இரா.முருகனின் சைக்கிள் முனி சிறுகதை தொகுப்பு.
தொகுப்பின் முதல் கதை சாயம். இதைக் கதை என்று சொல்வதைவிட ஒரு காட்சி விவரிப்பு என்று சொல்லலாம். கதை சொல்லி/காட்சியை விவரிப்பவருக்கு நிறைய கேள்விகள் எழுகிறது. சில கேள்விகளுக்கான பதிலை அவரே சொல்கிறார். மீதி கேள்விகள், பதிலில்லாமல் கேள்விகளாகவே இருக்கின்றன. மூன்று பக்கம் தாண்டியவுடனே ”ஆஹா மற்றுமொரு பி.ந.கதைகள் அடங்கிய தொகுப்பாக இருக்குமோ? முதலுக்கு மோசமாகிவிடுமோ” என்ற பயம் வந்துவிட்டது எனக்கு. நல்லவேளையாக அப்படி எதுவுமில்லை:D
சில்லு அறிவியல் புனைகதை. பிறப்பை பதிவு செய்யும்போது தவறு நடக்கிறது. அதனால் ஏற்படும் குழப்பங்கள் கதை. ஒன்லைனராக நன்றாக இருக்கிறது. அநியாயத்துக்கு நீளம். வேகமும் குறைவு. மனதில் ஒட்ட மறுக்கிறது. (ஒப்பிடுதல் தவறுதானென்றாலும், இந்த மாதிரி ஏரியால வாத்தியார் நின்னு ஆடுவார்).
சைக்கிள் முனி என்ற கதையில் பாலன் என்ற சிறுவனுடன் முனி பேசுகிறது. உயிருடன் குழிக்குள் புதைக்கப்பட்டவரும் பேசுகிறார். நம்பகத்தன்மை சுத்தமாக இல்லை. பாலனின் வறுமையான குடும்பச்சூழல் அழகாக விவரிக்கப்பட்டிருக்கிறது. சிறுவனின் அக்கா எழுதும் கடிதம் வாய்விட்டு சிரிக்க வைக்கிறது. இதே போன்று தெய்வம் பேசும், அலுத்துக்கொள்ளும் இன்னொரு கதை தரிசனக் கதை. தெய்வத்தை முன்னிறுத்தி, மனதிற்கு தோன்றியதையெல்லாம் சோழி உருட்டி குறிகளாக சொல்லும் பூசாரி கதாபாத்திரம் ஈர்க்கிறது.
கருணை இந்தியாவில் பிறந்து, வெளிநாட்டில் வாழ்ந்து, இறக்கப் போகும் ஒருத்தனின் இறுதி நேரங்கள். ஆண்களின் சந்தேக புத்தியையும், குறுகிய மனப்பான்மையையும் தொட்டுச் செல்கிறது. ஆரம்பத்தில் ரவியின் கதாபாத்திரம், பரிதாபத்தை ஏற்படுத்த தவறுவதால், முடிவில் பெரிய அதிர்ச்சியொன்று ஏற்படவில்லை.
தொகுப்பிலேயே சிறந்தக் கதை எதுவென்றால், முக்காலியைத்தான் சொல்வேன். பாங்காக்கில் குப்பைக் கொண்டிருக்கும் சாஃப்ட்வேர் ஆர்டர் பிடிக்கும் ஆசாமி, தன் மேலதிகாரிக்கும், அவரின் உறவினர்களுக்கும் போடும் கூழைகும்பிடுகள் தான் கதை. ஒவ்வொரு வரியிலும் வலிக்க வலிக்க சிரிக்க வைக்கிறார் இரா.முருகன்.
தொகுப்பிலேயே மிக மோசமான கதை என்றால் அது ஒண்டுக்குடித்தனம் தான். பேச்சிலரான சரவணனும், அவனுடன் நட்பு பாராட்டும் பேய்களும் தான் கதை மாந்தர்கள். நகைச்சுவையோ, ஆழ்ந்த விவரிப்போ இல்லாமல் மேம்போக்காக போகிறபோக்கில் எழுதப்பட்ட கதை போல் இருக்கிறது.
சிறுவயதில் மலையாளம் கற்றுக்கொள்ள முற்பட்டதை நகைச்சுவையோடு சொல்லுகிறது பாருக்குட்டி. ”அவன் சாயா குடிச்சு. அவள் பரிப்பு வடை தின்னு” என்று டீக்கடை சமாச்சாரங்களையே பாடாமாக்கி எங்களை எழுதச் சொல்லிவிட்டு, ‘பொடி மோளே’ என்று கூப்பிட தடி மோளான பாரு பொரிகடலை வாயோடு வெளியே வருவாள். இதுபோன்று குபீர் சிரிப்பை வரவழைக்கும் வர்ணனைகளோடு போகும் கதையின் முடிவு அதிர்ச்சியளிக்கும் ரகம்.
வாத்தியார் வீட்டு ஸ்டவ் ஜோசியம் சொல்கிறது. மூடநம்பிக்கைகளையும், எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகளை, தங்களுக்கு சாதகமாக்கிகொள்ளும் மக்களின் மனோபாவங்களை எள்ளலோடு சொல்லும் கதை.
வாயு குறுநாவல். அதிர்ச்சியளிக்கும்/முகம்சுளிக்க வைக்கும்/(சோ கால்ட் கலாசாரத்தினால்) பிறருடன் பேசத்தயங்கும் விஷயங்களை சர்வசாதரணமாக எழுதிச் சென்றிருக்கிறார் ஆசிரியர். குசு விடும் போட்டி, அதையொற்றி நகைச்சுவைக்காக எழுதப்பட்ட சில வரிகள் என ஆங்கில கலாசாரத்தையொட்டி எழுதப்பட்ட கதை. ஆங்கிலத்திலிருந்து அப்படியே மொழிபெயர்த்தது போலிருக்கிறது. தமிழில் படிக்கிற உணர்வே இல்லை. உதாரணத்திற்கு கதையில் ஒரு கதாபாத்திரம் “புனித மலம்” எனக் கத்துகிறது. மொழிப்பெயர்க்கப்பட்ட கதையில் கூட இப்படி நேரடி தமிழாக்கம் செய்வார்கள் என்று தோணவில்லை. அதிர்ச்சி மதிப்பீட்டிற்காகவே எழுதப்பட்டது போலிருக்கிறது.
முதன்முறையாக இரா.முருகனின் எழுத்துக்களை வாசிக்கிறேன். தொகுப்பில் பொதுத்தன்மை நகைச்சுவை மட்டுமே. மற்றபடி சிறுகதை ஒவ்வொன்றும் வெவ்வேறு கதைக்களன்/பின்புலத்தில் எழுதப்பட்டிருக்கிறது. வெளிநாட்டில் தலைக்கு சாயம் பூசிக்கொள்ள வந்தவன் இறந்து போவதைப் படித்துவிட்டு பக்கங்களை புரட்டினால் ஏதோவொரு கிராமத்தில் முனி பேசுகிறது. ஹுயுமனாய்ட்கள் வேலை செய்து முடித்தவுடன், பங்காரம்மா கழுநீர் கொண்டு செல்ல வருகிறாள். இந்த அதீத வேறுபாடுகள் படிக்கும்போது அயற்சியேற்படுத்தவில்லையென்றாலும், ஒருமாதிரியான சலிப்பைத் தருகிறது. விவரணைகள் சவசவ என்றில்லாமல், சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிப்போவது ஒரு பெரிய ஆறுதல். யதார்த்தை மீறிய கதைகள் எதுவுமே மனதில் நிற்கவில்லை. இயல்பாய், நம்பகத்தன்மையுடன் இருக்கும் கதைகள் (முக்காலி, பாருக்குட்டி) அதிகம் கவனம் ஈர்க்கின்றன.
