”மொதல்ல நான் கேட்ட டீடெய்ல்ஸக் கொண்டு வந்தியா?” என்றான் கணேஷ்.
“நீங்க சொன்னது சரிதான் பாஸ். நிவேதா ஹெல்த் கேர் ஹாஸ்பிட்டலில், சைக்கியாட்ரிஸ்ட்டை கன்சல்ட் பண்ணிருக்காங்க.” என்றவாரே ஒரு ஃபைலை கணேஷிடம் நீட்டினான் வசந்த். ”ரிசப்ஷன்ல வழக்கம்போல் எந்த டீடெய்லும் கொடுக்கமாட்டேன்னுட்டாங்க. ஒரு வழியா என்னோட ஸ்டைல்ல. எல்லா தகவலையும் கறந்துட்டு வந்துட்டேன்.”
கணேஷ் மௌனமாக அந்த ஃபைலைப் புரட்டிக்கொண்டிருப்பதைப் பார்த்து “எப்படி வாங்கினேன் கேக்கமாட்டீங்களா பாஸ்?” என்றான் வசந்த்.
”இதுக்கூட தெரியாமலா வசந்த் இருப்பேன். ரிசப்ஷனிஸ்ட் பேர் என்ன?”.
“ப்ரியா பாஸ். நீங்க சொல்லாம நான் செஞ்ச இன்னொரு வேலையக் கேட்டீங்கன்னா அசந்துருவீங்க”.
“அப்படி என்னடா வேலை?”
“இந்த ஃபைல்ல இருக்கிறதெல்லாம் நிவேதாவிற்கு டிப்ரெஷெனுக்காக டாக்டர் பரிந்துரைத்த மருந்துகள். இதில் வேடிக்கை என்னன்னா, இந்த மருந்து எதுவுமே வியாதிய குணப்படுத்தாது." ஆச்சர்யமாய் நிமிர்ந்த கணேஷைப் பார்த்து கண்ணடித்துக்கொண்டே “டாக்டர் பேர் ஸ்வாதி” என்றான் வசந்த்.
”ஓஹ். ஜெயராமன் நான் நினைச்சத விட பயங்கரமான வேலை பண்ணிருப்பார் போலயே? சரி நீ தெரிஞ்சுகிட்டு வந்ததையெல்லாம் ஒரேடியா கொட்டிடு பார்ப்போம்” என்றான் கணேஷ்.
“இல்ல பாஸ். முதல்ல நீங்க சொல்லுங்க. அப்புறம் நான் சொல்றேன்.”
“ஆல்ரைட். முதல் நாளிலிருந்தே எனக்கு ஜெயராமனோட நடவடிக்கைகளில் சந்தேகம். அந்தாளு நம்மள தேடி வந்தது மொத தப்பு. நிவேதா நம்மகிட்ட என்ன சொல்லியிருந்தா, இவருக்கென்ன? நேரா போலீஸ் கம்ப்ளையிண்ட் லாட்ஜ் பண்ண வேண்டியது தானே? ரெண்டாவது நிவேதாவின் வீட்டில் நடந்த விசாரணையில் சில முக்கியமான தடயங்கள் சிக்கிச்சு. நிவேதா நம்மள பார்க்க வந்ததை அவர் எப்படி தெரிஞ்சுகிட்டேன்னு சொன்னார்?”
“டெலிஃபோன் பக்கத்துல, ஸ்க்ரிப்ளிங் பேட்ல நம்ம அட்ரெஸும் ஃபோன் நம்பரும் இருந்ததா சொன்னார்”.
“ம்ம்ம். அந்த பேப்பரை ஃபாரென்ஸிக் டிபார்ட்மெண்டிற்கு அனுப்பி செக் பண்ணதுல, அது நிவேதா கையெழுத்து இல்ல. ஜெயராமனோடதுன்னு கன்ஃபர்ம் ஆச்சு. ரெண்டாவது வேலைக்காரி தினம் பதினொரு மணிக்கு ஜெயராமன் நிவேதா வீட்டிற்கு வருவாரென்றும், கம்ப்யூட்டரில் டைம் ஸ்பெண்ட் செய்வார்ன்னும் சொன்னாளே ஞாபகமிருக்கா?”
“ஆமாம் பாஸ். பன்னெண்டு மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டார்ன்னு சொல்லிச்சே”.
“அதான். அந்த சிஸ்டத்த நோண்டினதுல சில சுவாரஸ்யமான திருப்பங்கள் ஏற்பட்டது. மொதல்ல அந்த சிஸ்டத்துல நிவேதா தன் மெயில் அக்கவுண்ட்ல ஆட்டோ லாகின் செட் பண்ணி வச்சிருக்காங்க. நிவேதா அனுப்பினதா ஜெயராமன் நம்மிடம் காட்டிய நான்கு மெயில்களிலும் டைமை செக் பண்ணிப்பாரு. 11.15க்கு நிவேதாவின் அக்கவுண்ட்டில் இருந்து அனுப்பப்பட்டிருக்கு. இந்த சிஸ்டத்திலிருந்துதான். ரெண்டாவது ஹிஸ்டரிய தோண்டுனதுல, ஜெயராமன் யுஎஸ்லிருந்து கிரெடிட் கார்ட் மூலமா ஒரு கருவி ஆர்டர் பண்ணிருக்கார். அதன் மூலமா ஒருவருடைய ஆழ்மன சிந்தனைகளை சிதைக்க முடியுமாம். சைபர் க்ரைமிலிருந்து வந்த தகவல்கள் இவை. என் கணிப்பு படி, இவரே மெயில் அனுப்பிச்சுகிட்டு, நிவேதாவை சூசைட் அட்டெம்ப்ட்டிற்கு ட்ரிக்கர் பண்ணியிருக்கார். மனநல மருத்துவர் ஆலோசனைகளெல்லாம் தன் மேல் சந்தேகம் வராமலிருக்க செய்த செட்டப்.”
“கரெக்ட் பாஸ். நான் கொஞ்சம் துருவினதுல, நிவேதாவிற்கு கவுன்சிலிங் கொடுத்த டாக்டர், ஜெயராமனின் தோழி வசந்தாவோட பொண்ணு. நிவேதாவிற்கு ஏதாவது நேர்ந்தால், சொத்துப் போய் சேரும் ட்ரஸ்ட்டில் நிர்வாகிகளில் ஒருவரின் தங்கை தான் இந்த வசந்தா. பக்காவா ப்ளான் பண்ணிருக்கானுங்க பாஸ். திருட்டு பசங்க.”
“சோ, கேம் எண்ட்ஸ் ஹியர்.”
“இப்ப நம்ம என்ன பண்ணப்போறோம் பாஸ்?”
“அஷோக்கிற்கு விவரங்களை தெரியப்படுத்திவிட்டு, காதாம்பரி கேஸ்கட்ல தலையக் கொடுக்கப் போறோம்.”
“சரி பாஸ். ஒரு அவசர வேலையா நான் கிளம்பறேன்.”
“சரி.”
“எங்கன்னு கேக்க மாட்டீங்களா?”
“மச்ச சாஸ்திரம் புக் வாங்கத்தானே? உன்ன திருத்தவே முடியாதுடா.”
(முற்றும்)
March 7, 2012
March 5, 2012
வருது வருது...விருது விருது..
நித்திலம் சிப்பிக்குள் முத்து தளத்தில் எழுதி வரும் சங்கரி மேடம் ஏதோ பெரிய மனசு பண்ணி நம்மையும் ஒரு ஆளா மதிச்சுஎனக்கு Versatile Blogger விருது தந்திருக்காங்க. ரொம்ப நன்றி மேடம். சந்தோஷத்தை பகிர்ந்துக்கிறதுதானே முறை. அதன்படி இந்த விருதை நான் பகிர்ந்துக்கப்போற மக்கள் இதோ. (ஒரே ஒரு விருதுதாங்கறதால கொஞ்ச பேருக்கு தான் டிஸ்ட்ரிப்யூட் பண்ண முடியும்:))))
எப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)
சயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.
மனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)
நம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.
ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.
இப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.
1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))
2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.
3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.
5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு? இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)
6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)
7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))
எப்படி இவரால மட்டும் இப்படி அசுரத்தனமா படிக்க இல்லல்ல வாசிக்க முடியுதுன்னு எனக்கு ரொம்ப நாளா சந்தேகம். கோபி ஆரம்பத்துல நல்ல புள்ளையா நம்மள மாதிரியே மொக்கை போட்டுக்கிட்டிருந்தாரு. அப்புறம் என்ன ஆச்சோ தெரியல. ஒரே இலக்கியமா போட்டு தாக்கறாரு. இவர் படிக்கறதோடில்லாம அந்த புத்தகத்துக்கெல்லாம் விமர்சனம் வேற எழுதறாரு. ஒருவேளை விமர்சனம் எழுதறதுக்குன்னே படிப்பாரா இருக்கும்:)
சயிண்டிஸ்ட் என்று ப்ளஸ்ர்களால் அழைக்கப்படும் முரளிகண்ணன். சினிமா முதற்கொண்டு இவரின் அநேக பதிவுகளிலும் ஒரு டீப் அனாலிஸிஸ் இருக்கும். சமீபத்தில் இவர் எழுதிய மதுரை ஏரியா பூக்காரர்களைப் பற்றிய பதிவைப் படித்து பாருங்கள்.
மனதில் பட்டதை பொதுவில் தயங்காமல் சொல்லுவதற்கு ஒரு கட்ஸ் வேண்டும். அது கவிதாவிற்கு நிறையவே இருக்கிறது. மல்ட்டிப்பிள் ஸ்ப்லிட் பெர்ஸனாலிட்டியால் பாதிக்கப்பட்டிருக்கும் இவரின் ஆல்டர்களில் அணில்குட்டி ரொம்பவே ஃபேமஸ்:)))) இந்த விருதுக்கு முக்கியமாய் இன்னொரு காரணமும் இருக்கிறது. ஹி ஹி. புள்ளையாண்டானிடம் பல்பு வாங்குவதில் எனக்கு சீனியர்:) இந்த விஷயத்தில் இன்னொரு சீனியரான விஜிக்கும் இந்த விருதில் தம்மாத்துண்டு பிச்சிக் கொடுக்கப்படுகிறது:)
நம்மளமாதிரியே ப்ளாக்ல கலந்து கட்டி பதிவு போடறதால ஹூஸைனம்மாக்கும் இந்த விருதுல கொஞ்சம் போய் சேருது. இவங்களோட சப்பாத்தி டேஸ், டிரங்கு பெட்டி சீரிஸ் எல்லாம் என்னோட ஃபேவரிட்.
ஏற்கனவே சொன்ன மாதிரி ஒரே ஒரு விருதுல இம்புட்டு தான் ஷேர் பண்ணிக்க முடியும். அடுத்த தபா, இன்னும் நிறைய ஆளுங்களுக்கு பகிர்ந்து கொடுக்கலாம்.
இப்போ எனக்கு பிடிச்ச ஏழு விஷயங்களை பட்டியலிடனுமாம்.
1. நான் - ஆமாங்க. எனக்கு என்னை ரொம்ப பிடிக்கும். எனக்கே என்னை பிடிக்கலைன்னா, வேற யாருக்கு பிடிக்கப்போவுது சொல்லுங்க:))
2. ஜூனியர் - கடந்த நான்கரை வருடங்களாய் எனக்கு புதுபுது விஷயங்களை ரொம்ப சிம்பிளா சொல்லி தந்துகிட்டிருக்காரு. என்னோட முன்கோபம், பொறுமையின்மை போன்ற நிறைய விஷயங்களில் பெரும் மாற்றம் ஜூனியரால். ஐ லவ் யூ டா குட்டி.
3. நண்பர்கள் - என் நட்பு வட்டம் மிகப் பெரியதெல்லாம் இல்லை. ஸ்கூல், காலேஜ், (எக்ஸ்)கலீக்ஸ் என சில நபர்களை மட்டுமே கொண்டதுதான். ஆனால் அவர்களால் அடையும் மகிழ்ச்சி எல்லையில்லாதது. நிறைய விஷயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்து, சில விஷயங்களில் கண்டித்து திருத்தி, துவளும்போதெல்லாம் தோள்கொடுத்து உற்சாகப்படுத்துவது என் நண்பர்கள் தான். பத்தாண்டுக்கும் மேலாம் நட்பு, குடும்ப உறவுகளுக்குப் பின்னும் தொடர்வது மகிழ்ச்சியாக இருக்கிறது.
4. இசை - “இன்னிசை மட்டும் இல்லையென்றால் நான் என்றோ என்றோ இறந்திருப்பேன்” என ஸ்வர்ணலதாவின் குரலில் ஒலிக்கும் இந்த பாடல் வரிகள் எனக்கு மிகப் பொருந்தும். பாட்டு கேட்டுக்கொண்டேயிருப்பது எனது பழக்கம். இந்த இசையமைப்பாளர் தான் பிடிக்குமென்றில்லாமல், நன்றாக இசையமைக்கு யாரையும் பிடிக்கும்.
5. சாப்பாடு - ஹி ஹி. சொல்லவே வேண்டாம். இன்ஃபாக்ட் இதான் முதல்ல வந்திருக்கனும். இது ஒன்னும் தரவரிசை இல்லைங்கறதால, இப்ப குறிப்பிடறேன். விதவிதமா, வாய்க்கு ருசியா சாப்பிடனும். மனுஷன் ஆடி ஓடி கஷ்டப்பட்டு சம்பாரிக்கறதெல்லாம் எதுக்கு? இதுக்குதானே. அதுல ஏன் குறை வைப்பானேன்:)
6. தூக்கம் - எந்த தொந்தரவும் இல்லாம, அமைதியான சூழல், நானா முழிச்சிக்கிற வரைக்கும் தூங்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும். ஏற்கனவே அது முடியலைன்னு இங்க புலம்பிருக்கேன். எப்படியாவது ஞாயிற்றுக்கிழமைகளிலாவது என் இஷ்டம் போல தூங்கிடுவேன். கும்பகர்ணின் வம்சாவளி டிஎன்ஏ ஏதாவது எனக்கு இருக்கான்னு செக் பண்ணனும்ன்னு ரங்ஸ் கிண்டல் பண்ணுவார்:)
7. திடீர்ன்னு எதையாவது செய்ய சொன்னா, சமாளிக்கறதுக்காண்டி எப்படியோ மேனேஜ் செய்யும் பழக்கம். அவசர அவசரமா எழுதுன இந்த பதிவு மாதிரி:))
Labels:
பொதுவானவை
February 29, 2012
Scribblings 29-02-2012
வாகனங்களில் போலீஸ், டாக்டர் என்ற ஸ்டிக்கர்கள் ஒட்டுவதில் ஒரு அர்த்தமிருக்கு. குறிப்பாக டாக்டர் என உணர்த்தும் ஸ்டிக்கர்கள், நிறைய இடங்களில் அவசரத்துக்கு உதவியிருப்பதைப் பார்த்திருக்கிறேன். சமீபகாலமாக வக்கீல் என உணர்த்தும் ஸ்டிக்கர்களை கார்களில் நிறையப் பார்க்கிறேன். எதற்கு எனத் தெரியவில்லை. ஒருவேளை ”வண்டில மோதின, மவனே, கோர்ட்டு கேஸுன்னு இழுத்து விட்றுவேன்”னு பயமுறுத்த இருக்குமோ? மோகன்குமார் நீங்களும் அப்படி ஒட்டியிருக்கீங்களா? இதப் பார்த்துட்டு ரங்ஸ் சொன்னார் “பேசாம நானும் வண்டில சாஃப்ட்வேர் எஞ்சினியர்ன்னு ஸ்டிக்கர் ஒட்டட்டுமா?”. நான் சொன்னேன் “ஹுக்கும். ஒவ்வொரு தெருமுக்குலயும் மாம்ஸுங்க வசூல் பண்ணிகிட்டு இருக்காங்க. இந்த ஸ்டிக்கர் பார்த்தா டபுளா கப்பம் கட்ட வேண்டியிருக்கும். பரவால்லையா?”. ஆப்போசிட் சைட் கப்சிப். வழக்கம்போல:)))
*************
சமீபத்தில் இரண்டு சாஃப்ட் ட்ரிங்ஸ் விளம்பரங்களின் இசை பெரிதும் கவர்ந்தது. ஒன்று கோகோ கோலா. கோரஸாக கேட்கும் குழந்தைகளின் குரல் கொள்ளை அழகு. கான்செப்டும் ஓக்கே. பார்த்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருத்தர் அடித்த கமெண்ட் “அப்படியே ஒரு பாட்டில் கோக் பண்ண, எவ்வளவு லிட்டர் தண்ணீர் நாசமாப்போகுதுன்னும் சொல்லிருக்கலாம்” - அதானே. இன்னொரு விளம்பரம் செவன் அப்பின் I feel up. தமிழ் ட்ரான்ஸ்லேஷன் கொடுமையாக இருந்தாலும், பீட்ஸ் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு வரிகள் ”ரேஸில் ரிவர்ஸிற்கு பயனில்லை. சோகத்தை மேகத்தில் துடைக்கிறேன்”. நீங்களும் பாருங்க.
***********
கடந்த பத்து நாட்களாக தொண்டை வலி, வறட்டு இருமல் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள், ப்ளஸ்ஸர்கள் என அனைவரும் சொல்லிய அத்தனை கை வைத்தியத்தையும் செய்து பார்த்து சரியாகவில்லை. வழக்கம்போல ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்தால், அந்த டாக்டர் வலியே பரவாயில்லையென்ற அளவுக்கு மொக்கை போட்டார். சாம்பிளுக்கு
When was ur last LMP?
அப்படின்னா?
