January 23, 2009

பாட்டீஈஈஈஈ

ஜூனியர் தன் பாட்டியோடு பயங்கர அட்டாச்டு. பாட்டி தான் வேணும் எல்லாத்துக்கும். அம்மாவும் பேரன் மேல பாசத்தை பொழியறாங்க. நான் எங்கம்மா வழி தாத்தா பாட்டிய பார்த்தது கூட இல்ல. என் அம்மா வழி தாத்தா எங்கம்மா கைக்குழந்தையா இருக்கும்போதே தவறிட்டாங்க. பாட்டி அம்மா 8ஆவது படிக்கும்போது போய்ட்டாங்க. அப்பா வழி தாத்தா பாட்டி எனக்கு நினைவு தெரிந்து என்னை அரவணைத்த ஞாபகமில்லை. தாத்தாவுக்கு என் தம்பிய ரொம்ப பிடிக்கும். ஏன்னா அவன் கருப்பு (நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:)). இப்போ பாட்டி மட்டும் தான் இருக்காங்க. 89 வயசாகுது அவங்களுக்கு. வரிசையாக இரண்டு பிள்ளைகள் மற்றும் கணவனை பரிகொடுத்தவங்க. சில குடும்ப அரசியல்??!!! காரணமாக பாட்டியின் பாசம் முழுவதும் டைவர்ட் செய்யப்பட்டது. வயசாகிட்டாலே வர்ற பிராப்ளம் அவங்களுக்கும் ஆரம்பிச்சிடிச்சு. என்ன பேசுறோம்னே தெரியமாட்டேங்குது. இப்போன்னில்ல ஏழெட்டு வருஷமாவே பாட்டி வாயத்திறந்தாலே அலறுவோம். சாம்பிளுக்கு


* வீட்டுக்கு வந்திருந்த என் பள்ளித் தோழனிடம் நீ என்ன ஜாதின்னு கேட்டுட்டாங்க. எனக்கு ரொம்ப அசிங்கமா போச்சு. அவனிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு அப்பாவிடம் கம்ப்ளெய்ண்ட் செய்தேன். அப்பா பாட்டியிடம் அப்படியெல்லாம் கேக்காதேம்மா என கெஞ்சிக் கேட்டுக்கொண்டார். அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?"


* பாட்டிக்கு கிரிக்கெட் அறிவு ரொம்ப ஜாஸ்தி. இப்போகூட டிவில மேட்ச் பார்த்தா பிளேயர்ஸ் டிரஸ் கலர வெச்சே எந்த நாடுன்னு சொல்லிடுவாங்க. டெண்டுல்கர் மேல பாட்டிக்கு தனி பாசம். டெண்டுல்கர் சிக்ஸ் அடிச்சுருப்பார். பாட்டி கேப்பாங்க "டெண்டுல்கர் அவுட்டா??" அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.


* என் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். அவர் சொன்னதால் தான் நான் டாக்டருக்கு படிக்கவில்லை என நினைத்துக்கொண்டிருக்கிறார். எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது.


* எனக்கு குழந்தை பிறந்து ஆஸ்பத்திரியிலிருந்து வீட்டுக்கு வருகிறேன். என்னிடம் வந்து 'சித்திரைல பையன் பிறந்திருக்கான். வீட்டு பின்னாடியிருந்த தென்னம்படல் வேற விழுந்திடுத்து, இதோட போய்ட்டா பரவாயில்ல. யாருக்காவது ஏதாவது ஆயிடுத்துன்னா என்ன பண்றது?" என்றார். எனக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.


* நவம்பர் மாதம் நண்பனின் திருமணத்திற்காக நானும் அம்மாவும் ஊருக்கு சென்றிருந்தோம். சாப்பிட்டுவிட்டு பெரியம்மாவிடம் பேசிக்கொண்டிருந்தோம். மாடியிலிருந்து கீழே வந்த பாட்டி அம்மாவிடம் "நீ போய்ட்டன்னா உன் குடும்பம் ரொம்பவே கஷ்டப்படும்" என்றார். மறுநாளே பேருந்தில் படிக்கட்டிலிருந்து அம்மா கீழே விழுந்தார்.