சைக்கிள் முனி
இரா.முருகன்
கிழக்கு பதிப்பகம்
September 26, 2011
September 15, 2011
கைதிகள்
காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டதுமே தூங்கிக்கொண்டிருந்த குழந்தை சிணுங்க ஆரம்பித்தான். ஒருமணிநேரம் கஷ்டப்பட்டது வீணாகப் போய்விடுமோ என்ற கவலையோடு அம்மா குழந்தையை தட்டிகொடுக்க ஆரம்பித்தாள். விரித்துப் போட்டிருந்த முடியை அள்ளி முடிந்துக்கொண்டு கதவை திறந்தேன். வெளியே நின்றவருக்கு ஐம்பது வயதிருக்கலாம். கஷ்டப்பட்டு ஒரு புன்னகையை வரவழைத்துக்கொண்டு நல்லாருக்கீங்களாம்மா என்று கேட்டார். மையமாய் தலையாட்டிவிட்டு என்ன கேட்பது எனத் தெரியாமல் நின்றேன். அவரே தொடர்ந்தார்.
“அய்யா இருக்காங்களா?”
“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”
“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”
“ஓ. உள்ள வாங்க”
“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”
“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.
வாங்க ராஜன்.
அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.
அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?
இது ஒத்து வருமா பாருங்கய்யா.
(சிறிது நேர அமைதிக்குப் பின்)
இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.
ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.
அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.
முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.
நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.
அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.
இப்பதான் வர்றியா?
ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.
சாப்ட்டியா?
இல்ல.
தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.
அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?
இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?
ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.
வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.
“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”
“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.
“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”
“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”
“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”
“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”
அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.
“நீ உடனே கிளம்பி வா”
“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”
“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”
“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”
“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”
அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.
அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.
“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.”
“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”
“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”
“வாட்?”
“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”
“ஸ்டாப் ஜோக்கிங்.”
“Do u think i am? bloody hell"
"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”
“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.
நன்றி அதீதம்
“அய்யா இருக்காங்களா?”
“குளிச்சிட்டிருக்காங்க. நீங்க??”
“நான் J8 இன்ஸ்பெக்டர்ம்மா. அய்யா தான் வரசொல்லிருந்தாரு”
“ஓ. உள்ள வாங்க”
“பரவால்லம்மா. அய்யா வரட்டும்”
“பரவால்ல சார். உள்ள வந்து உட்காருங்க. நான் அப்பாகிட்ட சொல்றேன்” என்றபடி, அவர் உள்ளே வருவதற்கு வசதியாய் கதவை முழுவதும் திறந்துவிட்டு உள்ளே சென்றேன். அப்பாவும் குளித்துவிட்டு வந்திருந்தார். தூங்கும் குழந்தையை ரசித்துக்கொண்டிருந்தவரிடம் விவரம் சொன்னேன். சட்டையை மாட்டிக்கொண்டே அம்மாவிடம் காஃபி போட சொல்லிவிட்டு ஹாலுக்கு போனார். துவைத்த துணிகளை மடித்து வைக்க ஆரம்பித்த எனக்கு ஹாலில் இருவரின் உரையாடல் தெளிவாகக் கேட்டது.
வாங்க ராஜன்.
அய்யா தொந்தரவு பண்ணிட்டேனா.
அதெல்லாம் ஒன்னுமில்ல ராஜன். எழுதிட்டீங்களா?
இது ஒத்து வருமா பாருங்கய்யா.
(சிறிது நேர அமைதிக்குப் பின்)
இந்த மாதிரி வேண்டாம் ராஜன். இன்னும் கொஞ்சம் பொலைட்டா இருந்தா பெட்டரா இருக்கும்.
ஹும்ம். என்ன எழுதி என்ன புண்ணியம்ய்யா? எப்படியும் போகப் போறது போகப் போறதுதான்.
அப்படி இல்ல ராஜன். சில சமயம் அதிகாரி நல்ல மூட்ல இருந்தா பீரியட் குறைய வாய்ப்பிருக்கு. ஆனா நீங்க அன்னைக்கு அவசரப்பட்டிருக்கக்கூடாது.
முடியலய்யா. நாய் பொழப்பு பொழைக்க வேண்டியதா இருக்கு. லா அண்ட் ஆர்டர் பிரச்சனை, ஸ்னாட்சிங் மாதிரி ஏதாவது நடந்து திட்டினாக்கூட வாங்கிக்கலாம். சிவில் மேட்டருக்காக அடிச்சுகிட்டா என்னய்யா பண்ண முடியும்? கண்டவன் கிட்ட கேவலமா திட்டு வாங்கனும்ன்னு என் தலைல எழுதிருக்குப் போல.
நியாயம்தான். ஆனா என்ன பண்றது. நம்ம உத்யோகம் அப்படி.
அம்மா காஃபி கொண்டு கொடுத்திருக்க வேண்டும். நல்லாருக்கீங்களாம்மா என்ற குரல் கேட்டது. இதற்கிடையில் என் ஃபோன் அடிக்கவும் யாரெனப் பார்த்தேன். லதா காலிங் என்று சொல்லிவிட்டு வாயை மூடிக்கொண்டது மொபைல். “Strtin in 5 mins" என அவளுக்கு ஒரு மெசேஜ் தட்டிவிட்டு. தலை சீவிக்கொண்டு, துப்பட்டாவை எடுத்துக்கொண்டு கிச்சனுக்குள் புகுந்தேன். காஃபி டம்ளரை நீட்டிய அம்மாவிடம் “வேண்டாம்மா. லத்து வெயிட் பண்றா. நான் போய்ட்டு ஒரு மணிநேரத்துல வந்திடறேன். குழந்தை எழுந்தான்னா செரலாக் கரைச்சுக் கொடுத்துரு” என சொல்லிவிட்டு, சாவியை எடுத்துக்கொண்டு ஹாலுக்கு வந்தேன். இருவரும் காஃபி சாப்பிட்டுக்கொண்டிருந்தார்கள். ஜாடையில் அப்பாவிடம் சொல்லிவிட்டு வெளியே வந்தேன். இரண்டரை மணிநேரம் லதாவுடன் கடைகடையாய் ஏறி இறங்கி வீட்டுக்கு வரும்போது மணி ரெண்டு. வண்டியை நிறுத்திவிட்டு உள்ளே நுழைகையில், அப்பாவும் வந்துக்கொண்டிருந்தார்.
இப்பதான் வர்றியா?
ஆமாப்பா. லத்துவ வீட்லக் கொண்டு விட்டுட்டு வர்றேன்.
சாப்ட்டியா?
இல்ல.
தாழ்ப்பாளிற்க்கோ கதவிற்கோ வலிக்காமல் மெதுவாய் தட்டினோம். கதவைத் திறந்த அம்மாவிடம் “ஸாரிம்மா. ரொம்ப லேட்டாயிருச்சு. குழந்தை படுத்திட்டானா?” என்றேன்.
அதெல்லாம் ஒன்னுமில்லடி. நீ அந்தப் பக்கம் போனவுடனேயே எழுந்துடுத்து. செரலக் ஊட்டினேன். சமர்த்தா சாப்ட்டு கொஞ்சம் நேரம் விளையாடினான். இப்போதான் தூங்க ஆரம்பிச்சிருக்கான். நீ சாப்டியாடி?
இல்லம்மா. பசிக்கறது. எனக்கும் சேர்த்தா பண்ணிருக்க?
ஆமாண்டி. எதுக்கும் இருக்கட்டுமேன்னு பண்ணேன். கை கால் அலம்பிண்டு வா. சாப்பிடலாம். தட்டு வைக்கிறேன்.
