதியம் அவன் தூங்கும் அந்த 1 மணி நேரத்துக்குள் துணி மடிச்சு வைக்கறது, பாத்திரம் அடுக்கறதுன்னு கடகடன்னு மத்த சில்லறை வேலைகளை முடிக்கனும். சமையலறை கொஞ்சம் சின்னதென்பதால் அவனை அங்கு வைத்துக்கொண்டு சமையலும் செய்யமுடியாது. ரகு ஆபிஸிலிருந்து வரும் வரை பொறுத்திருந்து வந்தப்பின் தான் சோறு:(
குழந்தை எனக்கு முக்கியம்தான். ஆனால் சதா சர்வ காலமும் குழந்தையோடவே இருந்து தியாகி பட்டம் வாங்க நானொன்னும் சினிமா தாயல்லவே. எனக்கு என்னையும் பார்த்துக்கொள்ள வேண்டும். நான் நன்றாக இருந்தால் தான் ரகுவும் ஜூனியரும் நன்றாக இருக்கமுடியும் என்பதை வசதியாக இருவீட்டார்களும் மறந்தார்கள். நானென்ன குழந்தையை யாரிடமோ குடுத்துவிட்டு ஊர் சுற்றி கும்மாளமடிக்கவா போகப்போகிறேன். ரிலாக்ஸாக புத்தகம் படிக்க, உடற்பயிற்சி செய்ய, ஒரு கப் டீ குடிக்க, நண்பர்களுடன் தொலைபேசியில் பேச எனக்கே எனக்கென்று நேரம் தேவைப்படாதா? சரியான ஓய்வில்லாததால் கோபமும், படபடப்பும் அதிகரித்து, எந்த வேலையையும் சரியாக செய்ய முடியவில்லை. இந்த விளக்கங்களெல்லாம் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. காது கொடுத்து கேட்டால்தானே? கடைசியாக பிரம்மாஸ்திரத்தை எறிவது போல் ஒரே கேள்வி அவர்களை மடக்கியது "சரி. நாங்கள் பேபி சிட்டர் வைத்துக்கொள்ளவில்லை. நீங்கள் யாராவது வந்து கொஞ்ச நாளைக்கு கூட இருங்கள்". எங்களுக்கு கண்டிப்பாகத் தெரியும் அவர்களால் அது முடியாதென்று. ஒரிரண்டு நாட்களென்றால் பரவாயில்லை. அதற்கு மேலென்றால் அவர்களுக்கு இருக்கும் கமிட்மெண்ட்ஸ் ஆட்டம் கண்டுவிடும்.
அரைகுறை மனதோடு வேண்டாவெறுப்பாக சம்மதித்தார்கள். சாயந்திரம் 5 மணியிலிருந்து ஏழு மணி வரை ஜூனியரைப் பார்த்துக்க ஆள் வைத்தோம். நான் பேச்சுக்கு சொல்லவில்லை. நிச்சய பலன்கள் தெரிந்தன. நான் நானாக இருக்க முடிந்தது. அவர்களை ஜூனியரை வெளியில் அழைத்துச் செல்ல அனுமதிக்க மாட்டேன். வேலை அவ்வளவாக இல்லாத நாட்களில் ஜூனியரை தூக்கிக்கொண்டு வாக் செல்லுவோம். என்னால் வேலைகளை ரிலாக்ஸாக செய்யமுடிந்தது. More important of all ஜூனியரோடு quality டைம் எந்தக் கவலையுமில்லாமல் செலவழிக்க முடிந்தது. ஒரு வருடத்துக்கு மேலாச்சு. இங்கு தாம்பரம் வந்து வேறு ஒருவர் பார்த்தோம். கடைக்கு போகனும், காய் வாங்கனுமென்றால் baby sitter கூட வருவார். பையையும் ஜூனியரையும் மாத்தி மாத்தி வைத்துக்கொள்வோம்.
கொஞ்ச நாள் முன்னாடி ஜூனியரை ஒரு பத்து நிமிஷம் பார்த்துக்க சொல்லி அப்பாவிடம் விட்டேன். அம்மாவிடம் சொன்னாராம் "பத்து நிமிஷம் என்னால சமாளிக்க முடியலடீ அவன. அவ எப்படித்தான் நாள் முழுக்க பார்த்துக்கறாளோ. Baby sitter வைத்ததில் தப்பேல்ல". போன வாரம் வந்த என் மாமனார் சொன்னது "எப்படிம்மா சமாளிக்கற. பயங்கர விஷமம் பண்றானே. உனக்கு ஏதாவது விழா எடுத்து சர் பட்டம் கொடுக்கனும்".
என்னால் புன்னைகையை மட்டுமே பதிலாக்க முடிந்தது:)
டிஸ்கி : ரொம்ப மாதங்களுக்கு முன் எழுதிய பதிவு. கொஞ்சூண்டு அப்டேட் பண்ணி பதிவிட்டிருக்கேன்.
Labels:
சொந்தக் கதை,
பொதுவானவை,
ஜூனியர்
March 2, 2009
கருநாகமும் பதிமூனாம் நம்பர் வீடும்
1996ஆம் வருடம் என்று நினைக்கிறேன். வாலாஜாப்பேட்டையில் குடியிருந்தோம். அப்பா பணி நிமித்தமாக அரக்கோணத்திலிருந்தார். வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரு முறை வீட்டுக்கு வருவார். அப்போதெல்லாம் சன் டிவியில் நகைச்சுவை வாரம், காதல் வாரம், கண்றாவி வாரம் என திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8.30 மணிக்கு படங்கள் ஒளிப்பரப்புவார்கள். என் பெரியம்மாவின் இரண்டாவது பையன் எங்கள் வீட்டில் தங்கி லெதர் டெக்னாலஜி படித்துக்கொண்டிருந்தார். இந்த சம்பவம் நடந்தபோது சன் டிவியில் திகில் வாரம். அன்று 13ஆம் நம்பர் வீடு படம் என்று விளம்பரப்படுத்தியிருந்தார்கள். அண்ணாவும் நானும் அந்தப் படத்தைப் பார்ப்பதென்று முடிவு செய்தோம். அம்மாவும் தம்பியும் உறங்க போயாச்சு (வீட்டில் எல்லோரும் 8.30 மணிக்கெல்லாம் தூங்கிவிடுவோம்).
