December 29, 2011

Scribblings 2011

மற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.

உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.

பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.

December 19, 2011

Scribblings 19-12-2011

இதோ அதோன்னு ஆட்டம் காட்டிட்டு ஒருவழியா கூகிள் பஸ்ஸ மூடிட்டாங்க. ரொம்ப நாள் கூடப் பழகின ஒருத்தர் திடீர்ன்னு இல்லாமப் போனா மாதிரி வெறுமையா இருக்கு. ப்ளஸ் இருக்குன்னாலும், பஸ்ஸின் இடத்தை வேற எந்த தளத்தாலும் ஆக்ரமிக்க முடியாது. கொஞ்ச நஞ்ச லூட்டியா? என்னா ஆட்டம்? என்னா கும்மி? ப்ளஸ் ரொம்ப கொசகொசன்னு சந்தைக்கடை மாதிரி இருக்க ஃபீலிங்:( இப்போதைக்கு அங்க போற ஐடியா இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். மிஸ் யூ கூகிள் பஸ்.
***********

பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********

2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)


************

அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு

மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********

இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.

கார் ரோட்ல விடுவியாம்மா?

எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.

பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?

கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?

அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.

ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?

ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?

ஙே!!!!

எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********

December 16, 2011

The Rock

The Rock - சென்னையில் மற்றுமொரு தீம் ரெஸ்டாரெண்ட். அடையார் ரெயின் ஃபாரெஸ்ட் போயிருக்கீங்களா. கிட்டத்தட்ட அதோட ஜெராக்ஸ் காப்பி தான் இது. ரெண்டு பெரிய வித்யாசம். ரெயின் ஃபாரெஸ்ட்டை விட நல்ல சுவையான உணவு வகைகள், குறைவான விலை. ஓரியண்ட்டல், தந்தூர் வகை உணவுகளை பரிமாறும் இந்த உணவகம் அடையார், அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் இயங்கி வருகிறது.

நான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்‌ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.






குறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.

மேலதிக தகவல்கள்

உணவகம் - தி ராக்
உணவு/Cuisine - Oriental, Tandoor Veg & Non-Veg. No buffet.
இடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)
அண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)
வேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)
டப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.

பரிந்துரை : Must try.

December 15, 2011

மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ

டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.


விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.

பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.

"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"

அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.

இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.

என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.

ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.

நீங்க சொல்றது நேக்கு புரியலை.

அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.

கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.

தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?

அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,

நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.

அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?

பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.

டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.

கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.

ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.

சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.

ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.

பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க


எச்ச

ரி

ர்ரீ



க்கா



ம்ம்மா

சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.

பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?

இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.

இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.

இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.

சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.

நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?

என்ன ஐய்ரே?

இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?

அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.

அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.

யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.

அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.


அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே


யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.

கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.

கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?

காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா


அடுத்தது காம்போதி ராகம்.

யாருக்கு பேதி?

பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.

குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே


இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.

கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.

நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?

நட்டை ராகம்.

மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி


சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?

எதுக்கு?

இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..

என் சைஸ் உங்களுக்கு பத்தாது.

அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?

வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.

அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.

அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?

குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.

ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.


-மார்கழி ஆரம்பிப்பதை முன்னிட்டு மீள்ஸ்:)

December 14, 2011

நினைவெல்லாம் நிவேதா - 4

நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் ரோட்டில் அந்த கட்டிடம் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தது. கொஞ்சமே கொஞ்சம் புல்வெளி, ஒரு சின்ன நீரூற்று, நாலைந்து பூந்தொட்டிகளை தாண்டி, புஷ் மீ என்ற கண்ணாடிக் கதவை தள்ளி, அரைவட்ட மேஜையில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நடந்தார்கள் கணேஷும் வசந்தும். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்த பெண்ணைப் பார்த்ததும் சன்னமாக விசிலடித்தான் வசந்த். இவர்களைப் பார்த்ததுமே ஒரு இன்ஸ்டெண்ட் புன்னகை அந்தப் பெண்ணின் இதழில் ஒட்டிக்கொண்டது.

“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.

மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.

“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.

”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”

“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”

”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.

“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.

“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.

இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.

“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.

“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”

“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.

”மிஸ்டர் அஷோக்?”

கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.

”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.

“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.

”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”

“இன்னும் தீர்மானிக்கலை.”

“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”

“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”

“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”

“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”

”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”

“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”

“யெஸ்”

”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”

“யெஸ். அது சுத்த...”

“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”

“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.

கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.

December 13, 2011

கல்கியில் ஜூனியர் அப்டேட்ஸ்

நேற்றிரவு:

“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”

“ஏண்டா?”

“சத்தமா வருதும்மா”

“அதனால என்னடா?”

“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”

இன்று காலை:

பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...

“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”

ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:

படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...

“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”

# பாசக்கார பய :)
============================

“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”

“அப்புறமா...”

“இப்ப சொல்லாம்டா.”

“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”

#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================

டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..

“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”

“யார்றா சொன்னா இதெல்லாம்.”

“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”

# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================

“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?

பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================

“போதும்மா.”

“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”


“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”

“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”

ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.

#ஙே!!!
================================

இன்னைக்கு என்ன டே?"

பிள்ளையார் சதுர்த்தி."

அப்படின்னா?"

”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."

ஹாப்பி பர்த்டேவா?"

ஆமாம்."

உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"

# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================

மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...

ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.

# கேப்பியா? கேப்பியா...கேப்பியா

-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.

December 12, 2011

Scribblings 12-12-2011

எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****

முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************

டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************

எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************

விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.

December 8, 2011

நினைவெல்லாம் நிவேதா - 3

நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2

ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.

“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.

விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.

”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”

“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”

மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.

“ரூம் காலியா இருக்கே?”

“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”

ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.

“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”

“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.

“நீ எங்கிருந்த?”

“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”

“வாட்ச்மேன்?”

“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.

“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”

“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”

“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”

”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”

“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”

“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”

”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”

”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”

“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”

”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”

“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”

“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”

“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”

“புரியலீங்க."

”சண்ட போட்டுப்பாங்களா?”

“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”

வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.

“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”

“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”

“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”

கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.

“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”

December 5, 2011

அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

தோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.

வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.

க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.

(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.

ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.

டொக்

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்

***********

நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?

மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.

நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.

மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.

நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

*************

நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.

மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.

நண்பன் : &^#$^*%$*

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

***************

தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.

நான் : தேங்ஸ். அப்புறம்.

தோழி : என்னடி அப்புறம்?

நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.

தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.

நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?

தோழி : ^&%(&(()^^% டொக்

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************

If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..

ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.

வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?

இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.

#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?

November 21, 2011

நினைவெல்லாம் நிவேதா - 2

கணேஷும், வசந்தும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.

“ஓ மை காட். வீ ஃபீல் சாரி பார் யூ. என்ன நடந்தது?” என்றான் கணேஷ்.

“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார். தூக்குல தொங்கிண்டிருந்தா. நாக்கக் கடிச்சிண்டு, முழி பிதுங்கி. ஐயோ நிவேதா...”

ஜெயராமனைக் கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது கணேஷிற்கு. அவர் அழுது ஓயும் வரைக் காத்திருந்தனர் இருவரும். இருபது நிமிடத்தில் மொத்தக் கண்ணீரையும் செலவழித்துவிட்டு நிமிர்ந்தார் ஜெயராமன்.

"ஈஸி. ஈஸி. டூ வி ஹேவ் எனிதிங் இன் திஸ் சூசைட் சார்?" என்றான் வசந்த்.

"யெஸ். நிவேதா எதுக்காக உங்கள பார்க்க வந்தாங்கறத சொல்லமுடியுமா? ஐ பீல் ஷி வாஸ் ட்ரிக்கர்ட் டு கமிட் சுசைட்" என ஜெயராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்ஃபோனில் ஜென்ஸி காதல் ஓவியம் பாடஆரம்பித்தார். படக்கென ஃபோனை எடுத்து “பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் லைனைத் துண்டித்தார்.

“ஸாரி. வேர் வேர் வி? ஆங். நிவேதா உங்களை எதுக்காக பார்க்க வந்தா?”

"மிஸஸ் நிவேதா இங்கே வந்தாங்களே தவிர எந்த விவரத்தையும் நாங்க கேட்டுக்கல. வீ ஆஸ்க்ட் ஹெர் டு மீட் அஸ் சம்டைம் லேட்டர். அதுக்கப்புறம் அவங்க வரல. ஆனா நீங்க வந்திருக்கீங்க. வித் ஹெர் டெத் நியூஸ். ஹூம். பை த வே நிவேதா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என நீங்கள் நினைக்க காரணம்?"

"அது வந்து...”

“தயங்காம சொல்லுங்க சார்.”

“சமீப காலமாக அவளிடமிருந்து எனக்கு சில இமெயில்கள் வந்தது. அஷோக் அவளிடம் பிரியமாக இல்லையென. அவளை இக்னோர் செய்கிறார் என. இரண்டாவது நிவேதாவின் பெயரில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு. ஒரு விபத்தில் இறந்து போன என் அண்ணா, நிவேதாவிற்கு கல்யாணம் ஆகும்வரை நான் கார்டியனாக இருக்கவேண்டுமென்றும், கல்யாணத்திற்கு பின்னர் அவளுடைய கணவர் கார்டியனாக இருக்கவேண்டுமெனவும் உயிலெழுதியிருக்கிறார். நிவேதாவிற்குப் பிறகு சொத்துக்கள் அஷோக்கிற்குதான் போகும்.”

“ஓ. நீங்கள் நிவேதாவின் கணவரை சந்தேகப் படுகிறீர்களா?”

”ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ்”

”அப்ப நீங்க போலீஸ்ல கம்ப்ளையெண்ட் பண்ணலாமே?”

“செய்யப்போகிறேன். அஷோக் மேல் சந்தேகம் இருப்பதாக. மீன்வைல் நிவேதா உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். இஃப் யூ கைஸ் டோண்ட் மைண்ட் எனக்காக இந்த வழக்கை ப்ரொசீட் பண்ண முடியுமா?”

"வி வில் லெட் யூ நோ சார்.”

“இது என் கார்ட். ஐ’ல் பி வெயிட்டிங் ஃபார் யூ கைஸ்”.

“ஒரு நிமிஷம் சார். நிவேதா எங்கள பார்க்க வந்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் வசந்த்.

”வெல். ஹாலில் இருந்த ஸ்க்ரிப்ளிங் பேடில் உங்கள் பெயரையும், அட்ரஸையும் கிறுக்கி வைத்திருந்தாள். உங்களைப் பற்றி விசாரித்துப் பார்த்தேன். எதற்காக அவளுக்கு ஒரு வக்கீலின் முகவரி தேவைப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள வந்தேன்” என்றார் ஜெயராமன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு. ”ஒக்கே எனக்கு டைமாச்சு. எந்த முடிவாக இருந்தாலும் ஒரு கால் பண்ணுங்க” என சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.

”என்ன பாஸ். போரடிக்குதுன்னு சொன்னீங்களே. உள்ள இறங்கிடுவோமா?” என்றான் வசந்த்.

ஜெயராமன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் “ம்” என்றான்.

November 10, 2011

Scribblings 10-11-2011

சென்ற பதிவோட Scribblings 250 பதிவு பார்த்திருச்சு. பெரிய சாதனையெல்லாம் ஒன்னுமில்லைன்னாலும், மொக்கை போட்டே இம்புட்டு பதிவு தேத்தினது (எனக்கு) பெரிய விஷயம். அதோட நம்ம ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் 250 ஆகிடுச்சு. ஹை. வாட் எ மாட்ச்:) ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே.
******

ஏற்கனவே நான் வண்டியோட்டப் பழகின வீரதீர பராக்கிரமங்கள எழுதியிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு திரும்பவும் கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். ஏற்கனவே பழகின விஷயமாருந்தாலும், சென்னை ட்ராஃபிக்கை நினைச்சாலே உதறது. இன்னியோட ஆறு க்ளாஸ் வண்டிக்கும், சொல்லித்தர்றவருக்கும் எந்த சேதாரமுமில்லாம வெற்றிகரமா முடிஞ்சிருச்சு (ஏதாவதுன்னா எகிறடமாட்டோம்:)). இன்னும் 6 க்ளாஸ் பாக்கி. ஆண்டவா ரோட்ல போறவங்கள காப்பத்துப்பா.
*******

ஒரு வாரமா அடிச்சு ஊத்திட்டு, ஒரு வழியா மழை ஓஞ்சிருச்சு. ஒரு வாரத்துக்கே, முடியல. ரோடெல்லாம் தண்ணி. வீட்டு வாசல்ல, கணுக்கால்க்கும் மேல தண்ணி தேங்கியிருந்தது. பெசண்ட் நகர் MG ரோடு ரொம்ப மோசமாகிருச்சு. அதுவும் வண்ணாந்துறை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளம் விழுந்து, வண்டில போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. எப்பதான் சரி பண்ணுவாங்களோ:(
*******

ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்துல மம்மி, ஷிஃப்டிங் வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க. இதையெல்லாம் மாத்தறதுக்கு, உருப்படியா சாலைகளை சீரமைக்கறது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இப்ப சென்னை மக்களுக்கு தேவை, மோசமான சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து விடுதலையும், குப்பைகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளிலிருந்து விடிவும்தான். இல்ல இப்படித்தான் தொடரும், அதுக்குத்தான் நிறைய ஆஸ்பத்திரி தொறக்கறாங்களோ என்னமோ.
**********

சமீபக்காலங்களில் ரெண்டு ஆல்பங்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒன்னு மயக்கம் என்ன. மற்றொன்று Rockstar. மயக்கம் என்ன படத்தில் எல்லா பாட்டுகளுமே பிடித்திருக்கிறது. “நான் சொன்னதும் மழை வந்துச்சா?”, “ஓட ஓட தூரம் குறையல”, “பிறை தேடும் இரவில்” ஆகிய பாடல்கள் ஃபேவரைட். அதே போல் அந்த தீம் ம்யூசிக். ஆவ்சம். கேட்க கேட்க எங்கேயோ பறக்கும் ஃபீலிங். ராக் ஸ்டாரில் ரஹ்மான் சிம்ப்ளி ராக்ஸ். சட்டா ஹக், குன் ஃபாயா, கட்டியா கரூன், ஜோ பி மைன், தும் ஹோ, நாதான் பரிந்தே என அத்தனையும் அட்டகாசம். வெல்கம் பேக் ரஹ்மான்.

November 7, 2011

இம்சை விளம்பரம்

டிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.

தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.

ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.

இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)

இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)

இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?

இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.

இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)

இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).

கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?

#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)

October 31, 2011

நினைவெல்லாம் நிவேதா - 1

கணேஷ் காதம்பரி கேஸ்கட்டில் தலையைக் கொடுத்திருந்தான்.

“இனிமே இந்த மாதிரி அராத்து கேஸ்லாம் என்கிட்ட கொண்டுவராதடா. சரியா இழுத்தடிக்குது. காம்ப்ரமைஸ்க்கு வழியிருக்காப் பாரு.”

“என்ன பாஸ். திடுதிப்புன்னு காம்ப்ரமைஸ்ன்னுட்டீங்க. நான் இப்பதான் பாஸ் காதம்பரிக்கு கைரேகை பார்க்கிற அளவுக்கு வந்திருக்கேன். மச்ச சாஸ்திரம் பார்க்கனும். ச்சே சொல்லனும். அப்புறம்..”

“ஷட் அப். வசந்த்.”

சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது. காதம்பரி என விசிலடித்துக்கொண்டே கதவை திறந்த வசந்தின் விசில் சத்தம் சட்டென நின்றது.

“மிஸ்டர் கணேஷைப் பார்க்கனும்” என்ற பெண்ணுக்கு 23 வயதிருக்கும்.

“அப்பாயிண்ட்மெண்ட் இருக்கா?” என்றான் வசந்த் அவளை கண்களால் அளந்துக்கொண்டே.

“இல்லை. ஆனால் ரொம்ப அவசரம்”.

“சாரி மிசஸ்???”

”மிஸஸ் நிவேதா”

“சாரி மிஸஸ் நிவேதா. பாஸ் இப்போது கோர்ட்டுக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறார். றோம். மாலையில் ஒரு போன் செய்துவிட்டு வாருங்களேன்”

“ஐ வோண்ட் டேக் மோர் தென் டென் மினிட்ஸ். ப்ளீஸ். ஐ’ம் கன்ப்யூஸ்ட். ஐ நீட் ஹிஸ் ஹெல்ப் டெஸ்பரேட்லி.”

“நீங்க பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்கமாட்டீங்க. ஆனா இங்கிருந்து கோர்ட்டுக்குப் போக ட்ராபிக் சுளையா முக்கா மணிநேரத்த முழுங்கிடுமே. லேட்டாப் போனா கிருஷ்ணமாச்சாரி வாய்தா வாங்கிடுவார். ஏற்கனவே பாஸ் காதம்பரி கேஸால கடுப்புல இருக்கார். இதயே காரணம் காட்டி கழட்டி விட்டுட்டார்னா? நான் அட்லீஸ்ட் மச்ச சாஸ்திரமாவது பார்க்கனும்”

“எக்ஸ்யூஸ் மீ?”

“சாரி. உங்களுக்குப் புரியாது. நீங்க போய்ட்டு அப்புறமா வாங்களேன்.”

அந்தப் பெண் விழிகளில் அப்பட்டமாய் ஏமாற்றத்தைக் காட்டிவிட்டு நகர்ந்தாள்.

“இன்னிக்கு அடைமழை நிச்சயம்டா வசந்த்”

“நீங்க வேற பாஸ். 40 கிட்ட கொளுத்தறது. இப்போதைக்கு எந்த சைக்ளோனும் கிடையாதுன்னு வேற சொல்லிட்டாங்க. இப்ப ரமணனுக்கு பதிலா குழந்தைவேலுன்னு ஒருத்தர் வர்றார். பார்த்தீங்களோ?”

“டேய். ஒரு பொண்ண. அதுவும் ஜீன்ஸ் குர்தாவுல வந்த பொண்ண, முக்கியமா ரொம்ப அழகா இருந்த பொண்ண வசந்த் திருப்பியனுப்பிருக்கான்னா அது இயற்கைக்கு அப்பாற்பட்ட
விஷயமில்லயா?"

"நீங்க இன்னும் பழைய வசந்தாவே பார்க்கறீங்க. அவன் செத்துட்டான் பாஸ்"

"இப்பதான் காதம்பரின்னு கூப்பாடு போட்டுக்கிட்டிருந்த?"

"ஐயோ பாஸ். கல்யாணமான பொண்ணுங்களுக்கு ரூட் விடறதில்லன்னு பாலிசி கொண்டுவந்திருக்கேன். நெத்தி வகிட்ல குங்குமம் வச்சிருந்தது பாஸ்."

"சரிதான். எதுக்குடா வந்திருப்பா? முஞ்சு முழுக்க கவலை கபடியாடித்து."

"டைவர்ஸ் சம்பந்தமா டவுட் கேக்க வந்திருப்பாங்க பாஸ். பிட்ஸா வாங்கித்தரலன்னாகூட பிரியறதுக்கு ரெடியா இருக்காங்க பாஸ். ஹூம்"

"என்னவோ. சரிக் கிளம்புடா."

"ஆனாலும் நீங்க ரொம்பவே அடம்பிடிக்கறீங்க பாஸ். காரையும் மாத்த மாட்டேங்கறீங்க. ஆபிஸையும் மாத்த மாட்டேங்கறீங்க. ரெண்டுமே படுத்தறது. மவுண்ட் ரோட்ல ஆடி ஷோரூம்
தொறந்துருக்கான் பாஸ். வண்டி டக்கரா இருக்கு. ரிசப்ஷனிஸ்ட் பேர் ரீட்டா. அவ வண்டியவிட சூப்பரா இருக்கா பாஸ். ஒருதடவையாவது ஓட்டிப் பார்த்தடனும்."