வெயிலில் அலைந்ததில் நல்ல பசி. சாப்பிட்டுக்கொண்டிருந்தபோது அம்மாதான் ஆரம்பித்தாள்.
“ஆர்டர் கொடுத்தாச்சா அவருக்கு?”
“ம்ம்ம்ம். 6 மாசம். ப்ரோமோஷன் தள்ளிப் போகும். ப்ச்ச்ச்” என்றார் அப்பா.
“யாருப்பா? காலைல வந்தாரே அவரா? என்னாச்சு?”
“அவர் லிமிட்ல ஒரு சிவில் கேஸ்ல ஒருத்தன் இன்னொருத்தன கட்டையால அடிச்சிட்டான். அடிவாங்கின ஆளு ஜே.சிக்கு சொந்தமாம். இந்த வாரம் நடந்த க்ரைம் மீட்டிங்கில, ஜே.சி கன்னாபின்னான்னு கத்திட்டார். என்னய்யா புடுங்கிட்டிருந்த, மாடு மேய்க்கத்தான் லாயக்கி, யூஸ்லெஸ் அப்படி இப்படின்னு கத்தவும், இவர் டென்ஷனாகி, மரியாதையா பேசுங்க. சிவில் கேஸ்ல அடிச்சுகிறவங்க எங்ககிட்ட சொல்லிட்டா செய்றாங்கன்னு கத்திட்டு, கேப்ப தூக்கி சுவத்துல அடிச்சிட்டார். அதிகாரி முன்னாடி அப்படி நடந்துக்கிட்டதால, டிசிப்ளினரி ஆக்ஷன் எடுக்க சொல்லிட்டாங்க. பாவம். விளக்கம் எழுதிக் கொடுக்க வந்தாரு.”
“அடப்பாவமே. என்னதான் இருந்தாலும், ஜே.சி அப்படி பேசினதும் தப்புதானேப்பா? அவர் மேல எதுவும் புகார் கொடுக்க முடியாதா?”
“ஹூம்ம்ம். அதெல்லாம் இங்க செல்லாது. பாவம். பொண்ணுக்கு வேற கல்யாணம் வச்சிருக்காரு.”
அப்பா சொல்லிக்கொண்டிருக்கும்போதே, என் ஃபோன் ஒலிக்கவும் எடுத்து யாரென பார்த்தேன். ராகவ் காலிங் என வந்தது. எடுத்து ஒரு எள்ளலான குரலில் “என்ன அதிசயம். ஃபோனெல்லாம் பண்ற?” என்றேன். மறுமுனையில் பதற்றமான அவர் குரல் சின்ன கலக்கத்தை ஏற்படுத்தியது.
“நீ உடனே கிளம்பி வா”
“Is everything alrite? ஏன் வாய்ஸ் ஒரு மாதிரி இருக்கு?”
“ஒன்னுமில்ல. நீ கிளம்பி வா.”
“வா வான்னா எங்க வர்றது. நீ ஆஃபிஸ் போலயா?”
“நான் ஆஃபிஸ்லருந்து கிளம்பப் போறேன். நேர்ல பேசிக்கலாம் வா”
அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. என்னவாக இருக்குமென்று என்னால் யூகிக்கவே முடியவில்லை. மெலிதாய் பதற்றம் தொற்றிக்கொண்டது. அம்மாவிடம் விவரம் சொன்னேன். “நீ மட்டும் போய்ட்டு என்ன ஏதுன்னு தெரிஞ்சிண்டு எனக்கு ஃபோன் பண்ணு. குழந்தை இங்கேயே இருக்கட்டும். நிலமைய தெரிஞ்சுண்டு நான் கொண்டு வந்து விடறேன்.” என்றாள்.
அதுவும் சரியாகப் படவே நான் மட்டும் கிளம்பினேன். ட்ராஃபிக்கில் மூச்சுத் திணறி, நான் வீடு போய் சேர்வதற்குள் அவர் வந்திருந்தார்.
“என்ன ஆச்சு? இந்நேரத்துக்கு ஆஃபிஸ்ல இருந்து வந்திருக்க? உடம்புக்கு முடியலையா? ஹாஸ்பிட்டல் போவோமா?”
“அதெல்லாம் ஒன்னுமில்ல.”
“பின்ன என்னன்னு சொல்லித் தொலையேன். டென்ஷனாறது”
“ஹூம்ம்ம்ம். பேப்பர் போடப் போறேன்.”
“வாட்?”
“பி.எம்மோட ஒத்து வரல. பேப்பர் போட்டுடலாம்ன்னு பார்க்கிறேன்”
“ஸ்டாப் ஜோக்கிங்.”
“Do u think i am? bloody hell"
"பின்ன. என்ன பிரச்சனை எதுவும் சொல்லாம, திடுதிப்புன்னு பேப்பர் போடறேன்னு சொன்னா என்ன அர்த்தம்? என்ன ஆச்சு?”
“ஒரு இஷ்யூ. ரெண்டு நாளா பார்த்துகிட்டிருக்கோம். Progress என்னன்னு கேட்டான். பார்த்துக்கிட்டிருக்கோம்ன்னு சொன்னதுக்கு, இன்னைக்குள்ள முடிக்கனும்ன்னு சொல்றான். பொலைட்டா கூட சொல்லல. திமிரா சொல்றான். Who is he to order me? இத்தனைக்கும், i'm reporting directly to the account manager. நானும் பார்த்துகிட்டே இருக்கேன். etiqutte தெரியாதவன் கூட எல்லாம் என்னால வேலை செய்ய முடியாது. பேப்பர் போட்டுடலாம்ன்னு இருக்கேன்.” என்று சொல்லிக்கொண்டே போனார். ஏனோ காலையில் பார்த்த, அந்த இன்ஸ்பெக்டரின் கவலை தோய்ந்த முகம் நினைவிற்கு வந்தது.
நன்றி அதீதம்
May 17, 2011
பழிக்கு பழி
கொலைப்பட்டினியோடிருக்கும் பத்து சிங்கங்களிருக்கும் குகையின் வாசலில் நிற்கும் ஆடு போல் DK கல்யாண மண்டப வாசலில் நின்றுக்கொண்டிருந்தேன். அவசியம் உள்ளே போகத்தான் வேண்டுமா என்ற எண்ணம் தோன்றி மறைந்தது. வேறு வழியில்லை. போய்த்தான் ஆக வேண்டும். கண்களை மூடி ஒரு தடவை மூச்சை நன்றாக இழுத்து விட்டுக்கொண்டேன். மனதைரியத்தை வரவழத்தைக்கொண்டு உள்ளே நுழைந்தேன். வராந்தா போன்றிருக்கும் அமைப்பில் சிதறிய அன்ன உருண்டைகளை சுத்தம் செய்துக் கொண்டிருந்தார்கள் நடுவயதுப் பெண்கள். ”இப்பக்கூட ஒன்னும் கெட்டுப்போய்டல. அப்படியே திரும்பி ஓடிடு” என என் மூளை எச்சரித்துக்கொண்டிருக்கும்போதே “ஹேய் ஸ்வேதா. வா வா வா. என்ன அங்கேயே நின்னுண்டிருக்கே. உள்ளே வா. அப்பாம்மா வர்லையா?” எனக் கேட்டபடியே என் பதிலை எதிர்பார்க்காமல் சச்சு மாமி என் கையைப் பிடித்து தரதரவென உள்ளே இழுத்துக் கொண்டு போனாள். என்னைக் கொண்டுபோய் அவள் நிறுத்திய இடத்தில் சங்கர் மாமா உட்கார்ந்திருந்தார்.
”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.
“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.