நான் வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்க அண்ணா தோல் சாம்பிள்களை ஒழுங்கப்படுத்திக்கொண்டிருந்தார். படம் ஆரம்பித்து ஒடிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டீவியை ஹாலின் மூலையில் வைத்திருந்தோம். டீவியின் ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கண்ணாடி ஜன்னலும் (மூன்றும் முக்கோண வடிவிலிருக்கும். முக்கோணத்தின் base டீவி). எதேச்சயாக ஜன்னலைப் பார்த்த நான் கருப்பாக ஏதோ இருக்கவும் கேபிள் ஒயரென நினைத்தேன். கேபிள் ஒயர் வாசல் அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக தானே வருமென நினைத்து அம்மா கரித்துணியை (துடைக்க உபயோகப்படுத்தும் துணி) எங்க போட்ருக்கா பார் என திட்டிக்கொண்டே கையிலிருந்த பென்சிலால் அதை எடுக்கப் போனவள் அப்படியே ஷாக்காயிட்டேன். துணி நகர்ந்து கொண்டிருந்தது.
4 அடி நீளமுள்ள ஜன்னல் கம்பியில் மொத்த உடலையும் சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக அண்ணாவிடம் "அண்ணா பாம்புன்னா" என்றேன்.
"ஏய் இந்தப் படத்துல பாம்பெல்லாம் வராதுடீ. நான் ஏற்கனவே படத்த பார்த்திருக்கேன். பயமா இருந்துதுன்னா நீ போய் படுத்துக்கோ"
"அண்ணா ஜன்னல் கம்பில பாம்பு சுத்திண்டிருக்குண்ணா"
"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடீ பாம்பு வரும்"
"அண்ணா நீங்க இங்க வந்து பாருங்க"
அண்ணா வந்து பார்த்துவிட்டு "நீ இங்கயே நில்லு. நான் போய் சித்திய எழுப்பி சொல்றேன்" (என்னா ஒரு வில்லத்தனம்)
"சித்தி ஹால் ஜன்னல்ல பாம்பு இருக்கு சித்தி"
"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடா பாம்பு வரும்?" (எனக்கு ரொம்ப சந்தோஷம்)
"இல்ல சித்தி நிஜமாத்தான். நீங்க வந்து பாருங்க"
அம்மா வந்து பார்த்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அண்ணாவும் நானும் நீ போடுற சத்தத்துல பாம்பு டென்ஷனாகி நம்மள போடப்போறது வாய மூடிட்டு இருன்னு அம்மாவ திட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிச்சோம் (போர்ட் மீட்டிங்க் போடற டைமா இது?)
நானும் அண்ணாவும் பாம்புக்கு காவலிருக்க அம்மா மத்த அறைகளை பூட்டினார். பின்னர் தம்பிய நாலு சாத்து சாத்தி (அவன் சரியான கும்பகர்ணன்) வெளியே உட்கார வைத்தார். அடுத்து பாம்ப எப்படி அடிக்கறதுன்னு விவாதம் (டெக்னிகல் டிஸ்கஷன்). பாம்படிக்க தோதான ஆயுதம் எங்களிடம் இல்லாததால் (resource deficiency) அருகில் குடியிருந்த சர்வேயர் அங்கிளிடம் ஆயுத உதவி கோரப்பட்டது. அங்கிளின் குடும்பத்தில் அனைவருமே ரொம்ப நல்லவர்கள். ரொம்ப helpful. அங்கிளும் அவர் பசங்களும் இரும்புக் கழியோடு வந்து சேர பாம்புக்கு பாடை கட்ட வியூகம் தயாரானது. என்ன பாம்பு என்று சரியாகத் தெரியவில்லை. கருப்பும் கோதுமையும் கலந்த நிறம். கண்டிப்பாக விஷப் பாம்புதான் என எனக்குத் தோன்றியது. உடல் பருமனும், பாம்பின் நீளமும் அப்படி (சயின்ஸில் நான் சூரப்புலி). இத்தனை களேபரத்திலயும் பாம்பு மோட்டாரில் காயில் சுற்றுவதை போல் (அட நாங்களும் டெக்னிக்கலா எழுதுவோம்ல) உடம்பை முறுக்கிக்கொண்டிருந்தது.
பாம்பு அடிக்கும்போது ஜன்னல் கண்ணாடி உடைஞ்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிள் அம்மாவ கேட்டார். வீடே இடிஞ்சாலும் பரவால்ல சார் என்றார் அம்மா. இரும்பு கம்பியைக்கொண்டு பாம்பின் தலையை சுவற்றோடு அழுத்துவதென்றும், மற்ற இரண்டு பேர் அதை அடிப்பது என்றும் முடிவானது. இதனிடையில் எதிர்த்த வீட்டு மாமி "விளக்கு வெச்சப்புறம் பாம்ப அடிக்கறது பாவம். ஒருவேளை நல்லதா இருந்துட்டா இன்னும் மோசம்" என்றார். அவ்ளோதான் அம்மாக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாகிவிட்டது. "அதுக்குன்னு விடியற வரைக்கும் அப்படியேவா பார்த்துண்டிருக்க முடியும். நாளைக்கு உங்காத்துக்கு வந்துடுத்துன்னா கஷ்டம் மாமி" என்றார் அண்ணா.ஒருவழியா நீண்ட விவாதத்திற்க்குப் பிறகு பாம்படிக்க தாய்குலம் சம்மதம் வழங்கியது. பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன். அங்கிள் அதன் தலையை குறிபார்த்து இரும்பு கம்பியால் சுவற்றோடு சேர்ந்து நசுக்கினார். கிணற்றின் ராட்டினத்திலிருந்து கயிறு பிரிவதுபோல பாம்பு சரசரவென்று ஜன்னல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. அங்கிள் விடாமல் இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.