LMPன்னா தெரியாதா? (கேவலமான லுக் விட்டுகிட்டே)
தெரியாது.
என்ன படிச்சிருக்கீங்க?
டாக்டருக்கு படிக்கல (செம்ம கடுப்புல சொன்னேன்)
வாட்?
நத்திங். Does that really matter now?
ஓக்கே. LMPன்னா Last Menstrual Period. புரிஞ்சுதா.
நல்லா. என் GK இம்ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி.
(இப்ப டாக்டர் டென்ஷனாயிட்டாங்க.)
ஊசி ஒன்னு போட்டுகறீங்களா?
வேண்டாம். மாத்திரையே போதும்.
ஏன் விஷ ஊசி போட்டுடவேன்னு பயமா? ஹா ஹா ஹா ஹா.
அவ்வ்வ்வ். தேடிப்போய் சிக்கறேன் போலிருக்கு:(
*************
ஜூனியரை ரெகுலர் செக்கப்பிற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஒன்றரை வருடமாக அவன் வெயிட் 14.5 - 16கிலோவிலே இருக்கிறது. ஏறுவதும் இல்லை. இறங்குவதுமில்லை. எனக்கு அதைப்பற்றி பெரிய கவலை இல்லையென்றாலும், பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) வீட்டிலும் பெரியவர்கள் பீடியாஸ்யூர் போன்ற ஊட்டச்சத்து பானங்களை கொடுக்க சொல்லி வற்புறுத்திகிட்டிருக்காங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. இம்முறை டாக்டரிடம் வெயிட் பற்றி கேட்டபோது அவர் சொன்னது சுவாரசியமாய் இருந்தது.
2 வயது வரை தான் எடை அதிகரிக்க வேண்டும்.
2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.
32-64 வயது வரை செல்வம் வளர வேண்டும்.
64 வயதிற்கு மேல் ஞானம் வளர வேண்டும் என்றார். அறிவு வளர வேண்டிய வயதில் எடை கூடினால் அறிவு வளராது என்றார். அவன் வயசுக்கு நார்மலான வெயிட் தான் இருக்கான். பால் குடிக்கலைன்னா கூட கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடற உணவையே கொடுங்க. விளையாட்டு. கூடவே நீச்சல் பயிற்றுவிக்க சொன்னார். நீச்சல் கற்றுக்கொண்டால், உடல் உறுதியாகும். அப்புறம் என்னைப் பார்க்க வர வேண்டியிருக்காது என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.
*******************
தோனி படம் பார்த்தோம். படம் நன்றாக இருக்கிறது 3 இடியட்ஸ்/நண்பன் படங்களின் கான்செப்ட் தான். பிடிக்காததை படிக்காதே/செய்யாதே. பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகள் சீரியல்/ட்ராமா மாதிரி இருந்தது. குறிப்பாக எப்பப்பார்த்தாலும் ஹெல்மெட் மாட்டிகிட்டே சுத்துவது கடுப்பாக இருந்தது. ஒரு சில சீன்களை தவிர்த்து படம் நீ வொர்க். நிறைய சீன்களுக்கு தியேட்டரில் கைதட்டல்களும், விசிலும் தூள் பறந்தன. குறிப்பாக ஆசிரியை ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் “நீங்க மட்டும் ஒரு சப்ஜெக்ட்ட தான் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. பசங்க மட்டும் இத்தனை பாடம் படிக்கனுமா?” எனக் கேட்டபோது எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாயிற்று. நீயா நானாவில் கல்வி சுகமா சுமையா என்ற விவாதம் நடப்பது போல் படத்தில் காமித்தார்கள். நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? என்னமோ போடா மாதவா:)
*************
சமீபத்தில் இரண்டு சாஃப்ட் ட்ரிங்ஸ் விளம்பரங்களின் இசை பெரிதும் கவர்ந்தது. ஒன்று கோகோ கோலா. கோரஸாக கேட்கும் குழந்தைகளின் குரல் கொள்ளை அழகு. கான்செப்டும் ஓக்கே. பார்த்துக்கொண்டிருக்கும்போது உறவினர் ஒருத்தர் அடித்த கமெண்ட் “அப்படியே ஒரு பாட்டில் கோக் பண்ண, எவ்வளவு லிட்டர் தண்ணீர் நாசமாப்போகுதுன்னும் சொல்லிருக்கலாம்” - அதானே. இன்னொரு விளம்பரம் செவன் அப்பின் I feel up. தமிழ் ட்ரான்ஸ்லேஷன் கொடுமையாக இருந்தாலும், பீட்ஸ் நன்றாக இருக்கிறது. எனக்குப் பிடித்த இரண்டு வரிகள் ”ரேஸில் ரிவர்ஸிற்கு பயனில்லை. சோகத்தை மேகத்தில் துடைக்கிறேன்”. நீங்களும் பாருங்க.
***********
கடந்த பத்து நாட்களாக தொண்டை வலி, வறட்டு இருமல் உயிரை எடுத்துக்கொண்டிருக்கிறது. நண்பர்கள், ப்ளஸ்ஸர்கள் என அனைவரும் சொல்லிய அத்தனை கை வைத்தியத்தையும் செய்து பார்த்து சரியாகவில்லை. வழக்கம்போல ஹாஸ்பிட்டலில் தஞ்சமடைந்தால், அந்த டாக்டர் வலியே பரவாயில்லையென்ற அளவுக்கு மொக்கை போட்டார். சாம்பிளுக்கு
When was ur last LMP?
அப்படின்னா?
LMPன்னா தெரியாதா? (கேவலமான லுக் விட்டுகிட்டே)
தெரியாது.
என்ன படிச்சிருக்கீங்க?
டாக்டருக்கு படிக்கல (செம்ம கடுப்புல சொன்னேன்)
வாட்?
நத்திங். Does that really matter now?
ஓக்கே. LMPன்னா Last Menstrual Period. புரிஞ்சுதா.
நல்லா. என் GK இம்ப்ரூவ் பண்ணதுக்கு நன்றி.
(இப்ப டாக்டர் டென்ஷனாயிட்டாங்க.)
ஊசி ஒன்னு போட்டுகறீங்களா?
வேண்டாம். மாத்திரையே போதும்.
ஏன் விஷ ஊசி போட்டுடவேன்னு பயமா? ஹா ஹா ஹா ஹா.
அவ்வ்வ்வ். தேடிப்போய் சிக்கறேன் போலிருக்கு:(
*************
ஜூனியரை ரெகுலர் செக்கப்பிற்காக அழைத்துக்கொண்டு போயிருந்தேன். ஒன்றரை வருடமாக அவன் வெயிட் 14.5 - 16கிலோவிலே இருக்கிறது. ஏறுவதும் இல்லை. இறங்குவதுமில்லை. எனக்கு அதைப்பற்றி பெரிய கவலை இல்லையென்றாலும், பார்ப்பவர்கள் எல்லாம் புள்ள ஏன் இவ்ளோ ஒல்லியா இருக்கான்ங்கற கேள்வியக் கேட்டுகிட்டே இருக்காங்க. அதுவும் என் பக்கத்துல நிக்கும்போது கேக்கவே வேணாம்:)) வீட்டிலும் பெரியவர்கள் பீடியாஸ்யூர் போன்ற ஊட்டச்சத்து பானங்களை கொடுக்க சொல்லி வற்புறுத்திகிட்டிருக்காங்க. எனக்கு அதில் உடன்பாடில்லை. இம்முறை டாக்டரிடம் வெயிட் பற்றி கேட்டபோது அவர் சொன்னது சுவாரசியமாய் இருந்தது.
2 வயது வரை தான் எடை அதிகரிக்க வேண்டும்.
2-32 வயது வரை அறிவு வளர வேண்டும்.
32-64 வயது வரை செல்வம் வளர வேண்டும்.
64 வயதிற்கு மேல் ஞானம் வளர வேண்டும் என்றார். அறிவு வளர வேண்டிய வயதில் எடை கூடினால் அறிவு வளராது என்றார். அவன் வயசுக்கு நார்மலான வெயிட் தான் இருக்கான். பால் குடிக்கலைன்னா கூட கவலைப்படாதீங்க. நீங்க சாப்பிடற உணவையே கொடுங்க. விளையாட்டு. கூடவே நீச்சல் பயிற்றுவிக்க சொன்னார். நீச்சல் கற்றுக்கொண்டால், உடல் உறுதியாகும். அப்புறம் என்னைப் பார்க்க வர வேண்டியிருக்காது என்று சிரித்துக்கொண்டே விடைகொடுத்தார்.
*******************
தோனி படம் பார்த்தோம். படம் நன்றாக இருக்கிறது 3 இடியட்ஸ்/நண்பன் படங்களின் கான்செப்ட் தான். பிடிக்காததை படிக்காதே/செய்யாதே. பிரகாஷ்ராஜ் நன்றாக நடித்திருந்தாலும் சில காட்சிகள் சீரியல்/ட்ராமா மாதிரி இருந்தது. குறிப்பாக எப்பப்பார்த்தாலும் ஹெல்மெட் மாட்டிகிட்டே சுத்துவது கடுப்பாக இருந்தது. ஒரு சில சீன்களை தவிர்த்து படம் நீ வொர்க். நிறைய சீன்களுக்கு தியேட்டரில் கைதட்டல்களும், விசிலும் தூள் பறந்தன. குறிப்பாக ஆசிரியை ஒருவரிடம் பிரகாஷ்ராஜ் “நீங்க மட்டும் ஒரு சப்ஜெக்ட்ட தான் தெரிஞ்சு வச்சிருப்பீங்க. பசங்க மட்டும் இத்தனை பாடம் படிக்கனுமா?” எனக் கேட்டபோது எழுந்த கைதட்டல் அடங்க ரொம்ப நேரமாயிற்று. நீயா நானாவில் கல்வி சுகமா சுமையா என்ற விவாதம் நடப்பது போல் படத்தில் காமித்தார்கள். நெஜமாவே நீயா நானால இப்படியெல்லாம் உருப்படியான விவாதமெல்லாம் நடத்தறாங்களா என்ன? என்னமோ போடா மாதவா:)
February 13, 2012
ஜூனியர் அப்டேட்ஸ் 13-02-2012
ஜூனியருக்கு சமீபத்தில் பனீர் பக்கோடா செய்து கொடுத்தேன். சாப்பிட்டுவிட்டு, “அம்மா நீ சூப்பரா செஞ்சிருக்கியே. யார் கத்துகொடுத்தா?”
ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.
#ஙே!!!
***********
திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”
#தேவைதான் எனக்கு
**************
திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:
”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”
அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்
“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.
”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.
”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************
ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************
எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது
“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”
“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”
“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”
#ஙே!!!
********************
”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”
#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))
ஃப்ளாஷ்பேக் : சிங்கம், புலி, மான் என எதையாவது வரைந்துக்கொண்டு வந்து காட்டுவான். நான் ”சூப்பரா வரைஞ்சு இருக்கியே. யார் சொல்லிக்கொடுத்தா?” எனப் பாராட்டுவேன்.
#ஙே!!!
***********
திங்கட்கிழமையிலிருந்து ஜூனியர் இன்னும் எத்தனை நாட்களுக்கு ஸ்கூலுக்கு போகவேண்டுமென ஒரு கவுண்ட் வைத்திருப்பார். தினமும் காலையில் அந்த கவுண்ட் குறைகிறதென்பதை உறுதி செய்துக்கொள்வார். வெள்ளியன்று கொஞ்சம் ஆஃப் மூடில், ஸ்கூலுக்கு வேண்டாம்ன்னு லைட்டா சிணுங்கினான். அவன் மூடை லிஃப்ட் செய்யும் விதமாக ”உனக்கு ஆஃப் டே தான் ஸ்கூல். அம்மாக்கு இன்னும் ஒன் டே ஆஃபிஸ் இருக்குடா” என்றேன் சோகமாக (இருகோடுகள் தத்துவத்தின் படி, அவன் சோகம் குறையுமென்ற நம்பிக்கையில்). அதற்கு சார்வாள் “அதான் டூ டேஸ் லீவு வரப்போகுதுல்ல. ஏன் அழற. அழாம ஆஃபிஸ் போகனும் சரியா?”
#தேவைதான் எனக்கு
**************
திருத்தணி முருகர் கோவிலில் அபிஷேக தரிசனம் செய்துகொண்டிருந்தோம். ஜூனியரின் கேள்விகள்:
”அந்த அங்கிள் பாலெல்லாம் கீழ கொட்றாரே. அவங்க அம்மா திட்டமாட்டாங்களா?”
அபிஷேகம் நடந்துகொண்டிருந்தபோது என்ன செய்யறாங்க என்று கேட்டவனிடம் என் அம்மா சாமியக் குளிப்பாட்டறாங்கன்னு சொன்னாங்க. அதற்கு அவன் என்னிடம்
“உம்மாச்சி ப்ரவுன் சோப்பெல்லாம் போட்டு குளிக்காதா? (சிலையைப் பார்த்து) சோப் போட்டு குளிச்சாதான் டர்ட்டி எல்லாம் போகும். அப்பதான் வாசனை அடிக்கும். இல்லைன்னா ஸ்மெல்லடிக்கும்” என்றான். இடம் மறந்து எல்லோரும் சிரித்துவிட்டோம்.
”ஏன்ம்மா சும்மா சும்மா கதவ சாத்தறாங்க?” என்றான் திரை போடும்போதெல்லாம். கேட்டுவிட்டு அவனே பதிலும் சொன்னான். “உம்மாச்சிக்கு ட்ரெஸ் சேஞ்ச் பண்றாங்கல்ல அதான். கதவு சாத்தலைன்னா எல்லாம் ஷேம் ஷேம் சொல்லுவாங்க இல்ல. அதான் க்ளோஸ் பண்ணிட்டாங்க”.
”சும்மா சும்மா உம்மாச்சி குளிச்சிகிட்டே இருக்கானே. தண்ணிலயே இருந்தா சளி பிடிக்கும் தானே?”
*******************
ஜூனியருக்கு இருந்த வீசிங் பிரச்சனை 90% சதவிகிதம் குணமடைந்தாலும், குளிர்காலமென்பதால் சில பொருட்களின் மீதான் தடை தொடர்கிறது. அந்த லிஸ்டில் ஆரெஞ்சும் உண்டு. ஒரு முறை ஆரஞ்சு வேண்டுமென்று கேட்டபோது பழம் அழுகிவிட்டதாக அவனிடம் சொல்ல வேண்டியிருந்தது. அடுத்த முறை உறவினர் ஆரஞ்சு வாங்கிவந்திருந்தார். இவன் கேட்டபோது, நாளைக்கு ஈவ்னிங் தர்றேன் என சொல்லியிருந்தேன். மறுநாள் குளித்துவிட்டு சாமியிடத்தில் ஸ்லோகம் சொல்லிமுடித்தவுடன் (அம்மா பழக்கிவிட்டது), “உம்மாச்சி சஞ்சு நல்லாருக்கனும். நல்லா படிக்கனும். ஹெல்த்தியா இருக்கனும். எல்லாரும் ஹாப்பியா இருக்கனும். ஆரஞ்சு வேஸ்ட்டா போகாம இருக்கனும்” என்றான். காஃபி புரையேற சிரித்துக்கொண்டிருந்தேன்.
********************
எனக்கு உடம்பு சரியில்லையென்பதால், ஒருநாள் ரங்ஸ் வேன் ஏத்திவிடப் போயிருந்தார். மதியம் நான் பிக்கப் செய்யப் போனபோது
“அம்மா, அப்பா என்னை இங்கதான் நிக்க சொன்னான்”
“அவன் இவன் சொல்லக்கூடாது. வாங்க போங்க தான் சொல்லனும். சரியா?”
“ம்ம்ம்ம். அப்பா என்னை இங்கதான் நிங்க சொன்னாங்க”
#ஙே!!!
********************
”அம்மா நீங்க க்ரே கலர் கார சூப்பரா ஓட்றீங்களே. பின்னாடி போகும்போது நேராதான் போகனும் சரியா? இப்பி இப்பி ஆட்டக்கூடாது சரியா? அங்க கிட்டபோய் திரும்பி, திரும்பி பின்னால வந்து, திரும்பி நேரா போகனும். அப்பதான் இடிக்காம இருக்கும். சரியா?”
#பார்க் பண்ணும்போது கேட்டில் இடித்ததிலிருந்து, தினமும் வண்டியெடுக்கும்போதெல்லாம் இந்த அட்வைஸ்:))
February 8, 2012
மெரினா
”வணக்கம் வாழ வைக்கும் சென்னை”
சென்னையின் அடையாளங்களில் மறக்கமுடியாத, நிரந்தர இடம் பெற்றது மெரீனா. எல்லா வயதினர்க்கும் ஒரு உற்சாகமான மனநிலையை தரும் கடற்கரை. காதல், காமம், குற்றங்கள், நட்பின் கொண்டாட்டங்கள் இவற்றைத் தாண்டி கடற்கரையே வாழ்க்கைக் களமாக கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த மெரீனா. முக்கியமாக படிப்பைத் தொலைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக அலையும் எண்ணற்ற சிறுவர்களில் சிலரின் வாழ்க்கை அத்தியாயங்களை சொல்லிப் போகிறது மெரீனா. ஊரிலிருந்து பிழைப்பு தேடி மெரீனா கடற்கரைக்கு வரும் ஒரு சிறுவன், அங்கே பிழைத்துக்கொண்டிருப்பவர்களோடு எப்படி சேர்கிறான்? என்ன செய்கிறான்? என்னவாகிறான்/என்னவாகப் போகிறான்? இந்தக் கேள்விகளுக்கான விடையோடு, மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்கள் சிலரையும் தொட்டுச்செல்கிறது படம்.