“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”
“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”
“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.
“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”
“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”
“BTSல தான வேலை பார்க்கிற?”
“ஆமாம்”
“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.
மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.
“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.
“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.
“7 இயர்ஸ் ஆய்டுத்து”
“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”
“சிட்டி ஆஃபிஸ்”
“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.
“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”
“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.
"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.
ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.
“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’
“தேங்ஸ்டி.”
“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”
“கொலவெறில இருக்கேன். போய்டு.”
“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”
“அடியேய்ய்ய்ய்ய்”
“சும்மா சொல்லுடி”
“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.
கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.
“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"
"யெஸ் வேலு.”
“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”
“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"
"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."
"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”
“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."
ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.
Name : Mahadevan Keshava Krishnan
வாடி வா.......
”என்னடீ இவ்ளோ சீக்கிரம் வந்துட்ட? இன்னும் சாவகாசமா விளையாடலுக்கு வந்திருக்கலாமே” என்றார் சங்கர் மாமா நக்கலாக.
“இல்லை மாமா. ரொம்ப ட்ராஃபிக். தாலி கட்டியாச்சா? என்றபடியே மேடையில் என்ன நடக்கிறது என நோட்டம் விட்டேன். மடிசாரில் சுமியைப் பார்க்க சிரிப்பாய் இருந்தது. மரப்பாச்சிக்கு புடவை சுற்றுவது போல் கட்டிவிட்டிருந்தார்கள். நான்குக்கும் மேற்பட்ட மாற்று மாலைகள் வேறு. புகையில் வெந்துக்கொண்டிருந்தாள். அப்பப்போ சுரேஷின் காதில் எதுவோ ஓதிக்கொண்டிருந்தாள், சாஸ்த்ரிகள் மாமாவிற்குப் போட்டியாய். ”அது ஆச்சு பத்து நிமிஷம். வந்ததிலேர்ந்து நின்னுண்டேயிருக்கியே. சித்த இங்க வந்து உட்காரு” என சங்கர் மாமா சேரைக் காமித்தார்.
“இருக்கட்டும் மாமா. நான் போய் சுமியைப் பார்த்திட்டு ஓதியிட்டுட்டு வந்துட்றேன்.”
“பாணிக்ரஹனம் போய்ண்டுருக்குடி. அப்பாம்மா ஏன் வரல”
“அம்மாக்கு உடம்பு முடியல மாமா. அப்பா மீட்டிங் கிளம்பிட்டாரு.” என சொல்லிக்கொண்டிருக்கும்போதே “அதானே. எங்காத்து விசேஷம்னா மட்டும் உங்கம்மாக்கு உடம்புக்கு முடியாம போய்டுமே” என நொடித்தபடியே வந்தமர்ந்தாள் புவனா மாமி. பின்னாடியே சீதா மாமி, சேஷு மாமா என ஒரு பெரும்படையே வந்துகொண்டிருந்தது. கோபு மாமாவின் ஏப்பத்தில் எல்லோரும் டைனிங் ஹாலில் போர் பண்ணிட்டு வந்திருக்கிறார்கள் எனப் புரிந்துக்கொண்டேன். ”என்னடி நன்னாருக்கியா. இப்படியே ஒசந்துண்டே போனா ஒங்கப்பன் மாப்பிள்ளை எப்பட்றி தேடுவான்?” என அவருடைய முறக்கையால் என் முதுகில் ஒன்று வைத்துவிட்டு அமர்ந்தார் பாலு மாமா. “இத அடிக்காம சொல்லக்கூடாதா மாமா. வலிக்கறது” என்றேன். அடுத்து எந்தப் பக்கத்திலிருந்து யார் அட்டாக் பண்ணுவாங்க என யோசித்துக்கொண்டிருக்கும்போதே முதல் வெட்டு விழுந்தது.
“அப்புறம் வேலையெல்லாம் எப்படி போய்ண்டிருக்கு?”
“ஒன்னும் சொல்லிக்கற மாதிரி இல்ல மாமா. போறது”
“BTSல தான வேலை பார்க்கிற?”
“ஆமாம்”
“என் தங்கை பையன் கூட அங்கதான் வேலை பண்றான். இரு அவள கூப்பிடறேன்” என்றாவரே ”மங்களா இங்க வாயேன்” எனக் கத்தினாள் சீதா மாமி.
மங்களா என்றழைக்கப்பட்ட அந்த மாமி தன் பெருத்த சாரீரத்தை உருட்டிக்கொண்டு வந்து சேர்ந்தாள்.
“நம்ம ஸ்ரீதர் பொண்ணுடி. உன் பையன் வேலை பண்ற கம்பெனிலதான் இவளும் இருக்கா” என்றாள் சீதா மாமி.
“ஓஹ் அப்படியா. எப்ப ஜாயின் பண்ண கொழந்தே” என்ற மாமியின் குரல் வெண்கல கடையில் யானைப் புகுந்தாற்போலிருந்தது.
“7 இயர்ஸ் ஆய்டுத்து”
“எம்பையன் எட்டு மாதத்திற்கு மின்னதான் சேர்ந்தான். நீ எந்த ஆஃபிஸ்?”
“சிட்டி ஆஃபிஸ்”
“ஓ. அவன் மெயின் ஆஃபிஸிலருக்கானாக்கும். ட்ரெய்னிங்ல ரொம்ப நன்னா பெர்ஃபார்ம் பண்றாவளைத்தான் மெயின் ஆஃபிஸ்ல போடுவாளாமே” என மாமி மொக்கைப் போட ஆரம்பித்தார். இதுக்கே டென்ஷன் ஆனா எப்படிங்கற மாதிரி அடுத்தடுத்து நான் ஸ்டாபாக அள்ளி வீசிகொண்டிருந்தார்.
“மஹா ட்ரெய்னிங்கல பெர்ஃபார்ம் பண்றத பார்த்து கம்பெனில அவனுக்கு ஒரு வீல் வச்ச சூட்கேஸ் கிஃப்ட் பண்ணாங்க தெரியுமோ.”
“அசடே. அது பேர் ஸ்ட்ராலிடி. ஹாய். ஐ’ம் கேஷவக் கிருஷ்ணன். மங்களா ஹஸ்பெண்டு” என்று கை கொடுத்தபடியே அமர்ந்தார். கேஷவக் கிருஷ்ணனில் அந்த ஷவுக்கு அவர் கொடுத்த அழுத்தமும், நெற்றிச் சந்தனமும் நான் மலையாளி என மைக் போட்டு அறிவித்தன.
"மஹா சின்ன வயசுலருந்தே ரொம்ப ப்ரில்லியண்ட். காலேஜ்ல கூட டாப்பர். ட்ரெய்னிங்ல எக்செல் பண்ணதால ஹெச்.ஆர் இவன கம்பெனியோட பெஸ்ட் ப்ராஜெக்ட்ல தான் போடனும்ன்னு ஹோல்ட் பண்ணி வச்சிருக்கா தெரியுமோ.” என அவர் பங்கிற்கு அடித்துவிட்டுக்கொண்டிருந்தார். இன்னும் ரெண்டு நிமிஷம் இவங்க பேசறதைக் கேட்டா ஸ்வேதா செத்திருவாள் ரேஞ்சுக்கு இருந்தது கணவன் மனைவியில் அலப்பறை. ஆபத்பாந்தாவன் அநாதரட்சகனாக சாஸ்திரிகள் மாமாவின் அனொன்ஸ்மெண்ட் கேட்டது. “பாணிகிரஹனம் ஆயிடுத்து. விஷ் பண்றாவா எல்லாம் வரலாம்”. எஸ்கேப் ஆகிடு ஸ்வேதா என மைண்ட் வாய்ஸ் சொல்ல சிங்கங்களிடம் விடை பெற்றுக்கொண்டு, சுமியைச் சந்தித்து, கவரைக் கொடுத்து, கொஞ்சம் பேசிவிட்டு, ஃபோட்டோக்கு போஸ் கொடுத்துவிட்டு ஒரு வழியாய் மண்டபத்தை விட்டு வெளியே வருவதற்குள் வேர்த்துவிட்டது.