பின்னர் ஆராய்ந்ததும் தெரிந்தது கருநாகம்/ராஜ நாகம் என்று. The most deadly snake. கிட்டத்தட்ட ஒரு 3.5 அடி நீளமிருந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று. ம்ஹூம். ஒருத்தர் சொன்னார். பாம்பிற்க்கு வாலில் இன்னொரு உயிர் இருக்கும். கொஞ்ச நேரம் விட்டால் அதுக்கு திரும்ப உயிர் வந்துடும் (எங்கேருந்துடா இப்படிப்பட்ட கான்செப்ட் புடிக்கிறீங்க). ஒருவழியா கொஞ்சம் மண்ணென்னைய் ஊற்றி வைக்கோல் படுக்கையில் வைத்து அண்ணாவே கொள்ளி போட்டார். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அம்மா கர்ம சிரத்தையாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கோவிலுக்கு சென்று புற்றுக்கு பாலூத்தி பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தார்.
இப்போக்கூட அண்ணா எதுக்காவது என்னை கிண்டல் செஞ்சால் சொல்லுவேன் "ஹூம் பாம்புக்கிட்டருந்து உன்ன காப்பாத்தினேன் பார். எனக்கு இது தேவைதான்". அண்ணா கொஞ்ச நேரத்திற்க்கு கப்சிப்:)
நான் வீட்டுப்பாடங்களை செய்துக்கொண்டிருக்க அண்ணா தோல் சாம்பிள்களை ஒழுங்கப்படுத்திக்கொண்டிருந்தார். படம் ஆரம்பித்து ஒடிக்கொண்டிருந்தது. எங்கள் வீட்டு டீவியை ஹாலின் மூலையில் வைத்திருந்தோம். டீவியின் ஒரு பக்கம் சுவரும் மறுபக்கம் கண்ணாடி ஜன்னலும் (மூன்றும் முக்கோண வடிவிலிருக்கும். முக்கோணத்தின் base டீவி). எதேச்சயாக ஜன்னலைப் பார்த்த நான் கருப்பாக ஏதோ இருக்கவும் கேபிள் ஒயரென நினைத்தேன். கேபிள் ஒயர் வாசல் அருகிலிருக்கும் ஜன்னல் வழியாக தானே வருமென நினைத்து அம்மா கரித்துணியை (துடைக்க உபயோகப்படுத்தும் துணி) எங்க போட்ருக்கா பார் என திட்டிக்கொண்டே கையிலிருந்த பென்சிலால் அதை எடுக்கப் போனவள் அப்படியே ஷாக்காயிட்டேன். துணி நகர்ந்து கொண்டிருந்தது.
4 அடி நீளமுள்ள ஜன்னல் கம்பியில் மொத்த உடலையும் சுற்றிக்கொண்டு இருந்தது. மெதுவாக அண்ணாவிடம் "அண்ணா பாம்புன்னா" என்றேன்.
"ஏய் இந்தப் படத்துல பாம்பெல்லாம் வராதுடீ. நான் ஏற்கனவே படத்த பார்த்திருக்கேன். பயமா இருந்துதுன்னா நீ போய் படுத்துக்கோ"
"அண்ணா ஜன்னல் கம்பில பாம்பு சுத்திண்டிருக்குண்ணா"
"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடீ பாம்பு வரும்"
"அண்ணா நீங்க இங்க வந்து பாருங்க"
அண்ணா வந்து பார்த்துவிட்டு "நீ இங்கயே நில்லு. நான் போய் சித்திய எழுப்பி சொல்றேன்" (என்னா ஒரு வில்லத்தனம்)
"சித்தி ஹால் ஜன்னல்ல பாம்பு இருக்கு சித்தி"
"உளறாதே. வீட்டுக்குள்ள எப்படிடா பாம்பு வரும்?" (எனக்கு ரொம்ப சந்தோஷம்)
"இல்ல சித்தி நிஜமாத்தான். நீங்க வந்து பாருங்க"
அம்மா வந்து பார்த்துட்டு கத்த ஆரம்பிச்சிட்டாங்க. அப்புறம் அண்ணாவும் நானும் நீ போடுற சத்தத்துல பாம்பு டென்ஷனாகி நம்மள போடப்போறது வாய மூடிட்டு இருன்னு அம்மாவ திட்டி அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிச்சோம் (போர்ட் மீட்டிங்க் போடற டைமா இது?)
நானும் அண்ணாவும் பாம்புக்கு காவலிருக்க அம்மா மத்த அறைகளை பூட்டினார். பின்னர் தம்பிய நாலு சாத்து சாத்தி (அவன் சரியான கும்பகர்ணன்) வெளியே உட்கார வைத்தார். அடுத்து பாம்ப எப்படி அடிக்கறதுன்னு விவாதம் (டெக்னிகல் டிஸ்கஷன்). பாம்படிக்க தோதான ஆயுதம் எங்களிடம் இல்லாததால் (resource deficiency) அருகில் குடியிருந்த சர்வேயர் அங்கிளிடம் ஆயுத உதவி கோரப்பட்டது. அங்கிளின் குடும்பத்தில் அனைவருமே ரொம்ப நல்லவர்கள். ரொம்ப helpful. அங்கிளும் அவர் பசங்களும் இரும்புக் கழியோடு வந்து சேர பாம்புக்கு பாடை கட்ட வியூகம் தயாரானது. என்ன பாம்பு என்று சரியாகத் தெரியவில்லை. கருப்பும் கோதுமையும் கலந்த நிறம். கண்டிப்பாக விஷப் பாம்புதான் என எனக்குத் தோன்றியது. உடல் பருமனும், பாம்பின் நீளமும் அப்படி (சயின்ஸில் நான் சூரப்புலி). இத்தனை களேபரத்திலயும் பாம்பு மோட்டாரில் காயில் சுற்றுவதை போல் (அட நாங்களும் டெக்னிக்கலா எழுதுவோம்ல) உடம்பை முறுக்கிக்கொண்டிருந்தது.