"டேய்ய்.."

"நான் வண்டிய சொன்னேன் பாஸ்."

"யுவர் ஆனர் காதம்பரி கொடுத்துள்ள புகாரில் இம்மியளவும் உண்மையில்லை" என ஆரம்பித்து எதிர்த்தரப்பு வக்கீல் போரடித்துக்கொண்டிருந்ததை கனேஷும், வசந்தும் கன்னத்தில்
கைவைத்தபடி வேண்டா வெறுப்பாய் கேட்டுக்கொண்டிருந்தனர். ஆடி அசைந்து இரண்டு அரசுத் தரப்பு சாட்சிகள் சொன்னவற்றை மகாப் பொறுமையுடன் கேட்ட நீதிபதி வழக்கை ஒத்தி
வைப்பதாகக் கூறி எழுந்துச் சென்றார்,

"சட். சரியான நச கேஸு" என்று புலம்பியபடியே ஆபிஸ் வந்து சேர்ந்தனர் இருவரும். பையன் வாங்கிவந்த டீக்கு சிகரெட்டோடு கல்யாணம் நடத்திவிட்டு கேஸ்கட்டுகளில் மூழ்கினர்.

"ஒரு வாரம் ரொம்ப ஹெக்டிக்கா போச்சுடா. பேசாம கொஞ்ச நாளைக்கு எங்கயாவது தலைமறைவா போய்டலாம்ன்னு பாக்கறேன். கோர்ட்டுன்னாலே கடுப்பா இருக்கு."

"சொல்லாதீங்க பாஸ். உங்க வாய் முகூர்த்தம். நீங்க வெகேஷனப் பத்தி பேசறச்சேல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துடுது." வசந்த் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அழைப்பு மணி அலறியது.

உள்ளே வந்தவருக்கு வயதைக் கணிக்க முடியாத தோற்றம். கண்டிப்பாய் ரிடயர்டு மிலிட்டரி பெர்சன் என்பதை இரண்டுக்காதுகளுக்கு மேலே ஒரு இஞ்ச் முடியிழந்த மண்டையும், டக்கின்
செய்திருந்த டீ-சர்ட்டும் சொல்லியிருந்தன.

"ஹலோ. ஐ'ம் ஜெயராமன். ரிடயர்டு மிலிட்டரிமேன்."

"ஐ'ம் கணேஷ். ஹி இஸ் மை அசிஸ்டெண்ட் வசந்த். என்ன விஷயமா..."

"ஒன் வீக் பிஃபோர் என் டாட்டர் உங்களைப் பார்க்க வந்திருந்தாளா?"

"உங்க டாட்டருக்கு பேர் வச்சீங்களா சார்?"

"வசந்த்” என்று அவனை அதட்டி, “சாரி சார். உங்க டாட்டர் பேர்?" என்றான் கணேஷ்.

"நிவேதா அஷோக்".

"ஓ யெஸ். ஷி கேம். டோண்ட் சே மீ தட் யூ ஹேவ் அ நியூஸ்.”

“அப்கோர்ஸ் ஐ ஹேவ் அ வெரி பேட் நீயூஸ். மை டாட்டர் இஸ் நோ மோர்.”

- நன்றி பண்புடன் இணைய இதழ்.

-பண்புடனின் வெளிவரும் எனது தொடர்கதையின் முதல் பகுதி.

October 28, 2011

Crimson Chakra

சில சமயம் நண்பர்கள் இந்த உணவகம் நல்லாருக்கு. கண்டிப்பா போய்ட்டு வா என பரிந்துரை செய்வார்கள். அப்படி ஒரு நண்பன் பரிந்துரைத்தது தான் அடையார் காந்தி நகரில் இருக்கும் Crimson Chakra. நடிகர் சுரேஷ்மேனனுடையது என சொல்லப்படும் இந்த உணவகம் பெரிய பங்களாவை ரெனோவேட் செய்து இயங்குகிறது. மிகவும் அமைதியாக இருக்கும் ஏரியாவில் பெரிய புத்தர் சிலை உங்களை வரவேற்கிறது. சின்ன குளத்தின் கணுக்கால் அளவு தண்ணியிருக்க, தண்ணியில் காலை நனைத்துக்கொண்டும் சாப்பிடலாம். ஜூனியரை வைத்துக்கொண்டு கஷ்டமென்பதால், குளத்தினருகிலிருக்கும் டேபிள் choose செய்தோம்.

இரண்டு மெனு கார்டுகள். ஒன்று தென்னிந்திய உணவு வகைகளை பரிமாறும் க்ரிம்ஸன் சக்ரா. மற்றொன்று காண்டினெண்டல் வகைகளைப் பரிமாறும் கார்னுகோப்பியா. க்ரிம்ஸன் சக்ராவில் (பெரும்பாலும்)க்ரில் பேஸ்ட் உணவு வகைகளை பரிமாறுகிறார்கள். செட் மீல்ஸும் இருக்கிறது. நாங்கள் a-la-carte தேர்வு செய்துகொண்டோம். ஸ்டார்டருக்கு பனீர் வறுவல், தவா வெஜிடபிள்ஸ். பருப்பு சூப். மூன்றுமே நன்றாக இருந்தன. மெயின்கோர்ஸிற்கு காளான் ரொட்டி, பிந்தி மசாலா மற்றும் ஸ்மோக்ட் வெஜ் ரைஸ். பொதுவாகவே உணவகங்களில் சர்வ் செய்யப்படும் பராத்தா வகைகள் மிக திக்ககாக இருக்கும். ஆனால் இங்கு, காளான் ரொட்டி மெலிதாய், நல்ல சுவையோடு, மிருதுவாகவும் இருந்தது. காரசாரமான வெஜ் ரைஸ். அருமையான பிந்தி மசாலா. டெசர்ட்டிற்கு பஞ்சாமிர்தம் சொஃபல் மற்றும் கேரட் அல்வா ஆர்டர் செய்தோம். முதல் ஐட்டம் வித்யாசமாக நன்றாக இருந்தது. கேரட் அல்வா ஒக்கே ரகம் தான். கோவா நிறைய சேர்த்திருந்ததால் அவ்வளவாக கவரவில்லை.









மேலதிக தகவல்கள்

உணவகம் : க்ரிம்ஸன் சக்ரா
உணவு : தென்னிந்திய உணவுகள் வெஜ்/நான்வெஜ்
இடம் : காந்தி நகர், அடையார். அடையார் கிளப் அருகில்
டப்பு : 1800 இருவருக்கு. ரொம்ம்ம்ம்ம்ப அதிகம்.