தமிழ் சினிமாவிற்கே உரித்தான அதிகப்பிரசங்கி குழந்தைகளைக் காட்டி ”பசங்க” படத்தை ஆரம்பித்திருந்தாலும், ஓரிரு காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா குழந்தைகளைப் பற்றிய படமாக இல்லாமல், குழந்தைகளைப் பற்றிய தமிழ் சினிமாவாக தந்ததன் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு நிஜமாகவே எனக்கு விடை தெரியவில்லை. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படமென்றவுடன், வறுமை, தடம் மாறுதல், போதைப் பழக்கங்கள், வயசிற்கு மீறிய நடவடிக்கைகள் என்று இறங்காமல், சிறுவர்களின் குறும்புகள், வியாபர சண்டைகள், விளையாட்டுகள், சின்ன சின்ன ஆசைகள், கல்விக்கான ஏக்கம் என படம் முழுக்க சிறுவர்களைப் பாசிட்டிவாக காட்டியதற்காக ஒரு பெரிய சபாஷ். கதை, பாட்டு, ஃபைட்டு, காமெடி என்றில்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில் சில தினங்களை காட்ட முயற்சித்ததற்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சில இடங்களில், கமர்ஷியல் சினிமாவாக மாற்ற முயற்சிக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. சிறுவனைத் தேடியலையும் போலீஸ்காரர்களும், அவர்களின் மேலதிகாரியுடனான சம்பாஷணைகளும் அமெச்சூர்தனமான எபிசோட்கள். கொஞ்சம் கூட க்ரவுண்ட் வொர்க் செய்யாமல் அமைக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. சிறுவர்களுக்கிடையே நடக்கும் போட்டிகளும், அவற்றையொட்டிய காட்சிகளும் முதலில் நன்றாக இருந்தாலும், ரீப்பிட்டடாக வரும் போட்டிகள் அயற்சியைத் தருகின்றன. குறிப்பாக பிற்பாதியில் வரும் குதிரைப் பந்தயம். எப்படா முடிப்பாங்க என்றிருந்தது. இந்த மாதிரி எதார்த்த??!! படங்களில் கட்டாயமாக ஒரு மரணம் இருக்க வேண்டுமென்பது ரூல் மாதிரியாகிவிட்டது. அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அவ்வப்பொழுது தொய்ந்து சரியும் படத்தை நிமிர்த்துவது சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் எபிசோட்தான். ”லைட்டா பசிக்குது” என ஆரம்பிக்கும் ஓவியாவும், ”எல்லாம் இப்ப இப்படிதாண்டி சொல்லுவீங்க” என மைண்ட் வாய்சில் ஓட்டும் சிவாவும் அற்புதமாய் பண்ணியிருக்கிறார்கள். சிவாவின் நண்பராக வருபவர் அடிக்கும் காதல் பஞ்சுகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. டோலக்கடித்துக்கொண்டே பாடும் ஆள், அவர் மகள், பிச்சையெடுக்கும் வயதானவர், தபால்காரர் என அனைவரும் நிறைவாக செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் சில நிமிடங்களே வந்தாலும், நடிப்பில் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக வந்திருக்க வேண்டிய படம். இப்பவும் மோசமில்லை. ஆனால் என்னமோ குறை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.
பெசண்ட்நகர் பீச்சிற்கு தினமும் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும். மெரினாவையும் அப்படிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொட்டை வெயிலில், இரவில், மழையில், இளங்காலையில், மெல்லிய மாலைவெளிச்சத்தில், கூட்ட நெரிசலில், வெறிச்சோடிகிடக்கும்போதெல்லாம் மெரினா கொள்ளை அழகாகத் தெரிகிறது. “வணக்கம் வாழ வைக்கும் சென்னை”, “காதல் ஒரு தேவதையின்” பாடல்கள் ரெண்டும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிண்ணனி இசையும் பாதகமில்லை.
கடந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போன கடற்கரை(களை)ப் பற்றி ஒரு படமென்றதும் ரொம்பவும் எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமென்றாலும், வித்யாசமான முயற்சிக்காக ஒரு தடவையேனும் பார்க்கலாம்.
சென்னையின் அடையாளங்களில் மறக்கமுடியாத, நிரந்தர இடம் பெற்றது மெரீனா. எல்லா வயதினர்க்கும் ஒரு உற்சாகமான மனநிலையை தரும் கடற்கரை. காதல், காமம், குற்றங்கள், நட்பின் கொண்டாட்டங்கள் இவற்றைத் தாண்டி கடற்கரையே வாழ்க்கைக் களமாக கொண்ட மனிதர்களின் கதை தான் இந்த மெரீனா. முக்கியமாக படிப்பைத் தொலைத்து, எதிர்காலத்தைப் பற்றி கவலையில்லாமல், வயிற்றுப் பிழைப்புக்காக அலையும் எண்ணற்ற சிறுவர்களில் சிலரின் வாழ்க்கை அத்தியாயங்களை சொல்லிப் போகிறது மெரீனா. ஊரிலிருந்து பிழைப்பு தேடி மெரீனா கடற்கரைக்கு வரும் ஒரு சிறுவன், அங்கே பிழைத்துக்கொண்டிருப்பவர்களோடு எப்படி சேர்கிறான்? என்ன செய்கிறான்? என்னவாகிறான்/என்னவாகப் போகிறான்? இந்தக் கேள்விகளுக்கான விடையோடு, மெரீனா கடற்கரைக்கு வரும் காதலர்கள் சிலரையும் தொட்டுச்செல்கிறது படம்.
தமிழ் சினிமாவிற்கே உரித்தான அதிகப்பிரசங்கி குழந்தைகளைக் காட்டி ”பசங்க” படத்தை ஆரம்பித்திருந்தாலும், ஓரிரு காட்சிகளிலேயே இது வழக்கமான தமிழ் சினிமா குழந்தைகளைப் பற்றிய படமாக இல்லாமல், குழந்தைகளைப் பற்றிய தமிழ் சினிமாவாக தந்ததன் மூலம் நம்பிக்கையை ஏற்படுத்தியிருந்தார் பாண்டிராஜ். இந்தப் படத்தில் அந்த நம்பிக்கையை தக்க வைத்துக்கொண்டாரா என்ற கேள்விக்கு நிஜமாகவே எனக்கு விடை தெரியவில்லை. குழந்தை தொழிலாளர்களைப் பற்றிய படமென்றவுடன், வறுமை, தடம் மாறுதல், போதைப் பழக்கங்கள், வயசிற்கு மீறிய நடவடிக்கைகள் என்று இறங்காமல், சிறுவர்களின் குறும்புகள், வியாபர சண்டைகள், விளையாட்டுகள், சின்ன சின்ன ஆசைகள், கல்விக்கான ஏக்கம் என படம் முழுக்க சிறுவர்களைப் பாசிட்டிவாக காட்டியதற்காக ஒரு பெரிய சபாஷ். கதை, பாட்டு, ஃபைட்டு, காமெடி என்றில்லாமல், மனிதர்களின் வாழ்க்கையில் சில தினங்களை காட்ட முயற்சித்ததற்கு நிச்சயமாக பாராட்டு தெரிவிக்கும் அதே நேரத்தில், சில இடங்களில், கமர்ஷியல் சினிமாவாக மாற்ற முயற்சிக்கிறாரோ எனவும் தோன்றுகிறது. சிறுவனைத் தேடியலையும் போலீஸ்காரர்களும், அவர்களின் மேலதிகாரியுடனான சம்பாஷணைகளும் அமெச்சூர்தனமான எபிசோட்கள். கொஞ்சம் கூட க்ரவுண்ட் வொர்க் செய்யாமல் அமைக்கப்பட்ட காட்சிகள் எரிச்சலைத்தான் ஏற்படுத்துகின்றன. சிறுவர்களுக்கிடையே நடக்கும் போட்டிகளும், அவற்றையொட்டிய காட்சிகளும் முதலில் நன்றாக இருந்தாலும், ரீப்பிட்டடாக வரும் போட்டிகள் அயற்சியைத் தருகின்றன. குறிப்பாக பிற்பாதியில் வரும் குதிரைப் பந்தயம். எப்படா முடிப்பாங்க என்றிருந்தது. இந்த மாதிரி எதார்த்த??!! படங்களில் கட்டாயமாக ஒரு மரணம் இருக்க வேண்டுமென்பது ரூல் மாதிரியாகிவிட்டது. அந்த மரணத்தைத் தவிர்த்திருக்கலாம்.
அவ்வப்பொழுது தொய்ந்து சரியும் படத்தை நிமிர்த்துவது சிவகார்த்திகேயன் - ஓவியா காதல் எபிசோட்தான். ”லைட்டா பசிக்குது” என ஆரம்பிக்கும் ஓவியாவும், ”எல்லாம் இப்ப இப்படிதாண்டி சொல்லுவீங்க” என மைண்ட் வாய்சில் ஓட்டும் சிவாவும் அற்புதமாய் பண்ணியிருக்கிறார்கள். சிவாவின் நண்பராக வருபவர் அடிக்கும் காதல் பஞ்சுகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. டோலக்கடித்துக்கொண்டே பாடும் ஆள், அவர் மகள், பிச்சையெடுக்கும் வயதானவர், தபால்காரர் என அனைவரும் நிறைவாக செய்துள்ளனர். ஜெயப்பிரகாஷ் சில நிமிடங்களே வந்தாலும், நடிப்பில் அசத்துகிறார். இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டிருந்தால் அற்புதமாக வந்திருக்க வேண்டிய படம். இப்பவும் மோசமில்லை. ஆனால் என்னமோ குறை என்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது.
பெசண்ட்நகர் பீச்சிற்கு தினமும் சென்று வந்தாலும், ஒவ்வொரு முறையும் புதிதாய் தெரியும். மெரினாவையும் அப்படிக் காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர். மொட்டை வெயிலில், இரவில், மழையில், இளங்காலையில், மெல்லிய மாலைவெளிச்சத்தில், கூட்ட நெரிசலில், வெறிச்சோடிகிடக்கும்போதெல்லாம் மெரினா கொள்ளை அழகாகத் தெரிகிறது. “வணக்கம் வாழ வைக்கும் சென்னை”, “காதல் ஒரு தேவதையின்” பாடல்கள் ரெண்டும் எனக்கு ரொம்ப பிடித்திருந்தது. பிண்ணனி இசையும் பாதகமில்லை.
கடந்த ஐந்து வருடங்களில் என் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிப் போன கடற்கரை(களை)ப் பற்றி ஒரு படமென்றதும் ரொம்பவும் எதிர்பார்த்தேன். கொஞ்சம் ஏமாற்றமென்றாலும், வித்யாசமான முயற்சிக்காக ஒரு தடவையேனும் பார்க்கலாம்.
Labels:
விமர்சனம்
February 6, 2012
Scribblings 06-02-2012
இணைய நண்பர்கள் சிலர் சேர்ந்து கல்வி சம்பந்தமான உதவிகளை செய்யத் திட்டமிட்டு, என்ன செய்யலாம் என்று குழுமம் ஆரம்பித்து உதவி செய்ய ஆரம்பித்தோம். அதன் ஒரு அங்கமாக புற்றுநோய் விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த நேசம் என்றொரு அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. அதற்காக தொடங்கப்பட்ட தளம் இங்கே
போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************
இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************
சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************
அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************
ட்விட்டர் கார்னர்
கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில
ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.
நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.
கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.
போட்டிக்காக அல்லாமல் புற்றுநோய் குறித்த ஒரு கட்டுரையும், அனுபவப் பகிர்வு ஒன்றும் எழுத வேண்டுமென்ற எண்ணம் இருந்துகொண்டே இருக்கிறது. நேரமின்மையோடு என் சோம்பேறித்தனமும் சேர்ந்து அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளாமலேயே இருக்கின்றேன். கூடிய விரைவில் எழுதி வலையேற்ற வேண்டும்.
********************
இரு வாரங்களுக்கு முன்பு வண்டலூர் சென்றிருந்தோம். பேட்டரி காரில் சுற்றிப் பார்க்க போனபோது கூட வந்த ஒரு குடும்பத்தின் செய்கைகள் எரிச்சலைடைய செய்வதாக இருந்தது. ப்ளாஸ்டிக் பாட்டில்களை வண்டியிலிருந்து தூக்கி எறிவதும், மிருகங்களின் கூண்டருகே செல்லும்போது கத்தி கூச்சல் போடுவதும் (கவனத்தை ஈர்க்கறாங்களாமாம்) என இம்சை பண்ணிக்கொண்டிருந்தார்கள். உச்சபட்சமாக சில இடங்களில் (மான், வெள்ளைபுலி, சிறுத்தை) மிருகங்களை நோக்கி சிப்ஸ், பிஸ்கெட் போன்றவற்றை தூக்கியெறிந்தனர். இந்த மாதிரி உணவுகளை மிருகங்களுக்கு கொடுக்காதீங்க என சொன்னபோது வழக்கமான “உன் வேலையப் பார்த்துகிட்டு போ”ங்கற பதில் தான் கிடைச்சது. எங்களுடன் வந்த இன்னொருவர், இப்ப நீங்க அமைதியா வரலன்னா, நான் போய் இன்சார்ஜ்கிட்ட கம்ப்ளெய்ண்ட் பண்ணிடுவேன் என சொன்னதும் தான் அமைதியானார்கள். இதை முதல்லயே செஞ்சிருக்கலாமோன்னு பேசிகிட்டு வந்தோம். இன்னொரு குடும்பம் செம்ம ஜாலியாக கமெண்ட் பாஸ் பண்ணிக்கொண்டு வந்தார்கள். குறிப்பாக, யானைகள் பகுதியை கடந்து ஓரிரு நிமிடங்கள் வண்டியை நிறுத்தினர். திரும்ப அனைவரும் வண்டியில் ஏறும்போது குடும்பத் தலைவர் குடும்பத்தினரிடம், “சின்ன யானை வருது பாருங்க” என்றார். எல்லோரும் ஆர்வமாய் எங்கே எனப் பார்க்க, அவரோ “குட்டியானை வண்டில ஏறி உட்கார்ந்திருச்சு” என்றார். அவர் மனைவியைத்தான் குறிப்பிட்டார் என பின்னர் தான் புரிந்தது. எல்லாரும் சிரிப்பை அடக்கிக்கொண்டாலும், அவருக்கு கிடைக்கவேண்டியது கிடைத்தது:)
***************
சென்னையிலிருந்து, திருவள்ளூர் வழியாக திருத்தணி செல்லும்போது கனகம்மாசத்திரம் என்ற ஒரு ஊர் வரும். அந்த ஊரின் மெயின் ரோட், ஒருபுறம் ஆந்திரா மாநில எல்லைக்குட்பட்டதாகவும், மறுபுறம் தமிழ்நாடு எல்லைக்குட்பட்டதாகவுமிருக்கிறது. ஆந்திர எல்லைக்குட்பட்டு வரும் பக்கத்தில், ப்ரைவேட் ஒயின்ஷாப் கடைகள் வரிசைகட்டி நிற்கின்றன. விலையும் மலிவாம். உதாரணத்திற்கு டாஸ்மாக்கில் குவார்ட்டர் 65ரூபாய் என்றால், இங்குள்ள கடைகளில் 25ரூபாய்க்கி கிடைக்கிறதாம். விலைமலிவாக இருப்பதால், இந்த ஊரின் டாஸ்மாக்கில் சேல்ஸ் இல்லையென்கிறார்கள். இம்மாதிரியாய் தமிழ்நாடு - ஆந்திரா பார்டர்கள் அருகருகே இருக்கும் மற்றொரு இடம் ஆர்கேபட்டு - பள்ளிபட்டு இடையே இருக்கிறதாம். இப்ப எதுக்கு இந்த தகவல் என்கிறீர்களா? சும்மா குடிமகன்களின் ஜெனரல் நாலேட்ஜை வளர்ப்பதற்காக. சீப்பான சரக்கிற்காக பாண்டி வரைக்கும் போகவேண்டாம் பாருங்கள்:):)
***************
அப்பா ரிட்டையராகி நான்கு மாதங்களாகிறது. நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பா வேலை செய்த ஊரிற்கு ஒரு பெர்சனல் வேலையாக செல்லவேண்டியிருந்தது. அப்பாவிடம் வேலை செய்த ஒருவரை அழைத்து சில விவரங்கள் கேட்டார் அப்பா. அங்கு சென்றபோது, அந்தநபர் அத்தனை முன்னேற்பாடுகளையும் செய்ததோடில்லாமல், வேலை முடியும்வரை கூடவே இருந்தார். உங்களுக்குத்தான் சிரமம் என்றதும், அப்பாவிற்காக இதைக்கூட செய்யலைன்னா எப்படி என சொல்லியதோடில்லாமல், அப்பாவிடம் வேலை பார்த்த அனுபவங்களை பெருமையாக கூறினார். அப்பாவை போல ஒரு அதிகாரியை பார்த்ததில்லை என சொன்னபோது எங்களுக்கு பெருமையாக இருந்தது. நான்கு வருடங்களுக்கும் முன்னர் அதிகாரியாய் இருந்தவருக்கு, அதுவும் இப்போது பணிஓய்வு பெற்றவருக்கு உதவ வேண்டுமென்ற அவசியம் அவருக்கு இல்லை. அப்பாவை சம்பாதிக்க தெரியாதவர் என உறவுகளும், சுற்றத்தாரும் சொல்லக்கேட்டிருக்கேன். இன்று அவர்களையெல்லாம் அழைத்து எங்க அப்பா சம்பாதிச்சிருக்கறத பாருங்க என காட்ட வேண்டும்போலிருந்தது. I'm proud of you dad. Love you.