பாம்பு அடிக்கும்போது ஜன்னல் கண்ணாடி உடைஞ்சிட்டா என்ன பண்றதுன்னு அங்கிள் அம்மாவ கேட்டார். வீடே இடிஞ்சாலும் பரவால்ல சார் என்றார் அம்மா. இரும்பு கம்பியைக்கொண்டு பாம்பின் தலையை சுவற்றோடு அழுத்துவதென்றும், மற்ற இரண்டு பேர் அதை அடிப்பது என்றும் முடிவானது. இதனிடையில் எதிர்த்த வீட்டு மாமி "விளக்கு வெச்சப்புறம் பாம்ப அடிக்கறது பாவம். ஒருவேளை நல்லதா இருந்துட்டா இன்னும் மோசம்" என்றார். அவ்ளோதான் அம்மாக்கு இன்னும் பயம் ஜாஸ்தியாகிவிட்டது. "அதுக்குன்னு விடியற வரைக்கும் அப்படியேவா பார்த்துண்டிருக்க முடியும். நாளைக்கு உங்காத்துக்கு வந்துடுத்துன்னா கஷ்டம் மாமி" என்றார் அண்ணா.ஒருவழியா நீண்ட விவாதத்திற்க்குப் பிறகு பாம்படிக்க தாய்குலம் சம்மதம் வழங்கியது. பாம்படிக்கறத நானும் பார்ப்பேன் என அடம்பிடித்து அங்கேயே நின்றுகொண்டேன். அங்கிள் அதன் தலையை குறிபார்த்து இரும்பு கம்பியால் சுவற்றோடு சேர்ந்து நசுக்கினார். கிணற்றின் ராட்டினத்திலிருந்து கயிறு பிரிவதுபோல பாம்பு சரசரவென்று ஜன்னல் கம்பியிலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டது. அங்கிள் விடாமல் இன்னும் பலமாக அதன் தலையை நசுக்கி கீழே தள்ளினார். அண்ணா, அங்கிளின் பையன் எல்லாம் சேர்ந்து அதை தரையில் தள்ளி ஆளுக்கு ஒரே போடு. பாம்பு பரலோக ப்ராப்தி அடைந்தது.
பின்னர் ஆராய்ந்ததும் தெரிந்தது கருநாகம்/ராஜ நாகம் என்று. The most deadly snake. கிட்டத்தட்ட ஒரு 3.5 அடி நீளமிருந்தது. எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். ஒரு கவரில் போட்டு நாளைக்கு ஸ்கூலுக்கு கொண்டு போறேன். பார்மலின்ல போட்டு லேபில் டிஸ்ப்ளேக்கு வைக்கலாம் என்று. ம்ஹூம். ஒருத்தர் சொன்னார். பாம்பிற்க்கு வாலில் இன்னொரு உயிர் இருக்கும். கொஞ்ச நேரம் விட்டால் அதுக்கு திரும்ப உயிர் வந்துடும் (எங்கேருந்துடா இப்படிப்பட்ட கான்செப்ட் புடிக்கிறீங்க). ஒருவழியா கொஞ்சம் மண்ணென்னைய் ஊற்றி வைக்கோல் படுக்கையில் வைத்து அண்ணாவே கொள்ளி போட்டார். இந்த சம்பவத்திற்க்கு பிறகு அம்மா கர்ம சிரத்தையாய் வெள்ளிக்கிழமைகளில் புற்றுக்கோவிலுக்கு சென்று புற்றுக்கு பாலூத்தி பாவத்தை கொஞ்சம் கொஞ்சமாய் கரைத்துக் கொண்டிருந்தார்.இப்போக்கூட அண்ணா எதுக்காவது என்னை கிண்டல் செஞ்சால் சொல்லுவேன் "ஹூம் பாம்புக்கிட்டருந்து உன்ன காப்பாத்தினேன் பார். எனக்கு இது தேவைதான்". அண்ணா கொஞ்ச நேரத்திற்க்கு கப்சிப்:)
Labels:
சொந்தக் கதை,
டெரர்,
நினைவுகள்,
பாம்பு
January 29, 2009
வாழ்க்கை வாழ்வதற்கே
எனக்கு ரகுவுக்கும் இருக்கும் சில ஒற்றுமைகளில் ஒன்று சொந்த வீட்டினைப் பற்றிய கருத்து. இருவருக்குமே வீடு வாங்கனும்ங்கற ஆசை சுத்தமாக இல்லை. பணத்தை வீட்டில் முடக்குவது வேஸ்ட் என்பது எங்கள் எண்ணம். ஆனா சொந்தக்காரங்க எல்லாம் நாங்கள் வாடகை வீட்டில் இருப்பது பெரிய பாவமா நினைக்கிறாங்க. அடிக்கடி நாங்கள் எதிர்கொள்ளும் கேள்வி "இன்னும் ஏன் வீடு வாங்கலை??" அவசியமில்லை என்று சொன்னால் சேமிப்பின் அவசியம் பற்றிய லெக்சர் ஆரம்பமாயிடும். இதையும் மீறி ஒரு அபத்தமான அறிவுரை வாடகைக்கு குடுக்கிற காசை வீட்டு லோனா கட்டலாம்ல???!! ஏனோதானோன்னு இல்லாம ஒரு நல்ல வீடு வாங்க குறைந்தது 40 லட்சத்திற்க்கு மேலாகும். அதற்கு EMI கணக்கு போட்டால் சம்பளத்தில் முக்கால்வாசி வங்கிக்கு தான் அழனும். இதையெல்லாம் அவங்ககிட்ட விளக்கவா முடியும். ரெண்டு பேருமே அநாவசியமாவோ ஆடம்பரமாவோ செலவு செய்யறதில்ல. குடும்ப செலவு போக மீதி ஷேர் மார்க்கெட்லயும் வங்கிலயும் இருக்கு. அவசர தேவையை கலக்கமில்லாமல், அடுத்தவரிடம் கை நீட்டாமல் சமாளிக்க முடிகிறது. ஜூனியரின் மருத்துவ செலவு இந்த தடவை பத்தாயிரத்தை தொட்டுவிட்டது. We managed. அதுக்குன்னு வீடு வாங்க ஆசைபடுவது தப்புன்னு நான் சொல்லல. உங்களின் எதிர்காலத்தையும், அவசரத் தேவைகளையும், எமர்ஜென்ஸி என்றால் சமாளிக்க பெரிய தொகையை புரட்ட முடியுமா என்பதையும் யோசித்து வாங்குவது உத்தேசம் என்பது தான் எங்கள் கருத்து. இன்று ஐ.டி துறையை விட அத்துறை ஊழியர்கள் நிறைய பேர் ஆட்டம்கண்டு போயிருப்பதாக வரும் செய்திகள் இந்த E.M.I மேட்டராகத்தான் இருக்கமுடியும் என்பது என் ஊகம்.
