நேற்றிரவு:
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
December 13, 2011
December 12, 2011
Scribblings 12-12-2011
எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****
முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************
டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************
எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.
*****
முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************
டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************
எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.
Labels:
துணுக்ஸ்
December 8, 2011
நினைவெல்லாம் நிவேதா - 3
நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2
ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.
“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.
விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.
”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”
“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”
மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.
“ரூம் காலியா இருக்கே?”
“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”
ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.
“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”
“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.
“நீ எங்கிருந்த?”
“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”
“வாட்ச்மேன்?”
“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.
“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”
“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”
“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”
”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”
“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”
“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”
”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”
”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”
“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”
”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”
“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”
“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”
“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”
“புரியலீங்க."
”சண்ட போட்டுப்பாங்களா?”
“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”
வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.
“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”
“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”
“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”
கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.
“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”
நினைவெல்லாம் நிவேதா -2
ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.
“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.
விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.
”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”
“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”
மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.
“ரூம் காலியா இருக்கே?”
“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”
ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.
“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”
“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.
“நீ எங்கிருந்த?”
“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”
“வாட்ச்மேன்?”
“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.
“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”
“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”
“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”
”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”
“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”
“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”
”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”
”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”
“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”
”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”
“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”
“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”
“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”
“புரியலீங்க."
”சண்ட போட்டுப்பாங்களா?”
“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”
வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.
“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”
“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”
“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”
கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.
“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
December 5, 2011
அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
தோழிக்குப் பெண் குழந்தை பிறந்திருக்கிறது. வாழ்த்துகள் சொல்ல ஃபோன் செய்தேன்.
வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.
க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.
(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.
ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.
டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்
***********
நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?
மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.
நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.
மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.
நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
*************
நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.
மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.
நண்பன் : &^#$^*%$*
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
***************
தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.
நான் : தேங்ஸ். அப்புறம்.
தோழி : என்னடி அப்புறம்?
நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.
தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.
நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?
தோழி : ^&%(&(()^^% டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************
If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..
ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.
வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?
இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
வெள்ளிக்கிழமை மதியம் பிறந்தாடி.
க்ரேட் டி. வெள்ளிக்கிழமை பொறந்தவங்க எல்லாம் பெரிய அறிவாளியா இருப்பாங்கடி.
(அவ்ளோ ஆர்வத்துடன்) நெஜம்மாவாடி.
ஆமாண்டி. நான் கூட வெள்ளிக்கிழமைல தான் பொறந்தேன்.
டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்
***********
நண்பன் : செல்வராகவன் ஏன் எல்லா ஃபங்கஷனுக்கும் வூட்டுக்காரம்மா கூடவே வர்றாரு?
மீ : புதுசா கல்யாணமாயிருக்குல்ல. அதான். போக போக சரியாயிடும்.
நண்பன் : அனுபவஸ்தங்க சொன்னா கேட்டுக்கனும்.
மீ : ஆமா. ஏன்னா ஏழேழு ஜென்மத்துக்கும் நீ இந்த விஷயத்துல அனுபவஸ்தவனா ஆகவே முடியாது.
நண்பன் : வாயக் கழுவு. நல்ல நாள் அதுவுமா. நீயெல்லாம் ஒரு ஃப்ரெண்டு.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
*************
நண்பன் : தாலி கட்டு முடிச்ச கையோட, ஃபேஸ்புக்ல ஃபோட்டோஸ் அப்லோட் பண்ணிடறாங்க. மத்ததெல்லாம் அப்புறம் தான் போல. ஆனாலும் இம்புட்டு வேகம் கூடாது.
மீ : அதில்ல. எனக்குக்கூட கல்யாணம் ஆவுது பாருங்கடான்னு உலகத்துக்கு சொல்லவா இருக்கும். குறிப்பா உன்னை மாதிரி ஆளுங்களுக்கு.
நண்பன் : &^#$^*%$*
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
***************
தோழி : ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் டே.
நான் : தேங்ஸ். அப்புறம்.