************
ட்விட்டர் கார்னர்
கேப்டனின் அந்நியன் அவதாரம் நிகழ்ந்த மறுநாள், என் ட்விட்ஸ் சில
ஸ்டாலின் டு விஜயகாந்த் : மாமா நோட்ஸ் எடுத்துக்கோ. அப்படியே கையில சரக்கு எடுத்துக்கோ. இப்ப சரியா வாசி. பப்பாம் பப்பாம் பப்பாம் பபபாம்.
நல்லவேளை கேப்டனுக்கு சுவத்தோரமா சீட் குடுக்கல. இல்லாட்டி லெஃப்ட் லெக்க சுவத்துல கொடுத்து சுழட்டி சுழட்டி அடிச்சிருப்பாரு.
கேப்டன் ஸ்டேடஸ் மெசேஜ் : ஒவ்வொரு பொண்ணுக்கும் ஒவ்வொரு ஃபீலிங்ஸ். மச்சி ஒரு குவாட்டர் சொல்லேன்.
Labels:
துணுக்ஸ்
February 2, 2012
நினைவெல்லாம் நிவேதா - 6
”செம்ம ட்ராஃபிக் பாஸ். ரெண்டு மணிநேரமா க்ளட்ச்ச மாத்தி மாத்தி கால் வலிக்குது” என்றபடியே உள்ளே நுழைந்தான் வசந்த். ஒரு கேஸிற்காக சட்ட புத்தகத்தை புரட்டிக்கொண்டிருந்த கணேஷ், வசந்திடம் சிகரெட் பாக்கெட்டை நீட்டினான்.
“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.
“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.
“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”
“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”
“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”
“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”
“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”
”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”
“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”
“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”
“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.
“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.
“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”
“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”
“எப்படி சொல்றீங்க?”
“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”
“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.
“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.
”ரீசன்?”
“சொல்றேன். இரு”.
-தொடரும்......
“வேணாம் பாஸ். ரொம்ப பசிக்குது. சாப்பிட ஏதாவதிருக்கா?” என்றபடியே ஃப்ரிட்ஜை ஆராய்ந்தவன், ஒரு ஆப்பிளைக் கடித்தபடியே வந்து கணேஷின் முன் அமர்ந்தான்.
“போன காரியம் என்னாச்சு?” என்றான் கணேஷ்.
“சொல்றேன் பாஸ். அதுக்கு முன்னாடி, நீங்க எதுக்காக இந்த வேலைக்கு என்ன அனுப்பிச்சீங்கன்னு சொல்லுங்க. என்னாலயும் ஒரளவுக்கு யூகிக்க முடியுது. ஆனாலும்..”
“சொல்றேன் வசந்த். இது கண்டிப்பா நிவேதாவே எடுத்த முடிவில்லங்கறது என்னோட யூகம். இந்த விஷயத்துல ரெண்டே பேரத்தான் நாம சந்தேகப்படமுடியும். ஒன்னு ஜெயராமன். இல்லன்னா அஷோக். மோட்டிவ் ஒன்னுதான். சொத்துக்காக.”
“அப்ப கொலைன்னு சொல்ல வர்றீங்களா. போஸ்ட்மார்ட்டம்ல கயிறு இறுகி, மூச்சுக்குழாய் முறிந்ததால் மரணம்ன்னு தெளிவாருக்கே. ரெண்டாவது, சம்பவம் நிகழ்ந்த அன்னைக்கு ரெண்டு பேருக்குமே ஸ்ட்ராங்கான அலிபி இருக்கு.”
“அவசரப்படாத வசந்த். இது ஒருவரின் மேற்பார்வையில், வழிகாட்டுதலின் படி நடந்த தற்கொலை.”
“அப்படித்தான ஜெயராமனும் சொல்றாரு. அஷோக்தான் அந்த ஒருவன்ங்கறது அவரோட குற்றச்சாட்டு.”
”கரெக்ட். இப்ப அது நெஜமாவே அஷோக்தானாங்கறத தான் நாம கன்ஃபர்ம் பண்ணனும்.”
“சரி பாஸ். இப்ப உங்களோட மைண்ட்ல என்ன ஓடிக்கிட்டிருக்குன்னு சொல்லுங்களேன்.”
“சொல்றேன். அதுக்கு முன்னாடி நான் கேட்ட ரெண்டையும் கொண்டு வந்தியா?”
“கொண்டு வந்திருக்கேன் பாஸ். நீங்க கேக்காமலேயே இன்னொரு வேலையும் பண்ணி முடிச்சிருக்கேன்”. என்ன என்பது போல பார்த்தான் கணேஷ். ”முதல்ல நீங்க உங்க கெஸ்ஸ சொல்லுங்க பாஸ், அப்புறம் நான் என்ன பண்ணேன்ங்கறத சொல்றேன்”.
“ஆல்ரைட். முதல்ல அஷோக்கிட்டருந்து ஆரம்பிப்போம். லவ் மேரேஜ். பிரச்சனை எதுவும் இல்லை. அட்லீஸ்ட் எதுவுமில்லைன்னு அவர் நினைச்சுகிட்டிருக்கார். நல்ல வருமானம் ஈட்டிக்கொடுக்கும் தொழில். நஷ்டமோ, பெரிய பணத்தேவையோ இல்லை”.
“இந்தக் காரணங்கள் போதுமா பாஸ்? தப்பா எடுத்துக்காதீங்க. ரொம்ப சைல்டிஷ்ஷா இருக்கு.”
“இரு வசந்த். அவசரப்படாத. இதெல்லாம் சும்மா ஆட் ஆன் வாதங்கள் தான். ஒரே ஒரு அடிப்படைக் காரணம் இருக்கு வசந்த். இம்மாதிரி நிவேதாவை தற்கொலைக்கு தூண்டுவதன் மூலம் தான் ஈசியாக மாட்டிக்கொள்வோம் என யோசிக்கத் தெரியாதவரல்ல அஷோக்.”
“எப்படி சொல்றீங்க?”
“சிம்பிள்டா. நிவேதாவின் அப்பா எழுதிவைத்திருக்கும் உயில் அப்படி. பொண்ணுக்கு கல்யாணம் ஆனப்புறம், ஏதாவது ஆச்சுன்னா புருஷந்தான் பொறுப்புன்னு தெளிவா எழுதிவச்சிருக்காரே. அதனால, நிவேதாவுக்கு ஏதாவது ஆச்சுன்னா தன்னைத்தான் பிடிப்பாங்கன்னு அவருக்கு தெரியாம இல்ல. அதுவுமில்லாம, அவருடைய பிசினெஸை கொஞ்சம் கிளறினேன். க்ளீனாதான் இருக்கார். நிவேதா இறப்பதால் அவருக்கு கிடைக்கப்போகும் தொகை, அவருக்கு பெரிய அமவுண்ட்டாக இருக்காது. இதை அவரே சொல்லிருக்காரு.”
“ம்ம்ம். அப்ப அஷோக்க லிஸ்ட்ல இருந்து தூக்கிடலாம்”.
“யெஸ். ஜெயராமன தெளிவா டிக்கடிச்சிடலாம்”.
”ரீசன்?”
“சொல்றேன். இரு”.
-தொடரும்......
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
January 30, 2012
போலேநாத் உணவகம்
மிக மிக குறைந்த விலையில், திருப்தியாய் சாப்பிட ஏற்ற இடம், திருவான்மியூரில் இருக்கும் போலேநாத் ரெஸ்டாரெண்ட். நார்த் இண்டியன், சைனீஸ், சாட் என cuisine லிஸ்ட் நீண்டுக்கொண்டே போகிறது. ஞாயிற்றுகிழமைகளில் ஸ்பெஷல் தாலி மீள்ஸ் கிடைக்கிறது. 95 ரூபாய். ஜல்ஜீரா, ஜிலேபி, ரைத்தா (பூந்தி), சாலட், தால், மூன்று சப்ஜி (பாகற்காய், சோலே மசாலா, ஆலு மட்டர் மசாலா), கடி, ரொட்டி மற்றும் ஒயிட் ரைஸ். ஸ்வீட்டைத் தவிர எல்லாமே அன்லிமிடெட். அன்று எங்கள் ப்ளேட்டில் இருந்த அத்தனை ஐட்டமும் அட்டகாசமாய் இருந்தது. முக்கியமாய் கரேளா (பாகற்காய்) சப்ஜி. கசப்புடன், லைட்டான தித்திப்பும் புளிப்புமாய் அருமையாக இருந்தது. அடுத்து தால். தாலுக்கு ரொட்டி தொட்டு சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்:))

சூடான, மிருதுவான, நெய் தடவிய ரொட்டிகள். நெய் வேண்டாமென்றால் சொல்லிவிடலாம். நான் சாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு ரொட்டிகளை ரவுண்டுக் கட்டிக்கொண்டிருந்தேன். ஜிலேபி ஒக்கே. ரொம்ப சின்ன உணவகம் தான். அதிகபட்சம் 25 அல்லது 30 பேர் அமரலாம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோதான். ரெண்டே பேர்தான் சர்வ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பர்ஸிற்கு பங்கமில்லாமல், ஒரிஜினல் டேஸ்ட்டில், எண்ணைய் மிதக்காத க்ரேவிகளை சாப்பிட ஏற்ற இடம். சைனீஸ் ஐட்டம் எதையும் ட்ரை செய்யவில்லை. இந்த மாதிரி சின்ன உணவகங்களில் ஃப்ரைட் ரைஸ் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கனும்.
மேலதிக தகவல்கள்
உணவகம் - போலேநாத்
உணவு - நார்த் இண்டியன், சாட், சைனீஸ் Veg
இடம் - திருவான்மியூர். மருந்தீஸ்வரர் கோவில் பின்புறம் போகும் ரோடில், சிங்கப்பூர் ஷாப்பி என்றொரு கடை இருக்கிறது. அதையொட்டி போகும் ரோட்டில் இரண்டாவது பில்டிங். மாடியில்.
டப்பு - ரொம்பக் கம்மி. தாலி மீல்ஸ் 95ரூபாய். கூடுதல் நிம்மதியாய் 8% வரியெல்லாம் கிடையாது:))
பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். மினிமம் டேஸ்ட் கேரண்டி
சூடான, மிருதுவான, நெய் தடவிய ரொட்டிகள். நெய் வேண்டாமென்றால் சொல்லிவிடலாம். நான் சாதம் வேண்டாமென்று சொல்லிவிட்டு ரொட்டிகளை ரவுண்டுக் கட்டிக்கொண்டிருந்தேன். ஜிலேபி ஒக்கே. ரொம்ப சின்ன உணவகம் தான். அதிகபட்சம் 25 அல்லது 30 பேர் அமரலாம். சர்வீஸ் கொஞ்சம் ஸ்லோதான். ரெண்டே பேர்தான் சர்வ் பண்ணிக்கொண்டிருந்தார்கள். பர்ஸிற்கு பங்கமில்லாமல், ஒரிஜினல் டேஸ்ட்டில், எண்ணைய் மிதக்காத க்ரேவிகளை சாப்பிட ஏற்ற இடம். சைனீஸ் ஐட்டம் எதையும் ட்ரை செய்யவில்லை. இந்த மாதிரி சின்ன உணவகங்களில் ஃப்ரைட் ரைஸ் நன்றாக இருக்கும். அடுத்த முறை முயற்சித்துப் பார்க்கனும்.
மேலதிக தகவல்கள்
உணவகம் - போலேநாத்
உணவு - நார்த் இண்டியன், சாட், சைனீஸ் Veg
இடம் - திருவான்மியூர். மருந்தீஸ்வரர் கோவில் பின்புறம் போகும் ரோடில், சிங்கப்பூர் ஷாப்பி என்றொரு கடை இருக்கிறது. அதையொட்டி போகும் ரோட்டில் இரண்டாவது பில்டிங். மாடியில்.
டப்பு - ரொம்பக் கம்மி. தாலி மீல்ஸ் 95ரூபாய். கூடுதல் நிம்மதியாய் 8% வரியெல்லாம் கிடையாது:))
பரிந்துரை - கண்டிப்பாக ட்ரை பண்ணலாம். மினிமம் டேஸ்ட் கேரண்டி
Labels:
கொட்டிக்கலாம் வாங்க
January 24, 2012
கடவுளுக்கு ஒரு கடிதம்
அன்பின் கடவுளுக்கு,
என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.
1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.
2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?
3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?
4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.
இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?
என்னைத் தெரியும்ன்னு நினைக்கிறேன். கண்டிப்பா தெரிஞ்சிருக்கும். ஏன்னா உன்னை அடிக்கடி கூப்பிடற ஆளுங்கள்ல நானும் ஒருத்தி. என்ன, கூப்பிடற தொனி கொஞ்சம் மாறிக்கிட்டேயிருக்கும். கீழ்வீட்டு அங்கிள் மொக்கை போட ஆரம்பிக்கும்போது ரொம்ப சன்னமான குரல்ல “கடவுளே என்னைக் காப்பாத்து” என் மென்மையாய் கெஞ்சுவது எனக்கே கூட கேக்கலைன்னாலும், உனக்கு கண்டிப்பா கேட்டிருக்கும். ஏன்னா நீ கடவுளாச்சே. அதே மாதிரி மாங்குமாங்குன்னு சாயம் போற துணியெல்லாம் மிஷின்ல போடாம கையால துவைச்சு போட்டு மூச்சிரைக்க ரெண்டு மாடி ஏறி காயவச்சிட்டு வரும்போது, உன்னோட இன்னொரு ஆல்டர் மேலருந்து தண்ணி ஊத்துவாரு பாரு அப்ப “கடவுளே என் மேல கருணையேயில்லையா” எனக் கோவப்படுவேன். உன்கிட்ட கோச்சுக்கிற உரிமை எனக்கில்லையா என்ன? ரொம்ப அசதியாருக்கே, பத்து நிமிஷம் படுத்துட்டு வரலாம்ன்னு போயிட்டு வர்ற கேப்புல, சமைக்கிறேன் பேர்வழின்னு எண்ணைய்/நெய்யெல்லாம் ஒன்னாக்கொட்டி, பத்து நிமிஷம் படுத்ததுக்கு தண்டனையா ஒரு மணி நேரம் வேலை வைக்கும் என் புள்ளையாண்டானைப் பார்த்து கோபத்துல “கட்ட்ட்ட்டவுளேஏஏஏஏ”ன்னு கத்துவேன். அவன் செஞ்சதுக்கு என்னைய ஏன் திட்றன்னு கேக்கறியா? குழந்தையும், தெய்வமும் ஒன்னில்லையா? அதான். நான் மட்டுமில்ல, சிலசமயம் என் ரங்ஸும் உன்னை கூப்பிடுவார். எப்பல்லாம் சாப்பாட்டு தட்டுல சப்பாத்தி விழுதோ அப்பல்லாம் “கடவுளே..மறுபடியும் சப்பாத்தியா” என்று அலுத்துக்கொள்வார். அதோடில்லாம உனக்கு படைக்கிற உணவெல்லாம் வீணாப் போயிருச்சுன்னா, சாப்பாட்ட பாழ்பண்ணிட்டானேன்னு உன்னை எல்லாரும் திட்டுவாங்கன்னு கர்ம சிரத்தையா அத்தனை பிரசாதத்தையும் சாப்பிட்டு உனக்கு நல்ல பேர் வாங்கிக் கொடுக்கிறேன். இந்த அறிமுகம் போதும்ன்னு நினைக்கிறேன். அதுவும் கடைசி ஒரு வரியிலயே நீ என்னை அடையாளம் கண்டிருப்ப. சரி இப்ப எதுக்கு இந்த சுய அறிமுகம்ன்னு கேட்கறியா? அது வேறொன்னுமில்ல கடவுளே. எனக்கு சில பல பிரச்சனைகளிருக்கு. அப்பப்ப அத உன் காதுல போட முயற்சிபண்ணாலும், நீ கண்டுக்கவே மாட்டேங்கற. அதான் ஒரு கடுதாசியப் போட்டு வைப்போம்ன்னு.
1. வர வர க்ளைமேட் ஜெயலலிதா மேடம் மூட் மாதிரி ஆகிட்டு வருது. வெயில் கொளுத்துது. அதே சமயம் வண்டில போனா சில்லுன்னு காத்தடிக்குது. திடீர் திடீர்ன்னு மழை பெய்யுது. முடியல கடவுளே. சிம்பிளா நான் துணி துவைக்கறன்னிக்கு மட்டும் ஒரு ரெண்டு மணி நேரத்துக்கு சுள்ளுன்னு வெயிலடிச்சா போதும். மத்த டைம்ல, கருகருன்னு மேகமூட்டமா இருந்தா எவ்ளோ நல்லாருக்கும்.
2. மேகமூட்டமா இருந்தாலும், பக்கோடா சாப்பிடனும்ன்னு தோணக்கூடாது. அப்படியே தோணி சாப்பிட்டாலும் வெயிட் போடக்கூடாது. முதல்ல சாப்பிட்டா வெயிட் போடும்ங்கற கான்செப்ட்ட மாத்தனும் கடவுளே. சாப்பிடலைன்னா தான் கன்னாபின்னான்னு வெயிட் போடனும். நீ மட்டும் வேளாவேளைக்கு நெய்ல செஞ்ச நெய்வேத்யத்த முழுங்கிட்டு இன்ஸ்டால் பண்ணும்போது இருந்தா மாதிரியே ஷேப் மெயிண்டெய்ன் செய்வ. நாங்க மட்டும் இத்தூனூண்டு ஸ்வீட் சாப்பிட்டாலே காத்தடிச்ச பலூன் மாதிரி ஊதிப்போகனுமா? என்ன நியாயம் இது? நானும் எத்தனை நாளைக்கு தான் பயந்து பயந்து சாக்லேட் கேக்க சாப்பிடறது. இந்த விஷயத்த உடனடியா கவனி. அடுத்த தபா இடுப்பு சதை பத்தின கவலை இல்லாம சாக்லேட் கேக்/ஐஸ்க்ரீம் சாப்பிடற மாதிரி வகை செய். சரியா?