ஆஃபிஸ் வந்து சீட்டில் அமர்ந்ததும் ஹேமா வந்தாள்.
“இந்தாடி ப்ரிண்ட் அவுட். ஹெச்.ஆரிலிருந்து பன்னெண்டு ப்ரொஃபைல் மெயில் பண்ணிருந்தாங்க. எனக்கு தேவையானது ஒன்னும் இல்ல. உனக்கு ஒத்து வருமா பாரு.’
“தேங்ஸ்டி.”
“தேங்ஸ் எல்லாம் அப்புறம். கல்யாணத்துல ஒரே குளுகுளுன்னு இருந்ததா? எத்தனை தேறிச்சு?”
“கொலவெறில இருக்கேன். போய்டு.”
“ஏன் எல்லாமே அம்மாஞ்சியாத்தான் இருந்ததுகளோ?”
“அடியேய்ய்ய்ய்ய்”
“சும்மா சொல்லுடி”
“கடுப்பேத்தாதடி. ஒரு மொக்கை பார்ட்டிங்க கிட்ட மாட்டிகிட்டு முழி பிதுங்கி வந்திருக்கேன். என்னமோ அவங்க புள்ளதான் கம்பனியையே தாங்கற மாதிரி ஸீனப் போட்டாங்கடி. கம்பெனில கொடுக்கற இயர்லி கிஃப்ட்ட பெர்ஃபார்மன்ஸுக்கு கொடுத்ததா சொல்றாங்கடி. நீ மட்டும் என் இடத்துல இருந்திருந்தா கொலையே பண்னிருப்படி” என நடந்தவற்றை அவளிடம் சொல்லி முடித்தேன்.
கண்ணில் நீர் வர சிரித்தவள், என் PM வருவதைப் பார்த்துக் கிளம்பினாள்.
“ஹாய் ஸ்வேதா. Is everything ok?"
"யெஸ் வேலு.”
“டீம் ஃபார்ம் பண்ணிட்டீங்களா?”
“Yet to. இன்னைக்குதான் ஹெச்.ஆரிலிருந்து ப்ரொஃபைல்ஸ் அனுப்பிச்சிருக்காங்க. Have to go through and"
"ஓ நோ. We dont have ample time swetha. நீங்க ஒன்னு பண்ணுங்க. இண்டர்வியூவெல்லாம் வேண்டாம். If you are satisfied with the profile, pull them into the team."
"ஆனா வேலு, இது ரொம்ப ஹெவியான வொர்க்.”
“நெவர் மைண்ட் யா. ஷிஃப்ட்ஸ் கேன்சல் பண்ணுங்க. டெட்லைன்ஸ் ஷார்ட்டன் பண்ணுங்க. you know how to get the work done."
ஹூம்ம்ம். ஈசியா சொல்லிட்டுப் போய்டுவார். டீம் மெம்பர்ஸ வேலை வாங்கறதென்ன அவ்ளோ ஈசியா. ஃப்ரெஷர்ஸ் மட்டும் தான் எவ்ளோ நேரமானாலும் உட்காருவாங்க. என்னத்த பண்ண என மனதிற்குள் புலம்பியபடியே ஹேமா வைத்துவிட்டுப் போன ப்ரிண்ட் அவுட்களைப் புரட்ட ஆரம்பித்தேன். நடுவில் இருந்த ரெசுயூமைப் பார்த்ததும் எனக்குள் இருந்த ஓனிடா சாத்தான் குரூரப் புன்னகை புரிந்தது.
Name : Mahadevan Keshava Krishnan
வாடி வா.......
Labels:
காமெடி மாதிரி,
புனைவு,
மொக்கை
May 4, 2011
Mash - Resto'cafe
பீச் வியூ. நிறைய அரட்டை. கொறிக்க லைட்டான உணவுகள். கேட்க நல்லாருக்குல்ல? அனுபவிக்கப் போக வேண்டிய இடம் பெசண்ட் நகர் பீச் ரோடில் இருக்கும் Mash. கஃபேவுமில்லாமல் ரெஸ்டாரெண்ட் கணக்கிலும் வராமல் ஒரு eat out. அதிகபட்சமாய் முப்பது பேர் அமர்ந்து உணவருந்தலாம். Sizzlers, burgers, sandwiches, crepes, hot dogs என முழுக்க முழுக்க காண்டினெண்டல் மெனு. ரொம்ப இண்ட்ரெஸ்டிங்கான ஸ்டார்டர்ஸ். ஆப்ஷன்ஸ் குறைவாக இருந்தாலும், மெனு ரசனையாக இருக்கிறது.
மினர்ஸ்டோன் சூப், வெஜ் க்ராக்கெட்ஸ், Honey glazed potato cubes மூன்றுமே நன்றாக இருந்தது. கடைசியாக சொன்ன ஐட்டம் செம்ம க்ரிஸ்பி. ஆனால் மூன்றுக்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.



Alfredo மற்றும் Arabitta சாஸ்களைக் கொண்டு செய்த பாஸ்தாக்கள் ரொம்ப நன்றாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான மிளகின் காரத்தோடு க்ரீமி அண்ட் யம்மி:)


டெசர்ட்டாக சாப்பிட்ட Choco mud pie ஆவரேஜ் தான்.

மேலதிக தகவல்கள்
உணவகம் : Mash
உணவு : Continental Veg/Non-Veg
இடம் : பெசண்ட் நகர் பீச்சின் எதிர்புறம் (போலீஸ் பூத்தைத் தாண்டி ஜாவா க்ரீன் காஃபி ஷாப் அருகில்).
டப்பு : 500 + taxes for 2
பரிந்துரை : அரட்டைக்கு நல்லதொரு hangout. சாப்பாடும் மோசமில்லை. முயற்சிக்கலாம்.
மினர்ஸ்டோன் சூப், வெஜ் க்ராக்கெட்ஸ், Honey glazed potato cubes மூன்றுமே நன்றாக இருந்தது. கடைசியாக சொன்ன ஐட்டம் செம்ம க்ரிஸ்பி. ஆனால் மூன்றுக்கு மேல் திகட்ட ஆரம்பித்துவிடுகிறது. குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும்.
Alfredo மற்றும் Arabitta சாஸ்களைக் கொண்டு செய்த பாஸ்தாக்கள் ரொம்ப நன்றாக இருந்தன. ஃப்ரெஷ்ஷான மிளகின் காரத்தோடு க்ரீமி அண்ட் யம்மி:)
டெசர்ட்டாக சாப்பிட்ட Choco mud pie ஆவரேஜ் தான்.
மேலதிக தகவல்கள்
உணவகம் : Mash
உணவு : Continental Veg/Non-Veg
இடம் : பெசண்ட் நகர் பீச்சின் எதிர்புறம் (போலீஸ் பூத்தைத் தாண்டி ஜாவா க்ரீன் காஃபி ஷாப் அருகில்).
டப்பு : 500 + taxes for 2
பரிந்துரை : அரட்டைக்கு நல்லதொரு hangout. சாப்பாடும் மோசமில்லை. முயற்சிக்கலாம்.