* ஊருக்கு புறப்படும்போது பாட்டியிடம் காசு கொடுத்துவிட்டு, கிளம்புறேன் பாட்டி ஆசிர்வாதம் பண்ணுங்க என்றதுக்கு "பொம்மனாட்டிகள் தனியா போறீங்க. ஒன்னு கெடக்க ஒன்னு ஆகப்போகுது" என்றார். திரும்பி வரும்போது கார் டயர் பஞ்சர். கிட்டத்தட்ட 2 மணி நேரம் தாமதமாய் வீடு வந்து சேர்ந்ந்தோம்.

* மூத்த மகனுக்கு பொண்ணு பிறந்திருந்த சந்தோஷத்திலிருந்த பெரியம்மாவிடம் "உன் மாட்டுப்பொண்ணுக்கு அபார்ஷன் ஆயிடுத்தா?" என கேட்கவும் பெரியம்மா கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

* வெள்ளிக்கிழமை பூஜை முடித்துவிட்டு வந்த அம்மாவிடம் "சந்துருவுக்கு ஆக்ஸிடெண்ட் ஆன விஷயத்தை நீ என்கிட்ட இருந்து ஏன் மறைச்ச?" என்றார். பத்து நிமிஷத்தில் அப்பாவிடமிருந்து போன். கட்டுப்பாட்டை இழந்த ஜீப் சாலை ஒரம் இருந்த மரத்தில் பார்க் செய்யப்பட்டது என. அம்மாவுக்கு கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.

இதுபோல ஏராளமான சம்பவங்கள். அவர் சொல்வதனால் தான் நடக்கிறது என்றில்லை. ஆனாலும் அந்த நிமிஷம் கோபம் வரத்தான் செய்கிறது. பின்னால் யோசித்துப்பார்க்கையில் தான் தெரிகிறது. வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. பாட்டி மூலம் நான் கற்ற ரெண்டு முக்கியமான விஷயம். 1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது.

28 comments:

கார்க்கிபவா said...

உங்க பாட்டி அழகிய தமிழ் மகன் படம் பார்த்தாங்களா?

அடுத்த தடவ அஜித் படம் வ்ரும்போது பாட்டிய விட்டு ஏதாவ்து சொல சொல்லுங்க கொ.ப.செ

சந்தனமுல்லை said...

//ன் ஜாதகத்தை எவனிடமோ காட்டி ஜோசியம் பார்த்திருக்கிறார். அவனும் என்னை டாக்டருக்கு படிக்க வைத்தால் நிறைய பேரை பிழைக்க வைப்பேன்???!! என சொல்லிருக்கான். வீட்டுக்கு வந்து அப்பாவிடம் "வித்யா தண்ணி குடுத்தா போற உயிர் கூட 2 நிமிஷம் கழிச்சு தான் போகுமாம். அவள டாக்டருக்கு படிக்க வை"ன்னு ஒரே அடம். இப்போகூட நான் டாக்டருக்கு படிக்காமல் போனதில் பாட்டிக்கு ரொம்ப வருத்தம். //

சோ ஸ்வீட்!

சந்தனமுல்லை said...

//வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று. //

குட் பாயிண்ட்! இந்த understanding எல்லாருக்கும் வர்றதில்லை!!

narsim said...

//1. வயதாகிவிட்டால் வாயை மூடிக்கொண்டு இருக்கவேண்டும். 2. பெரியவர்கள் எது சொன்னாலும் தப்பா எடுத்துக்கக்கூடாது//

எல்லாத்தையும் சொல்லிட்டு.. இதுவேற.. ம்ம்ம்.

Vidhya Chandrasekaran said...

கார்க்கி அவங் எம்.ஜி.ஆர் படம்தான் பார்ப்பாங்க:)

நன்றி முல்லை.