அடுத்தபடியா அதிகம் விமர்சிக்கப்படுவது நாங்கள் உணவகங்களுக்கு செல்வதைப் பற்றி தான். வாரக்கடைசியில் ஒரு வேளை(யாவது) உணவகம் சென்று சாப்பிடுவது எங்கள் வழக்கம். I'm passionate about food. அதுக்குன்னு சட்டி முழுக்க சாப்பிடுற ஜீவன் இல்லை. அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும். ரகுவும் என்னைப் போல் தான். எனக்கு வித்தியாசமான உணவுகளை ரசிப்பதில் ரொம்பவே ஆர்வமுண்டு. நிறைய ரெஸ்டாரெண்ட் டிரை பண்ணிருக்கோம். கையேந்தி பவனிலிருந்து பார்க் ஹோட்டல் வரை பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வீட்டிலோ சாப்பாட்டிற்காக ஏன் இவ்ளோ செலவழிக்கறீங்கன்னு கேக்கறாங்க. அட நாய்படாதபாடுபட்டு சம்பாதிக்கிறது எதுக்கு? உயிர் வாழறதுக்கு அவசியமான விஷயம் சோறு தானே? அத அனுபவிச்சு ருசிக்கறதுல என்ன தப்பு?
நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது?
பி.கு : நான் போற வித்தியாசமான உணவகங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:)
அடுத்தபடியா அதிகம் விமர்சிக்கப்படுவது நாங்கள் உணவகங்களுக்கு செல்வதைப் பற்றி தான். வாரக்கடைசியில் ஒரு வேளை(யாவது) உணவகம் சென்று சாப்பிடுவது எங்கள் வழக்கம். I'm passionate about food. அதுக்குன்னு சட்டி முழுக்க சாப்பிடுற ஜீவன் இல்லை. அளவா சாப்பிடனும் அதே சமயம் அனுபவிச்சும் சாப்பிடனும். ரகுவும் என்னைப் போல் தான். எனக்கு வித்தியாசமான உணவுகளை ரசிப்பதில் ரொம்பவே ஆர்வமுண்டு. நிறைய ரெஸ்டாரெண்ட் டிரை பண்ணிருக்கோம். கையேந்தி பவனிலிருந்து பார்க் ஹோட்டல் வரை பயணம் தொடர்ந்துகொண்டிருக்கிறது. வீட்டிலோ சாப்பாட்டிற்காக ஏன் இவ்ளோ செலவழிக்கறீங்கன்னு கேக்கறாங்க. அட நாய்படாதபாடுபட்டு சம்பாதிக்கிறது எதுக்கு? உயிர் வாழறதுக்கு அவசியமான விஷயம் சோறு தானே? அத அனுபவிச்சு ருசிக்கறதுல என்ன தப்பு?
நாளைக்கு உயிரோட இருப்பமா இல்லையான்னு தெரியாது. சாவற நேரத்துல அய்யோ வாழ்க்கையை அனுபவிக்கல்யேன்னு புலம்பறதுல ஏதும் அர்த்தம் இருக்கறதா எனக்குத் தெரியலை. தாம் தூம்ன்னு செலவு பண்ணாம, கொஞ்சம் எதிர்காலத்துக்கும் சேமிச்சுகிட்டு, நிகழ்காலத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் ஆழ்ந்து அனுபவிக்கனும். என்ன நான் சொல்றது?
பி.கு : நான் போற வித்தியாசமான உணவகங்களைப் பற்றி ஏற்கனவே இங்கே எழுதிருக்கேன். இனிமே எழுதப் போறதை தங்கிலீஷில் எழுதலாமான்னு ஒரு யோசனையில் இருக்கேன். அடுத்த பதிவு உணவகத்தைப் பத்தி தான். உங்க ஆதரவ அள்ளித் தெளிங்க மக்களே:)
Labels:
சிந்தனை செய் மனமே,
சொந்தக் கதை,
பொதுவானவை
January 23, 2009
பாட்டீஈஈஈஈ
ஜூனியர் தன் பாட்டியோடு பயங்கர அட்டாச்டு. பாட்டி தான் வேணும் எல்லாத்துக்கும். அம்மாவும் பேரன் மேல பாசத்தை பொழியறாங்க. நான் எங்கம்மா வழி தாத்தா பாட்டிய பார்த்தது கூட இல்ல. என் அம்மா வழி தாத்தா எங்கம்மா கைக்குழந்தையா இருக்கும்போதே தவறிட்டாங்க. பாட்டி அம்மா 8ஆவது படிக்கும்போது போய்ட்டாங்க. அப்பா வழி தாத்தா பாட்டி எனக்கு நினைவு தெரிந்து என்னை அரவணைத்த ஞாபகமில்லை. தாத்தாவுக்கு என் தம்பிய ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவன் கருப்பு (நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:)). இப்போ பாட்டி மட்டும் தான் இருக்காங்க. 89 வயசாகுது அவங்களுக்கு. வரிசையாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பரிகொடுத்தவங்க. சில குடும்ப அரசியல்??!!! காரணமாக பாட்டியின் பாசம் முழுவதும் டைவர்ட் செய்யப்பட்டது. வயசாகிட்டாலே வர்ற பிராப்ளம் அவங்களுக்கும் ஆரம்பிச்சிடிச்சு. என்ன பேசுறோம்னே தெரியமாட்டேங்குது. இப்போன்னில்ல ஏழெட்டு வருஷமாவே பாட்டி வாயத்திறந்தாலே அலறுவோம். சாம்பிளுக்கு
* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"
* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.
* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.
* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.
* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.
* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.
* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"
* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.
* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.
* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.
* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.
* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.
இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்
January 5, 2009
உன்னையெல்லாம் படிக்க வெச்சது வேஸ்ட்
பி.டெக் மூன்றாம் ஆண்டு இறுதியில் என்னோட மொத்தக் குடும்பமும் சந்தோஷத்தின் உச்சத்தில் இருந்தார்கள். CTS-ல் ஆணி புடுங்கறதுக்கு என்னை தேர்வு செய்திருந்தார்கள். பரம்பரையில் முதல் engineer என்பதோடு இல்லாமல், அவ்ளோ சம்பளத்தில் வேலை கிடைத்தது எனக்குத்தான். அப்பாக்கும் அம்மாக்கும் ரொம்ப பெருமை. என் தம்பிக்கு அப்போதே அட்வைஸ் இம்சைகள் ஆரம்பிச்சாச்சு. ஒரு வழியா படிப்ப முடிச்சுட்டு வேலைக்கு சேர்ந்து நான் ஆணி புடுங்கின அழகே தனி. வேலைல சேர்ந்து ரெண்டே அ(ஆ)ப்ரைசலிலே மாப்பிள்ளை தேடும் படலம் ஆரம்பிச்சாச்சு. எவ்வளவோ கெஞ்சினேன். இன்னும் ஒரு வருஷம் கல்யாணம் வேண்டாம்னு. எல்லாம் செவிடன் காதுல ஊதுன சங்கா போச்சு. அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில் ரகு பலிஆடா ஆனார்:)
நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)
குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.
"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"
குழந்தைய பார்த்துக்கணும்.
"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"
அவங்களால வர முடியாது.
"அப்ப என்னதான் பண்ணப்போற?"
-----
"கேக்கறேன்ல சொல்லு"
(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?
"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.
எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.
டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.
நான்கு மாத கர்ப்பமா இருக்கும்போது நான்கு பேர் கொண்ட டீமை லீட் செய்ய அழைத்தார்கள். US(உழவர் சந்தையா?? அடிங்க) வேற போகவேண்டியதிருக்கும்ன்னு சொன்னாங்க. Project delivery ஜூன் மாதத்தில். என் டெலிவரியோ மே மாசத்துல. என் நிலைமைய சொன்னதும் இது வேலைக்காவதுன்னு ஒரு பெரிய கும்பிடு போட்டு பெஞ்சு தேய்க்க வெச்சுட்டாங்க. கிட்டத்தட்ட ஆறு மாசம் ஓசி சம்பளம். சரி இந்த பிளாஷ்பேக்கெல்லாம் ஏன் ஓட்றேன்னு தான கேக்கறீங்க. இருங்க இனிமேல்தான் மேட்டரே. (அப்ப இதுவரைக்கும் எழுதினது??)
குழந்தைய பார்த்துக்க ஆள் கிடையாது. நான் வேலைய ரிசைன் பண்றேன்னு சொன்னேன். (டெண்டேடிவ் டெலிவரி டேட் கொடுத்தப்பவே நானும் ரகுவும் சேர்ந்து எடுத்த முடிவுதான்). அப்போதிலிருந்து இன்றுவரைக்கும் எக்கச்சக்கமான விமர்சனங்கள். என் பெற்றோருக்கும் சரி ரகுவின் பெற்றோருக்கும் சரி நான் வேலையை ரிசைன் செய்வதில் துளிக்கூட இஷ்டமில்லை. அம்மா "எப்படியாவது லீவ எக்ஸ்டண்ட் பண்ணு. குழந்தைக்கு ஆறு மாசம் ஆனதும் நான் வளர்க்கறேன். நீ வேலைக்குப் போ. வாரக்கடைசியில் இங்க வந்துட்டு போ"ன்னாங்க. நீ ஏம்மா வேலைக்கு போல. இந்நேரம் நீ வேலைல இருந்திருந்தீன்னா தலைமையாசிரியையா ஆயிருக்கலாமேன்னு கேட்டேன்(அம்மா டீச்சர் டிரெய்னிங் முடிச்சுட்டு அரசாங்க வேலைல சேர இருந்தாங்க.). அவங்களால பதில் சொல்ல முடியலை. ஒரு வழியா அவர்களை சமாதானம் பண்ணியாச்சு. ஆனா கிட்டத்தட்ட ஒன்றரை வருடமாய் "ஏன் வேலையை விட்ட?" என்ற கேள்விக்கு பதில் சொல்லி எனக்கு அலுத்துவிட்டது. Atleast weekly once someone throws this question on me. நண்பர்கள் கூட ஒவ்வொரு முறையும் போன் செய்யும்போதும் அடுத்த என்ன பண்ண போறதா உத்தேசம் என்று கேட்பார்கள். நானும் ஆரம்பத்தில் ஒன்றிரண்டு தடவை ஜூனியர் ஸ்கூல் போகிற வரைக்கும் வேலைக்குப் போகபோவாதில்லை என்று சொன்னேன். ஆனா திரும்ப திரும்ப அதே கேள்வி? "90% எடுத்ததெல்லாம் வேஸ்ட்டாகுதே?" "அடுத்து என்ன பிளான்?" விதவிதமாக ஒரே கேள்வி. இவர்கள் எல்லாம் இப்படி அடிக்கடி கேட்பதால் நானென்னமோ தண்டத்துக்கு உட்கார்ந்திருக்கிற மாதிரி ஒரு ஃபீலிங். இதுக்கெல்ல்லாம் ஹைலைட்டாக கொஞ்ச நாள் முன்னாடி உறவினர் ஒருவர் அடித்த கமெண்ட், ஏற்கனவே காண்டுல இருந்த என்னை ரொம்பவே எரிச்சலடைய செய்துவிட்டது. அவருடனான உரையாடல்.