Labels:
கொட்டிக்கலாம் வாங்க
May 2, 2011
நெடுஞ்சாலை - கண்மணி குணசேகரன்
கண்மனி குணசேகரனின் நெடுஞ்சாலை வாசித்து முடித்த அன்றிரவு தூக்கம் பிடிக்காமல் நெடுநேரம் விழித்திருந்தேன். பாயிண்ட் டு பாயிண்ட், கிரிவலம் ஸ்பெஷல், தோல் பையை ஒரு குலுக்கு குலுக்கி சில்லறை தேடும் சோடா புட்டி அணிந்த கண்டக்டர், சின்னப் பசங்களோ, வயதானவர்களோ யார் உட்கார்ந்திருந்தாலும் எழுப்பிவிட்டு, தன் பெருத்த சாரீரத்தை தன் சீட்டிலடைத்து நான்காய் எட்டாய் மடிக்கப்பட்டிருக்கும் கோடு போட்ட பேப்பரில் கோழி கிறுக்கலாய் எண்களைப் பதியும் கள்ளக்குறிச்சி வண்டி கண்டக்டர், பஞ்சரான வண்டிக்கு டயர் மாத்த உதவி தேடும் திருச்சி வண்டி ட்ரைவர், கட்டைவிரலை சுண்டுவிரலின் ஆரம்பத்திற்கு முட்டுக்கொடுத்து, நான்கு விரலைக் காட்டி டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்யும் ஸ்டாஃப் என எப்போதோ என் வாழ்க்கையில் கடந்து சென்ற நபர்களின் மறுபக்கத்தை, அவர்களின் அன்றாட வாழ்வை, டிப்போ என்ற ஒரு தனித் தீவில் அவர்கள் படும்பாட்டை உள்ளது உள்ளபடி மிக அழகாக படம் பிடித்துக் காட்டுகிறது நெடுஞ்சாலை நாவல்.
நாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.
நாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது? அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
நாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.
நூல் : நெடுஞ்சாலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
விலை : 230 ரூபாய்
போதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
நாவலின் பிரதான கதாப்பாத்திரங்களான அய்யனார், தமிழரசன், ஏழைமுத்து ஆகிய மூவரும் பெரியார் போக்குவரத்துக் கழகத்தில் தற்காலிகப் பணியாளர்கள் (Casual Labour/ சி.எல் என நாவல் முழுக்க அடையாளம் காட்டப்படுகிறார்கள்). இம்மூவரின் மூலமாக தற்காலிக தொழிலாலர்களின் பணியிடப் பிரச்சனைகள், நிரந்தரமாக அவர்கள் படும் கஷ்டங்கள், ஒரு போக்குவரத்து கழகத்தை நிர்வாகிப்பதிலிருக்கும் நடைமுறை சிக்கல்கள் என நிறைய விஷயங்களை கண்முன் விரிவாக வரைகிறார் குணசேகரன். நாவலை முடிப்பதற்குள் விழுப்புரம் பெரியாரில் வேலைப் பார்த்த மாமாவும், விருத்தாச்சலத்தில் தனியாரில் கண்டக்டராய் பணிபுரிந்த பெரியப்பாவும் எண்ணிலடங்காமல் எண்ணத்தில் வந்தார்கள்.
நாவல் வீடு, நாடு என இரண்டு பாகங்களாக கட்டமைக்கப்பட்டுள்ளது. முதல் பாகமான வீடு பகுதிதான் நாவலின் பிராதனப் பகுதி. பணி நிரந்தரம் தாமதமாவதால், திருமணமும் தள்ளிப் போவதை எண்ணி வருந்தும் அய்யனாருக்கு டெப்போவில் டெக்னிகல் வேலை. ஏ.இ தள்ளிவிடும் வேலைகளை நிரந்தரமாகவேண்டுமென்ற ஒரே காரணத்திற்காக மறுபேச்சுபேசாமல் செய்யும்போதும், யாரையோ பழிவாங்க மேற்கொண்ட நடவடிக்கையால் தானும் பாதிக்கப்பட்டு, வேலை இல்லாமல் இருக்கும் நாட்களில், ஏற்கனவே பார்தத கொளுத்து வேலைக்குப் போகும்போதும், சக சி.எல்களான தமிழ் மற்றும் ஏழைக்காக இறக்கப்படும்போதும் வெவ்வேறு முகம் காட்டி, நகமும் சதையுமாக கண் முன்னே உலவுகிறார் அய்யனார். வீட்டில் மனைவிக்கும் தாயிற்குமான பிரச்சனையை சமாளிக்க திணறும் சராசரி ஆணாக ஏழைமுத்து. ஓரளவிற்கு வசதியான குடும்ப பின்புலம் கொண்ட ஆளாக கண்டக்டர் தமிழரசன். டூட்டி போனத் தடத்தில், பள்ளி செல்லும் பெண்ணுடன் காதல் வயப்படுகிறார் தமிழரசன். அதுவரை கனக்கச்சிதமாக கணக்கு வழக்குகளை காட்டுபவர், காதல் மயக்கத்தில் கணக்கில் குழம்புகிறார். டூட்டியிலிருக்கும்போது ஒரு முறை செக்கிங்களிடம் மாட்டி வேலையிழக்கிறார். அதே போல் பால்யப் பருவ காதலியால் ஏழைமுத்துவின் வேலையும் போய்விடுகிறது. இச்சம்பவங்களுக்குப் பின் இவர்களின் வாழ்க்கையில் என்னென்ன மாற்றம் ஏற்படுகின்றது? அவற்றை எப்படி இவர்கள் எதிர்கொள்கிறார்கள் என்பதை அதிகாலை நெடுஞ்சாலைப் பயணம் போல் அழகாய் சொல்லியிருக்கிறார் ஆசிரியர்.
நாவல் தொடங்கும்போது வலிந்து திணிப்பதைப் போல் தோற்றமளிக்கும் தொழில்நுட்பம் சார்ந்த விவரணைகள் சற்று அயர்ச்சியைத் தந்தாலும், போகப் போக பழகிவிடுகிறது. நாவலின் பெரிய பலம் வட்டார மொழிநடைதான். எனுமா எழுதியிருக்காரு என சொல்லத் தோன்றுகிறது. சலிப்பையும், எரிச்சலையும் கூட மெல்லிய நகைச்சுவையோடு வெளிப்படுத்தும் கதாபாத்திரங்கள் சில இடங்களில் வெடிச் சிரிப்பையும் வரவழைக்கிறார்கள். நட்பு, காதல், காமம் என கலவையான உணர்வுகளை சரியான விகிதத்தில் குழைத்து நெடுஞ்சாலை அமைத்திருக்கிறார் கண்மணி குணசேகரன்.
நூல் : நெடுஞ்சாலை
ஆசிரியர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி
விலை : 230 ரூபாய்
போதுமென்றளவிற்கு ஏற்கனவே அழுதிருந்தாலும், ஏனோ நெடுஞ்சாலையால் ஏற்பட்ட நினைவுகள் அழுகையையும் தாண்டி சொல்ல முடியாத, மனதைப் பிசைகிற மாதிரியான வலியை ஏற்படுத்தியது. நான் பிறந்த ஊர், ஓரிரு முறை விடுமுறையை கழித்த இடம் என்றளவிற்குத் தான் விருத்தாசலத்துடன் எனக்கான தொடர்பு இருக்கிறது. சமீபத்தில் தவறிய என் பெரியம்மாவிற்கும் விருத்தாச்சலத்திற்குமான தொடர்புகள் எழுத்திலடங்காதவை. அம்மா வழியில் கிட்டத்தட்ட எங்கள் தலைமுறை முழுக்கப் பிறந்தது விருத்தாச்சலத்தில் தான். பெரியம்மாவிற்கு பொருளாதார வசதிகள் இல்லையென்றாலும், அத்தனை பிரசவங்களுக்கும் உறுதுணையாக இருந்த அவரது உடல் உழைப்பு மறக்கவே முடியாத ஒன்று. பெரியம்மா இன்று இல்லையென்றாலும் அம்மா வீட்டு வரவேற்பறையில் பளிச்சிடும் பீங்கான் பொம்மைகள் பெரியம்மாவை ஞாபகப்படுத்திக்கொண்டே இருக்கும்.