3. இந்த இலக்கியவாதிங்க கையையும் வாயையும் கொஞ்சம் கட்டிடு தலைவா. தொல்லை தாங்க முடியல. மொக்கை போடக்கூடாதுங்கறாங்க. ஆக்கப்பூர்வமா இணையத்த பயன்படுத்தனுமாம். வெட்டி அரட்டை பண்ணக்கூடாதாம். ப்ரொடெக்டிவா இருக்கனுமாம். ஆஃபிஸ்லயே உருப்படியா வேலை செய்யமுடியலைன்னு தானே இங்க வந்து மொக்கை போடறோம். அதுவும் கூடாதுன்னா எப்படி?
4. அப்புறம் எல்லாம் குடும்ப இஸ்த்ரிகள் சார்பாவும் வழக்கமா வைக்கிற கோரிக்கை தான். கை சொடுக்கினா சமையல் முடிஞ்சிரனும். நறுக்கறது, தாளிக்கறது, வறுக்கறதுன்னு நாங்க வறுபடக்கூடாது. அதுக்கு ஏதாவது ஏற்பாடு செய். என்ன? அதுக்குதான் ரங்ஸ் இருக்காங்கங்கறியா? எங்க? வாயால தான் வடை சுடறாங்க.
இன்னும் கேக்க வேண்டியது எவ்ளோ இருக்கு. ஆனா பாரு அந்த வார்த்தைதான் கிடைக்க மாட்டேங்குது. ஆங். கடைசி விஷ்ஷா, பதிவெழுத மேட்டர் கிடைச்சவுடனேயே, மொத்த பதிவும் ஆட்டோமேட்டிக்கா தன்னைத் தானே எழுதிக்கனும். என்ன மாதிரி இந்த ஒரு பதிவ ஒரு மாசமா முக்கி முக்கி எழுதக்கூடாது. சரியா? இப்போதைக்கு இது போதும். அடுத்த கடுதாசில மீட் பண்றேன். வர்ட்டா?
Labels:
என்ன கொடுமை சார் இது,
சொந்தக் கதை,
மொக்கை
January 18, 2012
அளம் - வாசிப்பனுபவம்
கூகிள் பஸ்ஸிற்கு மூடுவிழா நடக்கும்முன்பு, வடகரை வேலன் அண்ணாச்சி, ஜாக்கி சேகருக்கு சில புத்தகங்களை பரிந்துரை செய்திருந்தார். மக்களை, மண்ணின் இயல்பை பிரதிபலிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அதில் ஒன்று கண்மணி குணசேகரனின் “நெடுஞ்சாலை”. நான் அப்போதுதான் அந்த புத்தகத்தை வாசித்து முடித்திருந்தேன். எனக்கு மிகவும் பிடித்தமான நாவலாக நெடுஞ்சாலை இருந்தது. கூடவே அவர் பரிந்துரைத்த புத்தகங்களில் சு.தமிழ்செல்வியின் அளம், ஆறுகாட்டுத்துறை, கீதாரி ஆகியவையும் இருந்தன. 2012 புத்தக கண்காட்சியில் வாங்கவேண்டுமென குறித்து வைத்துக்கொண்டேன். போலவே, வாங்கியும் விட்டேன். முதலில் வாசிக்கத் துவங்கியது அளம்.
வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.
கிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.
தாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.
அளம்
சு.தமிழ்செல்வி
மருதா பதிப்பகம்
100 ரூபாய்
வேதாரண்யத்திற்கு அருகே இருக்கும் கோவில்தாழ்வு என்ற கிராமம் தான் கதை நடக்கும் களம். சுந்தராம்பாள், அவளின் மகள்களான பிறந்து ஒரு மாதமேயான கைக்குழந்தை அஞ்சாம்பாள் என்கிற சின்னங்கச்சி (சின்னத்தங்கச்சி), மூன்று வயதான ராசாம்பாள் என்கிற நடுங்கச்சி (நடுத்தங்கச்சி) மற்றும் மூத்தவளான வடிவாம்பாள் என்கிற பெரியங்கச்சி ஆகியோரைச் சுற்றி பின்னப்பட்ட கதை. மனைவியையும் குழந்தைகளையும் பிரிந்து, கப்பல் வேலைக்கு (சிங்கப்பூர்) செல்கிறான் சுந்தராம்பாளின் கணவன் சுப்பையன். நான்கு வருடத்தில் திரும்பி வருவதாக சொல்லிச்செல்பவனிடமிருந்து, ஒரு கடிதம் கூட வரவில்லை. ஒற்றையாளாய், மூன்று பெண்களை வளர்த்து, ஆளாக்க சுந்தராம்பாள் படும் துயர்களே அளம்.
கிராமங்களில், அதிலும் பொருளாதார நிலையில் பின் தங்கியிருக்கும் குடும்பங்களில், பெண்களின் உழைப்பு அசாத்தியமானது. இன்னும் சொல்லப் போனால், சில குடும்பங்களின் அன்றாடத் தேவைகள், பெண்கள் ஈட்டும் வருவாயால் தான் நிறைவேற்றிக்கொள்ளப்படுகின்றன. கணவன் வேலை வெட்டிக்குப் போகாதிருப்பதை குத்திக்காட்டினாலும், அவன் தன்னைப் பிரிந்துப் போவதை சுந்தராம்பாளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. நான்கு, எட்டு, பதினைந்து, முப்பது என வருடங்கள் போனாலும், என்றாவது ஒருநாள் தன் கணவன் திரும்பி வருவான், என்ற நம்பிக்கையில் கடும் பஞ்சத்திலும் கோவில்தாழ்வை விட்டு எங்கேயும் போகாமல் இருக்கிறாள். வறுமையால் வாடும் இவர்களின் பசி போக்கும் உணவுகளாக தொம்மட்டிப் பழம், அமலைச் செடியின் விதைகள், பனங்கிழங்கு, கரணைக்கொட்டை, கெட்டிக்கிழங்கு, கீரை வகைகள் போன்றவை இருப்பதாக நாவல் முழுவதும் சொல்லப்படுகிறது. இவற்றில் ஒன்றைக்கூட நான் பார்த்ததோ கேள்விப்பட்டதோயில்லை.
தாயின் கஷ்டங்கள் புரிந்து, என்றாவது அப்பா திரும்பி வந்துவிட மாட்டாரா என்ற ஏக்கத்துடன், கல்யாணக் கவலைகளை தன்னுள் புதைத்து, தாய்க்கு உறுதுணையாக இருக்கிறாள் வடிவாம்பாள். மகளிற்கு ஒரு கல்யாணம் நடந்துவிடாதா என ஜோசியர்களிடம் நடையாய் நடக்கும் சுந்தராம்பாளின் ஆசை நிறைவேறுகிறது. ஆனால் இறுதியில், அவளுக்கோ, வடிவாம்பாளுக்கோ சந்தோஷம் நிலைக்கவில்லை. நடுங்கச்சியான ராசாம்பாளுக்கு கல்யாணமாகி மூன்று குழந்தைகளான பின் வரும் மணவாழ்வின் சிக்கல்கள் சோகமானவை. அஞ்சம்மாளுக்கு தன் சிறுவயது தோழனான பூச்சியுடனான காதல் மெல்லிசையாய் இன்பம் தருகிறது. தன் தம்பிக் குடும்பத்திற்காக ஓடி ஓடி உதவிகள் செய்யும் கணேசன் பெரியப்பா, ஊரிலிருப்பவர்களுக்கு சொந்தமாக அளம் கிடைக்க யோசனை சொல்லும் பூச்சி, வடிவாம்பாளின் கணவர்களெ என நாவல் முழுவதும் வரும் பாத்திரங்கள் கச்சிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறார்கள்.
கணவனைப் பிரிந்து, ஊரார் பேச்சிற்கு ஆளாகி, இயற்கையால் வஞ்சிக்கப்பட்டு, வைராக்கியத்தால் பசியை வென்று, ஓயாது உழைத்து, சொந்தமாய் அளம் வாங்கி, மகள்களை கரையேற்ற வேண்டுமென்ற ஒரே நோக்கத்திற்காக வாழும் சுந்தராம்பாள் என்ற இரும்பு மனுஷியைப் படைத்த ஆசிரியர் தமிழ்செல்விக்கு என் வந்தனங்கள். நல்லதொரு நாவலை அடையாளம் காட்டிய அண்ணாச்சிக்கு என் நன்றிகள்.
அளம்
சு.தமிழ்செல்வி
மருதா பதிப்பகம்
100 ரூபாய்
January 11, 2012
நினைவெல்லாம் நிவேதா - 5
”அஷோக்??? என்ன சொல்றீங்க?” என்றான் கணேஷ் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கலந்த குரலில். இருவருக்கும் முதுகைக் காட்டிக் கொண்டு சலனமற்று நின்றுக்கொண்டிருந்த அஷோக்கை மெல்ல நெருங்கினான். அருகே செல்ல செல்ல அஷோக்கின் உடல் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பது கணேஷிற்கு தெளிவாகத் தெரிந்தது. மெதுவாக அவர் தோளைத் தொட்டதும், உடைந்து அழத் தொடங்கினார் அஷோக். இதனை சற்றும் எதிர்பாராத கணேஷ் “ஈசி அஷோக். ஈசி. சாரி உங்களை புண்படுத்த அப்படிக் கேட்கவில்லை”
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.
”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”
"எதுக்கு?”
“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”
“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”
”நன்றி. நாங்க கிளம்புறோம்.”
“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”
“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”
“வருவீங்களா?”
“தேவைப்பட்டால்.”
“தேவைப்படுமா?”
பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.
”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.
“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”
“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.
முகத்தை இரண்டு கைகளாலும் அழுத்தி துடைத்துவிட்டு நிமிர்ந்த அஷோக், ஒரு பெருமூச்சிற்குப் பிறகு “இட்ஸ் ஒக்கே. அது உங்க கடமை. ஐ லவ்ட் ஹெர் சோ மச் கணேஷ். பாசம் தெரியாமல், அப்பாவின் பரபரப்பையும் பணத்தையும் மட்டுமே பார்த்து வளர்ந்த என் வாழ்க்கையில் நிவேதாவின் வரவு வசந்தமாக இருந்தது. இந்த மூணு வருஷம் எங்களுக்குள் எந்த விதமான சண்டையோ, மனஸ்தாபங்களோ ஏற்பட்டதில்லை. வேலையில் நான் பிஸியானது உண்மைதான். அதை என்னிடம் சொல்லியிருந்தால் சரிசெய்திருப்பேனே. இவ்ளோ பெரிய தண்டனையா தரனும்? இப்படி பாதில விட்டுட்டுப் போனவள எதுக்கு இன்னும் நினைச்சுகிட்டிருக்கனும்? எதுக்கு லவ் பண்ணனும்? முடியல கணேஷ். வீட்ல இருக்க ஒவ்வொரு நிமிஷமும் நரகமாருக்கு. அவள் சம்பந்தப்பட்ட எதையுமே பார்க்க பிடிக்கல. அதான் ஏறக்கட்டச்சொன்னேன்.” என்றார்.
”மறுபடியும் சாரி அஷோக். எவராலும் ஈடுகட்ட முடியாத இழப்பு. நாங்கள் இங்கே வந்தது, நிவேதாவின் திங்ஸை பார்க்க முடியுமா எனக் கேட்கத்தான்.”
"எதுக்கு?”
“ஜஸ்ட் ஒரு ரொட்டீன் ஃபார்மாலிட்டி தான்.”
“ஒக்கே. நான் வேலைக்காரிகிட்ட சொல்றேன். நீங்க எப்ப வேணாலும் வீட்டுக்கு வரலாம்”
”நன்றி. நாங்க கிளம்புறோம்.”
“கணேஷ்.. ஒரு நிமிஷம். ஜெயராமன் போலீஸ் கம்ப்ளையெண்ட் கொடுத்தா, என்னை அரெஸ்ட் பண்ணுவாங்களா?”
“அவரிடம் இருக்கும் எவிடென்ஸை பொறுத்திருக்கிறது. நாங்க வர்றோம்.”
“வருவீங்களா?”
“தேவைப்பட்டால்.”
“தேவைப்படுமா?”
பதில் எதுவும் சொல்லாமல், சிரித்துவிட்டு கிளம்பினார்கள் இருவரும். வெளியே வந்து சிகரெட் பத்த வைத்த கணேஷிடம் “என்ன பாஸ்? மூடிடலாமா? ஒன்னுமில்லாமத்தான் போகும் போலயே?” என்றான் வசந்த்.
”இல்லை வசந்த். இனிமே தான் ஆட்டம் சூடு பிடிக்கப் போகுது” என்றான் கணேஷ் புகையை வெளியே விட்டபடி.
“என்ன பாஸ் சொல்றீங்க? ஒரு பொண்ணு தூக்கு போட்டுகிச்சு. போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டும் தற்கொலைதான்னு சொல்லுது. சித்தப்பன் புருஷன் தான் ட்ரிக்கர் பண்ணான்னு சொல்றாரு. புருஷனோ, பொண்டாட்டி செத்த வருத்தம் துளியும் இல்லாம, ஹீரோ கணக்கா ஜம்முன்னு வேலையப் பார்க்கிறான். ஜெயராமன கேஸ் ஃபைல் பண்ணச் சொல்லலாம். ஆட்டம் முடியப் போகுது. இனிமேதான் சூடு பிடிக்கப்போகுதுன்னு சொல்றீங்க? மனசுல என்ன ஓடுது பாஸ்? சொல்லிடுங்க.”
“பொறுமையா இரு வசந்த். சொல்றேன். அதுக்கு முன்னால கொஞ்சம் க்ரவுண்ட் ஒர்க் பண்ணலாம். நான் எதிர்பார்க்கிற லீட் கிடைச்சுதுன்னா ஆட்டத்த ஈசியா முடிக்கலாம்”.
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
January 9, 2012
Scribblings 09-01-2012
சென்னையின் 35வது புத்தக கண்காட்சி சென்ற ஐந்தாம் தேதி தொடங்கியது. கண்டிப்பாக போகனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். சனிக்கிழமையன்று போய்ட்டு வந்துட்டேன். இந்த தடவை ரொம்பக் கம்மியான புத்தகங்கள் (பட்ஜெட் பிரச்சனை) தான் வாங்கனும்ன்னு நினைச்சுகிட்டிருந்தேன். வழக்கம்போல லிஸ்ட்டைத்தாண்டி நிறைய வாங்கிட்டேன். நம்ம யுஎஸ் ரிட்டர்ன் ராஜியோட, பதினோரு மணிக்கு திறக்கற கண்காட்சிக்கு, பத்தரைக்கெல்லாம் போயிட்டோம். நாள் முழுசும் சுத்திகிட்டே இருந்தோம். பதிவுலக நண்பர்கள் சிலரையும் சந்தித்தது மகிழ்ச்சியாக இருந்தது. அரங்கின் பிரமாண்டமும், புத்தகங்களின் எண்ணிக்கையும் மூச்சடைக்க வைத்துவிட்டது. வழக்கம்போல சுஜாதாவோட கணக்கைத் தொடங்கினேன். இந்த முறையாவது வாங்கிய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்து முடிக்கனும். பார்ப்போம்.
*********************
புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************
2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************
நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.
”வீட்ல இல்லையே”
“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”
“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”
“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”
அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************
சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.
ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?
*********************
புத்தகத்திருவிழாவில் கவனித்த இன்னொரு விஷயம், மக்கள் காமிக்ஸ் புத்தகங்கள் மீது வெறிகொண்டு அலைகிறார்கள். 12 வருஷ கலெக்ஷனை 900 ரூபாய்க்கு தருகிறார்கள். என் அண்ணனிடம் 20 வருஷத்து கலெக்ஷன்கள் இருப்பதால் நான் வாங்கவில்லை. ஊரில் இவற்றை பத்திரமாக வைப்பதற்கென்றே மரப்பெட்டிகளின் உள்ளே வெல்வெட் துணி என பிரத்யோகமாக செய்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறார்கள். பால்யத்தில் விடுமுறைக்காக ஊருக்குப் போகும்போதெல்லாம், கயித்துக்கட்டிலில் படுத்துக்கொண்டு இரும்புக்கை மாயாவி, லக்கி லுக், டெக்ஸ் வில்லர், சிலந்தி மனிதன் என படித்தது நினைவுக்கு வருகிறது. இந்தப் பொங்கலோடு இரும்புக் கை மாயாவிக்கு 40 வயதாகிறதாம். ஹேப்பி பர்த்டே பாஸ்:)
*****************
2012 வாசிப்பு கணக்கை நேற்று தொடங்கியாச்சு. யுவகிருஷ்ணாவின் “அழிக்கப் பிறந்தவன்” நாவலை வாசித்து முடித்தேன். விறுவிறுப்பான மசாலா படத்தைப் பார்த்த திருப்தி. பரபரவென போயிற்று. சுரேகா தன் விமர்சனப் பதிவில் கீழே வைக்கமுடியவில்லை என்று சொல்லியிருந்தார். உண்மைதான். அங்கங்கே வாத்தியார் எட்டிப் பார்க்கிறார் (பெர்ஃப்யூமை ஸ்ப்ரேவிக் கொண்டான்). அதுசரி சுஜாதா விருது வாங்கினவரிடம் அவர் சாயல் துளியும் இருக்காதா என்ன? ஒன்னும் மட்டும் புரியவில்லை. லக்கி எப்படி மனம்வந்து அணிலின் படம் ஹிட்டாகும் என எழுதியிருக்கிறார்? குட் வொர்க் லக்கி. வாழ்த்துகள்.
