இதோ அதோ என தமிழகத்திற்குப் போக்கு காட்டிக்கொண்டிருக்கிறது தென் மேற்கு பருவ மழை. அப்பப்ப மேகங்கள் மீட்டிங் போடுவதைப் பார்த்து பிச்சிகிட்டு கொட்டப்போகுதுன்னு அவசர அவசரமா கொடியில கிடக்கிற துணியெல்லாம் எடுத்துட்டு வந்தா அடுத்த நிமிஷமே வெயில் சுள்ளுன்னு அடிக்குது. ஆனாலும் எப்பவாச்சும் போடற தூறலுக்கே தண்ணி தேங்கிடுது. இந்த லட்சணத்துல சீசன் களை கட்டிச்சுன்னா. வெளங்கிரும். மறுபடியும் தெர்மாகோல் படகு, சப்வேயில் சிக்கி மூழ்கும் டைட்டானிக் சாரி MTC என நிதம் நியூஸ் தான்.
தென் மேற்கு சீசன் பொதுவாக கேரளாவில் மே மாதத்தின் கடைசி வாரத்திலோ, ஜூன் முதலோ தொடங்கும். ஜூலை மாதம் 15 தேதிவாக்கில் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விசிட் அடித்திருக்கும். நமக்கு ஜூன் இரண்டு அல்லது மூன்றாம் வாரம் பிக் அப் ஆகும் சீசன் கொஞ்சம் தாமதமாகிறது. இந்த வருடம் நார்மலான அளவு தான் மழையிருக்கும் என வானிலைத் துறை கணித்திருக்கிறார்கள். வருண பகவான் இப்ப கொஞ்சம் ஹைபர்நேட்டிங் ப்ரீயட்ல இருக்காராம். ரெஸ்ட் முடிச்சு இன்னும் பத்து நாள்ல வந்துடுவார்ன்னு தூதர்களான மெட்ராலாஜிகல் டிபார்ட்மெண்ட் ஆளுங்க சொல்றாங்க. போன வாரம் வறட்சில தவித்த வட இந்தியாவுக்கு இந்த தடவை ஆறுதலளிக்கும் வகையில் மழை இருக்கும்கறாங்க. பார்ப்போம்.
சூடான டீயுடன் மழைக்காலத்தை வரவேற்க தயாராகும் அதே நேரம் நம்மால் முடிந்த சில காரியங்களை செய்வதன் மூலம் மழைக்காலத்தை சபிக்காமல் ரசிக்க முயற்சிக்கலாம். அதுக்கு இந்த பதிவ ஒரு தடவ படிச்சிடுங்க. நான் எழுதனதிலேயே உருப்படியான பதிவு இதுதான்னு நிறைய பேர் சொல்வாங்க.
ஈரமான பாட்டு ரெண்டு.
Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts
June 30, 2010
April 21, 2010
சென்னையின் மழைக்காலங்களில்...
கிட்டத்தட்ட 12 வருடங்களை வேலூர் வெயிலில் கரைத்த எனக்கு சென்னையின் வெயிலும் சரி மழையும் சரி எரிச்சல் தரும் விஷயமாகவே இருந்தன. வேலூரில் என்ன தான் கொளுத்தியெடுத்தாலும் கசகசப்பு இருக்காது. சென்னை நேரெதிர். கொஞ்சமே வெயிலடித்தாலும் கசகசவென எரிச்சல் படுத்திவிடும். என்றைக்குமே மழையில் நனைவதென்பது எனக்கு அறவே பிடிக்காது. டிரெஸ் நனைந்து, முடியெல்லாம் ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொண்டு i hate it. மழையில் நனைய ரொம்பப் பிடிக்கும் என்று சொல்பவர்களை நினைத்து மனதிற்குள் சிரித்துக்கொள்வேன் (யாரையோ இம்ப்ரெஸ் செய்யவே இந்த டயலாக் வரும். Or to show that u r very romantic).
இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.

அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.
ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.
பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)
இது சென்னையில் எனக்கு ஐந்தாவது வருடம். 2005இல் வேலை சேர்ந்து கதீட்ரல் ரோடில் குப்பைக் கொட்டிக் கொண்டிருந்தோம். அந்த வருட மழை என்னை நிஜமாகவே மிரட்டி விட்டது. பெசண்ட் நகரிலிருந்து 29C பிடித்து ஆபிஸ் போகனும். எந்த முன்னறிவிப்புமின்றி அடித்து ஆட ஆரம்பித்திருந்தது மழை. அதற்கு முன் தினம் தான் ரூமுக்கு வெட்டிவேர் தட்டி போடுவது பற்றி நானும் ஹேமாவும் டிஸ்கஸ் செய்தோம். மறுநாள் பஸ்ஸில் போனால் அதிர்ச்சி. சாந்தோம் சிக்னலிலிருந்து ஐ.ஜி ஆபிஸ் வரை வெள்ளம் தான் ரோட்டில். நானும் ஹேமாவும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். ஸ்டாப்பிங்கில் இறங்கி ரோட் கிராஸ் செய்து ஆபிஸ் நுழைவதற்குள் (மேட்டர் ஆஃப் 3 மினிட்ஸ்) ரெண்டு பேரும் நன்றாக நனைந்திருந்தோம். ஆபிசே வெறிச்சோடியிருந்தது. Adminல் கேட்டால் "மேட்டர் தெரியாதா. ஹெவி டவுன் போர் (மழைங்கறத எப்படியெல்லாம் சொல்லுது பாரு பயபுள்ள). அதனால நிறைய பேர் ஆபிஸ் வரல. அநேகமாக இன்னிக்கு லீவு வுட்றுவாங்கன்னே நினைக்கிறேன்" என வயிற்றில் புளியைக் கரைத்தனர். பின்னே. முக்கால்வாசி நாட்கள் வெறும் பாலும், ஆப்பிளும் முழுங்கிட்டு ஆபிஸ் லஞ்சை நம்பி வரும் எங்களுக்கு அந்த செய்தி பேரிடியாகவே இருந்தது. ஆபிஸை விட்டு வெளியே போகமுடியவில்லை. எல்லாத்தையும் விட பேரதிர்ச்சியாக பில்டர் காபி/டீ மெஷினை ஆபரேட் செய்பவர்கள் எவரும் வரவில்லை. எனக்கு அந்த பவுடர் பால் டீ உள்ளவே இறங்காது. ஆட்டோ பஸ் என எதுவும் கிடைக்கல. இன்னிக்கு ஆபிஸ்லேயே தான் தங்கவேண்டிவரும்போல என நொந்துக்கொண்டோம். இதற்குள் தொலைக்காட்சிகளில் செய்தி பார்த்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி வரும்படி போன் செய்தார்கள். ரூமுக்கு போகவே வக்கத்துப் போய் ஆபிஸ்ல உட்கார்ந்திருக்கோம். ஸ்டேஷன் போக வண்டி கிடைக்கவேயில்லை. அப்புறம் அப்பா உறவினர்களிடம் பேசி வண்டி ஏற்பாடு செய்து ஊர் போய் சேர்ந்தோம்.

அதே ஆண்டு இறுதியில் கதீட்ரலிலிருந்து பெருங்குடி மாற்றிவிட்டார்கள். சுத்தம். ஆபிஸ் தனியாய் மிதக்கிறது. அன்னிக்கின்னு ஆபிஸ்ல முக்கியமா ஒரு கிளையெண்ட் கால். முந்தின நாள் பேசிட்டு படுக்கவே 2 ஆகிவிட்டதால் வழக்கம்போல எல்லாமே லேட். கரெக்டாய் பஸ் மிஸ் பண்ணிட்டோம். ஆட்டோ பிடித்து போனால் SRP tools தாண்டியதும் ஆட்டோக்குள்ள தண்ணி வர ஆரம்பிச்சிடுச்சு. ஆட்டோகாரர் கொஞ்சம் இரக்கப்பட்டு ரோட்டோரமா கொஞ்சூண்டு மேடா இருந்த இடத்துல இறக்கிவிட்டுட்டு போய்ட்டார். அப்புறம் கம்பெனி பஸ்ஸ நிறுத்தி ட்ரைவர் காலில் விழாத குறையா கெஞ்சி ஆபிஸ் இருக்கும் ரூட்டில் போய் எங்களிருவரையும் இறக்கிவிட்டு போகும்படி வேண்டினோம். போனாபோகுதுன்னு அவரும் பெரிய மனசு பண்ணதால கரெக்டா மீட்டிங் ஆரம்பிக்கும்போது உள்ள போயி, வழக்கம்போல இங்கிலீஷ் பட டயலாக் மாதிரி அவங்க பேசினதுக்கெல்லாம் "Yes" "No" "Sure" "Ok" "Fine" போட்டுட்டு வந்தேன். புதுசாய் ஒரு PL வேறு வந்திருந்தார். லைட்டா