நர்சிம் :)

நட்புடன் ஜமால் said...

\\நானும்தான். ஆனா என் தம்பிய விட கொஞ்சூண்டூ கலர்:\\

ஹா ஹா ஹா

சிரிப்பு தான் வருது ...

நட்புடன் ஜமால் said...

\\அடுத்த பந்துலயே அண்ணன் பெவிலியன் திரும்பிடுவார்.\\

என்னத்த சொல்ல

(அதுக்காக பாட்டி என்ன செய்வாங்க)

நட்புடன் ஜமால் said...

\\எனக்கு தான் தெரியும் நான் எடுத்த மார்க்குக்கு கம்பவுண்டரா கூட ஆகிருக்க முடியாது\\

ஆஹா - நீங்க ரொம்ப நல்லவங்க.

நட்புடன் ஜமால் said...

டாக்டர் ஆகி இருந்தா ஒருவேலை சிலர் காப்பாற்ற பட்டிருப்பார்களோ ...

ramachandranusha(உஷா) said...

பல மலரும் நினைவுகளை கொண்டு வந்து விட்டீர்கள். ஆனால் வயசான வாயை மூடிக்கொண்டு இருக்க முடியாது. எண்பது தாண்டி (இருந்தால்) கட்டாயம் இப்படித்தான் உளருவோம். புத்தி
ரிவர்ஸ்ல போக ஆரம்பிக்கும் போல :-)

ramachandranusha(உஷா) said...
This comment has been removed by the author.
Vidhya Chandrasekaran said...

நன்றி ஜமால். நான் டாக்டர் ஆகிர்ருந்தா அய்யோ வேணாம் சாமி.

நன்றி உஷா. நீங்கள் சொல்வது கூட சரிதான்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வயதாகிவிட்டதால் புறக்கணிக்கப்படுகிறோம் என்ற எண்ணத்தில் தான் அவர் அப்படியெல்லாம் நடந்துக்கொள்கிறார் என்று

மிகவும் உண்மைதான்
இது புரிந்தாலும் சூழ்நிலைகளின் காரணமாக அவ்வப்போது அவ்ர்களின் மீது எழும் கோபத்தை தவிர்க்கமுடிவதில்லை.

தாரணி பிரியா said...

வித்யா எங்க பாட்டி கடைசிவரை ஜாதி கேட்கறதை நிறுத்தலை
ஆனா என‌க்கு நிறைய‌ விச‌ய‌த்தில‌ எங்க‌ பாட்டிதான் ரோல் மாட‌லே. அவ‌ங்க‌ அனுப‌வ‌த்தால‌ என‌க்கு நிறைய‌ சொல்லி குடுத்தாங்க‌.

Unknown said...

பாட்டிக்கு கருநாக்கா? நானும் இப்படி எதாவது சொல்லி நடந்தது உண்டு (உங்க பாட்டி என் க்ளாஸ்மெட் இல்லை). அதனால, திட்டறதா இருந்தா கூட "நல்லா இருடா"ன்னு திட்டிடுவேன்.

☀நான் ஆதவன்☀ said...

:-))))

உங்க பாட்டிகிட்ட நீங்க ப்ளாக் எழுதுற பத்தி எதுனா சொல்ல சொல்லுங்க...எங்களுக்கு எதுனா விமோச்சனம் கிடைக்குதான்னு பார்ப்போம்

எம்.எம்.அப்துல்லா said...

நம்ப தல எப்ப சூப்பர்ஸ்டார் அந்தஸ்த்துக்கு வருவாருன்னு பாட்டிக்கிட்ட கேட்டு சொல்லுங்க :))

Vidhya Chandrasekaran said...

வாங்க அமித்து அம்மா.

வாங்க தாரணி பிரியா.

உங்ககிட்ட ரொம்பவே உஷாரா இருக்கனும் KVR தாத்தா. சே அண்ணா.