"ஏம்மா வேலைய ரிசைன் பண்ண?"
குழந்தைய பார்த்துக்கணும்.
"ஏன் உன் அம்மாவையோ மாமியாரையோ வர சொல்ல வேண்டியதுதானே?"
அவங்களால வர முடியாது.
"அப்ப என்னதான் பண்ணப்போற?"
-----
"கேக்கறேன்ல சொல்லு"
(மனதுக்குள்) தெரிஞ்சுகிட்டு என்ன பண்ணப்போறீங்க?
"எனக்கு முன்னமே தெரியும் இப்படியெல்லாம் ஆகும்ன்னு. அப்பவே சந்துரு(என் அப்பா) கிட்ட தலபாடா அடிச்சிக்கிட்டேன். Engineering எல்லாம் படிக்கவெக்காதடா. தண்ட செலவு தான். கேட்டானா அவன்? இப்ப பாரு தண்டத்துக்கு 1 லட்சம் போச்சு. உன்னெயெல்லாம் படிக்க வெச்சதே வேஸ்ட்."
(சரியான கோபம் எனக்கு) நீங்க எதுக்கு அழறீங்க? உங்க காசா போச்சு. எங்க அப்பா காசு தானே. போனா போட்டும். கத்திவிட்டு நகர்ந்துவிட்டேன்.
எனக்குத் தெரியும் படிப்பு என்றுமே வீணாகாதென்று. But திரும்ப திரும்ப துக்கம் விசாரிக்கர மாதிரி இப்படி ஆகிபோச்சேன்னு கேக்கும்போது ரொம்ப irritatinga தான் இருக்கு. இது வாழ்க்கையில் ஒரு கட்டம் தான் எனக்குத் தெரிவது கூட பேரன் பேத்தி எடுத்தவங்களுக்கு தெரியமாட்டேங்குதே? Atleast நண்பர்களாவது புரிஞ்சுப்பாங்கன்னு பார்த்தா. ஹூம். அக்கறைங்கற பேர்ல டார்ச்சராதான் இருக்கு. பார்ப்போம் இந்த இம்சை எவ்வளவு நாளைக்கு கண்டினியூ ஆகுதுன்னு.
டிஸ்கி : இது எப்பவோ எழுதினது. பதிவிட்ட கொஞ்சம் கோபம் குறையும்னு தோணிச்சு. அதான் பொலம்பிருக்கேன்.
Labels:
என்ன கொடுமை சார் இது,
சொந்தக் கதை,
பொதுவானவை
December 5, 2008
கொள்கைகளும் சில காம்பரமைஸ்களும்
டிஸ்கி : இது அரசியல் பதிவல்ல.
அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.
சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.
அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.
எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.
எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(
என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).
ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).
அமித்து அம்மா தன்னோட பதிவுல நமக்கு பிடிக்காத விஷயங்கள் கூட கட்டாயத்தின் பெயரில் பழக்கமாயிடுதுன்னு சொல்லிருந்தாங்க. அத படிச்சதிலிருந்து என்னோட பழக்கங்களும் சிலருக்காக அதை காம்ப்ரமைஸ் பண்ணிக்க வேண்டிய கட்டாயங்களும் பத்தி எழுதனும்னு தோணிச்சு.
சின்ன வயசுல இருந்தே (இப்பவும் நான் சின்னப்பொண்ணுதான்) எனக்கு பூ வைப்பது பிடிக்காது. அதுவும் இந்த கனகாம்பரம், டிசம்பர் பூ எல்லாம் பயங்கர அலர்ஜி. வீட்டில் ஏதாவது விசேஷம், பண்டிகை என்றால் கொஞ்சமே கொஞ்சமாய் மல்லி அல்லது முல்லை தலையில் குடியேறும். அதுகூட கொஞ்ச நேரம் தான். அம்மா கனகாம்பரம் கொடுக்கும்போதெல்லாம் திட்டுவேன். "ஏன் அப்படியே ஒரு பித்தளை சொம்பையும் கொடேன். மாங்குயிலே பூங்குயிலேன்னு ஆடறேனே"ன்னு கத்துவேன். ஆனா கல்யாணத்துக்கு அப்புறம் மாமியார் வீட்டில் எனக்கு பயங்கர ஷாக். அங்க டிசம்பர் பூவை காசு கொடுத்து வாங்குவார்கள். என்கிட்ட மாமியார் பூவை நீட்டும்போதெல்லாம் அப்புறம் வெச்சுக்கிறேன்மா என சொல்லி எஸ்ஸாயிடுவேன். கொஞ்ச நாளைக்கு அப்புறம் அவங்களாவே எனக்கு அந்தப் பூவெல்லாம் புடிக்காதுன்னு தெரிஞ்சுகிட்டாங்க. இப்ப நான் பூ வைக்கிறதுலருந்து தப்பிக்க என் பையன தான் காரணம் காட்டிக்கொண்டிருக்கிறேன். "இல்லம்மா பூ வைச்சா அது கீழ உதிருதா. சஞ்சு எடுத்து வாயிலப் போட்டுக்கிறானேன்னு வைக்கறதேல்ல". ஆனாலும் ஒரு சின்ன துணுக்காவது கொடுத்து வைச்சுக்கோன்னு சொல்லும்போது மறுக்க முடியல.