பரிந்துரை : அருமையான சூழல். நல்ல சர்வீஸ். உணவின் ருசிக்காக கட்டாயம் போகலாம். ஆனால் விலை ரொம்ப அதிகமாக இருப்பது மைனஸ். Must try atleast once:)

October 24, 2011

Scribblings 24-10-2011

நாங்க போட்ட மொக்கை தாங்காமல், கூகிளே பஸ்ஸை இழுத்து மூடும் முடிவுக்கு வந்திடுச்சு. பஸ்ல ஏறினதுக்கப்புறம் பதிவெழுதறது சுத்தமா நின்னுப்போச்சு. சும்மா ரெண்டு வரில தோணுனதெயெல்லாம் உளறிக்கொட்டி, வாங்கிகட்டிகிட்டு ஜாலியா இருந்த இடத்த மூடப்போறாங்கன்னு நினைச்சா கஷ்டம் இருக்கு. எதைக் கொண்டு வந்தோம்.... சரி சரி.. எங்கன சுத்தியும் ரங்கன சேருங்கற மாதிரி, பஸ்ல ஏறி சுத்தி சுத்தி, இப்ப தாய்வீடான ப்ளாகிற்கே திரும்ப வந்திட்டேன். முன்ன மாதிரி பதிவா போட்டுத் தள்ள முடியாதுன்னாலும், அட்லீஸ்ட் வாரத்துக்கு ஒரு பதிவாவது போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன். பார்ப்போம்.
*****************

சென்ற வாரம் சொந்த ஊருக்குப் போயிருந்தேன். கிட்டத்தட்ட இரண்டரை வருடங்கள் கழித்து ஊருக்குப் போகிறேன். நிறைய மாற்றங்கள். முன்பு எங்கள் தெருவில் நாலே நாலு மச்சு வீடு தான் இருக்கும். இப்ப நாலே நாலு ஓலை வீடுகள் தான் இருக்கின்றன. அழகழகா வீடு கட்டியிருக்காங்க. வயதானவர்கள் முதற்கொண்டு சின்ன்பபொண்ணுங்க வரை எல்லாரும் நைட்டிதான். பளிச் கலரில் கண்டாங்கி கட்டும் எதிர்த்த வீட்டு ஆயா கூட நைட்டிக்கு மாறிட்டார்.

“என்னா ஆயா நைட்டிலாம் போட்டு அசத்துற?”

“அடப்போடி. அந்தப் பொடவைய வெளுத்து, காயவச்சு, கட்டிக்கறதுக்குள்ள, குடிச்சு கஞ்சி செரிச்சுப்புடுது. இது போட்டுக்கவும் சுளுவாருக்கு. வெளுக்கவும் சுளுவாருக்கு.”

அதுசரி.
**************

வீடுகள் மாறியிருந்தாலும், கிராமத்தில் மாறாமல் இருப்பது மனிதர்களும், நாய்களும்தான். கிராமத்தில் நாய்கள் புது ஆட்களை கண்டால் விடாமல் குரைக்கின்றன. நகரத்து நாய்களைப் போல் நிமிர்ந்து பார்த்துவிட்டு படுத்துக்கொள்வதில்லை. மனிதர்கள் காட்டும் பாசமும், கொடுக்கும் வரவேற்பும் அப்படியேத்தான் இருக்கிறது.

“சந்ரு மவளா நீஈஈ?”
”ஒம்மவனா? நீ இப்படியிருக்கையிலருந்து உன்ன பார்த்துகிட்டிருக்கேன். உனக்கு புள்ளன்னா மலைப்பா இருக்கு.”
“தீவளிக்கு வந்தியாக்கும்?”
(இன்றிரவே ஊருக்கு கிளம்பப்போகிறேன் என்றதும்)
“யே யப்பே. வாராதே ஆடிக்கொருதரந்தான். வரக்கொல்லவே கால்ல சுடுதண்ணிய ஊத்திகிட்டு தான் வருவீயளோ? பொங்கலுக்காவது பத்து பாயி்ஞ்சு நாள் தங்குறாப்புல வா”

எதிர்பட்ட பத்து பேரில் எட்டு பேர் கேட்ட கேள்விகள் இவை.

நான் பத்து மணிக்கு தான் போனேன். என் பால்ய தோழி ஒருத்தி என்னை அடையாளம் கண்டு விசாரித்தாள். ஐந்து நிமிடம் அவளிடம் பேசிவிட்டு வந்துவிட்டேன். மாலையில் நான் கிளம்புவதற்குள், இரண்டு முழம் ஜாதிமல்லியை நெருக்கமாக கட்டி கொண்டு வந்து கையில் கொடுத்தாள். ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. ”கனகாம்பரம் கூட இருக்கு. நீ வச்சிக்கமாட்டேன்னுதான் இதக் கொண்டாந்தேன்” என்றாள். ”ரெண்டடி தான் முத்து இருக்கு. இவ்ளோ பூ எப்படி வச்சிக்கிறது. நீயும் கொஞ்சம் வச்சிக்கோ” என்று பாதிபூவை அவளிடம் நீட்டினேன். ஏம்டி இம்புட்டு முடிய வெட்டிபுட்ட என்று அத்தையைப் போலவே திட்டியனுப்பினாள்.
********************

நண்பர்களுக்கு இனிய தீபாவளி வாழ்த்துகள்..

October 19, 2011

காதல் எத்தனை வகைப்படும்?

நீ அருகில் இல்லாதபோது
எல்லாவற்றிலும் நீயே தெரிகிறாய்

#வாசன் ஐ கேர் காதல்
***********

என் பெயர் சொல்லி யார் கூப்பிட்டாலும்
திரும்பி பார்ப்பதில்லை
நான் நீயானதிலிருந்து

# ENT காதல்
**********

வெற்றுத் தாள் கைகளில்..
காகிதத்தில் அடக்க முடியாக் காதல்..

# Illiterate காதல்
***********

ரொம்ப வெயிட் போட்டுட்ட
எனச் சொல்லும் டாக்டரிடம்
எப்படிச் சொல்ல
என் இதயத்தில் நீ இருப்பதை

# குண்டு க் கவிதை
****************

எடையும் தூரமும் பொருட்டல்ல உனக்கு
எப்பொழுதும் உன்னை நோக்கியே என் எண்ணமும் செயல்களும்
நியூட்டனின் ஈர்ப்பு விதியை பொய்யாக்குகிறாய்

#சயிண்டிஸ்டின் காதல்
***************

என்னைத் தருகிறேனென்றேன்.
கொஞ்சமே கொஞ்சமாய் கொடுத்தாய் புன்னகையை.
வட்டியும் முதலுமாய் நிறைய வாங்கிக் கொண்டிருக்கிறாய் என் காதலை

# மார்வாடிக் காதல்

பி.கு : இந்த வருடக் காதலர் தினத்திற்கு பஸ்ஸில் போட்ட மொக்கைகள்:)

September 26, 2011

சைக்கிள் முனி - என் பார்வையில்

இரா.முருகனின் சைக்கிள் முனி சிறுகதை தொகுப்பு.