தோழி : என்னடி அப்புறம்?
நான் : எத்தனை வருஷத்துக்குடி விஷ் பண்ணிட்டே இருப்ப. ஏதாவது கிஃப்ட் கொடுக்கலாம்ல. நாலு வருஷமா வெளிநாட்ல இருக்கன்னுதான் பேரு. ஒரு பவுன் தங்கம் வாங்கிகொடுத்திருப்பியாடி? வாயாலேயே வட சுடு.
தோழி : உனக்கு வாழ்த்து சொல்ல ஐஎஸ்டி போட்டுக் கூப்பிட்டேன் பாரு. என் புத்திய பிஞ்ச செருப்பாலேயே அடிக்கனும்டி.
நான் : இப்ப ஸ்டாக் இல்ல. நீ வெகேஷனுக்கு வர்றதுக்குள்ள பிச்சி வைக்கிறேன். ஒக்கேவா?
தோழி : ^&%(&(()^^% டொக்
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
****************
If a man wants to lead a purposeful life he needs faith research and an ideal. Research gives him the strength to climb the ladder of faith which will take him to the ideal. Faith without research is like a door without padlock. Research without an ideal is like a house without a door..
ஃப்ரெண்ட் ஒருத்தன் இத ஸ்டேடஸா ஃபேஸ்புக்ல போட்ருந்தான்.
வீடு கட்டினா கதவு வெச்சு கட்டனும். அதான சொல்ற?
இது நான் போட்ட கமெண்ட். இதுக்கு போய் ஃபோன் பண்ணி திட்றான்.
#அப்படி என்ன தப்பா சொல்லிட்டேன்?
November 21, 2011
நினைவெல்லாம் நிவேதா - 2
கணேஷும், வசந்தும் அதிர்ந்து போய் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.
“ஓ மை காட். வீ ஃபீல் சாரி பார் யூ. என்ன நடந்தது?” என்றான் கணேஷ்.
“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார். தூக்குல தொங்கிண்டிருந்தா. நாக்கக் கடிச்சிண்டு, முழி பிதுங்கி. ஐயோ நிவேதா...”
ஜெயராமனைக் கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது கணேஷிற்கு. அவர் அழுது ஓயும் வரைக் காத்திருந்தனர் இருவரும். இருபது நிமிடத்தில் மொத்தக் கண்ணீரையும் செலவழித்துவிட்டு நிமிர்ந்தார் ஜெயராமன்.
"ஈஸி. ஈஸி. டூ வி ஹேவ் எனிதிங் இன் திஸ் சூசைட் சார்?" என்றான் வசந்த்.
"யெஸ். நிவேதா எதுக்காக உங்கள பார்க்க வந்தாங்கறத சொல்லமுடியுமா? ஐ பீல் ஷி வாஸ் ட்ரிக்கர்ட் டு கமிட் சுசைட்" என ஜெயராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்ஃபோனில் ஜென்ஸி காதல் ஓவியம் பாடஆரம்பித்தார். படக்கென ஃபோனை எடுத்து “பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் லைனைத் துண்டித்தார்.
“ஸாரி. வேர் வேர் வி? ஆங். நிவேதா உங்களை எதுக்காக பார்க்க வந்தா?”
"மிஸஸ் நிவேதா இங்கே வந்தாங்களே தவிர எந்த விவரத்தையும் நாங்க கேட்டுக்கல. வீ ஆஸ்க்ட் ஹெர் டு மீட் அஸ் சம்டைம் லேட்டர். அதுக்கப்புறம் அவங்க வரல. ஆனா நீங்க வந்திருக்கீங்க. வித் ஹெர் டெத் நியூஸ். ஹூம். பை த வே நிவேதா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என நீங்கள் நினைக்க காரணம்?"
"அது வந்து...”
“தயங்காம சொல்லுங்க சார்.”
