December 29, 2011

Scribblings 2011

மற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.

உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.

பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.

நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.

6 comments:

CS. Mohan Kumar said...

You started to write again in your blog at the year end, which is good. Pl. continue in new year too !!

Wish you a happy new year !

aa said...

waiting for ninaivellam nithya????

aa said...

waiting for ninaivelllam nithya

Rathnavel Natarajan said...

வாழ்த்துகள்.

Porkodi (பொற்கொடி) said...

இனிய புத்தாண்டு வாழ்த்து'க்'கள் வித்யா! (க் போடலேன்னா எனக்கு திக்கிடும்.. :P) நான் ரொம்ப விரும்பி சுத்துற வீட்டுல உங்களுது மெயின்.. அடிக்கடி எழுதுங்க! Waiting for Nivedha.

என்றும் இனியவன் said...

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
எனது ப்ளாக்கில்:
பாட்டைக் கேளுங்க பரிசு வெல்லுங்க
புத்தாண்டு பரிசு ஒரு வாரம் கோவாவில் குடும்பத்தோடு தாங்கும் வாய்ப்பு
A2ZTV ASIA விடம் இருந்து.