April 25, 2011
RIO
அரிய வகைப் பறவையான Blu, குட்டியாக இருக்கும்போதே ப்ரேசிலிலிருந்து கடத்தி வரப்படுகிறது. மின்னர்சோட்டாவில் லிண்டா என்ற பெண்ணின் தோழனாக, domestic birdஆக வளர்க்கப்படுகிறது. ப்ரேசிலிலிருந்து வரும் ஆர்னிதாலஜிஸ்ட் Tulio, லிண்டாவிடம் Bluவின் இனம் அழியும் நிலையிலிருப்பதாகவும், அதே blue macaw வகையைச் சேர்ந்த jewel என்றழைக்கப்படும் பெண் பறவை ஒன்றை கண்டுபிடித்திருப்பதாகவும், இனப்பெருக்கத்திற்காக Bluவை ப்ரேசிலிற்கு அழைத்து வரவேண்டுமென கோரிக்கை விடுக்கிறார். முதலில் மறுக்கும் லிண்டா, பின்னர் மனது மாறி bluவை அழைத்துக்கொண்டு ப்ரேசில் வந்து சேர்கிறார்.
வீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? Blu லிண்டாவிடம் சென்றடைந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.

அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்பான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.
Rio Trailer
RIO - அருமையான சம்மர் எண்டெர்டெயினர். Must watch movie for all age groups.
வீட்டுப்பறவையாக, பறக்கத் தெரியாமல் வளர்ந்த blu, சுதந்திரமாக காற்றில் பறந்து திரிந்த jewelஐ கூண்டில் சந்திக்கிறது. தப்பிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டிருக்கும் ஜ்வெல்லிற்கும் ப்ளூவிற்கும் செட்டாகவில்லை. இதனிடையே பறவைகளை திருடி விற்கும் கும்பல், இந்த ஜோடியையும் திருடுகிறது. இவர்களிடமிருந்து முதல் முறை தப்பிக்க முயற்சிக்கும்போது பிடிபட்டு, காலில் சங்கிலியால இந்த ஜோடி பிணைக்கப்படுகிறது. Blu & jewel கடத்தல் கும்பலிடமிருந்து தப்பித்தார்களா? ஒன்று சேர்ந்தார்களா? Blu லிண்டாவிடம் சென்றடைந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடை மீதிப் படம்.

அழகான, மனதைக் கொள்ளை கொள்ளும் வண்ணங்களுடனான பறவைகள் கண்களுக்கு விருந்தளிக்கின்றன. அங்கங்கே 3D காட்சிகள் தேவையில்லை எனத் தோன்றினாலும், படத்தில் வரும் சேஸிங் காட்சிகளும், ப்ரேசிலின் ஏரியல் வீயூ காட்சிகளும் 3Dயில் அட்டகாசமாக இருக்கின்றன. Blu, jewel, rafael, pedro, nico, luiz ஆகிய பறவைகளிடையேயான காட்சிகள் நகைச்சுவையாகவும், க்ளைமேக்சில் வரும் ப்ரேசிலில் நடக்கும் கார்னிவல் காட்சிகள் பிரமிப்பையும் அளிக்கிறது. நட்பு, தன்னம்பிக்கை, காதல், பிரிவு, ஆக்ஷன், த்ரில்லர், காமெடி என அனைத்து உணர்வுகளும் கலந்த கலக்கலான எண்டெர்டெயினராக அமைந்துள்ளது. தொடக்கம் முதல் முடிவு வரை கலர் கலரான் காட்சியமைப்பாலும், 3D எஃபெக்ட்ஸாலும் குழந்தைகளையும், விறுவுறுப்பான திரைக்கதையால் பெரியவர்களையும் கட்டிப் போடுகிறது.
Rio Trailer
RIO - அருமையான சம்மர் எண்டெர்டெயினர். Must watch movie for all age groups.
Labels:
விமர்சனம்
April 19, 2011
வீடு...தேடு...இண்டர்வ்யூ படுத்திய பாடு
ஆபிஸில் இரண்டுமணிநேரம் பெர்மிஷன் கேட்டு கிடைக்காததால், பெரிய ப்ரோக்ராம் ஒன்றை இரண்டு மணிநேரம் ஒடும்படி டேட்டா செட் பண்ணிவிட்டு, கொலீக்கிடம் பார்த்துக்கொள்ளும்படி தாஜா பண்ணி, டேமேஜர் பார்க்காத மாதிரி, கேபினிலிருந்து எஸ்ஸாகி போய் முதல் முதல் வீடு பார்த்த அனுபவம் இன்னும் நினைவில். அதிர்ஷ்டவசமாக ஒரு மணிநேரத்திலேயே அற்புதமான வீடு அமைந்தது. கிட்டத்தட்ட இருபது மாதங்கள் கழித்து அடுத்த வீடு தேடும் படலம். இந்த முறை பொறுப்பு என்னிடம் மட்டும். ரொம்ப சிரமப்படவில்லையென்றாலும் இரண்டு மூன்று முறை அலைய வேண்டியிருந்தது. மறுபடியும் பதினைந்து மாதங்கள் கழித்து அடுத்த வீடு பார்க்கவேண்டிய கட்டாயம். இந்தமுறை நாக்கு வெளியே தள்ளிவிட்டது. அந்தளவுக்கு கஷ்டம்.
வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."
சார் முதல்ல வீட்டை காட்டுங்க.
வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)
ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.
"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..
ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.
வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.
"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"
#மீள்பதிவு
வேலைக்கு சேரக்கூட இந்தளவுக்கு இண்டர்வ்யூ செய்ய மாட்டார்கள். கன்சல்டன்ஸி நிறுவனங்களைப் போல ப்ரோக்கர்கள். எம்ளாயரை மீட் பண்ணுவதற்க்கு முன் இவர்களிடம் உங்கள் தேவைகளை சொல்லி ஒரு மினி இண்டர்வ்யூ அட்டெண்ட் செய்ய வேண்டும்.
"சார். என்ன பட்ஜெட்டில் பார்க்கறீங்க? (நாம சொல்றதை விட 3000 அதிகமாதான் வீடு கிடைக்கும் என்பார்கள்) எந்த ஏரியாவுல சார் வேணும்? (ஏரியா சொன்னதும் அங்க இந்த ரேஞ்சுக்கு சான்ஸே இல்ல சார். நீங்க பேசாம இந்த ஏரியாவுல பாருங்களேன் என்பார்கள்) கார் பார்க்கிங்கோடவா? அட்வான்ஸ் பத்து மாசம் சார். சூப்பர் வீடு. அருமையான லொக்கேஷன். மெயின் ரோட்டில் இருந்து 5 நிமிஷ நடை தான்."
சார் முதல்ல வீட்டை காட்டுங்க.
வாராய் நீ வாராய்ங்கற ரேஞ்சுக்கு வண்டில போகவே 20 நிமிஷம் ஆச்சு. ஒரு நேரத்துல ஒரு ஆள் தான் நடக்க முடியும்ங்கற மாதிரி ஒரு தெரு (அப்படி சொல்றதே பாவம்). நுழையறதுக்கு முன்னமே முடிஞ்சு போற ஹால். வெளிச்சம்னா என்னன்னே தெரியாத ரூம்கள். ஸ்ஸ்ஸப்பா.