****************
நேற்று அதிகப்படியான வேலை சலிப்பில் “நான் ஒருத்தியே எத்தனை வேலை தான் பார்க்கிறது” என புலம்பிக் கொண்டிருந்தேன். இதைக் கேட்ட ஜூனியர், ”அம்மா பிங்கோ சாப்பிடும்மா” என்றான்.
”வீட்ல இல்லையே”
“நான் அப்பாகிட்ட சொல்லி வாங்கித் தர்றேன்.”
“வேண்டாண்டா அம்மாக்கு அதெல்லாம் பிடிக்காது.”
“பரவால்ல சாப்பிடும்மா. அது சாப்பிட்டா டூ ஆகிடுவாங்க. அப்ப நீ நிறைய வேல செய்யலாம். சரியா?”
அப்புறம்தான் புரிந்தது. சமீபத்திய பிங்கோ விளம்பரங்களில், அதை சாப்பிட்டால், ட்வின்ஸ் மாதிரி ஆகிடுவாங்க என வருகிறது. அவ்வ்வ்வ். எங்கேயெல்லாம் அப்ளை பண்றாங்க இந்த பசங்க.
***********************
சன் டிவியில் ஒளிப்பரப்பான நண்பன் பட இசை வெளியீட்டு விழாவில் ஷங்கர் அடிச்ச ஜிங்ஜாங்கை தாண்டி அவர் சொன்ன ஒரு விஷயம் மிகவும் பிடித்திருந்தது. இந்தப் படம் வெற்றியடைந்ததுன்னா அதுக்கு ஒரே காரணம் ஹிந்தி படத்தின் கதாசிரியர்/டைரக்டர் ராஜ்குமார் ஹிரானி தான் என்றார். சீன் பை சீன், காஸ்ட்யூம் முதற்கொண்டு காப்பியடித்துவிட்டு சொந்தமா சிந்திச்சேன், தமிழுக்கு ஏத்த மாதிரி மாத்தினேன் பீலா விட்டுகிட்டு சுத்தும் டைரக்டர்கள் மத்தியில் இந்த ஒரு விஷயத்துக்காகவாவது ஷங்கர் பாராட்டப் படவேண்டியவர். போகியன்று புக் பண்ணியிருக்கேன். பார்த்துட்டு சொல்றேன்:) அந்நிகழ்ச்சியை ஓட்டிய எனது ட்விட்.
ஷங்கர் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் - விஜய் #அப்ப அவதார் எடுத்ததுக்காக ஜேம்ஸ் கேமரூன ஹாலிவுட்டின் ராமநாராயணன்னு சொல்லலாமா?
Labels:
துணுக்ஸ்
December 29, 2011
Scribblings 2011
மற்றுமொரு ஆண்டு முடிவுக்கு வருகிறது. வழக்கம்போலவே இந்த வருடமும், அனைத்து உணர்ச்சிகளையும் சேர்த்துக்கோர்த்த மலர்ச்செண்டாகவே இருந்தது. பெரிய இழப்பென்று சொல்ல எதுவுமில்லையென்றாலும், வழக்கம்போல மனிதர்களைப் பற்றிய புரிதல்களில்/தீர்மானங்களில் நான் இன்னும் பாலப்பாடத்திலேயே இருப்பதை இந்த ஆண்டு உணர்த்தியது. இவ்வளவுதானா/இதற்க்காகவா போன்ற கேள்விகள் எழுந்த தருணங்கள் வலிமிகுந்ததாக இருந்தாலும், அத்தருணங்களை கடக்க/மறக்க தோள் கொடுத்து உதவிய நட்புகள் வாய்த்திருப்பது மகிழ்ச்சியே. நிறைய மகிழ்வான தருணங்கள், மறக்கமுடியாத/ஆனந்த மனநிலையில் கூத்தாடிய தருணங்களை இந்த ஆண்டு பரிசளித்தது.
உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.
பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.
உடல்நிலையைப் பொறுத்தவரை ஜூனியருக்கும் சரி, எனக்கு சரி, சிலபல சிரமங்கள் இருந்தாலும், வாட்டி வதைத்த உடல் உபாதைகள் ஒருவழியாக முடிவுக்கு வந்த ஆண்டு என்றும் சொல்லலாம். அப்பா அரசாங்கப் பணியிலிருந்து ரிட்டையர் ஆனது இந்தாண்டில் தான். ஒருவழியாக அவருக்கு ஓய்வு கிடைத்ததில் மகிழ்ச்சியே.
பதிவுலகைப் பொறுத்தவரை எந்தவொரு சந்திப்பிற்கும் போகாமல் ஒதுங்கியே இருந்தவள், இரண்டு மூன்று முறை சில சந்திப்புகளுக்கு சென்றேன். எழுத்துப்பணியை (அடங்கவேமாட்டியா நீ??) பொறுத்தவரை இந்தாண்டு கல்கி, அதீதம், பண்புடன் போன்ற இதழ்களில் என் படைப்பு வெளிவந்தது மிகவும் உற்சாகமாக இருந்தது/கிறது.
நண்பர்கள் அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துகள். அடுத்த வருஷம் மீட் பண்ணலாம்.
Labels:
துணுக்ஸ்
December 19, 2011
Scribblings 19-12-2011
இதோ அதோன்னு ஆட்டம் காட்டிட்டு ஒருவழியா கூகிள் பஸ்ஸ மூடிட்டாங்க. ரொம்ப நாள் கூடப் பழகின ஒருத்தர் திடீர்ன்னு இல்லாமப் போனா மாதிரி வெறுமையா இருக்கு. ப்ளஸ் இருக்குன்னாலும், பஸ்ஸின் இடத்தை வேற எந்த தளத்தாலும் ஆக்ரமிக்க முடியாது. கொஞ்ச நஞ்ச லூட்டியா? என்னா ஆட்டம்? என்னா கும்மி? ப்ளஸ் ரொம்ப கொசகொசன்னு சந்தைக்கடை மாதிரி இருக்க ஃபீலிங்:( இப்போதைக்கு அங்க போற ஐடியா இல்ல. பொறுத்திருந்து பார்ப்போம். மிஸ் யூ கூகிள் பஸ்.
***********
பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********
2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)
************
அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு
மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********
இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.
கார் ரோட்ல விடுவியாம்மா?
எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.
பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?
கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?
அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.
ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?
ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?
ஙே!!!!
எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********
***********
பஸ் போனதின் நீட்சியாய் (இதப் பார்றா)ரொம்ப நாள்/மாசம்/வருஷம் கழிச்சு போனவாரம் தான் தொடர்ந்து அஞ்சு நாள் பதிவு போட்டிருக்கேன். தொடர்ந்து அந்த மாதிரி பதிவு போட்டு உங்களை கொல்ல முடியாது. அட இந்த ஒரு வாரத்துக்கு பதிவுக்கு மேட்டர் தேத்தறதுக்குள்ள நாக்கு தள்ளிருச்சு. இந்த லட்சணத்துல ஒன்னு மீள் பதிவு வேற. இனிமே அட்லீஸ்ட் வாரத்துக்கு ரெண்டு பதிவாவது போட்டு எல்லாரையும் கொல்லலாம்ன்னு இருக்கேன். பார்ப்போம்.
***********
2010ல் வெளியாகி ஒரு வருஷமா எல்லா சேனல்லயும் ஹிட்டடிச்ச ஷீலா கி ஜவானிக்குப் போட்டியா, சிக்னி சமேலி வந்திருக்கா. காத்ரீனா கைஃப் கொலக்குத்து குத்தியிருக்கும் இந்தப் பாட்டு இப்போ ஹிட்ன்னு சொல்றாங்க. எனக்கென்னவோ, ஷீலா தான் இன்னும் டாப்ல இருக்கா மாதிரி தோணுது. நீங்களே பார்த்து சொல்லுங்க:)
************
அப்பப்போ ட்விட்டர் பக்கம் எட்டிப்பார்க்கிறேன். பின்ன அத மட்டும் விட்டுவச்சா நல்லாவா இருக்கும்? அங்கே போட்ட மொக்கைகளிலேயே ஆகச்சிறந்த மொக்கைகளை மட்டும் இங்கே அப்டேட் பண்ணும் எண்ணமிருக்கு. அப்படியாகப்பட்ட மொக்கை ஒன்னு
மத்தவங்க நம்மளப் பத்தி என்ன நினைப்பாங்கன்னு நினைச்சு கவலப்படறது நம்ம வேலை இல்ல #தத்துபித்துவம்
***********
இந்த வட்டார மொழியால அடிக்கடி பல்பு வாங்கறேன். அப்படி சமீபத்துல என் மாமனார் கொடுத்த பல்பு.
கார் ரோட்ல விடுவியாம்மா?
எதுக்குப்பா? நம்ம வீட்ல தான் பார்க்கிங் இருக்கே.
பார்க் பண்றதப் பத்தி கேக்கலம்மா? ரோட்ல விடுவியா?
கவர்ட் கார் பார்க்கிங் இருக்கும்போது ரோட்ல எதுக்குப்பா விடனும். வண்டி டேமேஜ் ஆகிடாது?
அய்யய்யோ அதக் கேக்கலாமா? ரோட்ல, ட்ராஃபிக்ல ஆக்சிடெண்ட் பண்ணாம விடுவியான்னு கேட்டேன்.
ஹி ஹி வண்டி ஓட்டுவியான்னு கேக்கறீங்களா?
ஆமா. என்னமா இதுகூட புரியல உனக்கு?
ஙே!!!!
எங்கூர்ல வண்டி ஓட்றதுன்னு சொல்வோம். தஞ்சாவூர் பக்கம் அத விடறதுன்னு சொல்லுவாங்க போல. என்னமோ போடா மாதவா.
*********
Labels:
துணுக்ஸ்
December 16, 2011
The Rock
The Rock - சென்னையில் மற்றுமொரு தீம் ரெஸ்டாரெண்ட். அடையார் ரெயின் ஃபாரெஸ்ட் போயிருக்கீங்களா. கிட்டத்தட்ட அதோட ஜெராக்ஸ் காப்பி தான் இது. ரெண்டு பெரிய வித்யாசம். ரெயின் ஃபாரெஸ்ட்டை விட நல்ல சுவையான உணவு வகைகள், குறைவான விலை. ஓரியண்ட்டல், தந்தூர் வகை உணவுகளை பரிமாறும் இந்த உணவகம் அடையார், அண்ணாநகர் மற்றும் வேளச்சேரியில் இயங்கி வருகிறது.
நான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.





குறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.
மேலதிக தகவல்கள்
உணவகம் - தி ராக்
உணவு/Cuisine - Oriental, Tandoor Veg & Non-Veg. No buffet.
இடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)
அண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)
வேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)
டப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.
பரிந்துரை : Must try.
நான் இதுவரை மூன்று/நான்கு முறை சென்றுவிட்டதால், இது ஒரு mixed review. முதலில் ஆம்பியன்ஸ். More or less close to jungle theme. ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி செட்டப். அங்கங்கே காட்டு விலங்குகள், ஆதிவாசி பொம்மைகள் என ரெயின் ஃபாரெஸ்ட் போலவே இருக்கிறது. நண்பர்களோடு ஒரு முறையும், குடும்பத்தோடு இரு முறையும் சென்றேன். நண்பர்களோடு சென்றபோது ஸ்டார்டர்ஸாகவே தின்று தீர்த்தோம். ஒவ்வொரு முறையும் inhouse compliment என மலேஷியன் வெஜ் ரோல் தந்தார்கள். பெப்பர் சிக்கன், Pan griddled vegetables, சில்லி பனீர், புக்கெட் ஃபிஷ் என நாங்கள் சாப்பிட்ட அத்தனை ஸ்டார்டர்களுமே அட்டகாசமாய் இருந்தது. சூப் வகைகள் ஓக்கே. மெயின் கோர்ஸிற்கு மலேஷியன் நூடுல்ஸ் (ரிப்பன் டைப்), Thai fried rice, ஹாங்காங் ஃப்ரைட் ரைஸ், ப்ரெட் பாஸ்கெட் எல்லாமே சூப்பர். சைட் டிஷ் க்ரேவிகளும் upto the mark. டெசர்ட் செக்ஷன் இன்னும் கொஞ்சம் கான்சண்ட்ரேட் பண்ணலாம். ஐஸ்க்ரீம் தான் பிரதானமாய் இருக்கிறது. Sizzling Brownie ஆவரேஜ் ரகம் தான்.
குறையாகத் தெரியும் விஷயம் இடப்பற்றாக்குறை தான். சின்ன இடமாக இருப்பதால் ரொம்ப இரைச்சலாக இருக்கிறது.
மேலதிக தகவல்கள்
உணவகம் - தி ராக்
உணவு/Cuisine - Oriental, Tandoor Veg & Non-Veg. No buffet.
இடம் - அடையார் (பஸ் டிப்போ சிக்னல் அருகில். Next to Sony Center)
அண்ணாநகர் (3rd avenue. ஆர்ச்சிஸ், அமரான் பேட்டரி கடை அருகில்)
வேளச்சேரி. விஜயநகர் அடையார் ஆனந்த பவன் எதிரில் (நான் இங்கு சென்றதில்லை)
டப்பு - Moderate. ஒருவருக்கு வெஜ் - 350, நான் வெஜ் - 400 ஆகும். Value for money.
பரிந்துரை : Must try.
Labels:
கொட்டிக்கலாம் வாங்க
December 15, 2011
மார்கழி உற்சவத்தில் மன்னார் அண்ட் கோ
டிஸ்கி 1: இது முழுக்க முழுக்க நகைச்சுவைக்காகவே எழுதப்பட்டது. யார் மனதாவது புண்படுமேயானால் வருத்தம் தெரிவித்துக்கொள்கிறேன்.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.
விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.
பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.
"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.
இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.
என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.
ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.
நீங்க சொல்றது நேக்கு புரியலை.
அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.
கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.
தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?
அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,
நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.
அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?
பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.
டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.
கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.
ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.
சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.
ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.
பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க
ஸ
எச்ச
ரி
ர்ரீ
க
க்கா
ம
ம்ம்மா
சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.
பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?
இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.
இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.
இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.
சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.
நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?
என்ன ஐய்ரே?
இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?
அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.
அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.
யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.
அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.
டிஸ்கி 2: எனக்கிருக்கும் அரைகுறை அறிவை வைத்து எழுதியிருக்கிறேன். ஏதாவது பிழை இருப்பின் அறியாச் சிறுமி தெரியாமல் எழுதிவிட்டதாய் நினைத்துக் கொள்ளவும்.
விடிகாலை 5 மணிக்கு எழுந்து வாசன் தெருவிலிருக்கும் பார்த்தசாரதியை சேவித்துவிட்டு அப்படியே வெண்பொங்கலை ஒரு கை பார்த்துவிட்டு வரலாமென்று வீட்டை விட்டு கிளம்பிய அனந்தராமன் என்கிற அனந்து மாமாவை நான்காவது குறுக்குத் தெருவில் நான்கு பேர் கொண்ட கும்பல் வழிமறித்து கடத்தியது.
பின்மண்டையில் விண்ணென்று வலித்தது அனந்து மாமாவிற்கு. மெல்ல கண் திறக்க முயன்று தோற்றார். கிணற்றுகுள்ளிருந்து சில பேச்சுகுரல்கள் கேட்டன.
"மாமே பெர்சு முள்ச்சு முள்ச்சு பார்க்குதுடா. நீ ஒடிப்போய் மன்னார இட்டா"
அடுத்த பத்தாவது நிமிடத்தில் அந்த சீனில் ஆஜரானான் மன்னாரு. சிகப்பு அண்ட்ராயர் தெரிய மடித்துக் கட்டிய வெளுத்த கைலியும், பச்சை ஜல்லடை பனியனும் அணிந்திருந்தான். விழிகள் ரெண்டும் எக்ஸ்ட்ரா சிகப்பாக மிரட்டின. நீட்டி, மடக்கி முறுக்கி விடப்பட்ட மீசையையும், தாடை வரை தொங்கிக்கொண்டிருந்த அருவாவெட்டு கிருதாவையும் கிட்டத்தில் பார்த்த அனந்து அலறி மயங்கிச் சரிந்தார். அடுத்த ஒரு மணிநேரமும் தன் டாவான செகப்பியைப் பற்றி மன்னாரு சிலாகித்துக்கொண்டிருந்ததை கூட இருந்த மாரியும், சோடாவும் கேட்டுக்கொண்டிருந்தனர். மீண்டும் அனந்து கண் திறந்தார். இம்முறை அவர் அலறுவதுக்கு முன் அவர் வாய் மூடப்பட்டது.
இந்தாரு ஐயரே. உன்னாண்ட காசு புடுங்க உன்ன இங்க இட்டார்ல்ல. உன்னால என்க்கு ஒரு வேலை ஆவனும்.
என்ன என்பது போல் பயந்த பார்வை பார்த்தார் அனந்து. இம்முறை வாய் மலர்ந்தது சோடா.
ஐயுரே எங்க தலைக்கு கன்னடத்து பாட்டு நாலு சொல்லிக் கொடுப்பியாம்.
நீங்க சொல்றது நேக்கு புரியலை.
அதான் ஐய்ரே. இந்த கல்யாண மண்டபம் மாரி இர்க்குமே. அங்கன மேல குந்திக்கினு மண்டைய மண்டைய ஆட்டிப் பாடுவாங்களே. அது மாரி நாலு பாட்டு மன்னாருக்கு சொல்லி கொடு.