“சமீப காலமாக அவளிடமிருந்து எனக்கு சில இமெயில்கள் வந்தது. அஷோக் அவளிடம் பிரியமாக இல்லையென. அவளை இக்னோர் செய்கிறார் என. இரண்டாவது நிவேதாவின் பெயரில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு. ஒரு விபத்தில் இறந்து போன என் அண்ணா, நிவேதாவிற்கு கல்யாணம் ஆகும்வரை நான் கார்டியனாக இருக்கவேண்டுமென்றும், கல்யாணத்திற்கு பின்னர் அவளுடைய கணவர் கார்டியனாக இருக்கவேண்டுமெனவும் உயிலெழுதியிருக்கிறார். நிவேதாவிற்குப் பிறகு சொத்துக்கள் அஷோக்கிற்குதான் போகும்.”
“ஓ. நீங்கள் நிவேதாவின் கணவரை சந்தேகப் படுகிறீர்களா?”
”ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ்”
”அப்ப நீங்க போலீஸ்ல கம்ப்ளையெண்ட் பண்ணலாமே?”
“செய்யப்போகிறேன். அஷோக் மேல் சந்தேகம் இருப்பதாக. மீன்வைல் நிவேதா உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். இஃப் யூ கைஸ் டோண்ட் மைண்ட் எனக்காக இந்த வழக்கை ப்ரொசீட் பண்ண முடியுமா?”
"வி வில் லெட் யூ நோ சார்.”
“இது என் கார்ட். ஐ’ல் பி வெயிட்டிங் ஃபார் யூ கைஸ்”.
“ஒரு நிமிஷம் சார். நிவேதா எங்கள பார்க்க வந்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் வசந்த்.
”வெல். ஹாலில் இருந்த ஸ்க்ரிப்ளிங் பேடில் உங்கள் பெயரையும், அட்ரஸையும் கிறுக்கி வைத்திருந்தாள். உங்களைப் பற்றி விசாரித்துப் பார்த்தேன். எதற்காக அவளுக்கு ஒரு வக்கீலின் முகவரி தேவைப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள வந்தேன்” என்றார் ஜெயராமன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு. ”ஒக்கே எனக்கு டைமாச்சு. எந்த முடிவாக இருந்தாலும் ஒரு கால் பண்ணுங்க” என சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
”என்ன பாஸ். போரடிக்குதுன்னு சொன்னீங்களே. உள்ள இறங்கிடுவோமா?” என்றான் வசந்த்.
ஜெயராமன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் “ம்” என்றான்.
“ஓ மை காட். வீ ஃபீல் சாரி பார் யூ. என்ன நடந்தது?” என்றான் கணேஷ்.
“அவ தற்கொலை பண்ணிக்கிட்டா சார். தூக்குல தொங்கிண்டிருந்தா. நாக்கக் கடிச்சிண்டு, முழி பிதுங்கி. ஐயோ நிவேதா...”
ஜெயராமனைக் கண்ட்ரோல் செய்வது கொஞ்சம் கஷ்டமாய் இருந்தது கணேஷிற்கு. அவர் அழுது ஓயும் வரைக் காத்திருந்தனர் இருவரும். இருபது நிமிடத்தில் மொத்தக் கண்ணீரையும் செலவழித்துவிட்டு நிமிர்ந்தார் ஜெயராமன்.
"ஈஸி. ஈஸி. டூ வி ஹேவ் எனிதிங் இன் திஸ் சூசைட் சார்?" என்றான் வசந்த்.
"யெஸ். நிவேதா எதுக்காக உங்கள பார்க்க வந்தாங்கறத சொல்லமுடியுமா? ஐ பீல் ஷி வாஸ் ட்ரிக்கர்ட் டு கமிட் சுசைட்" என ஜெயராமன் சொல்லிக்கொண்டிருக்கும்போதே அவர் செல்ஃபோனில் ஜென்ஸி காதல் ஓவியம் பாடஆரம்பித்தார். படக்கென ஃபோனை எடுத்து “பத்து நிமிஷத்துல கூப்பிடறேன்” எனச் சொல்லி பதிலுக்கு காத்திராமல் லைனைத் துண்டித்தார்.
“ஸாரி. வேர் வேர் வி? ஆங். நிவேதா உங்களை எதுக்காக பார்க்க வந்தா?”