"25 சொல்றாங்க மேடம். பேசி 24ல வந்து நிக்கலாம்".
"வீடு வாங்கற ஐடியா எல்லாம் இல்ல சார். வாடகை எவ்வளவுன்னு மட்டும் சொல்லுங்க"
"என்ன விளையாடறீங்களா? நான் வாடகையத்தாங்க சொன்னேன். விலைக்குன்னா 87 இலட்சம் ஆகும்."
கிர்ர்ரடித்தது எனக்கு. யோவ் ஒன்றரை வருஷத்துக்கு முன்னால மெயின்ல 7500க்கு குடியிருந்தோம்யா.
நீங்க போன ஜென்மத்துல புண்ணியம் ஏதாவது பண்ணிருப்பீங்க மேடம். (ஹுக்கும்)
ஒரு வழியா வீடு சுமாரா இருந்தா எம்ப்ளாயரிடம் டெலிபோனிக் இண்டர்வ்யூ.
"வீடு பார்த்தோம் சார். எங்களுக்கு ஓகே. வாடகை மட்டும்..."
"அதிருக்கட்டும். முதல்ல நீங்க எங்க வேலை செய்யறீங்க?"
"#$##@@%^& கம்பெனில"
"அப்படி ஒரு கம்பெனி கேள்விப்பட்டதே இல்லையே?"
"???!!!"
"ம்ம் நீங்க எத்தனை பேரு?"
"ரெண்டு பேர் தான் சார். இரண்டு வயசுல ஒரு குழந்தை இருக்கு"
"அப்படியா சரி நேர்ல வாங்க பேசுவோம்"
"வீக்கெண்ட் ஓக்கேவா சார்"
"வீக்கெண்டா. நாளைக்கு காலைல பத்து மணிக்கு வாங்க. வீட்டுக்கு ஏகப்பட்ட டிமாண்ட் இருக்கு."
"சார் ஆபிஸ் இருக்கு சார்"
"அப்படியா. அப்ப உங்க இஷ்டம்"
டொக்..
ஒரு நாலு வீட கட்டிவிட்டுட்டு இவங்க பண்ற அளப்பறை இருக்கே. 3BR வீட்டுக்குண்டானா வாடகையாம். ஆனால் ஒரு ரூமைப் பூட்டி தான் வைத்திருப்பார்களாம். வீட்டுச் சாவி ஒன்றும் அவர்களிடம் இருக்குமாம். எப்ப வேணாலும் வந்து போவார்களாம். இந்த கஷ்டங்களை தாண்டி ஏரியா, வீடு செட்டாகி, டெலிபோனிக் இண்டர்வ்யூவை ஒரளவுக்கு தேத்தினா அடுத்தது நேர்முகத் தேர்வு.
வீட்டு ஓனர் அட்ரஸ மட்டும் தந்துட்டு இந்த டைமுக்கு வந்துடுங்க. ஏன்னா நான் இன்னிக்கு நைட்டே ஓபாமாவோட ஒரு கான்பரன்ஸ்ல கலந்துக்கப் போறேன்னு பில்டப்பு பண்ணுவாங்க. எங்கனோ மூலைல ஒளிஞ்சிட்டிருக்கிற அந்த வீட்ட கண்டுபிடிக்கறதுக்கு கொலம்பஸ் கிட்ட ட்ரெய்னிங் எடுத்துகிட்டா தான் உண்டு. ஒரு வழியா ரோட்டுல போறவன் வர்றவனயெல்லாம் மடக்கி, அட்ரஸ் கேட்டு, கண்டேன் சீதையைங்கற கணக்கா வீட்டு வாசல்ல போய் பெல் அடிப்போம். கதவத் திறந்து நம்மள கேவலமா ஒரு லுக் விடுவாங்க. நாம யாருங்கறதை விளக்கினப்புறம் உள்ள வர சொல்லூவாங்க. மம்மிய பார்த்த ரத்தத்தின் ரத்தம் மாதிரி பம்மி பம்மி அவங்க காட்ற சோஃபால உட்காராம உட்கார்ந்த அப்புறம் ஆரம்பிக்கும் அக்கப்போரு.
"சொல்லுங்க. வீடெல்லாம் ஒகேவா?"
"வீடு பிடிச்சிருக்கு சார். ஆனா வாடகை தான்......"
"நீங்க ரெண்டு பேர்ங்கறதால தான் சார் உங்களுக்கு தர்றேன். இதைவிட அதிக வாடகை குடுத்து எடுத்துக்க ஆள் ரெடியா இருக்காங்க."
"அப்படியா சார். வாடகை மட்டும் கொஞ்சம் குறைச்சுக்கோங்களேன்"
"சரிங்க. நீங்க ரொம்ப வற்புறுத்தி கேட்கறதால ஒரு 500 ரூபிஸ் குறைச்சுகிறேன். ஆனா அட்வான்ஸ் பத்து மாசம் வாடகை. ஓக்கேவா"
"(அடப்பாவி அதுக்கு வாடகைய நீ குறைச்சிருக்கவே வேண்டாமே)இல்ல சார் பழைய வாடகையே ஒக்கே"
"ஆணியெல்லாம் அடிக்கக்கூடாது"
"ஹி ஹி. ஆணியப் புடுங்கிதான் சார் பழக்கம்"
"மறந்துட்டேனே நாந்வெஜ் சமைக்கக்கூடாது"
"நாங்க சுத்த சைவம் சார் (முட்டைய சைவம்ன்னு சொல்லியாச்சு. கூடிய சீக்கிரமே சிக்கனையும் சைவ லிஸ்டில் சேர்க்க போராட்டம் பண்ணனும்)"
"தண்னியெல்லாம் அநாவசியமா செலவு பண்ணக்கூடாது"
"ச்சே ச்சே. தண்ணி செலவே ஆகாது சார். நாங்க குளிக்கறதுகூட குறைச்சுக்குவோம்"
"மாசம் பொறந்து 4 தேதிக்குள்ள வாடகை குடுத்தடனும்."
"சரி சார். உங்க பேங்க் அக்கவுண்ட் நம்பர் சொல்லுங்க. அதுக்கு நெட் ட்ரான்ஸ்பர் பண்ணிடறோம்"
"அதெல்லாம் ரிஸ்க்குங்க. நீங்க வீட்டுக்கே வந்து கொடுத்துடுங்க. அப்புறம் கேஷாவே குடுத்துடுங்க. செக் வேண்டாம். ஆங் சொல்ல மறந்துட்டேனே. வாடகை இல்லாம மெயிண்டனென்ஸ்க்கு தனியா சார்ஜ். அதோட தண்ணிக்குன்னு காமன் மோட்டார் இருக்கு. அதுக்கு தனியா சார்ஜ். நான் சொல்ற எலக்ட்ரீஷியனை தான் கூப்பிடனும். வீட்ல எதுனாச்சும் பிரச்சனைன்னா என்கிட்ட சொல்லாம நீங்களே சரி செய்யக்கூடாது. டாய்லெட்ட ஹார்பிக் மட்டும் தான் போட்டு க்ளீன் பண்ணனும்??!! நீங்க ஊருக்கு எங்கயாவது போற மாதிரி இருந்தா சொல்லிட்டு போகனும். நானும் வீட்ட எப்படி வச்சிருக்கீங்கன்னு பார்க்க அடிக்கடி வருவேன். சொந்தக்காரங்க வந்தா ரெண்டு நாளுக்கு மேல தங்கக் கூடாது. வீடு நாஸ்தியாகிடும் பாருங்க. அப்புறம் ...................................................."
"அய்யோ வீடே வேணாம். ஆள விடுங்க"
#மீள்பதிவு
Labels:
மீள்பதிவு
Subscribe to:
Posts (Atom)