தொகுப்பின் முதல் கதை சாயம். இதைக் கதை என்று சொல்வதைவிட ஒரு காட்சி விவரிப்பு என்று சொல்லலாம். கதை சொல்லி/காட்சியை விவரிப்பவருக்கு நிறைய கேள்விகள் எழுகிறது. சில கேள்விகளுக்கான பதிலை அவரே சொல்கிறார். மீதி கேள்விகள், பதிலில்லாமல் கேள்விகளாகவே இருக்கின்றன. மூன்று பக்கம் தாண்டியவுடனே ”ஆஹா மற்றுமொரு பி.ந.கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ? முதலுக்கு மோசமாகிவிடுமோ” என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. நல்லவேளையாக அப்படி எதுவுமில்லை:D

சில்லு அறிவியல் புனைகதை. பிறப்பை பதிவு செய்யும்போது தவறு நடக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பங்கள் கதை. ஒன்லைனராக நன்றாக இருக்கிறது. அநியாயத்துக்கு நீளம். வேகமும் குறைவு. மனதில் ஒட்ட மறுக்கிறது. (ஒப்பிடுதல் தவறுதானென்றாலும், இந்த மாதிரி ஏரியால வாத்தியார் நின்னு ஆடுவார்).

சைக்கிள் முனி என்ற கதையில் பாலன் என்ற சிறுவனுடன் முனி பேசுகிறது. உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்டவரும் பேசுகிறார். நம்பகத்தன்மை சுத்தமாக இல்லை. பாலனின் வறுமையான குடும்பச்சூழல் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் அக்கா எழுதும் கடிதம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. இதே போன்று தெய்வம் பேசும், அலுத்துக்கொள்ளும் இன்னொரு கதை தரிசனக் கதை. தெய்வத்தை முன்னிறுத்தி, மனதிற்கு தோன்றியதையெல்லாம் சோழி உருட்டி குறிகளாக சொல்லும் பூசாரி கதாபாத்திரம் ஈர்க்கிறது.

கருணை இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழ்ந்து, இறக்கப் போகும் ஒருத்தனின் இறுதி நேரங்கள். ஆண்களின் சந்தேக புத்தியையும், குறுகிய மனப்பான்மையையும் தொட்டுச் செல்கிறது. ஆரம்பத்தில் ரவியின் கதாபாத்திரம், பரிதாபத்தை ஏற்படுத்த தவறுவதால், முடிவில் பெரிய அதிர்ச்சியொன்று ஏற்படவில்லை.

தொகுப்பிலேயே சிறந்தக் கதை எதுவென்றால், முக்காலியைத்தான் சொல்வேன். பாங்காக்கில் குப்பைக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஆசாமி, தன் மேலதிகாரிக்கும், அவரின் உறவினர்களுக்கும் போடும் கூழைகும்பிடுகள் தான் கதை. ஒவ்வொரு வரியிலும் வலிக்க வலிக்க சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.

தொகுப்பிலேயே மிக மோசமான கதை என்றால் அது ஒண்டுக்குடித்தனம் தான். பேச்சிலரான சரவணனும், அவனுடன் நட்பு பாராட்டும் பேய்களும் தான் கதை மாந்தர்கள். நகைச்சுவையோ, ஆழ்ந்த விவரிப்போ இல்லாமல் மேம்போக்காக போகிறபோக்கில் எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.

சிறுவயதில் மலையாளம் கற்றுக்கொள்ள முற்பட்டதை நகைச்சுவையோடு சொல்லுகிறது பாருக்குட்டி. ”அவன் சாயா குடிச்சு. அவள் பரிப்பு வடை தின்னு” என்று டீக்கடை சமாச்சாரங்களையே பாடாமாக்கி எங்களை எழுதச் சொல்லிவிட்டு, ‘பொடி மோளே’ என்று கூப்பிட தடி மோளான பாரு பொரிகடலை வாயோடு வெளியே வருவாள். இதுபோன்று குபீர் சிரிப்பை வரவழைக்கும் வர்ணனைகளோடு போகும் கதையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் ரகம்.

வாத்தியார் வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொல்கிறது. மூடநம்பிக்கைகளையும், எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளை, தங்களுக்கு சாதகமாக்கிகொள்ளும் மக்களின் மனோபாவங்களை எள்ளலோடு சொல்லும் கதை.

வாயு குறுநாவல். அதிர்ச்சியளிக்கும்/முகம்சுளிக்க வைக்கும்/(சோ கால்ட் கலாசாரத்தினால்) பிறருடன் பேசத்தயங்கும் விஷயங்களை சர்வசாதரணமாக எழுதிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். குசு விடும் போட்டி, அதையொற்றி நகைச்சுவைக்காக எழுதப்பட்ட சில வரிகள் என ஆங்கில கலாசாரத்தையொட்டி எழுதப்பட்ட கதை. ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்தது போலிருக்கிறது. தமிழில் படிக்கிற உணர்வே இல்லை. உதாரணத்திற்கு கதையில் ஒரு கதாபாத்திரம் “புனித மலம்” எனக் கத்துகிறது. மொழிப்பெயர்க்கப்பட்ட கதையில் கூட இப்படி நேரடி தமிழாக்கம் செய்வார்கள் என்று தோணவில்லை. அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.

முதன்முறையாக இரா.முருகனின் எழுத்துக்களை வாசிக்கிறேன். தொகுப்பில் பொதுத்தன்மை நகைச்சுவை மட்டுமே. மற்றபடி சிறுகதை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களன்/பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் தலைக்கு சாயம் பூசிக்கொள்ள வந்தவன் இறந்து போவதைப் படித்துவிட்டு பக்கங்களை புரட்டினால் ஏதோவொரு கிராமத்தில் முனி பேசுகிறது. ஹுயுமனாய்ட்கள் வேலை செய்து முடித்தவுடன், பங்காரம்மா கழுநீர் கொண்டு செல்ல வருகிறாள். இந்த அதீத வேறுபாடுகள் படிக்கும்போது அயற்சியேற்படுத்தவில்லையென்றாலும், ஒருமாதிரியான சலிப்பைத் தருகிறது. விவரணைகள் சவசவ என்றில்லாமல், சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிப்போவது ஒரு பெரிய ஆறுதல். யதார்த்தை மீறிய கதைகள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. இயல்பாய், நம்பகத்தன்மையுடன் இருக்கும் கதைகள் (முக்காலி, பாருக்குட்டி) அதிகம் கவனம் ஈர்க்கின்றன.

சைக்கிள் முனி
இரா.முருகன்
கிழக்கு பதிப்பகம்

September 15, 2011

கைதிகள்

காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.