"மிஸஸ் நிவேதா இங்கே வந்தாங்களே தவிர எந்த விவரத்தையும் நாங்க கேட்டுக்கல. வீ ஆஸ்க்ட் ஹெர் டு மீட் அஸ் சம்டைம் லேட்டர். அதுக்கப்புறம் அவங்க வரல. ஆனா நீங்க வந்திருக்கீங்க. வித் ஹெர் டெத் நியூஸ். ஹூம். பை த வே நிவேதா தற்கொலைக்கு தூண்டப்பட்டார் என நீங்கள் நினைக்க காரணம்?"
"அது வந்து...”
“தயங்காம சொல்லுங்க சார்.”
“சமீப காலமாக அவளிடமிருந்து எனக்கு சில இமெயில்கள் வந்தது. அஷோக் அவளிடம் பிரியமாக இல்லையென. அவளை இக்னோர் செய்கிறார் என. இரண்டாவது நிவேதாவின் பெயரில் கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய்க்கு சொத்துகள் இருக்கு. ஒரு விபத்தில் இறந்து போன என் அண்ணா, நிவேதாவிற்கு கல்யாணம் ஆகும்வரை நான் கார்டியனாக இருக்கவேண்டுமென்றும், கல்யாணத்திற்கு பின்னர் அவளுடைய கணவர் கார்டியனாக இருக்கவேண்டுமெனவும் உயிலெழுதியிருக்கிறார். நிவேதாவிற்குப் பிறகு சொத்துக்கள் அஷோக்கிற்குதான் போகும்.”
“ஓ. நீங்கள் நிவேதாவின் கணவரை சந்தேகப் படுகிறீர்களா?”
”ஐ ஹேவ் நோ அதர் ஆப்ஷன்ஸ்”
”அப்ப நீங்க போலீஸ்ல கம்ப்ளையெண்ட் பண்ணலாமே?”
“செய்யப்போகிறேன். அஷோக் மேல் சந்தேகம் இருப்பதாக. மீன்வைல் நிவேதா உங்ககிட்ட என்ன சொன்னான்னு தெரிஞ்சுக்கலாம்னு வந்தேன். இஃப் யூ கைஸ் டோண்ட் மைண்ட் எனக்காக இந்த வழக்கை ப்ரொசீட் பண்ண முடியுமா?”
"வி வில் லெட் யூ நோ சார்.”
“இது என் கார்ட். ஐ’ல் பி வெயிட்டிங் ஃபார் யூ கைஸ்”.
“ஒரு நிமிஷம் சார். நிவேதா எங்கள பார்க்க வந்தாங்கன்னு உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றான் வசந்த்.
”வெல். ஹாலில் இருந்த ஸ்க்ரிப்ளிங் பேடில் உங்கள் பெயரையும், அட்ரஸையும் கிறுக்கி வைத்திருந்தாள். உங்களைப் பற்றி விசாரித்துப் பார்த்தேன். எதற்காக அவளுக்கு ஒரு வக்கீலின் முகவரி தேவைப்பட்டது என்பதை தெரிந்துக்கொள்ள வந்தேன்” என்றார் ஜெயராமன் சிகரெட்டைப் பற்ற வைத்துக்கொண்டு. ”ஒக்கே எனக்கு டைமாச்சு. எந்த முடிவாக இருந்தாலும் ஒரு கால் பண்ணுங்க” என சொல்லிவிட்டு பாக்கெட்டிலிருந்து மொபைலை எடுத்துக்கொண்டு வெளியேறினார்.
”என்ன பாஸ். போரடிக்குதுன்னு சொன்னீங்களே. உள்ள இறங்கிடுவோமா?” என்றான் வசந்த்.
ஜெயராமன் போவதையே பார்த்துக்கொண்டிருந்த கணேஷ் “ம்” என்றான்.