தூறல் போட்டாலே அவர் ஆபிஸ் வரமாட்டார். மழை பெய்த மறுநாள் சரியாக பத்து மணிக்கு அவரிடமிருந்து போன் வரும். "Hey i'm struck @ home due to this rain. I think i'll not b able to make it to office today. If u guys need anything call me". ஹூக்கும். இந்த மழைக்கு சூடா மசால் வடையும் டீயும் தான் வேணும். அத அவர்ட்ட கேக்க முடியுமா என அருகிலிருப்பவன் உதிர்க்கும் மொக்கைக்கு சிரிப்பதா வேண்டாமா என யோசிப்பதில் கொஞ்ச நேரம் செலவிடப்படும். 2006 ஆம் ஆண்டு என் கல்யாணத்திற்கு 1 மாதத்திற்கு முன்பு மறுபடியும் பிராஜெக்ட் மூவ் பண்ணாங்க. இந்தமுறை இன்னும் டெரராய் OMR பிராஞ்ச். அங்கனயிருந்து வூடு போய் சேர நல்ல நாளிலேயே குறைஞ்சது ஒன்றரை மணி நேரம் ஆகும். இதுல மழைன்னா கேக்கவே வேணாம். எங்க பள்ளமிருக்குன்னு தெரியவே தெரியாது. ஞாயிறுகளில் பெசண்ட் நகரில் நிறைய பேர் வீலிங் பழகுவார்கள். நல்ல ஸ்பீடில் வந்து சரக்கென்று பிரேக் அடித்து பின் வீலை ஆகாசத்தில் சுழற்றுவார்கள். அந்த மாதிரி பண்ணாமலேயே நிறைய பைக்குகள் இந்த பள்ளத்தில் கிடக்கும். கார்கள் கூட ஒரு பத்து பேர் "ஏலேலோ ஐலசா" பாட ஒருக்களித்துப் படுத்திருப்பதுபோல் பள்ளத்தில் சிக்கியிருக்கும். ஒழுங்கா வீடு போய் சேரனும்டா சாமீ என ஆன் த ஸ்பாட் வேண்டுதல்கள் பிறக்கும்.
ஓ.எம்.ஆரோடு என் கேரியர் ஓரியண்டட் வாழ்க்கைக்கு தொடரும் போட்டாச்சு. 2007ல் ஜூனியர் பிறந்தபின் மதுராந்தகத்தில் கொஞ்ச காலமும், பாண்டிச்சேரியில் கொஞ்ச காலமும் இருந்துவிட்டு எண்ட் ஆஃப் சீசன் போது மறுபடியும் சென்னை. இந்தமுறையும் மழை கொஞ்சம் டெரராய் இருந்தது. ஜூனியரின் உடல்நிலையில் மாற்றம், குழந்தை துணிகள் காய்வது போன்ற பிரச்சனைகளோடு வீட்டுக்குள் வந்துவிடும் குட்டி குட்டி தவளைகள் கிலியேற்படுத்திக்கொண்டிருந்தன:( 2008 தாம்பரத்தில். பெரிய கஷ்டமேதும் தெரியவில்லை. குழந்தை தான் மாற்றத்தை அடாப்ட் செய்ய திணறினான். இப்போ மறுபடியும் சென்னையில். இந்த தடவை எப்படி ஆட்டுவிக்கிறதென பார்க்கனும். "உஸ்ஸ் அப்பா" என புலம்பிக்கொண்டே வெயிலை சமாளித்துவிட முடிகிறது. மழைதான் ரெகுலர் ரொட்டினையே புரட்டிப் போட்டுவிடுகிறது. தண்ணீர் தேங்கி வழுக்கும் தரைகள், எவ்வளவு பெருக்கி துடைத்தாலும் சேறாகும் வீடு, சரிவர காயாமல் கிடக்கும் துணி, அடிக்கடி எட்டிப் பார்க்கும் ஜல்பு, இவற்றிர்கெல்லாம் மேலாக தூங்கிட்டே இருந்தா நல்லாருக்கும் என தோன்றும் எண்ணம் என மழையினால் ஏற்படும் அசௌகரியங்கள் ஜாஸ்தி தான். இருந்தாலும் மழையில் நனைந்து ஒட்டிக்கொண்டுவிட்ட சிறகுகளை பிரிக்க உடலை உதறும் புறாவை ஆறாவது மாடியிலிருந்து சூடாக ஆவி பறக்கும் இஞ்சி டீயோடு ரசிப்பதிலும் சுகம் இருக்கத்தான் செய்கிறது.
பி.கு : போன வருடம் மழை சீசன் போது எழுதியது. அப்படியே கொஞ்சம் வெளியூர் போக வேண்டியிருப்பதால் ட்ராப்டிலிருந்து தூசி தட்டி எடுத்து போட்டிருக்கிறேன். வெயிலுக்கு காண்ட்ரவர்சியலா மழைப் பதிவு:)
Labels:
சொந்தக் கதை,
நினைவுகள்,
மழை
Subscribe to:
Posts (Atom)