கர்நாடக சங்கீதமா? உங்களுக்கா என மறுபடி மயங்கினார். மீண்டும் மயக்கம் தெளிந்து எழுகையில் மன்னாரின் காலடியில் சாஷ்டாங்கமாய் விழுந்தார்.
மன்னிச்சுடுங்கோ சார்வாள். உங்களுக்கு கத்துக்கொடுக்கற அளவுக்கு நேக்கு ஞானமில்லை. நேக்கு அந்த பிராப்தமும் இல்லை.
தா. இப்படில்லாம் உதார் விட்டா நாங்க வுட்ருவோமா? ரெண்டு மாசமா உன்ன வாட்ச் பண்ணினுருக்கோம் ஐய்ரே. நீ பெருமாசாமி கோவில்ல பாட்டு படிச்சதெல்லாம் கேட்டுட்டு தான் உன்னிய தூக்கினு வந்தோம். தெருவுல போறவன புட்சாரதுக்கு நாங்க இன்னா லூசா?
அனந்து எவ்வளவு மன்றாடிப் பார்த்தும் மன்னாரு மசியவில்லை. கண்ணில் நீர் வர கேட்டுப் பார்த்தார். ம்ஹூம். விதி விட்ட வழியென்று பெருமாள் மீது பாரத்தைப் போட்டு விட்டு மன்னாருக்கு கற்றுத்தரும் மனதைரியத்தை வரவழைத்துக்கொண்டார்,
நாம ஸ்வரத்துல இருந்து ஆரம்பிப்போம்.
அய்ய. இது இன்னாடா வம்பாக்கீது. பாட்டு கத்துக்க ஜுரம் வர்ணுமா. இன்னா ஜுரம்பா? சாதா ஜூரம் போதுமா? இப்பத்திக்கு ஏதோ மர்மக் காச்சல்ன்னு சொல்றாங்கோ. அத வரவச்சிக்கனுமா?
பெருமாளே. ஜூரம் இல்லை. ஸ்வரம். சங்கீதத்தின் அடிப்படை. நான் பாடறேன். நீங்களும் என் கூட பாடுங்கோ.
டூயட்லாம் வேணாம் ஐயரே. ஸோலோதான் வேணும். ஈரோ எண்ட்ரி கொடுக்க சொல்ல பாடுவாங்களே. அந்த மாதிரி.
கடைசில நீங்கதான் தனியா பாடுவேள்.
ஆங். கடைசிலல்லாம் கெடியாது. முதல்ல இருந்தே நான் தனியா தான் பாட்டு படிக்கனும்.
சரிங்க. அதுக்கு நீங்க பாட்டு கத்துக்கனுமோன்னோ. இப்ப கத்துக்கறச்சே நான் பாட பாட என் பின்னாடி இருந்து பாடுங்கோ.
ஏன் ஐய்ரே உனக்கு பின்னாடி போய் பாடனும். உன் முன்னாடியே குந்திக்கினு பாட்றேனே.
பெருமாளே. ஏன் என்ன இப்படி சோதனை பண்ற? இங்க பாருங்க. நான் பாடற மாதிரியே பாடுங்க
ஸ
எச்ச
ரி
ர்ரீ
க
க்கா
ம
ம்ம்மா
சரி விடுங்க. இதெல்லாம் கத்துக்க ரொம்ப நாழியாகும். நான் பேசாம உங்களுக்கு நாலு ராகத்துல பாட்டு சொல்லித் தந்துடறேன்.
பேசாம எப்படி ஐய்ரே பாட்டு சொல்லுவ. மைண்ட் வாய்ஸா?
இதோ பாருங்க. முதல்ல கிண்டல் பண்றத நிறுத்திட்டு சம்மணம் போட்டு உட்காருங்கோ. பாரதியார் பாட்டு ரெண்டு பாடிக் காமிக்கிறேன்.
இதாண வேணாங்கறது. எனக்கு கன்னட பாட்டு தான் வேணும். பாரதியாரு தமில்லல்ல பாட்டு எளுதிருக்காரு.
இதுவும் கர்நாடக சங்கீதம் தான்.
சரி. டேய் சோடா போய் அந்த பொட்டிய எடுத்துனு வா. ஐய்ரு பாட்றத புட்ச்சி வச்சு கத்துக்கலாம்.
நான் ஒன்னு கேட்டா கோச்சுக்க மாட்டேளே?
என்ன ஐய்ரே?
இப்ப எதுக்கு உங்களுக்கு இந்த விபரீத ஆசை?
அத்த ஏன் கேக்குற ஐய்ரே. நம்ம டாவு சேப்பியிருக்குதே. அதுக்கு இந்த மாதிரி பாட்டுன்னா உசிராம். உன்னால இப்படி பாட முடியுமான்னு கேட்டுச்சு. மண்டபத்துல பாடி அத அசத்துனும்னு தான்.
அது சரி. பாட்ட ஆரம்பிக்கிறேன். இப்போ பாடப் போற பாட்டு அம்சத்வானி ராகம்.
யோவ் அம்சாவோட தாவணி பத்தில்லாம் பாட்டு வுட்டா சேப்பி கோச்சுக்கும்யா.
அம்சாதாவணி இல்லீங்க. அம்சத்வானி.
அருள் புரிவாய் கருணை கடலே
ஆருயிர் அனைத்தும் அமர வாழ்வு பெறவே
யோவ் இன்னாய்யா இது. அழுது வடிஞ்சிகினு இருக்கு. கொஞ்சம் இறக்கி குத்துறாப்புல பாட்டு சொல்லு ஐய்ரே.
கர்நாடக சங்கீதத்துல அப்படியெல்லாம் எதுவும் கிடையாது. நீங்க இதக் கத்துக்கோங்கோ. அடுத்ததும் பாரதியார் பாட்டு தான். இது பகடி ராகம்.
கபடி விளையாண்ட்ருக்கேன். இதென்ன பகடி?
காக்கைச் சிறகினிலே நந்தலாலா
நிந்தன் கரிய நிறம் தோன்றுதயே நந்தலாலா
அடுத்தது காம்போதி ராகம்.
யாருக்கு பேதி?
பெருமாளே. யாருக்கும் பேதி இல்லை. இந்த ராகம் பேரு காம்போதி. பாட்டக் கேளுங்கோ.
குழலூதி மனமெல்லாம் கொள்ளை கொண்ட பின்னும்
குறை ஏதும் எனக்கேதடி சகியே
இது பாட்டு ஐய்ரே. அப்படியே பாடிக்கினே சேப்பியை ரொமாண்டிகா ஒரு லுக் விட்டேன்னு வை சொக்கிருவா.
கடைசியா மஹா கணபதி பாடிடுங்கோ. இது நட்டை ராகம்.
நெட்டை ராகம்ன்னா பாட்டு பெர்சாருக்குமா?
நட்டை ராகம்.
மஹா கணபதிம்
மனசார ஸ்வராமி
சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?
எதுக்கு?
இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..
என் சைஸ் உங்களுக்கு பத்தாது.
அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?
வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.
அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.
அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?
குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.
மனசார ஸ்வராமி
சோக்கா பாட்ற ஐய்ரே. இந்த கேசட்ட கேட்டு நாலு நாள்ல கத்துக்கிறேன். ஆங். மற்ந்துட்டேன். அய்ரே உன்னாண்ட சிலுக்கு ஜிப்பா இருக்கா?
எதுக்கு?
இல்ல நாங்க பாத்த ஆம்பிளங்க அல்லாருமே சிலுக்கு ஜிப்பா போட்டுனு தான் பாடினாங்க. அதான்..
என் சைஸ் உங்களுக்கு பத்தாது.
அப்படீங்கற. மாரி இன்னாடா பண்றது. பேசாம கைலியோடவே போய்டவா?
வேணாம் மன்னாரு. நம்ம டெய்லராண்ட சொன்னா இரண்டு நாள்ல ரெடி பண்றுவான்.
அப்புறம் சுத்தி உக்கார நாலு ஆளுங்க வேணுமேடா. அதுக்கும் ஏற்பாடு பண்ணு.
அப்பால ஒரு டவுட் ஐய்ரே. இதெல்லாம் சாமீ பாட்டுங்க தானே. கவுச்சியெல்லாம் சாப்புட்லாமா?
குளிர்ச்சியா எதுவும் சாப்பிடாதீங்கோ. காலைல எழுந்து கழுத்தளவு தண்ணில நின்னுண்டு சாதகம் பண்ணுங்கோ. மிளகு தட்டி போட்டு பால் குடிங்கோ. மும்மூர்த்திகள் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும்.
ரொம்ப டாங்க்ஸ் ஐய்ரே. அப்பாலிக்கா டைம் கெட்ச்சா ஊட்டாண்ட வந்து பாடி காமிக்கிறன். டேய் மாரி. ஐய்ர ஆட்டோல இட்டுனு போய் வூட்ல வுட்டுட்டு வாடா. டேய் சோடா அந்த மண்டபம் மேனேஜரு வூட்ட வாட்ச் பண்ண ஆரம்பிடா.
-மார்கழி ஆரம்பிப்பதை முன்னிட்டு மீள்ஸ்:)
Labels:
காமெடி மாதிரி,
மன்னார் அண்ட் கோ,
மீள்பதிவு
December 14, 2011
நினைவெல்லாம் நிவேதா - 4
நுங்கம்பாக்கம், காதர் நவாஸ் கான் ரோட்டில் அந்த கட்டிடம் அமைதியாக நின்றுக்கொண்டிருந்தது. கொஞ்சமே கொஞ்சம் புல்வெளி, ஒரு சின்ன நீரூற்று, நாலைந்து பூந்தொட்டிகளை தாண்டி, புஷ் மீ என்ற கண்ணாடிக் கதவை தள்ளி, அரைவட்ட மேஜையில் கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்துக்கொண்டிருந்த பெண்ணை நோக்கி நடந்தார்கள் கணேஷும் வசந்தும். காலடி சத்தம் கேட்டு நிமிர்ந்த பெண்ணைப் பார்த்ததும் சன்னமாக விசிலடித்தான் வசந்த். இவர்களைப் பார்த்ததுமே ஒரு இன்ஸ்டெண்ட் புன்னகை அந்தப் பெண்ணின் இதழில் ஒட்டிக்கொண்டது.
“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.
மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.
“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.
”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”
“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”
”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.
“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.
“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.
இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.
“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.
“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”
“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.
”மிஸ்டர் அஷோக்?”
கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.
“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.
”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”
“இன்னும் தீர்மானிக்கலை.”
“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”
“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”
“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”
“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”
”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”
“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”
“யெஸ்”
”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”
“யெஸ். அது சுத்த...”
“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”
“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.
கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.
“ஹௌ கேன் ஐ ஹெல்ப் யூ?” என்றாள் ஹஸ்கியான வாய்ஸில்.
மேஜையில் முழங்கையை ஊன்றிகொண்ட வசந்த சற்று குனிந்து “நீங்க என்ன பெர்ஃப்யூம் யூஸ் பண்றீங்கன்னு தெரிஞ்சக்கனும்” என்றான்.
“வசந்த்” என்று அவனை அதட்டி, “மிஸ், எங்களுக்கு உங்கள் எம்டியைப் பார்க்க வேண்டும்.” என்றான் கணேஷ்.
”அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா?”
“யெஸ். கணேஷ் என்ற பெயரில். பத்தரைக்கு”
”ஒன் மினிட்” என்றபடி கம்ப்யூட்டர் ஸ்க்ரீனைப் பார்த்தவள் “யூ ஆர் லேட் பை ஃபிஃப்டீன் மினிட்ஸ்” என உதட்டைப் பிதுக்கினாள்.
“ஹெல் வித் த ட்ராஃபிக்” என்றான் கணேஷ்.
“ஒக்கே. நீங்கள் எம்டியை இப்போது பார்க்கப் போகலாம். எண்ட் ஆஃப் தி காரிடார்ல அவர் ரூம். பத்து நிமிஷத்துக்கு மேல எடுத்துக்காதீங்க” என சொல்லிவிட்டு, டெலிபோன் ரீசிவரை கையிலெடுத்தாள்.
இருவரும் அவள் சொன்ன வழியில் நடக்க ஆரம்பிக்க, "பாஸ், இந்த ரிசப்ஷன் பட்சியை நான் எங்கேயோ பார்த்திருக்கேன்” என்றான் வசந்த்.
“அழகான பொண்ணுங்கள நீ பார்த்ததில்லன்னு சொன்னாதாண்டா ஆச்சர்யம்”.
“இல்ல பாஸ். வேற ஏதோவொரு ஆஃபிஸ்ல இவள நான் பார்த்திருக்கேன். எங்கன்னு ஞாபகத்துக்கு வரமாட்டேங்குது. ஒன்னு பண்ணுங்க. நீங்க அஷோக்கிட்ட பேசிட்டு வாங்க. நான் அதுக்குள்ள அவள்ட்ட என் டவுட்டை க்ளியர் பண்ணிக்கிறேன்.”
“யூ ஆர் ஹோப்லெஸ் வசந்த்” என்றபடி R.Ashok Managing Director என்று பிராஸ்ஸோவில் பளபளத்த போரட் தொங்கிய கதவின் முன் நின்றார்கள் இருவரும். அறைக்குள் இயற்கை வெளிச்சம் இருக்கும்படியாக பெரும்பகுதி கண்ணாடியில் இருந்தது.
”மிஸ்டர் அஷோக்?”
கணேஷுக்கு முதுகைக் காட்டிக்கொண்டிருந்தவர் திரும்பினார். முப்பதிரண்டு முப்பதைந்து வயதிருக்கலாம் போலத் தோன்றியது. பாதி மயிரை இழந்த முன் மண்டையால் நெற்றி பெரிதாக இருந்தது. ரிம்லெஸ் கண்ணாடிக்குள் தெரிந்த கண்களுக்குள் மகா சாந்தம். சுத்தமாக சவரம் செய்யப்பட்ட மழுமழு முகம். 6 அடிக்கு ஏற்ற மாதிரி ஆஜானுபாகுவான உடம்பு. ஹீரோவே தான். கணேஷ் ஒரு நொடி அஷோக்கின் பக்கத்தில் நிவேதாவை கற்பனைப் பண்ணிப் பார்த்தான். பெர்ஃபெக்ட் என மனதிற்குள் நினைத்துக்கொண்டான்.
”யெஸ். உங்களில் கணேஷ்....” என இருவரையும் மாறி மாறிப் பார்த்தார் அஷோக்.
“மைசெல்ஃப்” என்று சொல்லிக்கொண்டே கணேஷ் முன்சென்று அஷோக்குடன் கைகுலுக்கினான்.
”உங்களைப் பற்றி நிறையக் கேள்விப்பட்டிருக்கேன். நீங்க நிவேதா கேஸை எடுத்துக்கப் போறீங்களாமே?”
“இன்னும் தீர்மானிக்கலை.”
“ஹா. கமான். தீர்மானிக்காமல் தான் என்னை விசாரிக்க வந்திருக்கீங்களா?”
“நாங்கள் விசாரணைக்கு வரல மிஸ்டர் அஷோக்.”
“கால் மீ அஷோக். நோ மிஸ்டர் ப்ளீஸ்”
“ஒக்கே. நாங்க விசாரணைக்கு வரல. கொஞ்சம் விவரங்கள் தேவைப்பட்டது. அதற்காகதான் வந்தோம். வீ ஆர் நாட் யெட் இன்ட்டு த கேஸ் அஃபிஷியலி”
”என்ன மாதிரியான விவரங்கள். எங்கே சந்திச்சீங்க? வேர் யூ ஹாப்பி? மாதிரியான போரிங் கேள்விகளா?”
“ஹா ஹா. இல்லை. நான் நேராக விஷயத்துக்கு வந்துவிடுகிறேன். ஜெயராமன், நிவேதாவின் தற்கொலைக்கு நீங்கள்தான் காரணம் என்கிறார். ஹோப் யூ ஆர் அவேர் ஆஃப் திஸ்.”
“யெஸ்”
”அதற்கு அவர் சொல்லியிருக்கும் காரணம் தெரியுமா?”
“யெஸ். அது சுத்த...”
“அதைப் பற்றின விளக்கம் அப்புறம். அதற்கு முன் இன்னொரு கேள்வி. உங்கள் மனைவி இறந்த நான்கே நாட்களில், யூ க்ளீண்ட் அப் ஹெர் திங்ஸ். ரூம் சுத்தமா இருக்கு. நீங்களும். உங்கள் மனைவி இறந்ததில்?”
“யெஸ். அவ செத்துப்போனதுல எனக்கு எந்த வருத்தமும் இல்ல. ஐ ஹேட் ஹெர். ஐ ஜஸ்ட் ஹேட் ஹெர்” என சுவற்றைக் குத்தினான் அஷோக்.
கணேஷும் வசந்தும் ஸ்தம்பித்து நின்றனர்.
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
December 13, 2011
கல்கியில் ஜூனியர் அப்டேட்ஸ்
நேற்றிரவு:
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
“அம்மா மிக்ஸி ஆஃப் பண்ணு.”
“ஏண்டா?”
“சத்தமா வருதும்மா”
“அதனால என்னடா?”
“ஃபிஷ்ஷெல்லாம் தூங்குதுல்ல. முய்ச்சிக்கும்ல்ல. ஆஃப் பண்ணு”
இன்று காலை:
பால்கனியில் ஒரு காக்கா உட்கார்ந்திருந்ததைப் பார்த்து...
“டேய்... அங்க உக்காச்சிக்காதடா. கீல தொப்புக்கட்டீர்ன்னு வீந்துருவ. அடிபட்டுச்சுன்னா உவ்வா வலிக்கும். மெதுவா ஜம்ப பண்ணனும் சரியா?”
