January 11, 2012

நினைவெல்லாம் நிவேதா - 5

”அஷோக்??? என்ன சொல்றீங்க?” என்றான் கணேஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில். இருவருக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு சலனமற்று நின்றுக்கொண்டிருந்த அஷோக்கை மெல்ல நெருங்கினான். அருகே செல்ல செல்ல அஷோக்கின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பது கணேஷிற்கு தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக அவர் தோளைத் தொட்டதும், உடைந்து அழத் தொடங்கினார் அஷோக். இதனை சற்றும் எதிர்பாராத கணேஷ் “ஈசி அஷோக். ஈசி. சாரி உங்களை புண்படுத்த அப்படிக் கேட்கவில்லை”
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.

”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”

"எதுக்கு?”

“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”

“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”

”நன்றி. நாங்க கிளம்புறோம்.”

“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”

“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”

“வருவீங்களா?”

“தேவைப்பட்டால்.”

“தேவைப்படுமா?”

பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.

”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.

“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”

“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.

2 comments:

Rathnavel Natarajan said...

அருமை.
வாழ்த்துகள்.

R. Jagannathan said...

I wandered into your site for the first time and read this serial (5 parts till now) and the comments. I was also thinking it is some old Sujaatha novel as you have used his style and language fully. Nothing wrong or no wonder a writer is inspired by Sujaatha. I appreciate you and yet wish that with your inherent interest in writing, can try a different style of your own which also can be interesting. Best wishes, - R. J.