ஆதவன் அது மட்டும் நடக்கவே நடக்காது. விட்டுறேவேனா??

கேட்டுப்பாக்குறேன் அப்துல் அண்ணாத்தே:)

SK said...

இங்கே நான் பாத்த அதே விஷயங்கள். :) :)

தலைமையகம் திரும்பிட்டு விலாவாரியா பதிவு போடறேன் :)

SK said...

ஜூனியர் எப்படி இருக்கார் ???

Vidhya Chandrasekaran said...

Welcome back SK. Junior is doing fine:)

SK said...

ennathu welcome back ellam ??

naan enge ponen :) :)

Arun Kumar said...

ம் எனக்கும் இதே போல வயசான பாட்டி இருந்தாங்க..

பெரியவங்க வாயால ஏதும் திட்டு வாங்காத பலிக்க போவுதும்பாங்க.

நீங்க சொல்றது சரி தான். வயதாகும் போது அவங்க எல்லாரும் சின்ன குழந்தையாக ஆகிறாங்க

எம்.எம்.அப்துல்லா said...

உன் பின்னூட்டத்திற்கு என் பதிவில் பதில் போட்டாச்சு :)))

எம்.எம்.அப்துல்லா said...

மீ த இருபத்தி அஞ்சு :)

எம்.எம்.அப்துல்லா said...

ஏதாவது எழுது தாயி...நானும் எத்தனை வாட்டிதான் உன் கடைப்பக்கம் எட்டிப் பார்த்து ஏமாந்து போறது :(

யாத்ரீகன் said...

:-) .. எங்க தாத்தாவிடமும் கண்ட விஷயங்கள் இதேதான்..

ராமுடு said...

வித்யா.. இது ரொம்ப லேட் பதிவு.. உங்க பாட்டிய பாக்கணும் போல இருக்கு... "அடுத்த தடவை நண்பர்கள் வந்தபோது பாட்டி கேட்டது "இவன் நம்மளவாளா?" ரொம்பவே ரசிச்சேன்... எங்க பாட்டி அது மாதிரி எல்லாம் இல்ல.. எங்க பாட்டி அது மாத்ரி எல்லாம் பார்த்தது கெடையாது.. சில நண்பர்கள் வீட்டு பாட்டிங்க அது மாதிரி.. இதாவது பரவ இல்ல... நான் சுத்த தஞ்சாவூர் பாஷை தான் பேசுவேன்.. நீ கன்னட மாத்வாலா இல்ல விபூதி பண்டிதால அப்படிம்பா.. நான் ஸ்மார்த அப்படின்னு சொல்லுவேன்.. அதுக்கே நான் தண்ணி குடிச்ச டம்ளர் (தூக்கி குடிச்சத தான்) தண்ணி தெளிச்சு தான் எடுத்து வெய்ப்பர்கள்.. என்னோட நண்பனின் நெலமை தான் ரொம்ப பாவமா இருக்கும்.. அப்படியே நெளிவான்.. நான் அவங்க பாட்டி இது எல்லாம் பண்ற வரைக்கும் பாத்துக்கிட்டே இருப்பேன்.. அவனோ டேய்.. வெளில போலம்ட வாடா அப்படின்னு சொல்லுவான்.. இருடா.. பாட்டி இன்னும் வரல அப்படின்னு சொல்லுவேன்.. அத எல்லாம் நெனைச்சாலே.. மறக்க முடியாத நினைவுகள்..

கடைசில நீங்க சொன்ன ரெண்டு கமெண்ட் - முதல் கமெண்ட் - அது அவர்களால் முடியாது... அந்த பருவத்திற்கு உள்ள ஆற்றாமை / நமக்கு என்று யாரும் இல்லை என்கிற ஒரு உணர்வு / நாம் அவர்களிடம் நிறைய பேசாமல் இருந்தோம் என்றல் இது போன்ற உணர்வுகள் வரும்..

உங்களோட அனுபவங்கள்.. சூப்பர்...