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
November 10, 2011
Scribblings 10-11-2011
சென்ற பதிவோட Scribblings 250 பதிவு பார்த்திருச்சு. பெரிய சாதனையெல்லாம் ஒன்னுமில்லைன்னாலும், மொக்கை போட்டே இம்புட்டு பதிவு தேத்தினது (எனக்கு) பெரிய விஷயம். அதோட நம்ம ஃபாலோவர்ஸ் எண்ணிக்கையும் 250 ஆகிடுச்சு. ஹை. வாட் எ மாட்ச்:) ஊக்கத்திற்கும், ஆதரவிற்கும் நன்றி நண்பர்களே.
******
ஏற்கனவே நான் வண்டியோட்டப் பழகின வீரதீர பராக்கிரமங்கள எழுதியிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு திரும்பவும் கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். ஏற்கனவே பழகின விஷயமாருந்தாலும், சென்னை ட்ராஃபிக்கை நினைச்சாலே உதறது. இன்னியோட ஆறு க்ளாஸ் வண்டிக்கும், சொல்லித்தர்றவருக்கும் எந்த சேதாரமுமில்லாம வெற்றிகரமா முடிஞ்சிருச்சு (ஏதாவதுன்னா எகிறடமாட்டோம்:)). இன்னும் 6 க்ளாஸ் பாக்கி. ஆண்டவா ரோட்ல போறவங்கள காப்பத்துப்பா.
*******
ஒரு வாரமா அடிச்சு ஊத்திட்டு, ஒரு வழியா மழை ஓஞ்சிருச்சு. ஒரு வாரத்துக்கே, முடியல. ரோடெல்லாம் தண்ணி. வீட்டு வாசல்ல, கணுக்கால்க்கும் மேல தண்ணி தேங்கியிருந்தது. பெசண்ட் நகர் MG ரோடு ரொம்ப மோசமாகிருச்சு. அதுவும் வண்ணாந்துறை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளம் விழுந்து, வண்டில போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. எப்பதான் சரி பண்ணுவாங்களோ:(
*******
ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்துல மம்மி, ஷிஃப்டிங் வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க. இதையெல்லாம் மாத்தறதுக்கு, உருப்படியா சாலைகளை சீரமைக்கறது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இப்ப சென்னை மக்களுக்கு தேவை, மோசமான சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து விடுதலையும், குப்பைகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளிலிருந்து விடிவும்தான். இல்ல இப்படித்தான் தொடரும், அதுக்குத்தான் நிறைய ஆஸ்பத்திரி தொறக்கறாங்களோ என்னமோ.
**********
சமீபக்காலங்களில் ரெண்டு ஆல்பங்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒன்னு மயக்கம் என்ன. மற்றொன்று Rockstar. மயக்கம் என்ன படத்தில் எல்லா பாட்டுகளுமே பிடித்திருக்கிறது. “நான் சொன்னதும் மழை வந்துச்சா?”, “ஓட ஓட தூரம் குறையல”, “பிறை தேடும் இரவில்” ஆகிய பாடல்கள் ஃபேவரைட். அதே போல் அந்த தீம் ம்யூசிக். ஆவ்சம். கேட்க கேட்க எங்கேயோ பறக்கும் ஃபீலிங். ராக் ஸ்டாரில் ரஹ்மான் சிம்ப்ளி ராக்ஸ். சட்டா ஹக், குன் ஃபாயா, கட்டியா கரூன், ஜோ பி மைன், தும் ஹோ, நாதான் பரிந்தே என அத்தனையும் அட்டகாசம். வெல்கம் பேக் ரஹ்மான்.
******
ஏற்கனவே நான் வண்டியோட்டப் பழகின வீரதீர பராக்கிரமங்கள எழுதியிருந்தாலும், நாலு வருஷம் கழிச்சு திரும்பவும் கார் ஓட்ட கத்துக்க ஆரம்பிச்சிருக்கேன். ஏற்கனவே பழகின விஷயமாருந்தாலும், சென்னை ட்ராஃபிக்கை நினைச்சாலே உதறது. இன்னியோட ஆறு க்ளாஸ் வண்டிக்கும், சொல்லித்தர்றவருக்கும் எந்த சேதாரமுமில்லாம வெற்றிகரமா முடிஞ்சிருச்சு (ஏதாவதுன்னா எகிறடமாட்டோம்:)). இன்னும் 6 க்ளாஸ் பாக்கி. ஆண்டவா ரோட்ல போறவங்கள காப்பத்துப்பா.