“அய்யா இருக்காங்களா?”

“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”

“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”

“ஓ. உள்ள வாங்க”

“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”

“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.

வாங்க ராஜன்.

அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.

அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?

இது ஒத்து வருமா பாருங்கய்யா.

(சிறிது நேர அமைதிக்குப் பின்)

இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.

ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.

அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.

முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.

நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.

அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.

இப்பதான் வர்றியா?

ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.

சாப்ட்டியா?

இல்ல.

தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.

அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?

இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?

ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.

வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.

“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”

“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.

“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”

“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்‌ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”

“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”

“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”

அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.

“நீ உடனே கிளம்பி வா”

“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”

“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”

“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”

“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”

அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.

அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.

“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”

“அதெல்லாம் ஒன்னுமில்ல.”

“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”

“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”

“வாட்?”

“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”

“ஸ்டாப் ஜோக்கிங்.”

“Do u think i am? bloody hell"

"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”

“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.

நன்றி அதீதம்

May 17, 2011

பழிக்கு பழி

கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.

”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.

“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.

“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”

“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”

“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.

“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”

“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”

“BTSல தான வேலை பார்க்கிற?”

“ஆமாம்”

“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.

மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.

“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.

“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.

“7 இயர்ஸ் ஆய்டுத்து”

“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”

“சிட்டி ஆஃபிஸ்”

“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.

“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”

“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.

"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.

ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.

“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’

“தேங்ஸ்டி.”

“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”

“கொலவெறில இருக்கேன். போய்டு.”

“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”

“அடியேய்ய்ய்ய்ய்”

“சும்மா சொல்லுடி”

“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.

கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.

“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"

"யெஸ் வேலு.”

“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”

“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"

"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."

"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”

“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."

ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.

Name : Mahadevan Keshava Krishnan

வாடி வா.......

May 4, 2011

Mash - Resto'cafe

பீச் வியூ. நிறைய அரட்டை. கொறிக்க லைட்டான உணவுகள். கேட்க நல்லாருக்குல்ல? அனுபவிக்கப் போக வேண்டிய இடம் பெசண்ட் நகர் பீச் ரோடில் இருக்கும் Mash. கஃபேவுமில்லாமல் ரெஸ்டாரெண்ட் கணக்கிலும் வராமல் ஒரு eat out. அதிகபட்சமாய் முப்பது பேர் அமர்ந்து உணவருந்தலாம். Sizzlers, burgers, sandwiches, crepes, hot dogs என முழுக்க முழுக்க காண்டினெண்டல் மெனு. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான ஸ்டார்டர்ஸ். ஆப்ஷன்ஸ் குறைவாக இருந்தாலும், மெனு ரசனையாக இருக்கிறது.

மினர்ஸ்டோன் சூப், வெஜ் க்ராக்கெட்ஸ், Honey glazed potato cubes மூன்றுமே நன்றாக இருந்தது. கடைசியாக சொன்ன ஐட்டம் செம்ம க்ரிஸ்பி. ஆனால் மூன்றுக்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.



Alfredo மற்றும் Arabitta சாஸ்களைக் கொண்டு செய்த பாஸ்தாக்கள் ரொம்ப நன்றாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான மிளகின் காரத்தோடு க்ரீமி அண்ட் யம்மி:)


டெசர்ட்டாக சாப்பிட்ட Choco mud pie ஆவரேஜ் தான்.


மேலதிக தகவல்கள்

உணவகம் : Mash
உணவு : Continental Veg/Non-Veg
இடம் : பெசண்ட் நகர் பீச்சின் எதிர்புறம் (போலீஸ் பூத்தைத் தாண்டி ஜாவா க்ரீன் காஃபி ஷாப் அருகில்).
டப்பு : 500 + taxes for 2

பரிந்துரை : அரட்டைக்கு நல்லதொரு hangout. சாப்பாடும் மோசமில்லை. முயற்சிக்கலாம்.

May 2, 2011

நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்

கண்மனி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். பாயிண்ட் டு பாயிண்ட், கிரிவலம் ஸ்பெஷல், தோல் பையை ஒரு குலுக்கு குலுக்கி சில்லறை தேடும் சோடா புட்டி அணிந்த கண்டக்டர், சின்னப் பசங்களோ, வயதானவர்களோ யார் உட்கார்ந்திருந்தாலும் எழுப்பிவிட்டு, தன் பெருத்த சாரீரத்தை தன் சீட்டிலடைத்து நான்காய் எட்டாய் மடிக்கப்பட்டிருக்கும் கோடு போட்ட பேப்பரில் கோழி கிறுக்கலாய் எண்களைப் பதியும் கள்ளக்குறிச்சி வண்டி கண்டக்டர், பஞ்சரான வண்டிக்கு டயர் மாத்த உதவி தேடும் திருச்சி வண்டி ட்ரைவர், கட்டைவிரலை சுண்டுவிரலின் ஆரம்பத்திற்கு முட்டுக்கொடுத்து, நான்கு விரலைக் காட்டி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் ஸ்டாஃப் என எப்போதோ என் வாழ்க்கையில் கடந்து சென்ற நபர்களின் மறுபக்கத்தை, அவர்களின் அன்றாட வாழ்வை, டிப்போ என்ற ஒரு தனித் தீவில் அவர்கள் படும்பாட்டை உள்ளது உள்ளபடி மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது நெடுஞ்சாலை நாவல்.

நாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.

நாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது? அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.

நாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.

நூல் : நெடுஞ்சாலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
விலை : 230 ரூபாய்

போதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.

April 25, 2011

RIO

அரிய வகைப் பறவையான Blu, குட்டியாக இருக்கும்போதே ப்ரேசிலிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மின்னர்சோட்டாவில் லிண்டா என்ற பெண்ணின் தோழனாக, domestic birdஆக வளர்க்கப்படுகிறது. ப்ரேசிலிலிருந்து வரும் ஆர்னிதாலஜிஸ்ட் Tulio, லிண்டாவிடம் Bluவின் இனம் அழியும் நிலையிலிருப்பதாகவும், அதே blue macaw வகையைச் சேர்ந்த jewel என்றழைக்கப்படும் பெண் பறவை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக Bluவை ப்ரேசிலிற்கு அழைத்து வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா, பின்னர் மனது மாறி bluவை அழைத்துக்கொண்டு ப்ரேசில் வந்து சேர்கிறார்.

வீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? Blu லிண்டாவிடம் சென்றடைந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.

அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்‌ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்பான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.

Rio Trailer

RIO - அருமையான சம்மர் எண்டெர்டெயினர். Must watch movie for all age groups.

April 19, 2011

வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு

ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.

வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."

சார் முதல்ல வீட்டை காட்டுங்க.

வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.