ஸ்டாப்பிங்கில் வேனுக்காகக் காத்திருக்கும்போது:
படுத்துக்கொண்டிருந்த நாயைச் சுத்தி ஈக்கள் பறந்து கொண்டிருந்ததைப் பார்த்து...
“அம்மா, நாயைக் கொசு கடிக்குதும்மா. ஏய் கொசு. கடிக்காத போ. டாக் ஏந்திரும்ல்ல. கடிக்காதச் சொல்றேன் இல்ல. அப்பும் நான் அட்சிருவேன். ஓடிப்போ.”
# பாசக்கார பய :)
============================
“சஞ்சு ரைம்ஸ் சொல்லலாமா?”
“அப்புறமா...”
“இப்ப சொல்லாம்டா.”
“வேணாம்மா. பெத்தா பெத்தா பார்க்கலாம்.”
#எவண்டி உன்ன பெத்தான் பாடற வயசாடா இது. அவ்வ்வ்வ்வ் :(
=======================
டி.வி.யில் வேங்கை படப் பாட்டு ஓடிக்கொண்டிருந்தது. ஜூனியர் என்னிடம்..
“அம்மா இந்த தனுஷ் இருக்கான்ல தனுஷ். அவன்தான் மாப்ள படத்துலயும் வருவான். அதுல ராசி ராசி பாட்டுதான் நல்லாக்கும். படம் மொக்கையா இக்கும்.”
“யார்றா சொன்னா இதெல்லாம்.”
“அந்த ஆதித்யா நாராயணன் இக்கான்ல. அவன் சொன்னான்.”
# எல்.கே.ஜி. படிக்கிற புள்ளைங்க பண்ற டிஸ்கஷனாடா இது. அவ்வ் வ்வ்வ் :(
======================
“டேய் கொந்தைய மங்கி கட்சிறும்டா. தூக்குடா. ஏண்டா நிக்கற? பேபிக்கு வலிக்கும்டா. பேபி பாவம்டா.. அம்மா அவன் கொந்தைய விடவே மாட்டானா. நான் கன் எத்து சுடவா?
பேபிஸ் டே அவுட், ஜூனியரின் ரன்னிங் கமெண்ட்ரியோடு :)
=======================
“போதும்மா.”
“இன்னும் கொஞ்சம் சாப்பிடு.”
“தொப்ப ஃபுல்லாச்சும்மா. போதும்.”
“நாலு வாய் தானடா வாங்கின. அதுக் குள்ள தொப்ப எப்படி ஃபுல்லாகும்.”
ப்ச்ச்ச். நாலு வாய் இல்லம்மா. நாலு ஸ்பூன். எனக்கே ஒன் வாய்தான் இருக்கு.
#ஙே!!!
================================
இன்னைக்கு என்ன டே?"
பிள்ளையார் சதுர்த்தி."
அப்படின்னா?"
”ம்ம்ம்ம். பிள்ளையார் உம்மாச்சிக்கு இன்னைக்கு பர்த்டே."
ஹாப்பி பர்த்டேவா?"
ஆமாம்."
உம்மாச்சி எப்ப கேக் கட் பண்ணும்?"
# ஜூனியர் கொஸ்டீன்ஸ்:)
==============================================================
மாமனார் - மாமியார் : அம்மனை அழைக்கணும். சஞ்சு ஒரு பாட்டு பாடு...
ஜூனியர் : எவண்டி உன்ன பெத்தான் பெத்தான்..கைல கிடைச்சா செத்தான் செத்தான்.
# கேப்பியா? கேப்பியா...கேப்பியா
-கூகிள் பஸ்ஸில் பகிர்ந்த ஜூனியர் அப்டேட்ஸ். செப்டம்பர் மாத கல்கி இதழில் வெளியானது.
Labels:
பத்திரிக்கை,
பஸ்ஸ்,
ஜூனியர்
December 12, 2011
Scribblings 12-12-2011
எழுதறத நிறுத்திட்டாலும், நம்ம எழுத்துப்பணிய தொடர சொல்லி ஆயிரம் அழைப்புகள், சரி சரி ஒன்னு ரெண்டு ரெக்வெஸ்ட்டுகள் வருது. நீ மொக்கையா மொக்கை போட்டாலும் பரவால்ல. இந்த வாரம் யுடான்ஸ் நட்சத்திரமா இருன்னு கேபிள் சங்கர் ரொம்ப கெஞ்சி கேட்டுக்கிட்டார். இப்பல்லாம் நான் ரொம்ப பிஸி, எழுதறதுக்கு டைமே இல்லைன்னாலும், ஒரு பன்முக எழுத்தாளர், இவ்ளோ தூரம் வேண்டி விரும்பி கேட்டுக்கிட்டார்ங்கற ஒரே காரணத்துக்காக இந்த வாரம் ஸ்டாரா இருக்க சம்மதிச்சிருக்கேன். வழக்கம்போல உங்ககிட்ட வேறென்ன கேட்கப் போறேன். உங்க ஆதரவும், ஊக்கமும் தொடர்ந்து குடுங்க சாமிங்களா..
*****
முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************
டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************
எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.
*****
முன்பெல்லாம் படம் ரிலீஸாகி ஒரு வாரத்திற்குள் பார்த்து விடுவோம். இப்போ நிலைமை தலைகீழ். காரணம் ஜூனியர். அவருக்கு பிடித்த படமாய் பார்க்க ஆரம்பித்திருக்கோம். மங்காத்தாவிற்குப் பிறகு எந்த தமிழ்படமும் தியேட்டரில் பார்க்கவில்லை. ZooKeeper, Adventures of tin tin, happy feet 2 என வரிசையாக ஜூனியர் டிக்கடிக்கும் படங்களைத்தான் பார்த்துக்கொண்டிருக்கிறோம். சமீபத்தில் மயக்கம் என்ன பார்த்தோம். சில சீன்களைத் தவிர்த்து படம் எனக்குப் பிடித்திருந்தது. தனுஷின் நடிப்பு அட்டகாசம். குறிப்பாக நண்பனிடம் அறை வாங்கிக்கொண்டு நீ அடிச்சது சரிதாண்டா என்பது போல் தலையாட்டும்போது, குடிச்சது போதும்டா எனும் நண்பனின் கையைத் தட்டி விட்டு கோவப்படும்போதும் அசத்துகிறார். அவரின் தங்கையாய் வருபவரின் கேரக்டரைசேஷன் நன்று. எனக்கென்னவோ, தனுஷிடமிருந்து இயல்பான, குறிப்பிடும்படியான நடிப்பை வெளிக்கொணர்வது இரண்டு பேர் தான். ஒன்று செல்வராகவன். மற்றொருவர் வெற்றிமாறன். குட் வொர்க் தனுஷ்.
**************
டிசம்பர் முதல் தேதி நண்பனின் திருமணத்திற்காக தென்காசிக்கு செல்வதாய் இருந்தது. அப்படியே இரண்டு நாட்கள் குற்றாலம் ட்ரிப் என பக்காவாய் ப்ளான் செய்து வைத்திருந்தோம். சரியாக இரண்டு நாட்களுக்கு முன்பிருந்து ஜூனியருக்கு சளி, இருமல். உடல்நலமில்லாத குழந்தையை அம்மாவிடம் விட்டு செல்ல மனதில்லை. மிகுந்த வருத்தத்துடன் ட்ரிப்பை கேன்சல் செய்தேன். நண்பர்கள் ஒரே திட்டு. வெகேஷன் எடுத்து ரொம்ப நாட்கள் (infact வருடங்கள்) ஆச்சுன்னு ரங்ஸ் காதுல ஓதினா, அதுக்கென்ன கிண்டி பார்க் போய்ட்டு வரலாம்ன்னு கடுப்பேத்தறார். ஆண்டவா சீக்கிரம் ரங்ஸ் மனச மாத்தி ஒரு 3 நாள் ட்ரிப் அடிக்க வைப்பா.
***************
எங்கள் வீட்டிற்கு எதிரே இருக்கும் அபார்ட்மெண்ட்டில் நிறைய பூச்செடிகள் உண்டு. சென்ற வாரம் அங்கு குடியிருக்கும் ஒரு ஆண்ட்டியிடம் பேசிக்கொண்டிருந்தபோது, ராத்திரி மொட்டு வைக்கறதப் பார்க்கிறேன். ஆனா காலைல பூவக் காணமாட்டேங்குது என புலம்பிக்கொண்டிருந்தார். சென்ற வாரத்திலிருந்து காலை 5.30 மணிக்கெல்லாம் (என்னக் கொடுமை சார் இது?) எழுந்துவிடுகிறேன். அப்படி ஒரு நாள் காலை டீ கப் சகிதமாக பால்கனியில் நின்றுக்கொண்டிருக்கும்போது, எங்கள் தெருவிலே குடியிருக்கும் ஒரு லேடி கையில் பெரிய்ய்ய ப்ளாஸ்டிக் பையோடு வந்து வரிசையாக எல்லா வீட்டிலும் பூக்களை சேகரித்துக்கொண்டார். வாக்கிங் வருபவர் போலும். நான் மாடியிலிருந்து “ஹல்லோ, ஓனர் பெர்மிஷனில்லாம ஏன் பூவெல்லாம் பறிக்கறீங்க?” என்றேன். அதுக்கு அவர் “பூவெல்லாம் காம்பவுண்ட் கேட்டுக்கு வெளில தானே இருக்கு. அவங்களுக்கு மட்டும் எப்படி சொந்தமாகும்?”ன்னு பயங்கர புத்திசாலியா கேள்வி கேட்டாங்க. “நீங்க கார் வீட்டுக்கு வெளில தான நிறுத்தறீங்க”ன்னு கேட்டேன். முறைச்சிட்டு போய்ட்டாங்க. சொந்த வீடு, கார்ன்னு இருந்தாலும் பத்து ரூபா கொடுத்து பூ வாங்க மனசு வரல அவங்களுக்கு. ஹும்ம்ம்:(
****************
விலைவாசி உயர்வு, வீட்டு வாடகை உயர்வு, இன்ன பிற குடும்ப செலவுகள்ன்னு செலவு எகிறிகிட்டே போகுது. செலவைக் கட்டுப்படுத்த ரங்ஸ் கை வச்சிருக்கிறது ஹோட்டல் விசிட்களில் தான். காஸ்ட் கட்டிங்காம். ஏற்கனவே எல்லாரும் கண்ணு வச்சி வச்சி, வாரயிறுதிகளில் குறைந்தது மூன்று/நான்கு வேளை ஹோட்டல் சென்றது, மொத்தமே ஒன்றாக குறைந்துவிட்டது. இப்ப அதுக்கும் ஆப்பு:(( நோ மோர் fine dining. இனிமே மாதத்திற்கு ஒரு முறை தான் fine dining/speciality restaurants. பரவால்ல. உடம்புக்கு பர்ஸுக்கும் நல்லதுதான்னு மனச தேத்திக்க வேண்டியதுதான். அதான் மாசத்துக்கு ஒரு விசிட் உண்டே. அப்ப வித்யாசமான ரெஸ்டாரெண்டுகள் போய் பதிவாப் போட்றவேண்டியதுதான்.
Labels:
துணுக்ஸ்
December 8, 2011
நினைவெல்லாம் நிவேதா - 3
நினைவெல்லாம் நிவேதா - 1
நினைவெல்லாம் நிவேதா -2
ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.
“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.
விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.
”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”
“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”
மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.
“ரூம் காலியா இருக்கே?”
“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”
ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.
“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”
“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.
“நீ எங்கிருந்த?”
“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”
“வாட்ச்மேன்?”
“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.
“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”
“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”
“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”
”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”
“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”
“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”
”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”
”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”
“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”
”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”
“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”
“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”
“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”
“புரியலீங்க."
”சண்ட போட்டுப்பாங்களா?”
“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”
வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.
“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”
“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”
“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”
கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.
“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”
நினைவெல்லாம் நிவேதா -2
ஒரு வாரம் கழித்து அடையார் போட் கிளப்பிலிருந்த அந்த பிரமாண்ட பங்களா முன் கணேஷும் வசந்தும் நின்று கொண்டிருந்தனர்.
“வீட்டு கேட்டப் பார்த்தாலே மூச்சடைக்கறது பாஸ்”.
விவரம் சொல்லியபின் வேலைக்காரி கொண்டு வந்த காபியை குடித்தவாறு வீட்டை சுற்றி வந்தார்கள். மூன்று அறைகள். ஒரு கெஸ்ட் ரூம். ஹாலையும் கிச்சனையும் இணைக்கும் டைனிங் ஸ்பேஸ் என விசாலமாயிருந்தது வீடு. பளிச்சென அங்கங்கே மின்னிய அலங்கார இறக்குமதி சாமான்கள் உரிமையாளர்களின் ரசனையோடு காசை வைத்துக்கொண்டு என்ன செய்வது என தெரியாமல் பொருட்கள் வாங்கிப் போடும் மனோபாவத்தையும் காட்டியது.
”எந்த ரூம்ல தூக்கு போட்டுகிட்டாங்க?”
“அதோ அந்த நடு ரூம்லங்கய்யா.”
மாஸ்டர் பெட்ரூமாக இருக்க வேண்டும் இரண்டு பேருக்கு ரொம்ப அதிகமாய் தெரிந்தது. பொருட்கள் எதுவுமில்லாத காரணமாகவும் இருக்கலாம்.
“ரூம் காலியா இருக்கே?”
“அம்மா போனதுக்கப்புறம் அய்யா எல்லா சாமானையும் பக்கத்து ரூமுக்கு மாத்த சொல்லிட்டாருங்க.”
ஒவ்வொரு ரூமாய் பார்த்துக்கொண்டே கணேஷ் வேலைக்காரியை விசாரிக்கலானான்.
“அம்மா தூக்கு போட்டுக்கும்போது வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?”
“யாருமில்லீங்க. அய்யா அப்போ வெளியூர் போயிருந்தாருங்க.
“நீ எங்கிருந்த?”
“நான் 8 மணிக்கு வூட்டுக்குப் போய்டுவேனுங்க.”
“வாட்ச்மேன்?”
“அவன் வாச கேட்டுக்கு பக்கத்திலிருக்க ரூமுல இருப்பானுங்க.”.
“அய்யா அடிக்கடி வெளியூர் போவாரா?”
“மாசத்துக்கு ரெண்டு தபா போவாருங்க. ரெண்டு மூணு நாள்ல திரும்பிடுவாருங்க.”
“அம்மா வெளியூரெல்லாம் போமாட்டாங்களா?”
”இல்லீங்க. ஆபிஸ் மட்டும்தான் போயாறுவாங்க.”
“வீட்டுக்கு வேற யாரெல்லாம் வந்து போவாங்க?”
“மிலிட்டரி அய்யா மட்டும் தினம் வருவாருங்க. வேற யாருமே வரமாட்டாங்க.”
”அவர் வரும்போது அம்மாவும் அய்யாவும் வீட்ல இருப்பாங்களா?”
”இல்லங்க. அவங்க ரெண்டு பேரும் சுருக்க வேலைக்கு கிளம்பிடுவாங்க.”
“மிலிட்டரி அய்யா எப்ப வருவாரு? என்ன பண்ணுவாரு?”
”பதினோறு மணிக்கு வருவாருங்க. அய்யா வந்தாருன்னா அந்த மூணாவது ரூம்ல இருக்கிற பொட்டியப் பாப்பாருங்க. 11.30க்கு டீ குடிச்சிட்டு பேப்பர் படிச்சிட்டு போய்டுவாருங்க. 12 மணிக்கு மேல ஒரு நிமிஷம் கூட இருக்கமாட்டாருங்க.”
“அம்மாவோ அய்யாவோ இந்த ரூமுக்கு வருவாங்களா?”
“அம்மா மட்டும் தாங்க இந்த பொட்டியப் பார்ப்பாங்க. அய்யாக்குன்னு தனியா பொட்டி இருக்குங்க. இது அம்மாவோடதுங்க. மிலிட்டரி அய்யாவுக்காண்டி இங்க வச்சிருக்காங்க.”
“அய்யாவும் அம்மாவும் வீட்ல எப்படி?”
“புரியலீங்க."
”சண்ட போட்டுப்பாங்களா?”
“இல்லீங்க. நான் பார்த்த மட்டும் அய்யாவோ அம்மாவோ எதுக்குமே சண்டை போட்டுக்கிட்டதில்லீங்க. ரொம்ப நல்லவங்க. ஆனா ஏன் அம்மா இப்படி ஒரு முடிவெடுத்தாங்கன்னு புரியலீங்க.”
வெளியே வந்து இருவரும் சிகரெட் பத்த வைத்தனர்.
“என்ன பாஸ். தேறுமா? எனக்கென்னவோ நம்பிக்கயில்ல.”
“தெரியலடா வசந்த். வேலக்காரி சொல்றத வச்சு பார்த்தா தே வேர் ஹேப்பி. ஆனா சுசைட்?”
“விட்ருலாம் பாஸ். ஜெயராமன்கிட்ட போய் வேற வேலையிருக்குன்னு ஜகா வாங்கிடலாம்.”
கணேஷ் கண் மூடி புகையை இழுத்தான். புகை நுரையீரலை நிறைக்க, இதயத்தின் ஏதோவொரு மூலையில் அப்பழுக்கில்லாத நிவேதாவின் முகமும், மருண்ட இரு கண்களும் ப்ளாஷடித்தன.
“வசந்த். வி ஆர் கெட்டிங் இன் டு திஸ். அடுத்த வேலை அஷோக்கைப் பார்க்கனும்.”
Labels:
குறுநாவல்,
நினைவெல்லாம் நிவேதா,
புனைவு
Subscribe to:
Posts (Atom)