*******
ஒரு வாரமா அடிச்சு ஊத்திட்டு, ஒரு வழியா மழை ஓஞ்சிருச்சு. ஒரு வாரத்துக்கே, முடியல. ரோடெல்லாம் தண்ணி. வீட்டு வாசல்ல, கணுக்கால்க்கும் மேல தண்ணி தேங்கியிருந்தது. பெசண்ட் நகர் MG ரோடு ரொம்ப மோசமாகிருச்சு. அதுவும் வண்ணாந்துறை சந்திப்பில் பெரிய பெரிய பள்ளம் விழுந்து, வண்டில போயிட்டு வர்றதுக்குள்ள போதும் போதும்ன்னு ஆயிருச்சு. எப்பதான் சரி பண்ணுவாங்களோ:(
*******
ஆட்சிக்கு வந்த அஞ்சு மாசத்துல மம்மி, ஷிஃப்டிங் வேலைல ரொம்ப பிசியா இருக்காங்க. இதையெல்லாம் மாத்தறதுக்கு, உருப்படியா சாலைகளை சீரமைக்கறது, குப்பைகளை அப்புறப்படுத்துவது போன்ற வேலைகளில் கவனம் செலுத்தலாம். இப்ப சென்னை மக்களுக்கு தேவை, மோசமான சாலைகளால் ஏற்படும் போக்குவரத்து நெரிசல்களிலிருந்து விடுதலையும், குப்பைகள் நிரம்பி வழிவதால் ஏற்படும் சுகாதார பிரச்சனைகளிலிருந்து விடிவும்தான். இல்ல இப்படித்தான் தொடரும், அதுக்குத்தான் நிறைய ஆஸ்பத்திரி தொறக்கறாங்களோ என்னமோ.
**********
சமீபக்காலங்களில் ரெண்டு ஆல்பங்களை திரும்ப திரும்ப கேட்டுக்கொண்டிருக்கின்றேன். ஒன்னு மயக்கம் என்ன. மற்றொன்று Rockstar. மயக்கம் என்ன படத்தில் எல்லா பாட்டுகளுமே பிடித்திருக்கிறது. “நான் சொன்னதும் மழை வந்துச்சா?”, “ஓட ஓட தூரம் குறையல”, “பிறை தேடும் இரவில்” ஆகிய பாடல்கள் ஃபேவரைட். அதே போல் அந்த தீம் ம்யூசிக். ஆவ்சம். கேட்க கேட்க எங்கேயோ பறக்கும் ஃபீலிங். ராக் ஸ்டாரில் ரஹ்மான் சிம்ப்ளி ராக்ஸ். சட்டா ஹக், குன் ஃபாயா, கட்டியா கரூன், ஜோ பி மைன், தும் ஹோ, நாதான் பரிந்தே என அத்தனையும் அட்டகாசம். வெல்கம் பேக் ரஹ்மான்.
Labels:
துணுக்ஸ்
November 7, 2011
இம்சை விளம்பரம்
டிவில அரை மணிநேரம் ப்ரோக்ராம்ல 20 நிமிஷம் விளம்பரம் தான் வருது. அதுல பாதிக்கு பாதி மொக்கை விளம்பரங்கள். இருக்கறதுலேயே கொடுமையான விளம்பரம் டாய்லெட் க்ளீனர் விளம்பரங்கள் தான்.
தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.
ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.
இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)
இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)
இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?
இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.
இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)
இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).
கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?