அடுத்தது தங்க நகை. மெல்லியதாய் ஒரு குட்டி செயின், கொஞ்சம் பெரிய புள்ளி அளவிற்கு தோடு. கல்யாணத்துக்கு முன்பு வரை இதுதான் என் நகை. எங்க வீட்டுல எல்லாருமே திட்டுவாங்க. பொம்பள பொண்ணு நகை மேல ஆசையே இல்லாம இருக்கேன்னு. அத்தை (அப்பாவின் அக்கா) வரும்போதெல்லாம் அம்மா என்கிட்ட கெஞ்சுவாங்க. வளையல் போட்டுக்கோ, கொலுசு போட்டுக்கோ, ஜிமிக்கி வெச்ச தோடு போட்டுக்கோன்னு. இல்லைன்னா பொண்ண வளர்த்துருக்கற லட்சணத்தப் பாருன்னு என்னதாண்டி சொல்லுவாங்க என்பாள். நீயேம்மா அடுத்தவங்களுக்கு பயந்து வாழற. உனக்குத் தெரியாத உன் வளர்ப்பைப்பற்றி என்று பேசி அவள் வாயடைப்பேன். அதே மாதிரி எனக்கு சின்ன வயசுல மூக்கு குத்தனும்னு சொன்னப்போ நான் எடுத்த பத்ரகாளி அவதாரத்தைப் பார்த்து எல்லாரும் கப்சிப். நிச்சயதார்த்தம் முடிஞ்சவுடனே என் மாமியார் கல்யாணத்துக்கு முன்னாடி மூக்குகுத்திடுமா என்று சொன்னபோது எனக்கு மயக்கமே வந்துவிட்டது. எங்கம்மா வேற நான் சொன்னா கேக்கல இல்ல இப்ப என்ன பண்ணுவேன்னு வெறுப்பேத்தினாங்க. வேற வழியில்லாம் சின்னக்குழந்தைங்கல்லாம் நான் கத்தறதை வேடிக்கைப் பார்க்க எனக்கு மூக்கு குத்திட்டாங்க. கல்யாணத்துக்கு முதல் நாள் சபையில வச்சு மாமியார் எனக்கு வைர மூக்குத்தி குடுத்தாங்க. ஆனா நல்லவேளையா என்கிட்டருந்து வைர மூக்குத்தியும், மூக்குத்திகிட்டரூந்து நானும் தப்பிக்க ஏதுவாய் எனக்கு மூக்கு குத்தின இடம் செப்டிக் ஆகிடுச்சு. டாக்டர் கிட்ட காமிச்சப்போது கொஞ்ச நாளைக்கு மூக்குத்திய கழட்டி வைங்கன்னுட்டாங்க. அப்ப கழட்டின மூக்குத்தி இரண்டரை வருஷமாய் பொட்டிக்குள்ளயே தூங்குது.
எனக்கு தங்க நெக்லஸ், ஆரம், போன்றவை அணியப் புடிக்காது. தெரிஞ்சிருந்தும் பெற்றோர் அவர்களுடைய மரியாதைக்கு எனக்கு எல்லாம் செஞ்சிக்கொடுத்தாங்க. அதுல பிரச்சன்னை என்னன்னா என் மாமியார் எதாவது ஒரு விசேஷம்னா போதும். எல்லாத்தையும் எடுத்து போட்டுக்கோ என்பார். எனக்கு நகைக்கடை மாடல் போல் தோற்றமளிப்பதில் இஷ்டமேகிடையாது. ஆனா மாமியார் தப்பா எடுத்துக்காத மாதிரியும் சொல்லனும். இந்த விஷயத்தில் என்னோட ஆபத்பாந்தவன் ரகுதான். அவருக்கும் தங்க நகைகள் மேல் ஈடுபாடு இல்லாததால் "உங்க பிள்ளை தாம்மா போடக்கூடாதுன்னு சொல்லிட்டார். ரகு ஓகே சொன்னா நான் போட்டுக்கிறேன்" என அவரை கோத்துவிட்டு நான் அப்ஸ்காண்ட் ஆயிடுவேன்.
எல்லா விதத்துலயும் ஒரளவுக்கு தப்பிச்சிக்கிட்ட என்னை கோழி அமுக்குறாபோல சிக்க வச்சது என்னோட வளைகாப்பன்னிக்குதான். குழந்தைக்கு நல்லதுன்னு சொல்லி சொல்லியே ஒவ்வொரு கையிலயும் ரெண்டு டஜன் வளையல்களையும், தலையில் ஒரு ஏழெட்டு முழம் பூவையும் கட்டிட்டாங்க. அன்னிக்கு தான் முதன்முதலா தலைய குனிஞ்சுகிட்டு நடந்தேன்:(
என்னைப்பொறுத்த வரை மற்றவர்களுக்கு என் செயல்களால் மட்டுமே என் மீது மதிப்பு ஏற்பட வேண்டுமே தவிர, நான் அணியும் நகையோ, என் அந்தஸ்தோ அதற்கு காரணமாகக்கூடாது (இப்ப எதுக்கு இந்த எக்ஸ்ட்ரா பிட்டுன்னு கேக்கறீங்களா?? எல்லாம் ஒரு விளம்பரம் தான்).
ஆக கொள்கைகளில் உறுதியாக இருக்கலாம். ஆனால் நீங்கள் மறுப்பது மற்றவரின் மனது நோகாதபடி இருக்க வேண்டும் (எல்லாரும் கைத்தட்டுங்க. நான் ஒரு சூப்பர் மெசேஜ் சொல்லிருக்கேன்).
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்,
பொதுவானவை
Subscribe to:
Posts (Atom)