"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)

ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.

"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..

ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.

வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.

"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"


#மீள்பதிவு

April 7, 2011

கிரிக்கெட் ஃபோட்டோடூன்ஸ்









(பாஸ் பெருசா? ஃபெயில் பெருசா ஸ்டைலில்)

April 6, 2011

துணுக்ஸ் 06-04-2011

28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா கிரிக்கெட் உலகக்கோப்பையை கைப்பற்றியிருக்கிறது. வாழ்த்துகள் தோனி அண்ட் கோவிற்கு. எப்பவுமே என்னுடைய ஃபேவரைட் ப்ளேயர் கங்குலி தான். ஒரு சராசரி ரசிகையாய், டெக்னிகல் அறிவெல்லாம் இல்லாதவளாய், கங்குலி போன பின்பு கிரிக்கெட் பார்ப்பதையே நிறுத்திவிட்டேன்;) இந்த உலகக்கோப்பைத் தொடரிலும் இந்தியா விளையாடிய போட்டிகளை மட்டுமே பார்த்தேன்.
”கடங்காராப் பாவி. லட்டு மாதிரி வந்த கேட்ச வுட்டுட்டானே.”
“வெளம்பரத்துல மட்டும் நன்னா ஜிங்கு ஜிங்குன்னு ஆடுங்கடா.”
“குருட்டுக் கண்ணாடியப் போட்டுண்டு புல்லப் புடுங்கறது பாரு பிரகஸ்பதி”
”செத்த வேகமா ஓடப்பிடாது. நெடுஞ்சாங்கிடையா விழுந்து கிடக்கிறான் பாரு”
“ஏன் நம்மாளுங்க யூனிஃபார்ம் கலர மாத்தினாங்க? இது கண்றாவியான்னா கண்ண உறுத்தறது?”

இதெல்லாம் சென்ற வேர்ல்ட் கப்பின் போது என் பாட்டி அடித்த கமெண்ட். 87 வயதில் பாட்டிக்கு அபார ஞாபக சக்தி. யூனிஃபார்ம் கலரை வைத்தே எந்த டீம் என சொல்லுமளவிற்கு. அண்ணாக்கள் யாரும் பாட்டியை மேட்ச் பார்க்க விடவே மாட்டார்கள். குறிப்பாக டெண்டுல்கர் விளையாடும்போது. டெண்டுல்கர் ஃபேஸ் பண்ணும் ஒவ்வொரு பாலின் போது பாட்டி கேட்டுக்கொண்டேயிருப்பார் “டெண்டுல்கர் அவுட ஆயிட்டானா?”. இந்த வேர்ல்ட் கப்பின் போது பாட்டியில்லை:(
****************

வெயில் வாட்டி வதைக்கிறது. பத்து நிமிடங்கள் மாடிக்கு சென்று துணி காயவைத்துவிட்டு வருவதற்குள் கண்கள் இருட்டி, தலைவலியே வந்துவிடுகிறது. கத்திரியை நினைத்தால் இப்பவே கண்ணக்கட்டுது. சன்ஸ்க்ரீன், கூலர்ஸ், பானைத் தண்ணீர், பழங்கள், மோர், கூழ் போன்றவை என்னுடைய சாய்ஸ். சூரிய பகவானே கொஞ்சம் கருணைக் காட்டு.
*****************

குழந்தைகளுக்கு நல்லது கெட்டது ஆகியவற்றை பெற்றோர் தான் சொல்லித்தரனும். சென்ற ஞாயிறு அண்ணா நகர் டவர் பார்க்கில் குழந்தைகளுக்கான விளையாட்டுத் திடலில் சறுக்கு மரத்தில் ஏறி விளையாட குழந்தைகள் வரிசையில் நின்றுக்கொண்டிருந்தார்கள். ஒரு ஆறு வயது வாண்டு வரிசையில் நின்றது. எங்கிருந்தோ ஒருவர் (அப்பாவாகத்தான் இருக்கனும்) வந்து குழந்தையிடம் “இங்க ஏண்டா நின்னுகிட்டிருக்க? முன்னாடி போய் ஏறிச் சறுக்க வேண்டியதுதானே” எனக் கடிந்துக்கொண்டே அந்தப் பையனை முன்னாடி இழுத்துச்சென்றார். மற்ற பெற்றோர்களுக்கெல்லாம் அதிர்ச்சியாக இருந்தது. “ஏன் சார் எல்லா குழந்தைகளும் வெயிட் பண்ணித்தானே சார் போறாங்க?” என்று கேட்டதற்கு உன் வேலையப் பார்த்துகிட்டுப் போ என ஏகவசனத்தில் திட்டினார். பின்னர் அந்தப் பையனை தரதரவென இழுத்துக்கொண்டு போய்விட்டார். வருத்தமாக இருந்தது. நல்வழிக் காட்ட வேண்டியவர்களே, குறுக்குவழியை அதுவும் சின்ன வயதிலேயே போதிப்பது அந்தக் குழந்தைக்கும் நல்லதல்ல. நாட்டுக்கும் நல்லதல்ல:(
********************

மருத்துவமனைக்கு சென்றிருந்தபோது, வாக்கிங் ஸ்டிக், காலில் மாவுக்கட்டு சகிதமிருந்த ஒரு சின்னப் பெண்ணை அழைத்துச் செல்ல அப்பெண்ணின் அம்மா கஷ்டப்பட்டுக்கொண்டிருந்தார். அவர்களுக்கு உதவி செய்யும்போது அந்தப்பெண்ணின் அம்மா சொன்னது அதிர்ச்சியாக இருந்தது. ஹை ஹீல்ஸ் போட்டுக்கொண்டு ஓடும்போது, ஹீல் உடைந்து anklet fracture ஏற்பட்டுவிட்டதாம். இன்னும் 6 மாதங்களுக்கு ஓடவோ குதிக்கவோ கூடாது என டாக்டர் சொல்லியிருக்கிறாராம். குழந்தை எப்படிங்க ஓடியாடி விளையாடாம இருக்குமென்றார் என்னிடம். குழந்தை என்ற நினைப்பு உங்களுக்கிருந்திருந்தா ஹீல்ஸ் போட அனுமதிச்சிருப்பீங்களான்னு கேக்க நினைச்சேன். வெந்தப் புண்ணில் வேலப் பாய்ச்ச வேண்டாமேன்னு அமைதியா இருந்துட்டேன். பெரியவங்களையே ஹீல்ஸ் அவாய்ட் பண்ணச்சொல்றாங்க. இவங்க என்னடான்னா குழந்தைக்கெல்லாம் ஹீல்ஸ் போட்டு அழகுப் பார்க்கறாங்க:(
*********************

அதீதம் இணைய இதழில் என் வலைப்பக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். நன்றி அதீதம் ஆசிரியர் குழுவினருக்கு.