#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)
தட்டு நிறைய சுவையான உணவை எடுத்துக்கிட்டு வந்து டிவிய ஆன் பண்ணா பாகவதர் காலத்துல சுத்தம் செய்த டாய்லெட்ட காட்டுவாங்க. அதப் பார்த்த அடுத்த நிமிஷம் வாந்தி வந்துரும். ஒரு வேளை சாப்பிடறதுக்கு முன்னமே பார்த்து தொலைச்சிட்டீங்கன்னா ரெண்டு மணி நேரத்துக்கு சாப்பாடே இறங்காது. இதுல இன்னொரு கொடுமை என்னன்னா அத zoom பண்ணி க்ளோசப்ல காட்டுவானுங்க (அவ்ளோ க்ளோசப்ல பார்க்க அது என்ன ஏமி ஜாக்சன் மூஞ்சா?). அப்படிக் காமிக்கும்போது அதுல தெரியுற பூச்சிங்க இருக்கே. கடவுளே. இப்படியொரு உருவத்துல பூச்சிய ஹாலிவுட் ஏலியன் மூவிலக் கூட காட்டிருக்க மாட்டாங்க. அப்புறம் அந்த டாய்லெட் கீளினரால சுத்தம் செய்யப்பட்ட டாய்லெட்ட ஜூம் பண்ணி (மறுபடியும் அடக் கடவுளே) காட்டுவாங்க. இதுல கழுவறதுக்கு முன் கழுவின பின் கம்பேரிஷன் வேற.
ஒரு டிவி பெர்சானிலிட்டிய புடிச்சாந்து அந்தாளு கைல ஒரு மைக்கையும் கொடுத்து பாத்ரூம் பாத்ரூமா டூர் அடிப்பாங்க.
இந்தம்மா : ஹாய் நீங்களா? வாங்க. என்ன சாப்டறீங்க?
அந்தாளு : முதல்ல உங்க டாய்லெட்ட காட்டுங்க (ஏன் அங்கதான் உக்காந்து சாப்பிடப் போறியா?)
இந்தம்மா : ஓ. நீங்க அந்த க்ளீன் டாய்லெட் சேலஞ்சுக்கு வந்திருக்கீங்களா?
அந்தாளு : ஆமாம். இந்த டாய்லெட்டப் பத்தி என்ன நினைக்கறீங்க? (கட்டி முடிச்ச நாள்லருந்து க்ளீன் பண்ணலைன்னு நல்லாவே தெரியுது)
இந்தம்மா : கொஞ்சம் கறை இருக்கு. (கொஞ்சமா? அடிப்பாவி)
அந்தாளு : இந்தக் கறை போகும்ன்னு நினைக்கறீங்களா?
இந்தம்மா : கண்டிப்பா போகாது. நான் நிறைய ட்ரை பண்ணி பார்த்துட்டேன்.
அந்தாளு : ஒக்கே. இப்போ நம்ம இந்த லிக்விட ஊத்தி பதினைஞ்சு நிமிஷம் கழிச்சு வாஷ் பண்றோம். இப்போ பாருங்க.
இந்தம்மா : வாவ்..எவ்ளோ அழகாயிருச்சு. வாசனை கூட நல்லா இருக்கு (கருமம். வாசனை வருதுங்கறதுக்காக அத லிவ்விங் ரூமா மாத்த முடியுமா?)
இந்த மாதிரி மட்டுமில்ல, கல்யாணமாகி வீட்டுக்கு வர்ற மருமக சீதனமா டாய்லெட் க்ளீனர் கொண்டு வர்றாங்களாம். (எப்படி இப்படியெல்லாம் யோசிக்கறீங்க?).
கொஞ்சம் பிஸியா இருக்க பட்சத்துல, கம்பேனிக்கு சொல்லிவிட்டீங்கன்னா, டிவி செலிப்ரிட்டியே உங்க டாய்லெட்ட க்ளீன் பண்ணிடுவார். டாய்லெட்டும் சுத்தமாகும். டிவிலயும் வந்த மாதிரி இருக்கும். என்ன நாஞ்சொல்றது?
#ரெண்டு வருஷத்துக்கு முன்னால எழுதின பதிவு. ட்ராஃப்ட்ட சுத்தப்படுத்தும்போது கிடைச்சது:)
Labels:
என்ன கொடுமை சார் இது
Subscribe to:
Posts (Atom)